புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
91 Posts - 61%
heezulia
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
1 Post - 1%
viyasan
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
1 Post - 1%
eraeravi
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
283 Posts - 45%
heezulia
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
19 Posts - 3%
prajai
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரமும் மனிதனும் Poll_c10மரமும் மனிதனும் Poll_m10மரமும் மனிதனும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரமும் மனிதனும்


   
   
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 11, 2010 2:03 pm

இது எல்லோராலும் அறியப்பட்ட ஒரு கதைதான் இருந்தாலும் குட்டீஸ் க்காக எனது மீள் பதிவு...



ஒரு ஊர் ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று வளர்ந்து கிளை பரப்பி மிக அழகாக இருந்தது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் பொதுவாக எப்போதும் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து உண்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.

காலம் உருண்டோடியது. அந்தச் சிறுவன் கொஞ்சம் வளர்ந்து விட்டான். இப்போதெல்லாம் அந்த மரத்தின் நிழலில் விளையாட அவன் வருவதில்லை. ஒரு நாள் அவன் மரத்தை நாடி வந்தான். அந்த மரம் அவனை அன்போடு வரவேற்றது. “வா குழந்தாய்! வந்து என் நிழலில் விளையாடு!” அந்தச் சிறுவன் சொன்னான், “நான் இன்னும் சின்னக் குழந்தை அல்ல. மரங்களுடன் என்னால் விளையாட முடியாது. நான் விளையாடுவதற்கு விளையாட்டு பொம்மைகள் தேவை. அவற்றை வாங்க பணம் தேவை.”


அந்த மரம் சொன்னது, “என்னிடம் பணம் கிடையாது. ஆனால் நீ என்னிடமிருந்து ஆப்பிள் பழங்களை பறித்துச் சென்று அவற்றை விற்றால் உனக்கு தேவையான பணம் கிடைக்கும்.”


அந்தச் சிறுவன் அப்படியே செய்தான். பழங்களை விற்றதில் அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது. அதைக் கொண்டு தனக்கு பிடித்தமான விளையாட்டுப் பொருட்களை அவன் வாங்கிக் கொண்டான். ஆனால் அவன் மீண்டும் மரத்தின் பக்கம் போகவில்லை. மரம் மீண்டும் தனிமையில் விடப்பட்டது.


சில ஆண்டுகள் கழித்து ஒரு இளைஞன் அந்த மரத்தை நோக்கி வந்தான். அந்தச் சிறுவன் தான் இப்போது வளர்ந்து இளைஞனாக இருக்கிறான். அந்த மரம் அவனை அடையாளம் கண்டு கொண்டது. “வா மகனே! ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? வந்து என் நிழலில் கொஞ்ச நேரம் உட்கார். இவ்வளவு நாட்களாக உன்னைக் காணாமல் நான் ஏங்கிப் போயிருக்கிறேன்” என்று அவனை அழைத்தது.
அந்த இளைஞனோ சலித்துக் கொண்டான், “எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. என் குடும்பத்திற்காக நான் உழைக்கிறேன். அவர்களுக்காக நான் ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்கு எனக்கு பணம் தேவைப்படுகிறது.”


அந்த மரம் சொன்னது, “கவலையை விடு மகனே! இப்போதும் என்னிடம் பணமில்லை. ஆனால், நீ எனது கிளைகளை வெட்டி உனது வீட்டை கட்டிக் கொள்ளலாம்.” அந்த இளைஞன் சந்தோஷமாக அந்த மரத்தின் கிளைகளையும் நடுப்பகுதியையும் வெட்டி எடுத்துச் சென்று தனது குடும்பத்திற்காக வீடு கட்டிக்கொண்டான். அடிப்பகுதி மட்டுமே மிச்சமிருந்த அந்த மரம் மீண்டும் தனிமையிலாழ்ந்தது.


நீண்ட காலம் கழித்து அந்த இளைஞன் மீண்டும் அந்த மரத்தை நாடி வந்தான். இப்போது அவன் இளைஞனல்ல. மூப்படைந்திருந்த அவன் மிக களைப்படைந்தவனாகவும் சோகமானவனாகவும் இருந்தான். மரம் அவனிடம் கேட்டது, “மகனே, ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? என் உதவி எதுவும் உனக்கு தேவையா? ஆனால், உனக்கு உதவ என்னிடம் இப்போது ஆப்பிள்களும் இல்லை, கிளைகளும் இல்லை. உனக்கு ஆறுதலாக நிழல் கொடுக்கக்கூட முடியாத நிலையில் நான் இருக்கிறேன்.”


அந்த மனிதன் விரக்தியாக சொன்னான், “எனக்கு வாழ்க்கையே வெறுப்பாகி விட்டது. நான் மிக களைத்து விட்டேன். தனியானவனாகவும் ஆகிவிட்டேன். எனக்கு உன் ஆறுதல் மொழிகள் தேவை. உனது வேரில் நான் அமர்ந்து கொள்ளலாமா?”
மரம் ஒன்றும் சொல்லவில்லை. அந்த மனிதன் அங்கு அமர்ந்து கொண்டான். தனிமையாக இருந்த இருவரும், ஒருவர் மற்றவருக்கு துணை என்ற எண்ணத்தில் மகிழ்வடைந்தார்கள். தங்கள் நிலையை எண்ணி அவர்களுக்கு அழுகையும் வந்தது.
இந்த கதையை படிக்கும் நாம் அந்த சிறுவன் எத்தகைய கொடூரமான சுயநலவாதியாக இருந்திருக்கிறான் என அவன் மேல் கோபமடைவோம். கொஞ்சம் பொறுங்கள்! ஒருவகையில் நாம் அனைவருமே அந்த சிறுவனைப்போலத்தான் நடந்து கொள்கிறோம், நமது பெற்றோர்களை பொறுத்த வரையில்!


மரம் என உருவகமாக சொல்லப்பட்டது நமது பெற்றோர்களைத்தான் என கொண்டு சற்று யோசனை செய்து பாருங்கள்!
நாம் சிறுவயதாக இருக்கும்போது பெற்றோரின் அரவணைப்பு நமக்கு தேவைப்படுகிறது. அவர்களுடன் இருக்கும்போது நாம் மிக பாதுகாப்பாக உணர்கிறோம். நாம் வளர்ந்த பிறகு அவர்களின் நிழலில் இருப்பது நமக்கு பிடிப்பதில்லை. அவர்களை தனிமையில் விட்டு நாம் விலகிச்செல்கிறோம். அவர்களின் உதவி தேவை எனும்போது மட்டுமே நாம் திரும்ப வருகிறோம்.


அவர்களுடன் செலவழிக்க நமக்கு நேரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பாசமிகு பெற்றோர் நமக்காக நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தரத் தயாராக இருக்கிறார்கள். பதிலுக்கு அவர்கள் எதிர்பார்ப்பது என்னவோ தம் பிள்ளைகளின் பாசமும் கவனிப்பும்தான். இதை நாம் சரியாக உணர்ந்து கொண்டிருக்கிறோமா?


உங்கள் பெற்றோரை மறந்து விடாதீர்கள். முடிந்தவரை அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். உங்கள் பாசத்தையும் பரிவையும் அவர்களிடம் காட்டுங்கள். நீங்கள் சந்தோசமாக இருப்பதைப் பார்த்து தானும் சந்தோசமடையும் ஜீவன்கள் அவர்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்.

அன்புடன்
மபாஸ்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 11, 2010 2:06 pm

இது ரொம்ப சூப்பர் மபாஸ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 11, 2010 3:20 pm

எத்தனை அருமையான கதை..

இதில் உவமானம் உயிருள்ள உணர்வுள்ள மரம் என்றாலும் அதற்கும் தனிமை பிடிப்பதில்லை... தன்னை கொடுத்து சந்தோஷிக்கிறது...

பெற்றோரும் அப்படியே....

பிள்ளைகள் தனக்கென்று ஒரு குடும்பம் அமைந்ததும் தாய் தந்தையரின் எல்லா தியாகமும் மறந்து போகின்றனர்..

முதியோர் இல்லங்களும் பெருகிவிட்டது....

தனக்கும் இப்படி ஒரு நிலை வரப்போகுதுன்னு எந்த பிள்ளையும் ஏன் நினைப்பதில்லை என்ற வேதனையே மிஞ்சுகிறது...

அருமையான கதையை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மபாஸ்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரமும் மனிதனும் 47
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 11, 2010 3:43 pm

மஞ்சுபாஷிணி wrote:எத்தனை அருமையான கதை..

இதில் உவமானம் உயிருள்ள உணர்வுள்ள மரம் என்றாலும் அதற்கும் தனிமை பிடிப்பதில்லை... தன்னை கொடுத்து சந்தோஷிக்கிறது...

பெற்றோரும் அப்படியே....

பிள்ளைகள் தனக்கென்று ஒரு குடும்பம் அமைந்ததும் தாய் தந்தையரின் எல்லா தியாகமும் மறந்து போகின்றனர்..

முதியோர் இல்லங்களும் பெருகிவிட்டது....

தனக்கும் இப்படி ஒரு நிலை வரப்போகுதுன்னு எந்த பிள்ளையும் ஏன் நினைப்பதில்லை என்ற வேதனையே மிஞ்சுகிறது...

அருமையான கதையை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மபாஸ்..

நன்றி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 11, 2010 6:20 pm

இந்தக்கதையை ஆங்கிலத்தில் படித்த ஞாபகமிருக்கிறது அருமையான முதியோரை போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா மரமும் மனிதனும் 154550 மரமும் மனிதனும் 678642



நேசமுடன் ஹாசிம்
மரமும் மனிதனும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 11, 2010 8:44 pm

maniajith007 wrote:இது ரொம்ப சூப்பர் மபாஸ்
நன்றி .... மரமும் மனிதனும் 154550

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 12, 2010 8:25 pm

மஞ்சுபாஷிணி wrote:எத்தனை அருமையான கதை..

இதில் உவமானம் உயிருள்ள உணர்வுள்ள மரம் என்றாலும் அதற்கும் தனிமை பிடிப்பதில்லை... தன்னை கொடுத்து சந்தோஷிக்கிறது...

பெற்றோரும் அப்படியே....

பிள்ளைகள் தனக்கென்று ஒரு குடும்பம் அமைந்ததும் தாய் தந்தையரின் எல்லா தியாகமும் மறந்து போகின்றனர்..

முதியோர் இல்லங்களும் பெருகிவிட்டது....

தனக்கும் இப்படி ஒரு நிலை வரப்போகுதுன்னு எந்த பிள்ளையும் ஏன் நினைப்பதில்லை என்ற வேதனையே மிஞ்சுகிறது...

அருமையான கதையை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மபாஸ்..
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Wed May 12, 2010 10:03 pm

சபீர் wrote:
மஞ்சுபாஷிணி wrote:எத்தனை அருமையான கதை..

இதில் உவமானம் உயிருள்ள உணர்வுள்ள மரம் என்றாலும் அதற்கும் தனிமை பிடிப்பதில்லை... தன்னை கொடுத்து சந்தோஷிக்கிறது...

பெற்றோரும் அப்படியே....

பிள்ளைகள் தனக்கென்று ஒரு குடும்பம் அமைந்ததும் தாய் தந்தையரின் எல்லா தியாகமும் மறந்து போகின்றனர்..

முதியோர் இல்லங்களும் பெருகிவிட்டது....

தனக்கும் இப்படி ஒரு நிலை வரப்போகுதுன்னு எந்த பிள்ளையும் ஏன் நினைப்பதில்லை என்ற வேதனையே மிஞ்சுகிறது...

அருமையான கதையை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மபாஸ்..
மரமும் மனிதனும் 359383 மரமும் மனிதனும் 359383 மரமும் மனிதனும் 359383

மரமும் மனிதனும் Icon_cheers





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக