புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
89 Posts - 38%
heezulia
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
2 Posts - 1%
prajai
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
340 Posts - 48%
heezulia
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
24 Posts - 3%
prajai
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
3 Posts - 0%
Barushree
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு


   
   

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து


'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 11:23 pm

பணம் பயம் ரெண்டுக்குந்தான வெவரமறியாத மக்க பணிஞ்சு பாழாப்போறது.

விடி...ய்யப் புலம்பல்ல கூடிட்டா பெரியமூக்கி.

"களையெடுக்க நாதியில்லையே... என் காடு போச்சே... வெதச்சது போச்சே. மகள மாடாக்கி வம்பாடு பட்டு உழுத காடு, முழிச்சிருக்க முழியத் தோண்டுன மாதிரி மூளியாப் போயிரும் போலருக்கே. ஏண்டி கருவாச்சி... என்னைக்கும் இல்லாத ஒறக்கம் இன்னைக்கு என்னாடி?


எங்க இருக்கவ?"
சுத்தியும்முத்தியும் பாத்து மகளக் காணமேன்னு நெஞ்சில அடிச்சு நிமிந்து பாத்தா, கையில கொத்தோட கால்ல செம்மண்ணோட கெறங்கிக் கிறுகிறுத்து வெளியிலிருந்து வீட்டுக் குள்ள வர்றா கருவாச்சி.

"கவலப்படாத ஆத்தா... கள வெட்டியாச்சு."

"பாதகத்தி மகளே! என்னாடி சொல்ற?"

"சுப்புலாபுரம் ஆளுகளுக்குச் சொல்லிவிட்டு, கால் ரூவா எச்சாக் குடுத்து நெலா வெளிச்சத்துல விடிய விடியக் களையெடுத்து முடிச்சிட்டுத் தான் வீட்டுக்கு வாரேன்."

"துட்டு..?"

"பசுமாட்டுச் சாணியக் குமிச்சுக் குமிச்சு எருவாக்கி வச்சிருந்தேன்ல... அத ஆமையன் கெழவனுக்கு நாலு ரூவாய்க்கு வித்தேன்."

"யாத்தே! நீ பொழைச்சாலும் பொழைச்சிருவ போலருக்கே..." மக மேல விழுந்து கட்டிப்புடிச்சு ஆச தீர அழுது பித்தேறிப்போனா பெரியமூக்கி.

அடுப்புச் சாம்பல அள்ளித் தெள்ளிப் பல்லு வெளக்கப் போனா கருவாச்சி.

ஒரு மாசமா ஒரே யோசன பெரியமூக்கிக்கு. 'எப்படிப் பொழைக் கப் போறா எம் மக இந்த ஊர்ல? ஒழவு காட்ல ஏர மறிக்கிறான்; களையெடுக்க விடுறானில்ல; நெஞ்சுல வம்மம் வச்சு அலையிறான். இன்னம் என்னென்ன செய்யக் காத்திருக்கானோ? எத்தன நாளைக்குத்தான் ஓடி வரும் மொதலக்கம்பட்டிச் சொந்தங்க? எத்தனை மொறைதான் நியாயங் கேட்டுக்குடுப்பாக உள்ளூர் ஆளுக? எங் கண்ணுள்ள காலம் வரைக்கும் எம் மக மேல துரும்பு விழுக விடமாட்டேன். நான் மண்டையக் கிண்டையப் போட்டுட்டா எப்படித் தப்பிக்கும் புலிக அலையிற ஊர்ல பொட்டையாட்டங்குட்டி?'

இப்படிப் பல மாதிரி யோசிச்சு ஊர்ப் பெருசுகளக் கலந்து ஒரு முடிவுக்கு வந்து சாவடிப்பட்டிக்கு ஆள் சொல்லிவிட்டுட்டா பெரிய மூக்கி.

பின்னந்தி வெயிலு. மூணு ஆம்பளைக. ரெண்டு பொம்பளை, ஆகமொத்தம் அஞ்சு ஆளுக வாராக சொக்கத்தேவன்பட்டி எல்லையில. நல்ல காரியத்துக்கு ஒத்தப்படை எண்ணிக்கையில போகணுங்கறது ஊர் ஆசாரம்.

வெள்ளையுஞ்சொள்ளையுமா கழுத்துல சுத்துன அங்கவஸ்திரம் காத்துல பறக்க, விலங்கு மாதிரி வெரல்கள்ல மோதிரம் போட்டு, கறுப்பு வெள்ளை மீசய முறுக்கி மேலேத்தி விட்டு முன்ன நடந்து வாராரு பாருங்க, அவருதான் சாவடிப்பட்டி விட்டி. மீச நரச்சாலும் எளந்தாரி ஒடம்பு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 11:24 pm

அந்த வட்டாரத்துலயே ஏறு கையான ஆளு. நெலம் பொலம், தோப்பு தொரவு, சொந்தக் கிடைன்னு தாறுமாறான சொத்து; ரெண்டு வருசமாச்சு பொண்டாட்டி செத்து. ஒரே மகளக் குள்ளப்புரத்துல கட்டிக்குடுத்திட்டாரு, ஒரு பள்ளிக்கூட வாத்தியாருக்கு. பய ஒரே பய; பெறவியிலேயே புத்தி மாறாட்டமானவன். சங்கிலி கட்டிச் சாப்பாடு போடுறாக வீட்ல.

பூவு பழம் தேங்கா வச்ச மஞ்சப் பையைக் கையில புடிச்சு வாரவரு அவரு தங்கச்சி புருசன்.

அய்யா மேல விழுந்தது போக மிச்ச நெழல் நெலத்துல விழுந்தாலும் விழுகலாமே தவிர, தன் மேல விழுந்திரக் கூடாதுன்னு தள்ளிக் கொட புடிச்சு வாரான் பாருங்க... அவன் வேலைக்காரன்.

கெழவி... விட்டிக்கு நல்லத்தா. மொளகாப்பழ நெறத்துல பட்டுச்சேல கட்டி வாரவ விட்டி தங்கச்சி.

[You must be registered and logged in to see this image.]



"வாங்கப்பா... வாங்க... வாங்க..." குட்டி போட்ட பூன மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிப் பரபரப்பாகிப்போனா பெரியமூக்கி.

ஓட்டுல மணலப் போட்டுக் கடல வறுத்துக்கிட்டிருந்த கருவாச்சிக்கு, வந்தவுக யாரு... எதுக்கு வந்திருக்காக ஒரு வெவரமும் தெரியல. மத்தியானத்தில் இருந்தே அவள நல்ல சீல கட்டச் சொன்னா ஆத்தா. அவ முந்தானைய இவ மூஞ்சில போட்டு அழுத்தி அழுத்தி எண்ண தொடச்சா. கட்டச் சீப்பு வச்சுச் சீவி வாரிவிட்டா. "போடி... போயி பொட்டுவச்சுக்க"ன்னு தள்ளிவிட்டா.

"என்னைக்கும் இல்லாம இன்னைக்கி ஆத்தா ஏன் இந்த அழிச்சாட்டியம் பண்றா?" எரிச்சலாயிருந்துச்சு கருவாச்சிக்கு.

மிக்சரையும் அதிரசத்தையும் பிரிச்சு, தனித்தனி ஏனம் சரியா வாய்க்காம ஒரே கும்பாவுல ரெண்டையும் போட்டுக் கொட்டி, "போடீ போ... சொந்தக்காரங்களுக்கு நீயே போய்க் குடுடீ"'ன்னு ஏவிவிடுறா மகள.

அவுக ஆளுக்கொரு கை மிச்சர அள்ளி, நாலு அதிரசம் ஏழு பேருக்கு வராதுங்கற கணக்குல ஆளுக்குப் பாதி கிள்ளி, கருவாச்சிய வச்ச கண் வாங்காமப் பாக்குறாக. பொண்ணு பாக்க வந்த எடத்துல கை கழுவக் கூடாதுங்கிற சாஸ்திரத் துக்குக் கட்டுப்பட்டு, துண்டு வேட்டி சீலையில தொடச்சுக்கிறாக பலகாரம் தின்ட கைய. கருவாச்சி பின்னாலயே போயி அவ முதுகுக்குப் பின்னால ஒக்காந்த விட்டி தங்கச்சி, மஞ்சப் பையிலயிருந்த மல்லிகப்பூவ எடுத்து கருவாச்சி தலையில வைக்கிறா. பூ வைக்கிற சாக்கில குடுமிய ஒரு இழு இழுக்கிறா. "யாத்தே"ன்னா கருவாச்சி. "ஒட்டு முடி இல்ல... நெச முடிதான்"னு சந்தோசப் பட்டுக்கிட்டா விட்டி தங்கச்சி. 'ஊமையில்ல, பேச்சும் வருது'ன்னு உறுதி பண்ணிக்கிட்டா.

ஒக்காந்த எடத்திலேயே அவ தரம், தண்டி, நெறம், ஒயரம், காதுல கெடந்த தண்டட்டி எல்லாத்தையும் எட போட்டவ, அவ கழுத்தப் பாத்ததும் "மளார்"னு எந்தரிச்சு பதறிப்போயி ஓடிவந்தா.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 11:32 pm

அண்ணன்கிட்டப் போய்க் காது கடிக்கிறா.

"யண்ணே! தாலி கட்டி அலையிறவளையா பொண்ணு பாக்க வந்த?"

"அதுக்கென்ன தங்கச்சி. நான் என்ன புதுமாப்பிள்ளையா..? இந்த வீட்டு மாடு கயிறோட நிக்கிது; நம்ம வீட்டுக்கு வாங்கிட்டுப் போறப்ப, புடி கயிறு மாத்திட்டாப் போச்சு."

அப்பத்தான் தெரியுது கருவாச்சிக்கு இது ஆத்தா நடத்தற கூத்துன்னு. தாழ்வாரத்த விட்டுத் திண்ணைக்கு விறுவிறுவிறுன்னு நடந்து வந்தா.

"நீங்க எல்லாம் எதுக்கு வந்திருக்கீக?"

"பொண்ணு பாக்கத்தான் தாயி... ஒன்னிய."

"பெரியவுகளா வந்திருக்கீகளே, மாப்பிள வரலையா?"

"இவர்தான் மாப்பிள."

"கழுத்துல தாலி இருக்கே, பரவாயில்லையா?"

"தெரிஞ்ச கதைதான. பரவாயில்லை."

"கழுத்துல தாலியிருந்தாப் பரவாயில்லேன்னு சொல்றீகளே... வயித்துல பிள்ளையிருந்தாலும் பரவா யில்லைன்னு சொல்லுவீகளா?"

வந்தவுகளுக்கு மூச்சுப்பேச்சு நின்னுபோச்சு.

அலறியடிச்சு எந்திரிச்சுப் பெரியமூக்கி கத்துறா: "என்னாடி சொல்ற... குடி கெடுக்க வந்தவளே?"

தணிஞ்ச குரல்ல கருவாச்சி சொல்றா: "ஆத்தா! நான் முழுகாம இருக்கேன்... மூணு மாசம்!"

[You must be registered and logged in to see this image.]


அடி மேல அடி விழுந்த வீட்ல இடி மேல இடி விழுந்த மாதிரி ஆகிப்போச்சு கருவாச்சி பொழப்பு. நல்லதுன்னு நெனச்சு நல்ல மனசோட எடுத்த முடிவு கெடுதல்ல போயி முடியுது.

'தாமரப் பூவு இருக்கே, அது தண்ணியிலதான் பெறக்குது. எந்தத் தண்ணியில பெறந்துச்சோ, அதே தண்ணியிலதான் கடைசியா அது அழுகி மெதக்குது. தாமர மொட்ட சூரியன்தான் தொட்டுத் தொறந்துவிடுது. எந்தச் சூரியன் தொட்டு மலர்த்திவிட்டுச்சோ அதே சூரிய வெப்பத்துலதான் அது காஞ்சு கருகிச் சருகாப் போகுது'ன்னு புலவனாருக கவி கட்டுவாக.

அந்தக் கவிக்குச் சாட்சி கருவாச்சி!

சொந்தத்துல வாழணும்னு ஆசப்பட்டா, அதே சொந்தந்தான் அவ வாழ்க்கையப் புடுங்கிட்டு வகுத்துல குடுத்து அனுப்பியிருக்கு.

பாறையில மழை பேஞ்சா, பேய்ஞ்ச மழை தெறிச்சோடும்; பாறை அப்படியே நிக்குமா இல்லையா... கருவாச்சி நிக்கிறா கல்லுப்பாறை மாதிரி; பெரியமூக்கி செதறி ஒடைஞ்சுபோனா மழைத் தண்ணி மாதிரி.

பிழிஞ்சு ஓஞ்சுபோன ஆரஞ்சுப் பழத்தப் போல, அழுது காஞ்சுபோனா பெரியமூக்கி, நின்ட முழி நின்ட மேனிக்கு நெஞ்சப் புடிச்சு ஒக்காந்தவதான்; மொனகிக்கிட்டே இருக்காளே தவிர முழுப் பேச்சுப் பேசறா இல்ல.

பொண்ணு பாக்க வந்தவங்க குடிக்காமப் போன கடுங்காப்பி கெடந்துச்சு அடுப்புல. கருவாச்சி அத ஊத்தி ஆத்திக் குடுக்குறா... மொறம் எடுத்து விசிறி விடுறா... ஒரு உணர்ச்சியும் இல்ல. நதிமூலம் வத்திப்போயிருச்சு போலிருக்கு கண்ணீருக்கு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 11:32 pm

வீட்ல மூணு மாசமா முட்டுச் சீல விழுகலங்கிற சங்கதிய அப்பத்தான் நெனச்சுப்பாக்குறா பெரியமூக்கி.

"ஏ சாமி! பொச கெட்ட சாமி... ஏம் பொழப்பக் கெடுத்த சாமி... மஞ்சப் பூவக் காமிச்சு என் நெஞ்சுல குத்துன சாமி... நாங்க என்னா பாவம் பண்ணோம்? என்னையும் எம் பிள்ளையையும் இந்தப் பாடுபடுத்தற? ஒரே ஒரு பாவம் பண்ணேன்.... எம் பிள்ளைக்குக் கல்யாணம்ங்கற பாவம். அந்தப் பாவத்தத் தீக்கத்தான் அத்துவிட்டேன். அத்துவிட்ட பாவம் எம் மக வகுத்துக்குள்ள ஒக்காந்துக்கிட்டு இப்ப என்ன பண்ணுவ... "வவ்வ வவ்வ வவ்வே"ன்னு வக்கணை காட்டுதே... என்ன நியாயம்? அந்தப் பாவத்தக் கருவுலயே வச்சு வளக்கவா? இல்ல அழிக்கவா?"

ராத்திரியோட ராத்திரியாப் பெரியமூக்கி ஓடி வந்து வெவரம் சொல்லவும் பேச்சே வரல பெருசுகளுக்கு.

பெருமூச்சு விடுறாக. தலையத் தலைய ஆட்றாக. மீசையும் சேத்து ஒதடு கடிக்கிறாக. "என்னத்தச் சொல்ல தாயி..? ஏதோ வாய்த் தகராறு; கட்டையன்கூட கோவிச்சுட்டு வந்து ஓங்கூட இருக்கா கருவாச்சி; இன்னும் அவுகளுக்குள்ள ஒரு தொடுசு இருக்குன்னா கருவக் கலைக்க யோசன வராது. பிரிஞ்ச புருசன் & பொண்டாட்டி, பிள்ள பெறந்தா ஒண்ணு கூடிருவாங்கன்னா கலைக்காமவிடலாம் கருவ. இப்ப ரெண்டு பேருக்கும் துப்புரவா ஒட்டுமில்ல... ஒறவுமில்ல. பிள்ள பெத்து ரெண்டு பேரும் ஒண்ணு சேரப் போறதுமில்ல.

இவளோ சின்னப் பிள்ள; நாளப் பின்ன வயசிருக்கு; வாழ்விருக்கு. இன்னைக்கி இல்லாட்டியும் நாளைக்கு ஒருத்தன் கையில அவளப் புடிச்சுக் குடுக்கறப்ப, பசுவும் கன்டுமா இருந்தாப் பாக்கிறவன் என்ன நெனப்பான்? கண்ணுல கண்ட உசுரு நல்லாருக்கணும்; அதனால, கண்ல காணாத உசுரு அழிஞ்சாத் தப்பில்ல; அழிச்சிரு."

அவ நெனச்சதையே ஊர்ப் பெருசுகளும் சொல்லவும் இன்னொரு கும்புடும் சேத்துப்போட்டு எந்திரிச்சுட்டா பெரியமூக்கி... 'தள்ளிப் போடப்படாது; நாளைக்கே கலைச்சிரணும் கருவாச்சி கருவ'.

பாவம்! கத்தாழங் காட்டுக்குள்ள பூத்த ஆவாரம் பூவு கருவாச்சி... நாக்குல போட்டாக் கரைஞ்சுபோற பஞ்சு முட்டாய் மாதிரி லேசான மனசு.

ரொம்ப நாளைக்கு முன்ன ஒரு சம்பவம்...

அழுக்குத் துணிகள அள்ளிக் கொடம் நிறையத் திணிச்சுக்கிட்டுக் கொளத்துக்குத் தொவைக்கப் போனா. விடிய்ய கரையில போயி நின்னவ நின்னவதான். ஒரு துணியும் தொவைக்காம வெயிலேற வீடு வந்துட்டா. கேட்டாச் சொல்றா... "தன்ன மறந்து தண்ணி ஒறங்குது; எப்பிடி எழுப்ப?"

ஒரு நாள்.... கழுத்து கடுக்கச் சோளம் சொமந்து போய்க்கிட்டேயிருந்தவ கத்தாழம் பொதரக் கண்டதும் நின்டது நிக்க நின்னுட்டா... "மயிலு தோகை விரிச்சா சுருட்டிவச்சிருமா இல்லையா; எங்க கத்தாழையுந்தான் தோகை விரிச்சிருக்கு. விரிச்ச பெறகு என்னைக்காச்சும் சுருட்டிவச்சிருக்கா?"

"விட்டா கத்தாளையைக் கல்யாணமே பண்ணிக்கிருவா போலிருக்கே"ன்னு சிரிச்சு விழுந்துபோனாக கூடப்போன ஆளுக.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 11:38 pm

பசுமாடு கன்டு போடுறதப் பாத்திருக்கா. ஆடு குட்டி போடுறதப் பாத்திருக்கா. கோழி முட்டை போடுறதக்கூட பாத்திருக்கா. ஆனா ரொம்ப நாளா அவ இருதயக்கூட்ல கட்டிவச்சிருக்கிற ஆசைக ரெண்டு இருக்கு... மீன் குஞ்சு பொரிஞ்சு வெளியேர்றதப் பாத்திரணும்; பாம்பு சட்டை உரிக்கிறதப் பாத்திரணும்.

ஆனா இந்தக் கேடுகெட்ட காலத்துக்கு ஆச கருவாச்சி கரு கலஞ்சு வர்றதப் பாத்திரணும்!

வைத்தியச்சி ரங்கம்மா பெரிய்ய கெட்டிக்காரி. நாயக்கமாரு பொம்பள; தாட்டியமானவ. பேறு காலம் பாக்கிறதிலிருந்து நகச்சுத்திக்கு மருந்து கட்றது வரைக்கும் அவள அடிக்க ஆளு இல்ல எட்டூர்ல. வைத்தியமும் பாப்பா; களை கண்ணிக்கும் போவா; யாரு கூப்பிட்டாலும் ஊர் ஊருக்குப் போயி ஒப்புச் சொல்லி அழுது, அழுகாச்சிக்கு அரிசி பருப்பு வாங்கிட்டு வீடு வந்திருவா. 'குருவி மாதிரி ஒரே கூட்லயிருந்தாப் பொழப்பு நடக்காது; பாம்பு மாதிரி பல பொந்துகள்லயும் குடியிருந்து பழகணும்'னு தத்துவம் வேற வச்சிருக்கா.

மனுசனுக்கு மண்ட பூரா வலிச்சாப் பொறுத்துக்கிரலாம். ஒரு பக்கமா வலிக்கும் பாருங்க ஒத்தத் தலவலி... உசுரு போயி உசுரு வரும். வட்டிக்குச் சொத்தெழுதி வாங்குனவனுக்குக்கூட வரப்படாது அது. விடிய்ய மண்டையில குத்தி, வெயில் ஏற ஏற வலியும் ஏறும் பாருங்க...

மண்டைய எடுத்துத் துண்டா வச்சிரலாம்னு தோணும். அதுக்கும் ஒரு மருந்து வச்சிருக்கா ரங்கம்மா. புருசன் பேரு சொல்லாத பொம்பளைக மாதிரி அந்த மருந்துப் பேரையும் அவ சொல்றதில்ல.

[You must be registered and logged in to see this image.]

வெளிக்கிருக்கப் போறவ மாதிரி போயி, வேலிகள்ல படர்ந்திருக்கிற ஒரு கொழைய உருவி அது இன்ன கொழைன்னு யாரும் கண்டுபிடிக்க முடியாதபடிக்கிக் கசக்கிக்கிட்டே வீட்டுக்கு வருவா. தலவலி தாங்காம அனத்துற ஆள 'படு'ம்பா. எலயக் கையிலயே கசக்கிச் சாறெடுப்பா. புழிஞ்ச சாற, எடது பக்கம் தலவலின்னா வலது காதுல விடுவா; வலது பக்கம் வலின்னா எடது காதுல விடுவா. இப்படி மூணு நாள் ஊத்துனான்னா மண்டவலி இருந்துச்சா... இல்ல, மண்டையே இருந்துச்சான்னு சந்தேகம் வந்திரும் சம்பந்தப்பட்ட ஆளுகளுக்கு.

மூட்டுவலிக்கு அவ கண்ட மருந்து இருக்கே... வெள்ளக்காரனும் கண்டுபிடிக்க முடியாத வித்தைன்னு சொல்றாக ஊர் தேசத்துல. படுத்த படுக்கையாக் கெடந்தாரு கண்டமனூரூ சமீந்தாரு. கடுங்கொண்ட மூட்டுவலி.

ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போகவும் மூணு பேரு வேணும். பண்ணாத வைத்தியமில்ல. மயில் கழுத்து எண்ணெயிலருந்து, யானச் சாணி வச்சுக் கட்டிப்பாத்தும் வலி கொறையல. ரங்கம்மா வீடு தேடி வந்து கடைசியாச் சொன்னாரு கண்டமனூர்க் கணக்குப்பிள்ள. நாலே நாள்ல ரங்கம்மா செஞ்சாயா ஒரு மருந்து.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 11:38 pm

வெள்ளெருக்கம் பூவு கத்திரி மஞ்ச கருஞ்சீரகம் கருமொளகு பச்சக்கர்ப்பூரம் அஞ்சையும் அம்மியில வச்சு நசநசநசன்னு நசுக்கி, பூப்போலப் பொடி பண்ணி அத ஒரு படி நல்லெண்ணெய்யில போட்டு மூணு நாள் ஊறவச்சா. நாலாம் நாள் எடுத்து அடுப்புக் கூட்டிப் புளிய வெறகெரிச்சு ஒரு படி நல்லெண்ணெய அரப்படியாச் சுண்டவச்சா.

சமீன்தார் மூட்டுல மூணு நாள் தடவிவிட்டுக் கரம்ப மண்ணப் போட்டுக் கழுவிவிட்டா பாருங்க... விடிய்ய, வேட்டைக்குப் போகலாங்கற அளவுக்கு சமீந்தார் வலி ஊரவிட்டே ஓடிப்போச்சு.

ரங்கம்மா மேல காதலாகிக் கசிஞ்சுபோனாரு சமீன்தாரு. அப்ப அவ வெடலப்புள்ள. பொம்பளைக்குப் பொம்பளையே ஆசப்படுற அழகு. தொட்ட சொகம் வேற ஒட்டிக்கிட்டிருக்கு. அவ கையால தடவிட்ட எடத்தத் தன் கையால தடவிக்கிட்டே சமீந்தார் கேட்குறாரு:

"என்ன வேணும்... கேள் தாரேன். வருசநாட்டுக் காடு வேணுமா? பெரியகொளம் தோப்பு வேணுமா? பாளையத்து நஞ்சை வேணுமா? இல்ல, என் எடப்பக்க எடம் வேணுமா?"

"இல்ல சாமி... என் வைத்தியக் கூலி காலே அரைக்காரூவாதான்; அத மட்டும் குடுங்க"ன்னு வாங்கிக்கிட்டுக் கையெடுத்துக் கும்பிட்டு ஓடியே வந்துட்டா ஓடி. மானம் நியாயத்துக்குக் கட்டுப்பட்டவ ரங்கம்மா.

பெரியமூக்கி வந்து "கலைச்சுவிட்ரு கருவாச்சி கருவ"ன்னு சொன்னதும், "இது சரியா தப்பான்னு தெரியலயே ஆத்தா"ன்னு நெஞ்சுல கைய வச்சு அழுத்தி, கவுத்துப்போட்ட குத்துச்சட்டி மாதிரி குத்தவச்சு ஒக்காந்துபோனா ரங்கம்மா.

ரெண்டு பக்க நியாயத்தையும் அவ ஒருத்தியாவே பேசிப்பேசிக் கடைசியா முடிவெடுத்தா.

"உசுர அழிக்கிறது பாவந்தான். ஆனா இது பாவத்துல பெறந்த உசுரு. அழிச்சாப் பாவமில்ல".

அவளுக்கேத்த நியாயத்துக்கு வந்துட்டா.

ஒரு பப்பாளிப் பழம் வாங்கி, தோல் சீவிக் கனியெடுத்து, அதத் தண்ணி ஊத்திப் பெணஞ்சு பெணஞ்சு கூழ்ப்பதமாக்கி அதுல அர வீசச் சீனியும் போட்டு அடிச்சுக் கையில குடுத்திட்டா ரங்கம்மா.

"இந்தாத்தா பெரியமூக்கி... கருவக் கலைக்கக் கருவாச்சி ஒத்துக்கிருவாளா. மூணு மாசம் சொல்லாம மூடிவச்சவளாச்சே. மருந்து குடுக்கறது ஏம் பாடு; குடிக்க வைக்கிறது ஒம் பாடு. குடுத்துப்பாரு... மூணே நாள்ல தீட்டு வந்திரும்: சக்கம்மா மேல சத்தியம்." மருந்துன்னு சொல்லிக்குடுத்தா பெரியமூக்கி. நம்ம நல்லதுக்குத்தான ஆத்தா குடுப்பாங்கிற நம்பிக்கையில கடகடன்னு குடிச்சுட்டா கருவாச்சி.

ரெண்டு நாளாச்சு... மூணு நாளாச்சு.. குடுத்த மருந்து வேலைக்காகல... சீல நனையல.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 11:39 pm

பப்பாளிப் பழத்தையும் தின்டுப்புட்டுக் கருவக் கெட்டியாப் புடிச்சுப் படுத்துக்கெடக்கு ஒரு அசையாத ஆத்மா. ரெண்டு ரெண்டரை மாசக் கரு வரைக்கும்தான் பப்பாளி சாத்தியப்படும். அதுக்கு அங்கிட்டு அதுக்கு அதிகாரமில்ல; வேற மருந்திருக்கு.

இப்படித்தான்... எண்டப்புளி ராசம்மா இருக்க, புருசன் செத்துப்போனான் பாம்பு கடிச்சு. கலைக்க வேண்டியதாப் போச்சு. கறுப்பு எள்ளு வறுத்து, கருப்பட்டி போட்டு இடிச்சு வெறும் வயித்தில தின்னக் குடுக்க மூணாம் நாளே பேறு கால வலி மாதிரி குத்திக் குடைய 'ஆள விடுங்க'ன்னு வெளிய வந்து விழுந்திருச்சு விரல் தண்டிப் பிண்டம்.

ஒடம்புல ரத்தச் சத்து உள்ள பொம்பளைகளுக்குத்தான் மேற்சொன்ன ரெண்டு மருந்தும் கேக்கும். கருவாச்சி ரத்தம் செத்த பொம்பளையா இருக்கா. அதுக்குண்டான மருந்து என்னான்னு யோசிச்சா வைத்தியச்சி.

[You must be registered and logged in to see this image.]



"கச்சேந்திரல எலை"ன்னு ஒண்ணு கெடக்கும் காடுகள்ல. கசப்புன்னாக் கசப்பு... வாயில வைக்க முடியாத கசப்பு. ஒரு எலைய மென்னு தின்னாலே வாய் வழியா வெளிய வந்து விழுந்திரும் கொடலு. அந்த எலைய மடி நிறையக் கொண்டாந்தா ரங்கம்மா. ஒரல்ல போட்டு இடிச்சா; சாறு எடுத்தா; கால் சொம்பு சாறுக்கு அரை வீச கருப்பட்டி போட்டா; அடுப்புக் கூட்டிக் கொதிக்கவச்சா; எறக்கி ஆற வச்சா; கசாயம்னு சொல்லி, விடிய வெறும் வயித்துல குடிக்கவச்சுட்டா. பாதியக் குடிச்சிட்டுப் பாதியத் துப்பிட்டுப் படுத்துக்கிட்டா கருவாச்சி.

உள்ள யானைக்குட்டியே இருந்தாலும் மூணே நால்ல முழுசா வந்திரும் வெளிய. சொல்லி நாலு நாளாகியும் ஒண்ணும் நடக்கல; ஒரு பொட்டுத் தீட்டு இல்ல. ரங்கம்மா மெரண்டுபோனா. அவ ஆயுசில இப்படி ஆனதில்ல.

"வைத்திய சாஸ்திரத்துக்கே விரோதமாயிருக்குடியாத்தா இந்த வெவகாரம். கருவாச்சி வகுத்துக்குள் பிண்டம்ங்கற பேர்ல ஒரு பிசாசு படுத்திருக்குடி"ன்னு ரங்கம்மா பொலம்ப, "பத்துக்கொறடு போட்டாகிலும் இருக்கிற கருவ எடுத்துவிட்ரு தாயி"ன்னு பதறிச் சொல்றா பெரியமூக்கி.

"கடைசியா ஒரே ஒரு வழிதான் இருக்கு. ஆனா கருவாச்சி உசுருக்கு உறுதி சொல்ல மாட்டேன்."

ரங்கம்மாவோட ரெண்டு கையையும் இழுத்து நெஞ்சுலவச்சுக்கிட்டு, "கருவக் கலைச்சு மகளக் காப்பாத்து"ன்னு கெஞ்சுறா பெரியமூக்கி.

அவ நெஞ்சில இருந்த இரண்டு கையையும் இழுத்து, தலைக்கு மேல வச்சு சாமியக் கும்புட்டு, "இரு... வாரேன்"னு வெளிய போறா ரங்கம்மா.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 11:40 pm

ஒரு சிரட்டைய எடுத்தா. அதுல பாதி சிரட்டைக்கு வெள்ளெருக்கம் பாலப் புடிச்சா. மல்லுத் துணி மாதிரி மெல்லிசா இருக்கிற வெள்ளத் துணி கிழிச்சா; வெள்ளெருக்கம் பால்ல அந்த வெள்ளத் துணிய ஊறப்போட்டா, பச்ச எருக்கிலையில் மஞ்சப் பூத்து ஓடுமே நரம்பு... அதுல ரெண்டு எடுத்தா. அந்த ரெண்டு ஈக்கிக்கு மத்தியில வெள்ளத் துணியத் திரிச்சுச் செருகுனா.

"இத இப்படியே ஆடாம அசங்காம அந்த ஜீவ துவாரத்துல செருகிவிட்டுட்டா, மூணே நாள்ல வெந்து வெளிய வந்து விழுந்திரும் எப்பேர்ப்பட்ட கருவும். இத வச்சுவிடவும் பொறுமை வேணும்; மூணு நாளும் வச்சுக்கிரவும் பொறும வேணும். எக்குத்தப்பா இந்தத் திரி எகிறிக் கருவுக்குள்ள சிக்கிக்கிருச்சுன்னு வச்சுக்க... அப்பறம் கருவாச்சியக் கண்ல பாக்க முடியாது... சொல்லிப்பிட்டேன்."

ஊர் ஒறங்கி ஓடுங்க மகள எழுப்புனா பெரியமூக்கி, "மகளே! மாட்டேன்னு சொல்லாத. இத வச்சுவிடுறேன்; வச்சுக்க."

"இது என்னாத்தா..? எதுக்கு?"

"எல்லாம் ஒன் நல்லதுக்கு."

"பட்டீர்"னு ஒரு மின்னல் மூளையில மின்ன, எல்லாம் வெளங்கிப்போச்சு கருவாச்சிக்கு. "ஏன் ஆத்தா கலைக்கப் பாக்குற?"

"அந்தப் பாவிப்பய மாதிரி ஒரு பிள்ள, இந்த வீட்ல வந்து பெறக்கணுமா?

"ஏன்? என்ன மாதிரி ஒரு பிள்ள இந்த வீட்ல வந்து பெறக்கப்படாதா?"

"நீ பெறப்போற சீவன், நான் பெத்த சீவன அழிச்சிருமோனு மனசு வேகுதடி மகளே! ஆத்தா சொல்றேன் கேளு. அந்தப் பாவத்த அழிச்சுவிட்ரு."

"உசுரே போனாலும் அழிக்க மாட்டேன். என் வயிறு... என் கரு... நானே சொமக்கிறேன்... நானே பெத்துக்கிறேன். இதுல கடவுளே குறுக்க வந்தாலும் கருவாச்சி மாறமாட்டா." ஆத்தா கையிலவச்சிருந்த குச்சிய எடது கையில புடுங்கி எறிஞ்சா பாருங்க... பாலுக்குத் தணல் காஞ்சுக்கிட்டிருந்த அடுப்புல விழுந்து சடசடன்னு எரிஞ்சு சாம்பலாப் போச்சு வெள்ளெருக்கம் துணி!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 25, 2010 10:57 am

"ஏலே கொண்ணவாயா! ஏற்கெனவே ஒங்க வீட்ல ஒரு பசுமாடு கன்டு போட்ருக்கு... இன்னொரு பசு இப்ப செனையா இருக்காம்ல. எப்படா ஈத்தெடுக்கப்போகுது?"

மாடு மேய்க்கப் போன காட்ல கொண்ணவாயன் வாயக் கிண்டி லந்து லகள பண்றாங்க, பொறணியவே பொழுதுபோக்கா வச்சிருக்கிற சக மாட்டுக்காரங்க. அந்தக் கேள்வியில இருக்கிற பொடியைக்கூட புரிஞ்சிக்கிராத இந்த வெவரங்கெட்ட வெள்ளந்திப் பய, "எங்க வீ... வீ... வீ... வீட்ல ஒரே ஒரு பசுதான் இருக்கு, எங்க சீ... சீ... சீ... சின்னத்தாதான் மா... மா... மா..."ன்னு முக்கி நிக்கிறான்.

[You must be registered and logged in to see this image.]

"ஏ... ஏ... ஏ... நிறுத்துரா. சின்னத்தா மா... மா... மா... மாசமா இருக்கான்னு நீ சொல்லி முடிக்கிறதுக் குள்ள கருவாச்சி பேறுகாலமாகிப் பிள்ள பெத்து, தொட்டில் போட்டுத் தூங்கியும்
போவா". பொதுவாக் கிண்டலடிக்க, கிள்ளி வெளையாட, முன்ன விட்டுப் பின்ன பேச, முடிஞ்சா அள்ளையில குத்தி அழுகவிட தன்னவிடத் தாழ்வான ஒரு பெறவி தேடுது ஒவ்வொரு மனுச மனசும். அந்த ஊர்ல எல்லாருக்குமா அப்படி வாய்ச்ச ஒரு சீவராசி கொண்ண வாயன். ஊர்ல அவன அப்படி நெனைக்கக் காரணமிருக்கு. அவன் சம்பந்தப்பட்டு ரெண்டு மூணு கூத்து நடந்துபோச்சு ஊர்ல.

வளவிக்காரச் சுப்பஞ் செட்டியாருக்கு ரெண்டு பெண் மக்க. இப்ப வீட்ல இருக்கிறவ இளையவ பவளம். கல்யாணமாகிப் போனவ கனகாம்பரம். அவ கல்யாணத்துலதான் நடந்துச்சு
கொண்ணவாயன் கூத்து. சில்லறையாச் சேத்துவச்சு கடன ஒடன வாங்கி மூத்தவளக் கரை சேக்குறாரு சுப்பஞ் செட்டியாரு. அவ காது கழுத்துல ஒண்ணு ரெண்டு தங்கத்த ஒட்டவச்சது போக, விரல்ல வைர மோதிரம் போட்டாத்தான் அவ கழுத்துல தாலி ஏறும்னு தலகீழா நிக்கிறான் மாப்பிள்ளை. தேனிக்குத் தெக்க பழனிசெட்டிபட்டிக்காரன் அவன். கண்ணாடி விக்கிற ஆளு தங்கம் வாங்குறதென்ன லேசா? வைர மோதிரம் மட்டும் பாக்கிவச்சிட்டு இந்தா இந்தான்னு இழுத்துப் புடிச்சுக் கல்யாணம் வரைக்கும் வந்துட்டாரு சுப்பஞ் செட்டியாரு. அடுத்த சனிக்கிழமை பொண்ணு வீட்ல நிச்சயதார்த்தம். ஞாயித்துக்கிழமை பழனிசெட்டிபட்டி மாப்ள வீட்ல கல்யாணம்.

சொந்தபந்தங்கள சனிக்கிழமை பொழுசாய நிச்சயதார்த்தத்துக்கு வரச் சொல்லி, ஞாயித்துக்கிழமை கையோட கல்யாணத்துக்குக் கூட்டிட்டிப் போயி அப்படியே அனுப்பிட்டா, ஒரு நேரச் சாப்பாட்டோட கத முடிஞ்சுபோகும்ங்கிறது சுப்பஞ் செட்டி கணக்கு.

கொண்ணவாயனக் கூப்பிட்டாரு சொந்தபந்தங்களுக்கெல்லாஞ் சொல்லிவிட. "வாடா அய்யா கொண்ணவாயா. அடுத்த சனிக்கெழமை சாயங்காலம் நிச்சயம் ஞாயித்துக்கெழமை காலையில கல்யாணம். சுப்பஞ் செட்டி சொல்லிவிட்டார்னு சொல்லிட்டு வந்திரு ராசா"ன்னு லட்சுமிபுரம், புதுப்பட்டி, வடுகபட்டி, எண்டப்புளி புதுப்பட்டி, கருவாட்டு நாயக்கன்பட்டி, தேவதானப்பட்டி, தெப்பம்பட்டி, குச்சனூருன்னு ஏழூருப் பேரும் ஆளும் சொல்லி, கை நெறையச் சில்லறைய அள்ளி வலது கையிலருந்து எடது கைக்கு ஒண்ணொண்ணாப் போட்டு எண்ணி, "ரெண்டு கையும் புடிடா"ன்னு அவன் கையில போடும்போது மறுபடியும் எண்ணி, கார்ச் செலவு கைச்செலவு ரெண்டுக்கும் கணக்கும் சொல்லி, "சட்டுன்னு போய்ட்டு வாடா, என் சல்லிக்கட்டுக் காள!"ன்னு ஒரு நல்ல வார்த்தைய லஞ்சமாவும் குடுத்து நாலா தெசைக்கும் அனுப்பிவச்சாரு கொண்ணவாயன.

"சனிக்கிழமை நிச்சயம் ஞாயித்துக் கிழமை கல்யாணம்"னு சொல்லிக் கிட்டே போன பய, வழியில வெள்ளரிக்கா வித்த ஒரு கெழவிகிட்ட நின்னான். கால் ரூவாய்க்குக் கடை போட்டு, அரைக்கா ரூவா லாபம் பாக்க ஒக்காந்திருந்த கெழவி, இன்னொரு பொம்பளைக்கு யோசன சொல்லிக்கிட்டிருக்கா. "இந்தாடி... நாளும் கோளும் நாலுஞ் செய்யும்னு சும்மாவா சொன்னாக. மக பேறுகாலத்துக்குப் போறவ நல்ல நாளு பாத்துப் போக வேணாமா? சொல்றேன் கேட்டுக்க.

திங்கக்கெழமை திரும்பாப் பயணம் அன்னைக்குப் போகாத. செவ்வாயோ வெறும் வாயோன்னு சொல்லுவாக செவ்வாயும் வேணாம். பொன்னு கெடைச்சாலும் புதன்
கெடைக்காதும்பாக புதன்கெழமை போ". வெள்ளரிக்காயப் பொளந்து உப்புத் தூளயும் மொளகாத் தூளயும் அதோட ஆத்மா வரைக்கும்
போய்ச் சேரணும்னு அப்பிக்கிட்டிருந்த கொண்ண வாயனுக்குக் கெழவி சொன்ன சொல்லுல புத்தி மாறிப்போச்சு. எல்லா ஊர்லயும் பொறுப்பாப் போயி நின்னு பு... பு... புதன்கிழமை
நிச்சயம் வி... வி... வியாழக்கிழமை கல்யாணம்னு அழுத்திச் சொல்லிட்டு வந்திட்டான். புதன்கிழமை சாயங்காலம்.

"மத்தியானம் வச்ச கத்திரிக்காக் கொழம்புல மிச்சமிருந்தா ராத்திரி சோளக்களிக்குச் சரியாப் போகும் தாயி"ன்னு சுப்பஞ் செட்டியாரு சிக்கனம் பேசிக்கிட்டிருக்க... வீட்டு வாசல்ல வரிசை வரிசையா நிக்கிதுக வண்டிக வந்து. வீட்ல கூடிக் குமிஞ்சுபோச்சு ஒரு நாடகத்துக்குண்டான கூட்டம். சிறுசு பெருசு நண்டான் சுண்டான் கெழடு கட்டைன்னு வண்டி வண்டியா வந்து இறங்குது ஏழூருச் சொந்தம்.

திடீர்னு வெளவாலுக கூட்டங்கூட்டமா வீட்டுக்குள்ள வந்து மனுசன் மூஞ்சியில மாறி மாறி அறைஞ்சா எப்பிடியிருக்கும்? அப்பிடி ஆகிப்போனாரு சுப்பஞ் செட்டியாரு. தப்பு நடந்துபோச்சுன்னு சொல்லவும் முடியல சாப்பாடு ஏற்பாடு பண்ணவும் சக்தியில்ல. பொதுவா ஊர் ஆளுகளுக்கு ஒரு நல்ல பழக்கம். கல்யாண வீட்டுக்குப் போற யாரும் சொந்த வீட்ல சாப்பிட்டுப் போறதில்ல சில பேர் ரெண்டு நேரம் பட்டினிகெடந்தும் வருவாக. பொருந்தி உட்கார்ந்து சாப்பிட்டுட்டு வரலேன்னா கல்யாண வீட்டு ஆளுக கோவிச்சுக் கிருவாகலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 06, 2010 6:10 am

[You must be registered and logged in to see this image.]





வேறென்ன பண்றது? கல்யாணத் துக்கு இன்னும் மூணு நாள் இருக்கு. போயிட்டு வாங்கன்னு புடிச்சுத் தள்ள முடியுமா? இல்ல... கல்யாண வீட்ல கம்மஞ்சோறு போட முடியுமா?

விடிய விடிய என்ன செய்யலாம்னு அவரு மலச்சு நிக்க... வந்த வண்டி மாட்டுக்கு வைக்கோல் கெடைக்கு மான்னு மண்டையச் சொரண்டி நிக்கிறான் வண்டிக்காரன். புவ்வாவுக்கே வழியில்லங்கறப்ப பூவு கேட்டாளாம் பொண்டாட்டிங்கற கதையாகிப்போச்சு. கல்யாணச் செலவுக்கு முடிஞ்சுவச்ச காசு அவுத்து அரிசிச் சோறும் பருப்புச் சாறுமா அழுதுக்கிட்டே போட்டுப் போட்டு மூணே நாள்ல மூழ்கிப் போனாரு சுப்பஞ் செட்டியாரு.

கொண்ணவாயனயும் தேடுனாரு சோறு போடலாம்னு இல்ல கூறு போடலாம்னு அவன் சிக்கல. இதே மாதிரி இன்னொரு கூத்தும் ஆகிப்போச்சு.

சல்லிபட்டியில கட்டிக்குடுத்திருந் தாக காவக்காரச் சக்கணன் பெரியத்தா பேத்திய. சல்லிபட்டியிலிருந்து சொக்கத்தேவன்பட்டிக்கு மறுவீடு வாரான் மாப்பிள்ளை. வண்டிப்பாதை வழி போனா நாலு மைலு கள்ளிக்காட்டு வழி ஒத்தையடிப் பாதையில போனா ரெண்டரை மைலு. ஒன்றரை மைல் தூரத்த மிச்சம் பண்ண ஆசப்பட்ட பய, புதுப் பொண்டாட்டிய இழுத்தலைஞ்சு போறானய்யா முள்ளுக்காட்டு வழி.

ஆடிக் காத்துல பேய் பிடிச்சு ஆடுன கருவேல மரத்து முள்ளு ஒண்ணு பட்டீர்னு அடிச்சிருச்சு கண்ல. ஆத்தேன்னு அலறி அங்கயே ஒக்காந்து போனான். பதறிப்போன புதுப் பொண்டாட்டி கண்ணப் பிதுக்குறா வாய்வச்சு ஊதுறா. முந்தானையச் சுருட்டித் தன் வாய்க்குள்ள திணிச்சு அந்தக் கதகதப்புல வெதுவெதுப்பான வேது குடுக்குறா ஒண்ணும் நடக்கல. மழை பேஞ்சா எல வழியா ஒரே சீரா ஒழுகுமா இல்லையா.. அப்படித் தண்ணி தண்ணியா ஊத்துது கண்ணு. கொஞ்ச நேரத்துல ஒரு கண்ணு மட்டும் வெத்தல போட்டது மாதிரி செக்கச்செவேர்னு ஆகிப்போச்சு. அடிச்ச கருவேல முள்ளு கண்ணுக்குள்ள எங்கேயோ முறிஞ்சுகெடக்கு.




[You must be registered and logged in to see this image.]




ஒத்தக் கண்ணப் பொத்திக்கிட்டே ஊருக்குள்ள வந்த மாப்பிள்ள மாமியா வீட்டுக்கு இப்படியே போனா மரியாதை இருக்காது முன்னுக்க நீ போ பின்னுக்க நான் வாரேன்னு சொல்லிட்டு அந்தப் பக்கமா சோளத் தட்ட சொமந்து போய்க்கிட்டிருந்த கொண்ணவாயன நிறுத்தி, "இந்த ஊர்ல முள்ளெடுக்கிறவுக வீடு எது?"ன்னு கேக்க, "வா... வா... வா... வாங்க. கூ... கூ.... கூ... கூட்டிட்டுப் போறேன்"னு ஊர் எல்லையில இருக்கிற வீட்டுத் திண்ணையில ஒக்காரவச்சுட்டுப் போயிட்டான்.

ஒரு ஈ காக்கா இல்ல அந்தச் சுத்து வட்டாரத்துல. வீடு குச்சு வீடு, களவு கிளவு போயிருமோங்கிற பயத்துல பாது காப்புக்கு நாதாங்கி போட்டு அதுல ஒரு குச்சி வேற செருகியிருக்கு.
மத்தியானம் ஒக்காந்தவன்தான். பொழுது போயிக்கிட்டிருக்கு. ஊத்தெடுத்து ஒழுகுது ஒத்தக் கண்ணு வலி வேற. முள்ளெடுக்கிற ஆளுக வரல. அந்தப் பக்கம் எப்பவாச்சும் கடந்து போற ஆளுக அவன ஒரு மாதிரியாப் பாக்குறாக, கண்ணுல தண்ணி வடியுது. பொலம்புறான் வேற.

மொளகாப் பழம் மாதிரி செவந்திருக்கு முழி. "சொக்கத்தேவன்பட்டிக்கு வந்தும் கொறையலப்பா, சல்லிபட்டியில அடிச்ச சாராயம்"னு பேசிட்டுப் போறாங்க தெருவுல. இந்தா இந்தான்னு பல்லக் கடிச்சு ஒக்காந்து பாத்தா, பொழுசாய ரெண்டு கழுதைங்க வந்து நிக்குதுக வீட்டு வாசல்ல.

"யாருப்பா இங்க ஒக்காந்திருக் கிறது?"ன்னு கேக்குறா வெளுத்த பொதியோட வீடு திரும்புன வண்ணாரு வீட்டுப் பொம்பள.

"கண்ணுல முள்ளடிச்சிருச்சு முள்ளெடுக்க ஒக்காந்திருக்கேன்."

"அதுக்கு ஏன் இங்க ஒக்காந்தி ருக்கீங்க?"

"முள்ளெடுக்கிறவுக வீடு இதான்னு சொல்லி ஒக்காரவச்சுட்டுப் போனானே ஒரு பய...".

"நல்ல கூத்தா இருக்கே! நாங்க வெள்ளாவிக்கு முள்ளெடுக்கிற ஆளுக. கண்ல முள் எடுக்கிறவுக வீடு அடுத்த தெருவு".



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக