புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
40 Posts - 63%
heezulia
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
232 Posts - 42%
heezulia
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 1:53 am

First topic message reminder :

( டாக்டர். அண்ணா பரிமளம் )


அண்ணாவின் இளமைக் காலம்

அறிஞர் அண்ணா பிறந்தது பல்லவ நாட்டின் தலைநகரம் காஞ்சி. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் புத்தர் காஞ்சிக்கு வந்து சமயத் தொண்டாற்றியிருக்கிறார். காஞ்சிபுரத்துக்கு யுவான் சுவாங் சீனயாத்ரிகன் அசோகன் மணிமேகலை ஆகியோர் வந்து சமயத் தொண்டாற்றிருக்கிறார்கள்.

மிகப்பெரிய வடமொழி பல்கலைக்கழகம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு இருந்திருக்கிறது.

காஞ்சியில் இருந்து தர்ம பாலர் எனும் பேராசிரியர் நாளந்தா பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருக்கிறார்.

திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் பிறந்து காஞ்சியில் கல்வி வள்ளல் பச்சையப்பர் பிறந்த ஊர்.

இசைக் கலையில் சிறந்த நயனா பிள்ளை பிறந்த ஊர்.

கல்வி, கலை இவைகளில் சிறந்திருந்த காஞ்சி நெசவுத் தொழிலிலும் பெயர் பெற்று இருந்தது.

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் தேதி நடராசன் - பங்காரு இணையினருக்கு அண்ணா பிறந்தார்.

தொடக்கக்கல்வியும் உயர் நிலைக் கல்வியும் காஞ்சி பச்சையப்பர் கல்வி நிறவனங்களில் பயின்றார். தெய்வீக நம்பிக்கைக் கொண்டது அண்ணாவின் குடும்பம். ஆலய வழிபாட்டிற்கு அண்ணா கூட்டம் குறைவாக உள்ளக் கோயிலுக்கே செல்வார்.

பள்ளிக்குச் செல்லும் போது தானே மாட்டு வண்டி ஓட்டிச் செல்வார்.

அண்ணாவின் குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். அண்ணாவின் சிற்றன்னை இராசாமணி அம்மையார் அண்ணா அவர்களைத் தொத்தா என்றே அழைப்பார்கள். அண்ணாவை வளர்த்தவர் வழிகாட்டியாக அண்ணாவின் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர், அவர்தான்.

உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே அண்ணாவிடம் பொடி போடும் பழக்கம் தொற்றிக் கொண்டது. பத்தாம் வகுப்பு முடித்ததும், மேலே படிப்பைத் தொடர முடியாமல், குடும்ப சூழ்நிலைக் காரணமாக காஞ்சி நகராட்சியில் எழுத்தராகச் சேர்ந்து ஆறு மாதம் பணியாற்றினர்.

அண்ணா அவர்களை அவருடைய தாய் தந்தையர் அந்த நாளில் மதப்பற்றும் தெய்வ நம்பிக்கையும் உள்ளவராகவே வளர்த்தனர். அண்ணாவுக்கு அருந்துணையாக இருந்து ஆளாக்கி விட்ட அவருடைய சிற்றன்னையும்(தொத்தா) அதற்கு விதிவலக்காக இருக்கவில்லை.

இன்று பகுத்தறிவு இயக்கத்தின் தனிப் பெரும் சுடராய் ஒளிவிட்டுத் திகழும் அண்ணா, இளமைப் பருவத்தில் ஆலய வழிபாட்டைத் தவறவிடாத இளைஞராகத்தான் திகழ்ந்து கொண்டிருந்தார். ஆலய வழிபாட்டில் தவறாத அவர் அதிலும் ஒரு புதுமையைக் கையாண்டார். எந்த தோயிலில் கூட்டம் அதிகம் இருக்குமோ அங்கு செல்லாமல், கூட்டம் குறைவாக உள்ள கோயிலுக்குச் சென்று தெய்வ வழிபாடு செய்துகொண்டு வந்தார். கூட்டம் இல்லாத நேரத்தில் தனியாகக் கோயிலுக்குச் செல்வதில் அவர் பெரிதும் விருப்பம் உள்ளவராகவே விளங்கினார்.

எல்லா மக்களும் கூட்டமாகச் சென்று இடநெருக்கடியில் திண்டாடாமல், கூட்டம் குறைவாக உள்ள இடத்துக்குச் சென்று வழிபடுவோம் என்ற கொள்கையை இளமைப் பருவத்தில் அடாப்பிடியாகக் கைக்கொண்டிருந்தார். எல்லோரும் செல்லும் போயிலுக்கு அவரும் போவதுண்டு; ஆனாலும் கூட்டமே அங்கு இல்லாத நேரமாகப் பார்த்துத்தான் செல்வது வழக்கம்.

இளமையில் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தமான கடவுள் பிள்ளையார்தான்! பிள்ளையாருக்கு இளம் வயதில் பூஜைகளும் செய்வதுண்டு. பிள்ளைப் பருவத்தில் பிள்ளையார் பக்தராக அண்ணா விளங்கியிருந்தார் என்றால் பலருக் ஆச்சரியமாக இருக்கும். காஞ்சியிலுள்ள அதிகம்பேர் கவனத்தில் கவராத புண்ணிய கோடீசுவரர் கோயில் என்ற சிறிய கோயிலுக்குத்தான் அண்ணா அடிக்கடி சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.



நொண்டிச் சாக்கு

பிள்ளைப் பருவத்தில் அண்ணா விளாயாட்டில் ஆர்வம் உள்ளவராகவே இருந்தார். தன்னொத்த இளம்பருவத் தோழர்களுடன் கலந்து கேரம் விளையாடுவதில் அவருக்கு அளவு கடந்த ஆனந்தம். ஓய்வு கிடைக்கின்ற நேரங்களிலெல்லம் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு கேரம் விளையாடியே பொழுதைக் கழிப்பார். அதைப்போலவே சீட்டாடுவதையும் பிற்காலத்தில் பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.

விளையாட்டில் ஆர்வம் உண்டென்றாலும் பள்ளியில் நடக்கும் டிரில் வகுப்புக்கு அதிகம் போவது கிடையாது. பொதுவாகவே அண்ணாவுக்கும் உடற் பயிற்சிக்கும் அதிகம் சம்பந்தமில்லை. அதிகத் தேகப் பயிற்சி பெற்றவருமல்ல அன்பதை அவரது உடலும் உயரமும் காட்டும். உடற்பயிற்சி வகுப்புக்கு, பள்ளி நாட்களில் அண்ணா போனது இல்லை. இவரது விருப்பத்துக்கு ஏற்ப இவரது குடும்பத்தினரும் இருந்தார்கள். டிரில் வகுப்புக்குப் போகாமல் இருக்க ஒரு உபாயம் சொல்லிக் கொடுத்தார்கள். டிரில் வகுப்புக்கு போகாமல் இருக்க வேண்டுமானால் காலில் கட்டு போட்டுக்கொள் என்பாராம் அண்ணாவின் தாத்தா. அதன்படி அண்ணாவும் காலில் சிவப்பு மையைக் கொட்டி, கட்டும் போட்டுக் கொள்வார். சுளுக்குபோல நொண்டிச் சென்று, கால் வலிக்கிறது சார் என்பாராம். டிரில் வாத்தியாரும் அண்ணாவை வீட்டுக்கு அனுப்பி விடுவாராம்.


மாமியார் அனுபவம்

அண்ணா பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, வீடு வெகு தூரத்தில் இருந்தது. ஆகவே அவர் வீட்டுக் வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்குப் போவது கஷ்டமாக தோன்றிய காரணத்தால், அவரது பெற்றோர்கள் பள்ளிக்கு அருகிலேயே தங்கள் உறவினர் வீட்டில் பகல் உணவுக்கு எற்பாடு செய்திருந்தார்கள். அந்த வீட்டின் நிலையோ மிகவும் விசித்திரமாக இருந்ததை அண்ணா சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்.

அண்ணா சாப்பிட ஏற்பாடாகியிருந்த அந்த வீட்டுக்குரிய மாமியார், வீட்டில் உயர்ந்த பொருளாக இருந்தால் அதை அலமாரியில் வைத்துப் பூட்டி விடுவார்களாம். அண்ணா அவ்வீட்டுக்குச் சாப்பிடப் போனதும் வீட்டிற்குரிய மருமகள் அண்ணாவுக்கு சாதம் போட்டுவிட்டு, மாமியாரை அழைத்து, சாதம் போட்டுவிட்டேன், உருளைக் கிழங்கு வறுவல் வேண்டும் என்று சொன்னால், மாமியார் சாவியைச் கொடுத்து அனுப்பி அதை எடுத்துக்கொண்டு வந்து அண்ணாவுக்கு வைத்த விறகு, அதனை மீண்டும் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிடுவார்களாம் அந்த மாமியார்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:15 am

பெரியாரின் திருமணம் என்ற பெயரால் ஒரு ஏற்பாடு

1949-ஆம் ஆண்டில், பெரியார் அவர்கள், இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த திரு இராசகோபாலச் சாரியரரைத் திருவண்ணாமலையில் தனியாகச் சந்தித்துப் பேசினார், தம் சொந்தப் பிரச்சினை குறித்துப் பேசினேன் என்ற செய்தித்தாள்களில் செய்தி வெளியிட்டார். பின்னர் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், பண்ணுருட்டியில் நடைபெற்றப் பொதுக்கூட்ட நிகழச்சியிலும் கலந்துகொண்ட அறிஞர் அண்ணா அவர்கள், மேடையிலேயே பேசும் போது, நேருக்கு நேராக திரு.இராசகோபாலாச் சாரியாரை ஏன் சந்தித்தீர்கள்? என்ன நோக்கம்? தங்களுக்கு என்று சொந்தப் பிரத்சினை என்ன இருக்க முடியும்? இயக்கத்திற்கு அப்பாற்பட்டதாக எந்த ஒரு பிரச்சினையும் திராவிடக் கழகத் தலைவராக இருக்கும் தங்களுக்கு இருக்க நியாயமில்லையே! என்று கேட்டார்கள். பெரியார் அவர்கள் இரண்டு இடங்களிலும் எந்த ஒரு விளக்கமும் கூறவில்லை.

ஆனால், சில நாட்கள் கழித்துப் பெரியார் அவர்கள், இயக்கத்தின் பாதுகாப்புக் கருதியும், எதிர்கால நலங்கருதியும் திருமணம் என்ற பெயரால் இரு ஏற்பாடு செய்யப்போகிறேன். எனக்கு உதவியாளராகவும், எனது நம்பிக்கைக்கு உரியவராகவும், இருந்துவரும் மணியம்மையாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். இதனைத் தடுக்கவே அல்லது எதிர்க்கவே எவருக்கும் உரிமையில்லை என்னும் கருத்துப்பட அறிக்கையொன்று வெளியிட்டார்கள்.

அந்த அறிக்கை இயக்கத் தோழர்கள் பெரும்பாலானோர்க்கும் பேரதிர்ச்சியையும், பெருங்குழப்பத்தையும், பெருத்த வருத்தத்தையும் அளித்தது எல்லோரும் செய்வது என்ன என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் அறிஞர் அண்ணா அவர்கள், பெரியாரின் பெர்லின் பயணம்! என்னும் தலைப்பிட்டு, நீண்டதொரு கட்டுரையைத், திராவிடநாடு இதழில், பெரியாரின் போக்கை எதிர்த்தும், அவரின் திருமணம் என்ற ஏற்பாடு தவறானது என்பதைச் சுட்டிக்காட்டியும், கழகத்தின் நலங்கருதி அந்த ஏற்பாட்டைப் பெரியார் கைவிட வேண்டும் என்று வற்புறுத்தியும் வெளியிட்டார்கள்.

அறிஞர் அண்ணாவின் அந்தக் கட்டுரை கழகத் தோழர்கள் பலருக்கும் ஆறுதலையும், விளக்கத்தையும், தெளிவையும் தந்தது. திராவிடக் கழகத்தின் முன்னணியினர் - செயல்வீரர்கள் பலரும் பெரியாரின் போக்கை எதிர்த்தும், அறிஞர் அண்ணாவின் கருத்தை ஆதரித்தும் நாட்டின் நாலாப் பக்கங்களிலிருந்தும் முடங்கல்கள் எழுதி திராவிடநாடு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அப்பொழுது நான் அண்ணாவிற்குப் பக்கத்துணையாக இருந்து, திராவிடநாடு இதழில், கட்டுரைகளை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்தேன். பெரியாரின் போக்கை எதிர்த்து முடங்கள் எழுதியோரின் பெயர்களைத் தொகுத்து, அவற்றைப் பட்டியலாகத் திராவிடநாடு இதழில் வெளியிட்டேன். அந்தப் பட்டியலுக்குக் கண்டனக் கணைகள் என்ற தலைப்பை எடுத்துவிட்டுக் கண்ணீர்த் துளிகள் என்று போடும்படிக் கூறினார். நான் ஏன் என்று கேட்டேன். நம்மை ஆளாக்கிவிட்ட பெரியாரைக் கண்டிக்கும் வயதோ-உரிமையோ-தகுதியோ நமக்கு இல்லை. நாம் கண்டித்தால் நம்மீது நாட்டு மக்களுக்கு அனுதாபம் ஏற்படாது. பெரியாரின் போக்கு கண்டு, நாம் வருந்திக் கண்ணீர் விடுகிறோம் என்றால்தான், நாடு நம்மை மதிக்கும். நம்மீது அனுதாபம் வைக்கும்; நம்மை ஆதரிக்கும் என்றார். அறிஞர் அண்ணாவின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, அண்ணா அவர்கள் கூறியபடியே, கண்ணீர்த் துளிகள் என்ற தலைப்பின் கீழ்ப் பெயர்களின் பட்டியலை வெளியிட்டேன்.

அப்பொழுது பெரியார் அவர்கள் மணியம்மையாரோடு ஏற்காட்டிற்குப் போய்த் தங்கிவிட்டார்கள். பெரியாரிடம் வேண்டுகோள் விடுக்க அறிஞர் அண்ணா அவர்களும், நானும், பிற முக்கிய நண்பர்களும் சேர்ந்து, தோழர் கே.கே.நீலமேகம் தலைமையில் ஒரு தூதுக்குழுவினையும், தோழர் எஸ்.குருசாமி தலைமையில் மற்றொரு தூதுக்குழுவினையும் ஏற்காட்டிற்கு அனுப்பிவைத்தோம். அவற்றால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. 1949 ஆகஸ்டு 9-ஆம் நாள், பெரியார் மணியம்மையாரைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டுவிட்டார் என்ற செய்தி எல்லா ஏடுகளிலும் வெளிவந்துவிட்டது. நம்பிக்கையெல்லாம் போய் நாங்கள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றோம்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:15 am

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றம்

பெரும்பாலான கழகத்தவர்கள் அடுத்து எடுக்கக் கூடிய முடிவு பற்றிப் பலவகையான கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். நான், தோழர் ஈ.வெ.கி.சம்பத், தோழர் கே.கே.நீலமேகம், தோழர் சேலம் ஏ.சித்தையன், இளவல் செழியன் போன்றவர்கள் நாம் பெரும்பான்மையோர் வலிவைப் பெற்றிருப்பதால், திராவிடக் கழகம், அதன் பெயரில் உள்ள சொத்துக்கள், விடுதலை நிறுவனம் ஆகிய அனைத்தையும் கையகப்படுத்தி நாமே நிருவாகப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பல நாட்கள் வாதிட்டு வந்தோம்.

எங்களுடைய உணர்வையோ, கருத்துக்களையோ, திட்டங்களையோ அறிஞர் அண்ண அவர்கள் அறவே ஏற்றுக்கொள்ளவில்லை. திராவிடக் கழக அமைப்பையும், சொத்துக்களையும் அப்படியே பெரியாரிடத்தில் விட்டுவிட்டு, புதிய கழகத்தைப் புதிய கொடியுடன், புதிய அமைப்புடன் துவக்கலாம் என்றும், பெரியாரோடு மோதுதலைத் தாம் அறவே விரும்பவில்லை என்றும், பெரியாரிடம் கற்றுக்கொண்ட கொள்கைகளையும், குறிக்கோள்களையும் காப்பாற்றி வளர்ப்பதுதான், நம்முடைய கடமையாக இருக்கவேண்டும் என்றும், அண்ணா அவர்கள் வாதிட்டு வந்தார்கள். எந்த முடிவு எடுப்பது என்பதில் தெளிவு ஏற்படாமலேயே பல நாட்கள் கடந்தோடிவிட்டன.

பெரும்பாலான கழகத் தோழர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கிடந்தனர். இறுதியில், அண்ணாவிடம் வாதிட்டு வந்த நாங்கள் எல்லோரும் வேறு வழியில்லாமல் அண்ணாவின் கருத்தை முழு மனதோடு ஏற்றுக்கொண்டோம். 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள், சென்னை பவளக்காரத் தெருவில், திரு.திருவொற்றியூர் சண்முகம் அவர்கள் வீட்டின் மாடிப் பகுதியிலுள்ள கூடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கழகம் துவக்கப்படவேண்டியதன் இன்றியமையாதக் காரணகாரிய விளக்கங்கள் அடங்கிய நீண்ட அறிக்கையைக் குழுமியிருந்த கழக முன்னணியினரிடம் படித்துக் காட்டி, நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை, அறிஞர் அண்ணா அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனை வரலாற்றுச் சிறப்புமிக்க பேறு படைத்த ஒரு செயலாக எண்ணி இன்றும் இறும்பூதெய்துகின்றேன்.
(நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:16 am

தந்தை பெரியாருடன் அண்ணா வடநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பெரியாரின் தமிழ் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்பதே அண்ணாவின் வேலை. லக்னோ பல்கலைக் கழகத்தில் பெரியார் உரையாற்ற அண்ணா அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அங்கிருந்த மாணவர்கள் அண்ணாவைச் சற்று நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றுமாறு கேட்க, அண்ணா திரும்பி தந்தை பெரியாரிடம் தமிழில் அதை மொழிபெயர்த்து அனுமதி கேட்க, ஐயா அவர்கள் நான் என் தலைவரின் பேச்சை மொழிபெயர்க்க வந்திருக்கிறேன், பேச இயலாது என்று ஆங்கிலத்தில் அவர்களிடம் சொல் என்று சொல்ல, அண்ணாவும் அதை அப்படியே மாணவர்களிடம் மொழிபெயர்த்துக் சொன்னாராம்.

காங்சீபுரத்தில் அண்ணாவின் வீடு இருந்த தெருவுக்குப் பெயர் வரகுவாசல் தெரு. இதற்கு வடக்கே இருப்பது நிமந்தக்காரத் தெரு. இங்கு தோழர் டி.பி.எஸ்.பொன்னப்பாவுக்கு சொந்தமான ஒரு சிறு வீட்டில் 1942 மார்ச்சு 8-ம் தேதி திராவிடநாடு ஏடு தொடங்கப்பட்டது. தோழர் டி.பி.எஸ்.பொன்னப்பர் பெரிய செல்வந்தார். அண்ணாவின் பள்ளித்தோழரும், எல்லோரும் அறிந்தவருமான தோழர்.சி.வி.இராசகோபால் அவர்களுக்கு உறவினருமாவார்.

திருச்சி மாவட்டம் கரூரில் விபூதியணிந்த சாமியாராக இருந்தவர். ஈழத்து சிவானந்த அடிகள், கரூரில் சிவானந்த ஆசிரம் ஒன்று வைத்திருந்தார். இந்தி எதிர்த்து முதல் குரல் கொடுத்ததோடு சிறைக்கும் சென்றார். சிறையில் இருந்த அண்ணாவுடன் தொடர்பு எற்பட்டது. சிறைவாசம் முடிந்ததும் காஞ்சிக்கே வந்துவிட்டார். கரூரில் இருந்த தன் ஆசிரமத்தைக் கலைத்துவிட்டார். காவியாடையை உதறித்தள்ளிவிட்டு வெள்ளாடை அனிந்தார். சிவானந்தத்தைவிட்டு ஈழத்து அடிகளானார். ஈழத்து அடிகள் அண்ணா திராவிட நாடு இதற் தெடங்கியதும் அதில் மேலாளர் ஆனார்.

1942-ல் நான் சென்னை மாவட்ட ஜஸ்டிஸ் கட்சி - சுயமரியாதைச் சங்கம் ஆகிய இரண்டிற்கும் செலாளராக இருந்தேன். திருவொற்றியூர் சண்முகம் இரண்டுக்கும் தலைவராக இருந்தார். அப்போது கூட்டங்கள் நடத்துவதற்கும், வேறு விளம்பரச் செலவுகளுக்கும் இந்நாளில் கிடைப்பது போன்று ஏழை நடுத்தர மக்களிடமிருந்து நிதி கிடைக்காது. ஒரு சில பணக்காரர்கள்தான் அதற்காகும் தொகையை மான்யமாக வழங்கி வருவார்கள். அவர்கள் ஆதிக்கம் தான் கட்சியில் மேலோங்கி நிற்கும்.

திருவொற்றியூர் சண்முகம் மிகுந்தவசதி படைத்தவர். அவர்தான் கட்சிப் பிரச்சாரச் செலவுகள் அனைத்திற்கும் பணம் தருவார்.

1945-ல் இந்திய சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற்றது - இப்போதைய பார்லிமெண்ட் தேர்தலைப் போன்றது அது. அத் தேர்தலுக்கு ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து யாரும் போட்டியிடக் கூடாதென பெரியார் அறிக்கை விடுத்திருந்தார். சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம் சுயேச்சையாக நின்றார். எந்த சுயேச்சையையும் ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் ஆதரித்து வேலைசெய்யக் கூடாதென கடுமையாக எச்சரித்தார் பெரியார்.

பெரியாரின் அறிக்கையை மீறி ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்த - திருவொற்றியூர் சண்முகத்திற்கு மிக நெருங்கிய நண்பரான, பத்மனாபன் என்பவர் பாலசுப்பிரமணியத்தை ஆதரித்து வேலை செய்தார். தேர்தல் முடிவடைந்தது. பாலசுப்பிரமணியம் தோல்வியடைந்தார். காங்கிரஸ் ஆதரவு பெற்ற அம்முசாமிநாதன் என்பார் வெற்றிபெற்றார்.

சென்னை மாவட்ட ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் குழு தேர்தல் முடிந்த அன்று மாலையே கூடியது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் வேலை செய்தவர்களை கட்சியைவிட்டு நீக்கவேண்டும் என விவாதித்தது! நான் அவர்கள் மன்னிப்புக் கடிதம் தந்தால் மன்னிக்கலாம் என்றேன். சண்முகத்தின் நண்பர் பத்மனாபன் மன்னிப்புக் கடிதம் தர மறுத்துவிட்டார். சண்முகம் அந்த நேரத்தில் ஊரில் இல்லை. நான் நிர்வாகக் குழுவின் தீர்ப்பின் படி மன்னிப்புக் கேட்க மறுத்த பத்மனாபனை கட்சியைவிட்டு நீக்கி வைத்து அறிக்கை விடுத்திருந்தேன்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:16 am

இதைக் கேள்விபட்ட அண்ணா அவர்கள் எனக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தார்கள். நான் ஜஸ்டிஸ் கட்சி எப்படி நடத்த வேண்டுமென்று விரும்பினேனோ, அது நடைபெற்றிருக்கிறது. செல்வந்தர்கள் ஆதிக்கம் கட்சியில் இருப்பதால் கட்டுபாடும் ஒழுக்கமும் இருக்குமா என ஐயப்பட்டென். ஆனால் அந்தக் கட்டுப்பாட்டை தாங்கள் நாட்டியிருக்கிறீர்கள். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று பாராட்டியிருந்தார்கள். திராவிடநாடு இதழிலும் அது பற்று விரிவாக எழுதியிருந்தார்.

வெளியூரிலிருந்து திரும்பியிருந்த சண்முகம் என்னைச் சந்தித்து தன் நண்பர் பத்மனாபன் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டதற்காக மிகவும் வருந்தினார். அவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி வாதாடினார்.

கட்சியின் வேண்டுகோளை மதிக்காதவரை மீண்டும் சேர்த்துக்கொள்ள இயலாதென நான் கூறினேன்.

அவர் மீண்டும் அதிக கோபமாக பெரியாரும் அண்ணாத்துரையும் தான் கட்சியை நடத்துகிறார்களா? என்றார். நான் அப்படி சொல்லவில்லையே! என்றேன்.

நான் பணம் தரவில்லை என்றால் உன்னால் கட்சி நடத்த முடியுமா? அண்ணாத்துரை பேசுவதால் மட்டும் கட்சி வளர்ந்துவிடுமா? என் உதவியின்றி மாதம் ஒரு கூட்டம் நடத்த உங்களுக்கு யோக்யதை உண்டா? என்றார்.

அப்படியெல்லாம் பேசாதீர்கள், யாரும் அவர்கள் வீட்டுச் செலவுக்கு உங்களிடம் பணம் வாங்கவில்லை-கட்சிக்காகத் தருகிறீர்கள். அதனால் கட்சியை உங்களுக்கு அடகு வைக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. உதவியைத் தாங்கள் சுட்டிக்காட்டுகிற முறையும் சரியில்லை எனக் கூறினேன்.

மறுநாள் சண்முகம் அவர்கள், நான் ஒழுங்காக நடக்க எனக்கு புத்தி கூறுமாறு அண்ணாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

அதற்கு அண்ணா அவர்கள் எழுதிய நீண்ட பதில் கடிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நான் பொதுவாகப் பணம் படைத்தவர்கள் என்பதற்காக யாரையுமே பெரிதாகக் கருதுபவன் அல்லன். சர். ஆர்.கே.சண்முகம் அவர்கள் உங்களைவிட பெரும் பணக்காரர். ஆனால் உங்களிடம் உள்ள மரியாதையும் பற்றும் எனக்கு அவரிடம் வருவதில்லை. உங்களுக்கு அடுத்தபடியாகத்தான் நான் அவரை மதிக்கிறேன். காரணம் உங்களிடம் உள்ள கொள்கை உறுதியினால்தான் - உங்களைத் தலைவர்களில் ஒருவராகவும் கருதுகிறேன்.

சென்னை மாவட்ட ஜஸ்டிஸ் கட்சியில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக நான் எவ்வளவு மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன் என்பதை திராவிட நாடு இதழைப் படித்தால் உங்களுக்குத் தெரியும். அவ்விதச் செயலை நிறைவேற்றிய அந்த நடராசனைப் பாராட்டுவதற்குப் பதிலாக நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக நடக்கிறார் என்று குறை கூறி எழுதியிருப்பது என்னை ஏளனப்படுத்துவதாக இருக்கிறது. ஆகவே உங்களைப் போன்றவர்கள் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகி விடுவது உங்களுக்கும் நல்லது - கட்சிக்கும் நல்லது என்று நினைக்கிறேன். என்பதாக அண்ணா அவருக்கு 15 பக்கக் கடிதம் எழுதியிருக்கிறார்.

மறுநாள் சண்முகம் டிரைவரை அனுப்பி என்னை அழைத்து வரச் சொன்னார். நான் வேலையிருப்பதாகக் கூறி டிரைவரை அனுப்பிவிட்டேன். மறுநாள் அவரே என்னை அவரது இல்லத்திற்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றார். அவரது குடும்பத்தில் நான் உரிமையோடு பழகுவேன். ஆகையால் மனைவியிடம் கூறி எனக்கு முதலில் சிற்றுண்டி வழங்கினார். பின்னர் அண்ணா எழுதிய கடிதத்தை என்னிடம் தந்து இதைப் படித்துப்பார் என்றார்.

என்னய்யா இந்த அண்ணாத்துரை பெரிய மனுஷன் - உனக்கு புத்தி சொல்லும்படி கூறி கடிதம் எழுதினால் - என்னையே கட்சியை விட்டுப் போகும்படி எழுதியிருக்கிறார். இது நியாயமா? என்றார். நீங்கள் வருந்தாதீர்கள் நான் அண்ணாவிடம் கேட்கிறேன் என்றேன். நீ என்னய்யா கேட்பது, அவர் வரட்டும் நானே கேட்கிறேன் என்றார்.

மறுநாள் அண்ணா அவர்கள் சென்னை தம்புச் செட்டித் தெருவிலுள்ள கார்னர் எஸ்டெட்டில் வந்து தங்கியிருந்தார். அங்கே போய் நான் அவர்களைச் சந்தித்து - சண்முகம் பற்றிக்கூறி அவரைக் கட்சியை விட்டே போகும்படி தாங்கள் எழுதியிருப்பது எனக்குக் கூட வருத்தமாக இருக்கிறது என்றேன்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:16 am

அவர் எப்படி ஐயா உன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி எனக்கு எழுதலாம்? நீ எடுத்த ஒழுங்கு நடவடிக்கையைப் பாராட்டி நான் காஞ்சிபுரம் முழுதும் பேசிக்கொண்டிருக்கிறேன். இவர் கட்சிக்குப் பணம் தந்து உதவுகிறார் என்பதற்காக கட்டுப்பாட்டை உடைத்தெறிய முடியுமா? என்று கூறிவிட்டு இனி அவரிடம் கூட்டம் நடத்துவதற்குப் பணம் கேட்காதே - அவரிடம் உதவி பெற்று முன்பு மாதம் ஒரு கூட்டம் நடத்தினால் - இனி அவர் உதவியில்லாமல் மாதம் ஒரு கூட்டம் நடத்தவேண்டும் என்றார்.

அண்ணாவின் வேண்டுகோளுக்கிணங்க நான் பி அண்டு சி மில் வாசலில் போய் தினசரி நண்பர்களுடன் மாலை உண்டியல் ஏந்தியபடி நின்று வேலை முடித்துவரும் தொழிலாளர்களிடம் கூட்டத்திற்கும் போஸ்டர் செலவுகளுக்கும் பணம் வசூலிப்பேன். அண்ணா கூறிவண்ணம் சண்முதத்திடம் பணம் வாங்காமல் மாதத்தில் நான்கு கூட்டங்கள் நடத்தினோம்.

இதைப் பார்த்துச் சினமடைந்த சண்முகம் பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். பெரியார் சண்முகத்தை நேரடியாகச் சந்தித்து சமாதான் செய்திருக்கிறார்.

நான்தான் கூட்டம் நடத்துவதற்கு மாதாமாதம் பணம் கொடுப்பேன். இந்த முறை அதற்குக் கூட என்னிடம் பணம் கேட்காதீர்கள். இது என்னை அவமானப் படுத்தியது போல் இருக்கிறது என வருத்தியிருக்கிறார்.

வருந்தாதீர்கள் என்று சண்முகத்திற்கு ஆறுதல் கூறிய பெரியார் உங்களிடம் பணம் வாங்காமல் எத்தனைக் கூட்டம் போட்டுவிட்டார்கள்? என்று கேட்க - சண்முகம் நான்கு கூட்டம் என்று பதிலளித்திருக்கிறார்.

நீங்கள் செல்வந்தர், உங்கள் மனம் புண்படக் கூடாது. ஆகையால் அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி பெரியார் அவர்கள் நான்கு கூட்டத்திற்கான செலவுத் தொகையைப்பெற்று கட்சி நிதியில் சேர்த்துவிட்டார்கள்.

முதலில் நான் கூறியது அண்ணா அவர்கள் அந்தக் காலத்திலேயே கட்சியில் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் விரும்பினார் என்பதற்கு எடுத்துக்காட்டு. இனிக் கூறப்போவது அவர் தொண்டுக்கு இலக்கணம் வகுப்பதாகும்.

1938-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டக்குழு அமைக்கப்பட்டது. சுவாமி அருணகிரி நாதர் தலைவராகவும் நான் செயலாளராகவும் அண்ணா அவர்கள் மாநிலக் குழுவின் செயலாளராகவும் தேர்த்தெடுக்கப்பட்டோம்.

போராட்டம் நடத்துவதற்கும் அதற்காகப் பிரச்சாரம் செய்வதற்கும் - இந்தி எதிர்ப்பு முழக்கங்கள் நிறைந்த போஸ்டர் போடுவதற்கும் அப்போது கையில் காலணா இல்லை. அன்று நூறு போஸ்டர் அடிக்க ஆகும் செலவு ரூபாய் 1.50 தான். (இப்போது 30 ரூபாய்க்கு மேல் ஆகிறது) நூறு போஸ்டர் ஒட்டக் கூலி 75 காசு. இதற்குக் கூட எங்களிடம் அப்போது வசதியில்லை. இன்னும் மவுண்ட் ரோடிலுள்ள ஒர்க்மென் பிரசில் கடன் சொல்லி அடிப்போம்.

நானும், நம்நாடு சிவஞானமும டி.வி.முருகேசனும், தேவநேசன் சங்கரய்யாவும் அண்ணா ஆகியோரும், போஸ்டர் ஒட்டுவதற்குக் கொடுக்கும் 75 காசை மீதிப்படுத்தி வேறு காரியங்களுக்குச் செலவு செய்வதற்காக - நான் போஸ்டரை எடுத்துக் கொள்ளுவேன். சிவஞானம் பசை வாளியைத் தூக்குவார், தேவநேசன் ஏணி எடுத்துக்கொள்ளுவார், அண்ணா போஸ்டர் ஒட்டுவார். கொத்தவார் சாவடியில் உள்ள லோன்ஸ் கொயர் டீ ஹோட்டலில் டீ சாப்பிடுவோம். யார் ஜோபியில் பணம் இருக்கிறதோ அவர்கள் கொடுப்போம் - இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தின் முக்கியப் பேச்சாளர் அண்ணா - அவர்தான் போஸ்டரும் ஒட்டுவார். அந்த அளவு தொண்டில் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர் அண்ணா.

அண்ணா ஏற்றத் தாழ்வு பார்க்காமல் உழைத்தது 38-ல் மட்டுமல்ல - அவர் வளர்ந்து மிகப்பெரும் தலைவராகக் காட்சியளித்த நேரத்திலும் அதேபோன்றுதான் உழைத்தார்.

1952-ம் ஆண்டு சென்னையில் தி.மு.கழக முதல் மாநில மாநாடு நடைபெற்றபோது ஒரு மாத காலம் மாநாட்டுத் திடலிலேயே தங்கி, தலையில் தலைப்பாகை கட்டி, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பந்தல் அமைப்பிலிருந்து மாநாட்டு வேலைகள் அனைத்தையும் ஒரு சாதாரணத் தொண்டனைப் போன்று செய்தார். அதேபோல திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டிலும் உழைத்தார்.

ராமாயணப் பிரச்சாரம் நாடு முழுதும் தொடரும் வகையில் - தெ.பொ.மீனாட்சி சுந்தரம், டி.என்.செங்கல்வராயன், சர்.பி.டி.ராசன், பண்டிதமணி கதிரேசன், கல்கி, எவரஸ்ட் ஓட்டல் உரிமையாளர் டி.எம்.சுந்தரம் நாராயணசாமிபிள்ளை போன்ற முக்கியஸ்தர்கள் கம்பர் மாநாடு என்று ஒன்றை கூட்டினார்கள். கம்பர் மாநாடு கூடுவதற்கு முன்னர் பெரியார் அவர்களையும் அவருடைய கொள்கைகளையும் கடுமையாகத் தாக்கி இவர்களில் பத்துப் பேர் பிரச்சாரம் செய்வதிலும் பத்திரிகைகளில் எழுதுவதிலும் ஈடுபட்டார்கள். மாநாடு சென்னை கோகலே ஹாலில் நடைபெறுவதாக இருந்தது.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:17 am

இதைக் கண்ணுற்ற அண்ணா அவர்கள் என்னிடம் வந்து, இவர்கள் ராமாயணத்திற்காக மாநாடு கூட்டட்டும், கம்பர் புகழ் பாடட்டும், வேண்டாம் என்று கூறவில்லை. எதற்காகப் பெரியாரைத் தாக்கிப் பேசும் வண்ணம் ஊரெல்லாம் கூட்டம் போடுகிறார்கள்? பெரியாரைத் தாக்கிப் பேசுவதைக் கேட்டு நாம் எப்படி வாளா இருப்பது? நாமும் இதற்குப் பதில் கூட்டம் போட வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிவிட்டு ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டிற்குச் சென்றுவிட்டார்கள்.

கம்பர் மாநாடு நடைபெற இரண்டு நாட்களே இருந்தன. இந்த இடைவெளிக்குள் போஸ்டர் அடித்து விளம்பரம் செய்து கூட்டம் நடத்த வசதியில்லாததால் - நான் வேறு ஒரு முடிவு செய்தேன் - கம்பர் மாநாட்டில் கேள்வி கேட்பது என்று.

நானும் புலவர் செல்வராஜ், சிவஞானம் மூன்று பேரும் கேள்விகள் தயாரித்து அதை அச்சிட்டோம். அதற்குக் கூட எங்களிடம் அப்போது பணம் இல்லை - வில்லிவாக்கத்தில் உள்ள டி.எம்.பார்த்தசாரதிக்குச் சொந்தமான அச்சகத்திற்குச் சென்றோம். அங்கு அவர் இல்லை. எனக்கு அச்சுக்கோக்கத் தெரியுமாதலால் நான் அதைச் செய்தேன். சிவஞானம் அதை அச்சடித்தார். அதை எடுத்துக்கொண்டு நாங்கள் மாநாட்டிற்குச் சென்றோம்.

மாநாடு தொடங்கிய சிறிது நேரத்தில் கேள்வித்தாளை ஒருவர் மூலம் மேடைக்கு அனுப்பினேன். மேடைக்குச் சென்ற அவரை செங்கல்வராயன் வரவிடாமல் கீழே தள்ளிவிட்டார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. கேள்வித்தாளை எடுத்துக் கொண்டு நானே மேடைக்குச் சென்றேன். என்னையும் மேடைக்கு வரவிடாமல் தடுத்து என் சட்டையைக் கிழித்தனர். நான் அதையும் மீறி மேடைக்குப் போனேன். இந்த நேரத்தில் பார்வையாளர் பகுதியிலிருந்த நமது தோழர்கள் ஆவேசத்துடன் நடராசனைத் தடுக்காதே! அவர் கேள்விக்குப் பதில் சொல்! என்று குரல் ஏழுப்பினர். இதை ஒட்டி அங்கு சிறு கலவரம் ஏற்பட்டது.

ராமாயணப் பிரச்சாரத்தை, பதிவு செய்து ரேடியோவில் ஒலிபரப்ப அதற்கான கருவிகளை மேயில் வைத்திருந்தார்கள். நடந்த கலவரத்தில் அது நொறுங்கிவிட்டது. மெடையிலிருந்த அனைவரும் ஓடத்தொடங்கினர் பி.டி.ராசன் மட்டும் இருந்தார். நான் மைக்கைப் பிடித்துக்கொண்டு கேள்வியைப் படிக்க முயற்சித்தேன். பி.டி.ராசன் கையைப் பிடித்துத் தடுத்து அதைப் படிக்காதே என்றார். கீழே நின்ற மக்கள் கூட்டம் நடராசனை பேசவிடு! என்று குரல் கொடுத்தது. பி.டி.ராசன் யார் உன்னை இந்தக் கேள்விகளைக் கேட்கச் சொன்னது? என்றார். நீங்கள்தான் - பெரியாரைத் தனிப்பட்ட முறையில் தாக்கி நீங்கள் செய்த பிரச்சாரம்தான். என்று பதில் கூறினேன்.

இதே நேரத்தில் ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் கம்பர் மாநாட்டின் செய்லமுறைகளை கண்டித்து அண்ணா பேசியிருக்கிறார்.

கம்பர் மாநாடாம் - வம்பர்கள் கூடுகிறார்களாம். நான் வம்பர்கள் என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஆணவத்தால் அல்ல - ராமாயணத்தை - வைதீகத்தோடும் பக்தியோடும் தொடர்பு படுத்திப் பேசுபவர்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் தங்களின் அறியாமையை உணராமல் சுயமரியாதை இயக்கத்தையும், தலைவர் பெரியார் அவர்களையும் நையாண்டி செய்து பேசிக்கொண்டிருக்கும் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் இந்நேரம் வம்புபேசிக்கொண்டிப்பர். நம் தோழர்கள் அங்கு கேள்வி கேட்பார்களோ, தன்மானத்தைக் காக்க அறிவின் துணை கொண்டு வாதம் செய்வார்களோ, மாநாடு எப்படி முடியுமோ என்று அவர்கள் ஈரோட்டு மாநாட்டில் கலந்துகொண்டபோது இங்கு என்ன நடைபெற்றதோ அதை தீர்க்கதரிசனமாகப் பேசியிருந்தார்கள்.

கம்பர் மாநாட்டில் வானொலிக் கருவிகள் சேதமடைந்ததை வைத்து என்மீது வழக்குத் தொடர கம்பர் மாநாட்டுக் குழு முயற்சி செய்தது. இதை அறிந்த அண்ணா அவர்கள் பணம் எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. வழக்கை எதிர்த்து நடத்தும்படிக் கூறுங்கள் என்று டபிள்யூபி சொளந்தரபாண்டியன் மூலம் எனக்குச் சொல்லி அனுப்பி உற்சாகமூட்டினார்கள். ஆனால் அதே சமயம் கம்பர் மாநாட்டுக்குழுவில் பங்கு பெற்றிருந்த ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்த பணக்காரர்கள் பெரியார் அவர்களைச் சந்தித்து மாநாட்டில் நான் குழப்பம் விளைவித்ததாகக் கூறியிருக்கிறார்கள். பெரியார் நடந்த நிகழ்ச்சிக்காகப் பெரிதும் வருந்தி என்னிடம் விவரம் கேட்பதாகவும் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விடுதலை யில் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி அவர்களை அனுதாபத்துடன் அனுப்பிவிட்டார்கள்.

இதனை அறிந்த அண்ணா அவர்கள் திராவிட நாடு ஏட்டில் கம்பர் மாநாட்டுக்காரர்கள் நடந்துகொண்ட முறையைக் கண்டித்தும் என் செயல்களக்கு நியாயமான ஆதரவு காட்டியும் பத்துப் பக்கங்கள் எழுதியிருந்தார்கள். பெரியார் அதைப் படித்ததும் - அவர்களே மனம் மாறி கம்பர் மாநாட்டில் என்.வி.என்.நடந்து கொண்டது சரிதான். இவர்கள் என்ன பெரிய மனுஷன்கள் என்னைக் கண்டிக்க என்று தலையங்கம் எழுதினார்கள்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:17 am

அந்தக் காலக்கட்டத்தில் நீதிக் கட்சியின் தொண்டராக சிறந்த பேச்சாளராக விளங்கிய அண்ணா அவர்கள்:

நீதிக் கட்சியாகிய திராவிட இயக்கத்தின் விடிவெள்ளிபோலத் தோன்றி - வலுவிழந்த திராவிட இயக்கத்திற்கு தனது ஆற்றல் மிக்க அடுக்கு மொழிப் பேச்சாலும், அழகு சிந்தும் கருத்து மிக்க எழத்தாலும், புத்துணர்ச்சியை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், சென்னை மாநில காங்கிரஸ் ஆட்சியில் தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்த - மூதறிஞர் ராஜாஜி அவர்களால் கட்டாய இந்தி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. தன்மான இயக்கத் தந்தை பெரியார் அவர்கள் - எதிர்த்து போராடினார். ஆயிரக் கணக்கானவர் சிறை சென்றனர். தாய்மார்கள் கைக் குழந்தைகளுடன் சிறை சென்றனர்.
தந்தை பெரியாரின் தலைமையை ஏற்று அந்தப் போராட்டத்திலே சிறை சென்று மீண்ட அண்ணா அவர்கள் திராவிட இயக்கத்தில் புதிய வரலாற்றை உருவாக்கினார்.

தந்தை பெரியாரின் குடியரசுப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவந்த விடுதலை நாளிதழில் ஆசிரியர் பொறுப்பிலிருந்து அண்ணா அவர்கள எழுதிய தலையங்கங்கள மாற்றுக் கட்சியாளர்களை மருள வைத்தது. அண்ணாவின் மேடைப் பேச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் காங்கிரஸ் இயக்கத்தவர் கதி கலங்கினர்.

அதுவரை எவரும் எடுத்துச் சொல்லாத வகையில் உலக வரலாறுகளை எல்லாம் எடுத்துக்காட்டி, அனைத்துலகிலும் என் தலைவர் பெரியாருக்கு நிகர் யார், எனக் கேட்டு அடுக்கு மொழிப் போச்சால் மக்களைக் காந்தம் போல் இழுத்த அண்ணாவின் பேச்சுக்களை இன்று நினைத்துப் பார்த்தால் கூட உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிகிறது.

சேலத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், நீதிக் கட்சியை, திராவிடர் கழகமாக மாற்றியமைக்கவும், வெள்ளையர் காலத்தில் பெற்ற - சர்.ராவ்பகதூர் - திவான்பகதூர் பட்டங்களைத் துறக்க வேண்டுமென்றும் அண்ணா கொண்டு வந்த புரட்சிகரமான தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அண்ணாவின் புகழ் ஓங்கியது.

பல்கலைக் கழகங்கள், கலைக் கல்லூரிகள் - அண்ணாவின் பேச்சுக்களுக்கு செவி சாய்த்தன. மாணவ மணிகள் அணி திரண்டனர் - குறிப்பாக - சென்னை பச்சையப்பன் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், குடந்தை அரசினர் கலைக் கல்லூரி போன்ற இடங்களில், மாணவர் பட்டாளம் திரண்டு வந்தது.

குடந்தையில் முதலாவது திராவிட மாணவர் மாநாடு 1944 பிப்ரவரி 19-ல் சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் நான் - மாணர்வகள் மத்தியில் திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த நடிகமணி என்று அண்ணாவின் திருவாயால் அறிமுகப்படுத்தப்பட்டேன். அண்ணாவின் பேச்சால் எழுத்தால் செயல் ஆற்றலால் - மாணவ மணிகள் ஈர்க்கப்பட்டதைப் போல், கலை உலகில் இருந்தவர்களும் ஈர்க்கப்பட்டார்கள்.

அக்கலை உலகினின்று ஓர் தொண்டனாக அண்ணாவை நாடி வந்தவன் நான். 1940-ம் வருடத் துவக்கத்தில், புகழ் பெற்ற அவ்வை திரு.டி.கே.சண்முகம் சகோதரர்களின் - நாடக சபை ஈரோட்டில் நல்ல நாடகங்களை நடத்தி வந்தது. அதிலே பால நடிகனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு தந்தை பெரியாரிடத்திலும், பேரறிஞர் அண்ணாவிடத்திலும் பழகிடும் வாய்ப்புக் கிடைத்தது. திராவிட இயக்கப் பகுத்தறிபுக் கொள்கைப் பற்றுக் கொண்ட என்னை பெரியவர் சங்கரையா அண்ணாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

அந்த நாள் முதல் எனது கொள்கைப் பற்றோடு, அண்ணா பற்றும் சேர்ந்து கொண்டது. அண்ணாவோடு நேசம் கொண்டேன்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:18 am

அண்ணாவின் பேச்சுக்களில், எழுத்துக்ளில் மலர்ந்த கலை மணமானது நாடக உலகிலிருந்த எம் போன்றோரை அண்ணாவோடு தோழமை கொள்ளச் செய்தது. புராண நாடகங்கள் சமுதாய நாடகங்கள் எனப் பாகுபாடின்றி, டி.கே.எஸ். நாடக சபையின் நாடகங்களை - தந்தை பெரியாருடன் அண்ணா அவர்கள் நாள்கோறும் கண்டு களித்தார். டி.கே.எஸ். நாடகக் குழுவில் நடைபெற்ற சிறந்த சமுதாய சீர்திருத்த நாடகம் - குமாஸ்தாவின் பெண். அந்த நாடகம் அண்ணா அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. விடுதலைப் பத்திரிகையில், நாடகத்தையும் நடிகர்களையும் பாராட்டி, சிறந்த தித்திக்கும் விமர்சனமொன்றை எழதினார். இதனால் அண்ணாவின் பெருமையை நாடகக் குழுவில் இருந்த அனைவரும் தெரிந்துகொண்டனர்.

நாள்தோறும் அண்ணாவை சந்தித்து அறிவுரைகளைக் கேட்பது எனது கடமையாகவிருந்தது. அத்தோடு இயக்கக் கோட்பாடுகளைக் கொண்ட நாடகங்கள் எழுத வேண்டும் அதன் மூலம் நம் கொள்கை மக்களிடம் பரவும் என, அன்பு வேண்டுகோளை அவர் முன் வைப்பேன். இதனை அண்ணாவின் பேருள்ளம் ஏற்றுக் கொண்டது. இயல்பாகவே அண்ணாவிடம் படிந்திருந்த கலை ஆற்றல் சந்திரோதயம் நாடகமாக வடிவம் பெற்றது. ஆம், சந்திரோதயம் எனும் சமுதாயப் புரட்சி நாடகத்த அண்ணா எழுதினார். காஞ்சி திராவிட நடிகர் கழகத்தைத் தோற்றுவித்தார். தானே முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்து வியப்பை ஏற்படுத்தினார், எனது கலை உலக ஆசான், அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் அண்ணாத்துரை நம்மை எல்லாம் மிஞ்சிவிட்டார், எங்களால் கூட இப்படி லாவகமாக நடிக்க முடியாது என்று புகழ்ந்தார்.

தந்தை பெரியார் என்னுடைய ஆயிரம் கூட்டமும் சரி அண்ணாத்துரையின் ஓரு நாடகமும் சரி என்ற வாழ்த்திப் பேசினார்கள். முகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும் முழுமதியைப் போல் அண்ணாவின் நாடகப் பணி ஒளிப் பெற்றது.

1944 பிப்ரவரி 25-ந் தேதி சென்னையில் வி.பி.மஹாலில், நகைச்சுவை மன்னர் - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில், சந்திரோதயம் நாடகம் நடைபெற்றது. டி.கே.எஸ். நாடகக் குழுவில் இருந்து, கொள்கை காரணமாக விலகி வந்த நான், அண்ணாவோடு, சீர்திருத்த வாலிபன் வேடத்தில் நடிக்கம் பேறு பெற்றேன். கலைவாணரின் பாராட்டும், பெரியாரின் வாழ்த்தும் கிடைத்தது.

கலைவாணரின் நட்பும் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ஆரின் வருகையும், புரட்சித் தலைவர் - எம்.ஜி.ஆர் அவர்களின் நேசமும், இலட்சிய நடிகர் - எஸ்.எஸ்.ஆரின் உத்வேகமும், என் போன்றவரின் தொண்டும் தளபதி அண்ணா அவர்களுக்கு படைக் கலன்களாக அமைந்தன.

சந்திரோதயம் நாடகத்தை அடுத்து, சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், நீதிதேவன் மயக்கம், வேலைக்காரி, ஓர் இரவு, காதல் ஜோதி என மொத்தம் ஆறு நாடகங்கள் எழுதி தானே மூன்று நாடகங்களில் நடித்து மகத்தான சாதனையை படைத்திட்டார்.

அண்ணாவின் கலை உலகச் சாதனைகள் நாடகத்துறையில் மட்டுமின்றி திரை உலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. கழகம் வளர்ந்தது கலை உலகத் தொடர்பால்.

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபை மூலம் ஓர் இரவு, அவலைக்காரி ஆகிய நாடகங்கள் தஞ்சையில் அரங்கேற்றப்பட்டு மாதக்கணக்கில் நடைபெற்றன - மக்கள் போற்றினர். அறிஞர்கள் வாழ்த்தினர்.

இயக்க மாநாடுகளில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. இளைஞர்கள் வெள்ளம் போல் திரண்டெழுந்து - அண்ணாவின் பாதைக்கு வந்தார்கள்.

கே.ஆர்.ஆர், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றங்கள் மூலம், கழகக் கொள்கைகள் பரப்பப்பட்டன - குறிப்பாகவும் சிறப்பாகவுன் நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் திரை உலகத்தில் கதிரவனைப் போல் விளங்கி திராவிட இயக்கத்தின் அண்ணாவின் கொள்கைகளை பாடல்கள் மூலமாகவும் காட்சிகள் வடிவிலும், கலை நயத்தோடு கையாண்டு வெற்றி கண்டார்.

பட்டி தொட்டியெலாம் கொள்கைகள் பரவின, கலைவாணர் வழியில் - கே.ஆர்.ஆர்., எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் அண்ணாவிற்குத் துணை நின்று - நாடக - திரைப்படத்துறைகளில் இலட்சியத் தொண்டாற்றினார்கள்.
(நடிகமணி. டி.வி.நாராயணசாமி)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:19 am

கல்லூரியில் படிக்கும்போதே அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பத்திரிகைகளில் கதைகள் எழுதவேண்டும் என்பதில் ஊக்கமும், ஆவலும் மிகுதியும் உண்டு. அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கையில், ஆனந்த விகடன், ஆனந்தபோதினி ஆகிய பத்திரிகைகளில் சில கதைகள் எழுதி வெளிப்படுத்தியிருக்கிறார்.

1935-ல் அறிஞர் அண்ணா காலஞ்சென்ற தோழர் பாசுதேவ் அவர்களோடு சேர்ந்து, அவருக்குத் துணையாக நின்று, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது பாலபாரதி என்ற வாரப் பத்திரிகைக்கு அண்ணா அவர்கள் ஆசிரியராக இருந்து, தொழிலாளர் நலம் பேணிக் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்தப் பத்திரிகை சில திங்கள்கள் நடைபெற்றுப் பிறகு நின்றுவிட்டது.

பிறகு 1936-ல் அப்பொழுது செங்குந்தமித்திரன் ஆச்சக்த்தின் நிர்வாகியாக இருந்த காஞ்சி மணிமொழியார் அவர்களோடு கூட்டாகச் சேர்ந்து நவயுகம் என்ற சிறந்த அறிவு விளக்க வாரப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்திவந்தார். பொருளாதார நெருக்கடியின் காரணமாகச் சில திங்கள்களுக்குப் பிறகு அது வெளிவரவில்லை. பின்னர் இந்தி எதிர்ப்புக் காலத்தில் 1938-ம் ஆண்டு வாக்கில் விடுதலை நிலையத்தில் ஆசிரியர் பொறுப்பேற்று அதில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் அரும்பணியாற்றினார். அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்துவன்மையைத் தமிழகத்திலுள்ள அனைவரும் அறிந்துகொள்ள அப்பொழுதுதான் சிறந்த வாய்ப்பு ஏற்பட்டது.

விடுதலையை விட்டு நீங்கிய பிறகு 1942-ம் ஆண்டில், பாஞ்சிபுரத்திலிருந்து, சொந்தப் பொறுப்பில் திராவிட நாடு வார இதழைக் கொண்டு வந்தார். திராவிட நாடு மாணவர்களையும், தமிழறிந்தவர்களையும் தமிழார்வங்கொண்டோரையும் பெரும் வகையில் இயக்கத்தில் கொண்டு வந்து சேர்த்ததோடு, நீதிக் கட்சியின் சீமான்கள், புராணப் பண்டிதர்கள், கதா காலட்சேபக்காரார்கள், பணக்காரர்கள், அரசியல் சூதாடிகள் ஆகியோரை விரட்டியடிக்கவும் ஆரம்பித்தன. அது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியுற்றுச் சிறப்புற்றோங்கி நடந்தேறி வருவதாயிற்று.

1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கியபோது அதற்குப் பக்கத்துணையாக இருக்க வேண்டி தோழர் டி.எம்.பார்த்தசாரதி. அவர்கள் முயற்சியில் அறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாலைமணி நாள் கருத்திதழ் வெளிவந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் ஊட்டம் பெறுவதற்கு அது பேருதவியாக நின்று நிலவியது. பொருளாதாரத் தட்டுப்பாட்டால் ஓராண்டு காலத்திற்குள் அது நிற்கும்படி ஏற்பட்டுவிட்டது.

கழகத்தின் முழுப் பொறுப்பிலே நாளிதழ் ஒன்று கொண்டுவர வேண்டும் என்று விடாமுயற்சியின் விளைவாக 1953 ஜுன் 15-ம் நாளிலிருந்து நம் நாடு அறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. நம் நாடு சிறந்த முழுத்திறம் படைத்த நாளிதழாக வெளிவரவேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு அதற்கான நடவடிக்கைகளில் முயற்சி செலுத்தி வருகிறார். ஓர் ஆங்கில வார இதழைத் துவக்குவதற்காக முயற்சியில் இப்பொழுது ஈடுபட்டுள்ளார். அறிஞர் அண்ணாவின் எழுத்து, பத்திரிகையுலகிலே இற்றை நாளில் நல்லதொரு புரட்சியை உண்டாக்கிவிட்டது; மாணவர் உலகை அடியோடு மாற்றிவிட்டது என்றால் மிகையாகாது.

(மன்றம், நாள்: 01-03-1954)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:19 am

ராயுடன் சில நாட்கள்

அரசியல் பேரறிஞர் எம்.என்.ராய் அவர்களுடன் நெருங்கிப் பழகும் பேற்றையும், அவருடன் சில நாட்கள் உடன் உறையும் வாய்ப்பினையும் அறிஞர் அண்ணா அவர்கள் பெற்றிருந்திருக்கிறார்கள்.

அறிஞர் ராயின் அழைப்பின் பேரில், பெரியார் ராமசாமியோடு அறிஞர் அண்ணா அவர்கள், வடநாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில் ஈடுபட்டுச் சில முக்கியமான நகரங்களில் சொற்பொழிவாற்றினார்கள். அப்பொழுது டேராடூனில் அறிஞர் ராயின் விருந்தினராக இருக்கம் வாய்ப்பு அறிஞர் அண்ணாவுக்கு ஏற்பட்டது. எம்.என்.ராயும் அவரது துணைவியார் எலென் ராயும் மகிழ்ச்சியோடு வரவேற்றார், அறிஞர் அண்ணாவோடும் பெரியாரோடும் பேசி மகிழ்ந்தார்களாம். அண்ணாவுக்கு அடிக்கடி டீ சாப்பிடுவதில் மிக்க விருப்பம் என்பதைத் தெரிந்துகொண்டார் எலென். எம்.என்.ராய் சொல்லுவதைக் குறிப்பதும், மடல்களுக்கு விடயிறுப்பதும், டைப் அடிப்பதும் ஆன செய்லகளை ராய்க்கு உதவியாக எலென்ராய் அவர்கள் செய்வார்களாம். சமையல் செய்யும்போது இருவரும் சேர்ந்தே செய்வார்களாம். ராய் அவர்களின் எளிய வாழ்வும், சலிப்படையாமல் பேசும் பண்பும், ஆழ்ந்த அறிவு.ம், அன்புச் சொல்லும் அண்ணாவின் உள்ளத்தைப் பெரிதும் கொள்ளைகொண்டுவிட்டனாவாம். எம்.என்.ராய் அவர்கள் கோவைக் கூட்டத்தில் பேசும் போது, கூட்டத்தில் எதிர்ப்புக் கூச்சலும், கலகமும் ஏற்பட, அறிஞர் அண்ணா அவர்கள் எழுந்து பேசிக் கூச்சலையும், கலகத்தையும் அடக்கியதோடு, ராய் அவர்கள் தொடர்ந்து பேசுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தார்களாம்.

தம்முடைய கருத்துப் பரவுதலுக்கேற்ற பக்குவம் தென்னாட்டில் இருப்பதால், தம்முடைய பிற்காலத்தைத் தென்னாடடிலேயே கழிக்க விரும்புவதாகக்கூட ஒரு முறை அண்ணாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ராய் அவர்கள் குறிப்பிட்டாராம்.
(மன்றம், நாள் 15-03-1954)



வெற்றிலைப் பாக்கும் மாணவப் பருவமும்

அறிஞர் அண்ணா அவர்கள், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில், இடைநிலை வகுப்பில் பயின்றுகொண்டு இருக்கும்போது, இப்பொழுது பச்சையப்பன் கல்லூரித் தலைவராக இருக்கும் பேராசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி அய்யர் அவர்கள் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். அண்ணா அவர்களின் வகுப்பிற்கு ஷேக்ஸ்பியர் பாடத்தைக் கிருஷ்ணமூர்த்தி அய்யர்தான் கற்பித்து வந்தாராம். இடைநிலை வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்போதே, வெற்றிலைப் பாக்கு ஓயாமல் போடுவது அண்ணாவின் பழக்கம். ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தி அய்யர் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும்போது, அண்ணா அவர்கள் வெற்றிலைப்பாக்குப் போட்டு மென்றுகொண்டிருந்தாராம். அண்ணா அவர்கள் ஏதோ மென்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்ட பேராசிரியர், வாயில் என்ன மென்று கொண்டிருக்கிறார்? என்று ஆங்கிலத்தில் கேட்டாராம்.

அதற்கு அண்ணா அவர்கள் வெற்றிலைப்பாக்கு என்ற தமிழில் பதில் கூறினாராம்.

வெளியில் போய் அதைத் துப்பிவிட்டு வா என்றாராம் ஆசிரியர்.

துப்பமாட்டேன் என்றாராம் அண்ணா.

ஏன் துப்பமாட்டாய்?

இனிமேல் வேண்டுமானால் போடவில்லை, இப்பொழுது துப்பமாட்டேன். ஏனென்றால், இது காசு கொடுத்து வாங்கியது

நீ இப்பொழுது போய்த் துப்பிவிட்டு வராவிட்டால் உன்னை மூன்று நாட்களுக்கு என் வகுப்பில் நுழையக் கூடாத தடை விதிப்பேன் என்றாராம் பேராசிரியர்.

வெளியே வேண்டுமானாலும் போய்விடுகிறேன். ஆனால் வாயில் போட்டிருப்பதை மட்டும் துப்பமாட்டேன் என்று வறினாராம் அண்ணா.

அப்படியானால் வெளியே போய்விடு. மூன்று நாளைக்கு வகுபில் நுழையக்கூடாது என்று கட்டளையிட்டாராம் பேராசிரியர்.

அண்ணா அவர்கள் எழுந்து விறுவிறு என்று வெளியே வந்துவிட்டாராம்.

அதற்குப்பிறகு அண்ணா அவர்கள், வகுப்பில் வெற்றிலைப் பாக்க போடுவதில்லையாம். அந்த அளவுக்கு அடங்கி நடக்க இசைந்தவர், அன்று துப்ப மறுத்ததற்குக் காரணம், போட்டுவிட்டதைத் துப்புவதில் யாருக்கும் பயனில்லை என்பதினாலேயேயாகும் என்று கூறினாராம்.

பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்க அண்ணா அவர்கள் ஒவ்வொன்றுக்கும் தமிழிலேயே பதிலிறுத்தாராம், வேண்டுமென்று!
(மன்றம் - 01.04.1954)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக