புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
Page 4 of 11 •
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
First topic message reminder :
''குடும்ப விளக்கு'' எழுதிய 1942 ஆம் ஆண்டிலே வெளிவந்த இசையமுது, முதற்பகுதியில் ''ஆண் உயர்வென்பது பெண் உயர் எனபதும் நீணிலத் தெங்கிலும் இல்லை''என பாவேந்தர் உறுதியிட்டு கூறியுள்ளார்.
சமுதாயக் கருத்து மாற்றத்துக்கு வித்திட்ட பாவேந்தர், மகளிர் உரிமைப் போராட்டத்திற்கும் வித்திட்டவர்.
''குடும்ப விளக்கு'' எழுதிய 1942 ஆம் ஆண்டிலே வெளிவந்த இசையமுது, முதற்பகுதியில் ''ஆண் உயர்வென்பது பெண் உயர் எனபதும் நீணிலத் தெங்கிலும் இல்லை''என பாவேந்தர் உறுதியிட்டு கூறியுள்ளார்.
சமுதாயக் கருத்து மாற்றத்துக்கு வித்திட்ட பாவேந்தர், மகளிர் உரிமைப் போராட்டத்திற்கும் வித்திட்டவர்.
[You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மலையடியில் துறவு
நிறத்தை நிலைநிறுத்த
வந்த-வெறியன்
ஒருவன் மலையடியில்
ஊரார் விழிக்குத்
தெரியும் இடந்தேடிச்
சென்று-பெரிதாக
வீடமைத்த தாலேதன்
வீட்டைத் துறந்தவனாய்க்
கூடிந்த மெய்யென்றும்
கூட்டில்புள்-ஓடுமுயிர்
பொன்றாத உண்மையிலை
போயழியும்! போயழியும்!!
என்றும், இளமை
புனற்குமிழி-பொன்னோ
புனல்திரை, யாக்கை
புனலெழுத்தே என்றும்
அனைத்துலகும் பொய்யென்றும்
ஆன்மா-எனும் ஒன்றே
மெய், அதனால் மெய்யுணர்தல்
வேண்டுமென்றும், அவ்வுணர்வை
ஐயம் திரிபின்றி
ஐயர் உண்ணச்-செய்கின்ற
என்றன் அறவிடுதி
ஏற்படுத்தி வைக்குமென்றும்,
என்றும் உதவா(து)
இருந்தபழம்-பொன்பொருளை
இங்கேகுவிப் பீர்என்றும்
என்தம்பி வாரிப்போய்
அங்கே குவிக்கட்டும்
அச்செயலால்-தங்கிடும்நும்
பற்றுக்கள் போம்என்றும்,
பற்றேபற் றுக்கோடாய்
உற்று வரும்பிறவி
ஓடுமென்றும்,- புற்கைக்குப்
போரடித்து மக்கள்
புழுவாய்த் துடிக்கையிலும்
ஊரடித்துத் தின்னும்
உளவுதனை-யாரரிவார்?
நிறத்தை நிலைநிறுத்த
வந்த-வெறியன்
ஒருவன் மலையடியில்
ஊரார் விழிக்குத்
தெரியும் இடந்தேடிச்
சென்று-பெரிதாக
வீடமைத்த தாலேதன்
வீட்டைத் துறந்தவனாய்க்
கூடிந்த மெய்யென்றும்
கூட்டில்புள்-ஓடுமுயிர்
பொன்றாத உண்மையிலை
போயழியும்! போயழியும்!!
என்றும், இளமை
புனற்குமிழி-பொன்னோ
புனல்திரை, யாக்கை
புனலெழுத்தே என்றும்
அனைத்துலகும் பொய்யென்றும்
ஆன்மா-எனும் ஒன்றே
மெய், அதனால் மெய்யுணர்தல்
வேண்டுமென்றும், அவ்வுணர்வை
ஐயம் திரிபின்றி
ஐயர் உண்ணச்-செய்கின்ற
என்றன் அறவிடுதி
ஏற்படுத்தி வைக்குமென்றும்,
என்றும் உதவா(து)
இருந்தபழம்-பொன்பொருளை
இங்கேகுவிப் பீர்என்றும்
என்தம்பி வாரிப்போய்
அங்கே குவிக்கட்டும்
அச்செயலால்-தங்கிடும்நும்
பற்றுக்கள் போம்என்றும்,
பற்றேபற் றுக்கோடாய்
உற்று வரும்பிறவி
ஓடுமென்றும்,- புற்கைக்குப்
போரடித்து மக்கள்
புழுவாய்த் துடிக்கையிலும்
ஊரடித்துத் தின்னும்
உளவுதனை-யாரரிவார்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நாட்டுக்குத் தொண்டு
இந்த நெறிகள்எலாம்
யார்க்கு நலம்விளைக்கும்?
கந்தைக்கும், கண்ணுறங்கக்
கூரைக்கும்-அந்தோ
தொழில்வேண்டு வார்க்குத்
தொழிலில்லை; கல்வி
எழில்வேண்டு வார்கள்
எவர்க்கும்-கழகமுண்டோ?
கல்வித் துறைக்குத்தான்
காசிலையாம்! செந்தமிழ்நற்
செல்விக் குரிமைச்
செயலுண்டா?-'எல்லாரும்
ஒன்'றென்னும் எண்ணம்
உயரவில்லை! ஒற்றுமைதான்
நன்றென்னும் எண்ணம்
நடப்பதுவோ?-இன்று
பெருநிலத்தில் நற்றமிழர்
வாழ்வு பிறரால்
அருவருக்க லானதெனக்
கண்டும்-திருநாட்டில்
சாய்பாபா வாற்பொருளைத்
தட்டிப் பறிப்பதுவும்
மேய்பாபா ஏய்க்கின்ற
மெய்வழியின்-வாய்வலியும்
பன்னும் இவைபோல்
பலப்பலவும் அன்பரே!
உன்னுங்கால் அந்தோ!
உருகாதோ-கல்நெஞ்சம்?
எந்த நெறிபற்றி
யாம்ஒழுகல் வேண்டுமெனில்,
அந்த முறையை
அறைகின்றேன்-அந்தமுறை
எல்லார்க்கும் ஒத்துவரும்
ஏமாற்றம் ஒன்றுமில்லை
செல்வம் அதனால்
செழித்துவரும்-கல்வி
அனைவர்க்கும் உண்டாகும்
அல்லல் ஒழியும்
தனிநலம்போம்! இன்பமே
சாரும்-இனிதாக
இவ்வுலக நன்மைக்கே
யான்வாழ்கின் றேன்என்றே
ஒவ்வொருவ ரும்கருதி
உண்மையாய்-எவ்வெவர்க்கும்
கல்வியைக் கட்டாயத்
தால்நல்கி யாவர்க்கும்
நல்லுடலை ஓம்ப
நனியுழைத்தால்-அல்லலுண்டோ?
ஓம்புதல் வேண்டும்
ஒழுக்கம்; அழுக்காறு
நாம்பெறுதல் நாட்டை
இழித்தலே-ஆம்! பொய்யா?
மக்களிடைத் தாழ்வுயர்வு
மாட்டாமை வேண்டும்நீள்
பொய்க்கதையில் பொல்லா
மடமையிலே-புக்குப்
பிறர்க்கடிமை யுற்றும்
பெருவயிறு காத்தல்
அறக்கொடிதென் றாய்ந்தமைதல்
வேண்டும்-சிறக்கப்
படைப்பயிற்சி, நல்ல
பயனடையும் ஆற்றல்,
தடைப்பாடில் லாதெய்தில்
சாலும்!-நடைவலியாய்
வையம் அறிதல்
மறிகடலை வானத்தை
ஐயம் அகல
அளந்திடுதல்-உய்யும்வணம்
பல்கலையும் பெற்றே
இளமைப் பருவத்தின்
மல்குசீர் வாய்ப்புறுதல்
வேண்டும்பின்-நில்லாத
இந்த நெறிகள்எலாம்
யார்க்கு நலம்விளைக்கும்?
கந்தைக்கும், கண்ணுறங்கக்
கூரைக்கும்-அந்தோ
தொழில்வேண்டு வார்க்குத்
தொழிலில்லை; கல்வி
எழில்வேண்டு வார்கள்
எவர்க்கும்-கழகமுண்டோ?
கல்வித் துறைக்குத்தான்
காசிலையாம்! செந்தமிழ்நற்
செல்விக் குரிமைச்
செயலுண்டா?-'எல்லாரும்
ஒன்'றென்னும் எண்ணம்
உயரவில்லை! ஒற்றுமைதான்
நன்றென்னும் எண்ணம்
நடப்பதுவோ?-இன்று
பெருநிலத்தில் நற்றமிழர்
வாழ்வு பிறரால்
அருவருக்க லானதெனக்
கண்டும்-திருநாட்டில்
சாய்பாபா வாற்பொருளைத்
தட்டிப் பறிப்பதுவும்
மேய்பாபா ஏய்க்கின்ற
மெய்வழியின்-வாய்வலியும்
பன்னும் இவைபோல்
பலப்பலவும் அன்பரே!
உன்னுங்கால் அந்தோ!
உருகாதோ-கல்நெஞ்சம்?
எந்த நெறிபற்றி
யாம்ஒழுகல் வேண்டுமெனில்,
அந்த முறையை
அறைகின்றேன்-அந்தமுறை
எல்லார்க்கும் ஒத்துவரும்
ஏமாற்றம் ஒன்றுமில்லை
செல்வம் அதனால்
செழித்துவரும்-கல்வி
அனைவர்க்கும் உண்டாகும்
அல்லல் ஒழியும்
தனிநலம்போம்! இன்பமே
சாரும்-இனிதாக
இவ்வுலக நன்மைக்கே
யான்வாழ்கின் றேன்என்றே
ஒவ்வொருவ ரும்கருதி
உண்மையாய்-எவ்வெவர்க்கும்
கல்வியைக் கட்டாயத்
தால்நல்கி யாவர்க்கும்
நல்லுடலை ஓம்ப
நனியுழைத்தால்-அல்லலுண்டோ?
ஓம்புதல் வேண்டும்
ஒழுக்கம்; அழுக்காறு
நாம்பெறுதல் நாட்டை
இழித்தலே-ஆம்! பொய்யா?
மக்களிடைத் தாழ்வுயர்வு
மாட்டாமை வேண்டும்நீள்
பொய்க்கதையில் பொல்லா
மடமையிலே-புக்குப்
பிறர்க்கடிமை யுற்றும்
பெருவயிறு காத்தல்
அறக்கொடிதென் றாய்ந்தமைதல்
வேண்டும்-சிறக்கப்
படைப்பயிற்சி, நல்ல
பயனடையும் ஆற்றல்,
தடைப்பாடில் லாதெய்தில்
சாலும்!-நடைவலியாய்
வையம் அறிதல்
மறிகடலை வானத்தை
ஐயம் அகல
அளந்திடுதல்-உய்யும்வணம்
பல்கலையும் பெற்றே
இளமைப் பருவத்தின்
மல்குசீர் வாய்ப்புறுதல்
வேண்டும்பின்-நில்லாத
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
காதல் வாழ்க்கை
உள்ளம் கவர்ந்தாளின்
உள்ளத்தைத் தான்கவர்ந்து
வெள்ளத்தில் வெள்ளம்
கலந்ததென-விள்ளும்நிலை
கண்டு மணம்புரிதல்
வேண்டும் கடிமணமும்
பண்டை மணமென்றும்
பார்ப்பானைக்-கொண்ட
அடிமை மணமென்றும்
சொல்லும் அனைத்தும்
கடிந்து பதிவுமணம்
காணல்-கடனாகும்
அன்பால் அவளும்
அவனும் ஒருமித்தால்
து ன்பமவ ளுக்கென்னில்
துன்புறுவான்-துன்பம்
அவனுக்கெனில் அவளும்
அவ்வாறே; இந்தச்
சுவைமிக்க வாழ்வைத்தான்
தூயோர்-நவையற்ற
காதல்வாழ் வென்று
கழறினார்; அக்காதல்
சாதல் வரைக்கும்
தழைத்தோங்கும்-காதல்
உடையார்தம் வாழ்வில்
உளம்வேறு பட்டால்
மடவார் பிறனை
மணக்க-விடவேண்டும்
ஆடவனும் வேறோர்
அணங்கை மணக்கலாம்
கூடும்மண மக்கள்
கொளத்தக்க-நீடுநலம்
என்னவெனில், இல்லறத்தைச்
செய்தின்பம் எய்துவதாம்!
உள்ளம் கவர்ந்தாளின்
உள்ளத்தைத் தான்கவர்ந்து
வெள்ளத்தில் வெள்ளம்
கலந்ததென-விள்ளும்நிலை
கண்டு மணம்புரிதல்
வேண்டும் கடிமணமும்
பண்டை மணமென்றும்
பார்ப்பானைக்-கொண்ட
அடிமை மணமென்றும்
சொல்லும் அனைத்தும்
கடிந்து பதிவுமணம்
காணல்-கடனாகும்
அன்பால் அவளும்
அவனும் ஒருமித்தால்
து ன்பமவ ளுக்கென்னில்
துன்புறுவான்-துன்பம்
அவனுக்கெனில் அவளும்
அவ்வாறே; இந்தச்
சுவைமிக்க வாழ்வைத்தான்
தூயோர்-நவையற்ற
காதல்வாழ் வென்று
கழறினார்; அக்காதல்
சாதல் வரைக்கும்
தழைத்தோங்கும்-காதல்
உடையார்தம் வாழ்வில்
உளம்வேறு பட்டால்
மடவார் பிறனை
மணக்க-விடவேண்டும்
ஆடவனும் வேறோர்
அணங்கை மணக்கலாம்
கூடும்மண மக்கள்
கொளத்தக்க-நீடுநலம்
என்னவெனில், இல்லறத்தைச்
செய்தின்பம் எய்துவதாம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மக்கட் பேறு
நன்மக்கட் பேறுபற்றி
நானுரைப்ப-தொன்றுண்டாம்
ஈண்டுக் குழந்தைகள்தாம்
எண்மிகுத்துப் போகாமல்
வேண்டும் அளவே
விளைத்து,மேல்-வேண்டாக்கால்
சேர்க்கை ஒழித்துக்
கருத்தடை யேனும்செய்க
போக்கருநோய் கொண்டால்
இருவரும்-யாக்கை
ஒருமித்தால் ஐயகோ!
உண்டாகும் பிள்ளை
இருநிலத்துக் கென்னநலம்
செய்யும்-அருமைத்
நன்மக்கட் பேறுபற்றி
நானுரைப்ப-தொன்றுண்டாம்
ஈண்டுக் குழந்தைகள்தாம்
எண்மிகுத்துப் போகாமல்
வேண்டும் அளவே
விளைத்து,மேல்-வேண்டாக்கால்
சேர்க்கை ஒழித்துக்
கருத்தடை யேனும்செய்க
போக்கருநோய் கொண்டால்
இருவரும்-யாக்கை
ஒருமித்தால் ஐயகோ!
உண்டாகும் பிள்ளை
இருநிலத்துக் கென்னநலம்
செய்யும்-அருமைத்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிறர் நலம்
தலைவன் தலைவியர்கள்
தங்கள் குடும்ப
அலைநீங் கியபின்
அயலார்-நிலைதன்னை
நாடலாம் என்னாமல்
நானிலத்தின் நன்மைக்குப்
பாடு படவேண்டும்
எப்போதும்-நாடோ
ஒருதீமை கண்டால்
ஒதுங்கி நிற்றல்தீமை;
எருதுமேல்ஈ மொய்த்த
போது-பெருவால்
சுழற்றுவதால் துன்பம்
தொலையுமா?-ஈக்கள்
புழுக்குமிடம் தூய்தாகிப்
போகுமா?-இழுக்கொன்று
காணில் நமக்கென்ன
என்னாமல் கண்டஅதன்
ஆணிவேர் கல்லி
அழகுலகைப்-பேணுவதில்
நேருற்ற துன்பமெலாம்
இன்பம்! கவலையின்றிச்
சேருவான் இன்பமெலாம்
துன்பமென்க!-நேரில்
வறியார்க்கொன் றீந்தால்தன்
நெஞ்சில்வரு மின்பம்
அறியா திரான்எவனும்
அன்றோ?-வெறிகொள்
வலியாரால் வாடும்
எளியாரின் சார்பில்
புலியாகிப் போர்தொடுக்கும்
போதில்-வலியோர்கள்
எய்யும்கோற் புண்ணும்
இனிதாகும் அவ்வெளியார்
உய்ய உழைத்ததனைத்
தானினைத்தால்-வையத்தே
தன்னலத்தை நீத்தும்
பிறர்நலமே தான்நினைத்தும்
என்றும் உழைப்பார்க்(கு)
இடரிழைப்போன்!-அன்றோ
நடப்பார் அடியில்
நசுங்கும் புழுப்போல்
துடிப்பானே தொல்லுலகி
னோரால்-இடமகன்ற
வையத்து நன்மைக்கே
வாழ்வென் றுணர்ந்தவனே
செய்யும் தொழிலில்
திறம்காண்பான்-ஐயம்
அகலும்; அறிவில்
உயர்ந்திடுவான் அன்னோன்
புகலும்அனைத் துள்ளும்
புதுமை-திகழுமன்றோ?
சாதலின் இன்னாத
தில்லையென்று சாற்றிடினும்
ஏதும்அவன் சாகுங்கால்
இன்பமே!-சாதல்
வருங்கால் சிரிப்பான்
பொதுவுக்கே வாழ்வான்
பொதுமக்கள் வாழ்த்தும்
பெறுவான்-ஒருநிலவு
வானின் உடுக்களிடை
வாழ்தல்போல்-அன்னோரின்
ஊனுடம்பு தீர்ந்தாலும்
உற்றபுகழ்-மேனி,
விழிதோறும் மேலாரின்
நெஞ்சுதொறும் என்றும்
அழியாதன் றோமேலும்
ஐயா-மொழிவேன்
'அறத்தால் வருவதே
இன்பம்'என் றான்றோர்
குறித்தார்; குறிப்பறிக;
மேலும்-திறத்தால்
'தவம்செய்வார் தம்கருமம்
செய்வார்' எனவே
அவரே உரைத்தார்
அறிக!-எவரும்
தமைக்காக்க! தம்குடும்பம்
காக்க! உலகைத்
தமர்என்று தாமுழைக்க
வேண்டும்-அமைவான
இன்பம் அதுதான்
'இறப்புக்கும் அப்பாலே
ஒன்றுமில்லை' என்ப
துணர்ந்திடுக-அன்றுமுதல்
இன்றுவரைக்கும் பெரியோர்
செத்தவர்கள் எய்துவதாய்ச்
சொன்னவற்றுள் ஒன்றையன்று
தூற்றுவன-அன்றியும்
தலைவன் தலைவியர்கள்
தங்கள் குடும்ப
அலைநீங் கியபின்
அயலார்-நிலைதன்னை
நாடலாம் என்னாமல்
நானிலத்தின் நன்மைக்குப்
பாடு படவேண்டும்
எப்போதும்-நாடோ
ஒருதீமை கண்டால்
ஒதுங்கி நிற்றல்தீமை;
எருதுமேல்ஈ மொய்த்த
போது-பெருவால்
சுழற்றுவதால் துன்பம்
தொலையுமா?-ஈக்கள்
புழுக்குமிடம் தூய்தாகிப்
போகுமா?-இழுக்கொன்று
காணில் நமக்கென்ன
என்னாமல் கண்டஅதன்
ஆணிவேர் கல்லி
அழகுலகைப்-பேணுவதில்
நேருற்ற துன்பமெலாம்
இன்பம்! கவலையின்றிச்
சேருவான் இன்பமெலாம்
துன்பமென்க!-நேரில்
வறியார்க்கொன் றீந்தால்தன்
நெஞ்சில்வரு மின்பம்
அறியா திரான்எவனும்
அன்றோ?-வெறிகொள்
வலியாரால் வாடும்
எளியாரின் சார்பில்
புலியாகிப் போர்தொடுக்கும்
போதில்-வலியோர்கள்
எய்யும்கோற் புண்ணும்
இனிதாகும் அவ்வெளியார்
உய்ய உழைத்ததனைத்
தானினைத்தால்-வையத்தே
தன்னலத்தை நீத்தும்
பிறர்நலமே தான்நினைத்தும்
என்றும் உழைப்பார்க்(கு)
இடரிழைப்போன்!-அன்றோ
நடப்பார் அடியில்
நசுங்கும் புழுப்போல்
துடிப்பானே தொல்லுலகி
னோரால்-இடமகன்ற
வையத்து நன்மைக்கே
வாழ்வென் றுணர்ந்தவனே
செய்யும் தொழிலில்
திறம்காண்பான்-ஐயம்
அகலும்; அறிவில்
உயர்ந்திடுவான் அன்னோன்
புகலும்அனைத் துள்ளும்
புதுமை-திகழுமன்றோ?
சாதலின் இன்னாத
தில்லையென்று சாற்றிடினும்
ஏதும்அவன் சாகுங்கால்
இன்பமே!-சாதல்
வருங்கால் சிரிப்பான்
பொதுவுக்கே வாழ்வான்
பொதுமக்கள் வாழ்த்தும்
பெறுவான்-ஒருநிலவு
வானின் உடுக்களிடை
வாழ்தல்போல்-அன்னோரின்
ஊனுடம்பு தீர்ந்தாலும்
உற்றபுகழ்-மேனி,
விழிதோறும் மேலாரின்
நெஞ்சுதொறும் என்றும்
அழியாதன் றோமேலும்
ஐயா-மொழிவேன்
'அறத்தால் வருவதே
இன்பம்'என் றான்றோர்
குறித்தார்; குறிப்பறிக;
மேலும்-திறத்தால்
'தவம்செய்வார் தம்கருமம்
செய்வார்' எனவே
அவரே உரைத்தார்
அறிக!-எவரும்
தமைக்காக்க! தம்குடும்பம்
காக்க! உலகைத்
தமர்என்று தாமுழைக்க
வேண்டும்-அமைவான
இன்பம் அதுதான்
'இறப்புக்கும் அப்பாலே
ஒன்றுமில்லை' என்ப
துணர்ந்திடுக-அன்றுமுதல்
இன்றுவரைக்கும் பெரியோர்
செத்தவர்கள் எய்துவதாய்ச்
சொன்னவற்றுள் ஒன்றையன்று
தூற்றுவன-அன்றியும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சாக்காடு நெடுந்தூக்கம்
சாக்காடு பேரின்பம்
என்றுநான் சாற்றிடுவேன்
தூக்கம் கெடலைத்
துயர்என்பீர்-வாய்க்கும்நல்
தூக்கத்தை இன்பமென்றீர்
அன்றோ? நெடுந்தூக்கம்
சாக்காடு இன்பம்" என்றார்.
சாக்காடு பேரின்பம்
என்றுநான் சாற்றிடுவேன்
தூக்கம் கெடலைத்
துயர்என்பீர்-வாய்க்கும்நல்
தூக்கத்தை இன்பமென்றீர்
அன்றோ? நெடுந்தூக்கம்
சாக்காடு இன்பம்" என்றார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அறுசீர் விருத்தம்
தலைவி கூடத்துப் பேச்சு
மாவர சோடிவ் வாறு
வயதானார் பேசும் போது
கூவர சான இல்லக்
குயிலினாள் கூடந் தன்னில்
பாவர சான தன்வாய்ப்
பைந்தமிழ் படைத்தி ருந்தாள்
ஆ!அரி தென்று காதால்
மலர்க்குழல் அதைஉண் கின்றாள்.
"பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணு தற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
உலகினைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே!
கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம்; அந் நிலத்தில்
புல்விளைந் திடலாம்; நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை!
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி; அங்கே
நல்லறி வுடைய மக்கள்
விளைவது நவில வோநான்?
வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுத ளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே! இன்று
நானிலம் ஆட வர்கள்
ஆணையால் நலிவ டைந்து
போனதால் பெண்க ளுக்கு
விடுதலை போன தன்றோ!
இந்நாளில் பெண்கட் கெல்லாம்
ஏற்பட்ட பணியை நன்கு
பொன்னேபோல் ஒருகை யாலும்
விடுதலை பூணும் செய்கை
இன்னொரு மலர்க்கை யாலும்
இயற்றுக! கல்வி இல்லா
மின்னாளை வாழ்வில் என்றும்
மின்னாள் என்றே உரைப்பேன்.
சமைப்பதும் வீட்டு வேலை
சலிப்பின்றிச் செயலும் பெண்கள்
தமக்கேஆம் என்று கூறல்
சரியில்லை; ஆட வர்கள்
நமக்கும்அப் பணிகள் ஏற்கும்
என்றெண்ணும் நன்னாள் காண்போம்!
சமைப்பது தாழ்வா? இன்பம்
சமைக்கின்றார் சமையல் செய்வார்!
உணவினை ஆக்கல் மக்கட்(கு)
உயிர்ஆக்கல் அன்றோ? வாழ்வு
பணத்தினால் அன்று; வில்வாட்
படையினால் காண்ப தன்று;
தணலினை அடுப்பில் இட்டுத்
தாழியில் சுவையை இட்டே
அணித்திருந் திட்டார் உள்ளத்(து)
அன்பிட்ட உணவால் வாழ்வோம்.
சமைப்பது பெண்க ளுக்குத்
தவிர்க்கொணாக் கடமை என்றும்,
சமைத்திடும் தொழிலோ, நல்ல
தாய்மார்க்கே தக்க தென்றும்,
தமிழ்த்திரு நாடு தன்னில்
இருக்குமோர் சட்டந் தன்னை
இமைப்போதில் நீக்க வேண்டில்
பெண்கல்வி வேண்டும் யாண்டும்.
தலைவி கூடத்துப் பேச்சு
மாவர சோடிவ் வாறு
வயதானார் பேசும் போது
கூவர சான இல்லக்
குயிலினாள் கூடந் தன்னில்
பாவர சான தன்வாய்ப்
பைந்தமிழ் படைத்தி ருந்தாள்
ஆ!அரி தென்று காதால்
மலர்க்குழல் அதைஉண் கின்றாள்.
"பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணு தற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
உலகினைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே!
கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம்; அந் நிலத்தில்
புல்விளைந் திடலாம்; நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை!
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி; அங்கே
நல்லறி வுடைய மக்கள்
விளைவது நவில வோநான்?
வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுத ளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே! இன்று
நானிலம் ஆட வர்கள்
ஆணையால் நலிவ டைந்து
போனதால் பெண்க ளுக்கு
விடுதலை போன தன்றோ!
இந்நாளில் பெண்கட் கெல்லாம்
ஏற்பட்ட பணியை நன்கு
பொன்னேபோல் ஒருகை யாலும்
விடுதலை பூணும் செய்கை
இன்னொரு மலர்க்கை யாலும்
இயற்றுக! கல்வி இல்லா
மின்னாளை வாழ்வில் என்றும்
மின்னாள் என்றே உரைப்பேன்.
சமைப்பதும் வீட்டு வேலை
சலிப்பின்றிச் செயலும் பெண்கள்
தமக்கேஆம் என்று கூறல்
சரியில்லை; ஆட வர்கள்
நமக்கும்அப் பணிகள் ஏற்கும்
என்றெண்ணும் நன்னாள் காண்போம்!
சமைப்பது தாழ்வா? இன்பம்
சமைக்கின்றார் சமையல் செய்வார்!
உணவினை ஆக்கல் மக்கட்(கு)
உயிர்ஆக்கல் அன்றோ? வாழ்வு
பணத்தினால் அன்று; வில்வாட்
படையினால் காண்ப தன்று;
தணலினை அடுப்பில் இட்டுத்
தாழியில் சுவையை இட்டே
அணித்திருந் திட்டார் உள்ளத்(து)
அன்பிட்ட உணவால் வாழ்வோம்.
சமைப்பது பெண்க ளுக்குத்
தவிர்க்கொணாக் கடமை என்றும்,
சமைத்திடும் தொழிலோ, நல்ல
தாய்மார்க்கே தக்க தென்றும்,
தமிழ்த்திரு நாடு தன்னில்
இருக்குமோர் சட்டந் தன்னை
இமைப்போதில் நீக்க வேண்டில்
பெண்கல்வி வேண்டும் யாண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சமையலில் புதுமை
சமையலில் புதுமை வேண்டும்
சமையல்நூல் வளர்ச்சி வேண்டும்
சமையற்குக் "கல்வி இல்லம்"
அமைந்திட வேண்டும் யாண்டும்;
அமைவிலாக் குடும்பத் துள்ளும்
அகத்தினில் மகிழ்ச்சி வேண்டில்
சமையலில் திறமை வேண்டும்
சாக்காடும் தலைகாட் டாதே!
கெட்டுடல் வருந்து வோர்கள்
சமைக்கும்நற் கேள்வி பெற்றால்
கட்டுடல் பெற்று வாழ்வார்!
கல்விக்கும், ஒழுக்கத் திற்கும்
பட்டுள பாட்டி னின்று
விடுதலை படுவ தற்கும்
கட்டாயம் சமைக்கும் ஆற்றல்
காணுதல் வேண்டும் நாமே.
வறுமையும் தெரிவ துண்டோ
சமையலில் வல்லார் இல்லில்?
நறுநெய்யும் பாலும் தேனும்
நனியுள்ள இல்லத் துள்ளும்
கறிசமைத் திடக்கல் லாதார்
வறியராய்க் கலங்கு வார்கள்!
குறுகிய செலவில் இன்பம்
குவிப்பார்கள் சமையல் வல்லார்!
வீறாப்பு வாழ்வு தன்னை
மேற்கொண்டார் என்றால் அன்னார்
சோறாக்கி கறிகள் ஆக்கிச்
சுவைஆக்கக் கற்றதால்ஆம்!
சேறாக்கிக் குடித்த னத்தைத்
தீர்த்தார்கள் என்றால் தாறு
மாறாக்கிக் கறியை எல்லாம்
மண்ணாக்கும் மடமை யால்ஆம்.
இலையினில் திறத்தால் இட்ட
சுவையுள்ள கறியும் சோறும்
கலையினில் உயர்த்தும் நாட்டைக்
கட்டுக்கள் போக்கும்! வைய
நிலையினை உயர்த்தும் இந்த
நினைவுதான் உண்டா நம்பால்?
தொலையாதா அயர்வு? நல்ல
சுவையுணர் வெந்நாள் தோன்றும்?"
விருந்து வந்தவள் தன் நிலை கூறுவாள்
என்றனள் தலைவி! அந்த
எழில்மலர்க் குழலி சொல்வாள்;
"நன்றாகச் சொன்னீர் அம்மா
நம்வீட்டின் செய்தி கேட்பீர்;
'இன்றென்ன கறிதான் செய்ய?'
என்றுநான் அவரைக் கேட்பேன்;
நின்றவர் எனையே நோக்கி
'நேற்றென்ன கறிகள்?' என்பார்!
'பருப்பும் வாழைக்காய் தானும்
குழம்பிட்டேன் உருளைப் பற்றைப்
பொரித்திட்டேன்' என்றால், அன்னார்
புகலுவார் வெறுப்பி னோடு
'பருப்பும்நீள் முருங்கைக் காயும்
குழம்பிட்டுக் கருணைப் பற்றைப்
பொரிப்பாய்நீ' என்று கூறிப்
போய்விடு வார்வே லைக்கே.
கீரைத் தண்டுக் குழம்பு
மேற்படி கீரை நையல்
மோருந்தான் உண்டு நாளும்
மிளகுநீர் முடுக உண்டு;
யாரைத்தான் கேட்க வேண்டும்
இவைகளே ஏறி ஆடும்
ஊருள்ள இராட்டி னம்போல்
சுற்றிடும் ஒவ்வோர் நாளும்!
முறையிலோர் புதுமை இல்லை;
முற்றிலும் பழைய பாதை!
குறைவான உணவே உண்டு
குறைவான வாழ்நாள் உற்று
நிறைவான வாழ்க்கை தன்னை
நடத்துவ தாய்நினைத்து
மறைவதே நம்ம னோரின்
வழக்கமா யிற்றம் மாவே!
சமையல்முன் னேற்ற மின்றித்
தாழ்தற்கு நமது நாட்டில்
சமயமும் சாதி என்ற
சழக்கும்கா ரணம்என் பேன்நான்;
அமைவுறும் செட்டி வீட்டில்
அயலவன் உண்பதில்லை;
தமைஉயர் வென்பான் நாய்க்கன்;
முதலிநீ தாழ்ந்தோன் என்பான்.
ஒருவீட்டின் உணவை மற்றும்
ஒருவீட்டார் அறியார் அன்றோ?
பெருநாட்டில் சமையற் பாங்கில்
முன்னேற்றம் பெறுதல் யாங்ஙன்?
தெரிந்தஓர் மிளகு நீரில்
செய்முறை பன்னூ றாகும்!
இருவீட்டில் ஒரே துவட்டல்
எரிவொன்று புகைச்சல் ஒன்று!
ஆக்கிடும் கறிகட் குள்ள
பெயர்களும், அவர வர்கள்
போக்கைப்போல் மாறு கொள்ளும்
புளிக்கறி குழம்பு சாம்பார்,
தேக்காணம் என்பார் ஒன்றே!
அப்பளம் அதனைச் சில்லோர்
பாழ்க்கப் பப்படம் என்பார்கள்
பார்ப்பான் அப்பளாம் என்கின்றான்.
சமையலில் புதுமை வேண்டும்
சமையல்நூல் வளர்ச்சி வேண்டும்
சமையற்குக் "கல்வி இல்லம்"
அமைந்திட வேண்டும் யாண்டும்;
அமைவிலாக் குடும்பத் துள்ளும்
அகத்தினில் மகிழ்ச்சி வேண்டில்
சமையலில் திறமை வேண்டும்
சாக்காடும் தலைகாட் டாதே!
கெட்டுடல் வருந்து வோர்கள்
சமைக்கும்நற் கேள்வி பெற்றால்
கட்டுடல் பெற்று வாழ்வார்!
கல்விக்கும், ஒழுக்கத் திற்கும்
பட்டுள பாட்டி னின்று
விடுதலை படுவ தற்கும்
கட்டாயம் சமைக்கும் ஆற்றல்
காணுதல் வேண்டும் நாமே.
வறுமையும் தெரிவ துண்டோ
சமையலில் வல்லார் இல்லில்?
நறுநெய்யும் பாலும் தேனும்
நனியுள்ள இல்லத் துள்ளும்
கறிசமைத் திடக்கல் லாதார்
வறியராய்க் கலங்கு வார்கள்!
குறுகிய செலவில் இன்பம்
குவிப்பார்கள் சமையல் வல்லார்!
வீறாப்பு வாழ்வு தன்னை
மேற்கொண்டார் என்றால் அன்னார்
சோறாக்கி கறிகள் ஆக்கிச்
சுவைஆக்கக் கற்றதால்ஆம்!
சேறாக்கிக் குடித்த னத்தைத்
தீர்த்தார்கள் என்றால் தாறு
மாறாக்கிக் கறியை எல்லாம்
மண்ணாக்கும் மடமை யால்ஆம்.
இலையினில் திறத்தால் இட்ட
சுவையுள்ள கறியும் சோறும்
கலையினில் உயர்த்தும் நாட்டைக்
கட்டுக்கள் போக்கும்! வைய
நிலையினை உயர்த்தும் இந்த
நினைவுதான் உண்டா நம்பால்?
தொலையாதா அயர்வு? நல்ல
சுவையுணர் வெந்நாள் தோன்றும்?"
விருந்து வந்தவள் தன் நிலை கூறுவாள்
என்றனள் தலைவி! அந்த
எழில்மலர்க் குழலி சொல்வாள்;
"நன்றாகச் சொன்னீர் அம்மா
நம்வீட்டின் செய்தி கேட்பீர்;
'இன்றென்ன கறிதான் செய்ய?'
என்றுநான் அவரைக் கேட்பேன்;
நின்றவர் எனையே நோக்கி
'நேற்றென்ன கறிகள்?' என்பார்!
'பருப்பும் வாழைக்காய் தானும்
குழம்பிட்டேன் உருளைப் பற்றைப்
பொரித்திட்டேன்' என்றால், அன்னார்
புகலுவார் வெறுப்பி னோடு
'பருப்பும்நீள் முருங்கைக் காயும்
குழம்பிட்டுக் கருணைப் பற்றைப்
பொரிப்பாய்நீ' என்று கூறிப்
போய்விடு வார்வே லைக்கே.
கீரைத் தண்டுக் குழம்பு
மேற்படி கீரை நையல்
மோருந்தான் உண்டு நாளும்
மிளகுநீர் முடுக உண்டு;
யாரைத்தான் கேட்க வேண்டும்
இவைகளே ஏறி ஆடும்
ஊருள்ள இராட்டி னம்போல்
சுற்றிடும் ஒவ்வோர் நாளும்!
முறையிலோர் புதுமை இல்லை;
முற்றிலும் பழைய பாதை!
குறைவான உணவே உண்டு
குறைவான வாழ்நாள் உற்று
நிறைவான வாழ்க்கை தன்னை
நடத்துவ தாய்நினைத்து
மறைவதே நம்ம னோரின்
வழக்கமா யிற்றம் மாவே!
சமையல்முன் னேற்ற மின்றித்
தாழ்தற்கு நமது நாட்டில்
சமயமும் சாதி என்ற
சழக்கும்கா ரணம்என் பேன்நான்;
அமைவுறும் செட்டி வீட்டில்
அயலவன் உண்பதில்லை;
தமைஉயர் வென்பான் நாய்க்கன்;
முதலிநீ தாழ்ந்தோன் என்பான்.
ஒருவீட்டின் உணவை மற்றும்
ஒருவீட்டார் அறியார் அன்றோ?
பெருநாட்டில் சமையற் பாங்கில்
முன்னேற்றம் பெறுதல் யாங்ஙன்?
தெரிந்தஓர் மிளகு நீரில்
செய்முறை பன்னூ றாகும்!
இருவீட்டில் ஒரே துவட்டல்
எரிவொன்று புகைச்சல் ஒன்று!
ஆக்கிடும் கறிகட் குள்ள
பெயர்களும், அவர வர்கள்
போக்கைப்போல் மாறு கொள்ளும்
புளிக்கறி குழம்பு சாம்பார்,
தேக்காணம் என்பார் ஒன்றே!
அப்பளம் அதனைச் சில்லோர்
பாழ்க்கப் பப்படம் என்பார்கள்
பார்ப்பான் அப்பளாம் என்கின்றான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கல்வி
அம்மையீர் சொன்ன வண்ணம்
அனைத்துக்கும் கல்வி வேண்டும்!
செம்மையிற் பொருள்ஒவ் வொன்றின்
பண்புகள் தெரிதல் வேண்டும்!
இம்மக்கள் தமக்குள் மேலோர்
இழிந்தவர் என்னும் தீமை
எம்மட்டில் போமோ, நன்மை
அம்மட்டில் இங்குண் டாகும்".
என்றனள் விருந்து வந்த
மலர்க்குழல் என்பாள்! அங்கு
நன்றுபூ வரச நீழல்
நடுவினில் நகைமுத் தோடு
நின்றுநா வரசன் என்னும்
இளையவன் நிகழ்த்து கின்றான்;
சென்றுநாம் அதையும் கேட்போம்
தமிழ்த்தேனும் தெவிட்டல் உண்டோ?
அம்மையீர் சொன்ன வண்ணம்
அனைத்துக்கும் கல்வி வேண்டும்!
செம்மையிற் பொருள்ஒவ் வொன்றின்
பண்புகள் தெரிதல் வேண்டும்!
இம்மக்கள் தமக்குள் மேலோர்
இழிந்தவர் என்னும் தீமை
எம்மட்டில் போமோ, நன்மை
அம்மட்டில் இங்குண் டாகும்".
என்றனள் விருந்து வந்த
மலர்க்குழல் என்பாள்! அங்கு
நன்றுபூ வரச நீழல்
நடுவினில் நகைமுத் தோடு
நின்றுநா வரசன் என்னும்
இளையவன் நிகழ்த்து கின்றான்;
சென்றுநாம் அதையும் கேட்போம்
தமிழ்த்தேனும் தெவிட்டல் உண்டோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நாவரசன் நகைமுத்து உரையாடல்
அகவல்
ஆளிழுக் கின்ற அழகிய வண்டி
இந்த வூரில் இருப்பதும், நமது
வில்லிய னூரில் இல்லா திருப்பதும்
ஏன்அக் காஎன இளையோன் கேட்டான்.
நகைமுத்து
நகைமுத் தென்பவள் நகைத்துக் கூறுவாள்:
"கல்வி தன்னிலும் செல்வந் தன்னிலும்
தொல்லுல கோர்பால் தொலையா திருந்திடும்
ஏற்றத் தாழ்வே இதற்குக் காரணம்;
இழுப்பவன் வறியவன்! ஏறினோன் செல்வன்!
இருவரும் ஒருநிலை எய்தும் நாளில்
ஆளைஆள் இழுத்தல் அகலும்; அந்நாளில்
தன்னி லோடிகள் தகுவிலங் கிழுப்பவை
என்னும் வண்டிகள் எவரையும் இழுக்கும்."
இழுப்பு வண்டி
"அழகிய வண்டி அழகிய வண்டி
நிழல்வேண்டு மாயின் நிமிர்த்துவர் மூடியை;
வேண்டாப் போது விடுவர் பின்புறம்!
காலைத் தொங்கவிட்டு மேலுட் காரலாம்!
இதுநம் மூரில் எப்போ துவரும்?
அதில்நாம் எப்போ தமர்ந்து செல்வோம்?"
என்று பிள்ளை இயம்பி நின்றான்.
"நம்மூர் சிற்றூர் நமக்கென் பயன்படும்?
பொதுமக் கள்தம் போக்கு வரவுகள்
இங்கு மிகுதி; ஏதுநம் மூரில்?
ஆயினும் வீண்பகட் டாளர் கூட்டம்
பெருகிடில் நம்மூர்த் தெருவிலும் நுழையும்!"
என்றாள் அன்றலர் கின்றபூ முகத்தாள்.
அகவல்
ஆளிழுக் கின்ற அழகிய வண்டி
இந்த வூரில் இருப்பதும், நமது
வில்லிய னூரில் இல்லா திருப்பதும்
ஏன்அக் காஎன இளையோன் கேட்டான்.
நகைமுத்து
நகைமுத் தென்பவள் நகைத்துக் கூறுவாள்:
"கல்வி தன்னிலும் செல்வந் தன்னிலும்
தொல்லுல கோர்பால் தொலையா திருந்திடும்
ஏற்றத் தாழ்வே இதற்குக் காரணம்;
இழுப்பவன் வறியவன்! ஏறினோன் செல்வன்!
இருவரும் ஒருநிலை எய்தும் நாளில்
ஆளைஆள் இழுத்தல் அகலும்; அந்நாளில்
தன்னி லோடிகள் தகுவிலங் கிழுப்பவை
என்னும் வண்டிகள் எவரையும் இழுக்கும்."
இழுப்பு வண்டி
"அழகிய வண்டி அழகிய வண்டி
நிழல்வேண்டு மாயின் நிமிர்த்துவர் மூடியை;
வேண்டாப் போது விடுவர் பின்புறம்!
காலைத் தொங்கவிட்டு மேலுட் காரலாம்!
இதுநம் மூரில் எப்போ துவரும்?
அதில்நாம் எப்போ தமர்ந்து செல்வோம்?"
என்று பிள்ளை இயம்பி நின்றான்.
"நம்மூர் சிற்றூர் நமக்கென் பயன்படும்?
பொதுமக் கள்தம் போக்கு வரவுகள்
இங்கு மிகுதி; ஏதுநம் மூரில்?
ஆயினும் வீண்பகட் டாளர் கூட்டம்
பெருகிடில் நம்மூர்த் தெருவிலும் நுழையும்!"
என்றாள் அன்றலர் கின்றபூ முகத்தாள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 11
|
|