புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10 
3 Posts - 6%
heezulia
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து


   
   

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:16 am

First topic message reminder :

கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜƒம்.

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.

கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோƒஜாவை மறந்துபோனான்.

அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.

அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.

என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.

இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.

பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.

மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.

நீங்கள் கடல்பைத்தியம்.

இல்லை. நான் கடற்காதலன்.

கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?

காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோƒ.

அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.

நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.

அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.

ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.

காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.

அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.

வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.

அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.

கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.

ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.

எதனால்?

ஆக்டோப… அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?

அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோƒஜா,

தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.

வா

மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.

குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.

ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.

மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.

ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்

பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:50 am

மனதிலிருந்தே
ஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும்
முயற்சி கொண்டால்தான்
பூமியும்கூடத் தாழ் திறக்கும்
கண்களிலிருந்தே
காட்சிகள் தோன்றும்
களங்களிலிருந்தே
தேசங்கள் தோன்றும்
துயரத்திலிருந்தே
காவியம் தோன்றும்
தோல்வியிலிருந்தே
ஞானங்கள் தோன்றும்
சூரியன் மறைந்தால்
விளக்கொன்று சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால்
கிளை ஒன்று கிடைக்கும்
மரமொன்று விழுந்தால்
மறுபடி தழைக்கும்.
மனம் இன்று விழுந்தால்
யார் சொல்லி நடக்கும்?
பூமியைத் திறந்தால்
புதையலும் இருக்கும்.
பூக்களைத் திறந்தால்
தேன்துளி இருக்கும்
நதிகளைத் திறந்தால்
கழனிகள் செழிக்கும்
நாளையைத் திறந்தால்
நம்பிக்கை சிரிக்கும்.

குஞ்சுகளைத் தன் அலகால்
கோதிவிடும் தாய்ப்பறவை
போல - கலைவண்ணன் பாடல்
அவர்கள் மனசு கோதியது.
மீண்டும் புன்னகை
வெயிலடிக்கவும் காய்ந்தது
கண்ணீர்.

பாட்டு முடிந்ததும் அவன்
தாவிப்பாய்ந்து தமிழை அள்ளித்
தன் மடி கிடத்தியபோது அவள்
தேகம் லேசாய்த் தகித்தது.
நெற்றி தொட்டான். சுட்டது.
கடலுக்கு என்ன தெரியும்-
அந்த புட்டியின் ƒஜாதகம்.

அதனுள் ஆறு ஆருயிர்கள்
அடக்கம் என்று அறியாமல்
அலைகள் அதை
உதைபந்தாடின.

ஏ உயிர்த்தூதுவனே.

கரை சேர்வதற்குள் நீ
கரைந்து போவாயா?
போ. போ.

அலைகளோடு யுத்தம் நடத்து.
காற்றை எதிர்த்துப்
போராடு. முட்டவரும்
மீன்களை எதிர்த்து முன்னேறு.

எப்போதாவது ஒரு சிப்பிக்குள்
விழும் மழைத்துளியைப் போல
ஏதாவதொரு மனிதக்கரத்தில்
சேர்ந்து விடு.

போ. போ.

வாழ்க்கை இன்னும் சில
கிலோ மீட்டர்தான். எட்டி
உதைத்து எதிர்நீச்சல் போடு.
சமுகம் வரவர
இறுகிக்கொண்டே வருகிறது.
மனிதன் கெட்டிப்பட்டுப்
போனான்.

நான்கு அறைகள் கொண்ட
இதயம் இறுகி இறுகி ஒரே
அறையில் இயங்கப்
பழகிவிட்டது.

அந்தி வெயிலில் விழும்
நிழலைப்போல சுயநலம் நீண்டு
கொண்டே போகிறது.
மனிதன் தன் சொந்தச்
செலவுக்கு மட்டுமே கண்ணீரைச்
சேமித்து வைக்கிறான்.

பொதுநலம் இறந்து
கொண்டிருக்கும் சமுகப்
போக்கில், போராட்டம்
இல்லாமல் எதுவுமே
கிடைப்பதில்லை.

பாலையில் நீர் காணப்
போராடலாம், பாறையில்
பயிர் வளர்க்கப்
போராடலாம், ஆனால்,
சுத்தம் அழிந்த இந்தச் சமுக
அமைப்பில் சுவாசிக்கக்கூடப்
போராட வேண்டியிருக்கிறது.
சந்திரோதயத்துக்காக -
சத்தியாக்கிரகம்.

மொட்டுகளுக்கு முன்னால் -
மலரச்சொல்லி மறியல்.
உணவு கிடைக்கும்வரை
உண்ணாவிரதம்.

இயல்பான சங்கதிகள்கூட
இங்கே இறுக்கமாகிவிட்டன.
முறைகெட்டுப்போன வாழ்க்கை
முறையில் சரியாகச்
சாப்பிடுகிறவன்கூடச்
சாதனையாளனாகி விட்டான்.
காணாமல் போன மீனவர்களை
மீட்கப் போராடாமல் தீராது
என்ற முடிவுக்கு வந்த மீனவர்
சங்கம் அடுத்த நாளே அதை
அமல்படுத்தியது.

முவர்ணக்கொடிகள்
கோட்டைக்கு
முன்னேறும் நேரம் அது.
ஆண்களும் பெண்களுமாய்ச்
சாலையின் இருமருங்கும்
அறிவிப்பில்லாமல்
அணிவகுத்தார்கள்.

குறிப்பிட்ட அமைச்சரின் கார்
தூரத்தில் வருகையில் பத்து
வயதுக்குட்பட்ட குழந்தைகளைத்
தார்ச்சாலைத்
தாமரைகளாய்த் தரையில்
பரப்பினார்கள்.

மனிதச் செங்கற்களால்
கட்டப்பட்ட வேகத்தடை.
கண்ணிமைக்கும் நேரத்தில்
நடந்துபோன இந்த அதிர்ச்சி
கண்டு கார்கள் மாரடைத்து
நின்றன.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:50 am

என்ன? என்னவாயிற்று?
அமைச்சர்கள் இறங்க,
பாதுகாப்பு அதிகாரிகள்
படபடக்க நேர்முக
உதவியாளர்கள் கோப்புகளால்
தங்கள் மார்புக்குக்
கவசமிட்டுக் குதிக்க,
வாகனங்கள் வரிசைகட்ட,

கூட்டம் கூச்சலிட அமைதி
இழந்தது அந்த இடம்.
என்ன? என்ன கோரிக்கை
உங்களுக்கு? ஏனிந்தப்
போராட்டம்?
ஒலிபெருக்கி தேவையில்லாத
கட்டைக்குரல் அமைச்சர்
கத்தினார்.

மீன் பிடிக்கப் போன
எங்கள் மீனவர்களை இரண்டு
வாரங்களாய்க் காணவில்லை.
மீட்பதற்கு எந்த முயற்சியும்
நடக்கவில்லை.

மனுக்கொடுத்தீர்களா?
சங்கத்தின் முலமாய்க்
கொடுத்துப்
பார்த்தோம். ஆனால்,
மந்திரிக்கும் மழைக்கும்
மனுச்செய்து புண்ணியமில்லை
என்று புரிந்துதான் போராட
வந்திருக்கிறோம்.
அமைச்சர் சற்றே
சிந்தித்தார்.

தன் கோபத்தைத் தோளில்
ஆடும் துண்டால் துடைத்தார்.
இதற்குத்தான் இந்த
அதிகாரிகளை நம்பி ஆட்சி
நடத்தக்கூடாது என்பது.

என்னிடமல்லவா கொடுத்திருக்க
வேண்டும். கொடுங்கள்.
நகல் அவரிடம் நீட்டப்பட்டது.
படித்தார்.
முதல் பக்கத்தை
எழுத்துக்கூட்டவே முன்று
நிமிடமாயிற்று.

சரி. சரி. இன்றைக்கே
ஏற்பாடு செய்கிறேன்
என்றவர்,
சாலையில் படுத்திருக்கும்
அத்தனை பிள்ளைகளுக்கும்
ஆளுக்கு நூறு ருபாய்
கொடுத்து எழுப்பு என்று
உதவியாளருக்கு
உத்தரவிட்டார்.

மன்னிக்க வேண்டும் நாங்கள்
உங்களுக்குக் கொடுத்தாலும்
நீங்கள் எங்களுக்குக்
கொடுத்தாலும் அதற்கு பெயர்
லஞ்சம்தான். இது
போராட்டம்.

படப்பிடிப்பல்ல. என்ற
மீனவர் சங்கத்தலைவன்,
எல்லோரும் கலைந்து
செல்லுங்கள் என்று உரத்த
குரலில் உத்தரவிட்டான்.

தாமரை மொட்டுக்கள்
மொத்தமாய் மலர்ந்து
குளத்தைக் கடந்து கரைக்குப்
போவது போல் அத்தனை
குழந்தைகளும் எழுந்து
அமைதியாய்க் கலைந்து
கூட்டத்தில் கரைந்தார்கள்.
சற்று நேரத்தில் அந்தக்கூட்டம்
வழுக்கைத் தலையில் விழுந்த
மழைத்துளியாய் வழிந்து
போனது.

அகத்தியர் தொலைபேசியைக்
கையிலெடுத்து அவரே
பொத்தான்களை அழுத்தினார்.
தொலைபேசியை அவரே
அழுத்துவது அபூர்வம்.
அப்போதெல்லாம் அவர்
ஆவேசத்திலிருக்கிறாரென்று
அர்த்தம்.

அந்தத் தொலைபேசியின்
பொத்தான்களுக்கு மெல்லிய
இறகின் …பரிசம் போதும்.
ஆனால், அவர் அழுத்திய
அழுத்தலில் தொலைபேசி
துளைபேசியாகிவிடும்
போலிருந்தது.

ஐ.ƒசி அவர்களே.
இன்று மாலைக்குள், என் மகள்
எங்கிருக்கிறாள் என்று தெரிய
வேண்டும். இன்று அல்லது
நாளைக்குள்
தெரியவில்லையென்றால்...

அதற்குமேல் சொல்ல வந்த
கெட்டவார்த்தைகளைத்
தொலைபேசியை வைத்துவிட்டுப்
பேசினார்.

ஏ.…சி. அறையில் உடம்பு
சுட்டது.
கடல் -
அதோ. அதோ.
என்றான் கட்டுமரக்கிழவன்.

என்ன? எங்கே?
என்றான் இளையவன்.
அவன் விரல் காட்டிய திசையில்
பாய்ந்து குதித்துப் புட்டியை
கைப்பற்றினான் இளைஞன்
பாவம். இருவருமே படிக்காதவர்கள்


மனிதர்களில் குதிரைகள் உண்டு.
தம் நிழல் கண்டு தாமே
அஞ்சும் குதிரை மனிதர்கள்.
மனிதர்களில் விட்டில்கள் உண்டு.
பூத்துக் குலுங்கும் பூக்கள்
அழைத்தாலும் பூக்களில்
வாயூன்றித் தேன்குடிக்கத்
தெரியாமல் இலைகள் தின்னும்
விட்டில் மனிதர்கள்.
மனிதர்களில் குரங்குகள் உண்டு.
தங்கக் கிண்ணத்தோடு அப்பம்
கிடைத்தாலும் அப்பம்
கவர்ந்துகொண்டு
தங்கக்கிண்ணத்தைத் தரையில்
எறிந்துவிடும் குரங்குமனிதர்கள்.

கட்டுமரக் கிழவனையும்
இளைஞனையும் அப்படித்தான்
பீடித்தது அறியாமை அச்சம்.
புட்டியின் முடி திறக்க இளைஞன்
தவித்தான். கிழவன்
தடுத்தான்.

இது கடத்தல் புட்டியோ.
வெடிகுண்டுப் புட்டியோ.
வேண்டாம் விளையாட்டு. வீசி
எறிந்துவிடு.

கிழவன் சொன்னதை இளைஞன்
செய்தான். மீண்டும் அலைகளின்
கால்களில் அது
உதைபந்தானது.
கலைவண்ணன் இன்னும்
கண்திறக்கவில்லை.

ஆனால், கைகளும் செவிகளும்
மட்டும் விழித்துக்கொண்டன.
ஏதோ சுடுகிறது - கைகள்
சொல்லின.

ஏதோ ஒரு முனகல் -
செவிகள் உணர்ந்தன.
புணர்ந்து கிடக்கும்
காதலர்களை முயன்று பிரிப்பது
மாதிரி தூக்கத்திலிருந்து
இமைகளைத் துண்டித்துப்
பிரித்தான்.

என்னவாயிற்று தமிழுக்கு?
ஒரு புழுவைத் தொட்டவுடன்,
உடம்பின் இரு துருவங்களையும்
அது ஒன்றாகச் சுருட்டிக்
கொள்வது மாதிரி
குமரித்தாமரை ஏனிப்படிக்
குறுகிக்கிடக்கிறாள்.
அந்த அழுக்குப்
போர்வைக்குமேலே
அனலடித்தது.

போர்வையைப் புறந்தள்ளி
அவள் நெற்றி தொட்டான்.
தொடர்ந்து தொட
முடியவில்லை - அவ்வளவு
வெப்பம்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:50 am

எந்த மொழியிலும் சேராத,
ஆனால் எந்த மொழிக்காரனும்
புரிந்துகொள்கிற ஒலிகளை
அவள் முனகினாள்.
இது மழைக்காய்ச்சல்.

அய்யோ இவளை நனையச்
சொன்னவன் நான்தானே.
தமிழ். தமிழ்.

அவன் கூப்பிட்ட குரலுக்குப்
பதிலில்லை.

என்ன இது? நேற்று ஒத்தடச்
சூட்டைப்போல் இருந்த
காய்ச்சல், இன்று
உலைச்சூட்டைப் போல்
ஏறிவிட்டதே. சித்திரை
மாதத்துக் கத்திரிவெயிலாய்த்
தேக வெப்பம்
அதிகமாகிறதே. பசியாலும்
தாகத்தாலும் தேய்ந்தும்,
நைந்தும், தொய்ந்தும்
கிடக்கிற தேகம் - இந்தக்
கடுங்காய்ச்சல் எப்படித்
தாங்கும்?

ஏ, பாலைவனப் பஞ்சே.
உன்னைப் பற்ற வைத்தது
யார்?

தண்ணீரில் தன் கைக்குட்டை
நனைத்தான்.
அதைப் பிழிந்தும் பிழியாமல்
அவள் நெற்றியில் பரப்பினான்.

அசோகவனத்தில் கண்ணீரில்
நனைந்த சீதையின் மேலாடை
அவள் பெருமுச்சில்
உலர்ந்ததுபோல், அடுத்த சில
நிமிடங்களில் காய்ந்துபோனது
கைக்குட்டை.
வெயில் ஏறஏற அவளுக்குக்
குளிரெடுத்தது.

மீனவர்களின் துணிகளையும்
போர்வைகளையும் சேர்த்துப்
போர்த்திப் பார்த்தபோதும்
காய்ச்சல் இறங்கவில்லை.
நடுக்கம் அடங்கவில்லை.
இமை திறக்க முடியவில்லை.

கண்கள் அவள்
கட்டுப்பாட்டைவிட்டுப்
போய்விட்டன.
அவள் கைகள் மட்டும்
அனிச்சைச் செயலாய்
அசைந்தசைந்து எதையோ
தேடின.

கலைவண்ணனின் கைகள்
தொட்டதும் தேடல் நின்றது.
உயிரின் பாசமெல்லாம் அந்த
…பரிசத்தில் குவிந்தது.
நோய் என்பதொரு கொடை.
தறிகெட்டோடும் வாழ்க்கையில்
அது ஒரு மெல்லிய
வேகத்தடை.

வாழ்வின் பெருமையை
உயர்த்துவதும் - உறுப்புகளின்
அருமையை உணர்த்துவதும் -
நேற்றையும் இன்றையும்
நேசிக்க வைப்பதும் -
தன்னைச் சார்ந்தவர்பற்றி
யோசிக்க வைப்பதும் - ஒரு
நிமி„ச்சொட்டின் விலை என்ன
என்று நிறுத்துச் சொல்வதும் -
செலுத்தப்படாத அன்பைச்
செலுத்தச் செய்வதும் - திமிர்
கொண்டோடும் தேகத்தை
ஞானப்பாதைக்கு அழைத்து
வருவதும் -
மனிதனுக்குள்ளிருக்கும்
சிங்கம்புலிகளைத்
துரத்தியடிப்பதும் -
கடந்தகாலத் தவறுகளை
எண்ணிக் கடைவிழியில் நீரொழுக
வைப்பதும் - நோய்தான்.

ஆகவே உடம்பே.
அவ்வப்போது கொஞ்சம்
நோய் பெறுக.

நோயற்ற வாழ்வுதான்
குறைவற்ற செல்வம்.

ஆனால் நோயும் ஒரு
செல்வமென்று பட்டுத்தெளி,
மனமே.

தன்மடியில் தமிழ்ரோƒஜாவின்
தலைதாங்கிக் கிடந்தவன்,
அவள் ஒரக்கண்ணில் சொட்டும்
சுடுகண்ணீர் துடைத்தான்.
தமிழ். தமிழ்.
என்றான்.

அவள், தண்ணீர்.
தண்ணீர். என்றாள்.
அவன் தண்ணீர் கொண்டுவந்து
தாய்ப்பாலாய் ஊட்டினான்.

குலுங்கும் வாகனத்தில்
தாயைக்கட்டிக் கொள்ளும்
குழந்தைமாதிரி - அவனைச்
சேர்த்துக் கட்டி, அவன்
மடியில் புதைந்து போனாள்.
அவன் இடுப்பைச் சுற்றி
நெருப்பெரிந்தது.

ஏதோ முனகினாள்.

அவன் சப்தங்களுக்குப்
பக்கத்தில் செவிகளை
வைத்தான்.

அவள் முனகியது கேட்டது.
எனக்குத் தெரியும், நான்
இறந்துபோவேன்.

அவன் துடித்துப் போனான்.

அடியே. என் ஆருயிரே.

என்ன சொன்னாய்? நீ இறந்து
விடுவாயா? உன்னை
இறக்கவிடுவேனா? என்
உயிரை உறைபோட்டல்லவா
உன் உயிரை வைத்திருக்கிறேன்.
மரணம் என் உயிர் கிழிக்காமல்
உன் உயிர் தொடுவது எப்படி?
உன்மீது நான் கொண்டிருப்பது
வெறும் தசைநேசமன்று.

அது - காதலும் தாய்மையும்
கலந்தஅபூர்வ அனுபவம்.
என் உயிரின் பெண்வடிவம் நீ.
உன் உயிரின் ஆண்வடிவம் நான்.
இதில் யாருக்குத் தனியாகச்
சாவு வரும்? நீ மரித்தால்
என் மரணம். நான் மரித்தால்
உன் மரணம். நாம்
மரிக்கமாட்டோம். யார்
உயிர் யாருடையதென்று
மரணத்துக்குக் குழப்பம் வரும்.
நாம் மரிக்கமாட்டோம்.
அவள் உதடுகள் சிரமப்பட்டுச்
சிரித்தன.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:51 am

இது ஆறுதல். உங்கள்
உணர்ச்சி உண்மை. ஆனால்,
அது உயிர்காக்கப்
போவதில்லை. என் உடம்பில்
இப்போது எதுவுமில்லை. நான்
ஏறக்குறைய இறந்துவிட்டேன்.
உயிரின் கடைசித் துளிகளை
ஆவியாக்கத்தான் என் உடம்பில்
காய்ச்சல்
உலைமுட்டியிருக்கிறது.

கண்களைத் திறக்க முடியாதவள்
கைகளால் அவன் முகம்
துழாவினாள்.
அவன் நெற்றியை, முக்கை,
கண்களை, தாடி முளைத்த
கன்னத்தைத் தடவித் தடவிப்
பார்த்தாள்.

அந்தக் கடுஞ்சூட்டிலும் முகத்தின்
ஒரு முலையில் பரவசம்
காட்டியவள் -
நான் சாவதில் எத்தனை
சந்தோ„ப்படுகிறேன்
தெரியுமா? என்றாள் மிக
உண்மையாய்.
அவள் உதடுகளைத் தன்
உள்ளங்கையால் பொத்தியவன்,
உளறாதே. என்று
பதறினான்.

இல்லை. என் சாவையும்,
சந்தோ„த்தையும் உங்களால்
தடுக்க முடியாது. பூ உதிர்ந்து
ஒரு புல்வெளியில் விழுவது
மாதிரி உங்கள் பாதுகாப்பான
மடியில் நான் பத்திரமாகச்
சாகிறேன்.

அவன் ஒரு கையில் அவள்
உள்ளங்கை அழுத்தி மறுகையால்
நெற்றி தடவினான்.
ரோƒஜா சுடுமா? சுட்டது.
வாழ்வின் முதல்
வார்த்தையைக்கூட
உச்சரிக்காத நீயா மரணத்தின்
கடைசி வார்த்தை
பேசுகிறாய்?
இல்லை. நீளமான
வாழ்க்கையில் நிம்மதி இல்லை.
இங்கு எல்லா
மனிதர்களும் முதல் பாகத்தின்
இனிப்பை இழந்து,
இரண்டாம் பாகத்தின்
கசப்போடுதான்
சாகிறார்கள்.

இதுவரைக்கும்
என் வாழ்க்கை இனிமைகளால்
நிறைந்தது. இப்படியே
இறந்துவிடுவது இதமானது. ஒரு
வெற்றியோடு போரை
நிறுத்திக்கொண்ட அசோகச்
சக்கரவர்த்தி மாதிரி காதலின்
இனிய நினைவுகளோடு என்
முச்சை நிறுத்திக்
கொள்கிறேன்.

முடியாது. உன்னைச்
சாகவிடமாட்டேன்
-கலைவண்ணன் உணர்ச்சியில்
உடைந்தான்.

ஆமாம் தங்கையே.

உன்னைச்
சாகவிடமாட்டோம் -
மீனவர் வயிற்றிலிருந்து வந்தன
வார்த்தைகள்.
எப்படித் தடுப்பீர்கள்?

உங்கள் பத்துக்கரங்களும் என்
உடம்பை மொத்தமாகப்
பொத்தினாலும், மரணம்
உங்கள் விரல்களின் இடுக்கில்
புகுந்து என் உயிரை
வெளியேற்றிவிடும். உயிரைத்
தரமாட்டோம் என்று
சொல்வதற்கு நீங்கள் யார்?
மரணம் யாரையும்
யாசிப்பதில்லை.
கவர்ந்துகொள்கிறது.
ஏ, பேதைப் பெண்ணே.

உனக்குள் எப்படி இத்தனை
ஒளிவீச்சுகள். மரணத்தைச்
சிந்திக்க ஆரம்பித்தால்
ஞானக்கதவு திறந்து
கொள்கிறதா? ஞானத்துக்குப்
பக்கத்தில் மரணமா? அல்லது
மரணத்துக்குப் பக்கத்தில்
ஞானமா?
புலம்பாதே தமிழ்.
புலம்பாதே. மரணத்துக்குக்
கண்தெரியும். உன் அரும்புமுகம்
பார்த்தால் அது உன் உயிரைப்
பறிக்காது.

இல்லை - மரணம் ஒரு
புயல். அரும்புக்கும் சருகுக்கும்
அதற்கு வித்தியாசம்
தெரியாது.

அதற்குப் பிறகு அங்கே
மெளனம் நிலவியது.
கண்ணீர் என்ற வீட்டுச்
சொந்தக்காரன்
வந்துவிட்டால்,
வாடகைக்கிருந்த வார்த்தைகள்
வெளியேற வேண்டியதுதானே.
அவள் விழிப்பதற்கு
முயன்றுமுயன்று தோற்றாள்.

பிறகு மெல்ல மெல்ல
இமைகளை மேலெழுப்பினாள்.
எல்லாக் கண்களிலும் ஈரம்
பார்த்தாள்.

உணவு, மருந்து
இரண்டுமில்லாமல் அவள் உயிர்
காப்பது எப்படி என்று
அவர்கள் உறைந்து
நின்றார்கள்.

தனக்கு அவள் தனிமை
வேண்டுமென்றாள்.
சற்றே தள்ளி இருங்களென்று
சைகை செய்தாள்.
நால்வரும் பேசவில்லை.
நகர்ந்தனர்.

அவள் உணர்ச்சிவசமானாள்.
மிச்சமிருந்த உயிரையெல்லாம்
உதட்டில் திரட்டி அவன்
மார்பில் முத்தமிட்டாள்.

நான் சொல்வதைக்
கவனமாய்க் கேளுங்கள். நான்
இங்கேயே இறந்துவிட்டால்,
என் உடலைக் கரைக்குக்
கொண்டுசென்று பூமியில்
புதைக்காதீர்கள். பூமியில்
இன்னும் எத்தனையோ
உடல்களுக்கு இடம்
வேண்டியிருக்கிறது. ஒருவருக்கு
என் பிணக்குழியை விட்டுக்
கொடுத்தேன் என்ற பெருமை
எனக்கிருக்கட்டும்.

உடம்பை எரித்துத்தானே
கடலில் கரைப்பார்கள்.. என்
உடம்பையே கடலில்
கரைத்துவிடுங்கள். பசியால்
சாகப்போகும் என் உடம்பு,
மீன்களின் பசிக்கு
உணவாகட்டும்.

நம் காதலுக்கு
மடிதந்த கடற்கரையைக்
கேட்டதாய்ச் சொல்லுங்கள்.

அந்தப் பூங்காவில், நம்
காதலைக்
கவனித்துக்கொண்டிருந்த
அசோக மரங்களைக்
கேட்டதாய்ச் சொல்லுங்கள்.

பூமிக்குள் பதுங்கியிருந்து
செப்டம்பரில் தலைகாட்டும்
புல்வெளிகளைக் கேட்டதாய்ச்
சொல்லுங்கள். அந்தத்
தூங்குமுஞ்சி மரத்தின்
சாயங்காலப் பறவைகளின்
செளக்கியம் கேட்டதாய்ச்
சொல்லுங்கள். சென்னை
நகரத்தின் நடைபாதைத்
தேநீர்க்கடைகளைக்
கடைசியாய் நலம் கேட்டேன்
என்று கண்டிப்பாய்ச்
சொல்லுங்கள்.

எனக்கு நல்லவர் என் தந்தை.
என் கண்கள் வடிக்கும் கடைசி
இரண்டு துளிகளில் ஒரு துளி
அவருக்கு, ஒரு துளி உங்களுக்கு
என்பதையும் நான் சொன்ன
இதே வார்த்தைகளின்
வரிசையில் அவருக்குச்
சொல்லுங்கள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:51 am

அதற்குமேல் பேசமுடியாமல்
அவள் இமைகளும் உதடுகளும்
முடிக்கொண்டன.

தன் இருகைகளிலும் அந்தச்
சிதைந்த ரோƒஜாவைச்
சிந்தாமல் சிதறாமல் அள்ளி,
நம் காதல்மீது ஆணை.
உன்னை உயிரோடு
கரைசேர்ப்பேன்.

இல்லையென்றால் நம் இரண்டு
உடல்களும் கரைசேரும்
என்று அவள் காதில் குனிந்து
உறுதிமொழிந்தான்.

அவள் கண்ணில் வழிந்த சுடுகண்ணீர்
அவன் உதட்டில் விழுந்தது.

கறுத்த மேகங்கள் வானத்தை வளைத்து
முற்றுகையிட்டிருந்தன.

சூரியனுக்கும் பூமிக்குமுள்ள தொடர்பு
துண்டிக்கப்பட்டிருந்தது.

பகல் இருட்டை அணியத் தொடங்கியிருந்தது.
மேகம் சில துளிகளை, விட்டுவிட்டுச் சொட்டியது.

சுங்கத்துறைப் படகொன்று வேட்டையில்
எதுவும் சிக்காமல் வெறுங்கையோடு கரை
திரும்பிக் கொண்டிருந்த நேரம் -
கடலில் மிதக்கும் ஊசியைக்கூடக் கண்டறியும்
ஒரு கழுகுக்கண் அதிகாரியின் கண்களில்
அது தட்டுப்பட்டுவிட்டது.

அதோ பாருங்கள். படகை அங்கே செலுத்துங்கள்.
தண்ணீரை உழுது விரைந்தது படகு.

ராமனின் கால்களுக்காக காத்துகிடந்த
அகலிகைக் கல்லைப்போல தக்கவர்களின்
கைகளுக்காகத் தண்ணீர்த்தவம் புரிந்த புட்டி
கடைசியில் சேரவேண்டியவர்களின் கைகளில்
சேர்ந்துவிட்டது.

கண்டுபிடித்துவிட்டோம். கண்டுபிடித்து
விட்டோம். ராயபுரம் கடற்கரையிலிருந்து
தென்கிழக்கே நாற்பது முதல்
நாற்பத்தைந்தாவது கிலோமீட்டரில்,
பழுதுபட்டு நிற்கும் விசைப்படகில் காணாமல்
போனவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள்
இரண்டு விசைப்படகுகள் தயாராகட்டும்.

உணவோடும் மருந்துகளோடும் ஒரு
மருத்துவரும் உடன் செல்லட்டும் அவர்களை
இன்றே மீட்டு இரவுக்குள் கரைசேரட்டும்
கட்டளைகள் பறந்தன.

டீசல் குடித்து வயிறு புடைத்த விசைப்படகுகள்
கடல் கிழக்கத் தயாராயின.

இருள் கவிந்த வானம் சின்னத்தூறல்களை
முணுமுணுத்தது.

அடிவானம் வரைக்கும் அப்பிக்கிடந்த
மேகங்கள் வானமெங்கும் தார்ச்சாலை
போட்டதுபோல் அடர்த்தியாயிருந்தன.

ஓநாயின் பா¨„ கற்றுக்கொண்ட காற்று
லேசாய் ஊளையிடத் தொடங்கியது.

இப்போதோ பிறகோ வானம் திறந்து
கொள்ளலாம் என்று தெரிந்தது.

மீட்புப் பணிகளுக்குப் படகுகள்
தயாரானபோது அகில இந்திய வானொலியின்
அறிவிப்பொன்றைத் தொண்டை கட்டிய
வானொலிப் பெட்டியொன்று துருப்பிடித்த
குரலில் பேசியது.

ஓர் அறிவிப்பு. வங்கக்கடலில்
சென்னைக்குத் தென்கிழக்கே 240 கிலோமீட்டர்
தூரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு
மண்டலம் ஒன்று உருவாகியிருக்கிறது.

அது புயலாக வலுவடைந்து மேற்கு
வடமேற்குத் திசையில் நகரக்கூடும். அடுத்த
48 மணிநேரத்தில் கடலோரப் பகுதிகளில்
இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர்
வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும்
கடல் கொந்தளிப்பு ஏற்படலாம். மீனவர்கள்
கடலுக்குள் செல்லவேண்டாம் என்று
எச்சரிக்கப்படுகிறார்கள்.

எங்கோ ஒரு மேகம் இருமியது.
விரையத் தயாரான விசைப்படகுகள்
விறைத்து நின்றன.

மடியில் தமிழையும் வயிற்றில்
நெருப்பையும் கட்டிக்கொண்டு
கிடந்த கலைவண்ணன் வானிலை
மாற்றம்கண்டு மனநிலை
மாறிப்போனான்.

ஏ. என்னவாயிற்று கடலுக்கு?
பகல் ஏன் இருட்டை உடுத்தப்
பார்க்கிறது. வானம் ஏன்
காணாமல் போனது? சூரியனை
மேகம் தின்றுவிட்டதா?

என் கண்மணியின் வெப்பம்
அதிகமாகும் வேளையில்
காற்றின் வெப்பம் ஏன்
குறைந்துகொண்டே போகிறது?

அலைகள் ஏன் பேசுவதை
நிறுத்திக்கொண்டன? கடல் ஏன்
மெளனம் சாதிக்கிறது?
மரணத்துக்கு முன்பே
மெளனாஞ்சலியா?

எங்கள்
திசைகளைத் திருடிக்கொண்டது
யார்? திசைகளைத்
தெரிந்துகொள்ள இதுவரை
சூரிய அடையாளம் இருந்தது.
இப்போது அந்த அடையாளமும்
அழிந்துவிட்டதே.
அதுவும்

சரிதான். பயணம்
போகாதவர்களுக்குத் திசை
எதற்கு?

மீனவர்கள் படகின்
விளிம்புகளுக்கு ஓடியோடி
வானம் பார்த்தார்கள்.
வானிலை போலவே முகம்
இருண்டார்கள்.

தமிழ். தமிழ். - அவன்
கூப்பிட்ட அழைப்புக்குக் குரல்
இல்லை.

செடிக்குத் தெரியாமல்
உதிர்ந்த சிறுமலரைப்போல
நினைவுகள் அவளைவிட்டு
நீங்கிவிட்டன.

ஆனால், அவள் உதடுகள்
மட்டும் முளையின்
கட்டுப்பாட்டிலிருந்து
விடுபட்டு முனகிக்
கொண்டேயிருந்தன.
எங்களோடு என்ன ஊடல்
கடலே. ஏனிந்த இறுக்கம்?

எங்கள் காற்றை எங்கே
கடத்திவிட்டாய்?

ஒன்று மட்டும் புரிகிறது.
இப்போது நீ அடைந்திருப்பது
அமைதி அல்ல. கோபமான
மெளனம் அல்லது மெளனமான
கோபம்.

இதுவரை நாங்கள் பட்டதும்
படுவதும் போதாதா?
எங்கள் படகையே மரணத்தின்
தொட்டிலாக்கி,
தாலாட்டுக்கும் ஒப்பாரிக்கும்
மத்தியில் ஒரு சங்கீதம்
பாடிக்கொண்டிருந்தாயே.

அதைக்கூட ஏன்
நிறுத்திவிட்டாய்?
எங்களை வருத்தியெடுத்தது
போதாதா? இன்னும்
வறுத்தெடுக்க வேண்டுமா?

வீசு காற்றே வீசு.
பேசு கடலே பேசு.

அவர்கள் இருந்த இடம்,
புயலின் கண் மையம்
கொண்டிருந்த பிரதேசம்.

அவர்களுக்குத் தெரியாது -
புயலின் இமை பேசும்.
புயலின் கண் பேசாது என்ற
செய்தி.

புயலின் கண்ணுக்குள்ளிருப்பவர்கள்
பாதுகாப்பாகவே
இருப்பார்கள்.

அங்கே
காற்றழுத்தம் குறையும்.
கடல்வெப்பம் குறையும்.
உறங்கும் வேட்டை நாயைப்
போலவே கடல்
மெளனமாகவே இருக்கும்.

ஆனால், புயலின் கண் நகர்ந்து
நகர்ந்து அவர்கள் மீது
இமைத்தால்போதும் -
குமிழிமேல் விழுந்த இடியாய்
அவர்கள் குலைந்து
போகக்கூடும்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:51 am

எப்போதும் இந்த பூமியைச்
சுற்றி இரண்டாயிரம் புயல்கள்
இருந்துகொண்டேயிருக்கின்றன.

சில புயல்கள் வலுவடைந்து
வளர்ந்து வருகின்றன. சில
புயல்கள் பெருமுச்சோடு
இறந்து விடுகின்றன.
புயல் என்பது பூமியின்
வரம்தான்.

பூமியின் உ„ணக்காற்றை
உள்வாங்கி, அதைப் பூமிக்கு
மேலே அனுப்புவது புயல்தான்.
ஐம்பது கோடி லிட்டர்
தண்ணீரை உறிஞ்சிக்கொண்டோடி
வந்து பூமியில் ஊற்றுவது
அதுதான்.

ஆனால், புயலுக்கிருப்பது
ஒற்றைக்கண். அதற்கும்
பார்வை
கிடையாது.

அதனால்தான் அது இடம்
தெரியாமலும் தடம்
தெரியாமலும் அடித்துத்
தடுமாற வைத்து விடுகிறது.

புயலுக்கு இரண்டே குணம்.
பூமத்திய ரேகையிலிருந்து
கீழ்நோக்கி வலப்புறம்
சுற்றுவது.

பூமத்திய ரேகையிலிருந்து
மேல்நோக்கி இடப்புறம்
சுற்றுவது.

அந்த ஆறு ƒஜீவன்களுக்கும்
தெரியாது. அவர்களுக்குத்
தென்கிழக்கே, பூமிக்கு
எதிராய் அப்படி ஒரு புயல்
படைதிரட்டிக் கொண்டிருக்கும்
பயங்கரம்.

புயலின் திசை என்பது
பைத்தியக்காரன் கையில் பந்து
மாதிரி - எங்கே வீசும் என்று
எவருக்கும் தெரியாது.
கடலைப்போலவே கரையிலும்
ஒரு கொந்தளிப்பு.

உயிரை உறையவைக்கும்
வாடைக்காற்று.

இப்போதோ பிறகோ
தரையில் விழுந்து விடுவேன்
என்று பயமுறுத்தும் வானம்.

விசைப்படகுகளைச் சூழ்ந்து
மீனவர் குடும்பங்கள்.
கதறும் கைக்குழந்தைகள் -
பதறும் தாய்மார்கள் - சீறும்
இளைஞர்கள்.

என் பிள்ளைகளை மீட்பதற்கு
இந்தப் படகுகள் போகுமா?
போகாதா? - இசக்கியின்
அன்னை நடுங்கும் குரலில்
நடுங்காமல் கேட்டாள்.
புயல் வரப்போகிறதாம்.
படகு போகாதாம். -
வரலட்சுமி சொன்னாள்
கோபம் குழைத்த பயத்தில்.

என் அப்பா செத்துப்
போவாரா? - விம்மி
அழுதாள் சிறுமி மீனா.

அதிகாரிகளே
சொல்லுங்கள். எங்கள்
ஆட்களைக் காப்பாற்ற இந்தப்
படகுகள் கடலுக்குள் போகுமா
போகாதா?
இப்போது போகாது.

மேலிடத்து உத்தரவுக்காகக்
காத்திருக்கிறோம்.

தன் சட்டையைப் போலவே
இ…திரிபோட்ட
வார்த்தைகளால் பேசினார்
ஓர் அதிகாரி.

நாங்கள் யாருடைய
உத்தரவுக்காகவும்
காத்திருப்பதில்லை - சீறிய
இளைஞர் கூட்டம் படபடவென்று
படகுகளுக்குள் குதித்துப்
பரவியது.

அதிகாரிகளின் கண்ணெதிரே
படகுகள் நொறுங்கின. சுக்கான்களைச்
சிலபேர்
உடைத்தெறிந்தார்கள்.

விளிம்புகளைச் சிலபேர் வெட்டித்
தள்ளினார்கள்.
தவிடு பொடியானது தளம்.

காற்றில் பறந்து கடலில் விழுந்தது மேற்கூரை.
ஒரு கோபக்கார இளைஞன் டீசல்கலத்தின்
முடியை உடைத்துத் திறந்தான்.

ஒரு தீக்குச்சி கொளுத்திப் படகுக்குள்
வீசியெறிந்து வெளியே குதித்தான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அத்தனை
படகுகளிலும் பற்றிப் பரவியது நெருப்பு.
அதை அணைக்கலாமா வேண்டாமா
என்று இடி இடித்துப் பட்டிமன்றம்.
நடத்தியது மேகம்.

பேசுவதை நிறுத்திக் கொண்டது கடல்.
முனகுவதையும் நிறுத்திக்கொண்டாள்
தமிழ்ரோƒஜா.

உ„ணத்தில் உலர்ந்து, காய்ந்து சாம்பல்
பூத்திருந்த அவள் உதடுகளின் மடிப்புகளில்
மரணம் வரிவரியாய் உட்கார்ந்திருப்பது
போலவே தோன்றியது.

இன்னும்,, இன்னும்,, இருண்டுகொண்டே
வந்தது வானம்.

இன்றைய பகல் மத்தியானத்திலேயே
செத்துவிட்டதா?

கலைவண்ணன் மீனவர்களை அழைத்து
மெல்லச் சொன்னான் நமக்கு ஏதோ ஒரு
திசையில் புயல் உருவாகி இருக்கிறது
புயலின் மெளனப் பிரதேசத்தில் நாமிருக்கிறோம்.
அந்தப் புயல் நம்மீது கடக்கலாம் அல்லது நம்மேல்
கருணைவைத்து வேறொரு திசையிலும் வீசலாம்.
நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
அவநம்பிக்கை இருட்டு. மீனவர் முகங்களில்
முகாமிட்டது.

எதற்கும் தயாராக இருக்க வேண்டுமா
பேனாக்காரரே. அப்படியானால் நாம்
சாவுக்குத் தயாராக இருக்க வேண்டியதுதான்.

ஏன் சாவைப் பார்த்து இப்படிப்
பயப்படுகிறீர்கள்? புயலடிக்கும் முன்பே
பயமடித்துச் செத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே.
இல்லை.. இல்லை.. பயப்படவில்லை
பசியால் செத்தாலென்ன புயலால்
செத்தாலென்ன சாவு சாவுதான்
பயமும் விரக்தியும் தொனிக்கப் பேசினான்
பாண்டி.
அல்லா நம்மை மன்னிக்கமாட்டர்.

நம்முடைய சாவுக்கு முன்பே தங்கையைக்
காவுகொடுத்து விடுவோம் போலிருக்கிறதே
கண்ணீரையும் தன்னையும் கட்டுப்படுத்த
முடியாத சலீம் கதறி அழுதான்.

புயல் தன் வி„ நாக்கை வீசாமலும்
மரணம் தன் நச்சுவிரலைச் சொடுக்காமலும்
சிலமணி நேரம் தூரத்தில் நின்று இந்தத்
துடிக்கும் உயிர்களை வேடிக்கை பார்த்தன.
அங்கே காற்றழுத்தம் குறைய - வெப்பநிலை
குறைய - தண்ணீர் இறுகித் தரையாகிவிட்டது
போல் சலனமற்றிருந்தது சமுத்திரம்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:52 am

புயல் தன் யுத்தத்தைக்
கரையில் தொடங்கிவிட்டது.
தன்னை எதிர்த்து நிற்கும்
மரங்களை வேரோடு
வீழ்த்திவிட்டு யாரங்கே?
என்று கூவியது.
வானத்தில் நடக்கும் கத்திச்
சண்டைகண்டு பூமி தன்
வீடுகளைப்
பூட்டிக்கொண்டதால்,
ஒவ்வொரு வீடாகச் சென்று
கதவுதட்டியது புயல்.

மழை...

அடர்ந்த மழை...

கூழாங்கல்லின் குழந்தைகள்
மாதிரி பருத்த துளிகள் விழும்
கனத்த மழை...
மனிதர்கள் நடக்க முடியாத
சாலைகளில்
விரைந்துகொண்டிருந்தது
வெள்ளம்.
ஒரு சாலையில் ஓர் எருமையின்
கொம்புகள் மட்டும் மிதந்து
வந்தன.

கொம்புகளுக்குக் கீழே
எருமை இருந்தது.
அரசாங்கம் செய்ய
முடியாததை மழை செய்தது -
பள்ளத்தில் முழ்கிய பாமர
மக்கள் பள்ளியில்
ஒதுங்கினார்கள்.

தவளைகூடப் பாம்பின்
வளையிலாவது ஒதுங்கத்
துடிக்கும் அந்தப் பயங்கரப்
புயல்மழையில், மீனவர் சங்கம்
மட்டும் கடற்கரையில் கூடி,
மழையில் நனையும்
போராட்டத்தை அறிவித்தது.
மாற்று ஏற்பாடுகள் செய்து,
எங்கள் மீனவர்
மீட்கப்படும்வரை நாங்கள்
இருநூறு குடும்பங்களும்
இப்படியே நின்றுகொண்டே
மழையில்
நனைந்துகொண்டேயிருப்போம்...
ஏப்ரல் மாதத்தில்கூட
நடுங்கும்கிழவிகள் நனைய...
நனைய...

ஒவ்வொரு வரு„மும் இதுதான்
கடைசித் தீபாவளி என்று
கருதும் கிழவர்கள் நடுங்க...
நடுங்க...

இப்போதுதான்
தொப்பூழ்க்கொடி
அறுக்கப்பட்ட கைக்குழந்தைகள்
அழத்தெரியாமல் அழ...
அழ...

வைராக்கியமுள்ள பெண்களின்
கூந்தல்வழியே மழைத்தாரைகள்

வழிய... வழிய...
சட்டையணியாத தேகத்தோடு
இளைஞர்கள் மழைக்கு மார்பு
திறந்திருக்க...
முந்நூறு பேருக்குமேல் அந்தக்
கடற்கரையில் உயிருள்ள
சிலைகளாய்ச் சொட்டச்
சொட்ட நனைந்து
கொண்டிருந்தார்கள்.

ஒரே ஒரு கிழவன்மட்டும் ஒரு
முக்கோணக்கோணி எடுத்துத்
தனக்கு முக்காடு
போட்டுக்கொள்ள...
சீ... உனக்கு
வெட்கமாயில்லை... என்று
காறித்துப்பி, அவன்
துணைக்கிழவி வந்து அதைத்
தூக்கியெறிந்தாள்.
கிழவன் கூன் நிமிர்ந்தான்.
நான் சந்தேகப்பட்டது
சரியாகிவிட்டது. புயல்
நம்மைத்தான்
கடக்கிறது...

- அபாயச் சங்காய்
அலறினான் பாண்டி.
அவர்களுக்கு மேலிருந்த வானம்
திறந்துகொண்டது.

மழை என்ற ஒரே
தலைப்பில் வானம்
கோடிக்கணக்கான
வார்த்தைகளால் பேசத்
தொடங்கியது.
கலைந்துவிட்டது கடலின்
மெளனம்.

அதுவரைக்கும் கழற்றி
வைத்திருந்த சலங்கைகளை
அவசரமாய் எடுத்து
அணிந்துகொண்டன அலைகள்.
ƒதிசொல்லும் புயலுக்காடத்
தயாராகிவிட்டது சமுத்திரம்.

துச்சாதனப்புயல் செய்த முதல்
காரியம் - படகின் நங்கூரம்
களைந்ததுதான்.

இப்போது படகு, அலைகளின்
ஆளுகைக்கு வந்துவிட்டது.
நகர்ந்தும் சாய்ந்தும்
ஆடியும் அலைந்தும் -
எதிர்முனை உயர்ந்தும்
மறுமுனை அமிழ்ந்தும் -
மறுமுனை உயர்ந்தும்
எதிர்முனை அமிழ்ந்தும் -
விநாடிக்கொரு ஆபத்தை
அடைந்தது விசைப்படகு.
வானத்திலிருந்து மழையின்
அம்புகள். கடலிலிருந்து
அலைகளின் கதாயுதங்கள்.
கேடயம் இல்லாத படகு,
கிறுக்குப்பிடித்துச் சுற்றத்
தொடங்கிற்று.

இப்போதோ பிறகோ படகு
கவிழ்ந்துவிட்டால்
மிதவையாக்கிக் கொள்வதற்குப்
படகில் எதை உடைக்கலாம்
என்று அவர்களின் முளையின் ஒரு
முலையில் ஒரு சிந்தனை
மின்னியபோது - தூரத்தில்
அந்த ஆபத்தான அதிசயம்
தட்டுப்பட்டது.

அங்கென்ன வெள்ளையாய்...
உயரமாய்... தண்ணீருக்கும்
விண்ணுக்குமாய்...?.
கடலுக்குள் முழ்கிக் கிடந்த
வெள்ளைமலை ஒன்று திடீரென்று
வெளிப்பட்டுவிட்டதா..?
விளங்கவில்லை.

அது வேறொன்றுமில்லை -
வி…வருபத்தில் ஒரு வெள்ளை
அலை. புயல் கடல்நீரை
மேலே இழுத்துத் தன்
வருகைக்குக் கட்டிக்கொண்ட
தண்ணீர்ப்பதாகை.

தத்தளிக்கும் படகைநோக்கி
அந்தத் தண்ணீர்ச்சுவர் நெருங்கி
நெருங்கி வந்தது.

அந்த அலைதான் மரணம்
தங்கள்மீது கடைசியாக வீசும்
பாசவலை என்று
முடிவுகட்டியவர்கள், கண்களை
முடிக்கொண்டு, முச்சை
இறுக்கிக்கொண்டு முழ்கத்
தயாரானார்கள்.

சில விநாடிகள் கடந்தும்
தாங்கள் முழ்கவில்லை என்று
தெரிந்து கண் திறந்தபோது,
எழுந்து வந்த தண்ணீர்ச்சுவர்
இடிந்துவிட்டதைக் கண்டார்கள்.

காற்று அதைக்
கைவிட்டுவிட்டது. ஆனால்,
புயல் தன் வேலையை
ஆரம்பித்துவிட்டது.

வாழ்வு - சாவு இரண்டையும்
இனி இயற்கையின் கையில்
விட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு
வந்தவர்கள்,
ஒருவரையொருவர் இறுகப்
பற்றிக்கொண்டார்கள்.

இரண்டு ராட்சச அலைகள்
முட்டித் தகர்த்ததில்,
அடித்தளத்தின் பலகை சற்றே
விரிசல் கண்டது.
அதன்வழியே உப்புநீர் உட்புகத்
தொடங்கியது.

மேலேயிருந்து
மழைநீர்.

கீழேயிருந்து
கடல்நீர்.

படகு நிறைய ஆரம்பித்தது.
அலையோ புயலோ படகை
முழ்கடிப்பதற்கு முன்னால்
படகில்
சேரும் தண்ணீரே படகை
முழ்கடித்துவிடும் என்ற
பயங்கரம் புரிந்தது.

இறையுங்கள். தண்ணீரை
இறைத்துக் கடலில்
ஊற்றுங்கள்...
- கத்தினான் பாண்டி.
கட்டிக் கொண்டவர்கள்
பிரிந்தார்கள்.

சாப்பாடு இல்லாமலும் சக்தி
இல்லாமலும் வலுவிழந்தவர்கள்,
இருக்கும் சக்தியையெல்லாம்
திரட்டி இறைக்க
ஆரம்பித்தார்கள்.
படகைச் சுற்றி அடித்துச்
சுழற்றிக் கொண்டிருந்தது
புயல்காற்று.

கை வலித்தது.
உடல் சலித்தது.

அவர்கள் இறைக்க இறைக்க,
முச்சு இரைத்தார்கள்.
அப்படியே
இறைத்துக்கொண்டிருந்தாலும்
சக்தியிழந்து
இறந்துபோவார்கள்.

இறைக்காமல் விட்டாலும் படகு
முழ்கி இறந்துபோவார்கள்.

அவர்கள்மீது மரணம் பலமுனைத்
தாக்குதல் நடத்தியது.
தன்னைச் சுற்றி நிகழும்
பயங்கரங்களில் எதுவும்
முளைக்கெட்டாமல் முக்கால்
மயக்கத்தில் கிடந்த
தமிழ்ரோƒஜா, கலைவண்ணனின்
கைகளை அனிச்சைச்
செயலாய்த் தேடித் தொட்டு
- எனக்கு ஒரு முத்தம்
தருவீர்களா..? கடைசி
முத்தம்... என்று
முனகினாள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:52 am

கலைவண்ணன் குனிந்தான்.

கன்னத்தில் முத்தமிட்டான்.

முத்தம் சுட்டது.

சாவே வா...
ஒரே கல்லில் இரண்டு
மாங்காய் உனக்கு...
எங்களில் எந்த உயிரை முதலில்
எடுத்தாலும் இன்னோர் உயிரும்
போய்விடும்.

வா சாவே. வா...

அவளை ஒருகையால்
கட்டிக்கொண்டவன்,
மறுகையால் படகில் சேரும்
நீரை இறைக்க ஆரம்பித்தான்.
புயல் உக்கிரமானது.

கடல் மட்டத்திலிருந்து
எட்டாயிரம் அடி உயரத்தில்
அறுபது மைல் விட்டத்தில்
மேகங்களைத்
திரட்டிக்கொண்டு, மழையைக்
கயிறாக்கிக் காற்றை மத்தாக்கிக்
கடலைக் கடைந்தது புயல்...

இந்தியாவின் ƒனநாயக
சோசலிசத்தைப் போலவே
இல்லாதவன் வீட்டுக் கூரையைப்
பிய்த்து இருப்பவன் வீட்டு
மாடிமேல் எறிந்தது புயல்.

பொழியும் மழை பொழிந்து
கொண்டேயிருந்தது. நனையும்
மனிதர்கள் நனைந்து
கொண்டேயிருந்தார்கள்.
அவர்கள்மீது கேமரா மின்னல்கள்
மின்னிக் கொண்டேயிருந்தன.

எப்படியும்
மீட்டாகவேண்டும்... என்ன
செய்வது? - உதவியாளர்மீது
உறுமி விழுந்தார் அமைச்சர்.
எதற்கும் மீனம்பாக்கம்
வட்டாரத்தில் கேட்டுப்
பார்க்கிறேன்... என்றார்
அமைச்சரைவிட 5 சதம்
விவரமுள்ள உதவியாளர்.

தொலைபேசியையும் தன்
தலையையும் உருட்டி உருட்டி
ஓய்ந்துபோன உதவியாளர்,
இதைப் பேசாமல் உள்துறைச்
செயலாளரிடம்
ஒப்படைத்துவிடுவோம்...
என்று ஒதுங்கினார்.

புயல், இப்போது உள்துறைச்
செயலாளர் அலுவலகத்தில் மையம்
கொண்டது.

ஆணைகள் பறந்தன.

விமானத் தொடர்பு மையத்தை
அவசரமாய் அணுகுங்கள். மீட்புக்
கூட்டமைப்பு மையத்தை வேலை
வாங்குங்கள். கடலோரக்
காவல்படையை
உ„ஜார்ப்படுத்துங்கள். விமானப்
போக்குவரத்துத் துறைக்கு
அறிவிக்கை அனுப்புங்கள். எல்லாக்
கடவுளையும் கூப்பிட்டுக் கடைசியில்
எந்தக் கடவுளும் உதவிக்கு
வராமல் செத்துப் போன ஓர்
இந்துவைப் போல இந்தக்
கதையும் ஆகிவிடக் கூடாது.

முதலில் அவர்கள் இருக்குமிடம்
எதுவென்று நாம்
கண்ணகப்படுத்தியாக வேண்டும்.
பெட்ரோல் கிடங்கில் தீ பரவும்
வேகத்தில் திட்டமிட்டுச்
செயல்படவேண்டும். விரைக -
விரைக - மிக விரைக.
கலங்காதீர் தோழர்களே.

கை சலிக்காதீர். இறைப்போம்
- இன்னும் இறைப்போம். மரணம்
நம் உயிரை இறைக்கும்வரைக்கும்,
உட்புகும் நீரை இறைத்துக்
கொண்டேயிருப்போம்.
எங்கள் படகின் குடுமி
பிடித்தாட்டும் கொடும்புயலே.

படகின் ஒருமுனை கவிழ்த்து
எங்களைச் சாவின்
வரவேற்பறைக்கு அழைத்துப்
போகிறாய். மறுகணமே எங்கள்
படகை விடுவித்து, வாழ்வின்

வாசலுக்கு அழைத்து வருகிறாய்.
நாங்கள் துயரப்படுவோம் என்று
மகிழ்ந்து போகாதே புயலே.

பெருமைப்படுகிறோம். நாங்கள்
காற்றோடும் கடலோடும்
அல்லவா யுத்தம்
நடத்துகிறோம்?

போர்வைக்குள் புதைந்து
கிடந்தாள் தமிழ்ரோƒஜா.
மயக்கத்திற்கும் மரணத்திற்கும்
மத்தியில் அவள் சுவாசித்துக்
கொண்டிருந்தாள்.

மீட்புக் கூட்டமைப்பு மையம்
புயலை எதிர்த்து மின்னல்
வேகத்தில் இயங்கியது.

சென்னைக்குத் தென்கிழக்கே
தப்பிப்போன படகின் தடயம்
தேடுக. துல்லியத் தகவல் அறிந்து
விமானமோ கப்பலோ மீட்க
விரைக.
கரையோரக் கப்பல் ஒன்றின்
ரேடார் கருவி இயங்கியது.

120 கடல்மைல்கள் விட்டத்தில்
உள்ள எதையும் துப்பறியும் அதன்
வட்டத்திரையில் சின்னச் சின்ன
வெளிச்சப் புள்ளிகள் சிணுங்கின.
புயலின் ஆரவாரத்தில் திரையில்
குழப்பமே கொடி கட்டியது.
ஆனாலும் ரேடார் திரை சந்தேக
அறிக்கை சமர்ப்பித்தது.

வடக்கே
12 டிகிரியில் 40 நிமிடப்
பயணத்தில், கிழக்கே 80 டிகிரியில்
20 நிமிடப் பயணத்தில்
தப்பிப்போன படகு இருப்பதான
சந்தேகப்புள்ளிகள்
தட்டுப்படுகின்றன.

புயலின் போர்க்குணத்தால்
துல்லிய முடிவுகள் துலங்கவில்லை.
இது ஓர் அனுமானம் -
அவ்வளவுதான்...

அறிக்கை பார்த்த மையம்
அலறியது.

இதுதான்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:52 am

இதுவேதான். நமக்குக் கிடைத்த
தகவலும் இந்த அறிக்கையும்
ஒன்றோடொன்று ஒத்துப்
போகின்றன.

தாழப் பறக்கும் டார்னியர்
விமானமொன்று தயாராகட்டும்.
தரை - ஆகாயம் - தண்ணீர்
முப்பிரிவுகளுக்கும் அவசர
அறிவிப்புகள் பறக்கட்டும்.

அனைத்துக் காவல் நிலையங்கள்,
மாவட்ட ஆட்சித் தலைவர்
அலுவலகங்கள், கடலோரக்
காவல்படை, சென்னை துறைமுகப்
பொறுப்புக் கழகம் -
அனைத்தும்
விழிப்பு நிலையில் இருக்கட்டும் படகோ
உடலோ கரையில் ஒதுங்கினால், அருகிலுள்ள
காவல் நிலையத்துக்குத் தகவல் தருமாறு
கடலூர் முதல் காக்கிநாடா வரையிலுள்ள
அனைத்து மக்களும் அறிவுறுத்தப்படட்டும்.
மீட்புக் கூட்டமைப்பு மையம் அடுத்த
கட்டப் பணிக்கு அவசரமானது.

எங்கே?

தாழப் பறக்கும் டார்னியர் விமானம் எங்கே?
விமானிகள் தயங்கினர்.

இரண்டு காரணங்களால் இப்போது முடியாது
ஒன்று -

ரேடரின் தகவல்கள் உறுதிசெய்யப்படாதவை.


இரண்டு -

காற்று கடுமையாக வீசுகிறது. எதிர்த்துப்
பறந்தால் விமானம் விழுந்துவிடும் அல்லது
வெடித்துவிடும்.
கூட்டமைப்பு மையம் குழம்பியது.


சலீம். சலீம்.
உடல் சோர்ந்து விழுந்தவன்
பேசவில்லை. அசையவில்லை.
இறந்துவிட்டானா? சலீம்
இறந்துவிட்டானா?

இறைப்பதை நிறுத்திவிட்டு அவன்
சுவாசம் பார்த்து,
நாடித்துடிப்பு அறிந்து அவன்
செத்துவிடவில்லை என்ற ஒரு
சின்ன நிம்மதிகண்டு அவனைத்
தமிழ்ரோƒஜாவின் பக்கத்தில்
கிடத்திவிட்டு, ஏறிவரும்
நீர்மட்டத்தைக் குறைப்பதற்கு
ஓடிவந்தார்கள் மீனவர்கள்.

மழை தன் வேகத்தைக்
குறைத்துக் கொண்டாலும்,
காற்று அந்தப் படகை
ƒலசமாதி செய்துவிடத்
தவியாய்த் தவித்தது.
அதிகாலையில் சிங்கப்பூர்
செல்லும் ஏர் இந்தியா
விமானம் புயலுக்கெதிராகப்
புறப்படலாமா வேண்டாமா
என்று யோசித்துக்
கொண்டிருந்தபோது, காற்று
அட்டவணையோடு வந்தார்
துணைவிமானி.

அட்டவணையில் ஆழ்ந்தார்
கேப்டன் கணேசன்.
25,000 அடி உயரம்
வரைதான் கடுங்காற்று
வீசுகிறது. 25,000 அடிக்கு
மேல் 45,000 அடி வரை
காற்றின் வேகம் குறைவு.

எனவே 25,000 அடிக்கு
மேல் பறந்து, புயல்
பிரதேசம் கடந்துவிட்டால்
சிங்கப்பூர் சென்று சேர்வது
எளிது
அந்தச் சிறகடிக்காத பறவை
சிவ்வென்று பறந்தது.
மழை ஓர் இடைவேளை
விட்டிருந்தது.

சுருங்கிக் கிடந்த சூரியக்
கதிர்கள் மேகக் கிழிசல்களில்
கொஞ்சம் கொஞ்சமாய்
எட்டிப் பார்த்தன.
காற்று மட்டும் கடுகியே
அடித்தது.

விமானம் வங்காள விரிகுடாவின்
மேலே
பறந்து கொண்டிருந்தபோது,
கடலில் மாறிமாறி
மின்னலடித்தது.
கேப்டனின் கண்கள் கடலில்
குதித்தன.

தண்ணீரை இறைப்பதற்காக
மீனவர்கள் முறமாகப்
பயன்படுத்திய தகரங்களில்
சூரிய வெளிச்சம்பட்டுச்
சுடரொளி வீசியது.

கேப்டனுக்கு அது ஓர் அபாய
அறிவிப்பாகவே பட்டது.
தப்பிப்போன படகு பற்றிய
தகவல் கேப்டனின் மனதில்
பதிவாகியிருந்ததால் அவர்
முளை விழித்துக்கொண்டது.
மீட்புக் கூட்டமைப்பு
மையத்துக்குக் கம்பி இல்லாத்
தந்தி முலம்
தகவல் தந்தார்.

ஓ. அவர்களைக் காக்கும்
அசரீரி வந்துவிட்டது.
மீட்புக் கூட்டமைப்பு மையம்
துள்ளிக் குதித்தது.

உறுதி. உறுதியாகிவிட்டது.
தப்பிப்போன படகு பற்றிய
தகவல் வந்துவிட்டது.
தாமதிக்க நேரமில்லை.

கடலோரக் காவல் படையே.
உன் ஹெலிகாப்ட்டரை எடு.
அந்தப் பொறுப்பை, மீட்புப்
பணியில் புகழ்பெற்ற
கமேண்டோ மு…தபாவிடம்
ஒப்படை. அவர்தான்
ஹெலிகாப்ட்டரை நின்று பறக்க
வைக்கும் கலையில் நிபுணர்.

தூறும் மழை
தூறிக் கொண்டேயிருந்தது.
நனையும் மக்கள்
நனைந்து
கொண்டேயிருந்தார்கள்.

காற்றை எதிர்த்து
ஹெலிகாப்ட்டர்
வங்காளவிரிகுடாவின் வானத்தில்
பறந்தது.

அது என்ன சத்தம்?

வான்வழியே என்ன அது
எந்திரத்தின் ஓசை?
சாவுமணிக்குப் பக்கத்தில்
சங்கீதமா?

கலைவண்ணனும் மீனவர் முவரும்
அண்ணாந்து பார்த்தனர்.
தூரத்தில் தெரிந்த விஞ்ஞானப்
பட்டாம்பூச்சி, விரைந்து
வரவரப் பெரிதாயிற்று.

ஹெலிகாப்ட்டர்.
ஹெலிகாப்ட்டர்.

அதன் விசிறியின் வேகத்தைவிட
இதயம் துடித்தது.

சற்றே வெறித்திருந்தது மழை.
விதவையின் சிரிப்பைப் போல
எப்போதாவது வெயிலடித்தது
வானம்.

சூறைக்காற்று மட்டும்
ஒரே சுதியோடு வீசியது.

அவர்களின் தலைக்கு மேலே
தாழப்பறந்து அந்தரத்திலே
நிலைகொண்ட ஹெலிகாப்ட்டர்,

அப்படியும் இப்படியும் காற்றில்
அலையுண்டது.
கமேண்டரின் பயிற்சியிலும்
முயற்சியிலும் நெளிந்துநெளிந்து,
அலைந்து அலைந்து
நிலைகொண்டது.

தலைக்குமேலே பறந்த அந்த
விஞ்ஞான தேவதையைக்
கண்களில் நீர்வழியக்
கையெடுத்துக் கும்பிட்டார்கள்.

ஹெலிகாப்ட்டரிலிருந்து படகின்
தளத்தில் வின்ச் என்று
சொல்லப்படும் எந்திர உருளை
இறங்கியது.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:53 am

ஏறிவாருங்கள் - ஒருவர்
பின் ஒருவராய்
ஏறிவாருங்கள்
ஹெலிகாப்ட்டரிலிருந்து ஆணையும்
சமிஞ்கையும் பிறந்தன.

படகுக்குள் பரபரப்பு
பரவியது. முதலில் யார்
ஏறுவது?

சகுனம் பார்க்கவோ
சண்டையிடவோ ஏற்றபொழுது
இதுவன்று.

உருளை இறக்கிய உறியின்
பக்கத்தில் யார்
இருக்கிறார்களோ அவர்கள்
முதலில் ஏறுங்கள் -

கத்தினான் கலைவண்ணன்.
இசக்கிதான் இருந்தான்.
அவனே ஏறினான்.

அவன் உருளையின் உறியில்
ஏறி நிற்கவும்
ஏற்றுருளை இயக்கப்பட்டது.
கொஞ்சம் கொஞ்சமாய்ப்
படகில் இருந்தவன் அந்தரம்
போனான்.

அதுவரை எங்கேயோ
பதுங்கியிருந்த காற்று
பாய்ந்து வந்து வீசியது.

ஹெலிகாப்ட்டரையும் அவனையும்
அப்படியும் இப்படியும் ஆட்டி
எடுத்தது.

சக்தியிழந்த தேகம்.
வலுவிழுந்த கைகள். பற்றிக்
கொள்ளும் பலமில்லை.

இன்னொரு சுழல்காற்று
மொத்தமாய் அவன்மீது
மோதியபோது, அவன் தன்னை
மறந்தான். தன் பிடி
தளர்ந்தான். கத்திக்கொண்டே
கடலில் விழுந்தான்.

அய்யோ -
அலறினார்கள்
படகுக்காரர்கள்.

அதிர்ந்து போனார்கள்
ஹெலிகாப்ட்டர்காரர்கள்.

படகில் இருந்த பாண்டி
அவனுக்குப் பக்கத்தில் குதித்து,
அவன் குடுமி பற்றி இழுத்து
அவனைப் படகில் தூக்கிப்
போட்டான்.

ஏறிவாருங்கள். ம்...

ஏறிவாருங்கள்.

ஹெ†லிகாப்ட்டர் தன் உருளையை
இன்னொருமுறை இறக்கியது.
எவர் ஏறுவது? எப்படி
ஏறுவது?

ஆழி புரட்டும் ஊழிக்காற்றில்
ஒருவர் ஏறிச்செல்லவே
இயலாதபோது, மயங்கிக்
கிடக்கும் இரண்டு உயிர்களைத்
தூக்கிக்கொண்டு எப்படி
ஏறுவது?

ஏற இயலாதவர்கள்
அங்கேயே இருக்கட்டும். ஏற
முடிந்தவர்கள் ஏறி
வாருங்கள்.

அவர்கள் ஒருவரையொருவர்
பார்த்துக் கொண்டார்கள்.
முடியாது. முடியவே
முடியாது. மீண்டால் ஆறுபேரும்
மீள்வோம். மாண்டால்
ஆறுபேரும் மாள்வோம். -

காற்றைக்
கிழித்துக் கொண்டு முன்று
குரல்கள் ஒரே சுதியில்
பேசின.

வீசும் புயல்காற்று,
ஹெலிகாப்ட்டரின்
விலாவறுத்தது.

அதற்குமேல் வானத்தில்
அதனால் நிலைப்பட்டு நிற்க
முடியவில்லை.

அவர்கள் மீது ரொட்டித்
துண்டுகளையும், மருந்துப்
பொட்டலங்களையும்,
மதுப்புட்டிகளையும் எறிந்தது.

பக்கத்துக் கப்பல்களுக்குத்
தகவல் கொடுக்கும் அவசரக்
கண்டுபிடிப்புக்கலன்
ஒன்றையும், கடலுக்குள்
வீசியெறிந்துவிட்டு வந்தவழியே
திரும்பிப் பறந்தது.

பசி. பசி. பசி.

ஒருவாய் அதிகபட்சம் எவ்வளவு
கொள்ளுமோ அதைப்போல
இரண்டு மடங்கு ரொட்டியை
வாயில் திணித்துக்
கொண்டார்கள். பிறகு
ஒருவருக்கொருவர் ஊட்டிக்
கொண்டார்கள்.

மயங்கிக்கிடந்த சலீமையும்
இசக்கியையும் எழுப்பி எழுப்பி
ரொட்டியை அவர்கள் வாயில்
திணித்துத் தண்ணீர்
ஊற்றினார்கள்.

தமிழ். தமிழ். இதோ
ரொட்டி. இதோ மருந்து.
எழு, எழு.

அவள் அசையவில்லை.
அவள் இதயமும் சுவாசமும்
மட்டும் நின்று போகவில்லை.

ஆனால், அவள் சாகவில்லை
என்பதற்கு அதற்குமேல்
அடையாளம் இல்லை.

அவள் வாயில் ஒரு
மாத்திரையைப் பொடிசெய்து
போட்டுத்
தண்ணீர் ஊற்றினான்.
ஆனால், அவன் போட்ட
இடத்தைவிட்டு அது
புறப்படவேயில்லை.

உறைந்துபோன தேகங்களுக்குக்
கொஞ்சம் உ„ணம் ஊட்டும்
என்பதற்குத்தான் மதுப்புட்டிகள்
வீசப்பட்டன. ஆனால், அந்தப்
புட்டிகளுக்காக மீனவர்
இருவரும் முட்டிக்
கொண்டார்கள்.

ஆளுக்கு ஒரு புட்டி
அருந்தியதில், சோர்ந்துகிடந்த
அவர்களின் தேகம் துவளத்
தொடங்கியது.
சற்று நேரத்தில் இருவரும்
சுற்றி விழுந்தார்கள்.

நோய் மயக்கத்தில் ஒருத்தி.
பசி மயக்கத்தில் ஒருவன். நீர்
குடித்து ஒருவன். மதுவருந்திய
மயக்கத்தில் இருவர்.

உணர்வோடு இருந்தவன்
கலைவண்ணன் மட்டும்தான்.

படகுக்குள் கடல்நீரின் மட்டம்
உயர்ந்துகொண்டே வந்தது.

வலக்கையில் காதலியை
அணைத்துக் கிடந்தாலும்,

அவனது இடக்கை மட்டும் நீர்
இறைப்பதை நிறுத்தவேயில்லை.
நான் இறைக்கும் ஒவ்வொரு
கை நீரும் மரணத்தை ஒரு
வினாடி தள்ளிப் போடாதா?

இடைவேளை விட்டிருந்த மழை,
தன் இரண்டாம் பாகத்தை
ஆரம்பித்தது.

மழையில் பயங்கரப்
பாடலுக்குப் புயல் ராட்சதப்
பின்னணி இசை வாசிக்க
ஆரம்பித்தது.

நீர்கொண்ட படகு
அங்குலம் அங்குலமாய்
அமிழத் தொடங்கியது.
கலைவண்ணன் - வானம்
பார்த்தான். கடல்
பார்த்தான். மயங்கிக்
கிடக்கும் தோழர்கள்
பார்த்தான். மடியில் கிடக்கும்
மலரைப் பார்த்தான்.

குனிந்தான். அவள் நெற்றியிலும்
கன்னத்திலும் முக்கிலும்
உதட்டிலும் முத்தமிட்டான்.
நிமிர்ந்தான். கண்ணிரண்டும்
கவிழ்ந்தான்.

போய் வருகிறோம் பூமியே,
போய் வருகிறோம். இது
ஒன்றும் கண்ணீரின் வாக்குமுலம்
அன்று. இது என் கடல்
பிரசங்கம்.

இந்த பூமிக்குச் சில
கனவுகளோடு வந்தோம்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக