புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
1. தலைவியின் தூக்கம், பால் கறப்பவன் தவறு, தலைவனின் சோம்பல்.
கடலின் மீது கதிரவன் தோன்றிப்
படரும் கதிர்க்கை பாய்ச்சிச் சன்னலின்
வழியே, கட்டிலில் மங்கையை எழுப்பினான்.
விழிதிறந்து மங்கை, மீண்டும் துயின்றாள்.
*****
அப்போது மணியும் ஆறரை ஆனதால்
எப்பொழு தும்போல் இரிசன் என்ற
மாடு கறப்பவன் வந்து கறந்து
பாலொடு செம்பை, மூலையில் கட்டிய
உறியில் வைக்காது-உரலின் அண்டையில்
வைத்துப் போனான். மங்கையின் கணவனோ,
சொத்தைப் பல்லைச் சுரண்டிய படியே
சாய்வுநாற் காலியில் சாய்ந்தி ருந்தான்.
2. குழந்தையின் அழுகை, பையனின் பொய்; தந்தையின் போக்கு.
தாயோ துயில்வதால் தனிமை பொறாமல்
நோயுடன் குழந்தை நூறு தடவை
அம்மா என்றும் அப்பா என்றும்
கம்மிய தொண்டையால் கத்திக் கிடந்தது!
*****
பெரிய பையன் பிட்டையும் வடையையும்
கருதி, முதலில் கையால் சாம்பலைத்
தொட்டுப் பல்லையும் தொட்டே, உரலின்
அருகில் இருந்தபால் செம்பை, விரைவில்
தூக்கி, முகத்தைச் சுருக்காய்க் கழுவினான்;
பாக்கி இருப்பது பால்என் றறிந்து
கடிது சென்றே "இடையன் இப்படிச்
செம்பின் பாலைச் சிந்தினான்" என்று,
நம்பும் படியே நவின்றான் தந்தைபால்!
தந்தையார் "நாளைக் கந்த இடையன்
வந்தால் உதைப்பதாய் வாய்மலர்ந்" தருளினார்.
1. தலைவியின் தூக்கம், பால் கறப்பவன் தவறு, தலைவனின் சோம்பல்.
கடலின் மீது கதிரவன் தோன்றிப்
படரும் கதிர்க்கை பாய்ச்சிச் சன்னலின்
வழியே, கட்டிலில் மங்கையை எழுப்பினான்.
விழிதிறந்து மங்கை, மீண்டும் துயின்றாள்.
*****
அப்போது மணியும் ஆறரை ஆனதால்
எப்பொழு தும்போல் இரிசன் என்ற
மாடு கறப்பவன் வந்து கறந்து
பாலொடு செம்பை, மூலையில் கட்டிய
உறியில் வைக்காது-உரலின் அண்டையில்
வைத்துப் போனான். மங்கையின் கணவனோ,
சொத்தைப் பல்லைச் சுரண்டிய படியே
சாய்வுநாற் காலியில் சாய்ந்தி ருந்தான்.
2. குழந்தையின் அழுகை, பையனின் பொய்; தந்தையின் போக்கு.
தாயோ துயில்வதால் தனிமை பொறாமல்
நோயுடன் குழந்தை நூறு தடவை
அம்மா என்றும் அப்பா என்றும்
கம்மிய தொண்டையால் கத்திக் கிடந்தது!
*****
பெரிய பையன் பிட்டையும் வடையையும்
கருதி, முதலில் கையால் சாம்பலைத்
தொட்டுப் பல்லையும் தொட்டே, உரலின்
அருகில் இருந்தபால் செம்பை, விரைவில்
தூக்கி, முகத்தைச் சுருக்காய்க் கழுவினான்;
பாக்கி இருப்பது பால்என் றறிந்து
கடிது சென்றே "இடையன் இப்படிச்
செம்பின் பாலைச் சிந்தினான்" என்று,
நம்பும் படியே நவின்றான் தந்தைபால்!
தந்தையார் "நாளைக் கந்த இடையன்
வந்தால் உதைப்பதாய் வாய்மலர்ந்" தருளினார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
14. பெரிய பையனுக்கு விளையாட்டுத் துப்பாக்கி! அனைவர்க்கும் மகிழ்ச்சி!
அங்கே, பெரியவன் அடுக்கிய இரண்டு
முட்டைபோல் உதடுகள் முன்னே தோன்ற
மல்லாந்து மார்பை மறுபுறம் திருப்பாது
சொல்லும் இன்றித் துடிக்கும் நெஞ்சோடு
மாம்பழம் விளாம்பழம் வந்த வழியில்
காதைச் செலுத்திக் கண்ணைச் சாய்த்து
மாமனை எதிர்பார்த் தூமைபோல்அழுதான்.
மாமனோ சென்னையில் வாங்கி வந்த
கைத்துப் பாக்கியைக் கையில் கொடுத்தான்.
பெரியவன் உதடுகள் சிரித்தாக வேண்டும்!
வெள்ளைப் பற்கள் வெளித் தோன்றாமல்
பிணம் சிரிப்பதுபோல் பெரிதும் சிரித்தான்.
தங்க மாமனார் தாமும் சிரித்தார்.
உரியவள் இதனை உணர்ந்து சிரித்தாள்.
கைத்துப் பாக்கி மெய்த்துப் பாக்கிபோல்
வித்தென்று தக்கை விலகி வெடிப்பதை
மாமனார் காட்டினார். மங்கையும் பையனும்
வியப்படைந் தார்கள். வீட்டுக் காரியோ
"அண்ணா அதனை அந்தப் பெட்டிமேல்
வைத்து விடுங்கள் வைத்து விடுங்கள்
அவனிடம் கொடுக்க லாகா" தென்றாள்.
அவ்வா றதனை அங்கே வைத்தார்.
அங்கே, பெரியவன் அடுக்கிய இரண்டு
முட்டைபோல் உதடுகள் முன்னே தோன்ற
மல்லாந்து மார்பை மறுபுறம் திருப்பாது
சொல்லும் இன்றித் துடிக்கும் நெஞ்சோடு
மாம்பழம் விளாம்பழம் வந்த வழியில்
காதைச் செலுத்திக் கண்ணைச் சாய்த்து
மாமனை எதிர்பார்த் தூமைபோல்அழுதான்.
மாமனோ சென்னையில் வாங்கி வந்த
கைத்துப் பாக்கியைக் கையில் கொடுத்தான்.
பெரியவன் உதடுகள் சிரித்தாக வேண்டும்!
வெள்ளைப் பற்கள் வெளித் தோன்றாமல்
பிணம் சிரிப்பதுபோல் பெரிதும் சிரித்தான்.
தங்க மாமனார் தாமும் சிரித்தார்.
உரியவள் இதனை உணர்ந்து சிரித்தாள்.
கைத்துப் பாக்கி மெய்த்துப் பாக்கிபோல்
வித்தென்று தக்கை விலகி வெடிப்பதை
மாமனார் காட்டினார். மங்கையும் பையனும்
வியப்படைந் தார்கள். வீட்டுக் காரியோ
"அண்ணா அதனை அந்தப் பெட்டிமேல்
வைத்து விடுங்கள் வைத்து விடுங்கள்
அவனிடம் கொடுக்க லாகா" தென்றாள்.
அவ்வா றதனை அங்கே வைத்தார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
15. பையனின் சாதகம், கைப்பிள்ளைக்குச் சாவே கிடையாது.
"என்னருந் தங்கையே இந்தப் பெரியவன்
நன்றாகப் படிக் கின்றானா? சொல்"
என்றான். தங்கை இயம்பு கின்றாள்:
"சாதகம் பார்த்தோம்; சரியாய் அவனுக்குப்
பத்தொன்ப தாண்டு படிப்பு வராதாம்.
இருபதில் உலகையே என்னதென் பானாம்"
என்றுதன் அண்ண னிடத்திற் கூறினாள்.
"கையோ டிந்தக் கைக் குழந்தையின்
குறிப்பையும் பார்த்தால் குற்ற மென்ன?"
என்று கேட்டான் பின்னும் அண்ணன்.
"காட்டினேன் குழந்தையைக் கல்லில் தூக்கிப்
போட்ட போதிலும் போகாதாம் உயிர்;
தொண்ணூறு வயதென்று சோசியன் சொன்னான்.
மந்தத் தாலே வந்த நலிஇது!
இந்த வீட்டில் இருளன் புகுந்ததால்
நலிஇவ் வாறு வலிவு பட்டது.
வளரும் பிள்ளைக்கு வயிற்றுக் கோளாறு
வருவதும் போவதும் வழக்கந் தானே!
நாளைக்கே இது நன்றாய்ப் போய்விடும்
ஏழு மலையான் இரக்கம் வைப்பான்.
காப்பாய் என்று காப்பும் கட்டினேன்"
என்று தங்கை இயம்பினாள். அவனோ
"சமையல் ஆனதா தங்கையே" என்றான்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
16. அண்ணன் தன் பசியைக் கூறினான்; தங்கை
அவன் ஏறி வந்த வண்டியை மெச்சுகிறாள்.
"ஆமாம் இந்த அலைச்சலில் உங்களைச்
சாப்பிடும் படியும் சாற்ற வில்லை"
என்றாள். "வெந்நீர் இருக்குமா" என்றான்.
"ஆமாம் ஆமாம் அடுப்பில் வெந்நீர்
கொதிக்க வைப்பேன் குளிப்பீர்" என்றாள்.
"வெற்றிலை கொஞ்சம் வேண்டும்" என்றான்.
"ஆமாம் ஆமாம் அதையும் மறந்தேன்"
என்று கூறி ஈந்தாள் வெற்றிலை.
வெற்றிலை போட்டான். வெறித்துப் பார்த்தான்.
சாப்பிடச் சொல்லிக் கூப்பிட வில்லை.
பசியால் அண்ணன் பதைபதைக் கின்றான்;
துடிப்போடு தங்கைபால் சொல்ல லானான்;
"விடிய நாலுக்கு வீட்டை விட்டுக்
கிளம்பி னேனா? கிளிய னூரில்
சிற்றுண வுக்குச் சுற்றிப் பார்த்தேன்.
அகப்பட வில்லை; அதற்குள் வண்டியும்
புறப்பட் டதனால் பொசுக்கும் பசியுடன்
ஏறினேன்; இங்கே இழிந்தேன்" என்றான்.
இந்தக் கதையை இயம்பித் தனது
பொறுக்கொணாப் பசியைப் புகன்றான், அவளோ
எங்கள் அண்ணன் ஏறி வந்த
வண்டியே வண்டி வண்டியே வண்டி
என்று வண்டியின் இயல்பைப் பற்றி
எண்ணி மகிழ்ந்தாள்! மண்ணாங் கட்டி
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் தல
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
17. மாலை ஏழு மணிக்குக் காப்பி முடிகிறது.
அண்ணன் உடனே அருகி லிருந்த
உணவு விடுதியில் உண்டு வந்தான்.
குறட்டைத் தூக்கம், குழந்தையின் அழுகை,
பெரியவன் உதடுகள் புரிந்த இன்னல்,
இவற்றுடன் மாலை ஏழுமணி ஆயிற்று.
*****
வேலைக் காரிகள் பாலைக் காய்ச்சி
நாலைந்து செம்பு நன்றாய்க் குடித்தபின்,
தலைவியை எழுப்பித் தந்தார், குடித்தாள்!
பெரியவன் குடிப்பது சரியல்ல என்றே
இருபணிப் பெண்டிரும் இருசெம்பு குடித்தார்.
அருமை யான அண்ணனை எழுப்பி
ஒருசெம்பு காப்பி தரும்படி தலைவி
இயம்பினாள். சங்கிலி எழுப்பினாள். எழுப்பிக்
காப்பி கீப்பி சாப்பிடு கின்றீரா
ஏற்பாடு செய்யவா என்று கேட்டாள்.
வேலைக் காரியின் விருப்பப் படி அவன்
வேண்டாம் என்று விளம்பி விட்டான்.
18. மஞ்சள்தாள் திருமணத்தாள் தானே வேறென்ன?
காகிதம் படிக்கையில் தலைவர் வருகிறார்.
அண்ணனும் தங்கையும் நெருங்கியே
பிறந்த ஊர்க் கதைகள் பேசலா னார்கள்:
"நமது வீட்டின் நாலாவது வீட்டுக்
கமலத் துக்குக் கண்ணாலம் என்று
காயிதம் வந்தது கண்டீரா?" என்றுதன்
அண்ணனைக் கேட்டாள். அண்ணன் சிரித்துக்
"கமலம் இறந்து கணக்கிலா நாட்கள்
ஆயின" என்றான். அதுகேட்டு மங்கை
இல்லை அண்ணா இதோ பாருமென்று
மஞ்சள் உறைக்குள் வந்த அஞ்சலைக்
கொண்டு வந்து கொடுத்தாள்; அதை அவன்
மேலுறை கிழித்து நாலுசொல் படித்தான்.
அதற்குள் காரும் பொதுக்கென்று வந்தது.
வீட்டுத் தலைவர் வீட்டில் நுழைந்தார்.
சாய்வு நாற்காலியில் சலிப்புடன் சாய்ந்தார்.
"ஐதராப் பாக்கம் அவன் போய் விட்டான்.
பணமும் போனது; பற்றாக் குறைக்கோ
இன்று ரூபாய் இருபத் தைந்தும்,
பட்டினி யோடு பறந்து திரிந்த
தொல்லையும் வீணாய்த் தொலைந்தன" என்றார்.
அந்த நேரம் அண்ணன் அங்கே
திருமண அழைப்பை விரைவாய்ப் படித்தான்.
ஏட்டினில் இருந்த தென்ன வென்றால்:
"அன்புடை யவரே அவ் வாசாமி
ஐந்து நாளில் ஐதராப் பாக்கம்
போவதாய்த் திட்டம் போட்டிருக் கின்றான்.
கடிதம் இதனைக் கண்டவுடனே
வந்தால் தொகையை வட்டியும் முதலுமாய்
வாங்கி விடலாம், வந்து சேரவும்.
அங்கவன் போனபின் இங்குநீர் வருவது
வீணே இங்ஙனம் வீராசாமி."
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
19. தலைவர் எரிச்சல்; இருவர் சண்டை;
வந்த அண்ணனும் போய்விட்டான்.
எப்போது வந்த திந்தக் கடிதம்
என்று தலைவர் எரிச்சலாய்க் கேட்டார்.
ஏழெட்டு நாள்முன் இங்கு வந்தது.
திருமணத்துக்குச் செல்லமாட்டீர் என்று
அடுப்பங் கரையில் அதனை வைத்தேன்.
இதனா லென்ன என்றாள் தலைவி.
இதுவா திருமணம் என்றார் தலைவர்.
மஞ்சள் கடிதம் திருமணம் அல்லவா?
என்று கூறினாள் எல்லாம் தெரிந்தவள்.
பதரே என்று பல்லவி தொடங்கினார்.
அடக்கென் றெடுத்தாள் அவள்அநு பல்லவி!
"எங்கிருந் தாயடி என்குடிக் கிப்படி
மங்கிப் போக வைத்தாய் காலடி
பொங்க லாண்டி யாகப் போம்படி
புரிவ தெல்லாம் மிகவும் அழும்படி"
எனவே இப்படி முடித்தார் முதலடி!
தானும் தொடங்கினாள் தாளத் தின்படி;
"ஊருக் கழித்தாய் உருப்பட வா நீ
நாட்டுக் கழித்தாய் நலம்பட வாநீ
இனியும் ஊரில் எடுபட வா நீ"
என்று கூறி எழுந்தாள் அம்மை.
இரண்டாம் அடியை இப்படி முடிக்குமுன்
வந்த அண்ணன் வந்த வழியே
சந்தடி யின்றிச் சடுதியிற் சென்றான்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
20. தலைவர் கோபித்துக்கொண்டு புறப்படுகிறார்.
வீட்டுக் காரர் மேலும் தொடங்கினார்;
இந்தாடி என்றே எடுத்தடி வைத்துப்
பந்தா டிடுவேன் பார்எனக் குதித்துப்
பல்லைக் கடித்தே பரக்க விழித்தே
கொல்லைக் கோடிக் கோலைத் தேடி
விட்டே னாஎன மீசை முறுக்கிச்
சட்டென இதுதான் தக்க தென்று
துண்டை எடுத்துத் தோளில் போட்டுச்
சுண்டெலி வால்போல் தொங்கும் தலைமயிர்
கோதி நுணுக்காய்க் குடுமி முடித்துக்
காதில் தொங்கும் கடுக்கனைத் துடைத்துச்
"சாப்பிட மாட்டேன் சற்றும் இங்கிரேன்
கூப்பிட நினைத்தால் கொன்று போடுவேன்
இங்கு நான்இரேன் சங்கிலி, தெரிந்ததா!
எங்கே பையன்? இரடா இங்கே.
என்று கூறி - எங்கே? செருப்பும்
ஒன்றுதானா? என்றதை அணிந்து,
சென்று பின்பு திரும்பி வந்து
கன்றையும் மாட்டையும் நன்கு கருதுநீ
உன்னிடம் குழந்தையை ஒப்பு வித்தேன்
சங்கிலி இன்னும் நான் சாற்றுவ தைக்கேள்:
இப்போ தேநான் இவ்விடம் விட்டுச்
செட்டித் தெருவில் தென்னை மரத்தோ
டொட்டி இருக்கும் ஒருவீட்டருகில்
குட்டிச் சுவரின் கோடியி லிருக்கும்
இரிசி வீட்டின் எதிர்த்த வீட்டில்
இருப்பேன். நீயோ என்னை அங்கு
வந்து கிந்து வருவாய் கிருவாய்
என்று கூப்பிட எண்ண வேண்டாம்.
அந்த வீட்டெண் அறுபத் திரண்டுதான்
தெருப் பக்கத்தில் இருக்கும் அறையில்
இருப்பேன்; அழைத்தால் வரவே மாட்டேன்".
என்று தலைவர் இரைச்சல் போட்டு
நடைவரைக் கும்போய் இடையில் திரும்பி
அழைப்பார் இல்லை ஆதலால் மீண்டும்
திரும்பிப் பார்த்துத் தெருவோடு சென்றார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
21. சங்கிலி தேற்றல், தலைவியின் தூற்றல்.
சங்கிலி வந்து தலைவியை நோக்கியே
தங்க மான தங்கள் கணவருக்
கிப்படி யெல்லாம் எரிச்சலுண் டாக்குதல்
தப்பா அல்லவா சாற்றுவீர் என்றாள்.
உரைத்தது போதும் உட்கார் என்று
தலைவி சொன்னாள். சங்கிலி அமர்ந்தாள்.
*****
மலைக் குரங்கா மனிதரா அவர்தாம்?
கோணங்கி ஆடிக் கொக்க ரித்தார்
ஆணாய்ப் பிறந்தால் அமர்க்கை வேண்டும்
இவர்போல் மனிதரை யான்பார்த்த தில்லை.
சுவரா கல்லா சொல்வதைப் பொறுக்க,
மூச்சு விட்டாலும் ஆச்சா என்கிறார்.
சீச்சி இவரொடு சின்னப் பிறவி
என்றிவ் வாறு பன்றிபோல் உறுமிச்
சென்று, சோறு போடு என்றாள் தலைவி.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
22. மண்ணெண்ணெய்க் கையோடு சாப்பிடுகிறார்கள்.
சமையல் நன்றாயில்லை என்பதற்குக் காரணம் தோன்றவில்லை.
பையன் நோய் சிறிது படிந்திருந்ததால்
பைய நிமிர்ந்து பசிபசி என்றான்!
பையனுக்கும் பரிமாறி னார்கள்.
தாயும் பிள்ளையும் சரேலென் றெழுந்தே
இட்டமண் ணெண்ணெய்ப் புட்டியை இடறி
எண்ணெய் சாய்ந்தால் இச்இச் என்றே
இருவரும் கையால் எடுத்துரு வாக்கிக்
கடிது சமையல் கட்டினை அடைந்தார்.
சோற்றில் ஏதும் சுடுநாற்றம் இல்லை,
சாற்றி லேதும் தவறே இல்லை,
குழம்பில் ஏதுங் குற்றமில்லை.
அவைகள் சுவையுடன் அமைந்தன எனினும்
அந்த இருவரும் அலம்பாத கையோடு
வந்துட் கார்ந்தார் வழக்கப் படியே.
சோற்றில் ஏதோ சுவை குறைவுற்றது
சாற்றில் ஏதோ தவறு தோன்றிற்று
குழம்பில் ஏதோ குறை தோன்றிற்று
சுவையுடன் அமைந்தவை கவலை விளைத்தன.
வீட்டுக் காரி மிகவும் சினந்து
இவற்றில் இனிமேல் சுவைதனை ஏற்ற
முடியுமோ என்று மொழிந்தாள். மொழிந்ததும்,
என்னா லாவ தினியொன்று மில்லை
என்று கூறினாள் எதிர் நின்ற சங்கிலி.
உண்டு முடிந்ததும் உள்ள கறியையும்
மீந்த சோற்றையும் வேலைக் காரிகள்
ஏந்தி வீட்டுக் கெடுத்துப் போயினர்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
23. வீட்டுக்காரி, பையன் தூக்கம்.
பெரிய பையன் பெட்டி யண்டையில்
கொரகொர வென்று குறட்டை ஏற
மெழுகு போல அழுக்குப் படிந்த
தலையணை மீது தலையை வைத்து
விலகாது மூட்டை வெடுக்கென்று கடிப்பதும்
தோன்றா உணர்வோடு தூங்க லானான்.
ஈன்ற தாயோ ஈன்றகைப் பிள்ளையின்
அண்டையில் படுத்தாள். அலறிற்றுப் பசு;
வைக்கோல் போட மறந்தே னென்றே
ஓடி, வைக்கோலைத் தேடிப் போட்டு
நாடி வந்து நடுவிற் படுத்தாள்.
தெருவில் நாயும் குரைப்பது கேட்டுத்
தெருவின் கதவைச் சென்றுதாழ் இட்டாள்.
நவாப்புக் குதிரை நாடு முழுதும்
சவாரி வந்து தரையில் புரளல் போல்
படுத்துப் புரண்டு பிடித்தாள் தூக்கம்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|