புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
[You must be registered and logged in to see this image.]
முகவுரை
திருவாளர் செல்வன் சந்திரசூடனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்று அறிந்த போது, அவனுடைய நண்பர்கள் பலரும் அடைந்த வியப்புக்கு அளவில்லை. எனெனில், சந்திரசூடன் நெடுங்காலமாக, "கலியாணம் என்ற பேச்சை என் காதில் போட வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வளவு எளிதில் அவனுடைய நண்பர்கள் அவனை விட்டுவிடுகிறதாக இல்லை. அவன் கேட்க விரும்பவில்லை என்று சொன்ன வார்த்தையையே ஓயாமல் அவன் காது செவிடுபடும்படி டமாரம் அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். "இப்படி எத்தனையோ விசுவாமித்திரர்களைப் பார்த்து விட்டோ ம்!" என்று அவனைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள். இத்தகைய நண்பர் கூட்டத்தில் சந்திரசூடன் அகப்பட்டுக் கொள்ளும் போது, "ஒருவேளை நான் புத்தி தடுமாறிக் கலியாணம் செய்து கொண்டாலும் இந்திய தேசத்தின் ஜனத் தொகையை மட்டும் பெருக்க மாட்டேன்" என்று சில சமயம் சொல்வதுண்டு, சொல்வதுடன் நின்று விடாமல் அவன் கர்ப்பத்தடை முறைகளைப் பற்றிய விஞ்ஞான ரீதியான இலக்கியங்கள், அதே விஷயத்தைச் சுற்றி வளைக்காமல் அப்பட்டமாகச் சொல்லும் நூல்கள், இவற்றையெல்லாம் வாங்கிப் படித்தும் வந்தான்.
அத்தகைய சந்திரசூடன் இப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறான், அதிலும் ஏற்கெனவே குழந்தை உள்ள ஒரு பெண்மணியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான் என்றால் அவனை அறிந்தவர்கள் ஆச்சரியக் கடலில் மூழ்கித் தத்தளிப்பது இயல்பேயல்லவா?
அத்தகைய பரிகாசத்துக்கிடமான காரியத்தை அவன் செய்ய முன் வந்ததன் காரணத்தை அறிந்து கொள்ள அவனுடைய நண்பர்கள் ஆசைப்பட்டதிலும் அவ்வளவு வியப்பில்லை அல்லவா?
திருமணக் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அவனைக் கண்டுபிடித்து நேருக்கு நேர் கேட்டுவிடுவதென்று பலரும் துடியாயிருந்தார்கள். அவர்களில் நானும் ஒருவன். கடைசியாக அவனை ஒரு நாள் கையும் மெய்யுமாகப் பிடித்து, "அப்பனே! இந்த விபத்தில் எப்படி அகப்பட்டுக் கொண்டாய்? உண்மையைச் சொல்லிவிடு!" என்றேன். "சொல்லாவிட்டால் நீர் விடப் போகிறீரா? ஏதாவது கதையும் கற்பனையுமாக சேர்த்து எழுதித் தள்ளிவிடுவீர், அதைக் காட்டிலும் நானே சொல்லிவிடுவது நல்லது" என்றான்.
"அப்படியானால், கதை எழுதுவதற்குத் தகுதியானது என்று ஒப்புக்கொள்கிறாயா?" என்று கேட்டேன்.
"எல்லாம் கதையினால் வந்த விபத்துதான்! முழுக் கதை கூட அல்ல; பாதிக் கதையினால் வந்த ஆபத்து. 'தீபம்' என்னும் மாதப் பத்திரிகையில் பாதிக் கதைப் போட்டி ஒன்று நடத்தினார்களே? ஞாபகம் இருக்கிறதா?" என்றான் சந்திரசூடன்.
ஆம்; அது என் ஞாபகத்தில் இருந்தது.
'தீபம்' பத்திரிகையில் அத்தகையப் போட்டி ஒன்று சில காலத்துக்கு முன்பு நடத்தினார்கள். ஓர் இதழில் 'விமான விபத்து' என்ற தலைப்புடன் ஒரு பாதிக் கதையை வெளியிட்டார்கள். அதைப் பூர்த்தி செய்யும்படி வாசக நேயர்களைக் கேட்டு கொண்டிருந்தார்கள். இந்தப் போட்டிக்கு வரும் பிற்பகுதிக் கதைகளில் சிறந்ததைப் பத்திரிகையில் வெளியிடுவதுடன் அதற்கு நூறு ரூபாய் சன்மானம் கொடுப்பதாகவும் அறிவித்திருந்தார்கள்.
இந்த அறிவிப்பு வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பரிசு பெற்ற பிற்பகுதிக் கதையும் மேற்படி பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
கதையை அச்சமயம் மேலெழுந்தவாரியாகப் படித்திருந்தேன். ஓர் ஆகாச விமானம் பிரயாணப்பட்டுச் சென்றது; ஆனால் குறித்த இடத்துக்குப் போய்ச் சேர வில்லை. பிரயாணிகளுடன் மாயமாய் மறைந்துவிட்டது. எங்கேயோ மேற்குமலைத் தொடரில் மனித சஞ்சாரத்துக்கு அப்பாற்பட்ட இடத்தில் விழுந்து எரிந்து போயிருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டது. இதுதான் கதையின் முக்கிய சம்பவம். இம்மாதிரி ஒரு துர்ச்சம்பவம் உண்மையாகவே சில காலத்துக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது.
இதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டு, "ஆமாம்; அந்தப் பாதிக் கதைப் போட்டிக்கும் உன் கலியாணத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.
சந்திரசூடன் அந்தச் சம்பவம் இன்னதென்பதை விவரமாகச் சொல்லித் தீர்த்தான். சொல்லாமற் போனால் யார் விடுகிறார்கள்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பாண்டிய நாட்டையும் மலையாள தேசத்தையும் பிரித்து நிற்கும் நீண்ட மேற்கு மலைத் தொடர் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு பெயருடன் விளங்குகிறது. இந்த மலைத்தொடரை எந்த இடத்திலே பார்த்தாலும் அதன் இயற்கை வனப்பு அற்புதமாக இருக்கும். எனினும், நாகலாபுரம் மலைச்சாரலின் சௌந்தரியத்துக்கு ஒப்புவமை இல்லை என்று அந்தப் பகுதியைப் பார்த்தவர்கள் சொல்வார்கள். அங்கே இயற்கை அரசி பசும் பொன் சிங்காதனத்தில், நீலப் பட்டாடை உடுத்தி, நவரத்தின மாலைகளை அணிந்து, மணிமகுடம் தரித்து, செம்பவள இதழ்களின் வழியாக முத்து நகை புரிந்து, கருங்குவளைக் கண்களில் கருணை ஒளி வீசியவாறு வீற்றிருக்கிறாள் என்று கவிதா ரஸிகர்கள் வர்ணனை செய்வார்கள். மலையும், காடும், அருவியும், பொய்கையும், பல நிற மலர்களும் அப்படி ஒரே வர்ண ஜாலமாகக் காட்சி அளிக்கும்.
அத்தகைய நாகலாபுரம் மலைச் சாரலையொட்டி எத்தனையோ கிராமங்கள் உண்டு. அவற்றில் புன்னைவனம் என்னும் கிராமம் பிரசித்தமானது. அது கிராமம்தான் என்றாலும், பட்டணவாசத்தின் வசதிகள் எல்லாம் அங்கு உண்டு. புன்னைவனத்துக்கும் கொஞ்ச தூரத்தில் பெரிய நீர்த்தேக்கம் ஒன்று இருக்கிறது. அதிலிருந்து விழும் அருவியைக் கொண்டு மின்சார சக்தி உற்பத்தி செய்கிறார்கள். எப்போது மின்சார வசதி இருக்கிறதோ, அப்போது பட்டண வாசத்தின் சகல சௌகரியங்களையும் ஏற்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?
வருஷத்தில் ஒன்பது மாதம் புன்னை வனம் கிராமமாகத் தோற்றமளிக்கும். சாரல் காலத்தில் அதாவது ஜுன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் அது நகரமாக மாறி விடும். (ஜன நெருக்கத்தை அவ்வளவாக விரும்பாத 'நாஸுக்குக்காரர்கள்' அந்த மூன்று மாதமும் அது 'நரக'மாக மாறிவிடும் என்பார்கள்.) அந்த மூன்று மாதங்களிலும் தென்னிந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் ஜனங்கள் தேக சுகத்தையும் மன உல்லாசத்தையும் தேடிப் புன்னைவனத்துக்கு வருவார்கள்.
சென்ற வருஷத்தில் சந்திரசூடனுக்கு அம்மாதிரி தேக சுகத்தையும் மன அமைதியையும் தேடி எங்கேனும் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உதகமண்டலம், கோடைக்கானல், குற்றாலம் முதலிய இடங்களைப் பற்றி யோசித்து, பல காரணங்களினால் அவற்றை ஒதுக்கி விட்டு, புன்னைவனம் போவதென்று முடிவு செய்தான். அம்மாதிரி அவன் முடிவு செய்ததற்குச் சிற்சில முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று புன்னைவனத்தின் இயற்கை எழிலைப் பற்றி ஒரு சிநேகிதன் மூலமாக அவன் கேள்விப்பட்டிருந்தது. இரண்டாவது காரணம், அங்குள்ள ஓட்டல்களில் நல்ல சாப்பாடும் கிடைக்கும் என்பது. மூன்றாவது காரணம் சில நாளைக்கு முன்னால் "புன்னைவனத்துப் புலி" என்ற தலைப்புடன் தினப்பத்திரிகைகளில் வெளியான செய்திகள்.
நாகலாபுரம் மலையின் உட்பகுதிகளில் துஷ்ட மிருகங்கள் எப்போதுமே உண்டு. ஆனால் மலையையொட்டி கீழேயுள்ள கிராமங்களுக்கு அவை வருவது அபூர்வம். அப்படி அபூர்வமாக ஒரு புலி புன்னைவனத்தில் ஒரு நாள் காணப்பட்டதாகவும், பின்னர் அடிக்கடி அங்குமிங்கும் தோன்றி ஆடுமாடுகளைக் கொன்று வருவதாகவும், அதைச் சுட்டுக் கொல்லுவதற்குச் செய்யப்பட்ட முயற்சிகள் இதுவரை பலிக்கவில்லையென்று தினப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. சந்திரசூடன் கலாசாலை மாணாக்கனாயிருந்த போது இராணுவப் பயிற்சிப் படையில் சேர்ந்து துப்பாக்கியை உபயோகிக்க கற்றுக் கொண்டிருந்தான். அப்படிப் பயின்ற வித்தையைக் காரியத்தில் பயன்படுத்துவதற்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக எண்ணினான். புன்னைவனத்துப் புலி தன் துப்பாக்கிக்கு இரையாவதற்காகவே மலை மேலிருந்து கீழே இறங்கி வந்திருக்கிறது என்று முடிவு செய்து கொண்டு கிளம்பினான்.
'நாகலாபுரம் சாலை' என்னும் ரயில் நிலையத்தில் இறங்கி முப்பது மைல் தூரம் பஸ்ஸில் பிரயாணம் செய்து புன்னைவனத்தை அடைந்தான். அந்த ஊர் அவனுக்கு நிரம்பப் பிடித்திருந்தது. அதைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்ததையெல்லாம் விட அமைதியும் அழகும் இனிமையும் எழிலும் பொருந்தியிருந்தது. இனிய புனல் அருவி அங்கே தவழ்ந்து விளையாடியது. இன்ப மலைச்சாரல்களில் தென்றல் உலாவியது. கனி குலவும் சோலைகளில் கரு வண்டு பண் இசைத்தது. புன்னை மரங்களின் கீழ்ப் பூப் படுக்கை விரித்திருந்தது. அமுத நீர்ப் பொய்கைகளில் குமுதமலர் செழித்திருந்தது. அவன் தங்கியிருந்த ஹோட்டலில் சாப்பாடும் முதல் தரமாயிருந்தது. சென்னையிலுள்ள பாங்கிகாரர்கள் மட்டும் கொஞ்சம் தாராள புத்தியுடன் தான் கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தால், புன்னை வனத்திலேயே தன் வாழ்நாளைக் கழித்து விடலாம் என்று சந்திரசூடன் எண்ணமிட்டான்.
அத்தகைய நாகலாபுரம் மலைச் சாரலையொட்டி எத்தனையோ கிராமங்கள் உண்டு. அவற்றில் புன்னைவனம் என்னும் கிராமம் பிரசித்தமானது. அது கிராமம்தான் என்றாலும், பட்டணவாசத்தின் வசதிகள் எல்லாம் அங்கு உண்டு. புன்னைவனத்துக்கும் கொஞ்ச தூரத்தில் பெரிய நீர்த்தேக்கம் ஒன்று இருக்கிறது. அதிலிருந்து விழும் அருவியைக் கொண்டு மின்சார சக்தி உற்பத்தி செய்கிறார்கள். எப்போது மின்சார வசதி இருக்கிறதோ, அப்போது பட்டண வாசத்தின் சகல சௌகரியங்களையும் ஏற்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?
வருஷத்தில் ஒன்பது மாதம் புன்னை வனம் கிராமமாகத் தோற்றமளிக்கும். சாரல் காலத்தில் அதாவது ஜுன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் அது நகரமாக மாறி விடும். (ஜன நெருக்கத்தை அவ்வளவாக விரும்பாத 'நாஸுக்குக்காரர்கள்' அந்த மூன்று மாதமும் அது 'நரக'மாக மாறிவிடும் என்பார்கள்.) அந்த மூன்று மாதங்களிலும் தென்னிந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் ஜனங்கள் தேக சுகத்தையும் மன உல்லாசத்தையும் தேடிப் புன்னைவனத்துக்கு வருவார்கள்.
சென்ற வருஷத்தில் சந்திரசூடனுக்கு அம்மாதிரி தேக சுகத்தையும் மன அமைதியையும் தேடி எங்கேனும் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உதகமண்டலம், கோடைக்கானல், குற்றாலம் முதலிய இடங்களைப் பற்றி யோசித்து, பல காரணங்களினால் அவற்றை ஒதுக்கி விட்டு, புன்னைவனம் போவதென்று முடிவு செய்தான். அம்மாதிரி அவன் முடிவு செய்ததற்குச் சிற்சில முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று புன்னைவனத்தின் இயற்கை எழிலைப் பற்றி ஒரு சிநேகிதன் மூலமாக அவன் கேள்விப்பட்டிருந்தது. இரண்டாவது காரணம், அங்குள்ள ஓட்டல்களில் நல்ல சாப்பாடும் கிடைக்கும் என்பது. மூன்றாவது காரணம் சில நாளைக்கு முன்னால் "புன்னைவனத்துப் புலி" என்ற தலைப்புடன் தினப்பத்திரிகைகளில் வெளியான செய்திகள்.
நாகலாபுரம் மலையின் உட்பகுதிகளில் துஷ்ட மிருகங்கள் எப்போதுமே உண்டு. ஆனால் மலையையொட்டி கீழேயுள்ள கிராமங்களுக்கு அவை வருவது அபூர்வம். அப்படி அபூர்வமாக ஒரு புலி புன்னைவனத்தில் ஒரு நாள் காணப்பட்டதாகவும், பின்னர் அடிக்கடி அங்குமிங்கும் தோன்றி ஆடுமாடுகளைக் கொன்று வருவதாகவும், அதைச் சுட்டுக் கொல்லுவதற்குச் செய்யப்பட்ட முயற்சிகள் இதுவரை பலிக்கவில்லையென்று தினப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. சந்திரசூடன் கலாசாலை மாணாக்கனாயிருந்த போது இராணுவப் பயிற்சிப் படையில் சேர்ந்து துப்பாக்கியை உபயோகிக்க கற்றுக் கொண்டிருந்தான். அப்படிப் பயின்ற வித்தையைக் காரியத்தில் பயன்படுத்துவதற்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக எண்ணினான். புன்னைவனத்துப் புலி தன் துப்பாக்கிக்கு இரையாவதற்காகவே மலை மேலிருந்து கீழே இறங்கி வந்திருக்கிறது என்று முடிவு செய்து கொண்டு கிளம்பினான்.
'நாகலாபுரம் சாலை' என்னும் ரயில் நிலையத்தில் இறங்கி முப்பது மைல் தூரம் பஸ்ஸில் பிரயாணம் செய்து புன்னைவனத்தை அடைந்தான். அந்த ஊர் அவனுக்கு நிரம்பப் பிடித்திருந்தது. அதைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்ததையெல்லாம் விட அமைதியும் அழகும் இனிமையும் எழிலும் பொருந்தியிருந்தது. இனிய புனல் அருவி அங்கே தவழ்ந்து விளையாடியது. இன்ப மலைச்சாரல்களில் தென்றல் உலாவியது. கனி குலவும் சோலைகளில் கரு வண்டு பண் இசைத்தது. புன்னை மரங்களின் கீழ்ப் பூப் படுக்கை விரித்திருந்தது. அமுத நீர்ப் பொய்கைகளில் குமுதமலர் செழித்திருந்தது. அவன் தங்கியிருந்த ஹோட்டலில் சாப்பாடும் முதல் தரமாயிருந்தது. சென்னையிலுள்ள பாங்கிகாரர்கள் மட்டும் கொஞ்சம் தாராள புத்தியுடன் தான் கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தால், புன்னை வனத்திலேயே தன் வாழ்நாளைக் கழித்து விடலாம் என்று சந்திரசூடன் எண்ணமிட்டான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இரண்டு தினங்கள் இவ்விதமாக ஊரைச் சுற்றிப் பார்ப்பதிலும் கற்பனைக் கனவுகள் காண்பதிலும் கழிந்தன. மூன்றாம் நாள் புன்னைவனம் தபால் ஆபீஸுக்குச் சென்றான். கையில் கொண்டு வந்திருந்த பணம் துரிதமாகக் குறைந்து கொண்டு வந்தது. மேலும் பணம் தருவித்துக் கொள்ளச் சென்னைக்குக் கடிதம் எழுத வேண்டும். அதோடு, தனக்கு ஏதேனும் தபால் வந்திருக்கிறதா என்றும் விசாரிக்க வேண்டும். தபால்களைக் காட்டிலும் அதிக ஆவலுடன் 'தீபம்' பத்திரிகையின் அந்த மாதத்து இதழை அவன் எதிர்பார்த்தான். 'விமான விபத்து' என்னும் பாதிக் கதையின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்வதில் அவனுக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தது. உண்மை என்னவென்றால், அந்தப் பாதிக் கதைப் போட்டியில் அவனும் கலந்து கொண்டிருந்தான், தான் எழுதிய பாதிக் கதையை ஒரு வேளை பத்திரிகைக்காரர்கள் ஏற்றுக் கொண்டிருக்கலாம் அல்லவா? அப்படியானால் பணத்துக்கு பணம் ஆயிற்று, புகழுக்குப் புகழ் ஆயிற்று. இல்லையென்றால், தன்னைவிட நன்றாக அந்தக் கதையைப் பூர்த்தி செய்தவர் யார்? எப்படி பூர்த்தி செய்திருக்கிறார்?' - இதையெல்லாம் அறிந்து கொள்வதற்கு அவன் மிக்க ஆர்வம் கொண்டிருந்தான்.
தபால் ஆபீஸுக்குச் சந்திரசூடன் போய்ச் சேர்வதற்கும் தபால் கட்டு வந்து சேர்வதற்கும் சரியாயிருந்தது. அவனைப் போல் இன்னும் இரண்டொரு புது மனிதர்களும் அங்கே வந்து காத்திருந்தார்கள். சந்திரசூடன் போஸ்டு மாஸ்டரிடம் தன் பெயரைச் சொல்லி, "ஏதாவது தபால் இருக்கிறதா?" என்று கேட்டான். போஸ்ட் மாஸ்டர் தேடிப் பார்த்து ஒரு தபாலையும், ஒரு சஞ்சிகையையும் எடுத்துக் கொடுத்தார். சஞ்சிகை 'தீபம்' பத்திரிகையின் அந்த மாத இதழ் தான். சந்திரசூடன் இருந்த பரபரப்பில், தபாலைக் கூடக் கவனியாமல் சஞ்சிகையைப் பிரித்துப் புரட்டினான். அவன் எதிர்பார்த்தபடியே 'விமான விபத்து' கதையின் இரண்டாம் பகுதி அதில் வெளியாகியிருந்தது. அவன் எழுதியது அல்ல என்று பார்த்தவுடன் தெரிந்து போய் விட்டது. பரிசு பெற்ற கதைப் பகுதி அவ்வளவு என்ன பிரமாதமாக அமைந்திருக்க முடியும் என்ற எண்ணத்துடன், நின்றபடியே அதைப் படிக்கத் தொடங்கினான்.
ஏறக்குறையப் படித்து முடிக்கும் சமயத்தில் ஒரு பெண்மணி அங்கே வந்தாள். தனக்கு ஏதாவது தபால் உண்டா என்று விசாரித்தாள். இல்லை என்று அறிந்ததும் அவள் பெரிதும் ஏமாற்றமடைந்ததாகத் தோன்றியது.
"தயவு செய்து நன்றாகப் பாருங்கள், ஸார்! 'தீபம்' பத்திரிகை என் பெயருக்கு ஒன்று வந்திருக்க வேண்டுமே?" என்று கெஞ்சும் குரலில் கூறினாள்.
"இல்லை, அம்மா! ஒரே ஒரு 'தீபம்' தான் வந்திருந்தது. அதில் இவருடைய விலாசம் எழுதியிருந்தது. கொடுத்துவிட்டேன்!" என்று போஸ்டு மாஸ்டர் சந்திரசூடனைச் சுட்டிக் காட்டினார்.
உடனே அந்தப் பெண்ணின் பார்வை சந்திரசூடன் மீது சென்றது. அவன் கையில் விரித்து வைத்திருந்த பத்திரிகையை அசூயை கலந்த ஆர்வத்துடன் நோக்கினாள்.
தபால் ஆபீஸுக்குச் சந்திரசூடன் போய்ச் சேர்வதற்கும் தபால் கட்டு வந்து சேர்வதற்கும் சரியாயிருந்தது. அவனைப் போல் இன்னும் இரண்டொரு புது மனிதர்களும் அங்கே வந்து காத்திருந்தார்கள். சந்திரசூடன் போஸ்டு மாஸ்டரிடம் தன் பெயரைச் சொல்லி, "ஏதாவது தபால் இருக்கிறதா?" என்று கேட்டான். போஸ்ட் மாஸ்டர் தேடிப் பார்த்து ஒரு தபாலையும், ஒரு சஞ்சிகையையும் எடுத்துக் கொடுத்தார். சஞ்சிகை 'தீபம்' பத்திரிகையின் அந்த மாத இதழ் தான். சந்திரசூடன் இருந்த பரபரப்பில், தபாலைக் கூடக் கவனியாமல் சஞ்சிகையைப் பிரித்துப் புரட்டினான். அவன் எதிர்பார்த்தபடியே 'விமான விபத்து' கதையின் இரண்டாம் பகுதி அதில் வெளியாகியிருந்தது. அவன் எழுதியது அல்ல என்று பார்த்தவுடன் தெரிந்து போய் விட்டது. பரிசு பெற்ற கதைப் பகுதி அவ்வளவு என்ன பிரமாதமாக அமைந்திருக்க முடியும் என்ற எண்ணத்துடன், நின்றபடியே அதைப் படிக்கத் தொடங்கினான்.
ஏறக்குறையப் படித்து முடிக்கும் சமயத்தில் ஒரு பெண்மணி அங்கே வந்தாள். தனக்கு ஏதாவது தபால் உண்டா என்று விசாரித்தாள். இல்லை என்று அறிந்ததும் அவள் பெரிதும் ஏமாற்றமடைந்ததாகத் தோன்றியது.
"தயவு செய்து நன்றாகப் பாருங்கள், ஸார்! 'தீபம்' பத்திரிகை என் பெயருக்கு ஒன்று வந்திருக்க வேண்டுமே?" என்று கெஞ்சும் குரலில் கூறினாள்.
"இல்லை, அம்மா! ஒரே ஒரு 'தீபம்' தான் வந்திருந்தது. அதில் இவருடைய விலாசம் எழுதியிருந்தது. கொடுத்துவிட்டேன்!" என்று போஸ்டு மாஸ்டர் சந்திரசூடனைச் சுட்டிக் காட்டினார்.
உடனே அந்தப் பெண்ணின் பார்வை சந்திரசூடன் மீது சென்றது. அவன் கையில் விரித்து வைத்திருந்த பத்திரிகையை அசூயை கலந்த ஆர்வத்துடன் நோக்கினாள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சந்திரசூடனுடைய கவனத்தில் ஒரு பகுதி, பத்திரிகைக் கதையில் சென்றிருந்தது. மற்றொரு பகுதி அந்தப் பெண்மணி தபாலாபீஸுக்குள் வந்ததிலிருந்து நிகழ்ந்தவைகளை மனத்தில் வாங்கிக் கொண்டிருந்தது. அவள் தன் கையிலிருந்த பத்திரிகையை ஆசையுடன் பார்க்கிறாள் என்று அறிந்ததும், உடனே படிப்பதை நிறுத்தி விட்டு, "தங்களுக்குத் 'தீபம்' வேண்டுமானால் இதையே எடுத்துக் கொள்ளலாமே?" என்று கூறிப் புன்னகை புரிந்தான்.
அந்தப் பெண், "ஒரு சில வினாடி பார்க்கவேணும். கொடுத்தால் இங்கேயே பார்த்து விட்டுத் தந்து விடுகிறேன்" என்றாள்.
"அவ்வளவு அவசரம் ஒன்றுமில்லை. தாங்கள் வீட்டுக்கு எடுத்துப் போய்ச் சாவகாசமாய்ப் படிக்கலாம். தங்கள் ஜாகை எங்கே என்று சொன்னால் நானே வந்து திரும்ப வாங்கிக் கொள்கிறேன்" என்றான் சந்திரசூடன்.
அந்தப் பெண் தபால் ஆபீஸின் பலகணி வழியாகச் சுட்டிக் காட்டி, "அதோ, அங்கே தான் என் வீடு! போஸ்டு மாஸ்டரின் வீட்டுக்கு அடுத்த வீடு!...அல்லது தங்கள் இருப்பிடத்தைச் சொன்னால் பத்திரிகையை அனுப்பி விடுகிறேன்" என்றாள்.
"வேண்டாம், வேண்டாம்! அவ்வளவு சிரமம் தங்களுக்கு வேண்டாம். நானே வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்றான் சந்திரசூடன்.
"மிக்க வந்தனம். காலை பத்து மணி வரையில் வீட்டில் இருப்பேன். பிறகு பள்ளிக்கூடம் போய் விட்டு மாலை ஐந்து மணிக்குத் திரும்பி வருவேன்" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் பத்திரிகையை எடுத்துக் கொண்டு சென்றாள்.
சந்திரசூடன் அவள் போவதைப் பலகணி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். நடக்கும் போதே அவள் பத்திரிகை படித்துக் கொண்டு போனதைக் கவனித்தான். ஒரு தடவை கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அந்தப் பெண்ணின் கவனத்தை அவ்வளவு தூரம் கவரக் கூடிய விஷயம் 'தீபம்' பத்திரிகையில் என்ன தான் இருக்கும் என்று அதிசயித்தான்.
இதற்குள் தபால் வாங்குவதற்காக அங்கு வந்திருந்த மற்ற இரண்டொருவரும் போய் விட்டார்கள்.
சந்திரசூடன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு போஸ்டு மாஸ்டரைப் பார்த்து, "பெண்களுக்குப் படிப்பில் ருசி உண்டாகி விட்டால் ஒரே பைத்தியமாகப் பிடித்துக் கொள்கிறது. இந்தப் பெண்ணுக்குத் 'தீபம்' பத்திரிகையின் மீது எவ்வளவு ஆர்வம்? அப்படியொன்றும் அதில் பிரமாதமான விஷயமும் இல்லை" என்றான்.
"மிஸ். மனோன்மணிக்குப் படிப்பில் ஆர்வம் அதிகந்தான்! அதிலும் இந்த மாதத்துத் 'தீப'த்தில் அவள் அதிக ஆர்வம் கொள்வதற்கு முக்கிய காரணம் இருக்கிறது" என்றார் போஸ்டு மாஸ்டர்.
"அப்படியா? அந்தக் காரணம் என்னவோ?"
"அதில் ஒரு பாதிக் கதைப் போட்டி வைத்திருந்தார்கள் அல்லவா? அதற்கு இந்தப் பெண்ணும் எழுதியிருந்தாள் போலிருக்கிறது."
"ஓஹோ! அதுதானே நானும் பார்த்தேன்...! மிஸ். மனோன்மணி பிரசித்தமான எழுத்தாளியோ? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாள்? ஏதோ பள்ளிக் கூடம் போவதாகச் சொன்னாளே!"
அந்தப் பெண், "ஒரு சில வினாடி பார்க்கவேணும். கொடுத்தால் இங்கேயே பார்த்து விட்டுத் தந்து விடுகிறேன்" என்றாள்.
"அவ்வளவு அவசரம் ஒன்றுமில்லை. தாங்கள் வீட்டுக்கு எடுத்துப் போய்ச் சாவகாசமாய்ப் படிக்கலாம். தங்கள் ஜாகை எங்கே என்று சொன்னால் நானே வந்து திரும்ப வாங்கிக் கொள்கிறேன்" என்றான் சந்திரசூடன்.
அந்தப் பெண் தபால் ஆபீஸின் பலகணி வழியாகச் சுட்டிக் காட்டி, "அதோ, அங்கே தான் என் வீடு! போஸ்டு மாஸ்டரின் வீட்டுக்கு அடுத்த வீடு!...அல்லது தங்கள் இருப்பிடத்தைச் சொன்னால் பத்திரிகையை அனுப்பி விடுகிறேன்" என்றாள்.
"வேண்டாம், வேண்டாம்! அவ்வளவு சிரமம் தங்களுக்கு வேண்டாம். நானே வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்றான் சந்திரசூடன்.
"மிக்க வந்தனம். காலை பத்து மணி வரையில் வீட்டில் இருப்பேன். பிறகு பள்ளிக்கூடம் போய் விட்டு மாலை ஐந்து மணிக்குத் திரும்பி வருவேன்" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் பத்திரிகையை எடுத்துக் கொண்டு சென்றாள்.
சந்திரசூடன் அவள் போவதைப் பலகணி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். நடக்கும் போதே அவள் பத்திரிகை படித்துக் கொண்டு போனதைக் கவனித்தான். ஒரு தடவை கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அந்தப் பெண்ணின் கவனத்தை அவ்வளவு தூரம் கவரக் கூடிய விஷயம் 'தீபம்' பத்திரிகையில் என்ன தான் இருக்கும் என்று அதிசயித்தான்.
இதற்குள் தபால் வாங்குவதற்காக அங்கு வந்திருந்த மற்ற இரண்டொருவரும் போய் விட்டார்கள்.
சந்திரசூடன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு போஸ்டு மாஸ்டரைப் பார்த்து, "பெண்களுக்குப் படிப்பில் ருசி உண்டாகி விட்டால் ஒரே பைத்தியமாகப் பிடித்துக் கொள்கிறது. இந்தப் பெண்ணுக்குத் 'தீபம்' பத்திரிகையின் மீது எவ்வளவு ஆர்வம்? அப்படியொன்றும் அதில் பிரமாதமான விஷயமும் இல்லை" என்றான்.
"மிஸ். மனோன்மணிக்குப் படிப்பில் ஆர்வம் அதிகந்தான்! அதிலும் இந்த மாதத்துத் 'தீப'த்தில் அவள் அதிக ஆர்வம் கொள்வதற்கு முக்கிய காரணம் இருக்கிறது" என்றார் போஸ்டு மாஸ்டர்.
"அப்படியா? அந்தக் காரணம் என்னவோ?"
"அதில் ஒரு பாதிக் கதைப் போட்டி வைத்திருந்தார்கள் அல்லவா? அதற்கு இந்தப் பெண்ணும் எழுதியிருந்தாள் போலிருக்கிறது."
"ஓஹோ! அதுதானே நானும் பார்த்தேன்...! மிஸ். மனோன்மணி பிரசித்தமான எழுத்தாளியோ? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாள்? ஏதோ பள்ளிக் கூடம் போவதாகச் சொன்னாளே!"
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"இந்த ஊரில் உள்ள பெண் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயினியாயிருக்கிறாள். சம்பளம் சொற்பம். வீட்டிலே கிழவர்கள் இருவர். ஒரு நொண்டிக் குழந்தை. இவளுடைய சம்பாத்தியத்திலேதான் காலட்சேபம் நடக்க வேணும். தபால் இலாகா, கல்வி இலாகா - இரண்டுந்தான் தெரிந்த விஷயம் ஆயிற்றே? ஊருக்கு இளைத்தவர்கள் நாங்கள். ஒழிந்த வேளையில் பத்திரிகைகளுக்கு எழுதினால் ஏதாவது கிடைக்காதா என்று இந்தப் பெண்ணுக்கு எண்ணம். 'தீபம்' பாதிக் கதைப் போட்டியில் மனோன்மணிக்குப் பரிசு வந்திருக்கிறதோ என்னமோ தெரியவில்லை. இதிலாவது அவள் ஏமாற்றமடையாமலிருந்தால் சரி. அந்தப் பெண் சிரித்துச் சந்தோஷமாயிருந்ததை நான் பார்த்ததேயில்லை. ஆறு மாதமாகப் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன்."
"ஐயோ பாவம்! வாழ்க்கையில் துன்பப்பட்டவள் போலிருக்கிறது. என்ன கஷ்டமோ, என்னமோ?"
"அதுதான் பெரிய மர்மமாயிருக்கிறது. 'மிஸ்' என்று சொல்லிக் கொள்கிறாள். வீட்டில் நாலு வயது நொண்டிக் குழந்தை ஒன்று வளர்கிறது. இவளை 'அம்மா' என்று அழைக்கிறது. புருஷனால் நிராகரிக்கப்பட்டவள் என்று ஒரு வதந்தி. 'விதவை' என்றும் சிலர் சொல்கிறார்கள். வேறு ஏதாவது கண்றாவியாயிருந்தாலும் இருக்கலாம். யார் கண்டது? உலகம் வரவரக் கெட்டுப் போய் வருகிறது. நாகரிகம் முற்றிக் கொண்டு வருகிறது. பண்ணையார் சங்கர சேதுராயருடைய சுவீகாரப் பையன் ஒருவன் இந்தப் பெண்ணை இப்போது சுற்றத் தொடங்கியிருக்கிறான். அவனைப் பார்த்தாலே 'கில்லாடி' என்று தெரியும். இந்த ஊருக்கு நீங்கள் புதியவர் தானே!"
"ஆம் ஐயா!"
"புன்னைவனத்தின் அழகு வேரு எந்த ஊருக்கும் வராது. ஆனால் கொஞ்சம் பொல்லாத ஊர். ஜாக்கிரதையாக இருக்க வேணும். போததற்குப் புலி ஒன்று வந்து கழுத்தை அறுக்கிறது!"
"நான் கூட பத்திரிகையில் படித்தேன். அந்தப் புலியை யாரும் இன்னும் சுட்டுக் கொல்லவில்லையா?"
"அது ரொம்பக் கெட்டிக்காரப் புலியாயிருக்கிறது. துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வேட்டையாடுகிறேன் என்று வருகிறவர்களின் கண்ணில் மட்டும் அது அகப்படுவதேயில்லை!"
"அப்படி ரொம்பப் பேர் வந்திருக்கிறார்களோ?"
"அதோ பாருங்கள் ஒரு வேட்டைக்காரர் போகிறார்! பண்ணையாரின் சுவீகாரப் புத்திரன் என்று சொன்னேனே, அவர் தான் இவர்! வெறுமனே புத்திரன் என்று சொன்னால் போதாது, 'புத்திர சிகாமணி' என்று சொல்ல வேண்டும்!" என்றார் போஸ்டு மாஸ்டர்.
"ஐயோ பாவம்! வாழ்க்கையில் துன்பப்பட்டவள் போலிருக்கிறது. என்ன கஷ்டமோ, என்னமோ?"
"அதுதான் பெரிய மர்மமாயிருக்கிறது. 'மிஸ்' என்று சொல்லிக் கொள்கிறாள். வீட்டில் நாலு வயது நொண்டிக் குழந்தை ஒன்று வளர்கிறது. இவளை 'அம்மா' என்று அழைக்கிறது. புருஷனால் நிராகரிக்கப்பட்டவள் என்று ஒரு வதந்தி. 'விதவை' என்றும் சிலர் சொல்கிறார்கள். வேறு ஏதாவது கண்றாவியாயிருந்தாலும் இருக்கலாம். யார் கண்டது? உலகம் வரவரக் கெட்டுப் போய் வருகிறது. நாகரிகம் முற்றிக் கொண்டு வருகிறது. பண்ணையார் சங்கர சேதுராயருடைய சுவீகாரப் பையன் ஒருவன் இந்தப் பெண்ணை இப்போது சுற்றத் தொடங்கியிருக்கிறான். அவனைப் பார்த்தாலே 'கில்லாடி' என்று தெரியும். இந்த ஊருக்கு நீங்கள் புதியவர் தானே!"
"ஆம் ஐயா!"
"புன்னைவனத்தின் அழகு வேரு எந்த ஊருக்கும் வராது. ஆனால் கொஞ்சம் பொல்லாத ஊர். ஜாக்கிரதையாக இருக்க வேணும். போததற்குப் புலி ஒன்று வந்து கழுத்தை அறுக்கிறது!"
"நான் கூட பத்திரிகையில் படித்தேன். அந்தப் புலியை யாரும் இன்னும் சுட்டுக் கொல்லவில்லையா?"
"அது ரொம்பக் கெட்டிக்காரப் புலியாயிருக்கிறது. துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வேட்டையாடுகிறேன் என்று வருகிறவர்களின் கண்ணில் மட்டும் அது அகப்படுவதேயில்லை!"
"அப்படி ரொம்பப் பேர் வந்திருக்கிறார்களோ?"
"அதோ பாருங்கள் ஒரு வேட்டைக்காரர் போகிறார்! பண்ணையாரின் சுவீகாரப் புத்திரன் என்று சொன்னேனே, அவர் தான் இவர்! வெறுமனே புத்திரன் என்று சொன்னால் போதாது, 'புத்திர சிகாமணி' என்று சொல்ல வேண்டும்!" என்றார் போஸ்டு மாஸ்டர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பலகணியின் வழியாகச் சந்திரசூடன் பார்த்தான். பட்டை பட்டையாகச் சிவப்புக் கோடு போட்ட பனியன் ஒன்றை உடம்பையொட்டி அணிந்திருந்த வாலிபன் ஒருவன் சாலையோரம் போய்க் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தாலே புலிவேஷக்காரன் மாதிரி இருந்தது. அவன் கையில் வெள்ளிப் பூண் போட்ட குட்டையான பிரம்பு ஒன்று இருந்தது. அதை அவன் சுழற்றிக் கொண்டே நடந்தான். அவனுக்குப் பின்னால், துப்பாக்கியும், மற்றும் வேட்டைச் சாமான்கள் அடங்கிய நீண்ட பை ஒன்றும் எடுத்துக் கொண்டு இன்னொருவன் பின் தொடர்ந்தான்.
"நீங்கள் சொன்ன புத்திரசிகாமணி முன்னால் போகிறவன் தானே?" என்று சந்திரசூடன் கேட்டான்.
"ஆமாம்; பின்னால் போகிறவன் யாரோ முஸ்லிம் வாலிபன் என்று தோன்றுகிறது. அவன் கொஞ்ச நாளாகத்தான் இவனோட போகிறான். புலி வேட்டையாடுவதற்கு இவனுக்கு ஒத்தாசையாக வந்திருக்கிறான் போலிருக்கிறது. இரண்டு பேரும் தினம் இந்த நேரத்துக்குத் துப்பாக்கி சகிதமாக மலைக்குப் போகிறார்கள். சாயங்காலம் திரும்பி வருகிறார்கள். வரும்போது ஒரு முயல்குட்டி, அல்லது நரிக்குட்டி, அல்லது ஒரு பெருச்சாளியைப் பிடித்துக் கொண்டு வருகிறார்கள். புலி மட்டும் இவர்களிடம் அகப்படாமல் 'டிமிக்கி' கொடுத்துக் கொண்டிருக்கிறது!"
"இவனுடைய சுவீகாரத் தகப்பனார், யாரோ பண்ணையார் என்று சொன்னீர்களே, அவர் யார் ஸார்?"
"இந்தப் பக்கத்திலேயே பெரிய முதலாளி, பண்ணையார் சங்கர சேதுராயர்தான். அவருக்கு இரண்டாயிரம் ஏக்ரா நிலம் இருக்கிறது. அதில் ஐந்நூறு ஏக்ராவில் பயிரிட்டுப் பணத்தை அள்ளிக் குவிக்கிறார். ஆனால் பணம் மட்டும் இருந்து என்ன பிரயோஜனம்?"
"பாவம்! புத்திர பாக்கியம் இல்லையாக்கும்!"
"இது ஒரு கண்றாவிக் கதை. மகன் ஒருவன் இருந்தானாம். வெகு புத்திசாலியாம். சாதி விட்டுச் சாதியில் யாரோ ஒரு பெண்ணைக் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டானாம். 'இனிமேல் எனக்கு நீ மகன் இல்லை; என் முகத்தில் விழிக்காதே' என்று பண்ணையார் அவனை வீட்டை விட்டுத் துரத்தி விட்டாராம்..."
"அப்புறம்...?"
"அப்புறம், பையன் திரும்பி வரவேயில்லை. கொஞ்ச காலத்துக்கு முன்னால் அவன் ஏதோவிமான விபத்தில் செத்தே போய் விட்டதாகக் கேள்வி வேண்டு மென்றே உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் வதந்தி. அவனுக்குப் பதிலாகத்தான் இந்த 'சுப்ரதீப'மான புத்திரனைப் பண்ணையார் சுவீகாரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
"சில பேருக்கு அப்படி அதிர்ஷ்டம் அடிக்கிறது!"
"நீங்கள் சொன்ன புத்திரசிகாமணி முன்னால் போகிறவன் தானே?" என்று சந்திரசூடன் கேட்டான்.
"ஆமாம்; பின்னால் போகிறவன் யாரோ முஸ்லிம் வாலிபன் என்று தோன்றுகிறது. அவன் கொஞ்ச நாளாகத்தான் இவனோட போகிறான். புலி வேட்டையாடுவதற்கு இவனுக்கு ஒத்தாசையாக வந்திருக்கிறான் போலிருக்கிறது. இரண்டு பேரும் தினம் இந்த நேரத்துக்குத் துப்பாக்கி சகிதமாக மலைக்குப் போகிறார்கள். சாயங்காலம் திரும்பி வருகிறார்கள். வரும்போது ஒரு முயல்குட்டி, அல்லது நரிக்குட்டி, அல்லது ஒரு பெருச்சாளியைப் பிடித்துக் கொண்டு வருகிறார்கள். புலி மட்டும் இவர்களிடம் அகப்படாமல் 'டிமிக்கி' கொடுத்துக் கொண்டிருக்கிறது!"
"இவனுடைய சுவீகாரத் தகப்பனார், யாரோ பண்ணையார் என்று சொன்னீர்களே, அவர் யார் ஸார்?"
"இந்தப் பக்கத்திலேயே பெரிய முதலாளி, பண்ணையார் சங்கர சேதுராயர்தான். அவருக்கு இரண்டாயிரம் ஏக்ரா நிலம் இருக்கிறது. அதில் ஐந்நூறு ஏக்ராவில் பயிரிட்டுப் பணத்தை அள்ளிக் குவிக்கிறார். ஆனால் பணம் மட்டும் இருந்து என்ன பிரயோஜனம்?"
"பாவம்! புத்திர பாக்கியம் இல்லையாக்கும்!"
"இது ஒரு கண்றாவிக் கதை. மகன் ஒருவன் இருந்தானாம். வெகு புத்திசாலியாம். சாதி விட்டுச் சாதியில் யாரோ ஒரு பெண்ணைக் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டானாம். 'இனிமேல் எனக்கு நீ மகன் இல்லை; என் முகத்தில் விழிக்காதே' என்று பண்ணையார் அவனை வீட்டை விட்டுத் துரத்தி விட்டாராம்..."
"அப்புறம்...?"
"அப்புறம், பையன் திரும்பி வரவேயில்லை. கொஞ்ச காலத்துக்கு முன்னால் அவன் ஏதோவிமான விபத்தில் செத்தே போய் விட்டதாகக் கேள்வி வேண்டு மென்றே உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் வதந்தி. அவனுக்குப் பதிலாகத்தான் இந்த 'சுப்ரதீப'மான புத்திரனைப் பண்ணையார் சுவீகாரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
"சில பேருக்கு அப்படி அதிர்ஷ்டம் அடிக்கிறது!"
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"அதிர்ஷ்டமாவது, மண்ணாங்கட்டியாவது! எல்லாம் நமது கையாலாகாத அரசாங்கத்தினால் ஏற்படுவதுதான். என்னைக் கேட்டால், சுவீகாரம் எடுத்துக் கொள்ளுவதையே சட்ட விரோதமாக்க வேண்டும் என்று சொல்லுவேன். பிள்ளை இல்லாதவர்களின் சொத்துக்களையெல்லாம் சர்க்கார் எடுத்துக் கொள்ள வேண்டும்!"
"ஆமாம்; எடுத்துக் கொண்டு தபாலாபீஸ் சிப்பந்திகளுக்குப் பிரித்துக் கொடுத்தாலும் பிரயோஜனம் உண்டு!"
இவ்விதம் போஸ்டு மாஸ்டர் மனம் குளிர ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் சந்திரசூடன் வெளியேறினான்.
மறுநாள் மாலை சந்திரசூடன் மிஸ். மனோன்மணியின் வீட்டுக்குப் போனான். சிறிது தயக்கத்துடனேதான் சென்றான். ஏனெனில், அதற்குள் பண்ணையார் சங்கரசேதுராயரின் சுவீகாரப் புதல்வன் மனோகரனை பற்றிச் சிறிது அவன் தெரிந்துகொண்டான். மனோகரனும் பெரிய குடும்பத்தில் பிறந்தவன் தானாம். ஆனால் அந்தப் பெரிய குடும்பத்தின் சொத்துக்கள் எல்லாம் எப்படியோ காலியாகி விட்டது. இவன் பிறந்த வேளைதான் என்று சிலர் சொன்னார்கள். பங்களூரில் இவனுடைய தந்தை பெரிய அளவில் வியாபாரம் நடத்தி வந்தார். தடபுடலான நாகரிக வாழ்க்கையும் நடத்தி வந்தார். பையன் இளம் பிராயத்தில் பல வருஷம் பெங்களூரில் கழித்தான். அங்கே தான் படித்தான். நவநாகரிகத்துக்குரிய நடை உடைகள் எல்லாம் பயின்றான். வியாபாரத்தில் திடீரென்று நஷ்டம் ஏற்பட்டுத் தந்தை 'இன்ஸால்வெண்ட்' ஆனார். இந்த இக்கட்டான நிலைமையில் தான் புன்னைவனத்துப் பண்ணையாரிடமிருந்து இவனுக்கு அழைப்பு வந்தது. இரண்டு வருஷங்களாக இங்கே தான் இருந்து வருகிறான். சுவீகாரத் தந்தைக்கு நல்ல பிள்ளையாக நடந்து வருகிறான். ஆனால் ஊரில் உள்ளவர்களிடையே இவனைப் பற்றி நல்ல அபிப்பிராயம் சொல்லுவார் இல்லை.
"அப்பேர்ப்பட்ட உத்தமமான பிள்ளையைப் பறிகொடுத்து விட்டு, இந்த ஒண்ணாம் நம்பர் கில்லாடியைப் பிள்ளையென்று தாலாட்டிச் சீராட்டுகிறாரே, பண்ணையார்! அவர் தலையில் எழுத்து அப்படி! இவனுக்கு அடித்த யோகம் இப்படி!" என்று சொன்னார்கள்.
இவ்விதம் பெயர் வாங்கிய மனோகரன் மிஸ். மனோன்மணியின் வீட்டுக்கு அடிக்கடி போவதுண்டு என்று அறிந்த பிறகு, சந்திரசூடனுக்கு அங்கே போவதில் தயக்கம் ஏற்பட்டது இயல்புதானே? ஆயினும் பத்திரிகையைத் திருப்பி வாங்கிக் கொள்ள வேண்டும்; வருகிறதாக அவளிடம் சொல்லியும் ஆகிவிட்டது! ஆகையால், போய் விட்டு உடனே திரும்பி விட வேண்டும் என்ற உறுதியுடன் சென்றான்.
சுற்றிலும் மதில் சூழ்ந்த ஒரு விசாலமான தோட்டத்தின் முன் பகுதியில் நாலு சின்னஞ்சிறு வீடுகள் ஒரே மாதிரியாகக் கட்டப்பட்டிருந்தன. யாரோ முதலாளி அந்த வீடுகளை வாடகைக்கு விடுவதற்காகவே கட்டியிருக்க வேண்டும் என்று பார்த்தவுடனே தெரிந்தது. அவற்றில், நேற்று மனோன்மணி சுட்டிக் காட்டிய வீட்டை நினைவுப்படுத்திக் கொண்டு சந்திரசூடன் அங்கே சென்றான்.
"ஆமாம்; எடுத்துக் கொண்டு தபாலாபீஸ் சிப்பந்திகளுக்குப் பிரித்துக் கொடுத்தாலும் பிரயோஜனம் உண்டு!"
இவ்விதம் போஸ்டு மாஸ்டர் மனம் குளிர ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் சந்திரசூடன் வெளியேறினான்.
மறுநாள் மாலை சந்திரசூடன் மிஸ். மனோன்மணியின் வீட்டுக்குப் போனான். சிறிது தயக்கத்துடனேதான் சென்றான். ஏனெனில், அதற்குள் பண்ணையார் சங்கரசேதுராயரின் சுவீகாரப் புதல்வன் மனோகரனை பற்றிச் சிறிது அவன் தெரிந்துகொண்டான். மனோகரனும் பெரிய குடும்பத்தில் பிறந்தவன் தானாம். ஆனால் அந்தப் பெரிய குடும்பத்தின் சொத்துக்கள் எல்லாம் எப்படியோ காலியாகி விட்டது. இவன் பிறந்த வேளைதான் என்று சிலர் சொன்னார்கள். பங்களூரில் இவனுடைய தந்தை பெரிய அளவில் வியாபாரம் நடத்தி வந்தார். தடபுடலான நாகரிக வாழ்க்கையும் நடத்தி வந்தார். பையன் இளம் பிராயத்தில் பல வருஷம் பெங்களூரில் கழித்தான். அங்கே தான் படித்தான். நவநாகரிகத்துக்குரிய நடை உடைகள் எல்லாம் பயின்றான். வியாபாரத்தில் திடீரென்று நஷ்டம் ஏற்பட்டுத் தந்தை 'இன்ஸால்வெண்ட்' ஆனார். இந்த இக்கட்டான நிலைமையில் தான் புன்னைவனத்துப் பண்ணையாரிடமிருந்து இவனுக்கு அழைப்பு வந்தது. இரண்டு வருஷங்களாக இங்கே தான் இருந்து வருகிறான். சுவீகாரத் தந்தைக்கு நல்ல பிள்ளையாக நடந்து வருகிறான். ஆனால் ஊரில் உள்ளவர்களிடையே இவனைப் பற்றி நல்ல அபிப்பிராயம் சொல்லுவார் இல்லை.
"அப்பேர்ப்பட்ட உத்தமமான பிள்ளையைப் பறிகொடுத்து விட்டு, இந்த ஒண்ணாம் நம்பர் கில்லாடியைப் பிள்ளையென்று தாலாட்டிச் சீராட்டுகிறாரே, பண்ணையார்! அவர் தலையில் எழுத்து அப்படி! இவனுக்கு அடித்த யோகம் இப்படி!" என்று சொன்னார்கள்.
இவ்விதம் பெயர் வாங்கிய மனோகரன் மிஸ். மனோன்மணியின் வீட்டுக்கு அடிக்கடி போவதுண்டு என்று அறிந்த பிறகு, சந்திரசூடனுக்கு அங்கே போவதில் தயக்கம் ஏற்பட்டது இயல்புதானே? ஆயினும் பத்திரிகையைத் திருப்பி வாங்கிக் கொள்ள வேண்டும்; வருகிறதாக அவளிடம் சொல்லியும் ஆகிவிட்டது! ஆகையால், போய் விட்டு உடனே திரும்பி விட வேண்டும் என்ற உறுதியுடன் சென்றான்.
சுற்றிலும் மதில் சூழ்ந்த ஒரு விசாலமான தோட்டத்தின் முன் பகுதியில் நாலு சின்னஞ்சிறு வீடுகள் ஒரே மாதிரியாகக் கட்டப்பட்டிருந்தன. யாரோ முதலாளி அந்த வீடுகளை வாடகைக்கு விடுவதற்காகவே கட்டியிருக்க வேண்டும் என்று பார்த்தவுடனே தெரிந்தது. அவற்றில், நேற்று மனோன்மணி சுட்டிக் காட்டிய வீட்டை நினைவுப்படுத்திக் கொண்டு சந்திரசூடன் அங்கே சென்றான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அந்த வீட்டின் வாசலில், கைவண்டி ஒன்றில், ஒரு குழந்தை உட்கார்ந்திருந்தது. கையில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு அதனுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தது. இலட்சணமான குழந்தை; பிராயம் நாலு இருக்கும். சந்திரசூடனுக்குக் குழந்தைகள் என்றால் அவ்வளவாகப் பிரேமை இல்லைதான். குழந்தை குலத்தின் எதிரி என்று கூட அவனைச் சொல்லலாம். ஆயினும் இந்தக் குழந்தையிடம் ஏதோ ஒரு தனிக் கவர்ச்சி அவனை இழுத்தது. போகும் வழியில் ஒரு கணம் நின்று, 'என்ன, பாப்பா! என்ன சேதி?' என்றான்.
குழந்தை அவனை நிமிர்ந்து பார்த்து, "என்ன மாமா! என்ன சேதி?" என்று சொல்லிப் புன்னை புரிந்தது.
"நீ ரொம்ப சமர்த்துப் பாப்பாவாயிருக்கியே?" என்றான் சந்திரசூடன்.
"நீங்க ரொம்ப சமர்த்து மாமாவாயிருக்கேளே?" என்றது குழந்தை.
"பலே! பலே!" என்றான் சந்திரசூடன்.
"சபாஷ்! சபாஷ்!" என்றது குழந்தை.
இதையெல்லாம் உள்ளேயிருந்து கேட்டுக் கொண்டே மனோன்மணி வெளியே வந்தாள். அவள் முகமலர்ச்சி, உள்ளத்தின் உவகையைக் காட்டியது.
"வாருங்கள், வாருங்கள்! ராஜ்மோகனுக்கு உங்களைப் பிடித்துப் போயிருக்கிறது. அதென்னமோ, சில பேருக்குத்தான் குழந்தைகளுடன் சிநேகமாயிருக்கும் வழி தெரிகிறது. வேறு சிலரைக் கண்டாலே குழந்தைகள் அலறத் தொடங்கி விடுகின்றன!" என்றாள் மனோன்மணி.
"ஆமாம்; குழந்தைகளுடன் சிநேகம் பிடிப்பது ஒரு தனி வித்தைதான்!" என்றான் சந்திரசூடன்.
வீட்டின் முன்புறத்தில் இருந்த சிறிய தாழ்வாரத்தில் இரண்டு பிரம்பு நாற்காலிகள் இருந்தன. அவற்றில் ஒன்றைக் காட்டி, "உட்காருங்கள், இதோ நீங்க்ள் கொடுத்த பத்திரிகையைக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு மனோன்மணி உள்ளே சென்றாள்.
குழந்தை அவனை நிமிர்ந்து பார்த்து, "என்ன மாமா! என்ன சேதி?" என்று சொல்லிப் புன்னை புரிந்தது.
"நீ ரொம்ப சமர்த்துப் பாப்பாவாயிருக்கியே?" என்றான் சந்திரசூடன்.
"நீங்க ரொம்ப சமர்த்து மாமாவாயிருக்கேளே?" என்றது குழந்தை.
"பலே! பலே!" என்றான் சந்திரசூடன்.
"சபாஷ்! சபாஷ்!" என்றது குழந்தை.
இதையெல்லாம் உள்ளேயிருந்து கேட்டுக் கொண்டே மனோன்மணி வெளியே வந்தாள். அவள் முகமலர்ச்சி, உள்ளத்தின் உவகையைக் காட்டியது.
"வாருங்கள், வாருங்கள்! ராஜ்மோகனுக்கு உங்களைப் பிடித்துப் போயிருக்கிறது. அதென்னமோ, சில பேருக்குத்தான் குழந்தைகளுடன் சிநேகமாயிருக்கும் வழி தெரிகிறது. வேறு சிலரைக் கண்டாலே குழந்தைகள் அலறத் தொடங்கி விடுகின்றன!" என்றாள் மனோன்மணி.
"ஆமாம்; குழந்தைகளுடன் சிநேகம் பிடிப்பது ஒரு தனி வித்தைதான்!" என்றான் சந்திரசூடன்.
வீட்டின் முன்புறத்தில் இருந்த சிறிய தாழ்வாரத்தில் இரண்டு பிரம்பு நாற்காலிகள் இருந்தன. அவற்றில் ஒன்றைக் காட்டி, "உட்காருங்கள், இதோ நீங்க்ள் கொடுத்த பத்திரிகையைக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு மனோன்மணி உள்ளே சென்றாள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் ஒரு கப் காபியும் 'தீபம்' சஞ்சிகையும் எடுத்துக் கொண்டு வந்தாள்.
சந்திரசூடன் காப்பியைச் சாப்பிட்டுவிட்டு, "பாதிக் கதைப் போட்டியில் பரிசு உங்களுக்குத்தானா? நீங்கள் எழுதியதுதான் வந்திருக்கிறதா?" என்று கேட்டான்.
"இல்லை; இல்லை! நான் எழுதியது வரவில்லை, பரிசு எனக்குக் கிடைக்காவிட்டால் போகட்டும். ஆனால் கதையை இவ்வளவு சோகமாக முடித்திருக்க வேண்டாம்."
"அடடா! சோகமாகவா முடிந்திருக்கிறது? நான் நன்றாகப் படிக்கவில்லை!"
"ஆமாம்; நேற்று நீங்கள் கொஞ்சம் படிப்பதற்குள் நான் வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன். நான் பரிசுப் போட்டிக்கு எழுதியிருக்கிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது?"
"போஸ்டு மாஸ்டர் சொன்னார்."
"ஓகோ! என்னைப் பற்றி இன்னும் ஏதாவது வம்பு வளர்த்தாரா?"
"இல்லை, இல்லை! தங்களைப் பற்றி ரொம்ப நல்ல மாதிரி பேசினார்."
"போகட்டும்; இந்த மட்டும் விட்டாரே! இந்த ஊரிலேயே வம்புப் பேச்சு அதிகம்!"
"அதைப் பற்றி நமக்கு என்ன? நம்முடைய மனச் சாட்சிக்கேற்ப நாம் நேர்மையாக நடந்து கொண்டால், ஊரில் உள்ளவர்கள் என்ன பேசினால் நமக்கு என்ன கவலை?"
"நம் காதில் விழாமல் என்ன பேசிக் கொண்டாலும் பரவாயில்லை. நம்மிடமே வந்து ஏதாவது வேண்டாத கேள்வி கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். பாருங்கள் இதோ இந்தக் குழந்தை இருக்கிறானே, இவன் என் சொந்தக் குழந்தையா, இல்லையா என்று ஊராருக்கு என்ன கவலை? எத்தனை பேர் என்னைக் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?"
"சில பேருக்கு இப்படிப் பிறத்தியாரைக் குறித்து வம்பு வளர்ப்பதிலேயே ஆனந்தம். அவர்களுடைய சுபாவமே அப்படி! அது போனால் போகட்டும். எப்படி முடித்திருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுகிறது? நீங்கள் என்ன மாதிரி கதையை முடித்திருந்தீர்கள்?" என்று கேட்டான் சந்திரசூடன்.
"அதைப்பற்றிப் பேசுவதற்கே எனக்குச் சங்கடமாயிருக்கிறது" என்றாள் மனோன்மணி.
"அடடா! அவ்வளவு சகிக்க முடியாமல் எழுதியிருப்பதற்கா பரிசு கொடுத்திருக்கிறார்கள்?"
"சகிக்க முடியாமல் எழுதியிருப்பதாக நான் சொல்ல மாட்டேன். ஒரு விதத்தில் நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் என்னுடைய சொந்த அனுபவமும் இந்தக் கதையில் சேர்ந்திருப்பதால் வருத்தம் உண்டாக்குகிறது."
"சொந்த அனுபவமா? ஆச்சரியமாயிருக்கிறதே!"
"சொந்த அனுபவம் என்றால், எனக்கு நேர்ந்தது அல்ல. இந்தக் கதையில் உள்ளது போன்ற ஒரு சம்பவம் என் சிநேகிதி ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்தது..."
"அப்படியா?"
"இப்போது என் மனம் சரியாயில்லை. இன்னொரு நாள் வந்தீர்களானால் சொல்லுகிறேன். யாரிடமாவது சொன்னால் என் மனத்தில் உள்ள பாரம் குறையலாம். ஆனால் அனுதாபத்துடன் கேட்பவர்களாயிருக்க வேண்டும். தங்களைப் பார்த்தால் அவ்விதம் கேட்பீர்கள் என்று என் மனத்தில் ஏனோ தோன்றுகிறது."
"அது என்னுடைய அதிர்ஷ்டந்தான்! இன்னொரு நாள் அவசியம் வருகிறேன்."
இந்தச் சமயத்தில் வாசலில் காலடிச் சத்தம் கேட்டு சந்திரசூடன் திரும்பிப் பார்த்தான். நேற்று போஸ்ட் மாஸ்டர் சுட்டிக் காட்டிய புலி வேட்டை மனோகரன் வந்து கொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்து சென்ற சாயபு எதிரேயிருந்த போஸ்டாபீஸ் தாழ்வாரத்தில் நின்றான்.
சந்திரசூடன் காப்பியைச் சாப்பிட்டுவிட்டு, "பாதிக் கதைப் போட்டியில் பரிசு உங்களுக்குத்தானா? நீங்கள் எழுதியதுதான் வந்திருக்கிறதா?" என்று கேட்டான்.
"இல்லை; இல்லை! நான் எழுதியது வரவில்லை, பரிசு எனக்குக் கிடைக்காவிட்டால் போகட்டும். ஆனால் கதையை இவ்வளவு சோகமாக முடித்திருக்க வேண்டாம்."
"அடடா! சோகமாகவா முடிந்திருக்கிறது? நான் நன்றாகப் படிக்கவில்லை!"
"ஆமாம்; நேற்று நீங்கள் கொஞ்சம் படிப்பதற்குள் நான் வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன். நான் பரிசுப் போட்டிக்கு எழுதியிருக்கிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது?"
"போஸ்டு மாஸ்டர் சொன்னார்."
"ஓகோ! என்னைப் பற்றி இன்னும் ஏதாவது வம்பு வளர்த்தாரா?"
"இல்லை, இல்லை! தங்களைப் பற்றி ரொம்ப நல்ல மாதிரி பேசினார்."
"போகட்டும்; இந்த மட்டும் விட்டாரே! இந்த ஊரிலேயே வம்புப் பேச்சு அதிகம்!"
"அதைப் பற்றி நமக்கு என்ன? நம்முடைய மனச் சாட்சிக்கேற்ப நாம் நேர்மையாக நடந்து கொண்டால், ஊரில் உள்ளவர்கள் என்ன பேசினால் நமக்கு என்ன கவலை?"
"நம் காதில் விழாமல் என்ன பேசிக் கொண்டாலும் பரவாயில்லை. நம்மிடமே வந்து ஏதாவது வேண்டாத கேள்வி கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். பாருங்கள் இதோ இந்தக் குழந்தை இருக்கிறானே, இவன் என் சொந்தக் குழந்தையா, இல்லையா என்று ஊராருக்கு என்ன கவலை? எத்தனை பேர் என்னைக் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?"
"சில பேருக்கு இப்படிப் பிறத்தியாரைக் குறித்து வம்பு வளர்ப்பதிலேயே ஆனந்தம். அவர்களுடைய சுபாவமே அப்படி! அது போனால் போகட்டும். எப்படி முடித்திருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுகிறது? நீங்கள் என்ன மாதிரி கதையை முடித்திருந்தீர்கள்?" என்று கேட்டான் சந்திரசூடன்.
"அதைப்பற்றிப் பேசுவதற்கே எனக்குச் சங்கடமாயிருக்கிறது" என்றாள் மனோன்மணி.
"அடடா! அவ்வளவு சகிக்க முடியாமல் எழுதியிருப்பதற்கா பரிசு கொடுத்திருக்கிறார்கள்?"
"சகிக்க முடியாமல் எழுதியிருப்பதாக நான் சொல்ல மாட்டேன். ஒரு விதத்தில் நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் என்னுடைய சொந்த அனுபவமும் இந்தக் கதையில் சேர்ந்திருப்பதால் வருத்தம் உண்டாக்குகிறது."
"சொந்த அனுபவமா? ஆச்சரியமாயிருக்கிறதே!"
"சொந்த அனுபவம் என்றால், எனக்கு நேர்ந்தது அல்ல. இந்தக் கதையில் உள்ளது போன்ற ஒரு சம்பவம் என் சிநேகிதி ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்தது..."
"அப்படியா?"
"இப்போது என் மனம் சரியாயில்லை. இன்னொரு நாள் வந்தீர்களானால் சொல்லுகிறேன். யாரிடமாவது சொன்னால் என் மனத்தில் உள்ள பாரம் குறையலாம். ஆனால் அனுதாபத்துடன் கேட்பவர்களாயிருக்க வேண்டும். தங்களைப் பார்த்தால் அவ்விதம் கேட்பீர்கள் என்று என் மனத்தில் ஏனோ தோன்றுகிறது."
"அது என்னுடைய அதிர்ஷ்டந்தான்! இன்னொரு நாள் அவசியம் வருகிறேன்."
இந்தச் சமயத்தில் வாசலில் காலடிச் சத்தம் கேட்டு சந்திரசூடன் திரும்பிப் பார்த்தான். நேற்று போஸ்ட் மாஸ்டர் சுட்டிக் காட்டிய புலி வேட்டை மனோகரன் வந்து கொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்து சென்ற சாயபு எதிரேயிருந்த போஸ்டாபீஸ் தாழ்வாரத்தில் நின்றான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
வரும் போது மனோகரன், கைவண்டியிலிருந்த ராஜ் மோகனைப் பார்த்து, "ஏண்டா நொண்டிப் பயலே! என்னடா சேதி?" என்றான். அது சந்திரசூடன் காதில் நாராசமாக விழுந்தது. மனோன்மணி முகம் சுருங்குவதையும் கவனித்தான்.
"என்னடா நான் கேட்கிறேன், பேசாமலிருக்கிறாயே?" என்று சொல்லிக் கொண்டே மனோகரன் குழந்தையின் காதைப் பிடித்துத் திருகினான். குழந்தை 'வீல்' என்று அலறத் தொடங்கியது.
மனோன்மணி முகத்தில் கோபம் கொதித்தது. அவள் எழுந்தாள். அதற்குள் மனோகரன் குழந்தையின் காதை விட்டு விட்டுத் தாழ்வாரத்துக்கு வந்தான். சந்திரசூடனை ஒரு தடவை முறைத்துப் பார்த்து விட்டு, இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்து கால் மேல் காலைப் போட்டுக் கொண்டான்.
"பேச்சின் நடுவில் 'டிஸ்டர்ப்' பண்ணுகிறேன் போலிருக்கிறது! மன்னிக்க வேணும்!" என்றான்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. இவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார்" என்றாள் மனோன்மணி.
"ஆம்; புறப்பட்டுக் கொண்டிருந்தேன். தாங்கள் வருவதைப் பார்த்து விட்டுத் தான் தங்கினேன். 'புன்னைவனத்துப் புலி'யைப் பற்றிப் பத்திரிகையில் அமர்க்களப்படுகிறது! தாங்கள் துப்பாக்கி சகிதமாக மலை மேல் போய் விட்டு வருவதை தினம் பார்க்கிறேன். அதைப் பற்றித் தங்களிடம் விசாரிக்க விரும்பினேன்."
"ஓ! தங்களுக்கு வேட்டையில் பிரியம் உண்டா? ரொம்ப சந்தோஷம்! அந்தப் புலி ஒரு மாதமாய் எனக்கு 'டிமிக்கி' கொடுத்துக் கொண்டு வருகிறது. நீங்களும் வருவதாயிருந்தால்..."
"அழைத்துப் போனால் வரலாம் என்று தான் உத்தேசம். நான் இந்த ஊருக்குப் புதிது!"
"அப்படித் தான் நினைத்தேன் மனோன்மணி! இவரை எனக்கு நீ அறிமுகம் செய்து வைக்கவில்லையே?"
"அவருக்கு அந்தச் சிரமம் வேண்டியதில்லை. நானே என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். எனக்கு மதராஸ். பெயர் சந்திரசுடன். வயது இருபத்து நாலு. போன வருஷம் பி.எல். பாஸ் செய்தேன். இன்னும் தொழில் ஆரம்பிக்கவில்லை. கலியாணம் ஆகவில்லை. செய்து கொள்வதாகவும் உத்தேசமில்லை. இன்னும் ஏதாவது தகவல் வேணுமானால் கேளுங்கள்..."
மனோகரன் இடி இடியென்று சிரித்து விட்டு, "ரொம்ப வந்தனம். நாளை மலை மேல் ஒரு வேளை புலியைச் சந்தித்தால் தங்களைத் தக்கபடி அதற்கு 'இண்டரட்யூஸ்' பண்ணி வைக்கலாம். நாளை வருகிறீர்கள் அல்லவா?" என்றான்.
"கட்டாயம் வருகிறேன், எங்கே சந்திக்கலாம்?"
"பண்ணையார் வீடு என்றால், எல்லோருக்கும் தெரியும். அல்லது நீங்கள் இருக்குமிடத்தைச் சொன்னால்..."
"ஸ்ரீதர் ஹோட்டலில் இருக்கிறேன். நாளை தங்கள் வீட்டுக்கே வந்து விடுகிறேன். போய் வரட்டுமா?"
இவ்விதம் இரண்டு பேருக்கும் சேர்த்துச் சொல்லிக் கொண்டு சந்திரசூடன் புறப்பட்டுச் சென்றான்.
தற்செயலாக அவன் பார்வை எதிரே தபால் ஆபீஸ் தாழ்வாரத்தில் நின்ற சாயபுவின் பேரில் விழுந்தது. அந்த சாயபு கையில் 'தீபம்' பத்திரிகையை வைத்துக் கொண்டு வாசிப்பதாகத் தோன்றியது.
"அடே அப்பா! 'தீபம்' பத்திரிகைக்கு எத்தனை கிராக்கி?" என்று எண்ணி வியந்து கொண்டே போனான்.
"என்னடா நான் கேட்கிறேன், பேசாமலிருக்கிறாயே?" என்று சொல்லிக் கொண்டே மனோகரன் குழந்தையின் காதைப் பிடித்துத் திருகினான். குழந்தை 'வீல்' என்று அலறத் தொடங்கியது.
மனோன்மணி முகத்தில் கோபம் கொதித்தது. அவள் எழுந்தாள். அதற்குள் மனோகரன் குழந்தையின் காதை விட்டு விட்டுத் தாழ்வாரத்துக்கு வந்தான். சந்திரசூடனை ஒரு தடவை முறைத்துப் பார்த்து விட்டு, இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்து கால் மேல் காலைப் போட்டுக் கொண்டான்.
"பேச்சின் நடுவில் 'டிஸ்டர்ப்' பண்ணுகிறேன் போலிருக்கிறது! மன்னிக்க வேணும்!" என்றான்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. இவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார்" என்றாள் மனோன்மணி.
"ஆம்; புறப்பட்டுக் கொண்டிருந்தேன். தாங்கள் வருவதைப் பார்த்து விட்டுத் தான் தங்கினேன். 'புன்னைவனத்துப் புலி'யைப் பற்றிப் பத்திரிகையில் அமர்க்களப்படுகிறது! தாங்கள் துப்பாக்கி சகிதமாக மலை மேல் போய் விட்டு வருவதை தினம் பார்க்கிறேன். அதைப் பற்றித் தங்களிடம் விசாரிக்க விரும்பினேன்."
"ஓ! தங்களுக்கு வேட்டையில் பிரியம் உண்டா? ரொம்ப சந்தோஷம்! அந்தப் புலி ஒரு மாதமாய் எனக்கு 'டிமிக்கி' கொடுத்துக் கொண்டு வருகிறது. நீங்களும் வருவதாயிருந்தால்..."
"அழைத்துப் போனால் வரலாம் என்று தான் உத்தேசம். நான் இந்த ஊருக்குப் புதிது!"
"அப்படித் தான் நினைத்தேன் மனோன்மணி! இவரை எனக்கு நீ அறிமுகம் செய்து வைக்கவில்லையே?"
"அவருக்கு அந்தச் சிரமம் வேண்டியதில்லை. நானே என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். எனக்கு மதராஸ். பெயர் சந்திரசுடன். வயது இருபத்து நாலு. போன வருஷம் பி.எல். பாஸ் செய்தேன். இன்னும் தொழில் ஆரம்பிக்கவில்லை. கலியாணம் ஆகவில்லை. செய்து கொள்வதாகவும் உத்தேசமில்லை. இன்னும் ஏதாவது தகவல் வேணுமானால் கேளுங்கள்..."
மனோகரன் இடி இடியென்று சிரித்து விட்டு, "ரொம்ப வந்தனம். நாளை மலை மேல் ஒரு வேளை புலியைச் சந்தித்தால் தங்களைத் தக்கபடி அதற்கு 'இண்டரட்யூஸ்' பண்ணி வைக்கலாம். நாளை வருகிறீர்கள் அல்லவா?" என்றான்.
"கட்டாயம் வருகிறேன், எங்கே சந்திக்கலாம்?"
"பண்ணையார் வீடு என்றால், எல்லோருக்கும் தெரியும். அல்லது நீங்கள் இருக்குமிடத்தைச் சொன்னால்..."
"ஸ்ரீதர் ஹோட்டலில் இருக்கிறேன். நாளை தங்கள் வீட்டுக்கே வந்து விடுகிறேன். போய் வரட்டுமா?"
இவ்விதம் இரண்டு பேருக்கும் சேர்த்துச் சொல்லிக் கொண்டு சந்திரசூடன் புறப்பட்டுச் சென்றான்.
தற்செயலாக அவன் பார்வை எதிரே தபால் ஆபீஸ் தாழ்வாரத்தில் நின்ற சாயபுவின் பேரில் விழுந்தது. அந்த சாயபு கையில் 'தீபம்' பத்திரிகையை வைத்துக் கொண்டு வாசிப்பதாகத் தோன்றியது.
"அடே அப்பா! 'தீபம்' பத்திரிகைக்கு எத்தனை கிராக்கி?" என்று எண்ணி வியந்து கொண்டே போனான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|