புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
53 Posts - 40%
heezulia
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
34 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
181 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீமத்பகவத்கீதை


   
   

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:43 pm

First topic message reminder :

ஸ்ரீமத்பகவத்கீதை - அர்ஜுந விஷாத யோகம்

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

॥ அத ஸ்ரீமத் பகவத்கீதா॥

அத ப்ரதமோத்யாய
அர்ஜுந விஷாத யோகம்

த்ருதராஷ்ட்ர உவாச


தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:।
மாமகா: பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸம்ஜய ॥ 1.1 ॥

(திருதராஷ்டிரர் கூறினார்: புண்ணிய யாத்திரைத் தலமான குருட்ஷேத்திரத்தில் போர் புரிய விருப்பம் கொண்டு ஒன்று கூடிய பிறகு என் மகன்களும், பாண்டுவின் புதல்வரும் என்ன செய்தனர் சஞ்ஜயனே?)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:51 pm

ஸ்ரீபகவாநுவாச।

அஷோச்யாநந்வஷோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஷ்ச பாஷஸே।
கதாஸூநகதாஸூம்ஷ்ச நாநுஷோசந்தி பண்டிதா:॥ 2.11 ॥

(முழு முதற் கடவுள் கூறினார்: அறிவாளியைப் போலப் பேசும் அதே சமயத்தில் கவலைப்பட வேண்டாதவற்றிற்காக நீ கவலைப்படுகிறாய். அறிஞர் வாழ்பவர்க்காகவோ, மாண்டவர்க்காகவோ வருந்துவதில்லை.)

நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:।
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்॥ 2.12 ॥

(நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த ஒரு காலமென்றுமிருக்கவில்லை. எதிர்காலத்திலும் நம்மிலெவரும் இல்லாமலிருக்கவும் போவதில்லை.)

தேஹிநோ அஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா।
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி॥ 2.13 ॥

(உடல்பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதுபோலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா, இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.)

மாத்ராஸ்பர்ஷாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ணஸுகது:கதா:।
ஆகமாபாயிநோ அநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத॥ 2.14 ॥

(குந்தி மகனே! இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும், காலப் போக்கிலான அவற்றின் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவது போலவே, புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றனவாதலால், பரத குலத்தோன்றலே, இவைகளால் பாதிக்கப்படாமல் பொறுத்துக்கொள்ளக் கற்றுக் கொள்வாயாக.)

யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப।
ஸமது:கஸுகம் தீரம் ஸோ அம்ருதத்வாய கல்பதே॥ 2.15 ॥

(மனிதரில் சிறந்தோனோ (அர்ஜுனா), இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதவனும் இருநிலையிலும் தந்நிலை மாறாதவனுமே விடுதலைக்கு நிச்சயமாய்த் தகுதி பெற்றவனாயிருக்கிறேன்.)

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:।
உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஷிபி:॥ 2.16 ॥

(உண்மை அறிந்தவர்கள், நிலையற்றவற்றிற்கு நீடிப்பும், நிலைத்தவைக்கு முடிவுமில்லையென்று முடிவு செய்துள்ளனர். இவை இரண்டின் இயற்கைகளையும் ஆய்ந்தே இதை இவ்வாறு தீர்மானித்துள்ளனர்.)

அவிநாஷி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்।
விநாஷமவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித்கர்துமர்ஹதி॥ 2.17 ॥

(உடல் முழுவதும் பரவியிருப்பது அழிவற்றதென்று அறிவாய்@ அழிவற்றதான ஆத்மாவைக் கொல்லக் கூடியவர் எவருமில்லை.)

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண:।
அநாஷிநோ அப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத॥ 2.18 ॥

(ஜட உடல் மட்டுமே அழிவுறுவது. உடலில் வாழும் ஜீவாத்மாவோ நித்தியமானது, அளவிட இயலாதது, அழிவற்றது. எனவே பரதகுலத் தோன்றலே, போரிடுவாய்!)

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஷ்சைநம் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே॥ 2.19 ॥

(ஜீவாத்மா கொலை புரிகின்றதென்றோ, கொல்லுகின்றதென்றோ கருதுபவன் புரிந்து கொள்ளாதவனே. அறிவுள்ளோர் ஆத்மா அழிவதோ, அழிப்பதோ இல்லை என்பதை அறிகின்றார்கள்.)

ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:।
அஜோ நித்ய: ஷாஷ்வதோ அயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே॥ 2.20 ॥

(ஆத்மாவுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஒரு முறை இருந்து பிறகு அவன் இல்லாமல் போவதுமில்லை. அவன் பிறப்பற்ற, நித்தியமான, என்றும் நிலைத்திருக்கும், மரணமற்ற, மிகப்பழையவனாவான். உடல் அழிக்கப்படுவதால் அவன் அழிக்கப்படுவதில்லை.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:51 pm

வேதாவிநாஷிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்।
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்॥ 2.21 ॥

(பார்த்தனே! ஆத்மா அழிவற்றது, பிறப்பற்றது, மாற்றமில்லாததென்றறிந்த ஒருவன் யாரையாகிலும் கொல்வதோ, கொலை செய்யப்படக் காரணமாவதோ எப்படி?)

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோ அபராணி।
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி
அந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ॥ 2.22 ॥

(பழையவற்றைக் களைந்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவது போன்றே, பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.)

நைநம் சிந்தந்தி ஷஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:।
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஷோஷயதி மாருத:॥ 2.23 ॥

(ஆத்மா எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப்பட முடியாததும், நெருப்பால் எரிக்கப்பட முடியாததும், நீரால் நனைக்கப்பட முடியாததும், காற்றால் உலர்த்தப்பட முடியாததுமாகும்.)

அச்சேத்யோ அயமதாஹ்யோ அயமக்லேத்யோ அஷோஷ்ய ஏவ ச।
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோ அயம் ஸநாதந:॥ 2.24 ॥

(தனி ஆத்மா பிளக்க முடியாதது. கரைக்க முடியாதது. எரிக்கவோ, உலர்க்கவோ முடியாதது. என்றுமிருப்பது, எங்கும் நிறைந்தது, அசையாதது, என்றும் மாறாமலிருப்பது.)

அவ்யக்தோ அயமசிந்த்யோ அயமவிகார்யோ அயமுச்யதே।
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஷோசிதுமர்ஹஸி॥ 2.25 ॥

(ஆத்மா கண்ணுக்கெட்டாததும், சிந்தனைக்கப்பாற்பட்டதும், மாற்ற முடியாததுமாகும். இதை நன்கறிந்த, உடலுக்காக வருந்தாமலிருப்பாயாக.)

அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்।
ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.26 ॥

(மேலும், ஆத்மா எப்போதுமே பிறந்து, இறந்து கொண்டிருப்பதாகவே நீ எண்ணினாலும், பலம் பொருந்திய புயங்களை உடையோனோ! அதில் கவலைப்படுதற்கு என்ன உள்ளது?)

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச।
தஸ்மாதபரிஹார்யே அர்தே ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.27 ॥

(பிறந்தவன் எவனுக்கும் மரணமும், மரணப்பட்டவனுக்குப் பிறப்பும் நிச்சயமே. தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில் இதற்காகக் கவலைப்படாதே.)

அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத।
அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா॥ 2.28 ॥

(படைக்கப்பட்டவை எல்லாமே முதலில் தோன்றாதிருந்து, இடைநிலயில் தோன்றி, இறுதியில் மீண்டும் மறைகி;ன்றன. எனவே, கவலைப்பட என்ன இருக்கிறது?)

ஆஷ்சர்யவத்பஷ்யதி கஷ்சிதேநம்
ஆஷ்சர்யவத்வததி ததைவ சாந்ய:।
ஆஷ்சர்யவச்சைநமந்ய: ஷ்ருணோதி
ஷ்ருத்வா அப்யேநம் வேத ந சைவ கஷ்சித்॥ 2.29 ॥

(சிலர் ஆத்மாவை அதிசயமானது போலப் பார்க்கின்றனர், சிலர் ஆத்மாவை அதிசயமானதாக வர்ணிக்கின்றனர், சிலர் அதிசயமாகக் கேட்பவராகவும், மற்றும் சிலர் கேட்ட பின்னும் ஆத்மாவைச் சற்றும் அறியாதவராகவும் இருக்கின்றனர்.)

தேஹீ நித்யமவத்யோ அயம் தேஹே ஸர்வஸ்ய பாரத।
தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.30 ॥

(பாரத! உடலில் உறைபவன் நித்தியனாதலால் என்றும் அழிக்கப்பட முடியாதவனாக இருக்கிறான். எனவே பிறப்புடைய எந்த ஆத்மாவுக்காகவும் நீ வருந்தவேண்டாம்.)

ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி।
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ அந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே॥ 2.31 ॥

(ஒரு சத்திரியன் என்ற முறையில் உனது முக்கிய கடமையைப் பற்றிக் கருதுவாயேயாயினும், நீதிக்காகப் போர் புரிவதைக் காட்டிலும் வேறு சிறந்த கடமைகள் உனக்கில்லை. எனவே தயங்கத் தேவையில்லை.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:52 pm

யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்।
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஷம்॥ 2.32 ॥

(பார்த்தனே! வலியவரும் போர்வாய்ப்புகள் சுவர்க்கலோகத்தின் கதவுகளைத் திறந்து விடுவதால், அவற்றைப் பெறும் அரசகுலத்தோர் மகிழ்கின்றனர்.)

அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸம்க்ராமம் ந கரிஷ்யஸி।
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி॥ 2.33 ॥

(ஆனால், இந்த அறப்போரினின்று பின்வாங்கினாலோ கடமையினின்றும் தவறியதாலான தீயவிளைவுகளை நிச்சயமாய்ப் பெறுவதோடு, போர்வீரனெனும் பெயரையும் இழப்பாய்.)

அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே அவ்யயாம்।
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே॥ 2.34 ॥

(மக்கள் உன்னை என்றும் அவதூறு செய்வர். மதிக்கப்பட்ட ஒருவனுக்கு அவமானம் மரணத்தைவிட மோசமானதே.)

பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:।
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்॥ 2.35 ॥

(உன் பெயரையும், புகழையும் பற்றிப் பெருமதிப்புக் கொண்டுள்ள பெரும் போர்த்தலைவர்கள், பயத்தால் நீ களம் விட்டதாக எண்ணி, உன்னைக் கோழையாய்க் கருதுவர்.)

அவாச்யவாதாம்ஷ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:।
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்॥ 2.36 ॥

(உனது எதிரிகள் அன்பிலாதவற்றைக் கூறி உன்னைத் தூற்றுவர். இதைக் காட்டிலும் உனக்குத் துன்பம் தருவது வேறு என்ன இருக்க முடியும்?)

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்।
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஷ்சய:॥ 2.37 ॥

(குந்திமகனே! போரில் மாய்ந்து நீ மேலுலகை அடையலாம் அல்லது வெற்றிபெற்று இவ்வுலகை அரசாளலாம். எனவே எழுந்து, உறுதியுடன் போர்புரிவாயாக.)

ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ।
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி॥ 2.38 ॥

(இன்ப, துன்ப, லாப நஷ்டம், வெற்றி, தோல்வி இவைகளைக் கருதாது போருக்காகப் போர் புரிவாயாக. இவ்வாறு செயலாற்றினால், என்றும் நீ தீய விளைவுகளை அடையமாட்டாய்.)

ஏஷா தே அபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஷ்ருணு।
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி॥ 2.39 ॥

(ஸாங்க்ய தத்துவத்தின் ஆய்வறிவை உனக்கு இதுகாறும் விளக்கினேன். பலன் விளைவுகளுக்காயன்றி ஒருவன் செயல்படும் யோகத்தைப் பற்றிய அறிவை இப்போது கேள். ப்ருதாவின் மகனே, இவ்வாறான அறிவோடு செயல்பட்டால், செயல்களின் விளைவெனும் விலங்கினின்றும் நீ விடுதலை பெறுவாய்.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:53 pm

நேஹாபிக்ரமநாஷோ அஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே।
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்॥ 2.40 ॥

(இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன்னேற்றமும், மிகப் பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.)

வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந।
பஹுஷாகா ஹ்யநந்தாஷ்ச புத்தயோ அவ்யவஸாயிநாம்॥ 2.41 ॥

(இவ்வழியிலுள்ளோர் உறுதியான நோக்கமுடையோர். அவர்களது இலட்சியம் ஒன்றே. குருக்களின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளை உடையதாக ஆகின்றது.)

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஷ்சித:।
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:॥ 2.42 ॥

காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்।
க்ரியாவிஷேஷபஹுலாம் போகைஷ்வர்யகதிம் ப்ரதி॥ 2.43 ॥

(சிற்றறிவுடைய மாந்தர் வேதங்களின் மலர்ச் சொற்களால் கவரப்படுகிறார்கள். இவ்வாக்கியங்கள் உயர் கிரகங்களுக்கு ஏற்றம் பெறுதல், நற் பிறவி அடைதல், அதிகாரமடைதல் முதலான பலன் கருதிச் செய்யும் செயல்களைச் சிபாரிசு செய்கின்றன. புலன் நுகர்ச்சியையும், செல்வமிகு வாழ்வையும் விரும்புபவர் இதைவழட உயர்ந்ததேதுமில்லை என்று கூறுகின்றனர்.)

போகைஷ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்।
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே॥ 2.44 ॥

(புலன்நுகர்வு, செல்வம் இவைகளை மிகவும் விரும்புவதால் மயங்கியவர்களின் மனங்களில், பரமப்பிரபுவின் பக்தித் தொண்டிற்கான நிலையான உறுதி உண்டாவதில்லை.)

த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந।
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந்॥ 2.45 ॥

(வேதங்கள் பொதுவாக மூன்று பௌதிக இயற்கைக் குணங்களைப் பற்றியவை. அர்ஜுனா! இவை மூன்றிற்கும் மேற்பட்டவனாவாயாக. எல்லா இரட்டைகளிலிருந்தும், அடைதல் காத்தல் இவைகளுக்கான கவலைகளிலிருந்தும் விடுபட்டுத் தன்னில் நிலை பெற்றிருப்பாயாக.)

யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே।
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:॥ 2.46 ॥

(ஒரு சிறு கிணற்றால் ப+ர்த்தி செய்யப்படும் தேவைகளெல்லாமே, ஒரு பெரும் நீர்த்தேக்கத்தால் உடன் ப+ர்த்தி செய்யப்படும். அது போலவே, வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவைகளுக்குப் பின் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப்பெறும்.)

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந।
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோ அஸ்த்வகர்மணி॥ 2.47 ॥

(உனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய மட்டுமே உனக்குப் ப+ரண உரிமை உண்டு@ செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை. உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாகவும் எண்ணாதே@ செயலற்ற நிலையிலும் விருப்பங் கொள்ளாதே.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:53 pm

யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய।
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே॥ 2.48 ॥

(யோகத்தில் உறுதி கொள் அர்ஜுனா@ வெற்றி தோல்வியின் பற்றைத் துறந்து கடமையைச் செய். இதுபோன்ற மன ஒருமையே யோகமென்றழைக்கப்படுகின்றது.)

தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநம்ஜய।
புத்தௌ ஷரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ:॥ 2.49 ॥

(பக்தித் தொண்டால், பலன் நோக்குக் கருமங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு, பக்தி உணர்வுக்குப் ப+ரண சரணடையக் கடவையாக. தமது செயல்களின் பலனை அனுபவிக்க விரும்புபவர் கஞ்சர்களேயாவர்கள்.)

புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே।
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஷலம்॥ 2.50 ॥

(பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவன், இந்த வாழ்விலேயே, நல்ல, தீய செயல்களின் விளைவுகளிலிருந்தும் தப்புகின்றான். எனவே எல்லாச் செயல்களின் செயற்கலையான யோகத்திற்காய்ப் பாடுபடுவாயாக, அர்ஜுனா.)

கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:।
ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம்॥ 2.51 ॥

(சான்றோர், பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இறைவனிடம் அடைக்கலம் புகுந்து இகவுலகில் செயல்களின் பலன்களைத் துறப்பதால் ஜனன மரணச் சுழலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்றனர். இவ்விதமாக அவர்கள் துன்பங்களுக்கப்பாற்பட்ட நிலையை அடைய முடியும்.)

யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி।
ததா கந்தாஸி நிர்வேதம் ஷ்ரோதவ்யஸ்ய ஷ்ருதஸ்ய ச॥ 2.52 ॥

(மயக்கமெனும் இவ்வடர்ந்த காட்டை உன் அறிவு தாண்டிவிட்டால், இதுவரை கேட்டவை, இனிக் கேட்க வேண்டியவை இவற்றிற்கு, சமநிலையுடையவனாகி விடுவாய் நீ.)

ஷ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா।
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி॥ 2.53 ॥

(வேதங்களின் மலர் மொழிகளால் மேலும் மனங்கவரப்படாத நிலையை உன்னறிவு அடையும் போதுதான், தன்னுணர்வு ஆழ்வில் நீ திளைத்திருக்கும்போது தான், நீ தெய்வீக உணர்வை அடைந்து விட்டவனாக இருப்பாய்.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:54 pm

அர்ஜுந உவாச।

ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஷவ।
ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்॥ 2.54 ॥

(அர்ஜுனன் வினவினான்: உன்னதத்தில் இவ்வாறே நிலைபெற்ற உணர்வுடையோனின் அறிகுறிகள் யாவை? அவனது மொழி எது? எவ்வாறு பேசுவான்? எப்படி இருப்பான்? எப்படி நடப்பான்?)

ஸ்ரீபகவாநுவாச।

ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந்।
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே॥ 2.55 ॥

(பகவான் கூறினார்: பார்த்தனே! மனக் கற்பனையில் எழும் புலன் பற்றுக்களின் பலவிதங்களைத் துறந்து, எப்பொழுது ஒருவனது மனம் தன்னில் திருப்தி அடைகின்றதோ அப்போது அவன் உன்னத உணர்வில் நிலைபெறுகிறான்.)

து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:।
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே॥ 2.56 ॥

(மூவகைத் துயரங்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்படாதவனும், இன்பத்தில் மிக்க மகிழாதவனும், பற்று, பயம், கோபம் இவற்றினின்று விடுபட்டவனுமே மனம் நில பெற்ற முனிவன் என்றழைக்கப்படுகிறான்.)

ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஷுபாஷுபம்।
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.57 ॥

(நன்மை பெறுவதால் மிகக் களிப்பும், தீயவற்றால் கவலையும் கொள்ளாது, பற்றற்று இருப்பவனே ப+ரண அறிவில் நிலைபெறுகிறான்.)

யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோ அங்காநீவ ஸர்வஷ:।
இந்த்ரியாணீந்த்ரியார்தே அப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.58 ॥

(புலன்களை அவற்றின் நோக்கப் பொருள்களிலிருந்தும் ஆமை தன் உறுப்புக்களைக் கூட்டிற்குள் இழுத்துக் கொள்வதைப் போல், விலக்கிக் கொள்பவனே உண்மையாக அறிவில் நிலைபெற்றவனென்றறியப் படுகிறான்.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:54 pm

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:।
ரஸவர்ஜம் ரஸோ அப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே॥ 2.59 ॥

(புலன் நுகர்வினின்றும் உடலை உடைய ஆத்மா கட்டுப்படுத்தப்பட்டாலும் கூட புலன் நுகர்வுப் பொருட்களுக்கான சுவை இருக்கலாம். ஆனால், உயர்ந்த சுவையொன்றை அனுபவிப்பதால், அத்தகு ஈடுபாடு முழுவதுமாய் முற்றுப்பெற, அவன் உணர்வில் நிலைபெறுகின்றான்.)

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஷ்சித:।
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:॥ 2.60 ॥

(பகுத்தறிவு நிறைந்து புலன்களைக் கட்டுப்படுத்த முயலும் ஒருவனது மனதைக் கூட, சக்திவாய்ந்த புலன்கள் இழுத்துச் சென்றுவிடுகின்றன.)

தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:।
வஷே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.61 ॥

(புலன்களை அடக்கி, உணர்வை என்னில் நிறுத்துபவனே நிலைபெற்ற அறிவுடையோனாகிறான்.)

த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே।
ஸங்காத்ஸம்ஜாயதே காம: காமாத்க்ரோதோ அபிஜாயதே॥ 2.62 ॥

(புலன் நோக்கப் பொருட்களை எண்ணுவதால் ஒருவன் பற்றை வளர்த்துக் கொள்கிறான். இந்தப் பற்றினின்றும் காமமும், காமத்திலிருந்து சினமும் வளர்கின்றன.)

க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:।
ஸ்ம்ருதிப்ரம்ஷாத் புத்திநாஷோ புத்திநாஷாத்ப்ரணஷ்யதி॥ 2.63 ॥

(சினத்திலிருந்து மயக்கமும், மயக்கத்தால் நினைவு நில இழப்பும் ஏற்படுகிறது. நினைவு குழம்புவதால் அறிவு இழக்கப்பட்டதும் ஒருவன் மீண்டும் ஜடச் சுழலில் இழிந்து வீழ்கிறான்.)

ராகத்வேஷவிமுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஷ்சரந்।
ஆத்மவஷ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி॥ 2.64 ॥

(விடுதலையின் நியமங்களைப் பின்பற்றுவதன் மூலம் புலனடக்கம் செய்யக் கூடியவன் கடவுளின் கருணைக்குப் பாத்திரமாகி விருப்பு, வெறுப்புக்களிலிருந்து விடுபடுகிறான்.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:55 pm

ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே।
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஷு புத்தி: பர்யவதிஷ்டதே॥ 2.65 ॥

(தெய்வீக உணர்வில் நிலைபெற்றுவிட்ட ஒருவனுக்கு, ஜட உலகின் மூவகைத் துன்பங்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. அத்தகு ஆனந்த நிலையிலே, ஒருவனது அறிவு மிக விரைவாக நிலைபெறுகிறது.)

நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா।
ந சாபாவயத: ஷாந்திரஷாந்தஸ்ய குத: ஸுகம்॥ 2.66 ।

(உன்னதமான உணர்வு பெறாதவனுக்கு கட்டுப்பாடான மனதோ, நிலையான அறிவோ கிடையாது. இவையின்றேல் அமைதிக்கு வழியில்லை. அமைதியின்றேல் ஆனந்தம் எவ்வாறு உண்டாகும்?)

இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோ அநுவிதீயதே।
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி॥ 2.67 ॥

(கடுங்காற்றால், படகு நீரில் அடித்துச் செல்லப்படுவது போலவே, மனம் ஈர்க்கப்படும் ஒரே ஒரு புலன் கூட, மனிதனின் அறிவை அழுத்துச் சென்று விடும்.)

தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஷ:।
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.68 ॥

(எனவே, பலம் பொருந்திய புய வலிமையுடையோனே! நுகர்ச்சிப் பொருட்களினின்றும் முற்றுமாய் விலக்கிக் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களை உடையோன் நிலைத்த அறிவுடையவனாகிறான்.)

யா நிஷா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ।
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஷா பஷ்யதோ முநே:॥ 2.69 ॥

(தற்கட்டுப்பாடுள்ளவனுக்கு எல்லா உயிர்களுக்கும் இரவாக இருப்பதே எழும் நேரமாம். அவர்கட்கு எழும் நேரமோ அவனுடைய (ஆய்ந்தறியும் முனிவனுடைய) இரவாக உள்ளது.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:55 pm

ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம்
ஸமுத்ரமாப: ப்ரவிஷந்தி யத்வத்।
தத்வத்காமா யம் ப்ரவிஷந்தி ஸர்வே
ஸ ஷாந்திமாப்நோதி ந காமகாமீ॥ 2.70 ॥

(ஆசைகளின் தொடர்ந்த பெருக்கால் பாதிக்கப்படாதவன் மட்டுமே, தொடர்ந்து நதிகளின் பெருக்கால் புகப்பட்டாலும், அமைதியாய் என்றுமிருக்கும் கடல் போல அமைதியை அடைய முடியும். இத்தகு ஆசைகளைப் ப+ர்த்தி செய்ய முயற்சி செய்பவனல்ல.)

விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஷ்சரதி நி:ஸ்ப்ருஹ:।
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஷாந்திமதிகச்சதி॥ 2.71 ॥

(புலன் நுகர்விற்கான ஆசைகள் எல்லாவற்றையும் துறந்துவிட்டவனும், விருப்பங்களற்றவனும், எல்லா உரிமையுணர்வுகளையும் துறந்திருப்பவனும், பொய்த்தன்னுணர்வற்றவனுமான ஒருவனே உண்மை அமைதியை அடைய முடியும்.)

ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி।
ஸ்தித்வாஸ்யாமந்தகாலே அபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி॥ 2.72 ॥

(எந்நிலையை அடைந்தால் மனிதன் மீண்டும் குழப்பமே அடையமாட்டானோ, அதுவே தெய்வீக ஆன்மீக வழியாகும். இவ்வாறு நிலைபெற்றவன், வாழ்வின் கடைசி நேரத்திலாயினும் கூட, இறைவனின் அரசினைச் சேர்கின்றான்.)

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஸாங்க்யயோகோ நாம த்விதீயோ அத்யாய:॥ 2 ॥

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:56 pm

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத த்ருதீயோ அத்யாய:। கர்மயோகம்:


அர்ஜுந உவாச।


ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந।
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஷவ॥ 3.1 ॥

(அர்ஜுனன் சொன்னார்: " ஜனார்தன! கர்மத்தக் காட்டிலும் ஞானம் சிறந்த என்று உங்களால் கருதப்பட்டால் கேசவ! பின்னர் என்ன பயங்கரமான கர்மத்தில் ஏன் ஈடுபடுத்கிறீர்கள்?)

வ்யாமிஷ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே।
ததேகம் வத நிஷ்சித்ய யேந ஷ்ரேயோ அஹமாப்நுயாம்॥ 3.2 ॥

(குழம்பிய போன்ற பேச்சினால் என் புத்தியக் கலக்குகிறீர்கள் போலிருக்கிறதே! எதனால் நான் மேன்மய அடமேனோ அந்த ஒன்றத் தீர்மானித்க் கூறுங்கள்.)

Sponsored content

PostSponsored content



Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக