புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
2 Posts - 1%
prajai
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
2 Posts - 1%
சிவா
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
429 Posts - 48%
heezulia
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
29 Posts - 3%
prajai
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 11 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு


   
   

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து


'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 3:15 am

காலம் இருக்கே காலம் அது ரெண்டு கையிலயும் புழுதியும் விபூதியும் புடிச்சு உக்காந்திருக்கு. எவ்வளவு பெரிய வெற்றியா இருக்கட்டும்... சீ! மறைஞ்சு போன்னு புழுதியடிச்சு வெற்றிய மறைச்சுவிட்டுப் போயிருது. எவ்வளவு பெரிய துன்பமாயிருக்கட்டும்... சூ! மறந்து போன்னு விபூதியடிச்சுத் துன்பத்த மறக்கடிச்சிட்டுப் போயிருது.

காலத்துக்குன்னு மாறாம இருக்கிற கொணம் இது ஒண்ணுதான். இன்னொண்ணும் கவனிக்கணும் நீங்க. காலம் செய்யிற வேலை என்ன தெரியுமா? மனுசப்பயலச் சன்னஞ் சன்னமாத் தடவிக் குடுத்து அவனச் சாவுக்குத் தயாரிக்கிறது தான்.

ஒரே நாள்ல சாவு வந்தா பயந்து கழிஞ்சிருவான் மனுசன்னு தெரியும் காலத்துக்கு. தோல்வி, கண்ணீரு, சிக்கல் சீக்கு ஏமாற்றம் பிரிவு உள்சாவு வெளிச் சாவு இடி மழை பூகம்பம் காத்து இது களக் காட்டிக்காட்டி மனுசனச் சின்னச் சின்னதாச் சாகவச்சு, கால் மாகாணி உசுரை மட்டும் விட்டுவச்சுருக்கு கடைசிச் சாவுக்கு. ஒவ்வொரு பிறப்பும் இந்த பூமிக்கு ஒரு படிப்புப் படிச்சுட்டுப் போக வருது ஒவ்வொரு இறப்பும் இந்த பூமிக்கு ஒரு பாடம் சொல்லிட்டுப் போகுது யாரு பெறந்தாலும் ஆகாயத்துல வெள்ளி மொளைக்கிறதுமில்ல யாரு செத்தாலும் சூரியன் நெஞ்சப் புடிச்சு நின்டுபோறதுமில்ல.

காலம்தான் ஞானம் காலத்தைப் போல மனசு வச்சிருக்கிறவன் ஞானி. காலம் வீசியடிச்ச விபூதியில ஆறே மாசத்துக்குள்ள அழுத கண்ணு காஞ்சுபோச்சு கனகத்துக்கும் பவளத்துக்கும். கல்லு விழுந்த மோதிரத்த கருவாச்சிக்கே அவுக திருப்பிக் குடுக்க, அவ அதை வித்து சொக்கத்தேவன்பட்டி யிலயே பொட்டிக்கடை போட்டுக் குடுத்தா கைம்பொண்டாட்டிக ரெண்டு பேருக்கும்.

அந்த வருசம் காடு வெளஞ்சுபோச்சு கருவாச்சிக்கு. வரவு வந்தா செலவும் சேந்து வருமா இல்லையா... வந்திருச்சு.

அழகுசிங்கத்தப் பள்ளிக்கூடம் சேக்கிறேன்னு ஆடம்பரம் பண்ணி அதிரி புதிரி பண்ணிப்புட்டா.

சாணி மொழுகின மூங்கில் மொறத்துல ஒரு சீப்பு வாழப்பழம் வச்சு, ஒரு செரட்டையில குங்குமம் நெப்பி, ஒரு செரட்டையில சந்தனம் கொழச்சு, அச்சுவெல்லம் பரப்பி, வெத்தல பாக்கு மேல தச்சண வச்சா ஒண்ணே கால் ரூவாய.

"எங் குலதெய்வமா நெனச்சுக் கும்புட றேன் சாமி உருப்படி பண்ணிவிட்ரு என் ஒத்தமகன" கண் ணெல்லாம் தண்ணி தவ்வக் கை புடிச்சுக் குடுத்தா கண்ணாடி வாத்தியார்கிட்ட. வாத்தியாரப் பாத்தவுடன பயந்துபோனான் பய. கண்ணாடி போட்ட சிங்கம் கையில பெரம்பு வச்சு நிக்கிற மாதிரியே இருக்கு அவரப் பாக்கையில அவனுக்கு. பாவப்பட்ட மொசக்குட்டிகளாத் தெரியிறாங்க பள்ளிக்கூடப் பயக.

"ஒம் பேர் சொல்லப்பா..."

தன் பேரு தனக்கு மறந்துபோனவன் மாதிரி ரொம்ப நேரம் யோசிச்சு அழக முழங்கிட்டுச் சிங்கத்தத் துப்பினான்.

"வயசு என்னம்மா பிள்ளைக்கு?"

"அஞ்சு முடிஞ்சிருச்சு பங்குனி யோட ஆறு ஆரம்பம்."

பயல உத்துஉத்துப் பாத்தாரு வாத்தியாரு.

சின்னக் கண்ணு மொக்க மூக்கு பட்ட நெத்தி பணியாரக் கன்னம் அழுத்தமான உதடு ஆத்தா நெறம் கல்லு ஒடம்பு கனத்த நெஞ்சுக்கூடு. சும்மா சொல்லக் கூடாது பஞ்சமில்லாமக் கஞ்சி ஊத்தி வஞ்சகமில்லாமத்தான் வளத்திருக்கா கருவாச்சி.

"அழகுசிங்கம்... சோத்தாங்கையத் தூக்கித் தலையச் சுத்தி மறு காதத் தொடு." செய்ய மாட்டேன்னு மொதல்ல கூனிக்குறுகிக் குன்னிப் போன பய அப்பறம் என்ன நெனச்சானோ ஏது நெனச்சானோ எக்கி எக்கித் தொட்டேபுட்டான்.

"நீ சொன்னது சரிதான். அஞ்சு வயசு ஆகாத கையி தலையச் சுத்திக் காது தொடாது தாயி நீ போயிட்டு வா. போப்பா... போயி உக்காரு."

உடம்புக்கு வெளிய புடைச்சு நிக்கிற புதுச்சட்ட மாதிரியே பொருந்தாமப் போயி உக்காந்தான் பாவம். அடிச்சு வளக்க அப்பனும் அணச்சு வளக்க ஆத்தாளும் இல்லாத பிள்ளைக பெரும்பாலும் புத்தியழிஞ்சு பொழப்பத்துப் போயிருதுக. அப்பன் இல்லாம ஆத்தாளோ, ஆத்தா இல்லாம அப்பனோ பிள்ள வளக்கிறது ஒத்தக் கையில தயிர் கடைஞ்ச கததான். வெண்ணெயும் தெரளாது வெளங்கவும் வெளங்காது.

தகப்பன் இல்லாத பிள்ளைன்னு தாங்கித் தாங்கி வளத்ததுல அழகுசிங்கம் அடிமாறிப் போறதக் கண்டுபுடிக்க மாட்டாமப் போனா கருவாச்சி. மொளைச்ச முள்ள மொளையிலயே கிள்ளாம, அவன் குத்தங்களக்கூட அவ கொண்டாட ஆரம்பிச்சது தப்பாப் போச்சு.

பசுமாட்டுல பால் பீச்சிக்கிட்டே யிருப்பா கருவாச்சி பாத்துக்கிட்டே யிருப்பான் அழகுசிங்கம். சீலயத் தெரட்டி ஏத்திக்கிட்டு ரெண்டு கால் இடுக்குல பித்தளச் செம்ப வச்சு, சொரசொரன்னு இருக்கிற காம்புல வெண்ணெயத் தடவி நீவிவிட்டு அவ சர்ருசர்ருன்னு பீச்சுற சத்தமிருக்கே, சரஸ்வதி வீணை வாசிச்சா அத நிறுத்திட்டு இங்க வந்து இதக் கேக்கணும்.

செம்பு நெறை யுதோ நெறையலயோ மூணு காம்பு எனக்கு ஒரு காம்பு ஒங் கன்டுக்குன்னு ஒதுக்கிவிட்டு எந்திரிச்சிருவா. கன்ட அவுத்துவிடு கண்ணு அழகுசிங்கம்னு சொல்லிட்டு அவ வேலயப் பாக்க அடுப்படிக்குப் போயிருவா. கொண்ணவாயன் அந்த நேரம் கூலம் புடுங்கப் போயிருவான்.

ரெண்டு மாசமாச்சு... மூணு மாச மாச்சு. தோலு மாதிரி சுருங்கிக்கிட்டே போகுது கன்டுக்குட்டி. சாலு மாதிரி விரிஞ்சுக்கிட்டே வாரான் அழகுசிங்கம். என்னா ஏதுன்னு கடைசியில கண்டு புடிச்சா... கன்டுக்குட்டியக் கொலபட்னி யாப் போட்டுப்புட்டு, உள்ள தலையச் செலுத்தி ஒத்தக் காம்புப் பால இவனா உறிஞ்சுக்குடிச்சிருக்கானய்யா இத்தன நாளா.

ஏண்டா! நீ கருவாச்சிக்குப் பொறந் தியா, காராம் பசுவுக்குப் பொறந் தியா?ன்னு அவனப் பாவப்பட்ட ஒரு பார்வை பாக்குது கன்னுக்குட்டி.

"எப்பிடிடா மகனே பசுமாட்டுக் கவுட்டுக்குள்ள பயப்படாமப் பாலு குடிக்கிற வித்தை படிச்ச?" விரல் தடம் பதிய அடிச்சிருக்க வேண்டிய காரியத்துக்கு, கன்னத்துல உதடு பதிய முத்தம் குடுத்து உச்சி குளுந்துபோனா கருவாச்சி. தப்ப மெச்சிக்கிட்டேயிருந்தா, அதுவே தர்மமாயிருதா இல்லையா. அந்தக் கணக்காகிப்போச்சு அழகுசிங்கம் கத.

முந்தானையில முடிஞ்சுவச்ச காச ஆத்தா அவுக்கிற வரைக்கும் பொறுமை யில்ல அறுத்துப்புடறான் அறுத்து. அடுப்புல கூட்டிவச்ச கறி வேகிற வரைக்கும் பொறுமையில்ல அகப்பைய அளாவி அரிச்சுப்புடறான் அரிச்சு. ஒடைச்ச தேங்காயில சில்லெடுக்கிற வரைக்கும் பொறுமையில்ல சிரட்டை யோட சேத்துக் கடிச்சுப்புடறான் கடிச்சு. வீட்ல வளக்குற புலி பம்முறதும் பாயறதும் செல்லச் சேட்ட பண்றதும் குட்டியா இருக்கி றப்ப கொண்டாட்ட மாத்தான் இருக்கும். மீசையும் நகமும் வளந்திருச்சுன்னா அப்பறம் அதப் பாயில போட்டுப் பக்கத்துலயா போயிப் படுக்க முடியும்?

கருவாச்சி ஒண்ணு நெனைக்க காலம் என்னமோ நெனைக் குது. விளையும் பயிர் மட்டுமா களையுந் தான் தெரிஞ்சு போகும் மொளை யிலயே.

"அடே அழகு சிங்கம்! வாடா இப்படி... அனா எழுதச் சொல்லித் தர்றேன்"வாஞ்சையாத்தான் கூப்பிட்டாரு வாத்தியாரு. வேப்ப மரத்து நெழலு வெள்ள மணலு. ஆனாலும் ஆணி மேல உக்காந் தவன் மாதிரிதான் உக்காந்தான் அழகுசிங்கம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 3:16 am

"நல்லாப் பாத்துக்க"உள்ளங்கையில மெழுகி மணலச் சமம் பண்ணி நிதானமா அன்னு எழுதுனாரு எழுதி எழுதி அழிச்சாரு. அழிச்சு அழிச்சு எழுதுனாரு. கடைசியா எழுதுனத அழிச்சாரு. "இப்ப நீயே உன் கையால அனா எழுதி அந்த எழுத்து மேல இத அடுக்குடா"ன்னு புளிய வெதைகள அள்ளிப் போட்டாரு. எழுதுறான் பய எழுதுறான் விரல் வணங்கல. அவுக்கு ஆரம்பச் சுழியான அந்த வட்டமே வருவனாங்குது. இந்த அவுக்குள்ளயே ஆயுசு முடிஞ்சாலும் முடிஞ்சிரும்னு நெனைக்கிறான் பய. எல்லாப் பயலுகளும் அரைகுறையா எழுதிட் டானுக. புளிய வெதை யையும் எண்ணம் போல அடுக்கிட்டானுக. இவன் பொழப்பு சுழியிலயே மாட்டிக்கிட்டுச் சுத்துது. ரெட்டக் குழல் துப் பாக்கி மாதிரி அவனையே குறிவைக்குது கண்ணாடிக் குள்ள இருக்கிற வாத்தி யார் கண்ணு. முரட்டுப் பயதான் அன்னைக்கித் தான் மொதமொதலா வேர்த்துச்சு பாவம் அவனுக்கு. கையப் புடிச்சுப் புடிச்சு எழுதிக்காட்டி யும் கதை ஆகல கடைசியில வச்சாரு ஒரு குட்டு. தலைக்குள்ளயிருந்த ஒண்ணு பாக்கியில்லாம எல்லாம் செதறிச் சின்னாபின்னமாகி திரேகத்துக்குள்ள அங்கங்க போயி ஒதுங்கிட்ட மாதிரி பொறி கலங்கிப்போச்சு. வலி தெரிஞ்சதும் அவன் வம்சத்துக் குண்டன கோவம் உள்ளுக்கிருந்து எந்திரிச்சுருச்சு. வாத்தியார் அங்கிட்டுத் திரும்பவும் புளிய வெதைகள அள்ளி ரெண்டு கால் சட்டைப் பைகளுக்குள்ள யும் போட்டுக்கிட்டு விறுவிறுவிறுன்னு வீட்டுக்கு வந்துட்டான்.

கொண்ணவாயன விட்டுப் புளிய வெதைய வறுத்து ஊறவச்சான். விடிய்ய ஆத்தாகிட்டக் குடுத்து அவிச்சு அவனே தின்டுபுட்டான். அப்பறம்தான் தெரிஞ்சது அவன் அவிச்சுத் தின்னது பள்ளிக்கூடத் துப் புளிய வெதைன்னு. பெறகு என்ன பண்றது?

கூலிக்கு வந்த புளியம் பழத்தையெல்லாம் வாசல்ல போட்டு ஒரே தட்டாத் தட்டி ஓடெடுத் துப் பழத்தக் கோணி ஊசியில குத்திக்குத்தி வெத பிதுக்கியெடுத்து அரப்படி வெத சேத்து வாத்தியாருக்குக் குடுத்துக் கெஞ்சிக் கூத்தாடிப் பிள்ளைய மறுபடியும் சேத்துவிட்டா கருவாச்சி. ஆனா விதி விட்டுச்சா? எழுத்துல தீந்த பகை எண்ணுல வந்து முட்டிக் கிருச்சு. ஒண்ணு ரெண்டு மூணு சொல்லிக் குடுத்தாரு வாத்தியாரு. இவரு சொல்லச்சொல்ல பயக ஒரே குரல்ல மொத்தமாத் திருப்பிச் சொல்லணும். மொத்தமாச் சொல்றதுல ஒரு வசதி. சரியாச் சொல்லத் தெரியாத பயக கூட்டத்தோட கூட்டமா தப்ப நசுக்கிச் சத்தத்துல தேச்சுவிட்ரலாம்.

வாத்தியாரும் சின்னப் பிள்ளையில அப்படித் தேச்சுவிட்ட ஆள்தான..? "இப்பத் தனித்தனியாச் சொல்லுங்க"ன்னாரு அங்க மாட்னான் அழகுசிங்கம். ஒண்ணு ரெண்டு மூணு சொல்லி வந்ததுல இருவத்தி ஒம்போது வரைக்கும் ஆண்டவன் அருள் அவன் பக்கந்தானி ருந்துச்சு. முப்பது வந்தவுடன கடவுளே அவனக் கைவிட்ருச்சு. முப்பதுன்னு சொல்லத்தான் அவன் நெஞ்சு நெனைக்குது. ஆனா நுப்பதுன்னு தான் நாக்குல வருது.

"நுப்பது இல்லடா முப்பது."

"நுப்பது."

"மு...மு...மு...சொல்லு."

"மு...மு...மு."

"வந்திருச்சு இப்பச் சொல்லு. மு...மு...மு... முப்பது."

"மு...மு...மு... நுப்பது."

சில பொம்பளைக ஒழுங்காத்தான் தோச போடுவாக. பெரட்டிப் போடத் தெரியாமப் பிச்செடுத்துருவாக. அந்த மாதிரி இந்தப் பய எழுத்துல ஒழுங்கா இருக்கான் வார்த் தையில ஒலப்பிடுறானே!

அவன் பாவம் வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றான்? வரல. "இன்னைக்கு ஒனக்காச்சு எனக் காச்சுடா மகனே... பாத்திருவோம்." மனசுக்குள்ள வேட்டிய மடிச்சுக் கட்டி ஒரு மல்யுத்தத்துக்குத் தயாராயிட்டாரு வாத்தியாரு.

"இப்பச் சொல்றா மு...மு...மு... முப்பது."

"மு...மு...மு... நுப்பது."

என் முப்பத்தோரு வருச அனுபவத் தையும் இவன் வம்புக்கிழுக்கிறானே! தோல உரிச்சுக்க. நாக்கத் துண்டா அறுத்துட்டுப் போயி விடிய விடிய வீட்ல வச்சுச் சொல்லிக்குடு. வரவே வராதுங்கிறான் பய. அவன் கண்ணு ரெண்டும் கம்மாயாப் போச்சு. பொத்திப்பொத்தி வச்சிருந்த பொறுமை ஒடைஞ்சு வேர்வையா ஓடுது வாத்தியாருக்கு. கொதிக்கிற வெயில்ல குறுமணல்ல கடைசி மணி அடிக்கிற வரைக்கும் ஆள முட்டிக் கால் போடவச்சிட்டாரு. முழங்கால்ல முள்ளுத் தச்ச மாதிரி வலி. பள்ளிக் கூடத்துப் பயக நாப்பத்திரண்டு பேரும் கேவலமாப் பாக்கிறாங் களேங்கிற *உள்ளிங்கம். நம்ம நல்லதுக் குத்தான வாத்தியாரு செஞ்சாருன்னு நெனைக்காம, பழிவாங்குற எண்ணம் பதிபோட்டு உக்காந்திருச்சு அவன் மனசுல.

ஒவ்வொரு வகுப்பையும் ரெண்டு ரெண்டு வருசமாத் தாண்டி வந்ததுல அஞ்சாவது முடிக்குமுன்ன பதினாலு வயசாகிப் போச்சு அழகுசிங்கத்துக்கு. பதினாலு வயசுலேயே முக்கா ஆம்பளைக்கும் முழு ஆம்பிளைக்கும் மத்தியில தெரண்டு நிக்கிறான். கூடப் படிக்கிற பயலுக அவனப் பாத்துப் பயப்படறாங்க. வாத்தியாரப் பழி வாங்கணுங்கிற எண்ணம் மட்டும் தண்ணிக்குள்ள கெடக்கிற கல்லு மாதிரி அப்படியே கெடக்கு மனசுக்குள்ள.

காப்பரிச்சை லீவு. ஊருக்குப் போகலாம்னு அன்னஞ்சியில நிக்கி றாரு வாத்தியாரு. ஒரு நாளைக்கு ஒரே ஒரு பஸ்ஸுதான் அன்னஞ்சிக்குள்ள வந்து போகும் அத விட்டா அடுத்த நாளுதான். பொட்டிக்கடையில கூட்டாளிகளோட கடல உருண்ட வாங்கித் தின்னுக் கிட்டு வாத்தியாரையே பாக்குறான் அழகுசிங்கம்.

"இன்னைக்குப் பழிதீத்திர வேண்டியதுதான்."

வந்திருச்சு பஸ்ஸு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 3:16 am

ஒரு கையில பொட்டியும் மறு கையில வாழத்தாரும் புடிச்சு அவரு ஏறப்போக மளார்னு தவ்வி ஓடி வந்து வாத்தியார் காலக் கெட்டியாப் புடிச்சுக்கிட்டு, "என்னிய மன்னிச்சிருங்கய்யா... என்னிய மன்னிச்சிருங் கய்யா"ன்னு கத்திக் குமிச்சுக் கதறி அழுகிறான் அழகுசிங்கம்.

"ஏய் விடப்பா... ஏய் விடப்பா."

"விட மாட்டேன்ய்யா... ஒங்க கால எங் கண்ணீர்ல கழுவுனாத்தான் எம் பாவம் போகும்."

புடிச்ச உடும்புப்பிடி இறுகிக்கிட்டே போகுது. தவறி விழுந்த பொட்டி தொறந்திருச்சு வாழத்தார்ல அஞ்சாறு காயி உதிந்திருச்சு. கண்டக்டர் பொறுத்துப் பொறுத்துப் பாத்தான். வாத்தியார் வாராப்ல இல்ல பையன் விடுறாப்ல இல்ல. "போலாம் ரைட்டு"ன்னு போயிட்டான் பாவம். பஸ்ஸு போகவும் ஒண்ணுமே நடக்காதது மாதிரி அவன்பாட்ல போயிட்டான் அழகுசிங்கம். அனாதிக் காட்ல நின்ன வாத்தியாரு அடுத்த நாள் வரைக்கும் காத்திருந்தாரு அடுத்த வண்டிக்கு.

இந்தச் சம்பவம் பட்டிதொட்டி யெல்லாம் பரவிப்போச்சு.

"யப்பா சடையத்தேவா! வம்சக் கூரோட பெறந்து வளந்திருக்கானப்பா ஒன் பேரன். குடும்பி பிடிக்காம விட மாட்டானப்பா ஒன் குடும்பத்த. சரிதான்! கரட்டுக்காட்டுக்கு மொரட்டு மம்பட்டி இனி என்னென்னா கூத்து நடத்தப்போறானோ... பாப்பம்."

காலம் ஒரு தார்முள்ளத் தயார் பண்ணிருச்சு சடையத்தேவரு கூன்ல அழுத்திக் குத்துறதுக்கு!

மேலுதட்டுல சாம்பல் பூத்த மாதிரி சன்னமா இருந்த மீச கரு கருன்னு கறுப்படிக்க அஞ்சாவது முடிச்சிட்டான் அழகுசிங்கம். கைக்குச் சிக்காத காத்து மாதிரி வசத்துக்கு வராத ஆளா வளந்து நிக்கிறான் பய. அவனுக்குக் காசு ஒண்ணுதான் கடவுள் தின்பண்டம் வாங்கித் தார ஆளு தெய்வம். அன்னாக்கயிறுங்கிறது அவனுக்கு வெறும் கோவணந் தாங்கின்னு நெனச்சீகளா? இல்ல... ஓட்டை முக்காத் துட்டக் கோர்த்துவைக்கிற உண்டியல்.

அவனுக்குப் புடிச்சது பணியாரம் புடிக்காதது பள்ளிக்கூட வாத்தியார். அவனளவுல ஆத்தா நல்லவ தான் பாவம் ஆனா உப்புக் கல்லுக்கு ஆகாதவ. அவனுக்குப் புடிச்ச பொழுது போக்கு கால்சட்டையக் கழத்தி இது என்னதில்லன்னு எறிஞ்சிட்டு முண்டமாக் கொளத்துல தவ்வி முங்கு நீச்சல் அடிக்கிறது. ஒரு பெரிய கெட்ட கொணம் இருக்கு அவன் பெறவியிலேயே... ஒரு ஆள மொத மொதலா மூஞ்சி பாக்குறப்ப அவனுக்கு என்ன தோணுதோ அது மண்டையப் போடற வரைக்கும் மாத்திக்கிரமாட்டான்.

ஒரு நல்ல கொணமும் இருக்கு. ஒரு காரியத்துக்குச் சரின்னு தலையாட்டிட்டான்னா ஆட்டுன தலைய அடகுவச்சா கிலும் அத முடிக்காம விட மாட்டான். அகமலையில ஒரு ஆளு கிட்டக் கஞ்சா வாங்கி, அல்லி நகரத்துல கொண்டாந்து ஒரு வீட்ல சேத்துட்டா, கால்ரூவா கூலிங்கிறது பேச்சு. அகமலக்காரன் குடுத்த கஞ்சாவப் பழைய துணியில பரப்பி, அத இடுப்பச் சுத்தி இறுக்கிக் கட்டி முடிபோட்டு, ஏத்துன சட்டைய இறக்கிவிட்டு, நான்தான் காந்தி மகாத்மான்னு ஒண்ணுந் தெரியாதவன் மாதிரி ஒத்தையடிப் பாதையப் புடிச்சு அல்லிநகரம் வந்து சேந்தான் அழகுசிங்கம். இடுப்புக் கஞ்சாவ அவுத்து நிறுத்துப் பாத்தான் அல்லிநகரத்து ஆளு. பாத்துட்டு இந்தாடா காசுன்னு குடுத் தான். எண்ணிப்பாத்தா முக்காலணா.

"கணக்குப்படி கால்ரூவா தரணுமே... என்னப்பா இது முக்காலணா..?" அவன் அப்பன் மாதிரியே மூக்கு மேல கோபம் முட்டிநிக்குது அழகு சிங்கத்துக்கு.

"கஞ்சா முழு வீச இல்லப்பா, நிறுத்தா முக்கா வீசதான் வருது."

"கொறைஞ்சா நானா பொறுப்பு..? குடுத்தவனக் கேளு."

"கொறையுதே கால் வீசக் கஞ்சா. அதக் குடுத்துட்டுக் காசு வாங்கிட்டுப் போ."

"அகமலையில குடுத்தத அல்லிநகரத் துல சேத்துட்டேன். நான் எதையும் எடுக்கல." "சத்தியமா எடுக்கல?" "எங்க ஆத்தா மேல சத்தியமா நான் எடுக்கல."

"பெறகென்ன அப்பன அறியாத நாயி... ஆத்தா மேலதான் சத்தியம் பண்ணுவ."

அம்புட்டுத்தான். அழகுசிங்கத்துக் குள்ள இருந்த இத்துனூண்டு மனுசனும் நான் போயிட்டு வாரேன்னு போயிர ஒறங்கிக்கிட்டிருந்த முக்கா மிருகம் முழிச்சிருச்சு. முட்டுக்கெடா மாதிரி தலையக் கவுந்து கஞ்சாக்காரன் நெஞ்சில முட்டித் தலைய விசுக்குன்னு தூக்கி அவன் தாடையில தட்டி மோவாயப் பேத்துட்டு இன்னது நடக்குதுன்னு தெளியுமுன்ன அவன் சில்லி மூக்க ஒடச்சு, எடது கையத் தூக்கிப் புலியடிச்சது மாதிரி அடிச்சான் பாருங்க... உதடு வெடிச்சு ஒழுகுது ரத்தம்.

அந்த முக்காலணாவ எறிஞ்சிட்டுக் கால்ரூவாய எடுத்துக்கிட்டு, "புடிங்கடா... புடிங்கடா..." ங்கிற சத்தம் அடங்குறதுக்குள்ள விசுக்குன்னு ஏறி வேலி தவ்விச் சோளக்காட்டு வழி ஓடிவந்துட்டான் சொக்கத்தேவன் பட்டிக்கு.

அப்பன் இல்லாத பயன்னு முதுகுக்குப் பின்னால லேசுபாசா பேசுவாகளே தவிர இப்படி மூஞ்சியில குத்துன மாதிரி ஒரு பய சொன்னதில்ல. பருத்திக் கெடங்குல தீ விழுந்த மாதிரி பத்திக்கிருச்சு இன்னைக்கு. அருள் வந்த கோடங்கி மாதிரி ஆவேசமா வாரான் ஊருக்குள்ள. களையெடுத்த காசுக்குச் சோள அரிசியும் சூத்தக் கத்தரிக்காயும் வாங்கி வீட்ல வச்சுட்டுக் கனகம் வீட்டுக்குப் போயிக் கரண்டியில எரவல் தீ வாங்கிட்டு எதுக்க வர்றா கருவாச்சி. ஊரே வேடிக்க பாக்க நடுத் தெருவுல ஆத்தாள வழிமறிக்கிறான் அழகுசிங்கம். என்னைக்குமில்லாம அன்னைக்கி அந்த வேசம் கட்டி வந்தவனப் பாத்து, கையில இருக்கிற நெருப்பு வயித்துலயும் எரிய நிக்கிறா கருவாச்சி.

"ஆத்தா! நீ நல்லவதான?"

"அய்யா அழகுசிங்கம் ! ஒனக்கு என்னய்யா ஆச்சு?"



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 3:16 am

"இந்த ஆச்சு போச்சுங்கிற பேச்ச விட்ரு சொல்லு, என்னிய நீ எவனுக்குப் பெத்த?"

"நீ என் மகன்டா ராசா." ஈரக்கொல நடுங்குது அவளுக்கு.

"ஆமா! பொட்டச்சி நீயே பெத்துக்கிட்டியாக்கும். இந்த நெருப்பு மேல சத்தியம் பண்ணு. என்னிய நீ யாருக்குப் பெத்த?" வில்லடிபட்ட மண்பான கடகட கடன்னு ஒழுகிற மாதிரி சொல்லடிபட்ட பொம்பள சொதசொதசொதன்னு அழுகுறா.

"சடையத்தேவரு மகன் கட்டையனுக் குத்தாண்டா மகனே ஒன்னிய ஒங்காத்தா பெத்தா."

"அவனுக்குத்தான் என்னியப் பெத்தேன்னு நீ சொல்ற. அவனுக்குத் தான் நான் பெறந்தேன்னு அவன் சொல்றானா?"

ஒரு பதினஞ்சு வயசுப் பய அப்பன அவன் இவன்னு சொல்லக் கேட்டு நெஞ்சுப் புடிச்சு நின்னு தெருவே வேடிக்க பாக்குது.

"சொல்லு, அவனுக்குத்தான் என்னியப் பெத்தேன்னு நீ சொல்ற... அவனுக்குத்தான் நான் பெறந்தேன்னு அவன் சொல்றானா?"

"இன்னைக்கி வரைக்கும் சொல்லல."

"சொல்ல வைக்கிறேன். நாந்தாண்டா ஓந் தகப்பன்னு சொல்ல வைக்கிறேன். சொல்ல வச்சுட்டு நான் இல்லடா ஒம் மகன்னு சொல்லிட்டும் வந்திடறேன்."

"அய்யா ராசா வேணாம்டா. அவனுங்க பழிபாவத்துக்கு அஞ்சாத பாவிகடா. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒன்னு வச்சிருக்கேன். கண்ணப் புடுங்கிக் காக்காய்க்குப் போட்ருவாங்கடா."

"ஆத்தா! சிங்கம்னு பேரு வச்சுப் பன்னிக் குட்டிக்கா பால் குடுத்து வளத்த? சடையத்தேவனச் சந்திக்கு இழுத்துக் கட்டையத்தேவன அவன் ஆத்தா குடுத்த பாலக் கக்க வைக்கல... நான் எங்க ஆத்தாளுக்குப் பெறந்தவன் இல்ல. இது இந்தத் தீ மேல சத்தியம்." ரெண்டு கையிலயும் இறுக்கிப் புடிச்சான் எரியிற தீக் கரண்டிய... கையி வெந்துபோச்சு கனல் அணஞ்சுபோச்சு.

காத்திக மாசம் பேத்திக்குக் காதுகுத்து வச்சாரு சக்கணன். காதுகுத்துங்கிறதுக்கு ரெண்டு மூணு கணக்கு இருக்கு ஊர் நாட்ல. காதுகுத்திட்டா ஒரு ஒச்சமாகிப் போகுமாம் பிள்ளைகளுக்கு. ஒச்சமான பிள்ளைகள எமன் ஏறெடுத்தும் பாக்க மாட்டானாம். காதுகுத்துக்கு இது ஒரு சாமி கணக்கு. காதுல ஓட்ட போட்டதும் சலசலசலன்னு ஒழுகுதா இல்லையா ரத்தம்.... ரத்தம் ஒழுங்கு மொறையா இருந்தா செத்தவெடத்துல ஒறையணும். அப்படி ஒறையற சக்தி இருக்கா இல்லையான்னு சோதிக்கிறதுதான் காதுகுத்தாம் இது ஒரு வைத்தியக் கணக்கு. ரெண்டுமில்லப்பா! அப்பன் சொத்துல பங்கு இல்லாத பொம்பள... பெத்த பிள்ளையச் சாக்கு வச்சு, தனக்கு உண்டானதுல ஒரு பங்கத் தாய்மாமன் மூலமா தண்டம் போட்டு வசூல் பண்றதுதானப்பா காது குத்து. இது காசு பணக் கணக்கு.

எந்தக் கணக்கா இருந்தா எங்களுக் கென்ன... எழுதற மொய்யிக்கு நெஞ்சு முட்ட நெல்லுச் சோறு திங்கலாமில்ல இது சொந்தபந்தம் போடுற சோத்துக் கணக்கு.

தாய்மாமன் ஊரு கெங்குவார்பட்டி பசப்பும் பசையும் உள்ள ஊர் அது. தண்ணி செழிச்ச பூமி. பதினோரு மரக்கா பச்ச நெல்லு, வாழப்பழத்தாரு, வகைவகையாச் சீரு. அய்யம்பாளையம் தேங்கா, பிறந்தவளுக்குச் சீல துணிமணி, மருமகளுக்குக் கொலுசுமணி எல்லாம் சொமந்து சொக்கத்தேவன்பட்டியையே ஒரு சுத்துச்சுத்தி சாதிசனமே பாத்துக்க... ஆடு மாடே பாத்துக்கே... கோழி குருமானே பாத்துக்கன்னு தாம்பாளத் தட்டத் தல மேல சொமந்து வாராக தாய்மாமன் வீட்டு ஆளுக.

மொட்டையடிச்ச தலையில சந்தனம் அப்பி, பகுமானமாப் பட்டுப் பாவாட சட்டை போட்டுத் தாய்மாமன் மடியில உக்கார வச்சு பொன்னாசாரி கடுக்கன எடுத்துத் திருகாணி கழத்தவும் கண்ணுல தண்ணி தவ்வ ஆரம்பிச் சிருச்சு காது குத்துற பிள்ளைக்கு. மாங்கொழுந்து மாதிரி இருக்கிற பிஞ்சுக் காதுமடல்ல குத்தாணி எடுத்துச் சுருக்குன்னு குத்தவும் கொதக் குன்னு குதிச்சிருச்சு ஒரு சொட்டு ரத்தம்.

வீல்னு சங்கூதுற மாதிரி கத்தி அழுகுது சின்னப் புள்ள. ரத்தத்துல தண்ணியடிச்சு, குத்து வாயில சந்தனம் தொட்டு வச்சும் அடங்கல பிள்ளைக்கு அழுக.

"ஏய் கத்துன... ஒன்னியக் கடிச்சுக் கொன்டேபுடுவேன்." அந்தப் பிள்ள அழுத கட்டைக்கு அடுத்த கட்டையில அமட்டுறான் தாய்மாமன்.

இன்னொரு காதுலயும் குத்திருங்க பொறுத்துக்கிர்றேன் இந்த ஆளமட்டும் அமட்டாம இருக்கச் சொல்லுங்கன்னு அதுக்கு மேல கத்துது பிள்ள.

முடிஞ்சது. எல்லாரும் நின்ட எடத்துலயே அங்கங்க ஒக்காந்தாக. எல தெரியாமச் சோறு வாங்கிச் சாப்பிட்டாக. இப்பத் திண்ணையோரமா ஆளுக்குப் பின்னால ஆளுகளா நிக்கிறாக மொய்யெழுத. இங்கதானய்யா சடையத்தேவர் மொதமொதலா மூஞ்சி பாக்குறாரு பேரன. அப்பப்ப எட்டத்துல பாத்தது. கிட்டத்துல பாக்கப் போறது இன்னைக்குத்தான். மொய்யெழுத முன்னுக்க நிக்கிது பெருசு பின்னுக்க நிக்கிறான் பேரன்.

"செல்லாண்டித்தேவர் மகன் சடையத்தேவர்... முழு ரூபா ஒண்ணு எழுதப்பா."

அவன் தன் பேரத்தான் எழுதறானான்னு எழுத்துக்கூட்டிப் படிச்சுக்கிட்டே சடையத்தேவரு நெஞ்சுக்கூட்டு உள் பையில கைவிட்டு, சில்லறைக்கு மத்தியில முழு ரூபாயத் தடவித் தடுமாற.... பின்னுக்கிருந்து ஒரு கொரல் கேக்குது:

"கட்டையத்தேவர் மகன் அழகுசிங்கம் ஒண்ணேகால்... எழுதப்பா."

தடவுன ரூபாய நழுவ விட்டுட்டு, கிழட்டு யான மாதிரி முழு ஒடம்பு திருப்பி எவண்டா அவன்னு பாத்தா அடிச்சு வச்ச கல்லுச் செல மாதிரி கையில ஒண்ணேகால் ரூவாயப் புடிச்சுக் கெழவன ஒரு ஒரசு ஒரசி நிக்கிறான் அழகுசிங்கம்.

தன்னையும் மகனையும் பெணைஞ்சு பெணைஞ்சு செஞ்ச பெறவின்னு ஒரே பார்வையில தெரிஞ்சுபோகுது கெழவனுக்கு. அவன் கண்ணுலயும் மூக்குலயும் அப்படியே அப்பன அப்பி வச்சிருக்க, நெத்தி காது இத்தியாதிகள்ல தன் அடையாளம் பாத்து மனசுல ஒரு இருட்டு மூலையில சந்தோசப்பட்டுக்கிருது கெழட்டு உசுரு.

இருந்தாலும் வைராக்கியத்த விடுமா வங்கெழடு?

மொய் எழுதுறவன் மூலமா எகத்தாளத்துக்கு எசப்பாட்டுக் கட்ட ஆரம்பிக்கிறாரு சடையத்தேவரு.

"காத்துவாக்குல யாரோ கட்டையத்தேவன் மகன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு. அது எந்தக் கட்டையத் தேவன்னு கேளுங்கப்பா."

படிக்காத சடையத்தேவ னுக்கே இந்த லந்துலகள இருந்துச்சுன்னா... அஞ்சாவது பத்து வருசம் படிச்சவனுக்கு எம்புட்டு இருக்கும்? அடிச்சான் திருப்பி அழகுசிங்கம். "இந்த ஊர்லயே சத்துக் கெட்டுப்போன சடையத்தேவர்ன்னு ஒரு ஆளு இருக்காரில்ல... அந்தச் சடையத் தேவன் மகன் கட்டையன்தான் எங்கப்பன்னு எழுதுங்கப்பா."



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 3:17 am

"சீலப்பேனு செந்தட்டி சொல்ற தெல்லாம் நம்பி எழுதாதீக. தம் மகன் யாருன்னு எம் மகன்தான் சொல்ல ணுமப்பா."

"கட்டையன்தான் எங்கப்பன்னு நான் சொல்றனப்பா."

"இப்படித்தான் அனாதிக அஞ்சாரு ஊர்ல சொல்லி அலையுது கப்பா."

"எங்க ஆத்தாளாத் தள்ளி வச்சிட்டாலும் அப்பன் இல்லேன்னு போயிராதப்பா."

"அப்பன் வேணும்ன்னு ஆசப் படற பயலுகளயெல்லாம் ஆத்தாளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லுங் களப்பா."

"கெழவா! ஒன்னியக் கொல்லாம விடமாட்டேன்." தத்துப்பித்துன்னு தவ்விட்டான் அழகுசிங்கம். "போடா! போடா! பொடிப் பயலே... சோத்துல கெடக்குற கல்லப் பெறக்க முடியாதவன்
சொக்கநாதர் கோயில் கல்லப் பெரட்டப் போறானாம்." கிண்டல் பண்ணுது கெழடு. கெழவனும் பேரனும் மொத மொதலா முட்டிக்கிட்டு நிக்கிறதப் பாத்ததும் பந்தியில இருந்த பாதி சனம் எந்திருச்சு வந்திருச்சு.

உருமாப் பெருமாத்தேவரு உள்ள வந்து விழுகிறாரு. "ஏம்ப்பா சடையத்தேவா! இதென்னப்பா சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு. அவன் ஒன் பேரன்தான்னு ஊருக்கே தெரியுமில்ல. உரிமை இல்லேன்னாலும் உறவு இல்லேன்னு போயிருமா?"

"அடப் போப்பா... வாந்தியெடுத்த பொருளத்தூக்கி வாய்க்குள்ள போட்டுக்கிர முடியுமா? விட்டா வெறும்பய வீட்டுக் குள்ள வந்திருவான் போலிருக்கே!"

"வர மாட்டேன்னு நெனைக்கிறியா? வாரேன்... விடிய்ய வாரேன்." முறுக்கி நிக்கிற பேரனையும் மூக்கு வெடைக்கிற தாத்தனையும் பக்குவமாப் பிரிச்சுவிட்டுட்டுப் பந்தியில போய் ஒக்காந்திருச்சு ஊரு.

"வேணாமடா மகனே! குடிக்கிற கூழுக்கும் குடியிருக்கிற வீட்டுக்கும் கேடு வந்திருமடா. பொறுமையாயிருந்து பொழைச்சுக் காமிக்கணுமடா"ராத்திரியெல்லாம் மகனக் கட்டிப்புடிச்சு அழுது கோழி கூப்புட ஒறங்கிப் போனா கருவாச்சி.

விடிய்ய... செங்கமங்கலா இருக்கிறப் பவே சடையத்தேவன் வீட்டுக் கதவ ஓங்கி ஒரு எத்து எத்தி உள்ள புகுந்துட் டான் அழகுசிங்கம்.

"ஏய் சடையத்தேவன் கெழவா... மகன் கூப்பிடுறான்னு எங்க அப்பன எழுப்புய்யா." காத்திக மாசக் குளிருக்குப் பயந்து கம்பளிக்குக் கீழே கெடக்கான் கெழவன் ஒண்ணும் பதிலக் காணோம்.

அம்மி மேல படுத்துக் கெடந்த நாய் மட்டும் உர்ருன்னுச்சு. திருகக் கல்லத் தூக்கி நாய் மேல போட்டான். வால் மட்டும் அந்து வள்வள்ன்னு கத்திக் கிட்டுத் தப்பிச்சு ஓடி ருச்சு நாயி. திருகக்கல் விழுந்ததுல ரெண்டா ஒடைஞ்சு துண்டா விழுந்திருச்சு அம்மி.

"இன்னைக்கு அம்மிக் கல்லு. நாளைக்கு ஒங்க தல." சொல்லிட்டு வெளியேறிருச்சு சூறாவளி.

சீ! வெளையாட்டுப் பயன்னு நெனைச்சது வெனையாப் போச்சே. "ஏலே... எந்த ஊர்ல எந்தத் தே...யா வீட்ல கெடக்கானோ? தூக்கிட்டு வாங்கடா கட்டையன." மசங்க வந்து சேந்தான் கட்டையன். "மகனே! மொத மொதலா அப்பனுக்கு அச்சம் வருதடா. பொழைச்ச பொழப் பெல்லாம் போயிரும் போலருக்குடா. மண்புழுவுன்னு நெனச்ச பய காலச்சுத்துற கட்டுவிரியனாகிப் போனாண்டா. என்னடா பண்ணப் போற?"

"அவனக் கண்டதுண்டமா வெட்டிக் கத்திரிக்காச் சாக்குல அள்ளி வருச நாட்டுச் சொனையில சொமந்து போட்டுட்டு வந்திரட்டுமா?"

"நீ செய்வ. அப்புறம் நீயும் நானும் இந்த ஊர்ல இருக்கணுமா இல்லையா..? மகனே சொல்றேன் கேளு. எம்பொழப்பு இன்னைக்கோ நாளைக்கோ. நீ ஊருக் கொரு பொம்பள வச்சு அலையிற. வீட்டுக் கொரு பொம்பள வேணாமா? வம்சத்துக் கொரு வாரிசு வேணாமா? ஒனக் கொண்ணும் வயசு போகல நாப்பத்தஞ்சு தான். இந்த ஊரே ஒண்ணு திரண்டு எதுத்தாலும் சரி கல்யாணம் பண்ணிவைக்கிறேன் கட்டிக்க. வருசத்துக்கொரு பிள்ளைன்னு வாரிசு குடு. நாலு தலமொறையாக் கட்டிக்காத்த சொத்துல ஒரு நாய் வந்து வாய்வைக்கிறதா? நம்ம பொழச்ச பொழப்பு நாறிப்போகாதா? சரி சொல்றா மகனே!"

கட்னவனுக்கு ஒரு பொண்டாட்டி கட்டாதவனுக்குப் பல பொண் டாட்டின்னு திரிஞ்ச கட்டையன் கடைசியில சரி சொல்லிட்டான். தை பெறக்க... வந்துட்டாளய்யா கட்டையன் கட்ன புதுப்பொண்டாட்டி எடது காலத் தூக்கி எட்டுவச்சு.

"ஏய் அங்க பார்ரா... கட்டையன் கட்ன புதுப் பொண்டாட்டிய..."

எரநூறு முந்நூறு வருசமிருக்கலாம் சொக்கத்தேவன்பட்டிங்கிற ஊரு உண்டாகி, அது ஆயுசுக்கும் பாத்ததில்ல அப்படி ஒரு பொம்பளைய. நாந்தான் சூரியன், பொம்பள வேசம் கட்டி பூமிக்கு வந்திருக்கேங்கிற மாதிரி அவ தெரு வழியா நடந்து போறதப் பாத்ததும் சொக்கத்தேவன்பட்டியே உத்து உத்துப் பாத்து சும்மா சொக்கிப்போச்சு சொக்கி.

மஞ்சக் குளிச்ச மாங்கொழுந்து மாதிரி ஒரு நெறம் வளந்து மலந்து நிக்கிற திரேகம் வசதியான ஒயரம் உருண்டை மூஞ்சி ஓயாமச் சிமிட்டுற கண்ணு அவ ஒதட்டுல வெத்தல புடிச்சிருக்கா இல்ல வெத்தலைய ஒதடு புடிச் சிருக்காங்கிற வெவகாரம் தீராத செவப்பு. நான் சண்டைக்குப் போற சாதிக் குதிரைன்னு போறா டக் டக்குன்னு எட்டுவச்சு. ஊருக்குள்ள ஒரு பொம்பள புதுசா வாரேன்னு தண்டோராப் போட்டுக் கிட்டே போகுது அவ தண்டைமணி. சீலக்கட்டு கெண்டைக் காலுக்குமேல அரையரைக்கா அடி ஏறி நிக்க பளீர்னு வந்து பச்சப் பாம்பு மாதிரி கண்ணக் கொத்திப்போகுது பச்ச நரம்பு. எத்தன பவுன் நகை போட்டு வந்திருக்கான்னு இவளக் கேக்காதீக இடுப்பு மட்டும் இருபது பவுனுன்னு கூப்பிட்டுக் கூப்பிட்டுச் சொல்லுது கொசுவம். தூக்காணாங்குருவிக் கூட்ட நிமித்தித் தூக்கிக் கட்ன மாதிரி இருக்கிற அவ கொண்டை என்னையும் சேத்துதான் இவ ஒயரத்த அளக்கணும்னு கூத்தடிக்குது கூத்து.

கட்டையன் பொண்டாட்டி ஊருக்குள்ள வந்ததுல ஒரு சரித்திர சம்பவம் என்னான்னா, லவுக்க போட்டு ஒரு பொம்பள ஊருக்குள்ள வந்தது அதான் மொதத் தடவை. அந்தக் கிளிப் பச்சை லவுக்க அவ திரேகத்த இந்த இறுக்கு இறுக்குதே... துணிய மேனியில போட்டு ஒட்டித் தச்சுக்கிட்டாளா? இல்ல லவுக்கக் குள்ள திரேகத்த நொழச்சுக்கிட் டாளா...? கிண்டல் பழுத்த பெருமூச்சுல கேக்குறாளுக கெழவிக. போறபோக்குல வகுத்துக் குள்ள வெரலவிட்டு, இறுக்கிப் புடிச்ச லவுக்கப்பட்டைய அவ ஒரு சுண்டு சுண்டுறதுல இடி தாக்கி நொறுங்கிக் கெறங்குதுக இளவட்டங்க, அவ வாளிப்பு முப்பதுன்னு மதிக்கச் சொன்னா லும் வயசு என்னமோ இருபத்தேழு தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 3:56 am

தங்கமூக்கு, தாம்பாளக் கன்னம், மூக்குத்தி, பொட்டுமணி, தண்டட்டி, தாலி, எந்தச் செயில்ல போட்டு என்னிய எப்படிக் கட்டிவச்சாலும் தப்பிச்சே தீருவேன்னு தவ்வப் பாக்குது தனம். பேச்சத் தொலச்சிட்டுப் பித்துப் புடிச்சு, வெத்தலைய ஒரல்ல போட்டுட்டு வெளிய குத்துதுக ருசுக. அவல நெனச்சு ஒரல இடிச்ச மாதிரி இவள நெனச்சு வெளிய இடிச்ச தையாகிப்போச்சு.

அவ அம்சத்தையும் அழகையும் பொறுக்க முடியாத ஒரு பொம்பள சொல்றா: "எத்தன ளைக்கி இந்த அலங்காரத்தோட இவ அலையப்போறா? கோடிச்சீல ஒரு *வெள்ளையோட ரி கொமரிப் பிள்ள ஒரு பிள்ளையோட சரி."

"பின்னத்தேவன்பட்டிக்கு அவுக பெரியத்தா வீட்டுக்கு விருந்தாளியா வந்தவளாம். ஈரவேட்டிய சிக் கோழிய அமுக்கிற மாதிரி அமுக்கிக் கூட்டிட்டே வந்துட்டானாம்"

"சரியான கட்டையத்தான் புடிச்சுட்டு வந்திருக்கான் கட்டையன்."

"இது வெறுங்கட்டை இல்லடா... திம்சுக்கட்டை."

அவ சொந்தப் பேரு என்னான்னு யாருக்கும் தெரியாது ஆனா அன்னைக்கு வச்ச பேரு தொலங்கிருச்சு திம்சு பாதிக் கெழவனான பிறகு கல்யாணம் பண்ணிருக்கான்... சுட்டுப்பாடு வேணாம்னு விட்ருச்சு ஊரு. இருந்தாலும், சேத்துல விழுந்த காசுலயும் சகதி ஒட்டுற மாதிரி அந்தக் குடுமபத்து மேல இருந்த வெறுப்பு வந்தவ மேலயும் ஒட்டிக்கிருச்சு. ஆனா நடந்த கதையே வேற. வந்தவ இருக்காளே... வல்லாளகண்டி. கால் வீச பாகக்காயில அரை வீச சக்கரப்பாகு எடுத்து ஒரு வீச அல்வாக் கிண்டுறவ.

வந்தவ வீடு பெருக்கி விளக்கேத்திவச்சுட்டு ஊர ஒரு நோட்டம் விட்டா. அந்த ஊர்ல மண்ணுக்கு என்ன மணம் மனுசங்களுக்கு என்ன குணம்னு ரெண்டே நாள்ல மோப்பம் புடிச்சா. வாக்கப்பட்டு வந்த குடும்பத்துக்கும் ஊருக்கும் எதனால ஏழாம் பொருத்தம்னு வெலாவாரியா விசாரிச்சா. விடிய விடிய யோசிச்சு விடிய்...ய்யக் காய் நகத்திட்டா.

மொத வேலையா வீட்டுக்குள்ள இருந்த ஒரலத் தூக்கித் தெருவுல போட்டா. புதுசா வாங்குன அம்மி திருகை ரெண்டையும் வெளித் திண்ணையில போட்டுவச்சா. "எங்க வீட்டு ஒரலு அம்மி திருகை ஊருக்குப் பொது. யாரும் வந்து அரச்சுக்கிரலாம் யாரும் வந்து இடிச் சுக்கிரலாம்." சொல்லிட்டு சொளகுல சோளம் பொடைச்சு வாசல்லயே ஒக்காந்துட்டா. ஒருத்தி வரல ஊரே இறுகி உள்தாப்பாப் போட்டுக்கிருச்சு.

பொழுசாய...

குறுணிச் சோளத்தக் கூடையில போட்டு எட்டு மேல எட்டுவச்சு வந்தா இடுப்புச் செத்த கெழவி ஒருத்தி, உரல்ல சோளம் கொட்டி ஒலக்கைய எடுத்தா. ஓங்கிப் போடச் சத்து இல்ல பாவம் அவளுக்கு. முக்கிமுக்கிப் பாக்குறா... ஒண்ணும் வேலைக்காகல. பாத்தா திம்சு. முந்தானைய இழுத்து இடுப்புல செருகிக்கிட்டு, கொண்டா ஒலக்கையன்னு வாங்கிப் போடறாளய்யா பெரும்போடு.

கண்ணாடி வளவிச் சத்தம் தெருவையே தெரட்டியடிக்க சும்மா ணங்கு...ணங்கு...ணங்குன்னு எறங்குற ஒலக்க ஒரலுக்குள்ள புகுந்து கல் வாத்தியம் வாசிக்க ஏறி ஏறி எறங்குற அவ மார்பு ரெண்டும் மனுசப் பொழப்பும் இப்படித்தாண்டான்னு தன்னால தத்துவம் பேச வெறும் விரல்கடை அளவு மட்டுமே தெரிஞ்ச அவ இடுப்பு, இப்பக் கையளவு தெரிஞ்சு கண்காட்சி காட்ட ஓங்கி ஓங்கி ஒலக்க போட்டா சொங்கவிட்டுச் சோளஅரிசி எட்டிப்பாக்குற மாதிரி வீட்டவிட்டு வந்து வெளிய எட்டிப்பாக்குது ஊரு.

"யாரு பெத்த மகராசியோ?" குத்தவச்ச கெழவி கும்புட்டு உக்காந் திருக்கா ஒரு ஓரமா. இருங்கச் சோளம் மட்டும் குத்தி யெடுத்தாப் பத்தாது. அரிசியத் தொவைக் கணும் இல்லாட்டி வெளங்காது. ஒரல்ல குத்துன சோளத்தை அவளே அள்ளுனா பொடச்சா, அரிசி மேல லேசாத் தண்ணி தெளிச்சு பழையபடி ஒரல்ல போட்டுப் பொய்க் குத்தாக் குத்தித் தும்பப்பூ மாதிரி தொவைச்சும் குடுத்திட்டா.

அவளக் கும்பிட்டு வாங்கி அழுதுபோறா கெழவி.

"திம்சு நல்ல குணவதி போலிருக்கே."

ஊருக்குள்ளே சின்னச்சின்னதா சின்னச்சின்னதா நல்ல பேரு பரவுது அவளுக்கு. நல்லதுக்கு றெக்கை கட்டிவிடுறதும் கெட்டதுக்குக் கொம்பு சீவிவிடுறதும் ஊருக்குள்ளே மூணே மூணு பேருதான்.

ஒண்ணு சலவைக்காரன்
ரெண்டு சவரக்காரன்
மூணு ஊர்மாடு மேய்க்கிறவன்.
மூணு பேரையும் கூப்பிட்டா.

"யப்பா எல்லா வீட்டுக்கும் ஏனம் எடுத்து அலையாதீக. இன்னைக்கிருந்து நான் திங்கிற சுடுசோத்துல சரிசோறு உங்களுக்கு காயோ கறித்துண்டோ எங்க வீட்டுக் குழம்புல எனக்கில்லைன் னாலும் ஒங்க சட்டியில ஒங்களுக்கு விழுகுமப்பா."

சொக்கத்தேவன்பட்டிய மூணாப் பிரிச்சு மூணு பேருக்கும் பட்டாப் போட்டுக் குடுத்த மாதிரி கெறங்கிக் கிறுகிறுத்துப்போனாக மூணு பேரும். சடையத்தேவரப் பெரிய மாமுன்னு கூப்பிட்டுப் பழகிட்டா கட்டையன மாமுன்னு கூப்பிட்டுப் பழகிட்டா திம்சு.

"பெரிய மாமு! கொடியில கெடக்கே... கிழிஞ்சுபோன பழைய வேட்டிசட்ட... என்னப் பண்ணப்போறீக?"

"என்னத்தப் பண்றது? அழிஞ்சு போற வரைக்கும் அங்கேயே கெடக்கும் தாயி"

"நான் எடுத்துக்கிரட்டுமா?"

"எடுத்துக்க"

கிழிஞ்சுபோன வேட்டி சட்டைகள எல்லாம் கூப்பிட்டுவச்சுக் குடுக்கவும் நொண்டி நொஞ்சானெல்லாம் திடும்னு விழுந்திருச்சுக திம்சு கால்ல.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 3:56 am

"குடுக்கச் சொன்னது பெரிய மாமு. அவரு கால்ல விழுங்க"

உள்ள கூட்டிட்டுப் போயி சடையத் தேவர் கால்ல மளார் மளார்னு அவ விழுகவைக்கவும் முதுகுத்தண்டுல மழை விழுந்து கும்பி குளுந்துபோச்சு கெழவனுக்கு. சடையத்தேவர் அந்த மொத மயக்கத்தவிட்டு முழுசாத் தெளியுமுன்ன ரெண்டாம் வைத்தியம் ஆரம்பிச்சுட்டா திம்சு. சடையத்தேவருக்கு முடி வெட்டச் சொன்னா சவரக்காரனக் கூப்பிட்டு.

பொத்தக் கள்ளி மூஞ்சி
நெருஞ்சி முள்ளு ரோமம்
வேலாம் பட்டத் தோலு.
பாறைக்கெல்லாம் சவரம் பண்ணா தீங்கப்பான்னு படபடக்குது கத்தி.
முடிஞ்சது.

கோவணத்தக் கட்டிவிட்டு ஒரு ஓரமா உக்காரவச்சா கெழவன. நல்லெண்ணெய ஊத்துனா கரண்டியில. பட்டமொளகா ஒண்ணு, வெள்ளப்பூடு ரெண்டு பல்லு, கருமொளகு மூணு, மூணையும் உள்ள போட்டு எண்ணெயச் சுடவச்சா. ஒரு எளம் வெதும்பல்ல எடுத்தா தொங்குற சீலயச் சுருட்டித் தொடையிடுக்குல செருகிக்கிட்டா. கர கரகரன்னு தேச்சா பெரிய மாமன் தலையில.

மண்டையில கொஞ்சங்கொஞ்சமாக் கொறைஞ்சுக்கிட்டிருந்த உசுரு ஊறி வருது கெழவனுக்கு. பொறி பறக்குது நெத்தியில. நீ என்ன சொன்னாலும் சரி தாயின்னு ஆடுது தல அதுபாட்டுல. எளஞ்சூட்டு எண்ணெய இரு காதுலயும் ஊத்திப் பருத்திப் பஞ்சவச்சு அடைச்சா மூஞ்சியில எண்ணெவச்சு நெத்தி தடவுனா இரு கட்ட விரல்லயும் இரு புருவம் நீவிவிட்டா கண்ணுல வெரல விட்டுப் பீழை பிதுக்கியெடுத்தா, தேஞ்ச கழுத்தெலும்ப எண்ணெவிட்டு வழிச்செடுத்து இழுகிவிட்டா சொறிபுடிச்சுச் சொரசொரன்னு போன முதுகப் பிஞ்சு நகம் வச்சுச் சொரண்டிச் சுத்தப்படுத்தினா வத்திப்போன நெஞ்சுக்கூட்ல வழியவழிய எண்ண தடவி, நரை முடியச் சிக்கெடுத்தா சதையில்லாத தொடையெலும்ப அழுத்தாம அழுத்தி ஆதரவு பண்ணுனா கெண்டக்கால் சதையப் பச்சப்புள்ள கன்னத்தப் புடிச்சுவிடுற மாதிரி பதறாம நசுக்கிவிட்டா பத்து வெரல்லயும் சொகமாகச் சொடக்கெடுத்தா நகக்கண்ணுல அழுக்கெடுத்தா சீவராசிகக் கூடு கட்டிக் குடியிருக்கிற குதிகால் பித்த வெடிப்புல வேப்பங்கொழுந்தும் மஞ்சளும் ஆமணக்குவித்தும் அரச்சுப் பூசுனா. சொந்த மக மாதிரி வந்த மருமக சேவை பண்ணி விடவும் நாப்பது வருசமாத் தொலஞ்சுபோன பொழப்ப ஒரே நாள்ல பொழச்சு முடிச் சிட்டதாக் கிறுக்கு புடிச்சுப்போச்சு கெழவனுக்கு. பொலபொலபொலன்னு தண்ணி ஒழுகுது புருவம் நரைச்ச கண்ணுல.

கரம்ப மண்ணப் போட்டுத் தேச்சுத் தலையில வெதுவெதுவெதுன்னு வெந்நி விடவும், யாரு பெத்த மகளோ, நீ நல்லாருன்னு சொல்லிக் கண்ணு ரெண்டையும் இறுக்க மூடிக் கோவணத்தோட உக்காந்து கும்புடறாரு கெழவன்.

இப்படி ரெண்டு மூணு தண்ணி ஊத்திவிட்டா பல்லுப்போன கெழவனுக்குப் பஞ்சு மாதிரி சுட்டுக் குடுத்தா ஆட்டு ஈரல. இந்த சொகத்துலயும் சோங்குலயும் சொக்கிப்போன சடையத்தேவரு "எங்கிட்ட இருந்தா என்ன... ஒங்கிட்ட இருந்தா என்ன... இந்தா தாயி! இத நீயே வச்சுக்க"ன்னு எடுத்துக் குடுத்துட்டாரு சாமி படத்துக்குப் பின்னால இருந்த சாவிய. புருசன்காரன அவ போட்ட போடு இருக்கே... பொறி கலங்கிப்போச்சு அவனுக்கு.

குலதெய்வத்த ஒரு ஓரமா ஒதுக்கிவச்சுட்டு இவளக் கும்புட ஆரம்பிச்சுட்டான். சாயங்காலமானாச் சட்டை வேட்டி மாத்தி வெளிய கெளம்புறதும் நடுச்சாமத்துல வந்து கதவு தட்றதுமா இருந்தான் கட்டையன்.

ஒரு நாள் வெள்ளையுஞ் சொள்ளையுமா அவன் வெளிய கெளம்ப, "செத்தவடம் உள்ள வந்துட்டுப் போ மாமூ"ன்னா. உள்ள போனா.

மோர் மொளகா சுட்டுவச்சு, முட்டை வறுத்துவச்சு, ஊறுகாயும் எடுத்துவச்சிருந்தா ஒரு ஓரமா. உறியில துண்டாத் தொங்கவிட்டிருந்த ஈயத் தூக்குவாளிய எடுத்தா தெறந்தா. சும்மா பட்டையக் கெளப்புது பட்டச்சாராய வாசன.

ஒக்காரு மாமூன்னா உக்காந்தான்.

"மாமூ! கூத்துப் பாக்கிறதாயிருந்தாக் கூட்டத்தோட பாக்கணும் குடிக்கிறதா யிருந்தா ஒத்தையில குடிக்கணும். ஒனக்கு என்னா சரக்கு வேணும் சொல்லு. தாண்டிக்குடி மல தாண்டிக் கூட வாங்கிட்டு வந்து தாரேன்.

இங்கேயே குடி. என்னாடா இது இளைய குடியாளா வந்தவ, இருக்கிற குடியக் கெடுத்துருவா போலருக்கேன்னு நெனைக்கிறியா? நெனைக்காத. இது வரைக்கும் நீயி எப்பிடி இருந்தியோ அப்பிடியே இருந்துக்க. ஒனக்கு மட்டுந்தான் நான் பொண்டாட்டி. எனக்கு மட்டுமே நீ புருசன் இல்ல நீ போற வழியில போய்க்க. எங்க போற எதுக்குப் போறன்னு கேட்டா செருப்ப எடுத்துக்க. ஆனா எப்ப வருவன்னு மட்டும் கேப்பேன். எதுக்குன்னா, ஒனக்கு நான் வெடக்கோழி அடிச்சு வெள்ளச் சீசா வாங்கிவைக்கணுமே அதுக்கு."

அன்னைக்கி விழுந்தவன்தான் கட்டையன். விழுந்த பள்ளம் அவனுக்கு வேண்டிய பள்ளமாயிருந்துச்சு. எந்திரிக்க மனசே வரல எந்திரிக்கல.

அடுத்து அழகுசிங்கம் மேல எந்த அம்பத் தொடுக்கலாம்னு அவ மண்ட காஞ்சு நிக்க... காலமே கொண்டாந்து அவ காலடியில சேக்குது அவன. கட்டையன் வீட்டுக்குள்ள புகுந்து ஒரு கெடாயப் புடிச்சுக் காளியாத் தாளுக்கு வெட்னாத்தான் பலியும் பழியும் ஒரே நேரத்துல தீரும்னு முடிவு பண்ணுனான் அழகுசிங்கம்.

கெடாயும் புடிக்கணும் யாரோ புதுசா வந்திருக்காளாமில்ல ஒரு பொறம்போக்குச் சிறுக்கி... அவளையும் ஒரு ஒச்சம் பண்ணிட்டு வந்திரணும் சிறுகச்சிறுகத் திட்டம் போட்டான். கட்டையன் வீட்டுக்குள்ளதான் கெடா கட்டிக் கெடக்குங்கிறத் துப்பறிஞ்சு ஒரு நாள் பொழுதிருக்கப் புகுந்துட்டான் அந்த வீட்டுக்குள்ள. அன்னைக்கின்னு பாத்து சடையத் தேவர் வீட்ல இல்ல கட்டையன் ஊர்ல இல்ல. போனவன் ஓட்டு வழியா ஏறி உள்ள குதிக்கவும், சடார்னு அவன் கால்ல சரிஞ்சிருச்சு கட்டத் தூணு. கணுக்கால் எலும்பு நசுங்கிச் சப்பழிஞ்சு போச்சு. "யாத்தே"ன்னு கத்தி அவன் சாணியில கெடக்க, சத்தங் கேட்டுத் திமுதிமுன்னு ஓடிவந்தா திம்சு.

வந்தவன் அழகுசிங்கம்தான்னு அனுமானிச்சுக்கிட்டு அவன மளார்னு தூக்கி மடியில போட்டுக்கிட்டா. முந்தானையக் கிழிச்சுக் குளுதாணியில நனச்சுக் காயத்துல கட்டுப் போட்டு ரத்தத்த நிறுத்திப்புட்டா.

லோகிதாசன மடியில போட்டு சந்திரமதி மயான கண்டத்துல அழுகிற மாதிரி குய்யோ முறையோன்னு அழுகையில கூடிட்டா.

ஆடு களவாண வந்தவன் ஆடிப்போயிட்டான்.

"இந்த வீட்ட அரசாள வேண்டிய ராசா நீ அடிபட்டுக் கெடக்குறியே." அவன் தலைய நெஞ்சுல தாங்கி நடந்து திண்ணையில உக்காரவச்சுத் தண்ணி குடுத்தா.

"தண்ணி குடுக்கிறியா தண்ணி...." செம்போட தூக்கி விட்டத்துல விட்டெறிஞ்சான்.

"அய்யா மகனே! அழகுசிங்கம்! ஊரே எம்மேல வெறுப்பேறி நிக்கிது காறித் துப்புது. ஒம் பங்குக்கு நீயும் எத்தி மிதிக்கிறியா... எத்து. ஒங்க பொழப்பக் கெடுக்கவா நான் வந்தேன்...? எங்க அக்கா கருவாச்சி போட்ட மடிப்பிச்சதான் இந்தப் பொழப்புன்னு எனக்குத் தெரியாதா? தாயும் மகனும் பாத்து நீ இருன்னா இருக்கேன் போன்னாப் போயிர்றேன். நான் இங்க வீட்டுக்காரி இல்லடா மகனே. ஒங்க சொத்துபத்து சிந்தாமச் சிதறாமக் கட்டிக் காக்க வந்த காவக்காரி."

அவன் கால் ரெண்டையும் கட்டிப் புடிச்சுக் காயத்த அழுத்தாம அவ அழுது பொலம்பவும் அழகுசிங்கத்துக்கே அழுக வந்திருச்சு.

"சரி சரி எந்திரி... கால விடு."

"நீ சின்னத்தான்னு சொல்றவரைக்கும் புடிச்சபுடி விட மாட்டண்டா மகனே."

கொஞ்ச நேரம் யோசிச்சான்.

"சரி எந்திரி சின்னத்தா."

எந்திரிச்சுக் கண்ணத் தொடச்சு முந்தானைய அவுத்து முழு ரூவா ஒரு ரூவா குடுத்தா. மொதல்ல வெறுப்பா வெறிச்சு வெறிச்சுப் பாத்த பய கடைசியாக கை நீட்டிட்டான்.

"நாம நெனச்சது தப்பு. நல்லவதான் போலிருக்கே."

அவன் நொண்டி நொண்டிப் போறதையே வச்ச கண்ணு வாங்காமப் பாத்து நிக்கிறா திம்சு.

இப்பிடி...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 3:57 am



வெந்நியில சாச்சுட்டா கெழவன
தண்ணியில சாச்சுட்டா புருசன
கண்ணீர்ல சாச்சுட்டா மகன.
இன்பம் துன்பங்கிற ரெண்டும்
துண்டு துண்டாவா இருக்கு?
கெடையாது அடுத்தடுத்த வீடு.
இன்பத்தைப் பெரட்டிப்
போட்டாத் துன்பம்
துன்பத்தப் பெரட்டிப்போட்டா இன்பம்.
பூமி இன்பம் பூகம்பம் துன்பம்.
காத்து இன்பம் புயல் துன்பம்.
மழை இன்பம் வெள்ளம் துன்பம்.
தீபம் இன்பம் தீப்புடிச்சாத் துன்பம்.
ஆகாயம் இன்பம் இடி துன்பம்.
ஒடம்பு இன்பம் நோய் துன்பம்.


சொல்லப்போனா சீவராசிகளும் மனுசப் பயகளும் உண்டான காலத்துல யிருந்து துன்பங்கிறதுதான் இயற்கை இன்பங்கிறது ஏற்பாடு மனுசனாப் பாத்து உண்டாக்கிக் கிட்டது. இயற்கைக்கு எதிரா மனுசனால உண்டாக்கப்பட்டது நிக்குமா? அதான் பொட் பொட் பொட்டுன்னு விழுந்திருது.

துன்பங்கிற நெருப்ப எடுத்துக் கையில வச்சுக் கிட்டே அலையுது காலம். தட்டுப்படுற ஆளுக தலையிலயெல்லாம் வச்சு வச்சுப் பாக்குது.

"நீ சருகாயிருந்தாக் கருகிக் காணாமப் போயிருவ.
தங்கமாயிருந்தா மெருகாகிப் போயிருவ. நீ சருகா தங்கமான்னு சோதிக்கிறேன்"

தீயவச்சிட்டுக் கண்ணச் சிமிட்டிச் சிமிட்டிச் சிரிக்குது காலம். கல்லுமேலயே நடந்து நடந்து பாதம் கெட்டிப்பட்டுப் போற மாதிரி, சள்ளப்பட்டு மொள்ளப் பட்டே மனசும் மரத்துப்போச்சு கருவாச்சிக்கு.

"சாமி! எம்மேல கல்லெறியிறதே ஒனக்கொரு வெளையாட்டாப் போச்சு. இன்னம் எத்தன கல்லு எறியப்போறயோ எறி. கடைசியில கணக்குப் பாப்பம் ஒடையறது என் எலும்பா நீ எறிஞ்ச கல்லான்னு." கருவாச்சி சொன்னது சாமிக்குக் காது கேட்டிருச்சு போலருக்கு. இது வரைக்கும் சல்லிக்கல்ல எறிஞ்ச சாமி, இப்ப ஒரு பாறையவே உருட்டி விடுது.

பொழைச்ச பொழப்புக்கு ஒரே மிச்சம்னு எந்த மகன நெனச்சாளோ செஞ்ச சத்தியத்த செயிச்சுக்காட்ட மலபோல வந்துட்டான்னு எந்த மகன நம்புனாளோ அந்த மகனுக்குப் புத்தி கோணிப்போச்சு போக்கு மாறிப்போச்சு. வாக்கப்பட்டு வந்த ரெண்டே வருசத்துல முக்காத்துட்டெடுத்து முந்தானையில முடியிற மாதிரி திம்சு அவன முடிஞ்சுபுட்டா முடிஞ்சு.

கைநெறையச் செலவுக்குத் துட்டு பைநெறைய நொறுக்குத்தீனி தூக்குவாளி மூட முடியலேன்னு முணு முணுக்குற அளவுக்குக் கறிச்சோறுன்னு குடுத்துக் குடுத்து வேல வெட்டியில்லாத வெடலப்பயல மார்லபோட்டுத் தாலாட்டித் தாலாட்டித் தலக்கிறுக்குப் புடிக்க வச்சுட்டா திம்சு.

"ஆத்தா ஒரு அவத்தச் சிறுக்கி. நல்லத்தா நீதானத்தா நல்ல ஆத்தா." அவன் வாயாலயே ஆத்தாள வைய வச்சு வீட்டுக்குப் போகாம அவன் வெளித்தங்கல் பண்ற மாதிரி பண்ணிப்புட்டா.

"மகனே அழகுசிங்கம்... நீ ஒங்க அப்பன் வீட்டுக்கு வரக்கூடாது. அப்பனுக்கு ஒன்னியக் கண்டா ஆகாது. ஒங்க ஆத்தா வீட்டுக்கும் நான் எதையும் குடுத்துவிட முடியாது ஒங்க ஆத்தாளுக்கும் ஆகாது. அதனால காசோ கறிக்கொழம்போ நான் பவுனு வீட்ல குடுத்திடறேன். அவகிட்ட வாங்கிக்கடா மகனே."

மூக்குல ஈ ஓட்டுன ஆட்டுக்கெடா மாதிரி அவன் அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டிச் சரின்னுட்டான், ஆத்தா கூடக் காய் விட்டுட்டு திம்சு கூடப் பழம் ஆகிட்டான்.

தாய் மீனுக்குக் குஞ்சுமேல ஆச குஞ்சு மீனுக்குப் புழுமேல ஆச. என்ன பண்றது? ஆத்துக்கு மீன் புடிக்கவும் போவான் அழகுசிங்கம். தூண்டி போட்டா மீன் சேராது. வல போட்டாலும் மீன் மாட்டும்னு சொல்ல முடியாது. வேட்டைக்குப் போனா வெறுங்கைய வீசியா வீடு வாரது? மீன் புடிக்க ஒரு குறுக்கு வழியக் கண்டு புடிச்சான் அழகுசிங்கம். ஆத்த மறிச்சான் மணலக் குமுச்சுக் குமுச்சு, மேல ஒரு அண கட்னான் கீழ ஒரு அண கட்னான். அண ஒடை யாம இருக்க ஓரமா ஒருபக்கம் வழி ஒதுக்கி விட்டான். இப்ப ரெண்டு அணைக்கும் மத்தியில தேங்குன தண்ணியில வெட்டி வெட்டி அமுக்குறானய்யா கொடிக்கள்ளிய.

இந்தக் கொடிக்கள்ளி இருக்கே கெட்ட கழுத. கொடிக் கள்ளிப்பால் வெசம். கொடிக்கள்ளிய அமுக்கித் தண்ணிக்கு நஞ்சூட்டி விட்டுட்டான் நாசமாப் போற பய. செத்தவடத்துல கொடிக் கள்ளி நெடி தாங்காம செத்து மெதக்குதுக பொடி மீனெல்லாம் தண்ணிக்கு மேல வந்து அரை மயக்கத்துல அல்லாடுதுக பெரிய மீனெல் லாம். பாத்துக்கிட்டேயிருக்க, தண்ணி தெரியாம மீனா மெதக்குது. அம்புட்டுத்தான் வேட்டிய விரிச்சு அரிச்சுப் புட்டான் அரிச்சு. ஆனா புடிச்ச மீன்ல பாதிதான் கருவாச்சி வீட்டுக்குப் போச்சு. மிச்சம் எங்க போச்சுன்னு தெரியல.

மொச வேட்டைக்கும் போய் பழகிட்டான் அழகு சிங்கம். அந்த வருசம் நல்ல மழை. பொதரெல்லாம் மண்டி மதாலிச்சுக் கெடக்குதுக காமக்கா பட்டிக்கரடெல்லாம். ஈச பறக்குற மாதிரி மொச பறக்குதுன்னு கேள்வி. நீட்டமா ஒரு நூல் கயிறு வாங்குனான் அழகுசிங்கம். அதுல ஒரு முப்பது சுருக்குப் போட்டு நூல்வளையம் பின்னிப் பின்னி ஒரு மொசக்கண்ணி பண்ணி முடிச்சான். கரட்டுக்குப் போனான் மசங்க. காரா முள்ளும் எலந்த முள்ளுமா வெட்டி வெட்டி, மொசக்கூட்டம் மேய வார வழியில வேலி கட்டிப் புட்டான். மொசக் கண்ணிய விரிச்சான் வேலியோரமா.

வேலியும் தாண்டாதாம் வெட்டுக் கெணத்துத் தண்ணியும் குடிக்காதாம் மொச!

தலக்கோழி கூப்புடப் போயிப் பாத்தா முப்பது வளையத்துல ஏழு மொச விழுந்து கழுத்துல சுருக்குப் பட்டுக் காலுசுராக் கெடக்குதுக.

விழுந்த ஏழு மொசல்ல மூணுதான் வீடு வந்து சேந்துச்சு நாலக் காணோம். அப்பத்தான் ஒரு சேதி அரசபுரசலா வருது கருவாச்சி காதுக்கு.

"பய பவுனு வீட்லயே கெடக்கானே... என்னா ஏதுன்னு பாரு"ன்னா பவளம்.

"பவுனுன்னு பேரு வச்சாப் பவுனாயிருமா? பித்தளையாக்கூட இருக்கும். கருப்பட்டியிலயும் கல்லிருக்குமாத்தா... என்னான்னு பாரு." தலவலிச்சாக் காதுல மருந்து ஊத்துறமாதிரி சுத்தி வளைச்சுப் பேசுனா வைத்தியச்சி.

தெப்பத்துப்பட்டியில வாக்கப்பட்டுத் தீத்துட்டு ஆறு மாசக் கைப்பிள்ளையோட வீட்ல வந்து இருக்கிறவ பவுனு. அப்பன் ஆத்தா கெடையாது. அப்பத்தா மட்டுந்தான். அவளும் சீக்காளி. கட்டில அவ விடமாட்டேங்கிறா கட்டிலு அவள விட மாட்டேங்குது. அழகுசிங்கத்துக்குத் திம்சு சொல்லிவிடறது அந்த வீட்டுக்குத்தான்.

பவுனு நெறம் பவுனு இல்லேன்னாலும் அம்சமான எளங்கறுப்பு. அவ கண்ணச் சிமிட்டாமப் பாத்தான்னா கலவரமாகிப் போகும், மீச தொங்கிப்போன கெழவனுக்கும். ஊடமாடப் போயி வந்த பய அங்கயே கெடையாக் கெடக்க ஆரம்பிச்சுட்டான். அவ கைப் பிள்ளையக் கக்கத்துல வச்சுக்கிட்டே திரிக்கிறது, மாவாட்டறது, ஒரல்லபோட்டு ஒலக்க குத்திக் குடுக்கறதுன்னு ஆரம்பிச்சுட்டான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 3:58 am

கைப்பிள்ளையக் குடுக்கவும் வாங்கவுமா இருக்கிறப்ப, தெரிஞ்சு பட்டுச்சோ, தெரியாமப் பட்டுச்சோ, அதுல ஒரு பொறி பறந்துச்சு. திரும்ப அந்தப் பொறி வேணுமேன்னு அவனுக்கு மனசு தீயா எரியுது. அவனக் காங்கலேன்னா அவளுக்கும் புத்திக்குள்ள பூரான் ஊருது. மீன வெண்டைக்காயா நெனச்சு அறுக்கிறா வெண்டைக்காய மீனா நெனச்சு ஒரசுறா. அவகளுக்குள்ள வெறும் வெளையாட்டுத்தானா வேற வெனையும் இருக்கானு ஒண்ணும் துப்புக் காண முடியல. தண்ணியில இருக்கிற மீனு குடிச்சதக் கண்டது யாரு..? குடியாததக் கண்டது

யாரு..? வெளங்கல.

ஒரு முடிவுக்கு வந்துட்டா கருவாச்சி.

சமஞ்ச பிள்ள சமைச்ச சோறு
வெளைஞ்ச கருது கறந்த பாலு
செத்தபொணம் பட்ட கடன்
இதுகளயெல்லாம் சட்டுன்னு சோலிய முடிச்சுப்புடணும்
தள்ளிப்போட்டாத் தப்பாப் போயிரும்.


ஆத்தா பெரியமூக்கி எப்பவோ சொன்னது மூளையில மொளகா வச்சதுமாதிரி இப்ப ஒறைக்குது.

மொதலக்கம்பட்டிக்குத் தன் அண்ணந்தம்பி வகையறாவுக்கு ஆள் சொல்லிவிட்டுப் பொண்ணும் பாத்துட்டா. மொதலக்கம்பட்டியில அவ சித்தப்பன் மகன் பேத்தி ஒருத்தி இருக்கா. செந்துருக்கம் செந்துருக்கம்னு பேரு அவளுக்கு. வயசுக்கு வந்துட்டாலும் இடுப்பெலும்பு முத்தாத எளம்பொண்ணு. ஆனா, சும்மா சொல்லக் கூடாது. சூட்டிகையான பிள்ள. எம்பது ஆடுகள அவளாப் பத்தி அவளா மேச்சு அவளாத் தொழுவுல அடைக்கிறவ.

அந்த ஊர்லயே பெரும்படிப்பு படிச்சதும் அவதான். மூணாவது முடிச்சவ. அது வேறொண்ணுமில்ல. பள்ளிக்கூடத்துல சேக்கலாமா வேணாமான்னு அவுக அப்பன் யோசிச்சுக்கிட்டே இருந்ததுல, வயசு ஒம்போது ஆகிப்போச்சு பிள்ளைக்கு. என்னொண்ணுக்கும் போயிட்டு வரட்டும்னு ஒண்ணாவதுல சேத்தாக ஒம்போது வயசுல. ரெண்ட முடிக்க வயசு பன்னெண்டு. மூணாவது முடிக்க வயசு பதினஞ்சு ஆகிப்போச்சு. முழுப்பரீட்சை லீவுல வயசுக்கு வந்திருச்சு பிள்ள. தலைக்கும் பள்ளிக்கூடத்துக்கும் தண்ணி ஊத்தி முழுகிவிட்டுட்டாக.

இன்னைக்கி எழுத்துக்கூட்டிப் படிச்சதெல்லாம் மறந்துபோனாலும், கையெழுத்துப் போடறத மறக்கல பிள்ள. பொழைக்கத் தெரிஞ்ச பொண்ணாப் போனா. ரெங்கசமுத்திரம் நாயக்கருக்குச் சாணிவித்துச் சாணிவித்தே சங்கிலி வாங்கிப்புட்டா. தோள்பட்டை சதை வைக்காமத் தொத்தலாக் கெடந்தாலும் காரியம் பாக்குறதுல வீரியமா இருந்தா செந்துருக்கம்.

அவுக வீட்ல ஒரு சல்லிக்கட்டுக்காள வளத்தாக. சும்மா ஆயிரங்கால் மண்டபத் துல நாலு காலக் களவாண்டு வந்த மாதிரி காலு நாலு. ஒரு திண்ணையத் தூக்கி முதுகுல வச்சமாதிரி திமிலு. கருப்பணசாமி கத்திகள வாங்கித் தலையில நட்டு வச்சமாதிரி ரெண்டு கொம்பு. அலங்காநல்லூர் சல்லிக்கட்ல அந்தக் கொம்புல சுத்திவிடுவாக தங்கச் சங்கிலிய அணஞ்சவன் எடுத்துக் கன்னு. இதுவரைக்கும் வாடி வாசல்லயிருந்து வாரபோதே கொம்புல கொடலச் சுத்தி வந்திருக்கே தவிர, சங்கிலிய விட்டுட்டு வந்ததில்ல.

அப்பேர்ப்பட்ட காளைய தன் இடுப்புல கயிறு கட்டி மேய்க்கிறவ இவ. இப்பேர்ப்பட்டவ அழகுசிங்கத்துக்கு வாக்கப் பட்டுப் போறேன்னு வாக்கும் கொடுத்துட்டா. சொந்தபந்தத்த அனுசரிச்சு வீட்டாளுகளும் சரி சொல்லிட்டாக. மொதலக்கம்பட்டிக்கு நடையா நடந்து "வெள்ளிக்கிழம மாப்ள வீடு பாக்க வாங்க"ன்னு சொல்லிட்டு வந்துட்டா கருவாச்சி.

வியாழக்கிழமை ராத்திரி.

தட்டுல விழுந்த கேப்பக் களியத் தலயப் பிச்சு, கடைஞ்ச மகிழிக் கீரையில முக்கி முழுங்கிக்கிட்டே மொனகுறான் அழகுசிங்கம். "இன்னைக்கும் கீரையும் கேப்பக்களி யும் தானா? சாணியத் தொட்டு மண்ணத் திங்கற மாதிரி இருக்கு. என்னைக்கு நல்லசோறு திங்கப் போறனோ?"

"எத்தன நாளைக்குடா மகனே எங் கைக் கஞ்சி குடிக்கப் போற? ஒனக்குன்னு ஒல வைக்க ஒருத்தி வராமலா போயிரப் போறா?"

"வாரப்ப வரட்டும். அதுவரைக்கும் ஒழுங்காக் கஞ்சி காச்சி ஊத்து."

"என்னைக்கோ எதுக்கு வரணும்? நாளைக்கே வந்தா ஆகாதா?"

"விட்டா நாளைக்கே பொண்ணு வீடு பாக்கப் போகலாம்னு சொல்லுவ போலிருக்கே..."

"பொண்ணு வீடு பாத்தாச்சு மகனே. நாளைக்கு மாப்ள வீடு பாக்கத்தான் வாராக."

அவ சொல்லி முடிக்கல வாய்க்குக் கொண்டுபோன களியத் தட்ல அடிச்சான் தட்ல இருந்த களியத் தூக்கிச் சுவத்துல அடிச்சான். களி ஒட்டிக்கிருச்சு சுவத்துல கீரை ஒழுகுது தரையில. அதத் தின்ன வந்த பூனமேல அவன் தண்ணிச் சொம்ப எடுத்து எறியவும், நான் இன்னிக்கிருந்து விரதம்னு ஒரே ஓட்டமா ஓடிப் போயிருச்சு பூன.

"எனக்குச் சொத்துச் சேத்து வச்சிருக்கியா? தோப்பு துரவு இருக்கா? இல்ல வேல வெட்டி பாக்குறேனா? ஒழக்குக்கே தானியமில்லாத வீட்ல மரக்கா எதுக்கு மரக்கா?"

"சொன்னாக் கேளப்பா. ஒனக்கு மாலையும் வேலையும் ஒண்ணா வரப்போகுதுடா மகனே. ஒனக்குப் பொண்ணும் கொடுத்து கட்டவண்டி யும் ஒருசோடி மாடும் தாராக மொதலக்கம்பட்டி ஆளுக. விடிய்ய வீடுபாக்க வாராக சரி சொல்றா தங்கம்."

"என்னா அவசரம் கல்யாணத் துக்கு? ஏன் கால்ல வெந்நி ஊத்தி அலையறவ?"



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 3:58 am

"மகனே ஒன்ன வச்சுத்தாண்டா உசுர வச்சிருக்கேன். தீப்புடிச்ச வீட்ல வெடக்கோழி சிக்குன மாதிரி எதிரிக்கு மத்தியில பொழைச்சுக் கிட்டிருக்கோம்டா. ஒலகத்த செயிச்சு ஒன்கிட்டக் குடுக்க சக்தியில்லடா. ஒன்னவச்சு உலகத்த செயிக்க சக்தி இருக்குடா. நீயும் எம்பேச்சக் கேக்காமத் தெரிஞ்சதப் பாருன்னு திரும்பிட்டேன்னு வச்சுக்க... ஒன்னியப் பெத்தும் பிரயோசனமில்லடா."

"பெத்ததுதான் என்னியக் கேக்காமப் பெத்த. கல்யாணமாவது என்னியக் கேட்டு பண்ணலாமில்ல..?"

அவன் கேட்ட அந்த ஒத்தக் கேள்வியில இத்து இடுப்பொடிஞ்சு புத்தியில கத்தி குத்தித் தத்தித் தடுமாறித் தலசுத்திக் குத்தவச்சு நெஞ்சப் புடிச்சு நெலப்படியில உக்காந்து போனா கருவாச்சி. என்னியக் கேக்காம ஏன் பெத்தேன்னு கேட்டுப்புட்டானே பெத்த பய. அவனப் பெத்துப்போட்ட காவக் குடிசை ஞாபகம் வந்திருச்சு.

சீலயத் தெரச்சுக்கிட்டுப் பிள்ளையப் பெத்தெடுக்க அத்துவானக் காட்ல அனாதையா மண்டியிட்டது, வலி தாங்காமத் தொங்கி அந்து விழுந்த சொரக்குடுக்க, பிள்ள பிதுங்கி வெளிய வந்து விழுகவும் ஆணா பெண்ணான்னு எட்டிப்பாத்த ஆச தொப்பூழ்க் கொடி அறுத்த பண்ணருவா, எல்லாம் படபடபடன்னு ஞாபகம் வரவும்...

பொல பொல பொலன்னு அழுதுட்டா கருவாச்சி. ஆத்தா கண்ணீரப் பாத்ததும் கல்லுமனசு கரையுது மகனுக்கு.

"சரி... என்னிய என்ன செய்யச் சொல்ற சொல்லு" உணர்ச்சியில்லாம வார்த்தையையும் ஒரே தொனியில சொல்றான் அழகுசிங்கம். கண்ணத் தொடச்சுக்கிட்டா கருவாச்சி. பூட்டுனாத் தொறக்க முடியா துன்னு தொறந்தே கெடக்கிற பழைய தகரப்பொட்டியிலருந்து, சந்தையில தச்சு வாங்கிட்டு வந்த கட்டம்போட்ட சட்டையையும் புது வேட்டியையும் எடுத்து நீட்டினா.

"நாளைக்கிப் புதுசு கட்டிப் புதுமாப்ளையா இருடா மகனே."

இங்கிட்டுத் திரும்பிக்கிட்டு எடது கையில வாங்கிக்கிட்டான், ஆத்தா குடுத்தத. விடியுது வெள்ளிக்கிழமை.

இம்புட்டு ஆளுக கூடி வருவா கன்னு எதிர்பார்க்கல கருவாச்சி.

செந்துருக்கமும் அவ மேய்க்கிற ஆடுமாடுகளும் தவிர, எல்லாம் வந்துட்டாக. பவளம், கனகம், வைத்தியச்சி, உருமாப்பெருமாத் தேவரு, காவக்காரச் சக்கணன் இப்படி உள்ளூருச் சனம் வேற ஒண்ணுகூடிப் போச்சு.

மாப்ளைய மட்டும் காணோம்.

"எங்க... எங்க"ங்கிறாக எல்லாரும் எங்கயும் காணோம்.

எல்லாருக்கும் பலகாரம் காப்பித்தண்ணி குடுக்கச் சொல்லிட்டு, முந்தானைய இழுத்து இடுப்புல சொருகிக் கிட்டு, தெருவுல எறங்கித் தேடுறா பாவம்!

"யாத்தா"! எம் பிள்ளையப் பாத்த?"

"இல்லையே"

"யண்ணே! அழகுசிங்கத்தப் பாத்தியா?"

"பாக்கலையே தாயி."

சந்தையில சாமான் வாங்கித் தலச் சொமயோட வாரான் முத்துக்கருப்பு.

"யப்பா முத்துக்கருப்பு! எம் மகன் அழகுசிங்கத்தப் பாத்த?"

தலச் சொமையோட கழுத்த வேறபக்கம் திருப்பி, "பாத்தேன்"னு சொன்னான் முத்துக்கருப்பு.

"எங்கப்பா பாத்த எம்பிள்ளைய?"

"சொன்னா வருத்தப்படுவ மதினி."

"சொல்லப்பா."

"அம்புலிப்புத்தூர் ஓடைமேட்டுல"

"அம்புலிப்புத்தூரா?"

கண்ணு பஞ்சடைஞ்சு, நெஞ்சப்புடிச்சு இத்த மண்சொவரு இடிவிழுந்து சரியிற மாதிரி, மண்தரையில மட்டமல்லாக்கா விழுந்து போனா கருவாச்சி.

அம்புலிப்புத்தூர் இருக்கே... அந்தக் காலத்துல அது ஒரு விவகாரமான ஊரு. சுத்து வட்டாரத்துல இருக்கிற மைனர்களுக்கெல்லாம் அது மாமியார் ஊரு. மதுரை ராமநாதபுரம் வரைக்கும் அம்புலிப்புத்தூர் பேரச் சொன்னா எளந்தாரிக சிலுத்துக்கிருவாக கெழடுக சிரிச்சுக்கிருவாக.

அந்த ஊர்ல ரெண்டு மூணு தெருவுக்கு அது மட்டும்தான் தொழிலு. கோடீஸ்வர சமீன்தார்ல யிருந்து கூலிக்காரன் வரைக்கும் கொடுப்பினை உள்ள ஆளுக்குக் குடுத்துவச்சிருக்கு துட்டுக்குத் தக்கன. அங்க போன ஆளுகள்ல பல பேரு வீடோ வேட்டியோ தொலைக்காம வந்ததில்ல.

அம்புலிப்புத்தூருக்குப் போயிட்டான் அழகுசிங்கம்னு கேள்விப்பட்டதும் குடி கெட்டுப்போச்சேன்னு கும்பி கருகிப்போனா கருவாச்சி. மாப்ள வீடு பாக்க வந்தவுக போயிட்டு வாரேன்னு போயிட்டாலும் விடிய விடிய ஒறக்கம் வரல விடிஞ்சும் அவன் வரல. கஞ்சிப் பொழுதுக்கு வெளியேறிட்டா கருவாச்சி வெயிலேற. அம்புலிப்புத்தூர் போகணும்னா அஞ்சாறு மைலுக்கு ஒரு முள்ளுக் காடு கடந்தாகணும். காடு வங்காடு கையில ஈரப் பசை காஞ்சுபோன அன்னைக்கிக் கடவுள் படைச்சது.

வைகாசி வெயிலு தகதகதகன்னு தகிக்குது நேரம் போகப் போக விரியன்பாம்பு வெசம் மாதிரி ஏறுது. எட்டுமாத்தி எட்டு வைக்கிறதுக்குள்ள குதிகால் கொதிக்குது. கண்ணுக்கு எட்டுன மட்டும் காஞ்ச காடு. சின்னப் புள்ள சீப்பெடுத்து ஆத்தாளுக்கு வகிடெடுத்துவிட்ட மாதிரி கோணல் மாணலா ஒரு ஒத்தையடிப் பாதை. ஒத்தையடிப் பாதை முடியிற தூரத்துல வெயில்ல உருகி ஒழுகுது அடிவானம்.

சல்லிக்கல்லு சரளக்கல்லு கத்திக்கல்லு கருங்கல்லு குண்டாங்கல்லு கூழாங்கல்லுமாக் கெடக்குற ஒத்தையடிப் பாதையில ஒத்தையில போறாளய்யா கருவாச்சி சீதையைத் தேடி அனுமாரு போறமாதிரி தாசி வீட்டுக்கு மகனத்தேடி. பாதையோரமா வளைஞ்சு வளந்திருந்த வேலாங்கொப்பு முள்ளண்ணு அவ மூஞ்சியில ரத்தப் பசை இருக்கான்னு மோந்து பாத்துட்டுப் போகுது. ஒத்தையடிப் பாதை ரெண்டு பக்கமும் அரை மைல் நீளத்துக்கு அடச்சு நிக்கிது சில்லிமுள்ளு. மீனுகளையெல்லாம் படைச்சுக் குடும்பத்தோட சமுத்திரத்துல விட்ட மாதிரி முள்ளுகளையெல்லாம் படைச்சு இங்கயே கெடங்கன்னு விட்டுட்டாரு போலருக்கு கடவுளு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக