புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
11 Posts - 38%
heezulia
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
6 Posts - 21%
i6appar
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
1 Post - 3%
Jenila
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
88 Posts - 36%
i6appar
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்


   
   

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:33 am

First topic message reminder :

''குடும்ப விளக்கு'' எழுதிய 1942 ஆம் ஆண்டிலே வெளிவந்த இசையமுது, முதற்பகுதியில் ''ஆண் உயர்வென்பது பெண் உயர் எனபதும் நீணிலத் தெங்கிலும் இல்லை''என பாவேந்தர் உறுதியிட்டு கூறியுள்ளார்.

சமுதாயக் கருத்து மாற்றத்துக்கு வித்திட்ட பாவேந்தர், மகளிர் உரிமைப் போராட்டத்திற்கும் வித்திட்டவர்.


[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:52 am

பகட்டு



"பகட்டா ளர்கள் பலபேர் எப்போ(து)

ஏற்படு வார்கள்" என்றான் இளையோன்.



"செல்வம் இல்லார் செல்வர் போலவும்

அழகே இல்லார் அழகியர் போலவும்

காட்டிக் கொள்ளக் கருதும் நிலைமை

ஏற்படும் நாளில் ஏற்படு வார்கள்."

என்று கூறினாள் இளநகை முகத்தினாள்.

"அந்நிலை எப்போ ததையுரை" என்றான்.

"வஞ்சமும் பொய்யும் வளர்ந்தால்" என்றாள்.

அழகிய வஞ்சமும் வேண்டாம்

பழையஊர் நன்றெனப் பகர்ந்தான் பிள்ளையே.



தலைவி பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளை எதிர்பார்த்தாள்

ப·றொடை வெண்பா



செங்கதிரை மேற்குத் திசையனுப்பி மாணவர்கள்

பொங்கு மகிழ்ச்சியினால் வீடுவரும் போதாக



வீட்டுக் குறட்டில்நின்ற நற்றலைவி வேல்விழிகள்

பாட்டையிலே பாய்ச்சிப் பழம்நிகர்த்த தன்மக்கள்

ஏனின்னும் வாரா திருக்கின்றார் என்றெண்ணித்

தேனிதழும் சிற்றிடையும் ஆடா தசையாது



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:52 am

அன்னை மகிழ்ச்சி



நின்றாள்; சிரித்தாள்; நிலை பெயர்ந்தாள்; கானத்து

மன்றாடும் மாமயிலாள் "வாரீர்" என அழைத்தாள்.



உள்ளம் பூரித்தாள் உயிரோ வியங்கள்நிகர்

பிள்ளைகள் வந்தார்கள் பேச்சோடும் பாட்டோடும்!



வீட்டாரும் விருந்தினரும்



வீடு மலர்க்காடு; விருந்தினரும் வீட்டாரும்

பாடுகளி வண்டுகள்தாம்; பார்க்கத் தகும்காட்சி!



எல்லாரும் ஒன்றாய் இருந்து மகிழ்ந்துள்ளம்

வல்லார் இலக்கியத்தை வாரி அருந்துதல்போல்



சிற்றுணவுண் கின்றார்கள் தித்திக்கும் நீர்பருகி

முற்றத்தில் கையலம்பி முன்விரித்த பாய்நிறையச்



சென்றமர்ந்தார்! மூத்தார் அடைகாய் சிவக்கவே

மென்றிருந்தார்! நல்லிளைஞர் மேலோரின் வாய்பார்த்து



மொய்த்திருந்தார்! வீட்டில் விருந்துவந்த மூத்தவரோ

"வைத்துள்ளீ ரேஅந்த மாணிக்கப் பொட்டணத்தைக்



கொட்டிக் குவித்திடவும் மாட்டீரோ இப்போது!

கட்டாணி முத்தங்கள் காட்சிதர மாட்டாவோ!



பாட்டொன்று தின்னப் பழமொன்று தாரீரோ!

கேட்கின்றேன் கண்களல்ல! பச்சைக் கிளிகளல்ல!



வீட்டின் தலைப்பிள்ளாய் வேடப்பா பாடப்பா

வாட்டுளத்தில் இன்பத்தை வாரப்பா" என்றுரைக்க



மெத்த மகிழ்ச்சியுடன் வேடப்பன் பாடுவதாய்

ஒத்துத் துவங்கினான் ஒன்று:



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:52 am

வேடப்பன்



திரவிடம் நமது நாடு-நல்ல

திரவிடம் நமது பேச்சு!



திரவிடர் நாம் என்று களித்தோம்!

திரவிடர் வாழ்வினில் துளிர்த்தோம்!

உரையிலும் எழுத்திலும் செயலிலும் பிறரின்

உருவினை முழுமையும் ஒழித்தோம்!



செத்தபின் தன்புகழ் ஒன்றே

சிறந்திட வேண்டுதல் கருதி

ஒத்தவர் அனைவரும் எனச்செயல் செய்யும்

உயர்திர விடரின் குருதி!



மாவரசர்



வேடன் தமிழ்க்கண்ணி வீசி நமதுளமாம்

மாடப் புறாவை மடக்கிக் கவர்ந்ததற்கு

நன்றி எனவுரைத்தார் மாவரசர். நற்றலைவி

ஒன்றுபா டென்றாள் உவந்து:



நகைமுத்து



கலையினிற் பெண்ணே இலகு-பல்

கலையினிற் பெண்ணே இலகு!

நிலையினில் உயர வேண்டும் பெண்ணுலகு!

மலைவிளக் காகுதல் வேண்டும்! நீ

மலைவிளக் காகுதல் வேண்டும்!£

புலமைகொள் கீழ்நிலை தனையுலகு தாண்டும்!



என்று நகைமுத்தாள் பாடினாள்! என்ன இன்பம்

என்று மகிழ்ந்தாள் எழிற்றலைவி! மற்ற

இளையார் தலைக்கொன் றியம்பிடுவார், யாரும்

களையாது காதுகொடுத் தார்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:54 am

தென்னை

அறுசீர் விருத்தம்


நாவரசு



தலைவிரித்தாய் உடல்இளைத்தாய் ஒற்றைக்கா லால்நின்றாய் தமிழ்நாட்டார்க்குக் குலைவிரித்துத் தேங்காயும் குளிரிளநீ ரும்கூரைப் பொருளும் தந்தாய் கலைவிரித்த நல்லார்கள் தாம்பசித்தும், பிறர்பசியைத் தவிர்ப்ப தற்கே இலைவிரித்துச் சோறிடுவார் என்பதற்கோர் எடுத்துக்காட் டானாய் தெங்கே!



பனை



வீட்டுப்பிள்ளை(க)



ஊர்ஏரிக் கரைதனிலே என்னிளமைப்

பருவத்தில் இட்ட கொட்டை

நீரேதும் காப்பேதும் கேளாமல்

நீண்டுயர்ந்து பல்லாண் டின்பின்

வாராய்என் றெனைஓலை விசிறியினால்

வரவேற்று நுங்கும் சாறும்

சீராகத் தந்ததெனில், பனைபோலும்

நட்புமுறை தெரிந்தா ருண்டோ?



மா



வீட்டுப்பிள்ளை(உ)



காணிக்குப் புறத்தேஓர் பதிவிட்ட

மாநட்டுக் கண்கா ணித்துக்

கேணித்தண் ணீர்விடுத்தேன் பின்நாளில்

அதன்நிழலின் கீழ்இ ருந்தேன்

மாணிக்க மாம்பழந்தான் மரகதத்தின்

இலைக்காம்பில் ஊஞ்ச லாடச்

சேண்எட்டுக் கோலெடுத்தேன் கைப்பிடித்தேன்

வாய்வைத்தேன் தேன்தேன் தேனே.



பலா




நாவரசு




பால்மணக்கக் கிள்ளுகின்ற பச்சையிலை

தங்கக்காம் படர்மி லார்கள்

வான்மணக்க உயர்ந்தகிளை அடர்ந்தபலா

மரத்திற்சிற் றானைக் குட்டி

போல்மணக்கும் பலாப்பழங்கள் அண்ணாந்த

பொழுதினிலே புதுமை கொள்ள

மேல்மணக்கும் கிளையினிலே, நடுமணக்கும்

வேர்க்குள்ளும் மணக்கும் நன்றே.



மாதுளை



வீட்டுப்பிள்ளை(க)



குவிப்புடைய விற்கோல்போல் புதல்எடுத்த

கோடெல்லாம் பூவும் பிஞ்சும்

உவப்படையச் செய்கின்ற மாதுளையின்

உதவியினை என்ன சொல்வேன்?

சிவப்புடைய மணிபொறுக்கிச் செவ்வானின்

வண்ணத்துச் செம்பில் இட்டுச்

சுவைப்பார்கள் எடுத்துண்டால் சுறுக்கென்று

தித்திக்கச் செய்த தன்றோ!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:54 am

வாழை



வீட்டுப்பிள்ளை(உ)



தாயடியில் கன்றெடுத்துத் தரையூன்றி

நீர்பாய்ச்சத் தளிர்த்த வாழைச்

சேயடியில் காத்திருந்தால் தெருத்திண்ணை

போற்பெரிய இலைகள் ஈயும்;

காயடியில் பெரும்பூவும் கறிக்கீயும்;

கடைந்தெடுத்த வெண்ணெ யோடும்

ஈயடித்தேன் கலந்துருட்டிப் பழத்தின்நற்

குலையீயும் இந்தா என்றே.




களாச் செடி



நாவரசு



முட்கலப்பும் சிற்றிலையும் கோணலுறு

சிறுதூறும் முடங்கி மண்ணின்

உட்புகுபூ நாகங்கள் மொய்த்திருத்தல்

ஒத்துபுதற் களாவே நீ,ஏன்

வெட்கமுற்று வெண்மலர்ப்பல் வெளித்தோன்ற

நிற்கின்றாய் எளிய நண்டின்

கட்சிறிய கனியெனினும் சுவைபெரிது

சுவைபெரிது கண்டோ மன்றோ!




கொய்யாப் பழம்



வீட்டுப்பிள்ளை(க)



காட்டுமுயற் காதிலையும், களியானைத்

துதிக்கைஅடி மரமும் வானில்

நீட்டுகிளைக் கொய்யாதன் நிரல்தங்கத்

திரள்பழத்தை நம்கண் ணுக்குக்

காட்டுகின்ற போதுகொய் யும்பழம்என்

போம்கையில் கொய்து வாயில்

போட்டுமென்ற போதேகொய் யாப்பழமென்

போம்பொருளின் புதுமை கண்டீர்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:55 am

அறுசீர் விருத்தம்



விருந்தினர் மக்கள் தாமும்

வீட்டினர் மக்கள் தாமும்

பொருந்திடு கனிப்பாட் டுக்கள்

புகல,மா வரசர் தாமும்

மருந்துநேர் மொழிகொள் நல்ல

மலர்க்குழல் அம்மை யாரும்

திருந்திய தலைவி தானும்

தேனாற்றில் உளம்கு ளித்தார்.



மாவரசர்



தலைக்கொன்று பாட எண்ணித்

தொடங்கினீர் உளம்த ழைத்தே

கலைக்கொன்றும் கணக்குக் கொன்றும்

கழறிட நேர்ந்த தன்றோ!

இலைக்கொன்றும் வைத்த மற்ற

இன்சுவைக் கறிப டைக்க

மலைக்கின்ற போதும் அன்போ

வழங்குக என்று கூறும்.



'மலர்க்குழ லாளும் நானும்

கடைக்குப்போய் வருதல் வேண்டும்

விலைக்குள பொருள்கள் வாங்கி

விரைவினில் மீள்வோம்; வீட்டுத்

தலைவரை, என்றன் அன்பைக்

காணவோ தணியா ஆவல்

அலைத்தது நெஞ்சே' என்றார்

மாவர சான நல்லார்.



நன்றென்று தலைவி சொன்னாள்;

நாவர சென்னும் பிள்ளை

இன்றென்னை உடன ழைத்துச்

செல்வீர்கள் அப்பா என்றான்;

என்றென்றும் உன்வ ழக்கம்

இப்படி யென்று கூறிச்

சென்றனர் பெரியார்; பையன்

சென்றனன்; தாயும் சென்றாள்.



வேடப்பன் தனிய றைக்குள்

இலக்கியம் விரும்பிச் சென்றான்;

கூடத்தில் தம்பி தங்கை

கதைபேசிக் கொண்டி ருந்தார்;

மாடத்தை நடையை மற்றும்

வாய்ப்புள்ள இடங்கள் தம்மைச்

சோடித்து மணிவி ளக்கால்

சோறாக்கத் தலைவி சென்றாள்.



நறுமலர்க் குழலாள் இன்ப

நகைமுத்தாள் ஒருபு றத்தில்

சிறுவர்பால் எழுது கோலும்

சிறுதாளும் கேட்டுப் பெற்று

நிறைமகிழ் நெஞ்சு கொள்ள

நினைவோஓர் உருவைக் கொள்ள

உறுகலை அனைத்தின் மேலாம்

ஓவியம் வரைந்தி ருந்தாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:56 am

எண்சீர் விருத்தம்



வேடப்பன்



திறந்திருந்த சுவடியிலே வேடப் பன்தன்

திறந்தவிழி செல்லவில்லை; இதுவ ரைக்கும்

இறந்திருக்கும் மங்கையரி லேனும் மற்றும்

இனிப்பிறக்கும் மங்கையரி லேனும் அந்த

நிறைந்திருக்கும் அழகுநகை முத்தாள் போன்றாள்

இல்லையென நினைக்கின்றேன்! பேசும் பேச்சால்

சிறந்திருக்கும் செந்தமிழ்க்கும் சிறப்பைச் செய்தாள்

சிற்பத்திற் பெரும்புரட்சி செயப் பிறந்தாள்.



காணுதற்குக் கருவியோ கயற்கண் இன்பக்

காட்சிதரும் பொருளன்றோ! வீழ்ந்தார் வாழ்வைப்

பூணுதற்கே இதழோரப் புன்ன கைதான்!

பூவாத புதுக்காதல் பூக்க நோக்கி

ஆணினத்தைக் கவர்கின்றாள்! நிலாமு கத்தாள்;

தனியழகை அணிமுரசம் ஆர்க்கின் றாளே!

பேணுதற்குத் திருவுளங்கொள் வாளோ! என்றன்

பெற்றோர்பால் இல்லைஎனைப் பேணும் பெற்றி!



அவள்மேற் காதல்



அடுக்கிதழில் நகைதோன்றும் போதில் எல்லாம்

அறங்காக்கும் அவள்நெஞ்சம் வெளியில் தோன்றும்;

மடுப்புனலைப் புன்செய்உழ வன்பார்த் தல்போல்

மங்கைஎனை நோக்குகின்றாள் எனினும், வாழ்வில்

அடுத்திருக்கும் கருத்துண்டோ! யாதோ! ஐயோ!

அவள்எனக்குக் கிடைப்பாளோ! துயர்கொள் வேனோ!

எடுத்தடிவைப் பாள்இடையோ அசையும் வஞ்சி

இன்பக் களஞ்சியம்நல் லழகின் வெற்றி.



பொழிகதிரை மறைந்தொளிகொள் முகிலைப் போலப்

புனைஆடை பொன்னொளியைப் பெற்ற தென்றால்

அழகுடையாள் திருமேனி என்னே! என்னே!

அடைவுசெயும் அன்னம்போல் நடையாள்! யாழும்

குழலும்போய்த் தொழுகின்ற குரலால் பாடிக்

கொஞ்சினாள்! கருங்குயிலாள் திரும்புந் தோறும்

மழைமுகிலின் கூந்தலிலே பலம லர்கள்

மந்தார வானத்து மின்னலாகும்!



புதுநூலின் முதல்ஏட்டில் கயிறு சேர்த்தும்

பொன்னான தன்காதல் இலக்கி யத்தில்

இதுவரைக்கும் உளஞ்செலுத்தி இருந்தான்; தந்தை

இல்லத்தில் புகுந்ததையும் உணரான்; மற்றும்

அதிர்நடையார் மாவரசும், மனைவி தானும்

அங்குற்றார் என்பதையும் உணரான்; அன்னை

எதிர்வந்தாள் "வேடப்பா" என்றாள், "அம்மா"

என்றெழுந்தான் உணவுபடைத் திருத்தல் கண்டான்.



நகைமுத்தாள் பசியில்லை யென்று சொன்னாள்;

நன்றென்று மலர்க்குழலி சொல்லிப் போனாள்:

தொகைமுத்துக் குவித்தாலும் ஒன்றில் நெஞ்சைத்

தோய்த்தாரை மாற்றுவதே அருமை அன்றோ?

அகத்தினரும் விருந்தினரும் அமர்ந்தி ருக்க,

அன்புள்ள இல்லத்தின் தலைவி பூத்த

முகத்தினளாய் உணவுபடைக் கின்றாள்! இங்கே

முன்னறையில் நகைமுத்தாள் சென்றுட் கார்ந்தாள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:56 am

நகைமுத்து



முதலேட்டில் சிலவரிகள் படித்துத் தீர்க்க

மூன்றுமணி நேரமா வேடப் பர்க்கே

எதில்நினைவு செலுத்தினார்? எனவி யந்தே

எழில்நகைமுத் தாள் புனைந்த ஓவி யத்தை

அதேசுவடி மேல்வைத்தாள், உற்றுப் பார்த்தாள்;

அவன்சிரித்தான்; அவள் சிரித்தாள் 'அன்ப ரேநீர்

இதுவரைக்கும் யாரைநினைத் திருந்தீர்?' என்றாள்;

'உனை'யென்றான்; 'யான்பெற்றேன் பெரும்பே'றென்றாள்.



ஏதேதோ கேட்டிருந்தாள் வேடப் பன்பால்!

என்னென்ன வோசொன்னான் அவன்அ வட்கே!

காதோடு 'நும்பெற்றோ ரிடத்தில் இந்தக்

கடிமணத்தின் முடிவுதனைக் கேட்பீர்' என்றாள்.

ஓதிவிட்டார் முடிவென்றான் வேடப் பன்தான்.

உளம்பூத்தாள்! வாய்பதறி விருந்த ருந்தித்

தீதின்றிக் கையலம்பு வோர்கள் கேட்கத்

திருமணம்எந் நாளென்றாள்! பிழைக்கு நைந்தாள்!



கைகழுவும் நினைப்பில்லை! சோற்றி லேனும்

கடுகளவு புசித்தானா இல்லை. காதற்

பொய்கையிலே வீழ்ந்திட்டான்! கரைகா ணாமல்

புலன்துடித்தான்! நகைமுத்தாள் புறம்போய் ஓர்பால்

வைகைநறும் புனலாடிக் கோடை வெப்பம்

மாற்றுவது எந்நாளென் றெண்ணி யெண்ணிச்

செய்கைஇழந் தமர்ந்திட்டாள். "நாங்கள் ஊர்க்குச்

சென்றுவரு கின்றோம்"என் றுரைத்தார் தந்தை!



தந்தைமொழி அதிர்வேட்டால் மங்கை நொந்தாள்;

தவித்திட்டான் வேடப்பன்! வீட்டுக் காரர்

'இந்தஇருள் நேரத்தில் செல்வ தென்ன?

இருந்துநா ளைப்பபோக லாம்'என் றார்கள்.

வந்தவர்கள் மன்னிப்பு வேண்டி னார்கள்.

வண்டிவந்து வீட்டெதிரில் நிற்கக் கண்டார்.

வெந்தனவாம் இரண்டுள்ளம். நன்றி கூறி

வெளிச்சென்றார்! வீட்டினரும் உடன்தொ டர்ந்தார்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:56 am

பிரிந்தாள்



நூறுமுறை அவள் பார்த்தாள் அவனை! ஆளன்

நூறுமுறை நோக்கினான், இனிது பெற்ற

பேறுதனை இழப்பாள்போல் குறட்டி னின்று

பெயர்த்தஅடி கீழ்ப்படியில் வைக்கு முன்னர்

ஆறுமுறை அவள்பார்த்தாள், அவனும் பார்த்தான்!

அவள்வண்டிப் படிமிதித்தாள், திரும்பிப் பார்த்தாள்!

ஏறிவிட்டாள்! ஏறிவிட்டார் விருந்தி னர்கள்!

இனிதாக வாழ்த்துரைகள் மாற்றிக் கொண்டார்.



வண்டிநகர்ந் தது; மாடு விரைந்த தங்கே!

மங்கையவள் தலைசாய்த்து வேடப் பன்மேல்

கெண்டைவிழி யைச்செலுத்தி மறைந்தாள்! நெஞ்சைக்

கிளிபறித்துப் போனதனால் மரம்போல் அங்கே

தண்டமிழ்த்தேன் உண்டவர்கள் பொருளை எண்ணித்

தனிப்பார்போல் தனித்திருந்தான்; அவன்தாய் ஆன

ஒண்டொடியாள் உட்சென்றாள், நகைமுத் தாளின்

ஓவியத்தில் தன்மகனின் உருவைக் கண்டாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:57 am

மூன்றாம் பகுதி





1. திருமணம்



வேடப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு



வில்லியனூர் மாவரசு, மலர்க்குழல், நாவரசு, நகைமுத்து

ஆகியோர் மணவழகன் வீட்டுக்கு விருந்தினராய் வந்தபோது

மணவழகன் மகனான வேடப்பனின் உள்ளங் கவர்ந்து

சென்றாளன்றோ நகைமுத்து?-இங்கு...



ப·றொடை வெண்பா



புதுவை மணவழகன் பொன்னின் பரிதி

எதிரேறு முன்னர் இனிய உணவருந்திப்



பட்டுக் கரைவேட்டி கட்டி,நீளச் சட்டையிட்டுச்

சிட்டைமுண்டு மேல்துவளச் சென்று கடைச்சாவி



ஓர்கையால் தூக்கி ஒருகை குடையூன்றி

ஆரங்கே என்றழைத்தான் தங்கம் அருகில்வந்தாள்.



'ஆளும் கணக்கருமோ அங்குவந்து காத்திருப்பார்

வேளையடு சென்று கடைதிறக்க வேண்டுமன்றோ?



பாடல் உரைகேட்கப் பச்சைப் புலவரிடம்

வேடப்பன் சென்றுள்ளான் வந்தவுடன், வில்லியனூர்



சின்னா னிடம்அனுப்பித் தீராத பற்றான

ஐந்நூறு ரூபாயை அட்டியின்றிப் பெற்றுவரச்



சொல்' என்று சொல்லிநின்றான் தூய மணவழகன்.

'நல்லதத்தான்' என்று நவின்றாள் எழில் தங்கம்!



காலிற் செருப்பணிந்து கைக்குடையை மேல்விரித்து

மேலும் ஒருதடவை மெல்லிமுகம் தான்நோக்கிச்



சென்றான் மணவழகன். செல்லும் அழகருந்தி

நின்றாள், திரும்பினாள் நெஞ்சம் உருகித்தங்கம்!



கன்னலைக் கூவிக் கடிதழைத்தாள்! சின்னவனாம்

பொன்னப்பன் மேல்முகத்தைப் போட்டணைத்தாள்

...........................

அன்னவர்க்குப்

பாங்காய் உடையுடுத்திப் பள்ளிக் கனுப்பிவைத்தாள்.

தாங்கா விருப்பால் தலைப்பிள்ளை வேடப்பன்



இன்னும் வரவிலையே என்றே எதிர்பார்த்தாள்.

பொன்மலைபோல் வந்திட்டான் பூரிக்கின் றாள் தங்கம்!



'பச்சைப் புலவர் பகர்ந்தவை என்'என்று

தச்சுக் கலைப்பொருளாம் தங்கம் வினவிடவே,



'நல்லபுற நானூற்றில் நான்கும், திருக்குறளில்

'கல்வி' ஒருபத்தும் கடுந்தோல் விலக்கிச்



சுளைசுளையாய், அம்மா சுவைசுவையாய் உண்டேன்.

இளையேன்நான் செந்தமிழின் இன்பத்தை என்னென்பேன்?



என்றுரைத்தான் வேடப்பன். 'என்னப்பா வேடப்பா

உன்அப்பா சொல்லியதை உற்றுக்கேள்' என்றாள்தாய்:



'சின்னானை வில்லியனூர் சென்றுநே ரிற்கண்டே

ஐந்நூறு ரூபாயை அட்டியின்றி வாங்கிவா'



என்றுபுகன் றார்தந்தை இப்போதே நீ செல்வாய்'

என்றுதன் பிள்ளைக்கு இயம்பினாள் தங்கம்.



அகமும் முகமும் அலர்ந்தவனாய், "அம்மா

மிகவும் மகிழ்ச்சி" என்று வேடப்பன் சென்றான்.



அமைய அவர்கட்கே ஆனகறி எண்ணிச்

சமையலுக்குத் தங்கம்சென் றாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக