புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
51 Posts - 44%
heezulia
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
2 Posts - 2%
prajai
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
417 Posts - 49%
heezulia
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
283 Posts - 33%
Dr.S.Soundarapandian
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
28 Posts - 3%
prajai
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:10 pm


1. தலைவியின் தூக்கம், பால் கறப்பவன் தவறு, தலைவனின் சோம்பல்.


கடலின் மீது கதிரவன் தோன்றிப்
படரும் கதிர்க்கை பாய்ச்சிச் சன்னலின்
வழியே, கட்டிலில் மங்கையை எழுப்பினான்.
விழிதிறந்து மங்கை, மீண்டும் துயின்றாள்.

*****

அப்போது மணியும் ஆறரை ஆனதால்
எப்பொழு தும்போல் இரிசன் என்ற
மாடு கறப்பவன் வந்து கறந்து
பாலொடு செம்பை, மூலையில் கட்டிய
உறியில் வைக்காது-உரலின் அண்டையில்
வைத்துப் போனான். மங்கையின் கணவனோ,
சொத்தைப் பல்லைச் சுரண்டிய படியே
சாய்வுநாற் காலியில் சாய்ந்தி ருந்தான்.

2. குழந்தையின் அழுகை, பையனின் பொய்; தந்தையின் போக்கு.

தாயோ துயில்வதால் தனிமை பொறாமல்
நோயுடன் குழந்தை நூறு தடவை
அம்மா என்றும் அப்பா என்றும்
கம்மிய தொண்டையால் கத்திக் கிடந்தது!

*****

பெரிய பையன் பிட்டையும் வடையையும்
கருதி, முதலில் கையால் சாம்பலைத்
தொட்டுப் பல்லையும் தொட்டே, உரலின்
அருகில் இருந்தபால் செம்பை, விரைவில்
தூக்கி, முகத்தைச் சுருக்காய்க் கழுவினான்;
பாக்கி இருப்பது பால்என் றறிந்து
கடிது சென்றே "இடையன் இப்படிச்
செம்பின் பாலைச் சிந்தினான்" என்று,
நம்பும் படியே நவின்றான் தந்தைபால்!
தந்தையார் "நாளைக் கந்த இடையன்
வந்தால் உதைப்பதாய் வாய்மலர்ந்" தருளினார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:11 pm

3. பையன் காலைக்கடன் முடிக்காமல் உணவுண்ணத் தொடங்கினான்;
இரண்டு பற்களின் மறைவு.


பிட்டுக் காரி தட்டினாள் கதவையே
திட்டென்று கதவைத் திறந்தான் பெரியவன்
பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்
பெட்டி மீதில் இட்டுட் கார்ந்தான்
ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான்
நாவில் இடுகையில், நடுவயிறு வலித்தது
வெளிக்குப் போக வேண்டுமென் றுணர்ந்தான்
வடையின் சுவையோ விடேன்விடேன் என்றது
கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான்.
மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்
வில்லம்பு போல மிக விரை வாக
நடுவிற் கிடந்த நாயை மிதித்துப்
படபட வென்று பானையைத் தள்ளிக்
கன்றின் கயிற்றால் கால்தடுக் குற்று
நின்ற பசுவின் நெற்றியில் மோதி
இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப்
புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:11 pm

4. தலைவி எழுந்தாள்; சாணமிட்டாள்; கோலமிட்டாள்;
அவளைக் கண்ட பகலவன் நடுங்கினான்


நாயின் அலறல் நற்பசுக் கதறல்
பானையின் படபடா பையனின் ஐயோ -
இத்தனை முழக்கில் ஏந்திழை புரண்டு
பொத்தல் மரத்தின் புழுப்போல் நெளிந்தே
எழுந்தாள். அவளோ, பிழிந்து போட்ட
கருப்பஞ் சக்கையின் கற்றைபோல் இருந்தாள்.
இதுதான் பாதை எனும் உணர்வின்றி
மெதுவாய் அறையினின்று வெளியில் வந்தாள்.
பாதி திறந்த கோதையின் விழியோ
பலகறை நடுவில் பதிந்த கோடுபோல்
தோன்றிற்று! மங்கை தூக்கம் நீங்காது,
ஊன்றும் அடிகள் ஓய்ந்து தள்ளாடினாள்.
உடைந்த பெட்டி மேல் கிடந்த பிட்டைத்
தொடர்ந்து நாய் தின்பதும் தோன்றவில்லை.
நடந்து சென்றவள் நற்பசு வுக்கெதிர்
கிடந்த சாணியைக் கிளறி எடுத்து
மீந்தபாற் செம்பில் விழுது கரைத்துச்
சாய்ந்து விடாமல் தாழைத் திறந்து
தெருவின் குறட்டில் தெளித்தாள்! அவள்குழல்
முள்ளம் பன்றி முழுதுடல் சிலிர்த்தல் போல்
மேலெழுந்து நின்று விரிந்து கிடந்துது!
வாலிழந்து போன மந்தி முகத்தாள்
கோல மிடவும் குனிந்தாள்; தாமரை
போல எழுதப் போட்ட திட்டம்
சிறிது தவறவே தேய்ந்த துடைப்பம்
அவிழ்ந்து சிதறுமே, அப்படி முடிந்தது!
பொன்நிறக் கதிரொடு போந்த பகலவன்
இந்நில மக்கள்பால் தன்விழி செலுத்தினான்!
கோலம் போட்டவள் கொஞ்சம் நிமிர்ந்தாள்.
காலைப் பரிதியின் கண்கள் நடுங்கின!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:12 pm


5. தலைவி, தலைவன், பையனுக்கு மருத்துவம், சாணி ஒத்தடம்


குறட்டி னின்று கோதை, உட்சென்று
கணவனின் எதிர்வந்து கையோய்ந்து குந்தினாள்.

*****

காலையில் புதுப்பேச்சுக் காண லாயினார்.
தன்னரு மனைவியைப் பொன்னிகர் கணவன்
"என்ன மணியடி?" என்று கேட்டான்.
"சண்டிமணிப் பொறிக்குச் சாவி கொடுக்க
அண்டை வீட்டானை அன்றே அழைத்தேன்;
வரவே இல்லை மாமா" என்றாள்.
அந்த நேரம் அண்டை வீட்டுக்
கந்தன், குடையும் காலிற் செருப்புமாய்
வீட்டி னின்று வெளியிற் செல்வதைப்
பார்த்த கணவன், "பாரடி அவனை,
அதற்குள் வேலை அனைத்தும் முடித்துக்
கடைக்குச் செல்லும் கருத்தை" என்றான்.
"விடியா மூஞ்சி விடியு முன்பே
போனால் நீயும் போக வேண்டுமோ?"
என்று கூறி இளிக்க லானாள்.

*****

பெரிய பையன் அருகில் வந்தான்
வடையும் கையும் வாயும் புண்ணுமாய்
நடைமெலிந் தேஅவன் நண்ணுதல் கண்டே
'என்ன என்ன' என்று கேட்டாள் தாய்.
புன்னை அரும்புபோல் புதிதாய் முளைத்த
இரண்டு பற்கள் இல்லைஎன் றுரைத்தான்.
வீங்கிய உதட்டுநோய் தாங்கிலேன் என்றான்.
உருண்டைச் சாணியை ஒருமுறை பூசினால்
மறுநொடி ஆறுமென்று மங்கை மருத்துவ
மறைநூல் வகுத்த வண்ணம் கூறினாள்.
பிறகா கட்டும் பிட்டைத் தின்பாய்
வேலைக் காரி விடிந்தபின் வருவாள்
பாலைக் காய்ச்சிப் பருகலாம் என்றாள்.
எட்டரை அடிக்கையில் இப்படிச் சொன்னாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:12 pm


6. பிட்டை நாய் தின்றது, மீண்டும் வாங்கிய பிட்டுக்குத் தலைவர்
புறப்புடுகிறார். புதிய பிட்டை உண்ணப் பையன் உதடு இடந்தரவில்லை


அழுமூஞ்சி பிட்டை அணுகினான். நாயும்
நழுவிற்றுப் பிட்டை நன்று தின்று.
தொட்டுச் சுவைக்கப் பிட்டில் லாமையால்
பெரிய பையன் சிறிய நரிபோல்
ஊழ் ஊழ் என்றே ஊளையிட் டிருந்தான்.

வீடு பெருக்கும் வேலாயி வந்தாள்!
சமையல் செய்யும் சங்கிலி வந்தாள்!
கடைக்கென் றமைந்த கணக்கன் வந்தான்!
கூடத்து நடுவில் ஏடு விரித்தே
மறுபடி வாங்கிய வடையையும் பிட்டையும்
சங்கிலி படைத்தாள் தலைவருக் காகவே!
பல்லைச் சுரண்டுவோர் பார்த்தார் அதனை,
மெல்ல எழுந்தார், மெல்ல நடந்தார்,
காலைக் கடனைக் கழிக்கக் கருதினார்.

பிட்டையும் வடையையும் பெட்டியில் குந்திக்
கிட்ட இழுத்தான் கிழிந்தவாய்ப் பெரியவன்.
அவனுடல் கொஞ்சம் அசைந்தது. வாய்எயிறு
கவலை மாட்டின் கழுத்துப் போல
வீங்கி இருந்ததால் வெடுக்கென வலித்தது!
தாங்காது கையால் தடவிப் பார்த்தான்!
நோயும் பெரியவன் நோக்க வில்லை!
வாயில் நுழைய வடைக்கு வழியில்லை!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:13 pm

7. பிள்ளையின் நோய்க்குப் பிட்டுத் திணிக்கப்படுகிறது. மற்றவர்க்குப்
பிட்டு வேண்டாம் என்று முடிந்தது. பிள்ளைக்கு வாயில்லை.


வீட்டின் தலைவி நீட்டிய காலும்
ஆட்டின் கத்தல்போல் அருமைப் பாட்டுமாய்க்
குழந்தையை வைத்துக் குந்தி யிருந்தாள்.
இழந்த உயிரில் இம்மி யளவு
பிள்ளையின் உடலொடு பிணைந்தி ருந்ததால்,
வள்ளிக் கொடியும் வதங்கிய தைப்போல்
தாய்மேற் பிள்ளை சாய்ந்து கிடந்தது.

தாயோ சங்கிலி தன்னை அழைத்து
"வாங்கி வந்த வடையையும் பிட்டையும்
கொண்டுவா பசியடி குழந்தைக்" கென்றாள்.
தட்டில் வடையும் பிட்டும் கொண்டு
சட்டென வைத்தாள் சங்கிலி என்பவள்.

கூடத்து நடுவில் ஏடு விரித்து
வைத்த பிட்டையும் வடையையும், வந்து
மொய்த்த ஈயொடு முதல்வர் தின்றார்!
மறுபடி ஒருபிடி வாயில் வைக்குமுன்
சிறுபடி அளவில் திடுக்கென உமிழ்ந்தார்.
அதனால் அதை அவர் அருந்துதல் நீங்கி,
கையினால் "வேண்டாம் வடை" என்று காட்டினார்.

பெரிய பையன் பிசைந்தான் பிட்டை!
ஒருதுளி கூட உண்ணமாட் டாமல்
கொரகொர கொழகொழ கொணகொண என்றான்.
இதன் மொழி பெயர்ப் பென்ன என்றால்
"எயிறு வீங்கி இடத்தை மறித்தது
தின்பதற் கென்ன செய்வேன்?" என்பதாம்.

பையனால் இப்படிப் பகர முடிந்தது.
பிட்டை வாயில் இட்டுத் திணிக்கும்
தாயை நோக்கிஅத் தடுக்குக் குழந்தை
"தாயே எனக்கிது சாகும் நேரம்" என்று
வாயால் சொல்லும் வல்லமை இல்லை.
அறிவெனும் வெளிச்சம் அங்கே யில்லை.
மடமை மட்டும் மகிழ்ந்து கிடந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:13 pm


8. பிள்ளை நிலைக்குக் காரணம் தோன்றிவிட்டது தலைவிக்கு!


தந்தியும் ஆணியும் தளர்ந்த யாழ்போல்
கூடத்து நடுவில் வாடிய சருகுபோல்
பெரியவன் பாயில் சுருண்டு கிடந்தான்.
என்பு முறிந்த வன்புலி யுடம்பைக்
கன்மேல் கிடத்திய காட்சி போல
ஓய்வுடன் தலைவர் ஒருபக் கத்தில்
சாய்வுநாற் காலியில் சாய்ந்து கிடந்தார்.

*****

வயிற்றின் உப்பலால் வாயிலாக் குழந்தை
உயிரை இழக்க ஒப்பாது கிடந்தது!

*****

நடைவீட் டினிலே கடையின் கணக்கன்
நெடுந் தூக்கத்தில் படிந்து கிடந்தான்.
வேலைசெய் வோர்கள் மூலையில் குந்தி
மாலை நேரத்தின் வரவுபார்த் திருந்தனர்.

*****

இல்லத் தலைவி எண்ண லானாள்:
குழந்தை யுடம்பில் கோளா றென்ன?
வளர்க்கும் முறையில் மாற்ற மில்லையே!
களிம்புறு பித்தளை கைப்படக் கைப்பட
விளங்குறும் அதுபோல், வேளை தோறும்
கனிநிகர் உடம்பில் கண்ணை வைத்துப்
பனிபிணி யின்றிப் பார்க்கின் றேனே!
எனப்பல வாறு நினைக்கும் போது
நெட்டை யன்தலை குட்டை இறைப்பினில்
பட்டதைப் போல்அப் பாவையின் நெஞ்சில்
பட்டதோர் எண்ணம்! பார்வை திருப்பினாள்.
"மந்திரக் காரன் வரட்டும்" என்றாள்
அந்தச் சங்கிலி, "அவர் ஏன்" என்றாள்.
"இந்த வீட்டில் இருளன் புகுந்ததால்
நொந்தது குழந்தை நோயால்" என்றாள்.
"வாலன் என்னும் மந்திரக் காரனை
அழைக்கின் றேன்" என் றறைந்தாள் சங்கிலி!
"சரிபோ!" என்று தலைவி சொன்னாள்!
நாழிகை போக்காது நடந்தாள் சங்கிலி!
"ஏழரை ஒன்ப திராகு காலம்
இப்போது வேண்டாம்" -என்றான் தலைவன்.
வீட்டின் அரசியும் வேண்டாம் என்றாள்.
நடந்த சங்கிலி நன்றெனத் திரும்பினாள்.
வேலைக் காரியும் வீட்டின் தலைவியும்
நாலைந்து கடவுளின் நற்பெயர் கூறிக்
காப்பீர் என்று காப்புங் கட்டி
வேப்பிலை ஒடிக்கும் வேலையில் நுழைந்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:14 pm


9. வரவேண்டிய பணம் நல்ல வேளையில் தான் வந்தது.


வீட்டு முன்கட்டில் வீட்டுக் காரனும்
"காட்டுமுத்" தெனும், கணக்கனும் ஏதோ
ஓசை காட்டிப் பேசி யிருந்தனர்.
அந்த நேரம் அந்த இடத்தில்
பாக்கியும் வட்டியும் பட்டுச் செட்டி
தூக்கி வந்து தொகையாய் எண்ணினான்.
வீட்டுக் காரனும் வீட்டுக் கணக்கனும்
சீட்டை எடுத்துச் செல்லு வைத்தார்.
பட்டுச் செட்டி பகரு கின்றான்:
"இராகு காலம் எட்டிப் போனபின்
தரவேண் டியதைத் தந்தேன்; ஆயினும்
தந்த பணத்தைச் சரியாய் எண்ணிச்
சொந்தப் பெட்டியில் சுருக்காய் வைப்பீர்"
என்று கூறி எழுந்து போனான்!


10. வீட்டின் தூய்மை, எலிக்கூத்து, பூனை மகிழ்ச்சி, எறிபடும் குப்பை.

இனிதாய்ப் பகல்மணி பனிரண் டானது
பழங்கல அறைக்குள் பதுங்கி யிருந்த
கிழஎலி கள்தாம் கிளைஞ ரோடு
கூடத் திற்சிறு குண்டான் மேலும்
மாடிப் படியில் மட்குடந் தனிலும்,
ஆடல் பாடல் அரங்கு செய்தன.

தயிரின் மொந்தையில் தலை புகாததால்
நறுக்கென்று சாய்த்து நக்கிற்றுப் பூனை!
வடித்த சோற்றை வட்டிலில் கண்டு
தடித்தடிக் காக்கைகள் சலிக்கத் தின்றன!

*****

வீட்டினுள் காற்று வீசுந் தோறும்
மோட்டு வளையில் மொய்த்த ஒட்டடை
பூமழை யாகப் பொழியும் தரையில்!
ஊமைக் குப்பைகள் உம்மென்று மேலெழும்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:14 pm

11. தலைவர் சாப்பிட முடியவில்லை;
இலந்தையூர்க்குப் புறப்பட வேண்டியதாயிற்று.


சங்கிலி தலைவரைச் சாப்பிட அழைத்தாள்;
அங்கே பசியால் அழியும் தலைவரோ
மெதுவாய் எழுந்தார்; அதே நேரத்தில்
எப்போ தும்போல் இரண்டு பல்லிகள்
பளபள வென்று பாடவே, தலைவர்
மீண்டும்நாற் காலியில் விசையாய்ச் சாய்ந்தார்.
அந்த நேரம் அங்குநின் றிருந்த
கணக்கன் தலைவரைக் கனிவுடன் அழைத்தே
"இன்று நீங்கள் இலந்தை யூர்க்குச்
சென்று வஞ்சகன் சிற்றம் பலத்தைக்
கண்டு பணத்தைக் கையொடு வாங்கிக்
கொண்டு வருவதாய்க் கூறி னீர்களே!
ஐதராப் பாக்கம் அவன் ஓடிவிட்டால்
பைதரா வழக்கும் பயன்படாதே
பத்துப் பைகள் பறிபோக லாமோ?"
என்று பலவும் எடுத்துச் சொன்னான்!
"நன்று நன்று சென்று நீஒரு
காரைப் பேசிக் கடிதில் கொண்டுவா.
அச்சாரப் பணம் ஐந்துரூ பாய்கொடு,
கடன் பட்டவனைக் கையொடு பிடிக்க
அரச காவலர் அங்கே இருப்பரேல்
ஐந்து ரூபாய் அவரிடம் கொடுத்து
வேண்டிய ஒழுங்குடன் விரைவில் அழைத்துவா"
என்றான் தலைவன்! ஏகினான் கணக்கன்.

12. தலைவரின் மைத்துனர் வருகிறார்; வரவேண்டாம் என்று வரவேற்றார்.

ளொள் ளொள் என்று வெள்ளை நாய், வீட்டின்
வாயிலில், யாரையோ வரவேற் கின்றதை
வீட்டுக் காரர் கேட்டார் காதில்,
நீட்டினார் தலையை வீட்டின் வெளியில்
மைத்துனர் ஊரினின்று வருவதாய் அறிந்தார்.
வாரும் வாரும் வாரும் என்றார்.
மைத்துனர், வந்தேன் வந்தேன் என்று
வாயிற் படிமேல் வைத்தார் காலை.
இடறிற்றுக் கால்! இரும் இரும் மச்சான்
வராதீர் மச்சான் வராதீர் என்றார்.
இல்லை இல்லை என்றார் மைத்துனர்.

*****

தூய குறிதான் தோன்றும் வரைக்கும்
வாயிலில் காலை வைக்கலா காதென
மைத்துனர், எதிரில் மாட்டுக் கொட்டிலில்
மொய்க்கும் கொசுக்களால் மூடுண் டிருந்தார்.
காரும் சாவடிக் காவல ரோடு
நேரில் வீட்டெதிர் நின்றது வந்து.
விரைவாய் உண்டார்; விரைவாய் ஏறினார்;
விரைவாய்க் காரும் தெருவை அகன்றது.
கணக்கனும் அந்தக் காரில் சென்றான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:15 pm

13. தலைவியும் அவளின் அண்ணனும் பேசுகிறார்கள்;
குழந்தைக்குப் பண்டம் வாங்கி வந்தார் மாமா.


மைத்துனர் வீடு வந்து நுழைந்தார்.
ஒத்த அன்பின் உடன்பிறந் தாளைத்
"தங்கையே என்ன அங்கே செய்கின்றாய்?
உடம்புக் கென்ன? ஒன்று மில்லையே?
குழந்தைக் கென்ன? குறைபா டில்லையே?
பெரியவன் நலத்தில் பிழைபா டில்லையே?
குடித்தனம் எவ்வாறு? தடித்தனம் இல்லையே?"
என்று கேட்டார். எதிரில் நின்றவள்
"இருக்கின் றேன்நான்" என்று கூறினாள்.
சாகா திருப்பது தனக்கே வியப்போ?

*****

அங்குப் பாயினில் அயர்ந்து கிடந்த
வாயிலாக் குழந்தையை மைத்துனர் கண்டார்.
இயம்ப முடியா இரக்கம் அடைந்தார்.
அவ்விரக் கத்தின் அறிகுறி யாகத்
தூங்கும் பிள்ளையைத் துயருற எழுப்பி
வாங்கி வந்த மாம்பழம் அனைத்தையும்
ஆங்கே குழந்தை அண்டையில் பரப்பினார்.
பூந்தி கட்டிய பொட்டணம் அவிழ்த்துக்
கொஞ்சம் அள்ளிக் குழந்தை முகத்தெதிர்
வஞ்சம் இன்றி வைத்துக் 'குழந்தையே
பாங்கொடு தின்னப் பழமும் பூந்தியும்
வாங்கி வந்தேன் மருந்துபோல்' என்றார்;
ஓட்டை நீக்கி உள்ளீடு தன்னைக்
காட்டி விளாம்பழம் கருத்தாய்த் தின்என்று
அதையும் குழந்தையின் அண்டையில் வைத்தார்!
குழந்தை கிடந்த கூட மெல்லாம்
உழந்து கிடந்த ஒருகளம் போலவும்
வேம்பின் பழம்பூ விரிதரை போலவும்
ஈயின் காடும் எறும்பின் காடும்
ஆயிற்று! மைத்துனர் அப்புறம் சென்றார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக