புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Poll_c10இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Poll_m10இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Poll_c10இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Poll_m10இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Poll_c10இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Poll_m10இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 2:29 am

. எனது இரத்தத்தின் இரத்தங்களே .என்ற வார்த்தை அந்தக்காலத்து அரசியல் மேடைகளில் கேட்டுப் புளித்து போன ஒன்று. இரத்த உறவு, இரத்த சம்பந்தம் என்று தமிழர்கள் கொண்டாடும் பாசப் பிணைப்புக்கள் பலவுண்டு. ஒற்றுமையை வலியுறுத்தும் போது ‘இரத்தம் ஒரே நிறம்’ என்று தான் முழங்குகிறார்கள். காந்தியின் அகிம்சை போராட்டத்தை பற்றி பாடும் கவிஞர் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என புகழ்வார்கள். இலங்கையில் பல பேர் உரிமைக்காக இரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவத் துறையை பொறுத்த வரை மனித இரத்தம் நான்கு வகைகளாக இருக்கிறன. A,B,AB,O என்பவை அவை. இவற்றில் rh காரணி இருக்கின்ற rh+, இல்லாத rh- ஆகியன பற்றிக் கருதினால் இந்த நான்கு பிரதான பிரிவுகளும் இரண்டாக பிரிந்து மொத்தம் எட்டு வகைகளாக இருக்கும். இவற்றைத் தவிர சிறிய சிறிய காரணிகளால் ஒரே வகையை சேர்ந்த இரத்தம் கூட சிறு சிறு வேறுபாடுகளை காட்டக் கூடும். உண்மையில் ஒருவரின் இரத்த வகையானது அவரின் பரம்பரையலகுகள் மூலம் (Gene) தீர்மானிக்கப்படுகிறது. சாதாரணமாக ஒரு திடகாத்திரமான மனிதனில் 5 லீற்றர்கள் இரத்தம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இரத்தம் என்பது செங்குழியங்கள் (RBC) வெண்குழியங்கள் (WBC) குருதிச்சிறுதட்டுக்கள் (Platelets) மற்றும் குருதித் திரவ இழையம் (Plasma) ஆகியவற்றை கொண்டது. இதில் காணப்படும் செங்குழியங்கள் வெண்குழியங்கள் குருதிச்சிறுதட்டுக்கள் என்பன என்பு மச்சையிலிருந்து உருவாகின்றன.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 2:29 am

விபத்து நேர்ந்து குருதியிழப்பு ஏற்படும் போது அல்லது சத்திர சிகிச்சை செய்யும் போது குருதி வழங்க வேண்டிய தேவை எற்படலாம். இதற்காக இலங்கையில் இரத்த வங்கிகள் காணப்படுகின்றன. இந்த வங்கிகளால் இரத்தம் வழங்கப்படுகிறது. இரத்த தானம் செய்பவர்கள் இரத்த வங்கியில் இரத்தத்தை வழங்க முடியும். இரத்த தானம் செய்பவரிடமிருந்து ஏறத்தாழ 450 ml இரத்தம் பெற்றுக்கொள்ளப்படும்.
தானமாக பெற்ற இரத்தத்தை இரத்த வங்கி முழு இரத்தமாக (Whole blood) அல்லது குருதியின் கூறுகளான திரவ இழையம் (FFP / CPP) செங்குருதி கலங்கள் (Packed red cell) வெண் குழியங்கள் (Buffy coat) அல்லது குருதிச் சிறுதட்டுகளாக (Platelets) சேமிக்கும். இதன்படி தேவையான கூறுகளை தேவையானவர்களுக்கு வழங்கக் கூடியதாக இருக்கும்.
இரத்தம் வழங்கும் நபர்களுக்கு சில அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும். 18 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட திடகாத்திரமான உடல் நிறை 50Kg க்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் இரத்ததானம் செய்யலாம். மது பாவனையிலிருப்பவர்கள், நீரிழிவுநோயாளிகள், குருதிச்சோகைநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நுண்ணுயிர் கொல்லிகள் பாவிப்பவர்கள் (Using antibiotics) விலைமாதருடன் தொடர்புடையவர்கள், எயிட்ஸ் நோயாளிகள் ஆகியோர் இரத்ததானம் செய்ய முடியாது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 2:30 am

இரத்ததானம் செய்வது இலகுவானது. இரத்தானம் வழங்குவதற்காக விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கையளிக்கும் போது வைத்தியர் உங்களது தகுதி பற்றி பரிசோதிப்பார் அவ்வாறே குருதியின் ஹீமோகுளோபின் அளவு, நிறை, குருதி அழுக்கம், ஆகியனவும் பரிசோதிக்கப்படும். உங்களுக்கு குருதி வழங்கப்படும் தகுதி நிரூபிக்கப்படும் பட்சத்தில் இரத்ததானம் செய்ய நீங்கள் அனுமதிக்கப்படுவீர்.
இரத்ததானம் செய்யும் கட்டிலில் நீங்கள் படுத்தவுடன் உங்கள் கையில் சிறிய இரப்பர் பந்து வழங்கப்படும். இதனை அமுக்கி அமுக்கி நீங்கள் விளையாடும் போது உங்கள் கைக்கான குருதி வழங்கல் அதிகரிக்கும். இதன் போது குருதியைப் பெறும் ஊசி உங்கள் கையில் குத்தப்பட்டு (குத்தும் போது கட்டெறும்பு கடித்து போல ஒரு சிறிய வலி தெரியக் கூடும்) இரத்தம் பெறப்படும். குறித்தளவு இரத்தம் பெறப்பட்டதும், ஊசி கழட்டப்படும் உங்கள் குருதியின் மாதிரிகள் HIV, Hepatitis B, மலேரியா மற்றும் பால்வினை நோய்கள் (UDRL) என்பவற்றிற்காகப் பரிசோதிக்கப்படும். இதன் மூலம் உங்களுக்கு மேற்குறித்த நோய்கள் யாதேனும் காணப்பட்டால் அது உங்கள் குருதியைப் பெறுபவருக்கு தொற்றுவதைத் தவிர்க்கப்படும்.
குருதியை வழங்கிய பின் சிறிது நேரம் அதே கட்டிலில் இளைப்பாறிய பின்னர் நீங்கள் எழுந்திருக்கலாம். தானம் வழங்கிய உங்களுக்கு ஒரு கோப்பை பானம் வழங்கப்படும். குருதியை தானம் செய்தவர்கள் இரத்ததானம் செய்த அன்று நித்திரை முழித்தல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அன்றைய தினம் நிறைய நீரை நீங்கள் பருகுங்கள். நீங்கள் வழங்கிய குருதிக்குச் சமனான குருதித்திரவம் (Plasma) 24 மணித்தியாலங்களுக்குள் உங்கள் உடலுக்கு மீண்டும் கிடைத்துவிடும்/ செங்குழியங்கள் 3-4 வாரங்களில் மீண்டும் பழைய செறிவுக்கு வந்து விடும். இரும்புச் சத்து நிறைந்த இலைவகைகளை உண்பது நல்லது .ஒரு முறை தானம் செய்து நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் இரத்ததானம் செய்ய முடியும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 2:30 am

முதன் முறையாக இரத்ததானம் செய்யும் போது இரத்ததானம் செய்வதற்கான பதிவேடு ஒன்று உங்களுக்கு வழங்கப்படும். அதில் உங்கள் பேர் விபரங்களுடன் உங்கள் குருதியின் வகையும் பொறிக்கப்பட்டிருக்கும். 10 தடவைகளுக்கு மேல் இரத்ததானம் செய்தவர்களைப் பாராட்டி பதக்கங்களும் பல்வேறு ஊக்குவிப்புக்களும் வழங்கப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் வழங்கிய குருதி இன்னொரு உயிரைக் காப்பாற்றப் போகிறது என்ற எண்ணம் ஏற்படும் போது நீங்கள் உங்கள் செயலின் பெறுமதியை உணர்ந்து கொள்வீர்கள். எனது நண்பன் ஒருவன் என்னுடம் வந்து ஒரு புதிர் போட்டான் “மச்சான் இதயத்திற்கும் இரத்தத்திற்கும் என்ன சம்மந்தம்”என்று கேட்டான். “எனக்குத் தெரிந்த வரை இரத்தத்ததை உடல் முழுவதும் “பம்ப்” பண்ணி இறைப்பது இதயம்” என்று சொன்னேன் அது மட்டுமில்லையடா மடையா இதயத்திற்குப் பிடித்தவர்களின் பிறந்தநாளிக்கு இரத்ததானம் செய்ய வேண்டுமடா என்றான். ஹூம் இந்தக் காலத்து இளைஞர்கள் வித்தியாசமாகவே சிந்திக்கிறார்கள்!
நன்றி : வாயுபுத்திரன்
நன்றி : வீரகேசரி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 17, 2010 8:12 am

நான் ஒன்பது முறை இரத்த தானம் செய்துள்ளேன்..சபீர்.... நல்ல செய்திகள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி... இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் 678642 இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் 154550



இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Aஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Aஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Tஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Hஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Iஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Rஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Aஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக