புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_m10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_m10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10 
77 Posts - 36%
i6appar
கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_m10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_m10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_m10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_m10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_m10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_m10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_m10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10 
2 Posts - 1%
prajai
கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_m10கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 1:29 am

இணையற்ற சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கும் 21ம் நூற்றாண்டிற்கு இணை அதுவேதான் என்றெண்ணும் வண்ணம், சாதனைக்களமாக இக்காலகட்டம் மாறி இருப்பது கண்டு நாமெல்லாம் மகிழ்ச்சிக்கடலில் ஆழத்தான் வேண்டுமா? அல்லது அழத்தான் வேண்டுமா? தனிமனித சுதந்திரமும் சமுதாய ஒழுக்கமும் எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதை உலகம்தோறும் நடக்கும் நிகழ்வுகள் நமக்கு நிழற்படங்களாகத் தருகின்றன.

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா அல்லது ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்று இல்வாழ்க்கைக்குப் புத்திலக்கணம் புகுத்திய புதுமையான காலகட்டம். களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை என சங்ககால வாழ்க்கையைத்தான் இப்படி நாசுக்காக நமக்கெல்லாம் கூறுவார்கள் போலும். வாழ்க்கை என்னும் பயணத்தில் வாழ்பவர்களும் உண்டு, வாடுபவர்களும் உண்டு. இப்பயணத்திற்குத் தேவையான துணையை அளிக்கும் பெரும்பொறுப்பை சுமப்பதுதான் திருமணம் என்ற சமுதாயச் சடங்கு. இல்வாழ்க்கையில் ஈடுபடாதான் வாழ்க்கை இல்லா வாழ்க்கை என்றும், இல்வாழ்க்கையின் மூலமே ஒருவனது வாழ்க்கை நிறைவு பெறுகிறது என்றும் ஒரு பெருங்கருத்து நிலவுகிறது. இப்படிப்பட்ட சமயத்தில் எது திருமணம் என்ற குழப்பம் ஏகத்துக்கும் வாட்டுகிறது மேற்கத்தியவரை.

ஆணும் பெண்ணும் இணைவதுதான் திருமணம் என்ற பழமைக் கருத்து பாழாய்ப் போகட்டும் எனக்கூறி ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையே புதுமை வாழ்க்கை எனப் போர்க்கொடி தூக்கினர் மேற்குலகினர். அவர்களது அரசாங்கங்களும் அவர்களது கோரிக்கைக்கு செவிசாய்த்து இத்தகைய திருமணங்களை சட்டபூர்வமாக்கின. இது கனடா, நெதர்லந்து நாடுகளில் சட்டமாக உள்ளது. இங்கிலாந்தில் இச்சட்டம் இன்னும் சில மாதங்களில் வர இருப்பதால் திருமண ரிஜிஸ்ட்ரார் ஆபிஸில் ஆண், பெண் படங்கள் இருப்பதை எடுத்துவிடப் போகின்றார்களாம், ஏனெனில், இப்படம், ஆணை ஆண், பெண்ணைப் பெண் கல்யாணம் செய்பவர்களின் மனதைப் புண்படுத்துமாம்.

எது கல்யாணம் திருமணம் ஏகத்துக்குக் குழம்பிப்போயிருக்கும் மேற்குலகைவிட எது கற்பு எனக் கன்னத்தின் மேல் கைவைத்து சிந்திக்க வேண்டிய அவசியத்திற்கு இந்திய மக்கள் ஆளாகி இருக்கிறார்கள்.

மனித வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வாழ்க்கை முறை சிறந்ததாகக் கருதப்பட்டது. பழங்காலத்தில் இலட்சக்கணக்கான வீரர்கள், எண்ணிலடங்காப் போர்களில் மாண்டு மாய்ந்தனர். அவர்களில் யாரும் முழு வாழ்வு வாழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. அத்தகைய ஒரு காலகட்டத்தில் பலதார மணம், மணம் தரும் ஒரு செயலாகத்தான் இருந்திருக்க முடியும். ஆனால் கால ஓட்டத்தில் போரிடும் சூழல் குறைந்து ஓரிடத்தில் நிலைத்து வாழ ஆரம்பித்த பின் பலதார மணத்தின் தேவை இல்லாது போய் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்து வலுப்பெற்றது.

உலகில் உள்ள பல தீவுக்கூட்டங்களில் இன்றளவும் பலதார மணமும், திருமணத்துக்கு வெளியே ஆணோ, பெண்ணோ உறவு வைத்துக் கொள்வதும் ஏற்கப்பட்ட ஒரு நடைமுறையாக உள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் பிட்கெய்ர்ன் என்ற இங்கிலாந்திற்கு சொந்தமான பசிபிக் கடலில் உள்ள ஒரு தீவில் நடைபெற்ற ஒரு நிகழ்வை உதாரணமாகக் கூறலாம். அங்கே பெண்கள் பருவமெய்துவதற்கு முன் உடலுறவில் ஈடுபடுவது தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது. ஆனால் சமீபத்தில் அப்படி ஒரு சம்பவத்தில் ஒரு பெண் புகார் கொடுக்க, இங்கிலாந்திலிருந்து ஒரு போலீஸ் படை பிட்கெய்ர்ன்க்கு விரைந்தது, ஆனால் அங்குள்ள பொதுமக்களோ அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் கூறிய பதில், 50 பேர் மட்டுமே உள்ள தீவில் இத்தகைய சம்பவங்கள் குற்றமாகது என்பதுதான். யாரும் யாருடனும் உறவு வைத்துக்கொள்வதுதான் அங்கு கலாசாரமாகக் கருதப்படுகிறது. எனவே கலாசாரம் என்பது ஒவ்வொரு சமுதாயத்துக்கும் சொந்தமான, அதன் அமைப்புக்கு ஏற்ற வாழ்க்கை முறை. பிட்கெய்ர்ன் கலாசாரம் நமக்கு ஒத்து வருமா?

நடிகை குஷ்பூவின் கருத்தை காலத்திற்கேற்ற கருத்து என்பதா அல்லது கலா சாரக் கற்பழிப்பு என்பதா என்று ஆராய நிறைய இடமிருக்கிறது. இன்றைய இணைய வலையிலும், பி.பி.ஓ, கணிப்பொறித் துறையிலும் இணைந்து பணியாற்றுபவர்கள், பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த நபர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் நடை, உடை, பாவனை, உணவு ஆகிய பரிமாற்றங்கள் விரைவில் அரங்கேறிவருகின்றன. இதனை எப்படி எதிர்கொள்வது? இவற்றையெல்லாம் வேண்டாம் எனக்கூறி பழமைவாதிகள் (தலிபான் தமிழர்கள்) என்று பட்டம் பெறவா? அல்லது வரவேற்றுப் புதுமைவாதிகள் எனப் புகழ்பெறவா? ஆண்டுதோறும் இரண்டொரு முறை செக்ஸ் சர்வே எடுப்பதை, ஆங்கில இதழ்கள் ஒரு நடைமுறையாகவே கொண்டுள்ளன. 1990ஆம் ஆண்டு உலகமயமாக்கலின் மூலம் திறந்து விடப்பட்டது இந்தியப் பொருளாதாரம் மட்டுமன்று, மூடிக்கிடந்த இந்திய சமுதாயமும் தான்.

திருமணத்திற்கு முன் செக்ஸ் உறவு, திருமணத்திறகு முன்பு கூடி வாழ்ந்து, பின்னர் திருமணம் செய்து கொள்வது ஆகிய பழக்கங்கள் ஏனிப்படி இன்றைய இளைய தலைமுறையினரிடம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலைதூக்குகின்றன? இதற்கு இன்றைய ஊடகங்களையும், இன்டர்நெட் முதலிய தகவல் தொடர்பு சாதனங்களைக் குற்றம் சாட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளலாமா என்றால் இவை மட்டுமன்றி, காலத்திற்கு ஒவ்வாத சில சமூக நடைமுறைகளுமெ இத்தகைய சூழ்நிலையை உருவாக்குகின்றன.



கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 1:30 am

20, 30 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் பருவமெய்துவது 17,18 வயதுகளில் நடைபெற்றது, அதே வயதுதான் விடலைப் பையன்களுக்கும் இருந்து வந்தது. ஆனால இன்றைய ஹார்மோன் கலகங்களால் 10 வயதில் பருவமெய்துவதும், ஆண்களில் விடலை, கடலைவிட ஆரம்பிப்பதும் நடைபெறுகிறது. இப்படியிருக்கும் சமயத்தில் கல்யாண வயது என்பது என்னவோ படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்து என 25 வயதைத் தாண்டி விடுகிறது. அப்படியே திருமணம் என்றால் அதன் வெற்றிக்கு வரதட்சணை, ஜாதகப் பொருத்தம் என சம்பிரதாயங்கள் நாளைத் தள்ளிக்கொண்டு போகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், சஞ்சலப்பட்டுப் போகும் மனக்குரங்குகளின் சேஷ்டைகள்தான் திருமணத்திற்கு முன்பு உறவு என்பதெல்லாம்.

பெரும்பான்மையான திருமணங்கள் தள்ளிப்போவதற்கு வரதட்சணை என்ற ஒரு கொடிய பழக்கம்தான் காரணம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எம்மதம், எச்சாதியானாலும், நீக்கமற நிறைந்திருக்கும் வரதட்சணை, வறியவர்களாக்குவது என்னவோ பெண்ணைப் பெற்றவர்களைத்தான். மணப் பொருத்தத்திற்கு மனப் பொருத்ததை விட நட்சத்திரப் பொருத்தம் அத்தியாவசியாமாகப் போய்விட்டது நம்மவர்களுக்கு.

இவற்றுக்கெல்லாம் தீர்வு காதல் திருமணமும், கலப்புத் திருமணமும் தான். கலாசார சீரழிவைத் தடுக்க மிகச் சிறந்த வழி கலாசாரக் கலப்புத்தான், அது திருமணங்களின் மூலம்தான் சாத்தியப்படும். பல சாதிகளுக்கிடையே, பல மதங்களுக்கிடையே, பல மொழி பேசுபவர்களுக்கிடையேயான திருமணக்கலப்பே, தேவையான கலவையாகும். நம் சமுதாயத்தில் இவற்றுக்கெல்லாம் இடமில்லாமல் போனதால்தான் சீரழிவு சிரம் தூக்கி சிரித்துக் கொண்டிருக்கிறது.

சிறந்த பால் கறக்கும் கறவை மாடுகளை உருவாக்க, நெதர்லாந்து காளைகளின் விந்துக்களை உபயோகப்படுத்திக் கலப்பினங்களை உருவாக்குகிறோம், இன்னமும் நெல் முதலிய பல்வேறு பயிர்களில் கலப்பினங்கள் வீரியத்துடன் விளைந்து நல்ல பயனைத் தருகின்றன. ஏன் மனிதக் கலப்புக்கு மட்டும் இத்தனை தயக்கம்? வீரியம் மனித குலத்திற்கும் தேவைதான். ஒரு சாதி, அதிலும் ஒரே சாதியில் உள்ள உட்பிரிவுகளுக்குள் நடைபெறும் திருமணங்கள், வீரியமற்ற வித்துக்களைத்தான் உருவாக்க முடியும். இது மரபணு விஞ்ஞானத்தின்படி உலகுணர்ந்த உண்மை.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சமய, அரசியல் பெரியவர்கள் சமுதாயத்தை வழி நடத்தும் கலங்கரை விளக்கமாக இருந்தனர், இராஜாராம் மோகன்ராயிலிருந்து, பெரியார் வரை. இவர்கள் அரசியலைத் தவிர்த்து, மக்களுக்குத் தேவையான சமூக நீதி நெறிமுறைகளை வழங்கி அவர்களை வழிநடத்தினர். ஆனால் இன்றிருக்கும் தலைவர்களின் தலையாய கடமையே தலைவர்களாக நீடிப்பதில்தான் உள்ளது.

இச்சூழ்நிலையில்,

வேண்டும் ஒரு பெரியார்
மீண்டும் ஒரு பெரியார்
ஏச்சுக்கும் பேச்சுக்கும் வேண்டிய சுதந்திரம்
கற்புக்கும் வேண்டுமா வேண்டாமா - எனக்கூற

வேண்டும் ஒரு பெரியார்
மீண்டும் ஒரு பெரியார்
கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா?
கேட்கத்தான் நினைக்கிறேன் - கண்ணகியை!
கடத்தப்பட்டவளைக் காணமாட்டாமல்.

- திருதிருக்கை



கற்பு என்ன கடைச்சரக்கா? கானல் நீரா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 16, 2010 2:14 am

மிகுந்த ஆழமான கருத்தை ஆணித்தரமாக விவாதித்திருந்தாலும் கட்டுரை ஆசிரியர் தம் கருத்தை எங்குமே வலியுறுத்தவில்லை. அவரது கருத்தை என்ன என்று சொல்லாம்லேயே மேம்போக்காய் போயிருக்கிறார்.

உண்மையில் என்னைப்பொறுத்தவரை கற்பு கண்ணகி நளாயனி சீதை என்று எத்தனை காலம் புலம்பவேண்டும்...?

நான்கைந்து கணவர்களை அனாயாசமாக மாற்றிய படிதாண்டா பத்தினி தான் இது சதையல்ல சகஜம் என்று நிகழ்ச்சி நடத்தி பொய்யாய்க்கண்ணீர் வடித்து காசு சம்பாதிக்கிறார்,,

திரையில் பேசும் கருத்துகளுக்கும் தன்வரையில் நடந்துகொண்டிருக்கும் கருத்துக்களூக்கும் ஏனம்மா இத்தனை வித்தியாசம் என்று கேட்கக்கூடாது...

என்று தான் பூர்ஷ்வாத்தனத்தை விட்டு இவ்வுலகத்தினர் நிதர்சனத்துக்கு வருவார்களோ....

நன்றி சிவா...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக