புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:01 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]



முகவுரை


திருவாளர் செல்வன் சந்திரசூடனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்று அறிந்த போது, அவனுடைய நண்பர்கள் பலரும் அடைந்த வியப்புக்கு அளவில்லை. எனெனில், சந்திரசூடன் நெடுங்காலமாக, "கலியாணம் என்ற பேச்சை என் காதில் போட வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வளவு எளிதில் அவனுடைய நண்பர்கள் அவனை விட்டுவிடுகிறதாக இல்லை. அவன் கேட்க விரும்பவில்லை என்று சொன்ன வார்த்தையையே ஓயாமல் அவன் காது செவிடுபடும்படி டமாரம் அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். "இப்படி எத்தனையோ விசுவாமித்திரர்களைப் பார்த்து விட்டோ ம்!" என்று அவனைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள். இத்தகைய நண்பர் கூட்டத்தில் சந்திரசூடன் அகப்பட்டுக் கொள்ளும் போது, "ஒருவேளை நான் புத்தி தடுமாறிக் கலியாணம் செய்து கொண்டாலும் இந்திய தேசத்தின் ஜனத் தொகையை மட்டும் பெருக்க மாட்டேன்" என்று சில சமயம் சொல்வதுண்டு, சொல்வதுடன் நின்று விடாமல் அவன் கர்ப்பத்தடை முறைகளைப் பற்றிய விஞ்ஞான ரீதியான இலக்கியங்கள், அதே விஷயத்தைச் சுற்றி வளைக்காமல் அப்பட்டமாகச் சொல்லும் நூல்கள், இவற்றையெல்லாம் வாங்கிப் படித்தும் வந்தான்.

அத்தகைய சந்திரசூடன் இப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறான், அதிலும் ஏற்கெனவே குழந்தை உள்ள ஒரு பெண்மணியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான் என்றால் அவனை அறிந்தவர்கள் ஆச்சரியக் கடலில் மூழ்கித் தத்தளிப்பது இயல்பேயல்லவா?

அத்தகைய பரிகாசத்துக்கிடமான காரியத்தை அவன் செய்ய முன் வந்ததன் காரணத்தை அறிந்து கொள்ள அவனுடைய நண்பர்கள் ஆசைப்பட்டதிலும் அவ்வளவு வியப்பில்லை அல்லவா?

திருமணக் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அவனைக் கண்டுபிடித்து நேருக்கு நேர் கேட்டுவிடுவதென்று பலரும் துடியாயிருந்தார்கள். அவர்களில் நானும் ஒருவன். கடைசியாக அவனை ஒரு நாள் கையும் மெய்யுமாகப் பிடித்து, "அப்பனே! இந்த விபத்தில் எப்படி அகப்பட்டுக் கொண்டாய்? உண்மையைச் சொல்லிவிடு!" என்றேன். "சொல்லாவிட்டால் நீர் விடப் போகிறீரா? ஏதாவது கதையும் கற்பனையுமாக சேர்த்து எழுதித் தள்ளிவிடுவீர், அதைக் காட்டிலும் நானே சொல்லிவிடுவது நல்லது" என்றான்.

"அப்படியானால், கதை எழுதுவதற்குத் தகுதியானது என்று ஒப்புக்கொள்கிறாயா?" என்று கேட்டேன்.

"எல்லாம் கதையினால் வந்த விபத்துதான்! முழுக் கதை கூட அல்ல; பாதிக் கதையினால் வந்த ஆபத்து. 'தீபம்' என்னும் மாதப் பத்திரிகையில் பாதிக் கதைப் போட்டி ஒன்று நடத்தினார்களே? ஞாபகம் இருக்கிறதா?" என்றான் சந்திரசூடன்.

ஆம்; அது என் ஞாபகத்தில் இருந்தது.

'தீபம்' பத்திரிகையில் அத்தகையப் போட்டி ஒன்று சில காலத்துக்கு முன்பு நடத்தினார்கள். ஓர் இதழில் 'விமான விபத்து' என்ற தலைப்புடன் ஒரு பாதிக் கதையை வெளியிட்டார்கள். அதைப் பூர்த்தி செய்யும்படி வாசக நேயர்களைக் கேட்டு கொண்டிருந்தார்கள். இந்தப் போட்டிக்கு வரும் பிற்பகுதிக் கதைகளில் சிறந்ததைப் பத்திரிகையில் வெளியிடுவதுடன் அதற்கு நூறு ரூபாய் சன்மானம் கொடுப்பதாகவும் அறிவித்திருந்தார்கள்.

இந்த அறிவிப்பு வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பரிசு பெற்ற பிற்பகுதிக் கதையும் மேற்படி பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

கதையை அச்சமயம் மேலெழுந்தவாரியாகப் படித்திருந்தேன். ஓர் ஆகாச விமானம் பிரயாணப்பட்டுச் சென்றது; ஆனால் குறித்த இடத்துக்குப் போய்ச் சேர வில்லை. பிரயாணிகளுடன் மாயமாய் மறைந்துவிட்டது. எங்கேயோ மேற்குமலைத் தொடரில் மனித சஞ்சாரத்துக்கு அப்பாற்பட்ட இடத்தில் விழுந்து எரிந்து போயிருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டது. இதுதான் கதையின் முக்கிய சம்பவம். இம்மாதிரி ஒரு துர்ச்சம்பவம் உண்மையாகவே சில காலத்துக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது.

இதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டு, "ஆமாம்; அந்தப் பாதிக் கதைப் போட்டிக்கும் உன் கலியாணத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.

சந்திரசூடன் அந்தச் சம்பவம் இன்னதென்பதை விவரமாகச் சொல்லித் தீர்த்தான். சொல்லாமற் போனால் யார் விடுகிறார்கள்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:14 pm

மறுநாள் சந்திரசூடன் பண்ணையாரின் வீட்டுக்குப் போனான். மனோகரன் அவனை உற்சாகமாக வரவேற்றுப் பண்ணையாருக்கும் அவர் மனைவிக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான். சந்திரசூடன் பி.எல். பாஸ் செய்தவன் என்று அறிந்ததும் பண்ணையாருக்கு அவன் மீது தனிப்பட்ட சிரத்தை ஏற்பட்டது. மறுபடியும் அவனை வரும்படியாகச் சொன்னார்.

சந்திரசூடன் மனோகரனுடன் சில நாள் மலை மேல் வேட்டையாடுவதற்காகச் சென்று வந்தான். முயல், நரி, பெருச்சாளி முதலிய பிராணிகள் சில அற்பாயுளில் மாண்டன. புலி மட்டும் அகப்படவில்லை.

பண்ணையார் தனிப்படச் சந்திரசூடனைச் சந்கிக்க நேர்ந்த ஒருநாள் 'உயில்' எழுதும் முறைகளைப் பற்றி அவனிடம் விசாரித்தார். தம்முடைய சொத்துக்கள் பெரும்பாலும் சுயார்ஜிதம் என்றும் அவற்றைத் தம் இஷ்டப்படி யாருக்காவது எழுதி வைக்கலாமா என்றும் கேட்டார். சுயார்ஜித சொத்தில் சொந்தப் பிள்ளையின் உரிமை என்ன, பேரனின் உரிமை என்ன, சுவீகார புத்திரனுடைய பாத்தியதைகள் என்ன - என்றெல்லாம் விவரமாகக் கேட்டார்.

மனோகரனும் அதே விஷயத்தைப் பற்றித் தன்னிடம் விசாரித்தது சந்திரசூடனுக்கு வியப்பாயிருந்தது. ஒரு மாதிரி அவர்களுடைய பேச்சிலிருந்து ஊகம் செய்து நிலைமையை அறிந்து கொண்டான். மனோகரன் பண்ணையாரின் சொத்துக்களைத் தன்பெயருக்கு உயில் எழுதி வைத்து விடும்படி வற்புறுத்தி வருவதாகத் தெரிந்தது. பண்ணையாரின் மனத்தில் இது நியாயமா என்ற கேள்வி எழுந்து உறுத்திக் கொண்டிருந்தது. அத்துடன் சட்டப்படி செல்லுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டிருந்தது.

சந்திரசூடன் பண்ணையாரிடம் கொஞ்சம் நெருங்கிப் பழகி அவருடைய அபிமானத்தை ஓரளவு சம்பாதித்துக் கொண்ட பிறகு, "நீங்கள் இப்படியெல்லாம் மர்மமாய்க் கேட்டால் ஒன்றும் தெளிவாகாது. மனத்தில் உள்ளதை மனம் விட்டுச் சொன்னால், நான் சட்டங்களைப் பார்த்துத் திட்டமாகச் சொல்ல முடியும்" என்றான்.

அதன் பேரில் பண்ணையாரும் மனம் விட்டுப் பேசினார். தம் ஒரே பிள்ளையாகிய தர்மராஜன், தம் பேச்சைக் கேட்காமல் ஒரு கீழ் சாதிப் பெண்ணை மணந்து கொண்டதைப் பற்றியும், அவனைத் தாம் நிராகரித்து விட்டதைப் பற்றியும் கூறினார். அவன் சில காலத்துக்கு முன் ஒரு விமான விபத்தில் மாண்டு போனதாக வதந்தி என்றும், ஆனால் நிச்சயம் தெரியவில்லையென்றும், அந்தச் செய்தி வருவதற்கு முன்பே மனோகரனைத் தாம் அழைத்துக் கொண்டது பற்றியும் தெரிவித்தார். மகன் வீட்டை விட்டுப் போனதற்குப் பிறகு அவனைப் பற்றியோ, அவன் குடும்பத்தைப் பற்றியோ தாம் ஒன்றும் விசாரிக்கவில்லையென்று கூறினார். ஒரு வேளை அவனுடைய மனைவி இருந்தால், சொத்தில் அவர்களுக்குப் பாத்தியதை உண்டா என்று கேட்டார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:14 pm

நிராகரித்த மகனைப் பற்றிப் பண்ணையார் இன்னமும் தாட்சண்யமின்றிக் கடுமையாகவே பேசினார். ஆனாலும், அவனுக்கு நேர்ந்ததாகக் கேள்விப்பட்ட கதியைப் பற்றிப் பேசும்போது அவர் நெஞ்சு சிறிது இளகியிருந்ததாகத் தோன்றியது.

சந்திரசூடன் அவருடைய நெஞ்சு இளக்கத்தை அதிகமாக்குவதற்கு முயன்றான்.

"பையனுடைய தலைவிதி அப்படியிருந்தது. அதற்காக மற்றவர்களை ஏன் கோபிக்க வேண்டும்? அவனுக்குக் குழந்தைகள் உண்டா என்பது பற்றி விசாரிப்பது அவசியம். இந்த உலகத்தில் கடவுளை நேரில் தரிசிப்பது என்றால் குழந்தைகளிடந்தான் தரிசிக்கலாம். உலகப் பற்றுக்களை ஒழித்த பெரிய மகான்கள் கூடக் குழந்தைகளிடம் ஆசை காட்டினார்கள் என்று அறிந்திருக்கிறோம் அல்லவா?" என்றான் சந்திரசூடன்.

"இந்தப் பெரிய வீட்டில் தவழ்ந்து விளையாட ஒரு குழந்தை இல்லையே என்று நானுந்தான் ஏங்குகிறேன். அந்தப் பாவி இப்படி எங்களை விட்டு விட்டுப் போய் விட்டானே?" என்றார் பண்ணையார்.

பின்னர் இந்த விஷயத்தைப் பற்றி அடிக்கடி பேச்சு நடந்தது. பண்ணையாரின் மனைவியும் அதில் சேர்ந்து கொண்டாள். "எங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு அவன் தான் போய்விட்டான். அவனுக்கு ஏதாவது குஞ்சு குழந்தை இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டுமென்று நான் சொல்லிக் கொண்டுதானிருக்கிறேன். இவர் ஒரே பிடிவாதமாயிருக்கிறார். ரொம்ப கல் நெஞ்சுக்காரர்!" என்றாள் பண்ணையாரின் மனைவி.

"எப்படியடி விசாரிக்கிறது? எப்படி விசாரிக்கிறது என்று கேட்கிறேன். பத்திரிகையில் விளம்பரம் போடச் சொல்கிறாயா? அல்லது ஊர் ஊராகப் போய் டமாரம் அடிக்கச் சொல்கிறாயா?" என்றார் பண்ணையார்.

இந்த மாதிரிப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் மனோகர் திடீரென்று உள்ளே வந்து விட்டான். அவன் முகத்தின் சுளிப்பைச் சந்திரசூடன் கவனித்து, உடனே அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:14 pm

முதல் சந்திப்புக்கு நாலு நாளைக்குப் பிறகு ஒரு நாள் சந்திரசூடன் மிஸ். மனோன்மணியைப் பார்க்கச் சென்றான்.

"இந்தப் பக்கம் அப்புறம் நீங்கள் வரவேயில்லையே! ராஜ்மோகன் கூட 'சமத்து மாமா'வைப் பற்றி இரண்டு மூன்று தடவை கேட்டு விட்டான்!" என்றாள் மனோன்மணி.

"மிஸ்டர் மனோகர் ஏதாவது தப்பாக எண்ணிக் கொள்ளப் போகிறாரே என்று நான் வரவில்லை. அன்றைக்கே நான் இங்கே வந்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது."

"மனோகருக்குப் பிடிக்கவில்லையென்பது ஒரு காரணமா?...இருக்கலாம்; நான் என்ன கண்டேன்? அவருடன் ரொம்ப சிநேகமாகிவிட்டீர்கள் போலிருக்கிறது. அவர் வீட்டுக்கு அடிக்கடி போகிறீர்களாமே!"

"ஆமாம், தினமும் நாங்கள் மலைமேல் வேட்டையாடப் போகிறோம். போகும் போதும் திரும்பும் போதும் அவர் வீட்டுக்குப் போகிறேன்."

"அவருடைய அப்பா அம்மாவைப் பார்த்தீர்களா?"

"ஓ! பார்த்தேன். தினமும் பார்க்கிறேன்; பேசுகிறேன். ரொம்ப நல்ல மனிதர்கள். மகன் விஷயத்திலே மட்டும் பண்ணையார் மோசமாக நடந்து விட்டார். அதற்காக இப்போது கிழவரின் மனத்தில் கொஞ்சம் பச்சாதாபம் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது..."

"அப்படியா? சொன்னாரா, என்ன?"

"வாய் விட்டுச் சொல்லவில்லை. பேச்சுப் போக்கில் தெரிகிறது. அவருடைய சொத்துக்களை உயில் எழுதி வைப்பது பற்றி இப்போது ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்."

"பண்ணையாரை நான் ஒரு தடவை பார்க்க வேண்டும். நான் வேலை பார்க்கும் பள்ளிக் கூடத்துக்கு அவர் ஒரு டிரஸ்டி. பள்ளிக்கூடத்தின் அபிவிருத்தி பற்றி அவரிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். இந்த வீட்டில் சில 'ரிப்பேர்'கள் அவசியமாயிருக்கின்றன. தாங்கள் ஒரு தடவை என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்துப் போய் அறிமுகம் செய்து வைக்க முடியுமா?" என்று மனோன்மணி ஆவலுடன் கேட்டாள்.

"புதிய மனிதனாகிய என்னிடம் கேட்கிறீர்களே; மனோகரிடம் சொன்னால் உடனே காரியம் ஆகிவிடுமே?" என்றான் சந்திரசூடன்.

"அவரிடம் பல தடவை சொல்லியாகிவிட்டது. 'ஆகட்டும்' 'ஆகட்டும்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, அழைத்துப் போகவில்லை."

"இப்படி இரண்டுங் கெட்டானாக உங்களை அழைத்துப் போகாமல் பண்ணையார் வீட்டு எஜமானியாக்கி அழைத்துப் போக விரும்புகிறார் போலிருக்கிறது."

"ஆமாம்; அத்தகைய விருப்பம் அவருக்கு இருக்கிறதென்று என்னிடமும் தெரிவித்தார். ஆனால் இந்தக் குழந்தைதான் அவர் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்கிறான். அவனை எங்கேயாவது ஓர் அநாதை ஆசிரமத்தைப் பார்த்து தொலைத்துவிட வேண்டும் என்கிறார்."

"அது இயற்கைதானே?"

"எது இயற்கை! புருஷர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான் கல்நெஞ்சர்களாயிருப்பார்கள் போலிருக்கிறது."

"இல்லை, இல்லை! 'மிஸ்டர் மனோகர் அப்படிச் சொல்வது இயற்கைதானே' என்றேன். எல்லா புருஷர்களும் அப்படியிருக்க மாட்டார்கள்."

"அது உண்மைதான்; சிலருக்குக் குழந்தைகள் என்றாலே பிடிப்பதில்லை. அன்றைக்கு மனோகர் இந்தக் குழந்தை விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார் பாருங்கள்! அதிலும் 'நொண்டிப் பயலே!' என்று அவர் அழைத்தபோது எனக்கு அசாத்திய கோபம் வந்தது. அடக்கிக் கொண்டேன். பச்சைக் குழந்தையின் இளம் உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாது என்று கூடச் சிலருக்குத் தெரிவதில்லை. அடுத்தாற்போல, நீங்களும் ராஜ்மோகனும் பார்த்தவுடனேயே சிநேகமாகி விட்டீர்கள்."



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:15 pm

"குழந்தைகள் என்றாலே எனக்கு ஒரு தனி உற்சாகம். மனோகரின் நிலைமையில் நான் இருந்தால், தங்களை இந்த ஒரு குழந்தையோடு மட்டுமல்ல, தாங்கள் பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும் அத்தனை குழந்தைகளையும் சேர்த்துக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றாலும் செய்து கொள்ளத் தயாராயிருப்பேன்!"

மனோன்மணி கலகலவென்று சிரித்துவிட்டு, பள்ளிக் கூடத்தில் குழந்தைகள் அடிக்கும் கொட்டத்தை நீங்கள் ஒரு நாளைக்குப் பார்த்தால் அப்புறம் இம்மாதிரி சொல்ல மாட்டீர்கள்" என்றாள்.

பின்னர், "நான் தங்களுக்கு அவ்வளவு தொந்தரவு கொடுக்க மாட்டேன். ஒரு உதவி செய்தால் போதும். தயவு செய்து பண்ணையார் வீட்டுக்கு என்னை ஒரு தடவை அழைத்துப் போய் அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க முடியுமா?" என்று கேட்டாள்.

"பரஸ்பரம் நம்பிக்கை உள்ளவர்கள் தான் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியும்" என்றான் சந்திரசூடன்.

"அதில் என்ன சந்தேகம்?" என்றாள் மனோன்மணி.

"என்னிடம் உங்களுக்கு அத்தகைய நம்பிக்கை இருக்கிறதா என்பது தான் சந்தேகம்."

"நிச்சயமாயிருக்கிறது. இல்லாவிடில் உங்களிடம் இந்த உதவி கேட்டிருப்பேனா?"

"நம்பிக்கையிருந்தால் என்னிடம் உண்மையைச் சொல்ல வேணும். பண்ணையாரைச் சந்திப்பதற்கு இவ்வளவு ஆவல் ஏன்?"

"நானே அதைச் சொல்லிவிட வேண்டும் என்றிருந்தேன். தாங்கள் கேட்டு விட்டீர்கள். முக்கியமான விஷயத்தை முதலில் சொல்லுகிறேன். ராஜ்மோகன் என் சொந்தக் குழந்தையல்ல" என்றாள் மனோன்மணி.

"அப்படியா? இதை மனோகரிடம் சொன்னீர்களா?" என்று சந்திரசூடன் கேட்டான்.

"இரண்டு மூன்று தடவை சொல்ல நினைத்தேன். ஏதோ தயக்கம் வந்து சொல்லவில்லை. சொந்தக் குழந்தையென்று சொல்லும் போதே இப்படி அதனிடம் முரட்டுத்தனமாய் நடந்து கொள்கிறாரே...?"

"ஆம், ஆம்! அவரிடம் சொல்லாமலிருப்பதே நல்லது. மற்ற விவரங்களைக் கூறுங்கள்!"

"ராஜ்மோகன் என் அருமைச் சிநேகிதியின் குழந்தை. அவள் பெயர் ஸுசேதா. அவளும் நானும் குழந்தைப் பருவம் முதல் ஒன்றாய் வளர்ந்தோம். ஒன்றாய்ப் படித்தோம். இரண்டு பேரும் கலியாணம் செய்து கொள்வதில்லை யென்றும், உத்தியோகம் பார்த்துச் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவது என்றும் தீர்மானித்திருந்தோம். துரதிர்ஷ்டவசமாக, சில வருஷங்களுக்கு முன்பு ஸுசேதாவின் புத்தி தடுமாறி விட்டது. காதல் என்ற மூடத்தனத்தில் விழுந்து, யாரோ ஒருவரைக் கல்யாணம் செய்து கொண்டாள். அதானால் அவருக்கும் கேடு விளைவித்துத் தனக்கும் கேடு தேடிக் கொண்டாள். கேடு பின்னால் வந்தது. கலியாணமான புதிதில் அவர்கள் சந்தோஷமாய்த் தானிருந்தார்கள். மூன்று உலகத்திலும் தங்களுக்கு நிகரில்லை என்று இருந்தார்கள். பிறகு இந்தக் குழந்தை பிறந்தது. அதனால் அவர்களுடைய கொண்டாட்டம் இன்னும் அதிகமேயாயிற்று. கொஞ்ச நாளைக்குப் பிறகு குழந்தைக்கு ஒரு கால் ஊனம் என்று தெரிந்தது. இதனால் அவர்கள் அடைந்த வேதனைக்கு அளவேயில்லை. கால் ஊனத்தைக் குழந்தைப் பருவத்திலேயே சரிப்படுத்திவிடலாம் என்று கேள்விப்பட்டு அதற்குப் பிரயத்தனம் செய்தார்கள். குழந்தையை டாக்டர்களிடம் எடுத்துப் போவதே அவர்கள் வேலையாயிருந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:15 pm

"ஒரு சமயம் ஸுசேதாவின் கணவன் பம்பாய்க்குப் போக வேண்டியதாயிற்று. அங்கே குழந்தையின் கால் சிகிச்சையைப் பற்றியும் தெரிந்து கொண்டு வருவதாகச் சொல்லி விட்டுப் போனார். அந்தச் சமயத்தில் என் சினேகிதிக்கு 'டைபாய்டு' சுரம் வந்துவிட்டது. நான் தான் ஒத்தாசை செய்து கொண்டிருந்தேன். அவளுடைய விருப்பத்தின்படி பம்பாய்க்குத் தந்தி அடித்தேன். அவரும் மறுநாள் புறப்பட்டு ஆகாய விமானத்தில் வருவதாகப் பதில் தந்தி அடித்தார். துரதிர்ஷ்டத்தைக் கேளுங்கள். அவர் மறுநாள் வருவதற்குத் தான் விமானத்தில் 'ஸீட்' ரிஸர்வ் செய்திருந்தார். இதற்குள் அன்றைக்கே பம்பாயிலிருந்து சென்னைக்குப் புறப்படுவதாக இருந்த ஒரு சிநேகிதனைப் பார்த்தாராம். அவன், 'நான் இன்றைக்குப் போக முடியவில்லை; நீ போகிறாயா?" என்று கேட்டானாம். இவரும் 'சரி' என்றாராம். இதையெல்லாம் டிரங்க் டெலிபோன் மூலம் என்னிடம் தெரிவித்து, அன்று, சாயங்காலம் வந்து விடுவேன் என்றார். நானும் ஸுசேதாவிடம் சொன்னேன். அவள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. பேதைப் பெண்! அன்று பம்பாயிலிருந்து புறப்பட்ட விமானம் சென்னைக்கு வந்து சேரவில்லை. புயல் மழை காரணமாக விமானம் தறிகெட்டு எங்கேயோ விழுந்து எல்லோரும் இறந்திருக்க வேண்டும் என்று செய்தி வந்தது. இதை அறிந்த பிறகு ஸுசேதாவின் உடம்பு அதிகமாகிவிட்டது. பிழைத்து எழுந்திருக்கவேயில்லை. கண்ணை மூடுவதற்கு முன்னால் இந்த அநாதைக் குழந்தையைக் காப்பாற்றும்படி என்னிடம் வேண்டிக் கொண்டாள்..."

இச் சமயத்தில் மனோன்மணி விம்மினாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சிந்தின. கண்களை துடைத்து கொண்டு சில நிமிஷம் சும்மா இருந்து விட்டு, "அவ்வளவுதான் கதை! அது முதல் இக் குழந்தையை வளர்ப்பது எனது கடமையென்று கருதி வளர்த்து வருகிறேன்" என்றாள்.

"'தீபம்' பத்திரிகையின் பாதிக் கதையில் உங்களுக்கு ஏன் அவ்வளவு சிரத்தை என்பது இப்போது தெரிய வருகிறது" என்றேன்.

"ஆம்; கதையில் உள்ளது போலவே என் சிநேகிதியின் கதை ஆகிவிட்டது."

"அப்புறம் மிச்சத்தைச் சொல்லுங்கள்."

"மிச்சம் ஒன்றுமில்லையே!"

"பண்ணையாரைத் தாங்கள் பார்க்க விரும்புவது எதற்காக என்று சொல்லவில்லையே?"

"இந்தக் குழந்தையின் கால் ஊனத்துக்குச் சிகிச்சை செய்து சரியாக்க வேண்டுமென்று ஸுசேதாவுக்கு ரொம்ப ஆசை. அதை நிறைவேற்ற வேண்டுமென்று பார்க்கிறேன். சிகிட்சைக்குப் பணம் அதிகமாக வேண்டியிருக்கிறது. பண்ணையார் தம் மகன் விஷயத்தில் கொடுமையாக நடந்து கொண்டாலும், தர்மவான் என்று கேள்வி..."

"போயும் போயும் இதற்காகவா, தெரியாத மனிதரிடம் போய் நிற்பார்கள்? ராஜ்மோகன் சிகிச்சைக்கு நானே ஏற்பாடு செய்வேனே?" என்றான் சந்திரசூடன்.

மனோன்மணி சற்று நேரம் சும்மா இருந்தாள்.

சந்திரசூடன், "நான் வரட்டுமா" என்றான்.

"ஆம்; நீங்கள் சொன்னது ரொம்பச் சரி. பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் எந்தக் காரியமும் செய்ய முடியாது. யாராவது ஒருவரை நம்பித்தான் ஆக வேண்டும். தங்களை நம்பிச் சொல்கிறேன். அப்புறம் ஆண்டவனுடைய சித்தம் போல் நடக்கட்டும்! பண்ணையார், மகனுக்குச் செய்த அநீதிக்குப் பரிகாரமாக, பேரனுக்கும் ஏதேனும் நல்லது செய்யட்டும் என்று பார்க்கிறேன். இந்த ஊர்ப் பண்ணையாரின் பேரன் தான் ராஜ்மோகன். என்னுடைய சிநேகிதி ஸுசேதா பண்ணையாரின் மகன் தர்மராஜனைத் தான் மணந்து கொண்டாள். இருவரும் இப்போது போய்விட்டார்கள். அவர்கள் மேல் பண்ணையாருக்கு இருந்த கோபத்தை இந்தப் பச்சைக் குழந்தையின் மேல் காட்டுவார் என்று நினைக்கிறீர்களா?"



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:16 pm

"இந்த விஷயத்தை தங்களிடம் கிரஹிப்பதற்குள், புன்னைவனத்துப் புலியைக் கூடப் பிடித்துவிடலாம் என்று ஆகி விட்டது. இந்த ஊருக்குத் தாங்கள் வந்ததே அந்த உத்வேகத்துடன் தான் என்று சொல்லுங்கள்!"

"ஆம், ஐயா! எனக்கு உதவி செய்ய முடியுமா?"

"ஒரு சிநேகிதியின் குழந்தைக்காகத் தாங்கள் செய்துவரும் தியாகத்தை நினைக்கும் போது எனக்கு இது 'கலியுகம்' என்றே தோன்றவில்லை. 'சத்திய யுகம்' பிறந்துவிட்டதோ என்று நினைக்கிறேன். ஆனால் சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும். பண்ணையாரின் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கரைக்க வேண்டும். மனோஹரிடம் நீங்கள் இந்த விஷயத்தைச் சொல்லவில்லையென்பது நிச்சயம்தானே?"

"நிச்சயந்தான். இரண்டு மூன்று தடவை சொல்லலாமா என்று எண்ணிப் பிறகு தயங்கி நிறுத்திக் கொண்டு விட்டேன்."

"இனியும் சொல்ல வேண்டாம், பண்ணையாரைப் பார்ப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். என்னிடம் இவ்வளவு நம்பிக்கை வைத்தவர்கள் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வையுங்கள்."

"பண்ணையார் உயில் எழுதுவது பற்றி யோசிக்கிறார் என்கிறீர்களே? அதை நினைத்தால் கவலையாயிருக்கிறது..."

"அதே காரணத்துக்காகத்தான் நானும் சொல்கிறேன். உயில் விஷயமாகப் பண்ணையார் என்னிடந்தான் யோசனை கேட்கிறார். இந்தக் குழந்தையின் உரிமையைப் பாதுகாப்பது என் பொறுப்பு!" என்றான் சந்திரசூடன்.

மற்றும் சில தினங்கள் சென்றன. இந்த நாட்களில் சந்திரசூடன் அடிக்கடி பண்ணையார் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசுவதில் அதிக நேரம் செலவிட்டு வந்தான்.

இடையிடையே வேட்டையாடுவதற்கு மலை மேலும் போய்க் கொண்டிருந்தான். ஆனால் சீக்கிரத்தில் சலிப்பு அடைந்துவிட்டான். புலியோ அவர்கள் கண்ணில் சிக்காமலே இருந்துவந்தது. மற்ற சிறிய பிராணிகளைச் சுட்டு கொல்லுவதில் சந்திரசூடனுக்குச் சிரத்தையிருக்கவில்லை.

மனோகரனுடன் தினந்தோறும் வந்த சாயபுவுடன் சந்திரசூடன் பேச்சுக் கொடுக்கப் பார்த்தான். அப்துல் ஹமீது வாயைத் திறக்கிற வழியாக இல்லை. ஏதாவது கேள்வி கேட்டால், ஒரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டு வாயை மூடிக் கொள்வான்.

சாயபு வேட்டையில் ரொம்பக் கெட்டிக்காரனா என்று மனோகரனைச் சந்திரசூடன் ஒரு நாள் கேட்டான். "அவன் முகத்திலே கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறானே, தெரியவில்லையா? ஒரு தடவை ஒரு சிறுத்தைப் புலி அவன் பாய்ந்து விட்டது. அதனுடன் மல்யுத்தம் செய்து ஜயித்தான். அந்தப் போரில் புலி அவனுடைய இரண்டு கன்னங்களையும் பிறாண்டி விட்டது. அப்படியும் வேட்டையாடுவதை நிறுத்தவில்லை. இந்த ஊர் புலியைக் கண்டு பிடித்துச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதில் அவன் என்னைவிடத் துடியாயிருக்கிறான். ஆனால் புலி தென்பட்டால் என்னிடம் தான் சொல்லவேண்டும் என்றும் அவன் துப்பாக்கியில் கையை வைக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கிறேன். இத்தனை நாள் மலைமேல் அலைந்துவிட்டு, புலியை இன்னொருவன் சுடுவதற்கு விடுவேனா?" என்றான் மனோகரன்.

"அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. புன்னைவனத்துப் புலி தங்களுக்குச் சொந்தமா, என்ன? அதுவும் பண்ணையார் சங்கரசேதுராயரின் சொத்தா? என் கண்ணில் அகப்பட்டால் நான் சுடுவேன்" என்றான் சந்திரசூடன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:16 pm

அன்று மலைமேல் அவன் மற்ற இருவரையும் விட்டுப் பிரிந்து, "நான் வேறு பக்கம் போய்ப் பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனான். மலைமேல் ஓரிடத்தில் புதர்கள் மனிதனை மறைக்கும் அளவுக்கு உயர்ந்து வளர்ந்திருந்தன. அங்கே ஒரு வேளை புலி மறைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆகையால் சந்திரசூடன் வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டு போனான். எதிரிலும் இரண்டு பக்கமும் பார்த்தானே தவிர, பின்புறத்தில் பார்க்கவில்லை. திடீரென்று அந்த நிசப்தமான மலைப் பிரதேசத்தில் சாயபுவின் குரல் 'புலி! புலி' என்று கூச்சலிட்டது. அதே சமயத்தில் பின்னால் புதர்களில் சலசலப்புக் கேட்டது. சந்திரசூடன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். ஆம்; புதர்களுக்கு மத்தியில் புலி மறைந்து வந்து கொண்டிருந்தது. புலியின் முகம் தெரியவில்லை. ஆனால் உடம்பின் கோடுகல் தெரிந்தன. சந்திரசூடன் எவ்வளவோ துணிச்சல் உள்ளவனாயினும் அச்சமயம் வெலவெலத்துப் போனான். எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துவிட்டோ ம் என்ற எண்ணம் அவனுக்கு அத்தகைய வெலவெலப்பை உண்டாக்கிற்று. அன்றைக்கென்று அவன் இன்னொரு காரியத்தையும் அலட்சியம் செய்து விட்டான். துப்பாக்கியில் குண்டு போட்டுக் கெட்டித்து தயாராக வைத்திருக்கவில்லை. புலியோ வெகு சமீபத்தில் வந்திருந்தது. ஆகையால் ஓடித் தப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவன் முடிவு செய்த அதே சமயத்தில் ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது. புதருக்குள் மறைந்து வந்து கொண்டிருந்த புலி திடீரென்று இரண்டு கைகளை நீட்டி அக்கைகளில் வைத்திருந்த துப்பாக்கியினால் அவனை நோக்கிக் குறி பார்த்தது. இது என்ன கனவா, மனப்பிரமையா, ஜால வித்தையா என்பது ஒன்றும் அவனுக்குத் தெரியவில்லை. யோசிப்பதற்கு நேரமும் இருக்க வில்லை. ஓட்டம் பிடிப்பது ஒன்றுதான் அவன் செய்யக் கூடியதாயிருந்தது, அவ்வளவுதான் 'ஓ!' என்று அலறிக் கொண்டு வழி கண்ட இடத்தில் விழுந்தடித்து ஓடினான். துப்பாக்கிக் குண்டு அவனுக்குச் சமீபமாகப் பாய்ந்து சென்று ஒரு மரத்தைத் தாக்கியதைக் கண்டான். அவனுடைய ஓட்டத்தின் வேகம் இன்னும் அதிகமாயிற்று. குடல் தெறிக்க ஓடி மலையிலிருந்து கீழே இறங்கினான். மனோன்மணியின் வீட்டை அடைந்த பின்னர் தான் நின்றான்.

மனோன்மணி வீட்டில் இருந்தாள். "என்ன? என்ன?" என்று ஆவலுடன் கேட்டாள். மூச்சு வாங்கல் நின்ற பிறகு, இனிமேல் நான் வேட்டையாடப் போக மாட்டேன்! போகமாட்டேன்!" என்றான்.

மனோன்மணி ஒன்றும் புரியாதவளாய், "ஒரு வேளை இன்று புலியைப் பார்த்தீங்களோ?" என்று கேட்டாள்.

"ஆமா, பார்த்தேன்! அது ரொம்பப் பொல்லாத புலி" என்றான் சந்திரசூடன்.

"அது பொல்லாத புலி என்று தான் தெரியுமே? எத்தனை ஆடு மாடுகளை அடித்துக் கொன்றிருக்கிறது? இவ்வளவு பயந்த சுபாவம் உள்ளவர்கள் வேட்டைக்கு போயிருக்கக் கூடாது!" என்றாள் மனோன்மணி.

"ஆடு மாடுகளை அடித்துக் கொல்வதோடு அந்தப் புலி நின்றால் பாதகமில்லை. மனிதர்களையும் தாக்க வருகிறது!" என்றான் சந்திரசூடன்.

"மனிதர்களைக் கண்டால், அதுவும் வேட்டையாட போகும் மனிதர்களைக் கண்டால், புலி பிரதட்சணம் செய்து நமஸ்காரம் பண்ணுமா?"

"அப்படிப் பண்ண வேணும் என்று நான் சொல்லவில்லை. எல்லாப் புலிகளையும் போல் மனிதன் மேல் பாய்ந்தால் பரவாயில்லை. இந்தப் புலி கையில் துப்பாக்கி எடுத்துச் சுட வருகிறது!"

புலியைக் கண்ட கிலியினால் இவருக்கு ஏதாவது மூளைக் கோளாறு வந்து விட்டதோ என்ற பாவத்தோடு சந்திரசூடனை மனோன்மணி பார்த்தாள். அப்புறம் வேறு பேச்சு எடுத்தாள். சந்திரசூடனும் பின்னர் மூளைத் தெளிவுடன் பேசினான்.

"நான் இன்றைக்கு மதராஸ் புறப்பட்டுப் போகிறேன். பண்ணையாரின் உயில் எழுதும் காரியமாகத்தான் போகிறேன். திரும்பி வர ஒரு வாரம் ஆகலாம். அதுவரை நீங்கள் ஜாக்கிரதையாயிருக்க வேணும்?" என்றாள்.

"எந்த விஷயத்தில் நான் ஜாக்கிரதையாயிருக்க வேணும்?" என்று கேட்டாள் மனோன்மணி.

"பொதுவாக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். குழந்தை ராஜ்மோகன் விஷயத்தில் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்" என்றாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:17 pm

"உண்மைதான், வரவர, மனோகரின் நடத்தையில் முரட்டுத்தனம் அதிகமாகி வருகிறது. அது மட்டும் அல்ல, அவருடன் வரும் சாயபு ஒருநாள் குழந்தையின் அருகில் நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் நகர்ந்து விட்டான். அது வேற எனக்கு கவலையாயிருக்கிறது."

"நானும் ஒரு நாள் அதைக் கவனித்தேன், சாயபுவிடம் கேட்டு விட்டேன். 'இந்தக் குழந்தையின் காலில் ஏதோ ஊனம் என்றார்கள். எனக்குக் கொஞ்சம் மலையாள வைத்தியம் வரும். அதனால், காலைக் குணப்படுத்த முடியுமா என்று பார்த்தேன்' என்றான். அவனுடைய பதில் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை."

"மொத்தத்தில் இந்த ஊரில் இருக்கவே எனக்குப் பயமாயிருக்கிறது. பண்ணையாரைப் பார்க்க முடியாது என்றோ, பார்த்துப் புண்ணியமில்லை என்றோ ஏற்பட்டால், இந்த ஊரைவிட்டுச் சீக்கிரத்தில் போய் விட விரும்புகிறேன்" என்றாள் மனோன்மணி.

"அவ்வளவு அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள், நான் திரும்பி வந்ததும் ஒரு முடிவுக்கு வரலாம்" என்றான் சந்திரசூடன்.

இந்தச் சமயத்தில் மனோகரும் வந்து சேர்ந்தான். சந்திரசூடனைப் பார்த்து இடி இடி என்று சிரித்தான். "இத்தனை நாளைக்குப் பிறகு புலி கண்ணுக்குத் தென்பட்டது. அதை அப்படிக் கூச்சல் போட்டு விரட்டி விட்டீரே? அப்பப்பா! என்ன ஓட்டம்! என்ன ஓட்டம்! புலி வேட்டைக்குச் சரியான ஆள் நீர் தான்!" என்று சொல்லி விட்டு மனோகரன் விழுந்து விழுந்து சிரித்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:17 pm

சந்திரசூடன் மதராஸுக்குப் போய்விட்டு ஒரு வாரம் கழித்துப் புன்னைவனத்துக்குத் திரும்பி வந்தான். அதற்கு முதல் நாள் புன்னைவனத்தில் ஒரு விசேஷம் நடந்தது என்று அறிந்தான். மலைமேலுள்ள கோயிலில் இரண்டு நாள் உற்சவம் நடந்தது. அதற்காகத் திரளான ஜனங்கள் மலைமேல் ஏறிச் சென்றார்கள். அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள். புலியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தபடியால் அனேகர் தடிகள், ஈட்டிகள் முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டும் சென்றார்கள். இந்தத் தடபுடலினால் பயந்துதானோ என்னமோ, புலி பட்டப் பகலில் கீழே இறங்கி வந்து விட்டது. நடுச் சாலையில் ஒரு மாட்டின் மீது பாய்ந்து கொன்றது. இந்த விஷயம் பரவி விடவே உற்சவத்துக்கு வந்திருந்த ஜனங்களில் பலர் கூச்சலிட்டுக் கொண்டு அங்கு மிங்கும் ஓடினார்கள். தைரியசாலிகள் தடிக் கம்புகளையும் ஈட்டிகளையும் வேல்களையும் எடுத்துக் கொண்டு புலியைத் தாக்க ஓடி வந்தனர். மனோகரும் துப்பாக்கியை எடுத்து வந்தான். அதற்குள் புலி 'காபரா' அடைந்து ஓடிவிட்டது. புலியைப் பார்த்தவர்கள் அதற்கு ஒரு கால் ஊனம் என்றும், நொண்டி நொண்டி நடந்தது என்றும் சொன்னார்கள்.

'புலி அடித்த மாட்டை அங்கேயே விட்டு வைத்திருந்தால் திரும்பவும் புலி வரும்' என்று அனுபவசாலிகள் சொன்னதன் பேரில் அப்படியே செய்தார்கள். நாலாபுறத்திலும் காவலும் போட்டிருந்தார்கள்.

இந்த நிலையிலேதான் சந்திரசூடன் திரும்பி வந்தான். ஹோட்டலில் மேற்கூறிய விவரங்களையெல்லாம் தெரிந்து கொண்டான். துப்பாக்கியைக் குண்டு போட்டுக் கெட்டித்துக் கையில் எடுத்துக் கொண்டான். முதலில் மனோன்மணி வீட்டுக்குப் போனான். அவள் பள்ளிக்கூடத்துக்குப் போய் விட்டாள் என்று தெரிந்தது. குழந்தை ராஜ்மோகன் 'சமர்த்து மாமா'வைப் பார்த்ததில் மகிழ்ச்சி கொண்டான். மழலை மொழிகளில் முதல் நாள் ஊருக்குள் புலி வந்ததைப் பற்றியும் கூறினான்.

"மாமா! எனக்குப் புலி பார்க்க வேணுமென்று ஆசையாயிருக்கிறது. அம்மாவோ வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்கிறாள். நீங்கள் என்னை அழைத்துக் கொண்டு போய்ப் புலி காட்டறேளா, மாமா!" என்றான்.

"ஆகட்டும், ஆகட்டும்! அந்தப் பொல்லாத புலியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து உங்கள் வீட்டு வாசலிலேயே கட்டிப் போட்டு விடுகிறேன்" என்று சொன்னான் சந்திரசூடன்.

பிறகு அவன் பண்ணையாரின் வீட்டுக்குப் போனான். அவரிடம் தனியாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். சென்னையில் பெரிய அனுபவசாலியான வக்கீல்களுடன் கலந்தாலோசித்து எழுதிக் கொண்டு வந்திருந்த உயில் நகலைப் படித்துக் காட்டினான். அவருக்கும் அது திருப்தி அளித்தது. ரிஜிஸ்ட்ரார் ஆபீஸுக்குச் சீக்கிரம் சென்று ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு வந்துவிடவேண்டுமென்றும் அதுவரையில் யாருக்கும் விஷயம் தெரிய வேண்டாம் என்றும் பண்ணையார் கூறினார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:17 pm

இதற்குள் ஊரில் ஏதோ அல்லோலகல்லோலம் நடக்கிறது என்பதற்கு அறிகுறியான கோஷங்கள் எழுந்தன. "புலி திரும்பி வந்திருக்கிறதாம்!" என்று வீட்டு வேலைக்காரர்கள் சொன்னார்கள். சின்ன எஜமானர் முன்னமே துப்பாக்கி சகிதமாகப் போயிருப்பதாகவும் தெரிவித்தார்கள். சந்திரசூடனும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். "ஜாக்கிரதை, ஐயா ஜாக்கிரதை! நம்ம முரட்டுப் பிள்ளையையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்!" என்று பண்ணையார் சொல்லி அனுப்பினார்.

சந்திரசூடன் பண்ணையார் வீட்டை விட்டு வெளியேறிக் கூச்சல் அதிகமாகக் கேட்ட திசையை நோக்கி விரைந்து சென்றான். கிட்டத்தட்ட தபாலாபீசை நெருங்கிய போது ஒரு விந்தையான காட்சியைக் கண்டான். அது விந்தையான காட்சிதான்; அதே சமயத்தில் மிகப் பயங்கரமான காட்சியும்தான்.

பிரசித்தி பெற்ற 'புன்னைவனத்துப் புலி' கடைசியாக அவன் முன்னால் தரிசனம் அளித்தது. புலி மரம் ஏறும் என்று அவன் கேள்விப்பட்டதில்லை. ஆயினும் இந்தப் புலி வளைந்திருந்த ஒரு தென்னை மரத்தின் பாதி உயரம் ஏறி அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது. ஜனங்கள் கூச்சல் போட்டுக் கொண்டு நாலாபுறமும் துரத்தவே அந்தக் காயம்பட்ட கிழப்புலி வேறு வழி இன்றித் தென்னை மரத்தின் மேல் பாய்ந்து ஏறிக் கொண்டது போலும்! புலி ஏறிய தென்னை மரத்தின் ஒரு பக்கம் மனோகரனும், அவனுடைய உதவியாளனாகிய ஹமீதும் நிற்பதைச் சந்திரசூடன் கண்டான். மனோகரன் துப்பாக்கியைக் கையில் எடுத்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தான். தென்னை மரத்தின் இன்னொரு பக்கத்தில் - பயங்கரம்! பயங்கரம்! மனோன்மணியின் வீட்டு வாசற்புற மதில்மேல் குழந்தை ராஜ்மோகன் உட்கார்ந்து கொண்டிருந்தான். குழந்தை எப்பேர்ப்பட்ட ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பது, பார்த்த அதே க்ஷணத்திலேயே சந்திரசூடனுக்குத் தெரிந்து விட்டது. மனோகரின் துப்பாக்கிக் குண்டு புலியின் மேல் பட்டாலும் சரி, அல்லது படாவிட்டாலும் சரி, புலி மறுபக்கமாகப் பாய்ந்தால் குழந்தையின் கதி அதோகதிதான்! இவ்வளவு விஷயங்களையும் சில விநாடி நேரங்களில் மனத்தில் கிரகித்துக் கொண்ட சந்திரசூடன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று குழந்தையை அணுகினான். குழந்தை, "மாமா! மாமா! புலி புலி!" என்று உற்சாகமாகக் கூவியதைப் பொருட்படுத்தாமல் குழந்தையை அப்படியே தூக்கி எடுத்துக் கொண்டு மதில் சுவருக்கு அந்தப்புறத்தில் குதித்தான். அவன் குதித்த அதே சமயத்தில் குண்டு ஒன்று அவர்களுக்குச் சமீபமாகத் தலைக்கு மேலே சென்று மனோன்மணியின் வீட்டுச் சுவரில் பாய்ந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக