புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
prajai
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 10:05 pm

First topic message reminder :

ஒரு சமயம், அரசனொருவன் புலவர்களை அழைத்து, நாளை அரசவையில் நாலுகோடிப் பாடல் சொல்ல வேண்டுமென பணித்தான். இந்தக் கட்டளை கேட்டு திக்கு முக்காடிப் போன புலவர்களில் ஒருவரை ஒளவையார் சந்திக்கிறார்.

கவலையை மறந்து விடுங்கள், நான் உங்களுக்கு நான்கு கோடிப் பாடல்களை ஒரு நொடியில் சொல்கிறேன் என பாடல்வரிகளை ஒளவையார் சொல்லி முடிக்கிறார்.


1.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.


மதியாதவர் வாசலை மதித்து சென்று மிதிக்காமல் இருப்பது கோடிப் பொருளைத் தருவதாகும்.


2.
உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.


நம்மை அன்புடன் உபசரித்து உண்ணுங்கள் உண்ணுங்கள் என்று உணவிடாதோர் வீட்டில் சென்று உண்ணாமை கோடிப்பொருளைத் தரும்.

3.
கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்.


எத்தனை கோடிப்பணம் கொட்டிக்கொடுத்தாலும் தமக்குத்தகுதியற்றோருடன் கூடி வாழுதல் இல்லாமல் ஒத்த இயல்புடையோருடன் கூடிவாழுதல் கோடிப் பொருளைத் தரும்.

4.
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.


எத்தனை கோடிகள் கொட்டிக்கிடைத்தாலும் தம் நாவினை அடக்கி வாழுதுல கோடிப்பொருளைத்தரும்.

ஔவையாரைப்பற்றிய அறிந்த தகவல்களைப்பகிரும் இந்த திரியில் ஔவையாரின் பாடல்கள் சம்பவஙகளை பகிர்ந்துகொள்வோம் நண்பர்களே,,, [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 11:26 pm

புகழ்ச்சிக்கான நேரங்கள் பற்றி ஔவையார்:

"நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே
வாச மனையாளைப் பஞ்சணையில்
மைந்தர் தம்மை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்"


நண்பன் அருகில் இல்லாத நேரம் அவனைப் புகழ வேண்டும், ஆசிரியரை நேரிலும், மறைவிலும் எப்போதும் புகழலாம், மனைவியை பஞ்சணையில் புகழ வேண்டும், பெற்ற பிள்ளைகளை மனதிற்குள் புகழ வேண்டும், வேலைக்காரர்களை, அவர்களது வேலைகளை முடித்த பிறகுதான் புகழ வேண்டும்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 11, 2010 11:39 pm

இரு மனைவியர்களைக் கொண்ட ஒருவன் ஒரு பலா மரத்தைப் பிரியமாய் வளர்த்தானாம். அவன் இல்லாத நேரத்தில் இளையவள் அம்மரத்தை வெட்டிவிட்டு அப்பழியை மூத்தவள் மீது போட்டாளாம். மூத்தவள் கணவனுக்கு அஞ்சி வருந்திய போது அம்மரம் மீண்டும் தழைக்க ஒளவையார் பாடிய பாடல்.

“கூரிய வாளாற் குறைத்திட்ட கூன்பலா
ஓரிதழாய்க் கன்றாய் உயர்மரமாய்ச் - சீரியதோர்
வண்டுபோற் கொட்டையாய் வண்காயாய்த் தின்பழமாய்
பண்டுபோ னிற்கப் பலா”

என்று பாடியவுடன் மீண்டும் பலா மரம் பழையபடி உயிர்கொண்டு எழுந்ததாம்.



[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 11, 2010 11:44 pm


பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 109 ஒருவரிப்பாடல்கள் உள்ளன. உயர்ந்த ஒழுக்க விதைகள் மனத்தின் ஊன்றுவதற்காக அவ்வையாரல் எழுதப்பெற்றன.


கடவுள் வாழ்த்து



ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே.


நூல்





உயிர் வருக்கம்



1. அறஞ் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஔவியம் பேசேல்
13. அஃகஞ் சுருக்கேல்

உயிர்மெய் வருக்கம்



14. கண்டு ஒன்று சொல்லேல்
15. ஙப் போல்வளை
16. சனி நீராடு
17. ஞயம் பட உரை
18. இடம் பட வீடு எடேல்
19. இணககம்அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செயேல்
25. அரவம்ஆடேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செயேல்
29. இளமையில் கல்
30. அரனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்

ககர வருக்கம்



32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப் பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப்பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கௌவை அகற்று

சகர வருக்கம்



44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்திரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளிக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சேரிடம் அறிந்து சேர்
52. சை எனத் திரியேல்
53. சொல் சோர்வு படேல்
54. சோம்பித் திரியேல்

தகர வருக்கம்



55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒத்து வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொண்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்

நகர வருக்கம்



66. நன்மை கடைப்பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பிரியேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நூல் பல கல்
72. நெல் பயிர் விளை
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல்
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடம் கொடேல்

பகர வருக்கம்



77. பழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82. பூமி திருத்தி உண்
83. பெரியாரைத் துணைக் கொள்
84. பேதமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் புரியேல்

மகர வருக்கம்



88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீதூண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93 மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள் சேர்
95. மேன் மக்கள் சொல் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அற மொழி
98. மோகத்தை முனி

வகர வருக்கம்



99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடு பெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரைத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 12, 2010 12:44 am

மிக மிக அருமை கலை...

பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் கலை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 8:14 pm

அப்ப ஒளவையார் பற்றியும் நிறைய தகவல்கள் இருக்குனு சொல்லுங்க...இன்னும் எதாவது தகவல் கிடைக்குமா பார்ப்போம்..!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 21, 2018 8:59 am

அருமையான திரி இது, இன்னும் ஒளவையார் பற்றிய சுவையான செய்திகள் தெரிந்தவர்கள் இங்கே பகிருங்கள் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Nov 21, 2018 6:00 pm

அவ்வையார் எழுதிய தனிப்பாடல் தொகுதியில் இப்பாடல் வருகிறது .மேலும் சில பாடல்களைப் பார்ப்போம் .

சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வர்சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல
குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடிற்
பலாமாவைப் பாதிரியைப் பார் .

பலாமரம் பூக்காமலே காய்க்கும். அதுபோல சிலர் சொல்லாமலே செயல்களைச் செய்வார்கள் . மாமரம் பூத்துப் பின்னர் காய்க்கும் . அதுபோல சிலர் சொன்னால் செய்வார்கள் ; சொல்லவில்லை என்றால் செய்யமாட்டார்கள் . பாதிரி மரம் பூப்பூக்கும் ஆனால் காய் பிடிக்காது . அதுபோல சிலர் சொன்னாலும் செய்ய மாட்டார்கள் .

சொல்லாமலே செய்பவர்கள் பெரியோர் என்றும் , சொல்லிச் செய்வோர் சிறியோர் என்றும்  சொல்லியும் செய்யாதவர்களைக் கயவர் என்றும் ஒளவையார் அழைக்கின்றார் .

இந்தப் பாடலிலிருந்து ஒளவையாரின் உலகியலறிவும் , தாவரவியலறிவும் நமக்குத் தெரிகிறது .

கொன்றைவேந்தனில் ஒளவையார்

ஏவா மக்கள் மூவா மருந்து

என்று பாடியிருப்பதும் ஈண்டு நோக்கத்தக்கது .

இதன் பொருள் சொல்லாமலேயே குறிப்பறிந்து வினையாற்றுகின்ற மக்கள் ஒருவனுக்கு வாய்க்கப் பெற்றால் , அவனுக்கு மூப்பு வராது என்பதாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 21, 2018 6:10 pm

ஔவையார் பலர் இருந்ததாக ஒரு செய்தி உண்டே! இது விஷயம் விரிவு படுத்தலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Nov 21, 2018 6:25 pm

சுட்ட பழமும் சுடாத பழமும்
=========================

ஒரே ஊரில் தொடர்ந்து தங்கி இருக்கும் இயல்பு ஒளவையாருக்குக் கிடையாது. அவர் பல ஊர்களுக்குச் சென்று தமது புலமைத் திறத்தால் அறக்கருத்துகளைப் பரப்பி வந்தார்.

ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது.

அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது. வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார்.

அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். நாவல் மர நிழலில் களைப்புடன் இருந்த ஒளவையாரை அவன் பார்த்தான்.

‘பாட்டீ....! நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்... நாவல் பழம் சாப்பிடுகிறீர்களா?’ என்று ஒளவையாரைப் பார்த்துக் கேட்டான்.

ஆடு, மாடு மேய்க்கும் அந்தச் சிறுவனை ஒளவையார் மிகவும் சாதாரணமாகக் கருதினார். எனவே, ‘சரி... அப்பா.... நாவல் பழங்களைப் பறித்துப் போடு!’ என்றார்.

ஒளவையாரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் ‘பாட்டீ.... உங்களுக்குச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டான்.

ஒளவையாருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நாவல் பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று எதுவும் கிடையாதே!’ என்று எண்ணினார். என்றாலும் இந்தச் சிறுவனிடம், சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் விளக்கம் கேட்பது தமது புலமைக்கு இழிவு என்று அவர் கருதினார்.

‘ சுடாத பழமாகவே நீ பறித்துப் போடப்பா.....’ என்று ஒளவையார் கூறினார். மரத்தில் இருந்த சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான்.

மண்ணில் கிடந்த நாவல் பழங்களை ஒளவையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார். அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது. அந்த மண்ணைத் துடைப்பதற்காக ஒளவையார் ‘ஃபூ..... ஃபூ’ என்று ஊதினார்.

ஒளவையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான்.

‘பாட்டி....! பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடுங்கள்!’ என்று கூறினான்.

அப்போதுதான் ஒளவையாருக்குச் ‘சுட்ட பழம் எது? சுடாத பழம் எது?’ என்பது புரிந்தது.

ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், தன்னை வென்று விட்டானே என்று வெட்கப்பட்டார்.

தனது வெட்கத்தை நினைத்து வருந்திய ஒளவையார் பின்வரும் பாடலைப் பாடினார்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்

கருங்காலிக் கட்டை மிகவும் உறுதியானது. அதை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி, வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும். அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன். எனவே இரண்டு இரவுகள் எனக்குத் தூக்கம் வராது என்று வருந்தினார்.

ஆடு, மாடு மேய்ப்பவனாக வேடம் தாங்கி அங்கே இருந்தவன் முருகன் ஆவான். ஒளவையாரின் மனவருத்தத்தைப் போக்க அவன் கருதினான். எனவே, அவன் தனது உண்மை வடிவுடன் ஒளவையாருக்குக் காட்சி அளித்தான்.

‘முருகன்தான் ஆடு, மாடு மேய்ப்பவன் போல் வேடமிட்டு வந்து தனது கர்வத்தைப் போக்கினான்’ என்பதை அறிந்த ஒளவையார் மனம் தெளிந்தார். முருகனை வணங்கினார்.


முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூஉங்
கற்றனம் என்று களியற்க - சிற்றுளியால்
கல்லுந் தகருங் தகரா கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தி னால் .

என்ற நன்னெறிப் பாடலும் ஈண்டு நோக்கத்தக்கது .

எல்லாம் தெரிந்தவர்கள் உலகத்தில் கிடையாது . நமக்கு எல்லாம் தெரியும் என்று கர்வம் கொள்ளக் கூடாது . பெரிய சம்மட்டியால் உடைக்கமுடியாத பாறையை , சிறிய உளி பிளந்துவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Nov 21, 2018 6:41 pm

T.N.Balasubramanian wrote:ஔவையார் பலர் இருந்ததாக ஒரு செய்தி உண்டே! இது விஷயம் விரிவு படுத்தலாம்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஐயா !

உமது கேள்விக்கு விரிவான விடை தருகிறேன் . பொறுத்தருள்க !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக