புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
62 Posts - 34%
i6appar
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
62 Posts - 34%
i6appar
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து


   
   

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:16 am

First topic message reminder :

கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜƒம்.

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.

கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோƒஜாவை மறந்துபோனான்.

அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.

அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.

என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.

இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.

பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.

மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.

நீங்கள் கடல்பைத்தியம்.

இல்லை. நான் கடற்காதலன்.

கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?

காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோƒ.

அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.

நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.

அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.

ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.

காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.

அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.

வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.

அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.

கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.

ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.

எதனால்?

ஆக்டோப… அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?

அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோƒஜா,

தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.

வா

மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.

குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.

ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.

மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.

ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்

பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:20 am

அன்புள்ள தமிழ்ரோƒஜா.

இதுவரை உனக்கு நான் எந்தக்
கடிதமும் எழுதியதில்லை.

கடிதம் என்பது தூரங்களின்
காகித வடிவம்.

உனக்கும் எனக்கும்
தூரமில்லை.

உன் காதுகள் என்
உதடுதொடும்
தூரத்திலேயே இருந்ததால்
காகிதத்தில் பேசும் அந்நியம்
நேர்ந்ததில்லை.

இன்னொன்று.

காதல் கடிதங்கள் உணர்ச்சியின்
மத்தாப்புகளாய் இருப்பதுண்டே
தவிர உண்மையின் தீபங்களாய்
இருப்பதில்லை.

ஒரு காதல் கடிதம்
படிக்கப்படும்போதே
எண்பது சதவிகிதம் கழிக்கப்பட
வேண்டும். மிச்சமிருக்கும்
இருபது சதவிகிதத்தில்
உணர்ச்சியின் வண்டலின்கீழே
உண்மையும் கொஞ்சம்
உறைந்திருக்கும்.

உலகத்தின் காதல்
கடிதங்களெல்லாம்
அழகானவை. ஆனால்
ஆரவாரமானவை.

நிலாவில் ரத்தம் கசிவதுபோல்
மீசையோடு பிறந்த
குழந்தைபோல்-
கவனம் ஈர்ப்பவை.

ஆனால் எதார்த்தம் மீறியவை.
எனவே இடைவெளி
இருந்திருந்தாலும் உனக்கு நான்
எழுதியிருக்கமாட்டேன்.

பள்ளம் நிரப்ப
நுரைகொட்டியிருக்கமாட்டேன்.

ஆனால், இப்போது
எழுதுகிறேன்.
ஏனென்றால், இது காதல்
கடிதமல்ல.

என் தன்னிலைவிளக்கம்.
உன்னைக் காதலிக்கத்
தொடங்கியபிறகு
ஒருநாளில் எத்தனை
மணிநேரம் நான்
முட்டாளாயிருக்கிறேன்
என்பதன் மொத்தத்
தொகுப்பு.

நான் உன்னை
நேசிக்கவில்லையோ என்று உன்
உணர்வுகள் உறங்கும்போது நீ
உச்சரித்தாய்.

என் காதலின் எடை என்ன
என்பதை
மில்லிகிராம் சுத்தமாய்ச்
சொல்லிவிட முடியாது.
கத்தியால் கைகீறி ரத்தம்
காட்டவும் மாட்டேன்.

நேசம்காட்ட அனுமன்போல்
நெஞ்சுகிழிக்கவும் மாட்டேன்.

பின் -
அடையாளம் எதுவென்பாய்.
என் வானத்தில் சூரியன்
அ…தமிக்கவில்லையே.
அதுதான் அடையாளம்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:21 am

எந்தப் புதுப்பேனா
வாங்கினாலும்
என்பெயர் எழுதிப்பார்ப்பதை
மறந்துஅனிச்சைச் செயலாய்
உன்பெயர்
எழுதிப்பார்க்கிறேனே.

அதுதான் அடையாளம்.
கவிதைகள் அடையாளம்.
என் கண்ணீர் அடையாளம்.

ஒருநாள் என் அறையில் நீ
தவறவிட்ட
உன் பூப்போட்ட கைக்குட்டை
என் பூஜைப்பொருள்.
என் வீட்டுக்கண்ணாடியில்
உன்படத்தை ஓரத்தில் ஒட்டி,
உன் படத்தின் பக்கத்தில்
என் பிம்பம் படியவைத்து
ஜோடிப்பொருத்தம்கண்டு
சுகம்காண்பதில் என்
சிநேகமான காலைப்பொழுது
செலவாகிறதென்று தெரியுமா
உனக்கு?

நினைவுக் கொசுக்களால்
நித்திரைதொலைந்த
ஒரு நீலராத்திரியில்
கால்கடுக்க நடந்து,
கடற்கரை அடைந்து, நீயும்
நானும் சந்தித்த இடத்தில்
அனாதைக் குழந்தைகளாய்
அழுதுகொண்டிருந்த உன்மல்லிகைஉதிர்வுகளை
மடியோடு அள்ளிவந்து
மார்போடு
தழுவிக்கொண்டு விடியவிடிய
விழித்துக்கிடந்தேனே.

அந்த நேச உ„ணத்தின்
நிறமறிவாயா நீ?
என் பத்திரிகை அலுவலகத்தின்
எக்…ரே கண்ணாளர்கள்
உன்னையும் என்னையும்
ஊடறுத்துப் பார்த்து,
தமிழ்நாட்டிலேயே
தமிழ்ப்பற்று அதிகமுள்ளவன்
கலைவண்ணன் மட்டும்தான் என்று
கிண்டல்மொழி சுண்டுவதைக்
கண்டதுண்டா நீ?

பூமியின் அடிவயிற்றில்
கனன்றுகொண்டிருக்கும்
அக்கினிமாதிரி என் அடிமனத்தில்
கனன்றுகொண்டிருக்கும்
ஆசைஅக்கினி
உன்னைச் சுடவில்லையா?
என் நேசம் புரியும் முன்பு நீ
என் நெஞ்சுபுரிய வேண்டும்.
உன்னை உன் வாழ்க்கைக்குத்
தயாரிக்கிறேன்.

தண்ணீர்பயம் கொண்டு
தள்ளிநின்றால்
நாளை எப்படி வெந்நீராற்றில்
விசைப்படகு விடுவாய்?
நீ சுத்தத் தங்கம்தான்.

நல்ல தங்கத்தில் நகைசெய்ய
முடியாது.

சிறிதே கலக்கவேண்டும்
செம்பு.

தைரியம் செம்பு. அனுபவம்
செம்பு.

அதைத்தான் உன்னில் கலக்க
நினைக்கிறேன்.

உன் கங்காரு மடியைவிட்டு
வெளியே வா.

நான் சிங்கத்தின் முதுகு...
ஏறிக்கொள்.

முதலில் - தார்ச்சூடு
காணட்டும் உன்
தாமரைப்பாதம்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:21 am

உன் வெல்வெட் திரைவிட்டு
வெளியே வா.

குளிரில் கோணிபோர்த்துக்
கூவம்கரைக் குடிசை ஒன்றில்
இரவுகழி.

உன் சைவக்கோடு கட.
கூறுகட்டி மீன்விற்கும் குப்பத்துக்
கிழவியைச்
சற்றே நகரச் சொல்லிவிட்டு
ஒரு வெயில்பகலில் மீன்
விற்றுப்பார்.

அரசாங்க லாரியில்
தண்ணீர்பிடி.
இரண்டுகுடம் வேர்வைக்குப்
பிறகு
ஒருகுடம் தண்ணீர் நிறைவதை
உணர்.

வெள்ளிக்கரண்டியோடு
பிறந்தவளுக்கு ஏன்
வேலையற்றவேலைஎன்பாய்.
ஓர் ஆணியைச் சுயமாய்
அடிக்கத்
தெரியாதவளுக்கு
வெள்ளிக்கரண்டி
சொந்தமாய் இருக்கக்கூடாது.
அனுபவங்கள் தடுப்பூசிகள்.

போட்டுக்கொள்.

அம்மைகுத்த வந்தால்
கைமறைக்கும்
குழந்தைபோல்
அடம்பிடிக்காதே.

அனுபவங்களுக்கு உடம்பு, மனம்
இரண்டையும் உட்படுத்து.
தன்னைத் திருப்பிப் போடுவதன்
முலம்தான் பூமி சூரியனிடம்
அனுபவம் பெறுகிறது.

வசந்தம்-கோடை-மழை-குளிர்-
வெயில்-புயல் என்ற
அனுபவங்கள்
இல்லையேல் எப்போதோ பூமி
இறந்துபோயிருக்கும்.

கல்யாணச் சந்தையில் உன்னைத்
துலக்கிவைப்பதற்கு மட்டுமல்ல
கல்வி.

அனுபவங்களின்பால்
ஆற்றுப்படுத்துவது கல்வி.
நமக்குள் ஆண்-பெண் என்ற
பேதம்
நம் அவசரத்தேவைக்காக
மட்டும் இருக்கட்டும்.

மற்றபடி பிறப்புமுதல்
இறப்புவரை
உணர்ச்சியும் வலியும்
ஒன்றுதான்.
ஆண் உடம்பில்
ரத்தம் - 5 1/2 லிட்டர்.
பெண் உடம்பில் -
5 லிட்டர் என்ற
பேதமிருந்தாலும் செல்களின்
செயல்கள் ஒன்றுதான்.

எனவே ஆணுக்குத்தான் அதிக
உரிமை. பெண்ணுக்கில்லை என்ற
பிற்போக்குத்தனத்திலிருந்து
பிதுங்கி வெளியே வா.
ஏ பணக்கார நத்தையே.
முதலில் நீ உன் தங்கக்கூடு
தகர்.

இந்தப் பிரபஞ்சமே
பொதுவென்று கொள்ளாமல்
மனிதர்கள் மனைப்பட்டா
வாங்கும் போராட்டத்திலேயே
மரித்துப்போகிறார்கள்.

பயன்படுத்தாத வானம் -
பயன்படுத்தாத சூரியன் -
பயன்படுத்தாத நட்சத்திரம் -
பயன்படுத்தாத பூமி -
பயன்படுத்தாத முளை
மனிதகுலத்துக்குப்
பாக்கியிருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் தனது

சொந்த
முளையைக்கூட அடுத்தவன்
மனைவிமாதிரி
பாவிப்பதற்குப்
பயப்படுகிறான்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:22 am

இரண்டு சதவிகிதத்துக்குமேல்
முளை இங்கே
வேலை வாங்கப்படவில்லை.
தொண்ணூற்றெட்டு சதவிகித
முளை சாகும்வரை
செல்வியாகவே இருக்கிறது.
நான் என் புலன்கள் திறந்து
பிரபஞ்ச எல்லைவரை பறக்கப்
பிரியப்படுகிறேன்.

நீ மழையில் நனைந்த
கிளிக்குஞ்சாய்
மறுகிநின்றால் எப்படி?
சிறகு விரித்து வா.
சிலிர்த்து வா.

உனக்கு நானோ எனக்கு
நீயோ
சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம் வா.

உனக்கு நான் துன்பம்
செய்திருந்தால்
என்னை நீ மன்னித்துவிடு
நான் உனக்கு நறுக்க நினைத்தென்னவோ
நகம்தான். ஆனால், விரல் காயமாகிவிட்டது.
எப்போதும் படுத்தே கிடக்காதே.

தலையணையொன்றும் மார்க்கண்டேயனின்
சிவலிங்கம் அல்ல.

நம்பிக்கையின் சக்தியை உடலெங்கும் பரப்பு
உன்னை உணர், என்னை நினை.
என்னை மன்னித்துவிட்டாய் என்பதன்
அடையாளமாய் என் குயிலே
தொலைபேசியில் கூவு.

ஆலயமணிகளையும் மாதாகோயில்
மணிகளையும் விட தொலைபேசி
மணியில்தான் நம் காதல் பூƒசிக்கப்படுகிறது.

எப்போது கேட்கும் உன் தொலைபேசிச்
சங்கீதம்?
காதலோடு........

கலைவண்ணன்
ஒருதாய் தன் குழந்தையை உறங்கவைப்பது
போல் கடிதத்தின் இமை முடினான். காகிதப்
பறவை சிறகடித்தது.

பத்திரிகைப் பணியை அவன் நேசிக்கிறான்.
அவனுக்கு உலகின் ƒன்னல்களை ஓசையோடு
திறந்துவிட்டது பத்திரிகை.

சூரியன் - பூமி - நிலா இவற்றை
அவன் வாயில் மாத்திரைகளாய்ப் போட்டு
தண்ணீர் ஊற்றியது பத்திரிகை.

அந்தப் பத்திரிகையில் அவன் அதிகம்
நேசிப்பது அவனுக்குத் தந்திருக்கும் சுதந்திரத்தை.
அமைப்புச் சார்புகொண்டவன் எவனும் இங்கே
உண்மை சொல்லமுடிவதில்லை.

அரசு சார்ந்து - அரசியல் சார்ந்து - மதம் சார்ந்து -
தத்துவம் சார்ந்து உண்மைகள் முழுப்பிரசவத்தோடு
வெளிவருவதில்லை.

மக்கள் சார்பு கொண்டவன் மட்டுமே இங்கே
உண்மை பேச முடியும்.

தன்னைப் போலவே தன் பத்திரிகையும்
மக்கள் சார்பு கொண்டது என்ற
நம்பிக்கையில்தான் அவன் அந்த
நாற்காலிக்குத் தாலிக் கட்டியிருந்தான்.
ஒருவகையில் பத்திரிகையும் காதலிதான்.
இரண்டும் குறித்த நேரத்தில் வராவிட்டால்
மாரடைப்பு வந்துவிடும்.

அந்த வாரத்தில் தனக்கான கட்டுரையை
ஆதாரப்படுத்தி, அழகுபடுத்தி உண்மை
களைக்காதிருக்க அங்காங்கே நகைச்சுவை
தெளித்து நயம் சேர்த்தான்.

அவன் இருதயம் மட்டும் தூரத்து மேஜையில்
துடித்துக் கொண்டிருந்தது.

அங்குதான் தொலைபேசி இருந்தது.
அந்த பிளா…டிக் கூட்டுக்குள் அவன் குயில்
எப்போது கூவும்?

என் காதல் பூஜையின் கோயில்மணி எங்கே?
தொலைபேசியில் ஒலிக்கும் என் தோடி ராகம்
எங்கே?



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:22 am

தயவுசெய்து முணுமுணுக்கவும் என்று
தொலைபேசி அருகே எழுதிவைத்தால் என்ன?
கடைசியில் அது இசைத்தது கலைவண்ணன்
கலைவண்ணன் என்றே அழைத்தது.

ஒன்றாம் மணி அடங்கி இரண்டாம் மணி
முடிவதற்குள் ஓடி எடுத்தான். பெருமுச்சும்
பரபரப்பும் இழைய நான் கலைவண்ணன்
என்றான்.

எதிர்முனையில் கண்ணீர் பேசியது தன்
தாய்மொழியில் பேசியது.
கண்ணீரின் தாய்மொழி விசும்பல்தானே?

இராயபுரம் கடலோரம்.
விஞ்ஞான அன்னங்களாய்
விசைப்படகுகள்.

தண்ணீர்த் தவளைகளாய்க்
கட்டுமரங்கள்.

தாலாட்டும்
தண்ணீர்த் தொட்டிலில்
வாலாட்டும் ஒரு
கடற்கொக்கு. தண்ணீரில்
தங்கம்கரைக்கும்
சொக்கச்சூரியன்.

கடலுக்குள் தலைதூக்கும்
கரும்பாம்பாய்
நீண்டுகிடந்த அந்தத்
தார்ப்பாலத்தின் முடிவில்
கலைவண்ணன் மார்பில் தழைந்து
மடியில் மாலையாய்க்
கிடந்தாள் தமிழ்ரோƒஜா.

அழுது அழுது கடைசியில்
தூங்கிப்போகும்
ஒரு குழந்தைமாதிரி
விசும்பி விசும்பிக் கிடந்தவள்
கண்ணீர்தீர்ந்து மெளனமானாள்.

சத்தியம்செய். இனி என்
நேசத்தைச்
சந்தேகிக்க மாட்டாயே.

அவளைக் காதுக்குள் காதலித்த
கலைவண்ணன்
அவள் அங்கங்களில் எதுவும்
அவனுக்கு வெளியே
வழியாதவண்ணம் வாரி எடுத்து
வசதி செய்து கொண்டான்.

இரண்டு ஒட்டுமாஞ்செடிகளைக்
கட்டுவதுபோல்
அவளைத் தன் மார்போடு
பதித்து முத்தப்பசையிட்டு
ஒட்டிக் கொண்டான்.

அவள் உடம்பெங்கும் ஒரு
பத்திரமான
பாதுகாப்புணர்ச்சி
பரவியது.

அதுதான்.

ஒவ்வொரு பெண்ணின்
உயிர்த்தேவை அதுதான்.
அந்த இதம்... அந்தக்
கதகதப்பான
உத்தரவாதம்...

அந்தத் தடம்பதியாத
தடவல்... பாசம் குழைத்த
…பரிசம்...

ஒவ்வொரு பெண்ணின் உள்ளாசை
அதுதான்.
பெரிதும் பெண்கள் ஆராதிப்பது
அதிரப்புணரும்
அந்நிகழ்வை அல்ல.

அவர்கள் அதிகம் விரும்புவது
இந்த நேசம்
நிஜƒம் என்னும் நினைப்பை.

அவர்கள் பெரிதும்
பிரியப்படுவது பின்கழுத்தில்
விரல்பதித்துக்
கூந்தல் ஆழத்தில் செய்யும்
கோதுகையை.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:22 am

பூக்களுக்குச்
சுளுக்கெடுப்பதுபோல்
விரல்களுக்குச்
சொடுக்கெடுக்கும் அந்த
வேடிக்கையை.

தனக்குரியவனின்
முடிகொண்ட மார்பில்
முகம் புதைத்து
விழித்துக்கொண்டே உறங்கும்
ஒரு மயக்கநிலையை.

அந்த மனோநிலையில்
மயங்கிக் கிடந்தாள்
தமிழ்ரோƒஜா.

இமைகளை விழியிலிருந்தும்
தன்னை அவன் மார்பிலிருந்தும்
விலக்கிக்கொள்ள விரும்பாமல்
வினவினாள்.

எனக்கு ஏனிந்த
வெயில்குளியல்?

காதலரைச் சுடுவதில்லை
என்பது காலங்காலமாய்
நிலவிவரும்
சூரியத் தீர்மானம்.

எப்போதும் என்னை
இங்கேதான் அழைக்கிறீர்கள்.
மெரீனா பிடிக்காதா?

அவன் அவள் கன்னத்துக்கும்
உதட்டுக்கும்
இரண்டங்குல இடைவெளியில்
பதில் பேசினான்.

மெரீனா - திருமணத்தின்மீது
நம்பிக்கையில்லாதவர்கள்
சந்திக்கும் இடம்.

அவள் தளும்பிச் சிரித்ததில்
அவள் கன்னம்
அவன் உதட்டில் விழுந்தது.
சரி... சாந்தோம்?

அது காதல்மீதே
நம்பிக்கையில்லாதவர்கள்
சந்திக்கும் இடம்.

ஓகோ. இது?
நம்பிக்கைமீது
நம்பிக்கை உள்ளவர்கள்
சந்திக்கும் இடம்.

ஓர் அலை ஓங்கி எழுந்துவந்து
கைதட்டிவிட்டு
மீண்டும்
கடலுக்குள் போனது.

அந்த அலைஓசை அச்சத்தில்
அவன் உடம்புக்குள்
ஓடிஒளிவதுமாதிரி
அவனுக்குள் ஒட்டி ஒடுங்கினாள்
அவள்.

ஓ, கடலே. நீ இன்னும்
சில அலைகளை
அடுத்தடுத்து எனக்காக
அனுப்பிவைக்கக் கூடாதா?



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:22 am

புல்லாங்குழலின் காதில்
உதடு ஊதுவதைப் போல
அவன் அவள் காதில்
குறைந்த குரலில்
குனிந்து பேசினான்.

உனக்குப் பிடித்த ஒரு
செய்தியும் பிடிக்காத
ஒரு செய்தியும்
சொல்லட்டுமா?

ஒருமுறை கண்திறந்து
ம்... சொல்லிவிட்டு
மறுபடி முடிக்கொண்டாள்.
உனக்குப் பிடித்த
செய்தி...

நீ கடைசிப் பரீட்சை
எழுதியதும் தேர்வு
மண்டபத்திலேயே
நம் திருமணம்.

சரி, பிடிக்காத
செய்தி?
கடலுக்குள் நம் முதலிரவு.

அய்யோ.

அவள் அவனை
நிƒமாய்க் கிள்ளிப்
பொய்யாய் அழுதாள்.
தூரத்தில் கரையோரத்து
விசைப்படகு ஒன்று
கடல்புக
எத்தனித்துக்
கொண்டிருந்தது.

அதன் எந்திரஓசை, ஓரத்தில்
மேய்ந்த மீன்களையெல்லாம்
ஆழத்தில் அனுப்பிவைத்தது.
கலைவண்ணன் மீண்டும்
கடல்பார்த்தான். மடியில்
கிடக்கும் புதையலை
மறந்துபோனான்.

அவள் அவனை உதறி
எழுந்தாள். ஊடல் கொடி
பிடித்தாள்.

உண்மையில் நீங்கள்
நேசிப்பது கடலையா? -
என்னையா?
உன்னைத்தான். நிச்சயமாய்
உன்னைத்தான். கடலைவிட
மதிப்புடையவள் என்
காதலியே
நீதான்.

கடலைவிட
மதிப்புடையவளா? அவள்
கண்விரிந்தாள்.
ஆமாம். ஒரு டன்
கடல்தண்ணீர் 0.000004
கிராம்
32
தங்கம் வைத்திருக்கிறது.
ஆனால், 72 சதவிகிதம்
மட்டுமே தண்ணீர் கொண்ட
உடலில்
நீ 50 கிலோ கிராம்
தங்கமல்லவா
வைத்திருக்கிறாய்.

நான் உன்னைக்
காதலிப்பேனா? கடலைக்
காதலிப்பேனா?
அவள் காதுகள் முடிக்
கத்தினாள். போதும்.

போதும். உங்கள் புள்ளிவிவரம்
போதும்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:23 am

கடலுக்குள் நுழைவதற்குத்
தூரத்து விசைப்படகு துடித்துக்
கொண்டிருந்தது.

நான் கடல்பார்த்தபோதும்
உன் கண்பார்த்தபோதும்
மட்டும் பிரமித்திருக்கிறேன்
தமிழ்.

நீலக்கடல்பற்றி
நிறையப் படித்தேன். உன்னைப்
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.
என் ஒவ்வொரு கனவிலும்
உலாவரும் கடல் தேவதை
நீதான்.

நீ கடல். நான் பூமி.
என் மீது உன் அலைகளை
அனுப்பிக்கொண்டே
இருக்கிறாய்.

நீதான் என்மீது
புயல்வீசுகிறாய். நீதான்
என்மீது
மழைதூவுகிறாய்.

ஒவ்வொரு நாளும் என்
ஓரக்கரைகளை அரித்து
அரித்து என்னை உன்
உள்ளிழுத்துக்
கொண்டிருக்கிறாய்.

கடல் இல்லையென்றால்
வானுக்கு நிறமில்லை. நீ
இல்லையென்றால் என்
வாழ்க்கைக்கு நிறமில்லை.

நீ கடல். நான் பூமி என்பது
வெறும் உவமை
அல்ல. உண்மை.

சூரிய வெப்பத்தை உடனே
உள்வாங்கி
உடனே வெளிவிடுகிறது பூமி.
உடனே கொதித்து
உடனே குளிர்ந்துவிடும்
என்னைப் போல.

சூரிய வெப்பத்தை
மெல்லமெல்ல உள்வாங்கி
மெல்லமெல்ல வெளிவிடுகிறது
கடல் - அணு
அணுவாக அன்புவயப்பட்டு
உயிர்நிறையக்
காதலிக்கும் உன்னைப்
போல.

கலைவண்ணனுக்குப்
புனைபெயர் கடல்மைந்தன்
என்று வைக்கலாம்.
நான் மட்டுமல்ல.

ஒவ்வொரு மனிதனும் கடலின்
மைந்தன்தான்.

ஒவ்வொரு பெண்ணும்
கடலின் புத்திரிதான்.

ஒன்றை மறந்தேன். இன்னொரு
வகையிலும் நீதான் கடல்.

நான்தான் பூமி.

எந்த வகையில்?
முன்றில் இரண்டுபங்கு தண்ணீர்
இருந்தும் மிச்சமுள்ள பூமி,
தாகத்தால் தவிக்கிறதே...
அதைப்போல -
அமிர்தப் பாத்திரமாய் நீ
அருகிருந்தும் தாகப்பட்ட மனசு
தவியாய்த் தவிக்கிறதே.

தள்ளியிருந்த தமிழ்ரோƒஜா
தாவும் குழந்தையாய்
அருகில் வந்தாள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:23 am

அதுதான் எனக்கும்
ஆச்சரியம். தண்ணீர்
இவ்வளவிருந்தும்
தாகம் ஏன் தீரவில்லை?
புள்ளிவிவரம் சொன்னால்
பொறுத்துக்கொள்வாயா?
கொள்வேன்.

சொல்வேன். பூமியின்
தண்ணீரில் 97 சதம்
கடல்கொண்ட
நீர். உப்பு நீர். குடிக்க
உதவாத நீர்.

மிச்சமுள்ள 3 சதம்தான்
நிலம்கொண்ட நீர்.
அதில் 1 சதம் தண்ணீர்
துருவப்பிரதேசங்களில்
பனிமலைகளில்
உறைந்துகிடக்கிறது.

1 சதம் தண்ணீர் கண்டுகொள்ள
முடியாத ஆழத்தில்,
மொண்டுகொள்ள முடியாத
பள்ளத்தில் கிடக்கிறது.

மனிதகுலம்
பயன்படுத்துவதெல்லாம்
மிச்சமுள்ள 1
சதத்தைத்தான்.
அய்யய்யோ. அந்த 1
சதமும் தீர்ந்துவிட்டால்?
தீராது. தண்ணீர் பூமிக்கு
வெளியே போய்விட முடியாது.

ஒவ்வொரு மனிதனும் பருகுவது
பயன்படுத்தப்பட்ட பழைய
தண்ணீரைத்தான். தண்ணீரும்
காதலைப்போலத்தான். அதன்
முலகங்கள் அழிவதில்லை.

தூரத்து விசைப்படகு
தண்ணீர் கிழிக்கத் தயாரானது.
கிழக்கு நோக்கித் தன் முக்கை
மொத்தமாய்த் திருப்பியது.

கலைவண்ணன் கரையில்
இருந்துகொண்டே
மீண்டும் கடலில் முழ்கினான்.
விழித்துக்கொண்டே கனவில்
பேசினான்.

கடல்.
அது ஒரு தனி உலகம்.
பள்ளிகொண்ட வி…வருபம்.
எண்பத்தையாயிரம் உயிர்வகை
கொண்ட உன்னத அரசாங்கம்.

அடுத்த நூற்றாண்டு
உணவுத்தேவையின்
அமுதசுரபி.

முத்துக்களின் கர்ப்பப்பை.
பவளங்களின் தொட்டில்.
மங்கனீ„ பாறைகளின் உலோக
உலகம்.

பெட்ரோல் ஊற்றின
பிறப்புறுப்பு.

கலங்கள் நகரும்
திரவத்திடல்.

அது கவிஞர்களின் கனா.
விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடம்.

ஞானிகளின் தத்துவம்.

விசைப்படகு அந்தக்
காதலர்பாலம்
கடந்துதான்
கடல்புக வேண்டும்.

இப்போது ததும்பித் ததும்பி
அவர்களை நோக்கித்
தவழ்ந்து வந்தது அந்த
டீசல் பறவை.

தூரத்துச் சித்தரங்களாய்
அதன்
விளிம்பில் சில மீனவர்கள்.

படகு நெருங்க...
நெருங்க...
ஓ....
அவனுக்குத் தெரிந்தவர்கள்.
அவனை நேசிப்பவர்கள்.

மீனவர் போராட்டத்தில்
கைதாகி
அவன்
எழுத்துக்களால்
மீட்கப்பட்டவர்கள்.

அவர்களும் அவனைக்
கண்டுகொண்டார்கள்.
கலைவண்ணன்.
கலைவண்ணன்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:23 am

எந்திரஓசை கிழத்துக்
குரலெடுத்துக்
கூவினார்கள்.
அவன் மடியில்
படுத்துக்கிடந்தவள்
வெடித்துப்
பூத்தாள்.

விசைப்படகை வெறித்துப்
பார்த்தாள்.
பிறகு கண்களால் கேள்விகேட்டு
மெளனம் காத்தாள்.
கண்ணிமைக்காத கலைவண்ணன் -
தோழர்கள். என் மீனவத்
தோழர்கள் என்றான்.

என்ன பேனாக்காரரே.
கடலோடு
போய்விடுவோம்.
வாருங்களேன்.

விசைப்படகிலிருந்து வீசிய
அழைப்பு காற்றுவழி
மிதந்து கரையேறியது.
பாலம் நோக்கியே படகும்
வந்தது.

காதலியே. தமிழ்ரோƒஜா.
கடல்சென்று வருவோமா?
கண்ணடித்துச் சிரித்தான்
கலைவண்ணன்.

அய்யோ.
அவள் பெங்குவின் பறவைபோல்
பின்வாங்கினாள்.

கொஞ்சதூரம் போகலாம், சுத்தமான காற்று
சுகமான தாலாட்டு, தரையில் விழுந்த
ஆகாயமாய்க் கடல்பார்க்கலாம்.

ஓராயிரம் பறவைகளின் ஊர்வலம் பார்க்கலாம்
உடனே திரும்பலாம்.

கால்கள் பின்னுக்கிழுக்க - அச்சத்தில் முகம்
வியர்க்க - வேண்டாம் அந்த விபரீதம்
என்று விலகி ஓடினாள்.

படகு பக்கத்தில் வந்துவிட்டது.
கலைவண்ணனைப் பார்த்துக் கத்தினார்கள்.

கடலுக்குள் போய்வருவோம் மீன்விருந்து
வைப்போம் மாலைக்குள் கரைசேர்ப்போம்
ஒரே கதியில் உரைநடையில் பாடினார்கள்.

படகு நின்றது பாலம் உரசி.
தயவுசெய்து வா தமிழ் கலை கெஞ்சினான்
வேண்டாம் வேண்டாம்
மாட்டேன. மாட்டேன்.

அவள் சுடுமணலில் விழுந்த ஒற்றை
மழைத்துளியாய் ஓடி மறையப்பார்த்தாள்.

நீங்களும் வாருங்கள் தங்கையும் வரட்டும்
அழைப்புக் குரல்கள் அதிகமாயின.

இப்படி அஞ்சினால் எப்படி?
பாதுகாப்பான பயணம் இது. சின்னச்சின்ன
அனுபவங்கள் வேண்டாமா? சிறகடி
என்னோடு. வா தமிழ். வா.

அவள் சுருங்கினாள்
இவன் நெருங்கினான்.
அவள் அஞ்சி விழித்தாள்
இவன் கெஞ்சி
அழைத்தான்.

அவள் விழித்தாள்.
இவன் அள்ளினான்.

அங்கே அரங்கேறியது ஓர் அகிம்சை இம்சை
அவளை மார்போடு அள்ளி கவனமாய்க்
கால்வைத்து விசைப்படகில் குதித்தான்.
தாலாட்டும் படகில் தடுமாறி விழுந்தான்.

வீழ்வது அவனாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்
தமிழ் காயப்படாமல் கட்டிக்கொண்டான்.

அவள் உள்ளாடிய அச்சத்தில்
ஊமையானாள். மீனவர்கள் கைதட்டி
ஒலிஎழுப்ப கிலிகொண்டது கிளி.
பயப்படாதே தமிழ். பார் என் தோழர்களை.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக