புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
34 Posts - 43%
heezulia
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
2 Posts - 3%
prajai
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
2 Posts - 3%
jothi64
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
398 Posts - 49%
heezulia
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
26 Posts - 3%
prajai
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 6:52 pm

ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார்.


கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார்.


டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். பாபர் ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே சரியான தோல்விதான் அவனுக்கு என மகிழ்ந்தார்.


ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் முஸ்லிம் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்று தன் குதிரையை நிறுத்தினார்." பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"


" நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்." இதை அவர் மிகவும் சிரமப் பட்டுக் கூறினார்.


" ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! அத்துடன் இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? " என்று சிரித்தார்.


" அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்?


எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன்"


"ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி." உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். " அரசே! அல்லா பெரியவர். எல்லோருக்கும் மரம்


பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே!"


பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. "ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே!" என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், "அரசே! இந்த மாங்கனிகள் பழுத்துப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது. என்னே அல்லாவின் கருணை?"


என்றார். "நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! " என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து "மந்திரியாரே! சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர்." என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர்.


" சற்று நிற்க முடியுமா அரசே?" என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்து விட்டுத தெனாலி ராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா?


தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். "அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம் நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்."


"தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம்." என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார்..


வெற்ற்யுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர்.



தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 6:53 pm

தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை 677196 தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை 677196 தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை 677196



தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Uதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Dதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Aதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Yதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Aதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Sதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Uதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Dதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Hதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக