புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 4:46 pm

First topic message reminder :

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதின்று!!!!


திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Periyar


ஆலம் விழுதினைப்போல் தொங்குகின்ற
மீசையிலே ஊசல்கட்டி ஆடிடவா?

தொங்கினாலும் தூங்காது ஏங்குமுந்தன்
திராவிடத்துக் கொள்கைகளை பாடிடவா?


இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?


கவிழ்ந்தாலும் ஏற்றம்சொன்ன போராட்டப்
போர்வாளாய்ப் புதுமுழக்கம் செய்திடவா?


வெண்தாடி பாய்ச்சிநின்ற சீர்திருத்த
வெளிச்சத்திலே செண்டாடி வீசிடவா?


வெளுத்தாலும் வெளுக்காத தன்மானப்
பேருணர்வை தமிழேற்றிப் பேசிடவா?

முடுக்கிவிட்ட இயந்திரமாய் நடுங்குமுந்தன்
கரம்பிடித்து தட்டமாலை சுற்றிடவா?


சொடுக்கிவிட்ட மேல்கீழாம் வருக்கவினை
விரட்டிவிட்ட சத்தியத்தைச் சாற்றிடவா?

சுருக்கம்கண்ட சதையினிலே துரும்பதனை
ஒளித்துகிச்சு தம்பாளந்தான் ஆடிடவா?

கருக்கதனில் விடியாத விதவைதுயர்
விரட்டிஒளி யேற்றியதைப் புகழ்ந்திடவா?

முதுமையிலும் வீரநடைக் குதவியகைத்
தடியெடுத்துத் தேராக்கி உருட்டிடவா?

இளமைமன எரிதழலாம் தீயணைத்து
துயர்துடைத்த இன்பமதை ஏற்றிடவா?

வட்டமுகத்துக் கழகுதரும் கண்ணாடி
தனைஒளித்து கண்ணாமூச்சிஆடிடவா?


திட்டமிட்டு தெனைமரங்கள் தனையழித்து
குடிஒழித்த குணமதைத்தான் கூறிடவா?


விளையாட நினைத்தாலும் முடியாமல்
மலர்மேனி வெங்காயம் ஆனதையோ!!


திராவிடத்து விருட்சமிது செந்தமிழின்
சீர்த்திருத்த சிலையாகிப் போனதையோ!!





ஆதிரா...




திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Empty

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat May 01, 2010 7:50 pm

இக்கவிதையின் மூலம் சமத்துவத்தை நிலைநாட்டி உள்ளீர்கள் !
இதுநாள் வரை தாங்கள் ஆத்திக கவிஞர் என்று நினைத்து இருந்தோம். பகுத்தறிவு பகலவனையும் பாடியதால் தாங்கள்
ஒரு விடிவெள்ளி யே !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 8:26 pm

manoj_23 wrote:இக்கவிதையின் மூலம் சமத்துவத்தை நிலைநாட்டி உள்ளீர்கள் !
இதுநாள் வரை தாங்கள் ஆத்திக கவிஞர் என்று நினைத்து இருந்தோம். பகுத்தறிவு பகலவனையும் பாடியதால் தாங்கள்
ஒரு விடிவெள்ளி யே !

ஏன் என்னை ஆத்திகக் கவிஞர் என்று நினைத்தீர்கள் என்று தெரியவில்லை மனோஜ்.. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி..தாங்கள்
http://www.eegarai.net/-f32/-t24471.htm
இந்தத் திரியில் உள்ள கவிதையைப் படித்துக் கருத்துக் கூறவேண்டும். நன்றி... திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550



திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 01, 2010 10:13 pm

தாடிக்காரன் செய்த புரட்சி மழுங்கிவரும் நேரம்...
பேடிகளின் மெத்தனத்தால் பேய்கள் ஆடிவரும் கோரம்...

வேதத்தைப் படித்து வேறுலகம் காட்டவந்த வேதியரே எங்களுக்கு
சாதத்தைக் காட்டிடவே ஏதாச்சும் ஓர் வழி பகர்வீரோ...

என்றெல்லாம் கூக்குரலில் பசி ஓலம் காதடைக்க்க
பரிதவித்த
சாதித் தீயினில் போராடிய மாந்தருக்கெல்லாம்

தன் வெண் தாடியால் வெண்சாமரம் வீசிய வேந்தனுக்கு
உன் புகழ்மாலை பெருமைப் படுத்துதடி என் தோழி...!

பாராட்ட நாவில்லை.. கடன் கேட்டேன் கலைமகளை
சீராட்ட வலுவில்லை நாமகளை வேண்டிநின்றேன்...

ஏதோ இருக்கும் எச்சம் மிச்சம் வார்த்தைகளால்
சூதோ வாதோ ஏதுமின்றி வாழ்த்தி நின்றேன்...

என்றும் அன்புடன்

கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 11:07 pm

கலை wrote:தாடிக்காரன் செய்த புரட்சி மழுங்கிவரும் நேரம்...
பேடிகளின் மெத்தனத்தால் பேய்கள் ஆடிவரும் கோரம்...

வேதத்தைப் படித்து வேறுலகம் காட்டவந்த வேதியரே எங்களுக்கு
சாதத்தைக் காட்டிடவே ஏதாச்சும் ஓர் வழி பகர்வீரோ...

என்றெல்லாம் கூக்குரலில் பசி ஓலம் காதடைக்க்க
பரிதவித்த
சாதித் தீயினில் போராடிய மாந்தருக்கெல்லாம்

தன் வெண் தாடியால் வெண்சாமரம் வீசிய வேந்தனுக்கு
உன் புகழ்மாலை பெருமைப் படுத்துதடி என் தோழி...!

பாராட்ட நாவில்லை.. கடன் கேட்டேன் கலைமகளை
சீராட்ட வலுவில்லை நாமகளை வேண்டிநின்றேன்...

ஏதோ இருக்கும் எச்சம் மிச்சம் வார்த்தைகளால்
சூதோ வாதோ ஏதுமின்றி வாழ்த்தி நின்றேன்...

என்றும் அன்புடன்

கலை

இப்படியெல்லாம் பாராட்டினால் எனக்கு நன்றி சொல்ல கூடத் தெரியாது கலை.. மிக்க நன்றி.. மிக்க நன்றி.. மிச்ச சொச்ச வார்த்தைகளால் வாழ்த்தியமைக்கு மீண்டும் நன்றி..
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550



திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Empty
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 02, 2010 12:07 am

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 02, 2010 1:00 am

நிலவை காட்டி ஊட்டிய சோறு,
நித்தம் மறக்காத நினைவு.
என்பதைப் போல
பெரியாரை யார் என்று
கேட்க்கும் நாள் இது!
இவர் தான் அவர் பெரியார் ,
புரியாதவருக்கும் ,பெரிய ஐயா,
ஈரோடு தந்த உண்மையா ,
என்று சொல்லி கவிதை படித்து,
சாலைகளில் சிலையாய் போனவரை,
சாக்கடை அரசியவாதியாய் போகாதவரை,
காரம் கொண்ட வெங்காயம் போன்ற,
கருத்துகள் வெங்காயமா போனாலும்,
இன்னும் அவர் நினைவுகள் என்றும் வாடாத மலர்
மறையாத நிலவு என்று .கவிதைப் பாடியா ,தோழியே!
உன் தமிழுக்கு வாழ்த்துக்கள்.எழுதிய விரலுக்கு வாழ்த்துக்கள்!
பெரியாரை நினைவு படுத்திய தேவியே!என்றும் எங்கள் மனதில்
நீ தமிழ் மலையாய்,மழையாய்,அசையாது ,மறையாது தூறி இதமளிப்பாய்.
வாழ்த்துக்கிறேன்,உன் தமிழுக்கும் உனக்கும் புகழ் பரவ வேண்டுகிறேன்.

நட்புடன்.
கலைநிலா .






இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 2:52 am

ஆடிடவா?
பாடிடவா?
ஆடிடவா?
செய்திடவா?
வீசிடவா?
பேசிடவா?
சுற்றிடவா?
சாற்றிடவா?
ஆடிடவா?
புகழ்ந்திடவா?
உருட்டிடவா?
ஏற்றிடவா?
ஆடிடவா?
கூறிடவா?
இவ்வாறு
கேள்வி வரிகளுடன்
அசத்தியுள்ளீர்கள்
மேடம் அருமை
வாழ்த்துக்கள்
மேடம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 10:05 am

priyatharshi wrote:அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்
நன்றி ப்ரியா.. திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550



திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 12:21 pm

அப்புகுட்டி wrote:ஆடிடவா?
பாடிடவா?
ஆடிடவா?
செய்திடவா?
வீசிடவா?
பேசிடவா?
சுற்றிடவா?
சாற்றிடவா?
ஆடிடவா?
புகழ்ந்திடவா?
உருட்டிடவா?
ஏற்றிடவா?
ஆடிடவா?
கூறிடவா?
இவ்வாறு
கேள்வி வரிகளுடன்
அசத்தியுள்ளீர்கள்
மேடம் அருமை
வாழ்த்துக்கள்
மேடம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக மிக நன்றி அப்பு தங்கள் ஆய்வுக்கும் வாழ்த்துக்கும்... இப்படி அதாவது கடைசி எழுத்தோ சொல்லோ ஒன்று போல் அமைத்து எழுதுவதை தமிழில் இயைபுத் தொடை என்று கூறுவார்கள்.. இது பாடலின் அழகைக் கூட்டும்...மீண்டும் நன்றி அப்பு.. திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550



திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 5:33 pm

kalaimoon70 wrote:நிலவை காட்டி ஊட்டிய சோறு,
நித்தம் மறக்காத நினைவு.
என்பதைப் போல
பெரியாரை யார் என்று
கேட்க்கும் நாள் இது!
இவர் தான் அவர் பெரியார் ,
புரியாதவருக்கும் ,பெரிய ஐயா,
ஈரோடு தந்த உண்மையா ,
என்று சொல்லி கவிதை படித்து,
சாலைகளில் சிலையாய் போனவரை,
சாக்கடை அரசியவாதியாய் போகாதவரை,
காரம் கொண்ட வெங்காயம் போன்ற,
கருத்துகள் வெங்காயமா போனாலும்,
இன்னும் அவர் நினைவுகள் என்றும் வாடாத மலர்
மறையாத நிலவு என்று .கவிதைப் பாடியா ,தோழியே!
உன் தமிழுக்கு வாழ்த்துக்கள்.எழுதிய விரலுக்கு வாழ்த்துக்கள்!
பெரியாரை நினைவு படுத்திய தேவியே!என்றும் எங்கள் மனதில்
நீ தமிழ் மலையாய்,மழையாய்,அசையாது ,மறையாது தூறி இதமளிப்பாய்.
வாழ்த்துக்கிறேன்,உன் தமிழுக்கும் உனக்கும் புகழ் பரவ வேண்டுகிறேன்.

நட்புடன்.
கலைநிலா .


என்றும் போல் தங்களின் அன்பான வாழ்த்து என் மனதை இதமாகக் குளிரச்செய்தது தோழரே...என்றும் இதே போல உங்கள் மனதில் மலையாய், மழையாய் அசையாது மறையாது குளிரச்செய்யவே விரும்புகிற மனதுடன் என் நன்றியையும் கூறிக்கொள்கிறேன்... கலைநிலா.. திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 678642 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 733974 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 154550



திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக