புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
51 Posts - 44%
heezulia
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
2 Posts - 2%
prajai
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
417 Posts - 49%
heezulia
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
284 Posts - 33%
Dr.S.Soundarapandian
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
28 Posts - 3%
prajai
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_m10மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:25 pm

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

(நேரிசைக் கலிவெண்பா)

சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்து
ஏர்கொண்ட சங்கத்து இருந்தோரும் - போர்கொண்டு

இசையும் தமிழரசென்று ஏத்தெடுப்பத் திக்கு
விசையம் செலுத்திய மின்னும் - நசையுறவே

செய்யசிவ ஞானத் திரளேட்டில் ஓரேடு
கையில் எடுத்த கணபதியும் - மெய்யருளால்

கூடல் புரந்தொருகால் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா

மன்னுமூ வாண்டில் வடகலையும் தென்கலையும்
அன்னைமுலைப் பாலின் அறிந்தோரும் - முன்னரே

மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லின் இசைத்தோரும் - தோன்றயன்மால்

தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரில்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி

மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப்
பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் - முட்டாதே

ஒல்காப் பெருந்தமிழ்மூன்று ஓதியருள் மாமுனியும்
தொல்காப் பியமொழிந்த தொன்முனியும் - மல்காச்சொல்

பாத்திரம்கொண் டேபதிபால் பாய்பசுவைப் பன்னிரண்டு
சூத்திரம்கொண் டேபிணித்த தூயோரும் - நேத்திரமாம்

தீதில் கவிதைத் திருமா ளிகைத்தேவர்
ஆதி முனிவர் அனைவோரும் - சாதியுறும்

தந்திரத்தி னாலொழியாச் சார்வினையைச் சாற்றுதிரு
மந்திரத்தி னாலொழித்த வல்லோரும் - செந்தமிழில்

பொய்யடிமை இல்லாப் புலவரென்று நாவலர்சொல்
மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள்

காடவருஞ் செஞ்சொல் கழறிற் றறிவாரும்
பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் - நாடவரும்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:26 pm

கல்லாதார் சிங்கமெனக் கல்விகேள் விக்குரியர்
எல்லாரும் நீயாய் இருந்தமையால் - சொல்லாரும்

என்னடிக ளேயுனைக்கண் டேத்தினிடர் தீருமென்றுன்
பொன்னடிக ளேபுகலாப் போற்றினேன் - பன்னியமென்

பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்டு
எஞ்சியழுக்கு ஏறா இயற்கலையே - விஞ்சுநிறம்

தோயாத செந்தமிழே சொல்லேர் உழவரகம்
தீயாது சொல்விளையுஞ் செய்யுளே - வீயாது

ஒருகுலத்தும் வாராது உயிர்க்குயிராய் நின்றாய்
வருகுலமோர் ஐந்தாயும் வந்தாய் - இருநிலத்துப்

புண்ணியஞ்சேர் உந்திப் புலத்தே வளிதரித்துக்
கண்ணிய வாக்காம் கருப்பமாய் - நண்ணித்

தலைமிடறு மூக்குரத்தில் சார்ந்திதழ்நாத் தந்தம்
உலைவிலா வண்ணத் துருவாய்த் - தலைதிரும்பி

ஏற்பமுதல் முப்பதெழுத் தாய்ச்சார் பிருநூற்று
நாற்ப தெழுத்தா நனிபிறந்தாய் - மேற்படவே

எண்முதலா கப்பகரும் ஈராறு எனும்பருவம்
மண்முதலோர் செய்து வளர்க்குநாட் - கண்மணிபோல்

பள்ளிக்கூ டத்தசையாம் பற்பலதொட் டில்கிடத்தித்
தள்ளிச் சிறார்கூடித் தாலாட்டி - உள்ளிலகு

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் - மஞ்சரையே

பன்னியொரு பத்துப் பருவமிட்டு நீவளர்த்தாய்
உன்னை வளர்த்துவிட ஒண்ணுமோ - முன்னே

நினையும் படிப்பெல்லாம் நின்னைப் படிப்பார்
உனையும் படிப்பிப்பார் உண்டோ - புனைதருநல்

செய்யுட்சொல் நான்குமுயர் செந்தமிழ்ச்சொல் ஓர்நான்கும்
மெய்யுட் பொருள்ஏழ் விதத்திணையும் - மையிலெழுத்து

ஆதியாப்பு எட்டும் அலங்காரம் ஏழைந்தும்
பேதியாப் பேரெழின்மாப் பிள்ளையாய்ச் - சாதியிலே

ஆங்கமைசெப் பற்பண் அகவற்பண் துள்ளற்பண்
தூங்கற்பண் பட்டத்துத் தோகையரா - ஓங்குமனத்து



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:26 pm

எண்கருவி ஐந்தீன் றிடுநூற்று மூன்றான
பண்களும்பின் கல்யாணப் பாவையரா - எண்கொளும்

நற்றா ரகமா நவரசமாம் பிள்ளைகளைப்
பெற்றாய் பெருவாழ்வு பெற்றாயே - உற்றகலாப்

பண்கள்முதல் பெண்களொடும் பாலரொடு நாடகமாம்
பெண்கொலுவில் வீற்றிருக்கப் பெற்றாயே - மண்புகழத்

தாழ்விலா அட்டா தசவன் னனைகளெனும்
வாழ்வெலாம் கண்டு மகிழ்ந்தாயே - ஆழ

நெடுங்கோல வையையிலென் நேசர்மேல் பட்ட
கொடுங்கோல்செங் கோலாகக் கொண்டாய் - அடங்காத

எங்கோவோ பத்தென்று இயம்புதிசைக் குள்ளேநின்
செங்கோல் செலாத திசையுண்டோ - இங்கேயுன்

தேசமைம்பத் தாறில் திசைச்சொல் பதினேழும்
மாசறநீ வைத்தகுறு மன்னியரோ - வீசு

குடகடலும் கீழ்கடலும் கோக்குமரி யாறும்
வடவரையும் எல்லை வகுத்தாய் - இடையிருந்த

முன்னுறுந்தென் பாண்டி முதற்புனல்நாடு ஈறான
பன்னிரண்டு நாடுமப் பானாடோ - அந்நாட்டுள்

வையை கருவைமரு தாறுமரு வூர்நடுவே
ஐயநீ வாழும் அரண்மனையோ - செய்யபுகழ்

மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய்வளைந்த
பாவேந்தே நீபெரிய பார்வேந்தோ - காவேந்து

விண்ணவரும் காணரிய வேதா கமங்களெலாம்
புண்ணியனே உன்றன் புரோகிதரோ - எண்ணரிய

நல்லபெருங் காப்பியங்கள் நாடகா லங்காரம்
சொல்லரசே உன்னுடைய தோழரோ - தொல்லுலகில்

சார்புரக்கும் கோவேநற் சாத்திரங்கள் எல்லாமுன்
பார்புரக்கும் சேனா பதிகளோ - வீரரதிர்

போர்ப்பா ரதமும் புராணம் பதினெட்டும்
சீர்ப்பாவே உன்னுடைய சேனைகளோ - பார்ப்பார்கள்

அக்கர வர்த்தியென லாமென்பார் பூலோக
சக்கர வர்த்தியுநீ தானன்றோ - சக்கரமுன்பு

ஏந்தி நெடுந்தேர்மேல் ஏறிச் சுழிகுளம்
நீந்தியோர் கூட நிறைசதுக்கம் - போந்து



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:26 pm

மதுரம் கமழ்மாலை மாற்றணிந்து சூழும்
சதுரங்க சேனை தயங்கச் - சதுராய்

முரசம் கறங்க முடிவேந்தர் சூழ
வரசங்க மீதிருந்து வாழ்ந்த - அருள்வடிவாய்

ஓங்குபுகழ் மூவர் ஒருபா ஒருபஃதும்
ஆங்கவைசொல் வாதவூ ராளிசொல்லும் - ஓங்குமவன்

கூற்றாய் அரனெழுதும் கோவையும் கோதிறாய்
மாற்றா இரட்டைமணி மாலையும் - தேற்றமுறப்

பற்றாம் இலக்கணநூற் பாவுநூற் பாவறிந்து
கற்றார் வழங்குபஞ்ச காப்பியமும் - கொற்றவருக்கு

எண்ணிய வன்னனைகள் ஈரொன் பதுமறியக்
கண்ணிய மிக்கபெருங் காப்பியமும் - நண்ணியே

இன்புறு சேரனரங்கு ஏற்றமகிழ்ந்து அம்பலத்தான்
அன்புறுபொன் வண்ணத்தந் தாதியும் - முன்பவர்சொல்

மாத்தமிழாம் மும்மணி மாலையும் பட்டினத்தார்
கோத்தணிந்த மும்மணிக் கோவையும் - மூத்தோர்கள்

பாடி யருள்பத்துப் பாட்டுமெட் டுத்தொகையும்
கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும் - ஆடகமா

வெற்பனையார் மாதை விமலரிடத் தேயிருவர்
கற்பனையாற் சொன்ன கலம்பகமும் - முற்படையோடு

ஆடற் கலிங்கமழித்து ஆயிரம் ஆனைகொன்ற
பாடற் கரிய பரணியும் - கூடல்

நராதிபன் கூத்தனெதிர் நண்ணியோர் கண்ணிக்கு
ஒராயிரம்பொன் ஈந்த உலாவும் - பராவுமவன்

பிள்ளைத் தமிழுமுன்னாம் பேராத பல்குரவர்
வெள்ளத் தினுமிகுத்தோர் மெய்காப்ப - உள்ளத்து

வீரியம் செய்து வினையொழிய வேராச
காரியம் செய்யும் கவிதையே - பாரில்

அரியா சனமுனக்கே ஆனால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழே - விரிவார்

திகழ்பா ஒருநான்கும் செய்யுள்வரம் பாகப்
புகழ்பா வினங்கள்மடைப் போக்கா - நிகழவே

நல்லேரி னால்செய்யுள் நால்கரணத்து ஏர்பூட்டிச்
சொல்லேர் உழவர் தொகுத்தீண்டி - நல்லநெறி

நாலே விதையா நனிவிதைத்து நாற்பொருளும்
மேலே பலன்பெறச்செய் விக்குநாள் - மேலோரில்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:27 pm

பாத்தனதாக் கொண்டபிள்ளைப் பாண்டியன் வில்லிஒட்டக்
கூத்தனிவர் கல்லாது கோட்டிகொளும் - சீத்தையரைக்

குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம்
வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர் - கட்டி

வளர்ந்தனைபால் முந்திரிகை வாழைக் கனியாய்க்
கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத்து - இளங்கனியாயத்

தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியேயென் முத்தமிழே - புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் - மண்ணில்

குறமென்று பள்ளென்று கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவென்று மூன்றினத்தும் உண்டோ - திறமெல்லாம்

வந்தென்றும் சிந்தா மணியாய் இருந்தவுனைச்
சிந்தென்று சொல்லியநாச் சிந்துமே - அந்தரமேல்

முற்றுணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ
குற்றமிலாப் பத்துக் குணம்பெற்றாய் - மற்றொருவர்

ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோநீ
நோக்கிய வண்ணங்கள் நூறுடையாய் - நாக்குலவும்

ஊனரசம் ஆறல்லால் உண்டோ செவிகளுணவு
ஆன நவரசமுண் டாயினாய் - ஏனோர்க்கு

அழியா வனப்பொன்று அலததிகம் உண்டோ
ஒழியா வனப்பெட்டு உடையாய் - மொழிவேந்தர்

வாங்கு பொருள்கோள் வகைமூன்றே பெற்றார்நீ
ஓங்குபொருள் கோள்வகையெட்டு உள்ளாயே - பாங்குபெற

ஓர்முப்பால் அன்றியைம்பால் உள்ளாய் உனைப்போலச்
சீர்முப்ப தும்படைத்த செல்வரார் - சேரமான்

தன்னடிக் கண்டு தளைவிடுத்தாய் ஏழ்தளையுன்
பொன்னடிக்குண் டென்பதென்ன புத்தியோ - என்னரசே

திண்பா வலர்க்கறிவாம் செந்தமிழாய் நின்றவுன்னை
வெண்பாவென்று ஓதுவது மெய்தானோ - பண்பேர்

ஒலிப்பாவே சங்கத்து உகமூன்று இருந்தாய்
கலிப்பாவென்று ஓதல் கணக்கோ - உலப்பில்

இருட்பா மருள்மாற்றி ஈடேற்றும் உன்னை
மருட்பாவென் றோதல் வழக்கோ - தெருட்பாப்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:27 pm

பொருத்தமொரு பத்துப் பொருந்துமுனைத் தானே
விருத்தமென்று சொல்லல் விதியோ - இருட்குவையை

முந்தியொளி யால்விலக்கும் முச்சுடரென் பாருனைப்போல்
வந்தென் மனத்திருளை மாற்றுமோ - சிந்தா

மணிகொடையின் மிக்கதென்பார் வண்கொடையும் உன்பேர்
அணியும் பெருமையினால் அன்றோ - தணியும்

துலங்காரம் கண்டசரம் தோள்வளைமற்று எல்லாம்
அலங்கார மேயுனைப்போல் ஆமோ - புலங்காணும்

உன்னைப் பொருளென்று உரைக்குந் தொறும்வளர்வாய்
பொன்னைப் பொருளென்னப் போதுமோ - கன்னமிட்டு

மன்னர் கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள்
என்ன பொருளுனைப்போல் எய்தாவே - நன்னெறியின்

மண்ணில் புகழுருவாய் வாழ்வதற்கும் வாழுநர்
விண்ணிற்போய்த் தேவுருவாய் மேவுதற்கும் - எண்ணியுனைக்

கொண்டுபுகழ் கொண்டவர்க்கே கூடுமுனைக் கூடாத
தொண்டருக்குத் தென்பாலே தோன்றுமால் - தண்டமிழே

ஈங்குனது சங்கத்தால் ஈசர் உயர்ந்தாரோ
ஓங்குமவ ரால்நீ உயர்ந்தாயோ - பூங்கமல

வீடாளும் வாணியங்கை மேலே இருந்தாயோ
ஏடாக உன்மேல் இருந்தாளோ - ஆடரவத்

தாழ்பாய லாளரைநீ தானே தொடர்ந்தாயோ
சூழ்பாயோடு உன்னைத் தொடர்ந்தாரோ - வாழ்வேயென்று

ஓதிமுனி கேட்க உனைமுருகர் சொன்னாரோ
சோதி யவரைநீ சொற்றனையோ - பேதியா

நேசருனக் கேபொருளாய் நின்றாரோ நீண்மதுரை
வாசருக்கு நீபொருளாய் வந்தாயோ - பாசமுறும்

என்செய்தி நீகண்டு இரங்குவது நீதியல்லால்
உன்செய்தி நானோ உரைசெய்வேன் - இன்சொல்லாய்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகவென்ற - சொற்குள்ளே

எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற
வல்லாய் உனக்குரைக்க வல்லேனோ - சொல்லியவுன்

ஈரடிக்குள் ளேயுலகம் எல்லாம் அடங்குமெனின்
நேரடிக்கு வேறே நிலனுண்டோ - ஓரடிக்கோர்

ஆயிரம் பொன்னிறைக்கும் ஐயரை வீதியிலே
போயிரந்து தூதுசொல்லப் போக்கினோ - யாயிருந்தும்

மாண்பாயோர் தூதுசொல்லி வாவென்பேன் என்வருத்தம்
காண்பாயென் பெண்மதிநீ காணாதே - ஆண்பனைநல்

பெண்பனை ஆக்கினையால் பெண்களிலே காரைக்கால்
வண்பதியார் ஒளவையென வந்துதித்தாய் - நண்பார்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:27 pm

திலதவதி யாருடனே சென்மித்தாய் மாடக்
குலதவதி யானத்தர் கூடல் - பலதவஞ்சேர்

மேனியார் கண்டிகையும் வெண்ணீறும் கண்டுருகும்
மானியார் தேசிகனா வந்துதித்தாய் - ஞானியார்

துங்க மகவாகத் தோன்றி வனப்பகைக்கும்
சிங்கடிக்கும் தாதையாய்ச் சீர்செய்தாய் - இங்குநீ

பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில்
புண்களெல்லாம் ஆறப் புரிகண்டாய் - ஒண்கமலத்து

அன்னம் தனைவிடுப்பேன் அன்னந்தான் அங்கவரை
இன்னம்தான் கண்டறியாது என்பரே - மன்னெந்தாய்

அப்பாலோர் வண்டை அனுப்பின் அவர்காமம்
செப்பாதே என்றால் திகைக்குமே - தப்பாது

மானைப்போய்த் தூதுசொல்லி வாவென்பேன் வல்லியப்பூந்
தானைப் பரமர்பாற் சாராதே - ஏனைப்பூங்

கோகிலத்தை நான்விடுப்பேன் கோகிலமும் காக்கையினம்
ஆகி வலியானுக்கு அஞ்சுமே - ஆகையினால்

இந்தமனத் தைத்தூதாய் ஏகென்பேன் இம்மனமும்
அந்தமனோ தீதர்பால் அண்டாதே - எந்தவிதம்

என்றென்று இரங்கினேன் என்கவலை எல்லாம்பொற்
குன்றனையாய் உன்னுடனே கூறுகேன் - சென்றாலும்

பண்ணிய பத்தொன் பதினா யிரத்திருநூற்று
எண்ணியதொண் ணூற்றொன் றெனும்தொடையாய் - நண்ணீ

ஒருதொடை வாங்கி உதவாயோ ஓர்சே
விருதுடை யார்க்குநீ வேறோ - தருமிக்கே

ஓர்வாழ்க்கை வேண்டி உயர்கிழிகொள் வான்கொங்கு
தேர்வாழ்க்கை என்றெடுத்த செய்தியும் - கீரன்

இசையா வகையின் இயம்பினான் என்றே
வசையாடித் தர்க்கித்த வாக்கும் - இசையான

பாட்டுக் கிரங்கியொரு பாணனுக்குச் சேரலன்மேல்
சீட்டுக் கவிவிடுத்த சீராட்டும் - பாட்டியலில்

நாத்திரமா மேவுபொருள் நன்றா அறுபதெனும்
சூத்திரமாப் பாடியருள் தோற்றமும் - மாத்திரமோ

உன்னோடு அவர்விளையாட்டு ஒன்றோ வடமதுரைக்கு
அந்நேரம் உன்பிறகே யார்வந்தார் - மன்னவன்மேல்

காரியார் நாரியார் கண்டகவி யைப்பகிர
வாரியிலாக் கானகத்தில் வந்தவரார் - நாரினொடும்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:27 pm

போற்றியுறும் பத்திரற்காப் போந்து கிழவுருவில்
தோற்றி விறகு சுமந்தவரார் - தேற்றியவற்கு

ஈயரிய பொற்பலகை இட்டவரார் மற்றவன்றன்
நேயமனை விக்கெதிரா நேர்ந்தவளைப் - போயவையில்

தள்ளியிசை தாபிக்கத் தக்கவரார் தென்மதுரைக்கு
உள்ளிருந்த சொக்கருனக் குள்ளன்றோ - எள்ளி

வடமொழியில் வேத வசனமே ஈசர்
திடமொழியா மென்பார் சிலரே - அடரும்

பரசமய கோளரியாய்ப் பாண்டிநா டெங்கும்
அரசமய நீநிறுத்தும் அந்நாள் - விரசுநீ

ஆதிக்கண் வையையில்வே தாகமத்தைத் தாபித்தாய்
சோதிக்கின் ஏடகமே சொல்லாதோ - வேதத்தேவு

ஆதவனங் கண்டாது அடைத்தகத வம்திறந்தாய்
வேதவனம் கண்டால் விளம்பாதோ - வேதம்

அமிழ்தினுமிக் கென்னுமுனிக்கு அன்பருனைச் சொன்னார்
தமிழ்முனியென் னும்பேர்தா ராதோ - தமிழால்

அறம்பொருள் இன்பம்வீடு ஆரணர்சொன் னாரத்
திறம்பரமர் வாக்கேசெப் பாதோ - மறந்திடலில்

கற்பலகை ஓதுமறை காணார்கீழ் நிற்கவும்நீ
பொற்பலகை மேலிருந்தாய் போதாதோ - தற்பரரோடு

எண்ணிறந்த வாசியழைத் திட்டாய் சதுர்வேதப்
பண்ணிறைந்த வாசி பகராதோ - அண்ணலார்

தென்பால் உகந்தாடும் செய்தியெல்லாம் உன்னிடத்தில்
அன்பாலென்று அப்பாலும் ஆரறியார் - உன்பேர்

பழியார் திசைச்சொல்லார் பன்னார் திருவாய்
மொழியார் குழறி மொழிவார் - அழியா

உருவால வாயிருக்கும் ஓதரிய முத்தித்
திருவால வாயிருக்கும் செல்வர் - ஒருமால்

வடமதுரை ஏறுமுன்னே வந்தவடிவு என்னத்
தடமதுரை மீனுயர்த்த தாணு - படர்தீர்க்கும்

சத்திபுரத்து ஓர்பால் தழைத்துமகிழ்ந் தோர்சீவன்
முத்திபுரத் தோர்பால் முளைத்தெழுந்தோர் - அத்திசைபோல்

ஆங்கோர் இருநான்கு அயிரா வதஞ்சுமக்கும்
பூங்கோயிற் குள்ளுறைந்த புண்ணியனார் - பாங்காம்

இடம்பவனம் ஈதாக இந்திரன்வந் தேத்தும்
கடம்பவனம் மீதிலுறை காந்தர் - அடும்பேர்

அலகம் பரிக்கும் அரியார் முடிவேய்ந்து
உலகம் பரிக்குமுறை உள்ளார் - பலநாளும்

நின்றவூர்ப் பூசலார் நீடிரவெ லாநினைந்து
குன்றுபோ லேசமைத்த கோயிலும் - நன்றிதரும்

தாயான கங்கைமுடி தான்குளிரக் கண்ணப்பர்
வாயால் உமிழ்ந்ததிரு மஞ்சனமும் - தூயமழைத்

துன்பார் திருக்குறிப்புத் தொண்டர் துணித்துறையில்
வன்பாய் அளித்தபரி வட்டமும் - இன்பாத்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:28 pm

தணிவரிய மானக்கஞ் சாறனார் சாத்தும்
மணிமுடிசூழ் பஞ்ச வடியும் - அணிவிடையார்

காமன்பால் முன்சேந்த கண்போல மூர்த்தியார்
தாமன்பால் முன்சேர்த்த சந்தனமும் - பூமன்போல்

காக்கும் அரிபுனைந்த கண்மலரும் காதலொடு
சாக்கியர்தாம் சாத்தியபூந் தண்மலரும் - போக்கியமா

ஆக்கிய மாறன் அமுதும் சிறுத்தொண்டர்
மாக்கறியும் தாயர்தரு மாவடுவும் - நீக்கரிய

காரார் இரவில் கணம்புல்லர் தம்முடிமேல்
சீராக ஏற்றியசெந் தீபமும் - ஆரால்

அமைத்து வணங்கலுறும் அங்கணர்க்குப் பூசை
சமைத்து வணங்கத் தகுமோ - உமைக்கன்பர்

அற்சனைபாட் டேயாமென்று ஆரூரர்க் காதியிலே
சொற்றமிழ் பாடுகெனச் சொன்னமையாற் - சொற்படியே

செய்தாய்நால் வேதம் திகைத்தொதுங்கப் பித்தனென்று
வைதாய்நீ வைதாலும் வாழ்த்தாமே - மெய்தான்

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் - வருந்தினன்மால்

வெல்லானை தின்ற விளங்கனியா னேன்விரகக்
கல்லானை தின்ற கரும்பானேன் - நல்லவரைத்

தேடுநிழற் சிந்தனையிற் றேம்பினேன் வெம்பனியால்
வாடிய செந்தா மரையொத்தேன் - ஓடமிசைக்

கொள்ளம்பூ தூர்வெள்ளக் கொள்ளைகடந் தாயென்மால்
வெள்ளம் கடத்திவிட வேண்டாவோ - தள்ளென்று

மாறிட்ட சாக்கியரை வன்கழுவே றச்செய்தாய்
சீறிட்ட வேளையது செய்யாயோ - நீறிட்டே

அங்கரும்பின் கூனொழித்தாய் அன்றுவழு திக்குமதன்
செங்கரும்பின் கூனொழியச் செய்யாயோ - அங்கமுறு

வெப்புநோய் தீர்த்தாயவ் வேந்தனுக்கென் வெவ்விரக
வெப்புநோய் தீர்க்க விரும்பாயோ - தப்பலவே



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:28 pm

சாக்கியர் இட்டநஞ்சு தன்னையமு தாக்கினையின்று
ஆக்கிய நஞ்சையமு தாக்காயோ - நீக்கரிய

வெந்தீக்குள் ளேகிடந்தும் வேவாயென் பார்காமச்
செந்தீச் சுடாதிருக்கச் செய்யாயோ - வந்துகொங்கில்

அப்பனியால் வாடாதே யார்க்கும் துயரொழித்தாய்
இப்பனியால் வாடாது இரங்காயோ - அப்பரை

மைக்கடல்கொல் லாதபடி வன்கல் மிதப்பித்தாய்
அக்கடல்கொல் லாமலுற வாக்காயோ - மிக்குயர்ந்த

மன்றிற் பனைவடிவம் மாற்றினாய் அப்பனைமேல்
அன்றிற்புள் வேறொருபுள் ஆக்காயோ - தொன்றுதொட்டுத்

தென்பொதியில் சாந்தினொடு தென்றலுற வாய்வந்தாய்
அன்புறவென் னோடுமுறவு ஆக்காயோ - முன்பிருந்து

பாடுமிசை எல்லாமுன் பாவையராச் சேர்ந்தாயென்
னோடுமுனி யாதிருக்க ஓதாயோ - பாடலால்

சின்னமொடு காளம் சிவிகைபந்தர் முத்தடைந்தாய்
பொன்னே சுடாதணியப் பூட்டாயோ - முன்னிறந்தாள்

அங்கத்தைப் பூம்பாவை ஆக்கினாய் ஆதலினென்
அங்கத்தைப் பூம்பாவை ஆக்காயோ - மங்கத்தான்

மாய்ந்தாலும் மாமுதலை வாய்ப்பிள்ளை யைப்படைத்தாய்
மாய்ந்தாலும் பின்படைக்க வல்லையே - ஏய்ந்தவுரை

செய்தாளென்று என்சொல் செவியோர்ந்து செல்வாயிங்கு
எய்தாமல் அங்கிருக்க எண்ணாதே - பொய்தீரத்

தேசிவரும் சொக்கருக்கே சென்றிருந்து ஆங்கவரைப்
பேசிவரும் தூது பிறிதுண்டோ - நேசமொடு

தைவரினும் காட்டத் தகாதாரைத் தாதையர்க்குக்
கைவிரலால் காட்டியருள் காளையும் - தெய்வவெள்ளிப்

பூதர வானவரைப் போற்றமுயன்று ஐயாற்றில்
ஆதரவாய்க் கண்ட அரசரும் - நாதர்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக