புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அபிராமி.... அபிராமி... Poll_c10அபிராமி.... அபிராமி... Poll_m10அபிராமி.... அபிராமி... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அபிராமி.... அபிராமி... Poll_c10அபிராமி.... அபிராமி... Poll_m10அபிராமி.... அபிராமி... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அபிராமி.... அபிராமி... Poll_c10அபிராமி.... அபிராமி... Poll_m10அபிராமி.... அபிராமி... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அபிராமி.... அபிராமி... Poll_c10அபிராமி.... அபிராமி... Poll_m10அபிராமி.... அபிராமி... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அபிராமி.... அபிராமி... Poll_c10அபிராமி.... அபிராமி... Poll_m10அபிராமி.... அபிராமி... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அபிராமி.... அபிராமி... Poll_c10அபிராமி.... அபிராமி... Poll_m10அபிராமி.... அபிராமி... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அபிராமி.... அபிராமி... Poll_c10அபிராமி.... அபிராமி... Poll_m10அபிராமி.... அபிராமி... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அபிராமி.... அபிராமி... Poll_c10அபிராமி.... அபிராமி... Poll_m10அபிராமி.... அபிராமி... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபிராமி.... அபிராமி...


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 29, 2010 5:31 pm

அபிராமி.... அபிராமி...

அபிராமி.... அபிராமி... Tblanmegamnews_74654787779




அமாவாசை தினத்தில் நிலாவை ஒளிரச்செய்த அபிராமி அம்மனின்
திருத்தலத்திற்கு இந்த வாரம் செல்கிறோம். இந்நிகழ்ச்சி நடந்தது ஒரு தை அமாவாசை
தினத்தில் தான். சோழவள நாட்டில் திருக்கடவூர் என்ற ஊரில் அபிராமி பட்டர்
அவதரித்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். சிறுவயதிலிருந்தே இவர் அபிராமியின்
மேல் அளவற்ற பக்தி கொண்டு பித்தனைப் போல திரிந்தார். இவருக்கு வேண்டப்படாதவர்கள்
இவரைப்பற்றி சரபோஜி மன்னரிடம் தவறாக கூறிவிட்டார்கள். பட்டரை அழைத்த மன்னர் 'இன்று
என்ன திதி?' என கேட்டார். சதா சர்வகாலமும் பவுர்ணமி போன்ற அபிராமி முகத்தின்
நினைப்பிலேயே இருந்ததால், 'இன்று பவுர்ணமி திதி,' என கூறிவிட்டார். ஆனால், அன்று
அமாவாசை திதி.

மன்னருக்கு கோபம் வந்து விட்டது. 'இன்று இரவு நிலா
வராவிட்டால், நீ கழுவேற்றப்படுவாய்,' என கூறிச் சென்று விட்டார். கோயில் வாசலில்
நெருப்பு வளர்க்கப்பட்டு, அதன் மேல் உறி கட்டி அபிராமி பட்டரை நிறுத்தி
விட்டார்கள். அப்போது அம்மனை வேண்டி அபிராமி பட்டரால் பாடப்பட்டது தான் 'அபிராமி
அந்தாதி'. இவர் பாடி முடித்ததும் அம்மன் வானில் தோன்றி, தன் காதிலிருந்த தாடங்கத்தை
வானில் வீசி எறிந்தாள். தடாங்கம் நிலவாய் மாறி ஒளிர்ந்தது. மன்னனும் அபிராமி பட்டரை
விழுந்து வணங்கினான். இத்தலம் அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்று. அப்பர், சம்பந்தர்,
சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்றது.

தல வரலாறு: மிருகண்டு முனிவர்-
மருத்துவதி தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.
முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். தவத்தினை மெச்சிய சிவன், ''உனக்கு
அறிவுள்ள குழந்தை பிறந்தால் 16 ஆண்டுகளே உயிர் வாழும். அறிவற்றவன் பிறந்தால்,
நீண்டநாள் வாழும், இதில் எந்தக் குழந்தை வேண்டும்?'' எனக்கேட்டார்.

மிருகண்டு திகைத்தார். அறிவுள்ள குழந்தையே வேண்டும்
என்றார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டனர். மார்க்கண்டேயனுக்கு 16
வயது வந்தது. மார்க்கண்டேயன் சிவத்தலங்கள் சென்றார். 107 சிவத்தலங்கள் சென்ற
மார்க்கண்டேயன் 108வது தலமாக திருக்கடையூர் வருகிறார். இவரது கடைசி நாளும் வந்து
விடுகிறது. உயிரைப்பறிப்பதற்காக எமன் கோயிலுக்கே வந்து விடுகிறார். எமனைக்கண்ட
மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டிக்கொண்டார். இருந்தாலும் எமன் விடவில்லை.
மார்க்கண்டேயரது உயிரைப்பறிப்பதற்காக எமன் பாசக்கயிறை வீச, அந்தக்கயிறு
சிவலங்கத்தின் மீது விழுகிறது. கோபம் கொண்ட சிவன், ''என்னையும் சேர்த்தா
பாசக்கயிறால் இழுக்கிறாய், இத்துடன் ஒழிந்து போ'' என எமனை அழித்து விடுகிறார்.
இதனால் பூமியில் இறப்பே இல்லாமல் போனது, பூமி பாரம் தாங்காத பூமாதேவியின்
வேண்டுதலால் சிவன் மனமிறங்கி எமனுக்கு உயிர் தருகிறார். எமன் பாசக்கயிறு வீசியதால்
ஏற்பட்ட தழும்பு இன்னமும் சிவனின் திருமேனியில் காணலாம்.

தலச்சிறப்பு: மூலவர்:
அமிர்தகடேசுவரர், சுயம்பு மூர்த்தி. அம்மன்: அபிராமி. தலவிருட்சம்: ஜாதிமல்லி.
தீர்த்தம்: அமிர்தகுளம். ஜாதிமல்லிப்பூ சுவாமிக்கு மட்டுமே சார்த்தப்படுகிறது.
மற்றவர்கள் இதை வைத்துக்கொள்ளக் கூடாது. ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் ஆயிரம் பூ
எடுத்து அர்சித்ததற்கு சமம்.

பெயர்க்காரணம்: ஒரு முறை தேவர்களும்
அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, அசுரர்களுக்கு தெரியாமல் தேவர்கள் சிறிது
அமுதத்தை ஒரு கலயத்தில் எடுத்து மறைத்து விட்டார்கள். எந்த காரியம் செய்தாலும்
விநாயகரை முதலில் வழிபட வேண்டும் என்பது நியதி. ஆனால் தேவர்கள் அப்படி செய்யவில்லை.
கோபம் கொண்ட பிள்ளையார் அமுத கலசத்தை எடுத்து ஒளித்து வைத்து விட்டார். சிவன் மூலம்
இந்த விஷயம் தேவர்களுக்கு தெரிய வந்தது. பிள்ளையாரிடம் சென்று மன்னிப்பு
கேட்டார்கள் தேவர்கள். பிள்ளையாரும் மன்னித்து அமுத கலசத்தை கொடுத்து விட்டார்.
பெற்றுக்கொண்ட தேவர்கள் அந்த கலசத்தை ஓரிடத்தில் வைத்து விட்டு நீராடச்
சென்றார்கள். திரும்பி வந்து எடுத்தபோது அந்த கலசம் வரவில்லை. அது சிவலிங்க
திருமேனி ஆகி அமிர்தகடேசுவரர் என்ற பெயர் பெற்று விட்டது.

சஷ்டியப்த பூர்த்தி தலம்: 59 வயது முடிந்து 60 வயது
தொடங்குபவர்கள் உக்ரரத சாந்தி பூஜையும், 60வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள்
சஷ்டியப்த பூர்த்தி பூஜையும், 69 வயது முடிந்து 70 வயது தொடங்குபவர்கள் பீமரதசாந்தி
பூஜையும், 80வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமமும் செய்வதற்கு
மிகவும் புகழ்பெற்ற தலம்.

இத்தல நாயகி அபிராமி மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள்
தன்னை வந்து வழிபடுபவர்களுக்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தை பாக்கியம்,
கல்வி கேள்விகளில் ஞானம் ஆகியவற்றை வாரி வழங்குகிறாள். அமிர்தகடேசுவரரை வழிபட்டால்
துயரங்கள் போக்கி இன்பம் தருகிறார்.

வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு
ஆகியனவும் தந்தருள்கிறார். இருதய நோய் உள்ளவர்களும், நோய்களால்
பாதிக்கப்பட்டவர்களும் இத்தலத்திற்கு வந்து சப்த திரவிய மிருத்ஞ்ய ஹோமம் செய்து
வழிபட்டு பலனடைகிறார்கள்.

திருவிழா: எம சம்ஹாரம் சித்திரை மாதம்
மகம் நட்சத்திரத்தன்று 18 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 6ம் நாள் கால சம்ஹார மூர்த்தி
வெளியே வருகிறார். கார்த்திகை சோமவாரத்தில் 1008 சங்காபிஷேக வழிபாடு, நவராத்திரி,
மார்கழி விவிதபாதம், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களும் இங்கு
கொண்டாடப்படுகிறது. தவிர தை அமாவாசையன்று அபிராமி அந்தாதி பாராயணம் பாடி நிலவு
காட்டி வழிபடுதல் இங்கு விசேஷம்.

எப்படி செல்வது?: மயிலாடுதுறை-
நாகப்பட்டினம் வழியில் அமைந்துள்ளது திருக்கடையூர். இத்தலத்துக்கு காரைக்கால்,
சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறையிலிருந்து அடிக்கடி
பஸ்கள் உள்ளது. - சிவா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அபிராமி.... அபிராமி... Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக