புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha | ||||
jothi64 | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
Page 4 of 14 •
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
First topic message reminder :
'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து
'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"சரி.. வேற வழியில்ல. நெஞ்சுல கல்லக் கட்டிக்கிட்டுத்தான் தீர்ப்புச் சொல்றோம். கட்டையன் கருவாச்சி ஒறவத் தீத்துவிட்டுர் றோம். இன்னிக்கிருந்து அவுக ரெண்டு பேரும் புருசன் பொண்டாட்டி இல்ல. ரெண்டு பேருக்கும் சேர வேண்டிய பொருள ரெண்டு பேரும் வாங்கிக்கிட்டு அவுகவுக பொழப்ப அவுகவுக பாத்துக்க வேண்டியது.பிரிஞ்சாலும் நல்லாருங்க."
தீர்ப்புச் சொன்ன உருமாப் பெருமாத்தேவரு கொரலு கடைசியாக் கரகரத்துப்போச்சு. ஊருக்கு அவரப் போல நல்ல மனுசங்க நாலு பேரு இருப்பதனாலதான் கடந்துபோற மேகம் அந்த ஊரையும் மறக்காம நனைச்சுட்டுப் போகுது.
அதுவரைக்கும் கட்டிவச்சிருந்த கண்ணீரு கயித்த அத்திருச்சு. "கே"ன்னு அழுகையில கூடிட்டா பெரியமூக்கி. "எம்பொழப்பு பாதியில போச்சு... எம் பொண்ணு பொழப்பு ஆதியிலயே போச்சே..."
"யம்மா தங்கச்சி பெரியமூக்கி! அழுகைய நிறுத்து தாயி. இது ஊருக்கு ஊரு உண்டானதுதான.
பத்துக்கு ரெண்டு பழுதாகறதில்லயா? வேணாம்னு போறவன் விக்கிரமாதித்த மகராசனாயிருந்தாலும் நமக்கு எதுக்கு? போனாப் போயிட்டுப் போறான். நல்லது கெட்டதுக்கு நாங்கள்லாம் இல்லையா. அடுத்து ஆக வேண்டியதப் பாரு." வளவிக்காரச் சுப்பஞ்செட்டியாரு பெரிய மூக்கியத் தேத்தித் தெளிய வைக்கிறாரு.
தகப்பன் சடையத்தேவரும் மகன் கட்டையனும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து, மீசைக்குள்ள பெரிசு சிரிக்க, செயிச்சனா இல்லையான்னு இடுங்குன கண்ணுல அவன் ஒரு பார்வ பாக்க, ஊராளுக இந்த நாடகத்தப் பாக்கிறதுக்குள்ள தலைய வேற பக்கம் திருப்பிக்கிட்டாக ரெண்டு பேரும்.
இங்க நடக்கிற கூத்துக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லேங்கிற மாதிரி கண்ணச் சிமிட்டாம ஒக்காந்திருக்கா கருவாச்சி.
"சரி... அவரவர் பொருளு அவரவருக்குப் போய்ச் சேந்துட்டாப் பஞ்சாயத்து முடிஞ்சிருமப்பா.
அதப் பேசி முடிங்க மொதல்ல." அம்மைய நாயக்கரு சத்தம் போட்டுச் சொன்னதும் கலையப் போன பஞ்சாயத்து ஒக்காந்திருச்சு திரும்பவும்.
"மொதல்ல பிராது குடுத்தவன் கட்டையனா இருப்பதனால, பொருளத் திருப்பித் தர வேண்டிய பொறுப்பு அவனுக்குத்தான். பெரியமூக்கி, நீ சொல்லாத்தா. நீ என்னென்ன சீர் செஞ்சயோ... சொல்லித் திருப்பி வாங்கிக்க."
தீர்ப்புச் சொன்ன உருமாப் பெருமாத்தேவரு கொரலு கடைசியாக் கரகரத்துப்போச்சு. ஊருக்கு அவரப் போல நல்ல மனுசங்க நாலு பேரு இருப்பதனாலதான் கடந்துபோற மேகம் அந்த ஊரையும் மறக்காம நனைச்சுட்டுப் போகுது.
அதுவரைக்கும் கட்டிவச்சிருந்த கண்ணீரு கயித்த அத்திருச்சு. "கே"ன்னு அழுகையில கூடிட்டா பெரியமூக்கி. "எம்பொழப்பு பாதியில போச்சு... எம் பொண்ணு பொழப்பு ஆதியிலயே போச்சே..."
"யம்மா தங்கச்சி பெரியமூக்கி! அழுகைய நிறுத்து தாயி. இது ஊருக்கு ஊரு உண்டானதுதான.
பத்துக்கு ரெண்டு பழுதாகறதில்லயா? வேணாம்னு போறவன் விக்கிரமாதித்த மகராசனாயிருந்தாலும் நமக்கு எதுக்கு? போனாப் போயிட்டுப் போறான். நல்லது கெட்டதுக்கு நாங்கள்லாம் இல்லையா. அடுத்து ஆக வேண்டியதப் பாரு." வளவிக்காரச் சுப்பஞ்செட்டியாரு பெரிய மூக்கியத் தேத்தித் தெளிய வைக்கிறாரு.
தகப்பன் சடையத்தேவரும் மகன் கட்டையனும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து, மீசைக்குள்ள பெரிசு சிரிக்க, செயிச்சனா இல்லையான்னு இடுங்குன கண்ணுல அவன் ஒரு பார்வ பாக்க, ஊராளுக இந்த நாடகத்தப் பாக்கிறதுக்குள்ள தலைய வேற பக்கம் திருப்பிக்கிட்டாக ரெண்டு பேரும்.
இங்க நடக்கிற கூத்துக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லேங்கிற மாதிரி கண்ணச் சிமிட்டாம ஒக்காந்திருக்கா கருவாச்சி.
"சரி... அவரவர் பொருளு அவரவருக்குப் போய்ச் சேந்துட்டாப் பஞ்சாயத்து முடிஞ்சிருமப்பா.
அதப் பேசி முடிங்க மொதல்ல." அம்மைய நாயக்கரு சத்தம் போட்டுச் சொன்னதும் கலையப் போன பஞ்சாயத்து ஒக்காந்திருச்சு திரும்பவும்.
"மொதல்ல பிராது குடுத்தவன் கட்டையனா இருப்பதனால, பொருளத் திருப்பித் தர வேண்டிய பொறுப்பு அவனுக்குத்தான். பெரியமூக்கி, நீ சொல்லாத்தா. நீ என்னென்ன சீர் செஞ்சயோ... சொல்லித் திருப்பி வாங்கிக்க."
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அதுவரைக்கும் பொலம்பிக் கிட்டிருந்த பெரியமூக்கி வெவரமாயிட்டா. அழுகையைத் தூக்கி அங்கிட்டு வச்சுட்டுச் சீர்செஞ்ச பொருளையெல்லாம் மனக்கணக்கு லேயே ஓட்டிப் பாத்து ஒப்பிக்கிறா.
ஒரல் ஒண்ணு...
ஒலக்கை ஒண்ணு...
ஒரல் மூடி ஒண்ணு...
அண்டா ஒண்ணு...
தண்ணிக்கொடம் ரெண்டு...
குண்டாச்சட்டி ஒண்ணு...
கும்பா ஒண்ணு...
ஒல வட்டி ரெண்டு...
அம்மி, திருகை, அருவாமண
ஒவ்வொண்ணு...
காமாச்சி வெளக்கொண்ணு...
சொளகு ஒண்ணு...
பாய் ஒண்ணு, தலகாணி ரெண்டு...
வெளக்கமாறும் வாங்கிவச்சேன். ஆனா, அது சீர்ல சேர்றதில்ல"ன்னு சத்தம் போட்டுச் சொன்னவ, "இனிமேதான் குடுக்கணும்"'ன்னு கீழ்க்கொரல்ல முனகிக்கிட்டா.
"கேட்டுக்கிட்டியாப்பா. செஞ்ச சீர் எல்லாம் ஒப்படைச்சிரு பஞ்சாயத்துல." காவக்காரச் சக்கணன் உத்தரவு போட்டாரு கட்டையனுக்கு.
"ஏன் ஒப்படைக்கணும்? கல்யாணச் செலவு நான்தான பண்ணியிருக்கேன். கழிச்சிட்டுப்போறேன்." கட்டையன் எகத்தாளமாகச் சொல்லவும், மொதலக்கம்பட்டி ஆளுக கையக் கால ஒதறி எந்திரிச்சுட்டாக.
"அவ "வாழ்ந்த பங்கு" கேட்டாக் குடுக்கணுமா இல்லையா, அதுல கழிச்சிட்டுப் போ. பொழுதிருக்கப் பொருள் வந்து சேராட்டிப் பொழுதுசாய நீ இருக்க மாட்ட."
ஒரல் ஒண்ணு...
ஒலக்கை ஒண்ணு...
ஒரல் மூடி ஒண்ணு...
அண்டா ஒண்ணு...
தண்ணிக்கொடம் ரெண்டு...
குண்டாச்சட்டி ஒண்ணு...
கும்பா ஒண்ணு...
ஒல வட்டி ரெண்டு...
அம்மி, திருகை, அருவாமண
ஒவ்வொண்ணு...
காமாச்சி வெளக்கொண்ணு...
சொளகு ஒண்ணு...
பாய் ஒண்ணு, தலகாணி ரெண்டு...
வெளக்கமாறும் வாங்கிவச்சேன். ஆனா, அது சீர்ல சேர்றதில்ல"ன்னு சத்தம் போட்டுச் சொன்னவ, "இனிமேதான் குடுக்கணும்"'ன்னு கீழ்க்கொரல்ல முனகிக்கிட்டா.
"கேட்டுக்கிட்டியாப்பா. செஞ்ச சீர் எல்லாம் ஒப்படைச்சிரு பஞ்சாயத்துல." காவக்காரச் சக்கணன் உத்தரவு போட்டாரு கட்டையனுக்கு.
"ஏன் ஒப்படைக்கணும்? கல்யாணச் செலவு நான்தான பண்ணியிருக்கேன். கழிச்சிட்டுப்போறேன்." கட்டையன் எகத்தாளமாகச் சொல்லவும், மொதலக்கம்பட்டி ஆளுக கையக் கால ஒதறி எந்திரிச்சுட்டாக.
"அவ "வாழ்ந்த பங்கு" கேட்டாக் குடுக்கணுமா இல்லையா, அதுல கழிச்சிட்டுப் போ. பொழுதிருக்கப் பொருள் வந்து சேராட்டிப் பொழுதுசாய நீ இருக்க மாட்ட."
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"யாரப் பாத்துடா கைநீட்டிப் பேசுறீக... ஆடு களவாணிப் பயலுகளா. ஒழுங்கு மரியாதையா ஒக்காரல, ஒங்க சுடுகாடு மொதலக்கம்பட்டியில இல்ல; சொக்கத்தேவன் பட்டியிலடி."
சலம்பல் பாண்டியும் ஒலக்கையனும் வேட்டிய வரிஞ்சுகட்டி வெரசு காட்றாங்க. பன்னியான்பேரன் பாவம்... சாராய சந்தோஷத்துல, அருவாப் பொதைச்ச எடம் அடையாளம் தெரியாம மேலயும் கீழயும் முழிக்கிறான்.
அம்பலக்கல்லுல அதுவரைக்கும் ஒக்காந்திருந்த காவக்காரச் சக்கணன் படக்குன்னு எந்திருச்சி பூண்போட்ட காவக்கம்ப அம்பலக்கல்லுல நாலு தட்டுத் தட்டி "ஏலே வெங்கம்பயகளா!
பஞ்சாயத்த நீங்க நடத்துங்கடா, நாங்க வெளியேறிக்கிர்றோம்"னு ஒரு சத்தம் விட்டு அத்தன பேரையும் அமத்திப்பிட்டு, "சீர் செஞ்ச பொருளைச் சேத்துருங்கப்பா"ன்னு முடிவும் சொன்னாரு.
அம்மிக்குழவியிலிருந்து அருவாமணை வரைக்கும் எல்லாம் வந்து எறங்கிருச்சு பஞ்சாயத்துல.
"யாத்தா! எல்லாம் எண்ணிப் பாத்துக்க. நாளைக்கி நாங்க இருக்க மாட்டோம். அப்பறம் அதக் காணோம் இதக் காணோம்னு இங்க வந்து பொலம்புனா அரச மரம் வாங்கித் தராது. சரி பாத்துக்க..."
"எம் பொண்ணே பொழப்பத்து வந்தபெறகு எந்தப் பொருள் வந்தா என்னா... வராட்டி என்னா..?" பெரியமூக்கி பெரும்போக்காப் பேசிட்டாலும், அரப் பார்வையிலே ஒரு அலசு அலசி ஒல வட்டி ரெண்டுல ஒண்ணக் காணோம்னு கண்டுபுடிச்சுட்டா.
"ஒல வட்டி ரெண்டு குடுத்தேன். ஒண்ணக் காணோம். போனாப்போகுது. அண்ணந் தானே... அதுலயே கஞ்சி குடிக்கட்டும்; இல்ல... அத அடகு வச்சுக் கஞ்சி குடிச்சுக்கிரட்டும்."
அந்தச் சொல்லோட சூடு தாங்கமாட்டாத சடையத்தேவருக்கு மீசைக்கு மேல ரோசம் பொத்துக்கிட்டு வந்திருச்சு.
"ஏலே... எங்கடா அந்த ஒல வட்டி? நாய் சம்பாரிச்ச பொருள் நம்மளுக்கெதுக்கு?
சலம்பல் பாண்டியும் ஒலக்கையனும் வேட்டிய வரிஞ்சுகட்டி வெரசு காட்றாங்க. பன்னியான்பேரன் பாவம்... சாராய சந்தோஷத்துல, அருவாப் பொதைச்ச எடம் அடையாளம் தெரியாம மேலயும் கீழயும் முழிக்கிறான்.
அம்பலக்கல்லுல அதுவரைக்கும் ஒக்காந்திருந்த காவக்காரச் சக்கணன் படக்குன்னு எந்திருச்சி பூண்போட்ட காவக்கம்ப அம்பலக்கல்லுல நாலு தட்டுத் தட்டி "ஏலே வெங்கம்பயகளா!
பஞ்சாயத்த நீங்க நடத்துங்கடா, நாங்க வெளியேறிக்கிர்றோம்"னு ஒரு சத்தம் விட்டு அத்தன பேரையும் அமத்திப்பிட்டு, "சீர் செஞ்ச பொருளைச் சேத்துருங்கப்பா"ன்னு முடிவும் சொன்னாரு.
அம்மிக்குழவியிலிருந்து அருவாமணை வரைக்கும் எல்லாம் வந்து எறங்கிருச்சு பஞ்சாயத்துல.
"யாத்தா! எல்லாம் எண்ணிப் பாத்துக்க. நாளைக்கி நாங்க இருக்க மாட்டோம். அப்பறம் அதக் காணோம் இதக் காணோம்னு இங்க வந்து பொலம்புனா அரச மரம் வாங்கித் தராது. சரி பாத்துக்க..."
"எம் பொண்ணே பொழப்பத்து வந்தபெறகு எந்தப் பொருள் வந்தா என்னா... வராட்டி என்னா..?" பெரியமூக்கி பெரும்போக்காப் பேசிட்டாலும், அரப் பார்வையிலே ஒரு அலசு அலசி ஒல வட்டி ரெண்டுல ஒண்ணக் காணோம்னு கண்டுபுடிச்சுட்டா.
"ஒல வட்டி ரெண்டு குடுத்தேன். ஒண்ணக் காணோம். போனாப்போகுது. அண்ணந் தானே... அதுலயே கஞ்சி குடிக்கட்டும்; இல்ல... அத அடகு வச்சுக் கஞ்சி குடிச்சுக்கிரட்டும்."
அந்தச் சொல்லோட சூடு தாங்கமாட்டாத சடையத்தேவருக்கு மீசைக்கு மேல ரோசம் பொத்துக்கிட்டு வந்திருச்சு.
"ஏலே... எங்கடா அந்த ஒல வட்டி? நாய் சம்பாரிச்ச பொருள் நம்மளுக்கெதுக்கு?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
எறிஞ்சிருங்கடா." செத்தவிடத்துல அந்த ஒல வட்டியும் வந்து சேந்திருச்சு.
கடைசிக் கட்டத்துக்கு வந்து நிக்கிது பஞ்சாயத்து.
தொண்டைய ஒரு செருமிச் செருமி சத்தமும் கொஞ்சங் கூட்டி கட்டையன் ஆரம்பிக் கிறான் வெவகாரத்த.
"அவுக பொருள அவுகளுக்குக் குடுத்திட் டோமில்ல; எங்க பொருளு எங்களுக்கு வந்திரணுமில்ல?"
"நியாயந்தானப்பா; ஒம் பொருள் ஒனக்கு வந்திரணும்."
"அப்பக் கேட்டு வாங்கிக் குடுத்திருங்க."
"எத?"
"தாலிச் சரட."
தாலிச் சரடு வாங்குறது தான் தீக்கிற பஞ்சாயத்துல கடைசிச் சம்பவம். அது முடிஞ்சா எல்லாம் முடிஞ்சு போகும்.
பஞ்சாயத்தவிட்டுப் பொம்பளையக் கொஞ்சம் தள்ளி நிறுத்தி, மஞ்சத் தண்ணி தெளிச்சுத் தாலிச் சரட வாங்கிப் புருசன்ட்ட ஒப்படைச்சிருவாரு நாட்டாம. அந்த நிமிசத்துலயிருந்து அவனுக்கும் அவளுக்கும் ஒட்டுமில்ல ஒறவுமில் லன்னு ஆயிரும்.
தாலிச் சரடு வாங்குற போது பல பெருசுக இந்தப் பாவம் நம்மளச் சேர வேணாம்னு சொல்லாமக் கொள்ளாமப் போயிரும்ங்க.
தாலிச் சரடுன்னா வெறும் கயிறா? ஒரு ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் மத்தியில ஊடாடுற உயிரு. அவுக மதிப்பு அப்பிடி.
"சரி... சரி! யம்மா பிள்ள கருவாச்சி, கட்டையனுக்கும் ஒனக்கும் இல்லேன்னு ஆகிப்போச்சு.
நம்ம சம்பிரதாயப்படி தாலிச் சரட்டக் குடுத்திரு தாயி."
காஞ்சுகெடந்த அரசங்குச்சிய வச்சுத் தரையில கோலம் கிழிச்சுக்கிட்டிருந்த கருவாச்சி இந்தச் சொல்லக் கேட்டாளோ இல்லையோ, தீப்புடிச்ச மாதிரி குபீர்னு எந்திரிச்சு நின்னா.
கடைசிக் கட்டத்துக்கு வந்து நிக்கிது பஞ்சாயத்து.
தொண்டைய ஒரு செருமிச் செருமி சத்தமும் கொஞ்சங் கூட்டி கட்டையன் ஆரம்பிக் கிறான் வெவகாரத்த.
"அவுக பொருள அவுகளுக்குக் குடுத்திட் டோமில்ல; எங்க பொருளு எங்களுக்கு வந்திரணுமில்ல?"
"நியாயந்தானப்பா; ஒம் பொருள் ஒனக்கு வந்திரணும்."
"அப்பக் கேட்டு வாங்கிக் குடுத்திருங்க."
"எத?"
"தாலிச் சரட."
தாலிச் சரடு வாங்குறது தான் தீக்கிற பஞ்சாயத்துல கடைசிச் சம்பவம். அது முடிஞ்சா எல்லாம் முடிஞ்சு போகும்.
பஞ்சாயத்தவிட்டுப் பொம்பளையக் கொஞ்சம் தள்ளி நிறுத்தி, மஞ்சத் தண்ணி தெளிச்சுத் தாலிச் சரட வாங்கிப் புருசன்ட்ட ஒப்படைச்சிருவாரு நாட்டாம. அந்த நிமிசத்துலயிருந்து அவனுக்கும் அவளுக்கும் ஒட்டுமில்ல ஒறவுமில் லன்னு ஆயிரும்.
தாலிச் சரடு வாங்குற போது பல பெருசுக இந்தப் பாவம் நம்மளச் சேர வேணாம்னு சொல்லாமக் கொள்ளாமப் போயிரும்ங்க.
தாலிச் சரடுன்னா வெறும் கயிறா? ஒரு ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் மத்தியில ஊடாடுற உயிரு. அவுக மதிப்பு அப்பிடி.
"சரி... சரி! யம்மா பிள்ள கருவாச்சி, கட்டையனுக்கும் ஒனக்கும் இல்லேன்னு ஆகிப்போச்சு.
நம்ம சம்பிரதாயப்படி தாலிச் சரட்டக் குடுத்திரு தாயி."
காஞ்சுகெடந்த அரசங்குச்சிய வச்சுத் தரையில கோலம் கிழிச்சுக்கிட்டிருந்த கருவாச்சி இந்தச் சொல்லக் கேட்டாளோ இல்லையோ, தீப்புடிச்ச மாதிரி குபீர்னு எந்திரிச்சு நின்னா.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"பஞ்சாயத்துல ஒப்படச்ச பொருள் எது வேணுமோ எடுத்துக்கிருங்க இல்ல, எல்லாமே வேணுமா எடுத்துக் குடுத்துருங்க. என் உசுரே போனாலும் தாலிச் சரடு மட்டும் தரமாட்டேன்;
தாலிச் சரடு வேணுங்கிற ஆம்பள என் தலைய அறுத்தெறிஞ்சிட்டு அப்பறம் தாலியெடுத்திட்டுப் போகட்டும்."
இப்படி ஒரு குண்டத் தூக்கிப் போடுவா கருவாச்சினு யாரும் எதிர்பார்க்கல; கருவாச்சியா இப்படிப் பேசுறான்னு நம்பவும் இல்ல.
ஒரு ஈ காக்கா பேசல.
"ஏண்டி, தாலி கழுத்தில கெடந்தா என்னைக்கிருந்தாலும் ஒன் புருசன் ஒன் கவுட்டுக்குள்ள வந்திருவான்னு பாக்கிறியா?" கத்துறான் கட்டையன்.
"இல்ல. இந்த சென்மத்துல நீ எனக்குப் புருசனுமில்ல; இந்த பூமியில பெறந்த எந்த ஆம்பளையும் எனக்குப் புருசனாகப் போறதுமில்ல.
"பொழச்சிருவியாடி இந்த பூமியில... ஆம்பள தொண இல்லாம?"
"பொழைக்கிறேன்... பொழைச்சுக் காமிக்கிறேன்."
"பந்தயம் போடுறியா? செயிச்சுருவியா?"
"செயிக்கிறேனோ இல்லையோ.. நான் தோக்க மாட்டேன் மாமா."
ஊரே அருளேறி நிக்கிது. ஆம்பளைக பொம்பளைக கண்ணுல கண்ணீரா முட்டுது. "அக்காம விட மாட்டேன்"னு கருவாச்சி மேல பாயப்போன கட்டையன நாலு எளந்தாரிக இழுத்துப் புடிக்க, "அத்துப்பாரு"'ன்னு மொதலக்கம்பட்டி ஆளுக அவளச் சுத்தி அண கட்டி நிக்க... அமளி துமளியாகுது பஞ்சாயத்து.
தாலிச் சரடு தர முடியாதுங்கிற பொம்பளைய தந்தே ஆகணும்னு சொல்லப் பஞ்சாயத்துக்கு அதிகார மில்லன்னு தீர்ப்புச் சொல்லிக் கலையுது பஞ்சாயத்து.
மாரடிச்சு அழுதுபோற பெரியமூக்கி பின்னாலயே கருவாச்சியும் நடந்து போறா நெஞ்சுல தாலியோட... நெஞ்சுக்கூட்ல வைராக்கியத்தோட!
தாலிச் சரடு வேணுங்கிற ஆம்பள என் தலைய அறுத்தெறிஞ்சிட்டு அப்பறம் தாலியெடுத்திட்டுப் போகட்டும்."
இப்படி ஒரு குண்டத் தூக்கிப் போடுவா கருவாச்சினு யாரும் எதிர்பார்க்கல; கருவாச்சியா இப்படிப் பேசுறான்னு நம்பவும் இல்ல.
ஒரு ஈ காக்கா பேசல.
"ஏண்டி, தாலி கழுத்தில கெடந்தா என்னைக்கிருந்தாலும் ஒன் புருசன் ஒன் கவுட்டுக்குள்ள வந்திருவான்னு பாக்கிறியா?" கத்துறான் கட்டையன்.
"இல்ல. இந்த சென்மத்துல நீ எனக்குப் புருசனுமில்ல; இந்த பூமியில பெறந்த எந்த ஆம்பளையும் எனக்குப் புருசனாகப் போறதுமில்ல.
"பொழச்சிருவியாடி இந்த பூமியில... ஆம்பள தொண இல்லாம?"
"பொழைக்கிறேன்... பொழைச்சுக் காமிக்கிறேன்."
"பந்தயம் போடுறியா? செயிச்சுருவியா?"
"செயிக்கிறேனோ இல்லையோ.. நான் தோக்க மாட்டேன் மாமா."
ஊரே அருளேறி நிக்கிது. ஆம்பளைக பொம்பளைக கண்ணுல கண்ணீரா முட்டுது. "அக்காம விட மாட்டேன்"னு கருவாச்சி மேல பாயப்போன கட்டையன நாலு எளந்தாரிக இழுத்துப் புடிக்க, "அத்துப்பாரு"'ன்னு மொதலக்கம்பட்டி ஆளுக அவளச் சுத்தி அண கட்டி நிக்க... அமளி துமளியாகுது பஞ்சாயத்து.
தாலிச் சரடு தர முடியாதுங்கிற பொம்பளைய தந்தே ஆகணும்னு சொல்லப் பஞ்சாயத்துக்கு அதிகார மில்லன்னு தீர்ப்புச் சொல்லிக் கலையுது பஞ்சாயத்து.
மாரடிச்சு அழுதுபோற பெரியமூக்கி பின்னாலயே கருவாச்சியும் நடந்து போறா நெஞ்சுல தாலியோட... நெஞ்சுக்கூட்ல வைராக்கியத்தோட!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அத்துவிட்டுட்டு வந்த வீடு இருக்கே... அதுவும் ஒரு வகையில எழவு வீடுதான்.
வித்தியாசம் என்னான்னா
அங்க ஒடம்பு செத்துப்போகுது; இங்க ஒறவு செத்துப்போகுது.
மத்தபடி ஆள் செத்த வீட்டுக்கு உண்டான அத்தன மரியாதைகளையும் அத்துவிட்ட வீட்டுக்கும்
ஓடிவந்து செய்வாக ஊர் ஆளுக.
பசுமாட்டுச் சாணி கரைச்சுப் "பசேல்"னு வாசல் மொழுகி, கருவாச்சி தலையில "சல்லுச்சல்லு"ன்னு
மஞ்சத் தண்ணி அள்ளித் தெளிச்சு, மகளக் கட்டிப்புடிச்சு "ஊரே கேளு... நாடே கேளு"ன்னு
நெஞ்சு வெடிச்சு விழுக ஒப்பாரியில கூடிட்டா பெரியமூக்கி.
"கருவாச்சி கூந்தலுக்குக்
கைநெறையப்
பூவுவச்சேன்
தலப்பூவு வைக்கயில
தலையெழுத்த அறியலையே
தாலிச் சரடிருக்கச்
சரஞ்சரமாப் பூவிருக்கக்
கட்டுனவன்
வாழ்ந்திருக்க
கைம்பெண்ணா நிக்கிறாளே"
மார் மேல ஒரு அடி... மக மேல ஒரு அடின்னு மாத்திமாத்தி அடிச்சுப் பெரியமூக்கி கத்திக் கதறவும் ஊர்ப் பொம்பளைக கூடித் தாய் மகளைத் தனித் தனியாப் பிரிச்சுவிட்டுத் தெம்புதெறம் சொல்றாக.
"ஏய் விடுடி! என்னமோ பிள்ள சாகக் குடுத்தவ மாதிரி ஒப்புச் சொல்லி அழகுறவ. ஏதோ நீ செஞ்ச புண்ணியம் இந்தளவுல ஒம்பிள்ள வீடு வந்து சேந்துச்சு. இன்னம் மூணு மாசமோ ஆறு மாசமோ அந்த கொலகாரப் பாவியோட குடும்பம் நடத்தியிருந்தா கருவாச்சியக் கண்ல கண்டிருக்க மாட்ட. அவ கட்ன சீலயத்தான் பாத்திருப்ப. 'பத்தே நாள்ல விட்ருச்சு ஏழரை நாடு'ன்னு குலதெய்வத்தக் கும்பிட்டுத் தேங்கா ஒடைக்கறத விட்டுட்டு அழுக என்ன அழுக?"
"இழுத்துவச்சுக் கழுத்தறுத்துப்புட் டானே. இந்தூர்ல இதுக்கு அங்கிட்டு எப்பிடித்தான் பொழைக்கப்போறமோ... கட்டித் தீத்தவன் காலடிக்குள்ள."
"ஈ எறும்பு பொழைக்குது... நாய் நரி பொழைக்குது... நீயும் கருவாச்சியும் பொழைக்க முடியாதா? கண்ணத் தொடச்சுக்கிட்டுக் காரியத்தப் பாராத்தா" உரிச்ச பலாப்பழம் மாதிரி சடையாத் தோல் தொங்கிப்போன மண்டையன் கெழவி கணீர்னு பேசிப்பிட்டா.
துண்டா ஓதுனாத்தான் மந்திரமா? மாசுமருவில்லாத நல்ல மனசிலயிருந்து வயசான நாக்கு வழியா வந்துவிழுகுதா இல்லையா அதுவும் மந்திரம்தான்.
பஞ்சாயத்துல ஒப்படச்ச பொருளைஎல்லாம்எண்ணிக் கொண்டாந்து எறக்கிட்டு, சருவச்சட்டியில குடுத்த மோர ஆளுக்கொரு சொம்பு அண்ணாக்கக் குடிச்சிட்டு, 'போய்ட்டு வாரோம்'னு சொல்லாமப் போய்ட்டாக மொதலக்கம்பட்டி ஆளுக.
அத்துவிட்டுட்டு வந்த வீடு இருக்கே... அதுவும் ஒரு வகையில எழவு வீடுதான்.
வித்தியாசம் என்னான்னா
அங்க ஒடம்பு செத்துப்போகுது; இங்க ஒறவு செத்துப்போகுது.
மத்தபடி ஆள் செத்த வீட்டுக்கு உண்டான அத்தன மரியாதைகளையும் அத்துவிட்ட வீட்டுக்கும்
ஓடிவந்து செய்வாக ஊர் ஆளுக.
பசுமாட்டுச் சாணி கரைச்சுப் "பசேல்"னு வாசல் மொழுகி, கருவாச்சி தலையில "சல்லுச்சல்லு"ன்னு
மஞ்சத் தண்ணி அள்ளித் தெளிச்சு, மகளக் கட்டிப்புடிச்சு "ஊரே கேளு... நாடே கேளு"ன்னு
நெஞ்சு வெடிச்சு விழுக ஒப்பாரியில கூடிட்டா பெரியமூக்கி.
"கருவாச்சி கூந்தலுக்குக்
கைநெறையப்
பூவுவச்சேன்
தலப்பூவு வைக்கயில
தலையெழுத்த அறியலையே
தாலிச் சரடிருக்கச்
சரஞ்சரமாப் பூவிருக்கக்
கட்டுனவன்
வாழ்ந்திருக்க
கைம்பெண்ணா நிக்கிறாளே"
மார் மேல ஒரு அடி... மக மேல ஒரு அடின்னு மாத்திமாத்தி அடிச்சுப் பெரியமூக்கி கத்திக் கதறவும் ஊர்ப் பொம்பளைக கூடித் தாய் மகளைத் தனித் தனியாப் பிரிச்சுவிட்டுத் தெம்புதெறம் சொல்றாக.
"ஏய் விடுடி! என்னமோ பிள்ள சாகக் குடுத்தவ மாதிரி ஒப்புச் சொல்லி அழகுறவ. ஏதோ நீ செஞ்ச புண்ணியம் இந்தளவுல ஒம்பிள்ள வீடு வந்து சேந்துச்சு. இன்னம் மூணு மாசமோ ஆறு மாசமோ அந்த கொலகாரப் பாவியோட குடும்பம் நடத்தியிருந்தா கருவாச்சியக் கண்ல கண்டிருக்க மாட்ட. அவ கட்ன சீலயத்தான் பாத்திருப்ப. 'பத்தே நாள்ல விட்ருச்சு ஏழரை நாடு'ன்னு குலதெய்வத்தக் கும்பிட்டுத் தேங்கா ஒடைக்கறத விட்டுட்டு அழுக என்ன அழுக?"
"இழுத்துவச்சுக் கழுத்தறுத்துப்புட் டானே. இந்தூர்ல இதுக்கு அங்கிட்டு எப்பிடித்தான் பொழைக்கப்போறமோ... கட்டித் தீத்தவன் காலடிக்குள்ள."
"ஈ எறும்பு பொழைக்குது... நாய் நரி பொழைக்குது... நீயும் கருவாச்சியும் பொழைக்க முடியாதா? கண்ணத் தொடச்சுக்கிட்டுக் காரியத்தப் பாராத்தா" உரிச்ச பலாப்பழம் மாதிரி சடையாத் தோல் தொங்கிப்போன மண்டையன் கெழவி கணீர்னு பேசிப்பிட்டா.
துண்டா ஓதுனாத்தான் மந்திரமா? மாசுமருவில்லாத நல்ல மனசிலயிருந்து வயசான நாக்கு வழியா வந்துவிழுகுதா இல்லையா அதுவும் மந்திரம்தான்.
பஞ்சாயத்துல ஒப்படச்ச பொருளைஎல்லாம்எண்ணிக் கொண்டாந்து எறக்கிட்டு, சருவச்சட்டியில குடுத்த மோர ஆளுக்கொரு சொம்பு அண்ணாக்கக் குடிச்சிட்டு, 'போய்ட்டு வாரோம்'னு சொல்லாமப் போய்ட்டாக மொதலக்கம்பட்டி ஆளுக.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
தீத்த வீட்லயும் எழவு வீட்லயும், ஒல வைக்கிறதில்ல; ஊரே சாப்பாடு குடுக்கும் அந்த வீட்டுக்கு.
சோளச் சோறு, கேப்பக் களி, கம்பங் கஞ்சி, கத்திரிக்காக் கொழம்பு, கருவாட்டுச் சாறு, அவிச்ச காணப் பயறுன்னு ஈயச்சட்டியில, தூக்குவாளியில, பித்தளக் கும்பாவுல வந்து குமுஞ்சுபோச்சு பெரிய மூக்கி வீட்டுல. கொண்ண வாயனச் சேத்து மூணாளு இருக்கிற வீட்ல இருபதாளுக்குச் சாப்பாடு, ஆனா மூணுல ஒரு ஆள் தொடணுமே யாரும் தொடல.
இங்க இவுக கத இப்படியிருக்க... அங்க மேலயும் கீழயும் தவ்வுறான் கட்டையன். கருவாச்சிய விட்ட பேயி கட்டையனப் புடிச்சுக்கிருச்சு போலருக்கு. அதுலயும் இது சாராயம் குடிச்ச பேயி சட்டையக் கிழிச்சு அலையிது.
"மந்தையில வாங்கிட்டாடா மானத்த. பொழச்சுக் காமிக்கிறேன்னு சம்பிராயம் போட்டுல்ல போறா. பொழச்சுப் பார்றி... பொழச்சிருவியா? பொழைக்கவிட்ரு வேனா? கண்ணுக்குத் தெரியாம ஒன்னிய ஊரவிட்டே ஒதுக்குறண்டி பிள்ளா..." கெடுதல் புத்தி மப்பேறி நிக்கிது கட்டையனுக்கு.
மனுசங்க கூடி ஊருன்னு ஒண்ணு உண்டாக் குனதே ஒரு சவுரியத்துக்குத் தான். வாழ்வோ தாழ்வோ குடுத்து வாங்க ஒரு வசதிக்குத்தான். ஏங்கிட்ட ஒண்ணுருக்கு ஓங்கிட்ட ஒண்ணுருக்கு;
ஒண்ணக் கொடுத்து ஒண்ணப் பண்டமாத்துப் பண்ணிக்கிரலா மேங்கிற கணக்குத்தான்.
ஊருக்கும் ஒரு தனிமனுசனுக்கும் உள்ள நரம்பு அந்துபோச்சுன்னு வச்சுக்குங்க.. ரத்தம் போய்ச் சேராது. ரத்தம்போய்ச் சேராத பாகம் செத்துப் போகுமா இல்லையா?
"ஒனக்கும் எனக்கும் உள்ள ஒறவ அத்துவிட்ட மாதிரி ஊருக்கும் ஒனக்கும் உள்ள ஒறவையும் அத்து விட்றேன்டி" சாராயத்துல அடிச்சுச் சத்தியம் பண்றான் கட்டையன்.
"ஏலே! ஒலக்கையா! சலம்பல்பாண்டி! தண்ணிக் கெணத்துல கருவாச்சிக்கு ஒரு பொம்பளையும் தண்ணி தூக்கிவிடப் புடாதுன்னு சொல்லுங்கடா. அந்தத் தெருவுலயோ அடுத்த தெருவுலயோ எந்தப் பொம்பளையும் அவகூட பேசப்படாது... அடுப்புக்குத் தீ குடுக்கக் கூடாது... அரிசி, பருப்பு, உப்பு, புளி, மொளகா, சீரகம் எண்ணெ, சீமத் தண்ணின்னு அவளுக்கு யாரு மொறக்கடன குடுத்தாலும் மொற கெட்டுப் போயிரும்னு சொல்லிப்புடுங்கடா. அவ தர்ற வருசக் கூலி ஆறு மரக் காலுக்குப் பதிலா நாம ஏழு மரக்கா குடுத்திருவோம்; அவ வீட்ல அழுக் கெடுக்கப்படாதுன்னு சொல்லிருங்க வண்ணாத்திக்கு. அவ காடுகரைக்கு யாரும் வெதைக்கப் போகக் கூடாது; வேலைக்குப் போகக் கூடாது. அதையும் மீறி வெளைஞ்சா...
வெளைஞ்ச வெள்ளாமைய யாரும் வீட்ல வந்து சேக்கப்படாது. ஏலே பன்னியாம்பேரா!
சோளச் சோறு, கேப்பக் களி, கம்பங் கஞ்சி, கத்திரிக்காக் கொழம்பு, கருவாட்டுச் சாறு, அவிச்ச காணப் பயறுன்னு ஈயச்சட்டியில, தூக்குவாளியில, பித்தளக் கும்பாவுல வந்து குமுஞ்சுபோச்சு பெரிய மூக்கி வீட்டுல. கொண்ண வாயனச் சேத்து மூணாளு இருக்கிற வீட்ல இருபதாளுக்குச் சாப்பாடு, ஆனா மூணுல ஒரு ஆள் தொடணுமே யாரும் தொடல.
இங்க இவுக கத இப்படியிருக்க... அங்க மேலயும் கீழயும் தவ்வுறான் கட்டையன். கருவாச்சிய விட்ட பேயி கட்டையனப் புடிச்சுக்கிருச்சு போலருக்கு. அதுலயும் இது சாராயம் குடிச்ச பேயி சட்டையக் கிழிச்சு அலையிது.
"மந்தையில வாங்கிட்டாடா மானத்த. பொழச்சுக் காமிக்கிறேன்னு சம்பிராயம் போட்டுல்ல போறா. பொழச்சுப் பார்றி... பொழச்சிருவியா? பொழைக்கவிட்ரு வேனா? கண்ணுக்குத் தெரியாம ஒன்னிய ஊரவிட்டே ஒதுக்குறண்டி பிள்ளா..." கெடுதல் புத்தி மப்பேறி நிக்கிது கட்டையனுக்கு.
மனுசங்க கூடி ஊருன்னு ஒண்ணு உண்டாக் குனதே ஒரு சவுரியத்துக்குத் தான். வாழ்வோ தாழ்வோ குடுத்து வாங்க ஒரு வசதிக்குத்தான். ஏங்கிட்ட ஒண்ணுருக்கு ஓங்கிட்ட ஒண்ணுருக்கு;
ஒண்ணக் கொடுத்து ஒண்ணப் பண்டமாத்துப் பண்ணிக்கிரலா மேங்கிற கணக்குத்தான்.
ஊருக்கும் ஒரு தனிமனுசனுக்கும் உள்ள நரம்பு அந்துபோச்சுன்னு வச்சுக்குங்க.. ரத்தம் போய்ச் சேராது. ரத்தம்போய்ச் சேராத பாகம் செத்துப் போகுமா இல்லையா?
"ஒனக்கும் எனக்கும் உள்ள ஒறவ அத்துவிட்ட மாதிரி ஊருக்கும் ஒனக்கும் உள்ள ஒறவையும் அத்து விட்றேன்டி" சாராயத்துல அடிச்சுச் சத்தியம் பண்றான் கட்டையன்.
"ஏலே! ஒலக்கையா! சலம்பல்பாண்டி! தண்ணிக் கெணத்துல கருவாச்சிக்கு ஒரு பொம்பளையும் தண்ணி தூக்கிவிடப் புடாதுன்னு சொல்லுங்கடா. அந்தத் தெருவுலயோ அடுத்த தெருவுலயோ எந்தப் பொம்பளையும் அவகூட பேசப்படாது... அடுப்புக்குத் தீ குடுக்கக் கூடாது... அரிசி, பருப்பு, உப்பு, புளி, மொளகா, சீரகம் எண்ணெ, சீமத் தண்ணின்னு அவளுக்கு யாரு மொறக்கடன குடுத்தாலும் மொற கெட்டுப் போயிரும்னு சொல்லிப்புடுங்கடா. அவ தர்ற வருசக் கூலி ஆறு மரக் காலுக்குப் பதிலா நாம ஏழு மரக்கா குடுத்திருவோம்; அவ வீட்ல அழுக் கெடுக்கப்படாதுன்னு சொல்லிருங்க வண்ணாத்திக்கு. அவ காடுகரைக்கு யாரும் வெதைக்கப் போகக் கூடாது; வேலைக்குப் போகக் கூடாது. அதையும் மீறி வெளைஞ்சா...
வெளைஞ்ச வெள்ளாமைய யாரும் வீட்ல வந்து சேக்கப்படாது. ஏலே பன்னியாம்பேரா!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மூணாம்பேரு அறியாம இதப் பண்ணணும்டா. அப்பிடித் தப்பிக்கிப்பித் தெரிஞ்சு ஊர்ப்பெருசுக யாரும் லல்லுப் புல்லுன்னு தவ்வுனாங்கின்னா, பெருமாத்தேவனப் பின்னுக்கு வெட்டுங்க.
சக்கணன முன்னுக்கு வெட்டுங்க. கொலக் கேச நான் பாத்துக்கிறேன். அவன் யார்றா அவன்...
கொண்ணவாயனா..? ஒடிஞ்ச ஒட்டடைக் குச்சிக்கு உருமாக் கட்ன மாதிரி. பெரியமூக்கி வீட்ல தின்டு கழியிற தேவாங்கு. அந்தப் பண்ணைக்கிருக்கிற நாயப் பத்திவிட்ரணும் மொதல்ல!"
சொக்கத்தேவன்பட்டியில ஒரே ஒரு பொட்டிக்கடைதான். உப்பு, புளி, மொளகா, முறுக்கு, முட்டாயி, கருப்பட்டி, அவிச்ச கெழங்கு, அவிச்ச மொச்ச... காய்கறி மாதிரி அத்தியாவசியப் பொருளுகளும்... பீடி, சோடா, சவுக்காரக்கட்டி மாதிரி ஆடம்பரப் பொருளுகளும் அங்க கெடைக்கும், பணங்காசுக்கும் விக்கிறதுண்டு; பருத்தி தவசத்துக்கும் பண்டமாத்துப் பண்ணிக்கிறதுமுண்டு. முத்துக்கருப்பு முத்துக்கருப்புன்னு ஒரு பய பரம்பரையா வச்சிருக்கான் அந்தக் கடைய. புதுசாக் கட்டிக்கிட்டு வந்த பொண்டாட்டியக் கடையில விட்டுட்டு, சந்தைக்குப் போயிட்டான் முத்துக்கருப்பு சாமான் வாங்க. புதுப் பொண்ணு காக்கிவாடன்பட்டிக்காரி.
மதமதமதன்னு ஒடம்பு; எரும மாடு வளத்து ஊருக்குப் பால் ஊத்துற அவுக அப்பன் ஒரு மாட்ட இவளுக்கே நேந்துவிட்டான் போலிருக்கு; சும்மா தளதளதளன்னு இருக்கா.
தாலிக்கயித்து மஞ்சள்லகூட இன்னம் அழுக்கு ஒட்டல. வாக்கப் பட்டு வந்த புதுசுங்கிறதனால ஊர்நாடு பத்தி ஒண்ணுந் தெரியாது அவளுக்கு.
அவ கடையில பீடி வாங்கிப் பத்தவச்சிக்கிட்டே, தொங்கவிட்ட வாழப்பழத்தார்ல காம்பு கறுத்த பழமா திருகித்திருகித் தின்னுக்கிட்டிருக்கான் கட்டையன், கூட்டாளிகளோட.
அப்ப....
[You must be registered and logged in to see this image.]
ஒரு கையில சாட்டக்கம்பும் ஒரு கையில ஓரணாவுமா "தவக்" "தவக்"குன்னு நடந்து வாரானய்யா கொண்ணவாயன். பெரியமூக்கி சொல்லிவிட்டிருக்கா "ஓரணாவுக்கு வாழக்கா வாங்கிட்டு வாடா"ன்னு. வந்து நிக்கிறான் பய மூச்சுவாங்க.
"வாடி மாப்ள வா" வசமா மாட்டிக் கிட்டவன வம்பிழுக்க நெனைக்கிற கட்டையன், வச்ச கண்ணு மாறாம அவனையே பாத்து நிக்கிறான்.
அரை ஆள்லயும் கொறையாளு கொண்ணவாயன். சில மரங்க வேர் பரவ முடியாம வருசம் பத்தானாலும் அங்கயே நின்னுபோயிரும் பாருங்க. அப்படி வாலிபத்துக்கேத்த வளத்தியில்லாமக் குறும்பையாகிப் போன பய அவன். சவட்டக் காலு... செம்பட்டத் தல...
சக்கணன முன்னுக்கு வெட்டுங்க. கொலக் கேச நான் பாத்துக்கிறேன். அவன் யார்றா அவன்...
கொண்ணவாயனா..? ஒடிஞ்ச ஒட்டடைக் குச்சிக்கு உருமாக் கட்ன மாதிரி. பெரியமூக்கி வீட்ல தின்டு கழியிற தேவாங்கு. அந்தப் பண்ணைக்கிருக்கிற நாயப் பத்திவிட்ரணும் மொதல்ல!"
சொக்கத்தேவன்பட்டியில ஒரே ஒரு பொட்டிக்கடைதான். உப்பு, புளி, மொளகா, முறுக்கு, முட்டாயி, கருப்பட்டி, அவிச்ச கெழங்கு, அவிச்ச மொச்ச... காய்கறி மாதிரி அத்தியாவசியப் பொருளுகளும்... பீடி, சோடா, சவுக்காரக்கட்டி மாதிரி ஆடம்பரப் பொருளுகளும் அங்க கெடைக்கும், பணங்காசுக்கும் விக்கிறதுண்டு; பருத்தி தவசத்துக்கும் பண்டமாத்துப் பண்ணிக்கிறதுமுண்டு. முத்துக்கருப்பு முத்துக்கருப்புன்னு ஒரு பய பரம்பரையா வச்சிருக்கான் அந்தக் கடைய. புதுசாக் கட்டிக்கிட்டு வந்த பொண்டாட்டியக் கடையில விட்டுட்டு, சந்தைக்குப் போயிட்டான் முத்துக்கருப்பு சாமான் வாங்க. புதுப் பொண்ணு காக்கிவாடன்பட்டிக்காரி.
மதமதமதன்னு ஒடம்பு; எரும மாடு வளத்து ஊருக்குப் பால் ஊத்துற அவுக அப்பன் ஒரு மாட்ட இவளுக்கே நேந்துவிட்டான் போலிருக்கு; சும்மா தளதளதளன்னு இருக்கா.
தாலிக்கயித்து மஞ்சள்லகூட இன்னம் அழுக்கு ஒட்டல. வாக்கப் பட்டு வந்த புதுசுங்கிறதனால ஊர்நாடு பத்தி ஒண்ணுந் தெரியாது அவளுக்கு.
அவ கடையில பீடி வாங்கிப் பத்தவச்சிக்கிட்டே, தொங்கவிட்ட வாழப்பழத்தார்ல காம்பு கறுத்த பழமா திருகித்திருகித் தின்னுக்கிட்டிருக்கான் கட்டையன், கூட்டாளிகளோட.
அப்ப....
[You must be registered and logged in to see this image.]
ஒரு கையில சாட்டக்கம்பும் ஒரு கையில ஓரணாவுமா "தவக்" "தவக்"குன்னு நடந்து வாரானய்யா கொண்ணவாயன். பெரியமூக்கி சொல்லிவிட்டிருக்கா "ஓரணாவுக்கு வாழக்கா வாங்கிட்டு வாடா"ன்னு. வந்து நிக்கிறான் பய மூச்சுவாங்க.
"வாடி மாப்ள வா" வசமா மாட்டிக் கிட்டவன வம்பிழுக்க நெனைக்கிற கட்டையன், வச்ச கண்ணு மாறாம அவனையே பாத்து நிக்கிறான்.
அரை ஆள்லயும் கொறையாளு கொண்ணவாயன். சில மரங்க வேர் பரவ முடியாம வருசம் பத்தானாலும் அங்கயே நின்னுபோயிரும் பாருங்க. அப்படி வாலிபத்துக்கேத்த வளத்தியில்லாமக் குறும்பையாகிப் போன பய அவன். சவட்டக் காலு... செம்பட்டத் தல...
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அதுல அங்கங்க கால் ரூவா அர ரூவா அகலத்துக்கு ஊடுசொட்ட. கொஞ்சம் கூனு. உள்ள போனநெஞ்சுக்கூடு, முட்டி வெளிய தள்ளிருச்சு முதுக. அவன் தோலு பெறந்த ராசிக்கு முடி மொளைக்காதுமூஞ்சியில. தலையில உருமா. இன்னொரு ஆளும் உள்ள நொழஞ்சு போட்டுக்கிடலாங்கற மாதிரி தொளதொளன்னு ஒரு சட்ட. மடிச்சுக் கட்ன ஒரு காவி வேட்டி.
கால்ல செருப்பு இல்லாட்டியும் பரவாயில்ல, கையில சாட்டக்கம்பு இருக்கணும் அவனுக்கு, கையில சாட்டக்கம்பு இல்லாம அவனால ஒண்ணுக்கு ரெண்டுக்குக்கூட போக முடியாது வராது.
முத்துக்கருப்பு பொண்டாட்டி யையும் கட்டையனையும் மாறிமாறிப் பாத்து மருகி நிக்கிறான் கொண்ணவாயன்.
"என்னாப்பா வேணும்?'"னு கேட்டா முத்துக்கருப்பு பொண்டாட்டி. ரெண்டு வேல செய்ய வேண்டிய மாராப்பு ஒரு வேல மட்டும் செஞ்சு ஒதுங்கி நிக்க, வெவரம் பத்தாது அவளுக்கு;
மத்தபடி வெனயம் இல்ல.
கட்டையனுக்கு பயந்து அவளையே உத்துஉத்துப் பாத்துக்கிட்டிருந்த கொண்ணவாயன், உள்ளங்கை வேர்வையோட ஓரணாவ நீட்டிக் கேக்குறான்: "ஓரணாவுக்கு வா... வா... வா..."
அவன் கொண்ணவாயங் கிறதும், வாழக்கா கேட்டு வந்தவனுக்கு வார்த்தை திக்குதுன்னும் தெரியாத காக்கிவாடன்பட்டிக்காரி, தன்ன ஓரணாவுக்கு வாடின்னு கூப்புடுறான்னு நெனச்சிக்கிட்டு "எடு தூமச்சீல"ன்னு எந்திரிச்சா. பெரம்புத்தட்டுல அடுக்கி வச்சிருந்த கெழங்கையெல் லாம் அவன் மேல தூக்கியெறிஞ்சு, "காச்மூச்"சுன்னு கத்திக் குமிக்கிறா. "நான் உத்தமி யாக்கும் பத்தினியாக்கும்.. என்ன ஓரணாவுக்கு வா வான்னு கூப்பிடுறான் ஒரு குரங்குப்பய.
'சொக்கத்தேவன்பட்டிக்கு வாக்கப்பட்டுப் போகாதடி... கோயில்மாடுகளுக்குப் பதிலா அது ஆம்பளைகள நேந்துவிட்ட ஊருடி'ன்னு சொன்னாகளே, நான் கேக்கலையே!
நல்லது கேக்க இந்த ஊர்ல நாதி இல்லையா...'" எக்கச்சக்கப் பத்தினித்தனத்தக் காமிக்கிறதுக்கு இதான்டா நேரம்னு அவ ஆடம்பரமா அழுகையிலகூட... கொண்ணவாய்ப் பயல ஊரவிட்டு ஓட்டுறதுக்கு சாமியாக் குடுத்த சமயம் இதுதான்னு முடிவு பண்ணிட்டான் கட்டையன்.
"ஏலே, ஏழு மாசத்துல பெறந்தவனே! நம்மள நம்பி இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்தவளையா "வாடி படுக்க"ன்னு கூப்பிடுற?மூஞ்சிலயும் நெஞ்சிலயும் முடி மொளைக்காத பயலுக்கு அடுத்தவன் பொண்டாட்டி கேக்குதா?" கொண்ணவாயன் கையிலிருந்த சாட்டக் கம்பையே புடுங்கி அவனச் சாத்து சாத்துன்னு சாத்திப் பஞ்சு பறத்துறான் கட்டையன். நாய் ஒண்ணு எலும்புத்துண்டப் பெரட்டிப் பெரட்டிக் கடிக்கிற மாதிரி வெரட்டி வெரட்டி அடிக்கிறான். மின்னல் வெட்டி இடி எறங்குற மாதிரி இருக்கு பாவம் பச்சைப் பய ஒடம்புல.
கால்ல செருப்பு இல்லாட்டியும் பரவாயில்ல, கையில சாட்டக்கம்பு இருக்கணும் அவனுக்கு, கையில சாட்டக்கம்பு இல்லாம அவனால ஒண்ணுக்கு ரெண்டுக்குக்கூட போக முடியாது வராது.
முத்துக்கருப்பு பொண்டாட்டி யையும் கட்டையனையும் மாறிமாறிப் பாத்து மருகி நிக்கிறான் கொண்ணவாயன்.
"என்னாப்பா வேணும்?'"னு கேட்டா முத்துக்கருப்பு பொண்டாட்டி. ரெண்டு வேல செய்ய வேண்டிய மாராப்பு ஒரு வேல மட்டும் செஞ்சு ஒதுங்கி நிக்க, வெவரம் பத்தாது அவளுக்கு;
மத்தபடி வெனயம் இல்ல.
கட்டையனுக்கு பயந்து அவளையே உத்துஉத்துப் பாத்துக்கிட்டிருந்த கொண்ணவாயன், உள்ளங்கை வேர்வையோட ஓரணாவ நீட்டிக் கேக்குறான்: "ஓரணாவுக்கு வா... வா... வா..."
அவன் கொண்ணவாயங் கிறதும், வாழக்கா கேட்டு வந்தவனுக்கு வார்த்தை திக்குதுன்னும் தெரியாத காக்கிவாடன்பட்டிக்காரி, தன்ன ஓரணாவுக்கு வாடின்னு கூப்புடுறான்னு நெனச்சிக்கிட்டு "எடு தூமச்சீல"ன்னு எந்திரிச்சா. பெரம்புத்தட்டுல அடுக்கி வச்சிருந்த கெழங்கையெல் லாம் அவன் மேல தூக்கியெறிஞ்சு, "காச்மூச்"சுன்னு கத்திக் குமிக்கிறா. "நான் உத்தமி யாக்கும் பத்தினியாக்கும்.. என்ன ஓரணாவுக்கு வா வான்னு கூப்பிடுறான் ஒரு குரங்குப்பய.
'சொக்கத்தேவன்பட்டிக்கு வாக்கப்பட்டுப் போகாதடி... கோயில்மாடுகளுக்குப் பதிலா அது ஆம்பளைகள நேந்துவிட்ட ஊருடி'ன்னு சொன்னாகளே, நான் கேக்கலையே!
நல்லது கேக்க இந்த ஊர்ல நாதி இல்லையா...'" எக்கச்சக்கப் பத்தினித்தனத்தக் காமிக்கிறதுக்கு இதான்டா நேரம்னு அவ ஆடம்பரமா அழுகையிலகூட... கொண்ணவாய்ப் பயல ஊரவிட்டு ஓட்டுறதுக்கு சாமியாக் குடுத்த சமயம் இதுதான்னு முடிவு பண்ணிட்டான் கட்டையன்.
"ஏலே, ஏழு மாசத்துல பெறந்தவனே! நம்மள நம்பி இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்தவளையா "வாடி படுக்க"ன்னு கூப்பிடுற?மூஞ்சிலயும் நெஞ்சிலயும் முடி மொளைக்காத பயலுக்கு அடுத்தவன் பொண்டாட்டி கேக்குதா?" கொண்ணவாயன் கையிலிருந்த சாட்டக் கம்பையே புடுங்கி அவனச் சாத்து சாத்துன்னு சாத்திப் பஞ்சு பறத்துறான் கட்டையன். நாய் ஒண்ணு எலும்புத்துண்டப் பெரட்டிப் பெரட்டிக் கடிக்கிற மாதிரி வெரட்டி வெரட்டி அடிக்கிறான். மின்னல் வெட்டி இடி எறங்குற மாதிரி இருக்கு பாவம் பச்சைப் பய ஒடம்புல.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"யா... யா.. யா.. யாத்தே..! யப்பே என்னியக் கோ.. கோ.. கோ.. கொல்றாய்ங்க..."
சதையில்லாத ஒடம்பு; எலும்புல அடி எறங்க எறங்க, கை ரெண்டையும் தூக்கிக் கும்புட்டுக் கும்புட்டுக் கத்துறான் கொண்ணவாயன்.
சாட்டையிலயும் வீசி வெளாசிட்டு, சாட்டக் கம்பாலயும் மொழங்கல்லயும் தோள்பட்டையிலயும் நொக்குநொக்குன்னு நொக்கிட்டு சாட்டக்கம்பு நுனியில இருக்குற தார்முள்ளாலயும் அவன் கூன்ல ஒரு குத்துக் குத்தி ரத்தம் ஒழுகவிட்டுட்டு, "ஓடிப் போ நாயே"ன்னு ஒரு எத்து எத்துத் தள்ளி அவன் சாட்டக்கம்ப அவன்கிட்டயே குடுத்திட்டு, அவன் கொண்டுவந்த ஓரணாவ தன் கணக்குல கழிச்சுக்கன்னு கடக் காரிக்கிட்டச் சொல்லிட்டு "ஊர்காத்த உத்தமனா"ப் போறான் கட்டையன்.
வாழக்கா வாங்கப் போனவன மசங்கியும் காணமேன்னு தெருவெல் லாம் தேடித் திரிஞ்சு, கடைசியில நடந்த கதையக் கேட்டு "நாசமாப் போக"ன்னு கட்டையனுக்கு ஒரு சாபம்விட்டுட்டு ஊருக்குத் தெக்க ஒத்தப் புளியமரக் கல்கட்டுல காயத்தோட மொனகிப் படுத்திருந்த கொண்ணவாயன, "வாடா தங்கம்"னு வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து காயத்துக்கெல்லாம் மஞ்சப்பத்துப் போட்டுவிட்டு, கவுண்டர் வீட்ல காப்படி அரிசி மொறக்கடன் வாங்கிக் கஞ்சி காச்சி, காணத்தண்ணியில ரசம்வச்சுக் குடுத்து, "படுறா மகனே படு"ன்னு படுக்கவச்சுட்டா பெரியமூக்கி.
பொத்திப் படுத்தா வேட்டிபட்டுக் காயம் காந்தும்னு அதையும் ஒதறிட்டு ஒறக்கம் வராமக் கெடந்த கொண்ணவாயனுக்கு ரத்தக்கசிவு நின்னுபோச்சு; கண் கசிவு நிக்கல பாவம்.
கரட்டடியில பெரியமூக்கி புருசன் துரைச்சாமிக்குப் பாத்தியப்பட்ட பூர்விகக்காடு மூணு குறுக்கம் இருக்கு. வருசம் ரெண்டாச்சு, மருந்துக்குக்கூட மழை பெய்யல, வெவசாயம் காணாத பூமியில வீட்டடுப்புக்கு வெறகு வெட்டிக்கிட்டிருக்கா பெரியமூக்கியும் கருவாச்சியும்.
கருவேலமுள்ளு, காஞ்சகள்ளி, கத்தாழமட்ட எல்லாத்தையும் பெரியமூக்கியும் கருவாச்சியும் வெட்டிப்போட, கொண்ணவாயன் கவட்டைய வச்சுக் கட்டி அடைய, ஈசானிய மூலையில ஏறி வருது மேகம். கொச்சக்கயித்த வச்சு முள்ளக் கட்டி முடிச்சுப்போடறதுக்குள்ள அண்ணாந்து பாத்தா ஆகாயத்தக் காணோம்.
மாசம் ஆடி மாசம். எந்த நேரமும் அந்து விழுந்திருவேன்னு மின்னிச் சொல்லுது மேகம்.
"ஒன்னிய ஒரு அண அணச்சுக்கிறேன் ஆத்தா"ன்னு பூமாதேவியப் பாத்து வளஞ்சு எறங்கி வருது ஆகாயம்.
"வருதுடா...
வரப்போகுதடா...
வந்துருச்சுடா..."
சட சடசடன்னு எறங்குன மழையில... காடு தெரியல, கரடு தெரியல, மல தெரியல, வழி தெரியல, வேலியோரம் இருந்து வேலாமரமும் தெரியல.
சும்மா சவட்டு சவட்டுன்னு சவட்டுது மழை. ஒவ்வொரு துளியும் எத்தம் பெரிசுங்கிறீங்க.
கால் ரூவா அர ரூவாயாச் சில்லரை மாத்தி ஆளுக மேல எறியிற மாதிரி எறியுதய்யா மழை.
முள்ளுக்கட்ட அங்கயே போட்டுட்டு வேலாமரத்தடியில ஓடிப்போயி ஒதுங்கறதுக்குள்ள மூணு பேரும் நனைஞ்சிபோனாக.
சதையில்லாத ஒடம்பு; எலும்புல அடி எறங்க எறங்க, கை ரெண்டையும் தூக்கிக் கும்புட்டுக் கும்புட்டுக் கத்துறான் கொண்ணவாயன்.
சாட்டையிலயும் வீசி வெளாசிட்டு, சாட்டக் கம்பாலயும் மொழங்கல்லயும் தோள்பட்டையிலயும் நொக்குநொக்குன்னு நொக்கிட்டு சாட்டக்கம்பு நுனியில இருக்குற தார்முள்ளாலயும் அவன் கூன்ல ஒரு குத்துக் குத்தி ரத்தம் ஒழுகவிட்டுட்டு, "ஓடிப் போ நாயே"ன்னு ஒரு எத்து எத்துத் தள்ளி அவன் சாட்டக்கம்ப அவன்கிட்டயே குடுத்திட்டு, அவன் கொண்டுவந்த ஓரணாவ தன் கணக்குல கழிச்சுக்கன்னு கடக் காரிக்கிட்டச் சொல்லிட்டு "ஊர்காத்த உத்தமனா"ப் போறான் கட்டையன்.
வாழக்கா வாங்கப் போனவன மசங்கியும் காணமேன்னு தெருவெல் லாம் தேடித் திரிஞ்சு, கடைசியில நடந்த கதையக் கேட்டு "நாசமாப் போக"ன்னு கட்டையனுக்கு ஒரு சாபம்விட்டுட்டு ஊருக்குத் தெக்க ஒத்தப் புளியமரக் கல்கட்டுல காயத்தோட மொனகிப் படுத்திருந்த கொண்ணவாயன, "வாடா தங்கம்"னு வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து காயத்துக்கெல்லாம் மஞ்சப்பத்துப் போட்டுவிட்டு, கவுண்டர் வீட்ல காப்படி அரிசி மொறக்கடன் வாங்கிக் கஞ்சி காச்சி, காணத்தண்ணியில ரசம்வச்சுக் குடுத்து, "படுறா மகனே படு"ன்னு படுக்கவச்சுட்டா பெரியமூக்கி.
பொத்திப் படுத்தா வேட்டிபட்டுக் காயம் காந்தும்னு அதையும் ஒதறிட்டு ஒறக்கம் வராமக் கெடந்த கொண்ணவாயனுக்கு ரத்தக்கசிவு நின்னுபோச்சு; கண் கசிவு நிக்கல பாவம்.
கரட்டடியில பெரியமூக்கி புருசன் துரைச்சாமிக்குப் பாத்தியப்பட்ட பூர்விகக்காடு மூணு குறுக்கம் இருக்கு. வருசம் ரெண்டாச்சு, மருந்துக்குக்கூட மழை பெய்யல, வெவசாயம் காணாத பூமியில வீட்டடுப்புக்கு வெறகு வெட்டிக்கிட்டிருக்கா பெரியமூக்கியும் கருவாச்சியும்.
கருவேலமுள்ளு, காஞ்சகள்ளி, கத்தாழமட்ட எல்லாத்தையும் பெரியமூக்கியும் கருவாச்சியும் வெட்டிப்போட, கொண்ணவாயன் கவட்டைய வச்சுக் கட்டி அடைய, ஈசானிய மூலையில ஏறி வருது மேகம். கொச்சக்கயித்த வச்சு முள்ளக் கட்டி முடிச்சுப்போடறதுக்குள்ள அண்ணாந்து பாத்தா ஆகாயத்தக் காணோம்.
மாசம் ஆடி மாசம். எந்த நேரமும் அந்து விழுந்திருவேன்னு மின்னிச் சொல்லுது மேகம்.
"ஒன்னிய ஒரு அண அணச்சுக்கிறேன் ஆத்தா"ன்னு பூமாதேவியப் பாத்து வளஞ்சு எறங்கி வருது ஆகாயம்.
"வருதுடா...
வரப்போகுதடா...
வந்துருச்சுடா..."
சட சடசடன்னு எறங்குன மழையில... காடு தெரியல, கரடு தெரியல, மல தெரியல, வழி தெரியல, வேலியோரம் இருந்து வேலாமரமும் தெரியல.
சும்மா சவட்டு சவட்டுன்னு சவட்டுது மழை. ஒவ்வொரு துளியும் எத்தம் பெரிசுங்கிறீங்க.
கால் ரூவா அர ரூவாயாச் சில்லரை மாத்தி ஆளுக மேல எறியிற மாதிரி எறியுதய்யா மழை.
முள்ளுக்கட்ட அங்கயே போட்டுட்டு வேலாமரத்தடியில ஓடிப்போயி ஒதுங்கறதுக்குள்ள மூணு பேரும் நனைஞ்சிபோனாக.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 14
|
|