புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோளக் கொல்லை பொம்மை!
Page 1 of 1 •
புலியூர் ஓர் அழகிய சின்னஞ்சிறிய கிராமம். இயற்கை அன்னையின் கருணைப் பார்வையில், அந்த ஊர் நில வளம், நீர் வளம், மலை வளம் என அபரிமிதமான வளங்களைப் பெற்றிருந்தது. அங்கு மருதமுத்து என்ற விவசாயி ஏராளமான நில, புலன்களோடு வசதியாக வாழ்ந்து வந்தான்.
இதனால், பச்சைப் பசேல் வயல்வெளிகளுக்கும், அங்கு இரை தேடி வரும் குருவி, பறவைகளுக்கும் பஞ்சமே இல்லை. மருதமுத்துக்கு வாயில்லா ஜீவன்கள் மேல் கொள்ளை ஆசை. தன் வீட்டிலேயே செல்லப் பிராணிகளான கிளி, பூனை, "டைகர்' என்கிற நாய், கோழி, முயல் ஆகியவற்றை வளர்த்து வந்தான்.
அதே பண்ணையில் ஒரு பூனைக் குடும்பமும் சந்தோஷமாய் வாழ்ந்து வந்தது. தாய், தகப்பன், இரண்டு குட்டிகள் என அந்தப் பூனைக் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர். மூத்தக் குட்டியின் பெயர் வனராஜா. அதற்கு எடுத்ததற்கெல்லாம் கோபம் "பொசு'க்கென்று வந்து விடும். பெற்றோரின் சொல் கேட்கும் வழக்கமே கிடையாது.
தான் சொன்னதையே சாதிக்க வேண்டும் என்று பிடிவாதமாய் வம்பு செய்யும். தானே எல்லா விஷயமும் தெரிந்த மேதாவி என்று சுயதம்பட்டமும் அடித்துக் கொள்ளும்.
இதுபோக, கிடைத்ததைக் கொண்டு திருப்திபடும் வழக்கமே அதனிடம் இல்லை. ஓயாமல் பக்கத்து வீடுகளின் சமையல் வாசத்தையே மோப்பம் பிடித்து, அந்தப் பொருட்களை திருடித் தின்ன சுற்றிச் சுற்றி வரும். ஆனால், ஆட்கள் நடமாட்டம் இருந்துக் கொண்டே இருப்பதால், அதன் அற்ப எண்ணம் ஒருபோதும் நிறைவேறியதே இல்லை.
இந்த நிலையில், திடீரென்று அதன் மனதில் ஒரு குரூர எண்ணம் உதித்தது. சின்னஞ்சிறு குருவிகளை கவ்விப் பிடித்துத் தின்றால், ருசியாக இருக்குமே என்று நினைத்து, அதற்கு ஒரு திட்டமும் தீட்டியது. அதன்படி, பெற்றோரிடம் கூட சொல்லிக் கொள்ளாமல், நைசாக வீட்டை விட்டு வெளியேறியது. ஒளிந்து, ஒளிந்து வயல் வெளியை சென்றடைந்தது.
அங்கே அது கண்ட காட்சி.
""அடடா! எத்தனை வித, விதமான குருவிகள். தினம் ஒன்று, இரண்டு என்று பிடித்துத் தின்றாலும், வருஷக் கணக்கில் விருந்தாய் ஜமாய்க்கலாம்'' என்று நினைத்தது. மறுகணமே, நாக்கில் எச்சில் ஊறியது. உடனே, குருவிகளை எப்படி எளிதாய் பிடிப்பது? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டது.
அப் போது எதேச்சையாக அதன் பார்வையில் தட்டுப்பட்டது சோளக் கொல்லை பொம்மை ஒன்று. அசல் மனிதனே கையை விரித்து நிற்பது மாதிரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனுள் ஒளிந்து கொண்டால் எளிதில் குருவிகளைப் பிடித்து விடலாம் என்று தோன்றியது. சற்றும் தாமதிக்காமல் ஓட்டமாய் ஓடிப் போய் அதற்குள் நுழைந்துக் கொண்டது.
இப் போது தன் குரலை மாற்றிக் கொண்டு, பொம்மை பேசுவது மாதிரி பேச ஆரம்பித்தது. ÷""குருவிகளே! பறவைகளே இன்று முதல் நான் உங்கள் நண்பன். நீங்கள் தானியங்களைத் திண்பதற்கு நான் இடைஞ்சல் செய்யமாட்டேன். தாரளமாக தானியங்களை சேகரித்து, என் சட்டைப் பைகளில் நிரப்புங்கள். பசி வந்த வேளைகளில் அலைந்து திரியாமல் "ஜம்' என்று என் பையில் உள்ள தானியங்களை பசியாறி இளைப்பாறுங்கள்'' என்று இரண்டு கைகளையும் ஆட்டி, ஆட்டி அழைத்தது.
இதைப் பார்த்த குருவிகளும், ""காவல்காரன் மனம் திருந்தி அழைக்கிறான். மறுக்க வேண்டாம்'' என்று அசட்டுத்தனமாய் நம்பி விட்டன. தாங்க முடியாத சந்தோஷத்துடன், வேக வேகமாய் பறந்து போய் பொம்மை மேல் உட்கார்ந்து, தாவித் தாவி விளையாட ஆரம்பித்தன. உள்ளே மறைந்திருக்கும் ஆபத்தை உணராமல், தீர யோசிக்காமல், கவலையின்றி இருந்தன குருவிகள்.
ஒன்றிரண்டு நாட்களில் பூனை தன் திருட்டுப் புத்தியைக் காட்ட ஆரம்பித்தது. ஓசைப் படாமல் ஒவ்வொரு குருவியாய் பிடித்து, சுவைக்க ஆரம்பித்தது. கொஞ்ச நாட்களிலேயே குருவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய ஆரம்பித்தது. திடீர் திடீரென்று தன் சொந்த பந்தங்கள் காணாமல் போவது குறித்து, தாமதமாகத்தான் குருவிகள் உணர ஆரம்பித்தன. காணாமல் போனவர்களை நினைத்து கவலைப்பட்டு கண்ணீர் வடித்தன. ஆனாலும், பூனை சாமர்த்தியமாக தன் திருட்டுத்தனத்தை தொடர்ந்துக் கொண்டுதான் இருந்தது.
நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போவதை உணர்ந்தன குருவிகள். உடனடியாக கூடி தீவிரமாய் ஆலோசிக்கத் தொடங்கின. ஒரே ஒரு புத்திசாலி கிழட்டுக் குருவிதான் உன்னிப்பாக நிலைமையை ஆராய்ந்து பார்த்து, கன கச்சிதமாக காரணத்தைச் சொல்லியது.
அதாவது, தமது புதிய நண்பன் சோளக் கொல்லை பொம்மையுடன் நட்பு சேர்ந்த பிறகுதான் இந்த விபரீதம் நடக்க ஆரம்பித்தது என்று. உடனே மற்ற குருவிகளும் இதை "சரி' என்று ஆமோதித்தன. இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்றும் அடுத்தக்கட்ட யோசனையை ஆரம்பித்தன.
பொம்மையின் நடவடிக்கைகளை கண்காணிக்க மின்மினிப் பூச்சியை பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அன்றே, இருட்ட ஆரம்பித்ததும் செயலிலும் இறங்கி விட்டன மின்மினிப் பூச்சிகள்.
பொம்மைக்கு சற்று தள்ளி அதைக் கண்காணித்த படி பறந்துக் கொண்டிருந்தன அவைகள். இப்போது முழுக்க வெளிச்சமெல்லாம் மறைந்து ஒரே கும்மிருட்டாய் மாறியிருந்தது. இனி தன்னை யாருமே பார்க்க வாய்ப்பில்லை என்று தப்புக் கணக்கு போட்டபடி, வெளியே தாவிக் குதித்தது வனராஜா பூனை. ஓட்டமாய் ஊருக்குள் ஓடிப் போனது.
இதனைத் துள்ளியமாய்க் கண்டுபிடித்து விட்டன மின்மினிப் பூச்சிகள். சற்றும் தாமதிக்காமல் நடவடிக்கையில் இறங்கின. இரவோடு, இரவாக கூட்டப்பட்ட பறவைகள் கூட்டத்தில், தங்களது எதிரி பூனைதான் என்று துல்லியமாய் அடையாளம் சொல்லின. அவ்வளவுதான். உடனடியாக, பூனையைச் சமாளிக்க, அதிரடி நடவடிக்கை எடுக்க, மருதமுத்துவின் வீட்டில் இருக்கும் நாயான டைகரை அழைப்பது என முடிவு செய்தன.
ம ருதமுத்து வீடு. நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் கவனமாய் கேட்டுக் கொண்ட டைகர், தன் பறவை நண்பர்களின் மனக் கவலையை இரண்டே நாட்களில் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தது. தங்கள் திட்டம் வெளியாகி பூனை தப்பி விடாமல் இருக்க, ஒரு யோசனையையும் சொல்லி அனுப்பியது. அதற்கும் "சரி' என்று சம்மதித்தன பறவைகள்.
இவ் வாறு டைகருடன் ஏற்பட்ட உடன்பாடு எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், எப்போதும் போல் மறுநாள் காலையில், குருவிகள் பறந்து போய் பொம்மை மேல் உட்கார்ந்தன.
வனராஜா பூனையும், குருவிகளை அக்கறையுடன் நலம் விசாரிப்பது மாதிரி தன் கபட நாடகத்தைத் தொடர்ந்தது. குருவிகள் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஒரே ஒரு மைனா மட்டும் சத்தமாக, ""நண்பனே! நாளையும் நீ அவசியம் இங்கேயே இருந்து, எங்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். உன்னால் முடியுமா?'' என்றது.
சற்றும் தாமதிக்காத வனராஜா, ""நண்பர்களே! உங்கள் நட்புக்காக நான் என் இனிய உயிரைக் கூட தரத் தயாராக இருக்கிறேன்'' என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டது.
""அப்படியானால், நாளை எங்கள் புது விருந்தினருடன் உன்னைச் சந்திக்கிறோம்'' என்று சொல்லிவிட்டு, "விர்'ரெனக் கிளம்பி விண்ணில் மறைந்தன.
மறு நாள், பொழுது விடிந்து, விடியாமல் இருக்கும் போதே வனராஜா ஓட்டமாய் ஓடி வந்து, பொம்மைக்குள் புகுந்துக் கொண்டது. புதிய விருந்தாளியின் வரவை நினைத்து, நாக்கை சப்பு கொட்டிக் கொண்டது.
சொல்லி வைத்தது மாதிரி, கோபம் கொப்பளிக்க, ரத்தச் சிவப்பில் மாறியிருந்த கண்களை உருட்டியபடி, குருவிகள் கூட்டம் புடைசூழ டைகர் நாய் கம்பீரமுடன், பொம்மையின் முன்னால் வந்து நின்றது.
உ டனே மைனா ஒன்று, உள்ளே பூனை வந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்து, ""நண்பரே! இதோ எங்கள் புது விருந்தாளியை அழைத்து வந்திருக்கிறோம் உம்மிடம் காட்டுவதற்காக'' என்று சொல்லி முடித்ததும், பூனையும் தன் பங்குக்கு, ""பார்த்தேன், பார்த்தேன்'' என்றது நாக்கு குழறியபடியே.
கை, கால் உதற பயத்தில் வார்த்தைகள் பாதி மட்டுமே வெளி வந்தது. எப்படி இந்த டைகர் பயலிடமிருந்து உயிர் தப்பி ஓடுவது என்பதையே சீரியஸாக இப்போது நினைக்க ஆரம்பித்திருந்தது.
சில விநாடிகள்தான் கடந்திருக்கும். ஒரு குருவி, டைகர் பாய்வதற்கு ஏற்றவாறு, சிக்னல் கொடுக்கும் வகையில், "ரெடி! ஒன், டூ, த்ரீ' என்று உரக்கச் சொல்லி முடிந்தது. அடுத்த விநாடியே தன் பலம் முழுவதையும் ஒன்று திரட்டி, ஆக்ரோஷத்துடன் பொம்மை மேல் பாய்ந்தது டைகர்.
""ஐயோ! அம்மா செத்தேன்'' என்று உரத்தக் குரலில், மரண ஓலம் எழுப்பிய படி, படுகாயம் அடைந்து, வெளியே விழுந்தது வனராஜா பூனை.
உ யிரைக் காப்பாற்றி ஆக வேண்டுமே என்ற கவலையில் தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டமெடுத்தது பூனை. அன்று முதல் குருவிகள் எந்தவிதமான தொந்தரவு, பயம் இல்லாமல் சந்தோஷமாய் ஆடிப்பாடி திரிய ஆரம்பித்தன. இந்த சம்பவத்திற்குப் பின், எதையுமே தீர ஆலோசித்தே செயலில் இறங்கின குருவிகள்!
*****
வெ.க. நவீன் பிரசன்னா
இதனால், பச்சைப் பசேல் வயல்வெளிகளுக்கும், அங்கு இரை தேடி வரும் குருவி, பறவைகளுக்கும் பஞ்சமே இல்லை. மருதமுத்துக்கு வாயில்லா ஜீவன்கள் மேல் கொள்ளை ஆசை. தன் வீட்டிலேயே செல்லப் பிராணிகளான கிளி, பூனை, "டைகர்' என்கிற நாய், கோழி, முயல் ஆகியவற்றை வளர்த்து வந்தான்.
அதே பண்ணையில் ஒரு பூனைக் குடும்பமும் சந்தோஷமாய் வாழ்ந்து வந்தது. தாய், தகப்பன், இரண்டு குட்டிகள் என அந்தப் பூனைக் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர். மூத்தக் குட்டியின் பெயர் வனராஜா. அதற்கு எடுத்ததற்கெல்லாம் கோபம் "பொசு'க்கென்று வந்து விடும். பெற்றோரின் சொல் கேட்கும் வழக்கமே கிடையாது.
தான் சொன்னதையே சாதிக்க வேண்டும் என்று பிடிவாதமாய் வம்பு செய்யும். தானே எல்லா விஷயமும் தெரிந்த மேதாவி என்று சுயதம்பட்டமும் அடித்துக் கொள்ளும்.
இதுபோக, கிடைத்ததைக் கொண்டு திருப்திபடும் வழக்கமே அதனிடம் இல்லை. ஓயாமல் பக்கத்து வீடுகளின் சமையல் வாசத்தையே மோப்பம் பிடித்து, அந்தப் பொருட்களை திருடித் தின்ன சுற்றிச் சுற்றி வரும். ஆனால், ஆட்கள் நடமாட்டம் இருந்துக் கொண்டே இருப்பதால், அதன் அற்ப எண்ணம் ஒருபோதும் நிறைவேறியதே இல்லை.
இந்த நிலையில், திடீரென்று அதன் மனதில் ஒரு குரூர எண்ணம் உதித்தது. சின்னஞ்சிறு குருவிகளை கவ்விப் பிடித்துத் தின்றால், ருசியாக இருக்குமே என்று நினைத்து, அதற்கு ஒரு திட்டமும் தீட்டியது. அதன்படி, பெற்றோரிடம் கூட சொல்லிக் கொள்ளாமல், நைசாக வீட்டை விட்டு வெளியேறியது. ஒளிந்து, ஒளிந்து வயல் வெளியை சென்றடைந்தது.
அங்கே அது கண்ட காட்சி.
""அடடா! எத்தனை வித, விதமான குருவிகள். தினம் ஒன்று, இரண்டு என்று பிடித்துத் தின்றாலும், வருஷக் கணக்கில் விருந்தாய் ஜமாய்க்கலாம்'' என்று நினைத்தது. மறுகணமே, நாக்கில் எச்சில் ஊறியது. உடனே, குருவிகளை எப்படி எளிதாய் பிடிப்பது? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டது.
அப் போது எதேச்சையாக அதன் பார்வையில் தட்டுப்பட்டது சோளக் கொல்லை பொம்மை ஒன்று. அசல் மனிதனே கையை விரித்து நிற்பது மாதிரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனுள் ஒளிந்து கொண்டால் எளிதில் குருவிகளைப் பிடித்து விடலாம் என்று தோன்றியது. சற்றும் தாமதிக்காமல் ஓட்டமாய் ஓடிப் போய் அதற்குள் நுழைந்துக் கொண்டது.
இப் போது தன் குரலை மாற்றிக் கொண்டு, பொம்மை பேசுவது மாதிரி பேச ஆரம்பித்தது. ÷""குருவிகளே! பறவைகளே இன்று முதல் நான் உங்கள் நண்பன். நீங்கள் தானியங்களைத் திண்பதற்கு நான் இடைஞ்சல் செய்யமாட்டேன். தாரளமாக தானியங்களை சேகரித்து, என் சட்டைப் பைகளில் நிரப்புங்கள். பசி வந்த வேளைகளில் அலைந்து திரியாமல் "ஜம்' என்று என் பையில் உள்ள தானியங்களை பசியாறி இளைப்பாறுங்கள்'' என்று இரண்டு கைகளையும் ஆட்டி, ஆட்டி அழைத்தது.
இதைப் பார்த்த குருவிகளும், ""காவல்காரன் மனம் திருந்தி அழைக்கிறான். மறுக்க வேண்டாம்'' என்று அசட்டுத்தனமாய் நம்பி விட்டன. தாங்க முடியாத சந்தோஷத்துடன், வேக வேகமாய் பறந்து போய் பொம்மை மேல் உட்கார்ந்து, தாவித் தாவி விளையாட ஆரம்பித்தன. உள்ளே மறைந்திருக்கும் ஆபத்தை உணராமல், தீர யோசிக்காமல், கவலையின்றி இருந்தன குருவிகள்.
ஒன்றிரண்டு நாட்களில் பூனை தன் திருட்டுப் புத்தியைக் காட்ட ஆரம்பித்தது. ஓசைப் படாமல் ஒவ்வொரு குருவியாய் பிடித்து, சுவைக்க ஆரம்பித்தது. கொஞ்ச நாட்களிலேயே குருவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய ஆரம்பித்தது. திடீர் திடீரென்று தன் சொந்த பந்தங்கள் காணாமல் போவது குறித்து, தாமதமாகத்தான் குருவிகள் உணர ஆரம்பித்தன. காணாமல் போனவர்களை நினைத்து கவலைப்பட்டு கண்ணீர் வடித்தன. ஆனாலும், பூனை சாமர்த்தியமாக தன் திருட்டுத்தனத்தை தொடர்ந்துக் கொண்டுதான் இருந்தது.
நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போவதை உணர்ந்தன குருவிகள். உடனடியாக கூடி தீவிரமாய் ஆலோசிக்கத் தொடங்கின. ஒரே ஒரு புத்திசாலி கிழட்டுக் குருவிதான் உன்னிப்பாக நிலைமையை ஆராய்ந்து பார்த்து, கன கச்சிதமாக காரணத்தைச் சொல்லியது.
அதாவது, தமது புதிய நண்பன் சோளக் கொல்லை பொம்மையுடன் நட்பு சேர்ந்த பிறகுதான் இந்த விபரீதம் நடக்க ஆரம்பித்தது என்று. உடனே மற்ற குருவிகளும் இதை "சரி' என்று ஆமோதித்தன. இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்றும் அடுத்தக்கட்ட யோசனையை ஆரம்பித்தன.
பொம்மையின் நடவடிக்கைகளை கண்காணிக்க மின்மினிப் பூச்சியை பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அன்றே, இருட்ட ஆரம்பித்ததும் செயலிலும் இறங்கி விட்டன மின்மினிப் பூச்சிகள்.
பொம்மைக்கு சற்று தள்ளி அதைக் கண்காணித்த படி பறந்துக் கொண்டிருந்தன அவைகள். இப்போது முழுக்க வெளிச்சமெல்லாம் மறைந்து ஒரே கும்மிருட்டாய் மாறியிருந்தது. இனி தன்னை யாருமே பார்க்க வாய்ப்பில்லை என்று தப்புக் கணக்கு போட்டபடி, வெளியே தாவிக் குதித்தது வனராஜா பூனை. ஓட்டமாய் ஊருக்குள் ஓடிப் போனது.
இதனைத் துள்ளியமாய்க் கண்டுபிடித்து விட்டன மின்மினிப் பூச்சிகள். சற்றும் தாமதிக்காமல் நடவடிக்கையில் இறங்கின. இரவோடு, இரவாக கூட்டப்பட்ட பறவைகள் கூட்டத்தில், தங்களது எதிரி பூனைதான் என்று துல்லியமாய் அடையாளம் சொல்லின. அவ்வளவுதான். உடனடியாக, பூனையைச் சமாளிக்க, அதிரடி நடவடிக்கை எடுக்க, மருதமுத்துவின் வீட்டில் இருக்கும் நாயான டைகரை அழைப்பது என முடிவு செய்தன.
ம ருதமுத்து வீடு. நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் கவனமாய் கேட்டுக் கொண்ட டைகர், தன் பறவை நண்பர்களின் மனக் கவலையை இரண்டே நாட்களில் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தது. தங்கள் திட்டம் வெளியாகி பூனை தப்பி விடாமல் இருக்க, ஒரு யோசனையையும் சொல்லி அனுப்பியது. அதற்கும் "சரி' என்று சம்மதித்தன பறவைகள்.
இவ் வாறு டைகருடன் ஏற்பட்ட உடன்பாடு எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், எப்போதும் போல் மறுநாள் காலையில், குருவிகள் பறந்து போய் பொம்மை மேல் உட்கார்ந்தன.
வனராஜா பூனையும், குருவிகளை அக்கறையுடன் நலம் விசாரிப்பது மாதிரி தன் கபட நாடகத்தைத் தொடர்ந்தது. குருவிகள் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஒரே ஒரு மைனா மட்டும் சத்தமாக, ""நண்பனே! நாளையும் நீ அவசியம் இங்கேயே இருந்து, எங்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். உன்னால் முடியுமா?'' என்றது.
சற்றும் தாமதிக்காத வனராஜா, ""நண்பர்களே! உங்கள் நட்புக்காக நான் என் இனிய உயிரைக் கூட தரத் தயாராக இருக்கிறேன்'' என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டது.
""அப்படியானால், நாளை எங்கள் புது விருந்தினருடன் உன்னைச் சந்திக்கிறோம்'' என்று சொல்லிவிட்டு, "விர்'ரெனக் கிளம்பி விண்ணில் மறைந்தன.
மறு நாள், பொழுது விடிந்து, விடியாமல் இருக்கும் போதே வனராஜா ஓட்டமாய் ஓடி வந்து, பொம்மைக்குள் புகுந்துக் கொண்டது. புதிய விருந்தாளியின் வரவை நினைத்து, நாக்கை சப்பு கொட்டிக் கொண்டது.
சொல்லி வைத்தது மாதிரி, கோபம் கொப்பளிக்க, ரத்தச் சிவப்பில் மாறியிருந்த கண்களை உருட்டியபடி, குருவிகள் கூட்டம் புடைசூழ டைகர் நாய் கம்பீரமுடன், பொம்மையின் முன்னால் வந்து நின்றது.
உ டனே மைனா ஒன்று, உள்ளே பூனை வந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்து, ""நண்பரே! இதோ எங்கள் புது விருந்தாளியை அழைத்து வந்திருக்கிறோம் உம்மிடம் காட்டுவதற்காக'' என்று சொல்லி முடித்ததும், பூனையும் தன் பங்குக்கு, ""பார்த்தேன், பார்த்தேன்'' என்றது நாக்கு குழறியபடியே.
கை, கால் உதற பயத்தில் வார்த்தைகள் பாதி மட்டுமே வெளி வந்தது. எப்படி இந்த டைகர் பயலிடமிருந்து உயிர் தப்பி ஓடுவது என்பதையே சீரியஸாக இப்போது நினைக்க ஆரம்பித்திருந்தது.
சில விநாடிகள்தான் கடந்திருக்கும். ஒரு குருவி, டைகர் பாய்வதற்கு ஏற்றவாறு, சிக்னல் கொடுக்கும் வகையில், "ரெடி! ஒன், டூ, த்ரீ' என்று உரக்கச் சொல்லி முடிந்தது. அடுத்த விநாடியே தன் பலம் முழுவதையும் ஒன்று திரட்டி, ஆக்ரோஷத்துடன் பொம்மை மேல் பாய்ந்தது டைகர்.
""ஐயோ! அம்மா செத்தேன்'' என்று உரத்தக் குரலில், மரண ஓலம் எழுப்பிய படி, படுகாயம் அடைந்து, வெளியே விழுந்தது வனராஜா பூனை.
உ யிரைக் காப்பாற்றி ஆக வேண்டுமே என்ற கவலையில் தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டமெடுத்தது பூனை. அன்று முதல் குருவிகள் எந்தவிதமான தொந்தரவு, பயம் இல்லாமல் சந்தோஷமாய் ஆடிப்பாடி திரிய ஆரம்பித்தன. இந்த சம்பவத்திற்குப் பின், எதையுமே தீர ஆலோசித்தே செயலில் இறங்கின குருவிகள்!
*****
வெ.க. நவீன் பிரசன்னா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
சபீர் wrote:படிப்பினை தரக்கூடிய ஒரு கதை நன்றி நன்றி
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|