புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
51 Posts - 44%
heezulia
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
417 Posts - 49%
heezulia
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
284 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
28 Posts - 3%
prajai
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_m10தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 5:00 pm

மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் பயத்தின் அடிப்படையில் எழுந்தன.



* இடி,
* மின்னல்,
* மழை,
* சூரிய வெப்பம்,
* கொடிய விலங்குகள்

ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின் (Totemism)அடையாளமாக விளங்கின. இறைவனென்று கொண்டவற்றுக்குப் படையல்கள், பலிகள் இட்டு வழிபட்டனர். இயற்கை வழிபாடு உருவ வழிபாடாக வளர்ச்சியடைந்து நிலைத்தது. எனினும் நடுகல் வழிபாடு மற்றும் சதிகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன.


நடுகல் வழிபாட்டின் தோற்றம்:


கற்களை அடையாளமாக நடுவதால் "நடுகல்" எனப்பட்டது. இம்முறை ஒரு வகையில் சிவநெறியில் லிங்கத்தை நடுவது போன்றதாகும். நடுகல் நாட்டுப்புற முறையாகவும், பள்ளிப்படைகோயில் (மன்னர்கள் இறந்த இடத்தில் கல்நட்டு கோயில் எழுப்புதல்) அரசபாணியாகவும் கருதப்பட்டது. சங்க காலத்தில் தன்னால் இயன்றவரையில் போர்புரிந்து உயிர்விட்ட வீரனது உடலைப் புதைத்த இடத்தில் (அ) எரித்த இடத்தில் ஒரு கல்லை நடுவர். அக்கல்லில் அவனது உருவத்தையும், பெயரையும் இன்னபோரில், இவ்வாறு போர்புரிந்து மாண்டான் என்ற விவரத்தையும் பொறிப்பர். இக்கல்லே நடுகல் எனப்படும்.

கற்குவைகளால் மூடப்பட்ட நடுகல், "கற்பதுக்கை" என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. போரில் ஈடுபடும் வீரர்கள் வெற்றிவாகை சூடி வரவேண்டுமென்று அவர்தம் மனைவிமார்கள் தம் குடி முன்னோரின் நடுகல் முன் அமர்ந்து வழிபட்டனர். நன்னனுடைய மலைகள் மீது இத்தகைய நடுகற்கள் அதிகளவில் இருந்தன. அவ்வழியாகச் சென்ற கூத்தர், பாணர் போன்றோர் யாழ் வாசித்து அத்தகைய நடுகல் வீரர்களை வழிபட்டுச் சென்றனர்.

நடுகல் எடுப்பு விழா:

நடுகல் எடுப்பு விழா அறுவகைப்படும். அவை:-

1. கற்காண்டல்,
2. கால்கோள்,
3. கல்லை நீர்ப்படுத்துதல்,
4. கல்லை நடுதல்,
5. வீரன்-பெயர்-செயல் பொறித்தல்,
6. கால் கொண்ட தெய்வத்திற்கு சிறப்பு செய்து வாழ்த்துதல்.

செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்தமை இதே மரபினதாகும்.


நடுகல் வணக்கத்தின் பொருள்:


"தாய்நாட்டின் பொருட்டு போரிட்டு உயிர்நீத்த வீரத்தமிழனுக்கு நினைவுக்கல்லை நட்டு அவ்வீரனை போற்றுதல்," அவனை சான்றாகக்கொண்டு மற்ற தமிழர் நடக்கமுயலல், அவனது புகழ் உலகம் உள்ளளவும் நிலவுக! என்பனவேயாகும். வீரர்கள் மட்டுமல்லாது, விலங்குகளின் நினைவாகக்கூட நடுகற்கள் நடப்பட்டன. காளைகளின் நினைவாக நடப்பட்ட நடுகற்கள் தும்கூர் (கர்நாடக மாநிலம்) மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானுக்கு அருகிலுள்ள குப்புக்குறிச்சி என்னுமிடத்தில் "பசுக்கூட்டம்" என்றழைக்கப்படும் இத்தகைய நடுகற்கள் காணப்படுகின்றன.


தமிழகத்தின் முதல் நடுகல் கண்டுபிடிப்பு:


எகிப்து நாட்டில் பிரமிடுகள் எவ்வாறு வரலாற்றுச் சின்னங்களாகத் திகழ்கின்றனவோ, அதே போன்று தமிழகத்தில் "நடுகல்" திகழ்கிறது. இவ்வாறு எழுப்பப்பட்ட நடுகல்லை முதலில் கண்டெடுத்தவர் பேரா.சுந்தரம் பிள்ளை. ஆரல்வாய்மொழியை (கன்னியாகுமாரி மாவட்டம்) அடுத்துள்ள கோட்டைக்கரையில் பாண்டிய மன்னன் மாறன்சடையனின் (கி.பி 765-790) காலத்தில் வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட ஒரு நடுகல்லை பேராசிரியர் கண்டறிந்தார். இரணகீர்த்தி (மாறன் சடையனின் படையைச் சேர்ந்தவன்) என்ற வீரனது நினைவாக நடுகல் நடப்பட்டிருப்பதை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பல நடுகற்கள் தமிழகம் முழுவதும் வரலாற்றாளர்களால் கண்டறியப்பட்டன.


நடுகல் முறையின் சிறப்புகள்:


போரில் இறந்தவர் அல்லாமல், அறிவிலும் ஒழுக்கத்திலும் மிக்கார் நினைவின் பொருட்டு "கல் எடுத்தலும்" உண்டு. சங்கச் செய்யுள் ஒன்றில் மங்கையின் வீரம் பற்றிக் கூறும் போது, "எந்தை, முன் நடந்த போரில் இறந்துபட்டு கல் ஆனான்" என மங்கையின் கூற்றாகப் புலவர் குறிக்கிறார். "பன்றிகுத்திப்பட்டான் கல்" என்பது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு நடுகல்லாகும்.


சதிகல் வழிபாடு:

நடுகல் வழிபாட்டிற்கும் சதிகல் வழிபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கணவனது இறப்பினை அறிந்தவுடன், தீப்பாய்ந்து இறக்கும் பெண்களின் நினைவாக நடப்படும் கல் "சதிகல்" எனப்பட்டது. மணிமேகலையில் பத்தினிப்பெண்டிர் மூவகையினராகப் பிரிக்கப்படுகின்றனர்.

* கணவனுடன் எரிமூழ்கி இறப்பவர் முதலாமவர்,
* தனியே எரிவளர்த்து அதனில் வீழ்ந்து இறப்பவர் இரண்டாமவர்,

எஞ்சியவர் கணவனை நினைத்து அடுத்த பிறவியில் அவனுடன் வாழ்வதற்காக, கைம்மை நோன்பு நோற்பர்.

ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் "சதி" பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத.28,3.1) இதன் வாயிலாக உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் பழைமையை உணரலாம்.


மன்னர்தம் ஆதரவு:

சேரன் செங்குட்டுவன் கி.பி 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மறைந்தபோது, குலவழக்கப்படி நெடுஞ்சேரலாதனின் மனைவியான "நற்சோணை" என்ற சோழ மகள் உடன்கட்டை ஏறினாள். செங்குட்டுவன் தன் தாயாரின் நினைவாக கோயில் எடுக்க எண்ணி, இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து கோயில் எடுத்தலே சிறப்பு எனக்கருதி இமயத்தின் மீது படையெடுத்து கல்லெடுத்து கங்கையில் நீராட்டி நாடு மீண்டான். "நற்சோணையம்மன்" சேரர் குலதெய்வம் ஆனாள். தீப்பாய்ந்து இறந்த மறப்பெண்டிர் வம்சத்தார்க்கு மன்னர்களும், செல்வந்தர்களும் நிலங்களைத் தானமாக வழங்கினார். அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள்

* உதிரப்பட்டி,
* ரத்தக்காணி,
* தீப்பாஞ்சகாணி

எனக் குறிக்கப்பட்டன.

பத்தினித் தெய்வ வழிபாடு:

உடன்கட்டை ஏறிய பெண்கள் பத்தினித் தெய்வமாகவும் வணங்கப்பட்டனர். கோவலனை இழந்த கண்ணகி மதுரையை விட்டுப் புறப்பட்டு வைகைக்கரை வழியே ஆவேசமாகச் சென்றாள், பின்னர் வருஷநாடு மலைவழியாக சுருளிமலையின் மேற்குத் தொடர்ச்சியான மங்கலதேவி மலைக்கு வருகிறாள், கண்ணகி, தெய்வமான இடம் இதுவேயாகும். சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் நினைவாக இவ்விடத்தில் கோயிலை உருவாக்கினான்.

பத்தினித் தெய்வ வழிபாட்டின் பரவல்:

முதலாம் இராசராசன், மங்கலதேவி கோட்டத்திற்கு வந்து கண்ணகியின் சிறப்பை உணர்ந்து, திருப்பணி செய்ததோடு மட்டுமல்லாது, பிடிமண் எடுத்துச் சென்று தஞ்சையில் பத்தினித் தெய்வ வழிபாட்டைத் தொடங்கி வைத்தான். இக்கோயில் சிங்கள நாச்சியார் - செங்கள நாச்சியார் என்று வழங்கி பின் செங்களாச்சியம்மன் கோயிலாக தற்போது உள்ளது.

யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கண்ணகிக்குக் கோயிலமைத்த இடம் "அங்கணக்கடவை" எனப்படும்.

சிங்களநாட்டில் "பத்தினி தெய்யோ" என வணங்கப்படும் தெய்வம் கண்ணகியே என்பது இலங்கையின் வரலாற்றாளரான செ. இராசநாயகத்தின் கருத்தாகும்.

நடுகல் வழிபாடும், சதிகல் வழிபாடும் இன்றைய காலகட்டத்தில் சிறுதெய்வ வழிபாடுகளாக மக்கள் மத்தியில் நிலைபெற்றுவிட்டதாகவே கூறவேண்டும்.

ஆய்வாளர் இல. கணபதிமுருகன்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 14, 2010 5:08 pm

[You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Fri May 14, 2010 5:12 pm

தகவலுக்கு நன்றி



[You must be registered and logged in to see this link.]

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 31, 2010 5:41 pm

இந்த நடுகல் வழிபாடுகள்தான் பிற்காலத்திய சிறு தெய்வ வழிபாடாக மாறியது...அனைவரும் அறிய வேண்டிய அருமையான தகவலைப் பதிந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. நன்றி அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக