புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
80 Posts - 47%
ayyasamy ram
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Kavithas
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்ம தத்துவம்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:13 am

First topic message reminder :

ஆன்மஞானம்

ஆன்மாவும் அதன் ஆற்றலும் எண்ணிலா கோடி அண்டங்கள் பேரண்டங்கள் இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்குவது, அடிப்படையாக இருப்பது, ஒரு அணுசக்தி. அதையே சித்தர்கள் ஞானிகள் பரமாணு என்று சொல்கிறார்கள்.


பரமாணு


பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட, பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன. அதையே பரமாத்தமா என்றனர். அதே மூல அணுவின் ஆற்றலோ ஒவ்வொரு ஜீவராசிகளின் இயக்கங்களுக்கும் காரணமாக விளங்குவதால் ஜீவாத்மா என்றனர். ஆகவே ஆன்மா என்பது அளப்பறிய ஆற்றல் மிக்கது. அந்த ஆற்றல் நம்மிடம் உள்ளது, உருவமாற்றது, அதன் சக்தியை, ஆற்றலை, உணர்ந்தவர்கள் மட்டுமே பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.

நம்மிடம் உள்ள மகத்துவம் வாய்ந்த ஆற்றல் மிக்க ஆன்மாவின் சக்தியை உணர்ந்து அதை நமக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான் ஆன்மஞானமாகும். ஆனால் நம்மிடம் உள்ள ஆன்மாவின் ஆற்றலைப் புரிந்து கொள்ளாமல், நம்மிடம் உள்ள ஆற்றலை எப்படி வெளிக்கொணர்வதுடூ எப்படி இயக்குவதுடூ எனத்தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கையில் பலவித அல்லல்களுக்கு ஆளாகிறோம். இப்படிப்பட்ட அல்லல்களிலிருந்து விடுதலை பெற முயன்று வெற்றி கண்டவர்கள்தான் ஞானிகளும், சித்தர்களும்.

இறைவன் என்பவன் யார்?

எண்ணிலா கோடி அண்ட பேரண்டங்களின் இயக்கம், கோடான கோடி அணுக்கள், அணுக்கள் தொகுப்பான ஜீவராசிகள் அனைத்திலும் உள்ளும், புறமும், மேலும், வெளியும் அதுவதில் உயிர்சக்தியாக விளங்கும் பேராற்றலே இறைவன். இதை வள்ளலலார் பெருமான் சொல்லும்போது,

குலவு பேரண்டப்பகுதியோர் அனந்த
கோடி கோடிகளும் ஆங்காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
நிகழ்ந்த பற்பல பொருள் திரளும்
விலகுறாது அகத்தும் புறத்தும் மேலிடத்தும்
மெய்யறி வானந்தம் விளங்க
அலகுறாது ஒழியாது அதுவதில் விளங்கும்
அருட் பொருஞ்சோதி என் அரசே.

இந்த மாபெரும் இயக்க சக்தியான இறைவன் மனம் என்னும் மாயக்கருவியால் பிறந்தது முதல் இறக்கின்ற வரை நமது உடம்பை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த இயக்க சக்தி நமது உடலில் எப்படிச் செயல்படுகிறது என அறிந்து அதே இயக்க சக்தியை நாம் உணர்ந்து அந்த சக்தியை நம்முடைய உடலையும், உயிரையும் பேணப்பயன்படுத்தும் வழிவகைகளை தெரிந்து கொள்வதே ஆன்மஞானம். ஆன்மஞானம் பெற்றால் நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து கொண்டு, வெற்றி கண்டு நிம்மதியாக வாழலாம்.



ஆன்ம தத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:46 am

ஆன்ம தெளிவு

ஆன்மா அறிவின் தெளிவே ஞானம். அது அறம், தவம் என்கிற முயற்சியுள்ளவர்கட்கே கிடைக்கும். தவப்பயிற்சி, தத்துவங்களின் விளக்கங்களை அறிந்தவர்களுக்கே அது சாத்தியம். அவர்கள் மட்டும்தான் மற்றவர்க்கு தொட்டுக் காட்டியும், விளக்கிக் கூற முடியும், ஞானத்தை அளிக்க இயலும். எங்கேயோ வெட்டவெளியில் தோன்றிய பராமாத்மாவில் தோன்றியதுமான ஜீவாத்மா, பரமாத்மாவிற்கு ஆதாரம் இல்லை. அதையே வள்ளலார், தாய் வயிற்றில் பிறவாது தானே முளைத்தமைக்கு தெண்டனிட்டேன் என்று சொல்லடி என்ற பாடல் மூலம் அறியலாம். ஜீவாத்மாவிற்கு பரமாத்மா ஆதாரம். பரமாத்மாவிற்கு ஜீவாத்மாவிற்கு என்ன ஆற்றல் உண்டோ அதே ஆற்றல் ஜீவாத்மாவிலும் உண்டு. பரமாத்மா ஓர் இயற்கை. அதேபோல பரமாத்மாவில் தோன்றிய ஜீவாத்மாவும் இயற்கையின் கூறு.

பரமாத்மாவில் அளப்பறிய ஆற்றல்கள் இருக்கின்றன. அதேபோல ஜீவாத்மாவிலும் உண்டு. இந்த ஜீவாத்மாவின் அபூர்வ சக்தியை பயன்படுத்துவதே, ஆத்ம ஞானம் ஆகும். இதை அறியாமல் இக வாழ்க்கையில் சிக்கி மாயைக்கு ஆட்பட்டு நமது ஆன்மாவை பல துன்பத்திற்கு ஆளாக்குகிறோம், உண்டாக்குகிறோம். அதனால் தான் ஆன்மாவை துன்புறுத்தல் கூடாது. ஆன்மநேயம் வேண்டும் என்று சான்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆன்மாவை வதைக்க கூடாது, ஆன்மா பல துன்பங்களுக்கு ஆளாக்குகிறோம், உண்டாக்குகிறோம். அதனால்தான் ஆன்மாவைத் துன்புறுத்தக்கூடாது ஆன்மநேயம் வேண்டுமென்று சான்றோர்கள் வலியுறுத்து கின்றனர். ஆன்மாவை வதைக்ககூடாது, ஆன்மா பலதுன்பங்களுக்கு அளாகின்றது. அது எப்படி என்றால்? கடவுளைத்தேடி அடைய முயன்றும் அவனால் கடவுளைக் காண முடியாத நிலை. வாழ்வில் வறுமையெனும் பற்றாக்குறை. செய்கின்ற செயல்களின் விளைவுகளைப் பற்றி அறியாமை, அறிந்தும் அலட்சியம் செய்கின்ற நிலை, அவமதித்து அதனால் துன்பம் அனுபவிக்கும் நிலை.

ஆன்மாவின் மகத்துவம் புரியாமல், பிறர் மீது அச்சமும் பகை, துன்புறுத்தல், போன்றவற்றால் அல்லலுறும் நிலை, காமம், மோகம், மதம், மாசிகர்யம், டம்பம், ஈர்சை போன்றவைகள். மேற்கண்ட குறைகள் ஒன்றோடொன்று இணைந்து வாழ்க்கை பலவித சிக்கல்களுக்கு ஆளாகி அவற்றை லகுவாகத் தீர்க்க முடியாமல் தவிர்த்து தான் துன்புற்று, பிறரைத் துன்புறுத்தியும் வாழ்கிறான். இப்படிப்பட்ட சிக்கலான இக்கட்டான சூழ்நிலை வருகிறபோது மனிதன் தெரிந்தோ, தெரியாமலோ இந்த இக்கட்டிலிருந்து விடுதலை பெறவேண்டும் என முயல்கிறான். ஒவ்வொரு ஜீவாத்மாவிடமும் குறை நீங்கி முழுமை பெறவேண்டும் என்ற ஆர்வம் ததும்பிக்கொண்டிருக்கிறது. அதன் விளைவு சிந்தனை ஓட்டம் பிறக்கிறது, சிந்திக்கிறான், முயற்சி செய்கிறான், முயற்சியின் விளைவு செயல்களில் இறங்கி ஓராளவு உணரவும் செய்கிறான். அவன் செயலுக்கேற்ற விளைவுகளைக் காண்கிறான்.

மனிதனின் நெடுந்தூரப் பயணத்தில் பரசிந்தனை வாதிகள், சீர்திருத்தவாதிகள், வல்லுனர்கள், சித்தர் பெருமக்கள் போன்றோர்கள் பல நூல்கள் எழுதியும், போதனைகள் கூறியும் மனிதன் குறைபாடுகளை முழுமையாக நீக்க முடியவில்லை, காரணம் மனிதன் சமுதாயம் என்கிற சங்கரிப் பிணைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இருப்பின் குறைபாடுகள் எல்லாரிடமும் இருக்கின்றன காரணம் அவனின் தேவை, பழக்கம், அறிவின் வளர்ச்சி, சந்தர்ப்ப சூழ்நிலைகள் இவனைக்குறை உள்ளவனாக ஆக்குகிறது. இவற்றில் அறிவில் சிறந்த சிலர்மட்டும் சிந்திக்கிறார்கள். காரண, காரியங்களை பகுத்து உணருகிறார்கள். அதனால் தன் அளவில் பயிற்சி பெற்று தன்னுடைய குறையை நீக்கிக் கொள்கிறார்கள். இவற்றை உணர்ந்தோரால் உணர்த்தப்பெறுகிறார்கள் பலர்.

இப்படி பலர் உணர்ந்தும் உபதேசம் பெற்றாலும் அவர்களில் பலபேர் தாங்கள் பெற்ற விளக்கங்களுக்கு ஏற்ப பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் அளவு துணிவு பெறுவதில்லை. இப்படி சில பழக்கத்திற்கு ஆன்மாவை மனிதன் அடிமையாக்குகிறான். ஒவ்வொரு மனிதனும் ஒன்றை மறந்துவிடுகிறான். ஒவ்வொரு செயலும் ஆன்மாவில் பதிப்பிக்கப்படுகிறது. ஆகவே நாம் பழிச்சொல், இழிவான செயல், போன்ற பதிவுகளை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி பரம்பொருளோடு இரண்டறக் கலக்கவே நம் உடல் ஒரு கருவியாகச் செயல்படுகிறது என்பதை மறந்து உண்மைகளை உணராமல் இகவாழ்வு மாயையில் உழன்று கொண்டு இருக்கிறார்கள்.



ஆன்ம தத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:47 am

ஆன்மா அறிவு முதிர்ந்து சிந்தனையில் தான் தெளிவு பெறும்போது தெளிந்தவர் சுட்டிக்காட்டி உணர்த்தும் போது அறிவு விழிப்பு நிலை அடைகிறது. அதையே வள்ளலார் பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்று கூறுகிறார்.

பசித்திரு, தனித்திரு, விழித்திரு

பசித்திரு என்றால் எப்பொழுதும் ஞானப்பசியோடு இரு என்பதாகும். தனித்திரு என்பது மாயையில் புலன்களை செலுத்தாமல் தனித்திரு என்பதாகும். விழித்திரு என்பது ஆன்மா மாசுபடாமல் விழிப்போடு இருப்பது என்பதாகும். இறைவனைக் காணவேண்டும் என்ற ஆர்வத்தில் தன் அறிவின் விளக்கத்தால் குறையைப்போக்கிக் கொண்டவர்கள் சிலர். அப்படிப்பட்ட குருமார்களால், போதனைகளால் பயன் பெற்றவர்கள் பலர். அப்படி பயன்பெற்ற மனிதர்கள் தாங்கள் குருமார்க்களுக்கு அளித்த மதிப்பையும் மாதரியாதையையும் கண்டு தாமும் குருநாதர் ஆகவேண்டுமென்று ஒரு சிலர் ஞானிகளைப் போன்று, துறவிகளைப் பலர் வேடமிட்டு நடிக்கிறார்கள். மக்களை மயக்கி, பொருளையும் சுரண்டி வாழமுற்பட்டார்கள். இதனால் தூய்மையான மெய் ஞான விளக்கத்திற்கு ஒரளவு களங்கம் ஏற்பட்டது. எப்படி இருப்பினும் இதன் உண்மைகளை அறிந்தவர்கள் முயற்சி இப்படிப்பட்ட தீய்மைகளை வென்று வெற்றியடைந்த கொண்டுதான் இருக்கிறது.

* இன்பம், துன்பம் என்கிற வாழ்வு நிலை.
* இயற்கை விதிக்கப்பட்டது ஊழ்வினை, இறைநிலை.
* சமுதாய அமைப்பு நீதி, அறநெறி.
* அரசாங்கம்.

மேற்கண்ட நிலைகளில் மனித ஆன்மாவானது பட்டு தெளிவடையும் தெளிவுதான் வாழ்வை உய்விக்கவல்லது. துன்பங்களை களைந்து இன்பத்தைக் காக்க வல்லது. மேற்கண்ட துறைகளில் வெற்றி காணவே சான்றோர்கள் நல்ல நூல்களை எழுதி சிறப்பாக வாழவழி வகைகளைச் கூறிச் சென்றார்கள். அவற்றில் கதை வாயிலாகக் கூறுகின்ற நூல்கள் பகவத்கீதை போன்றது, கற்பனையாகக்கூறும் கதைகள் சில இராமாயணம் போன்ற காவியங்கள். இத்தகைய நூல்களை படிப்பதின் மூலம் வாழ்க்கையின் அனுபவங்களின் மூலம் பயின்று அறநெறி பிறழாது சத்தியம், தர்மம், நீதி, என்கின்ற ஒழுங்கு முறையில் உறுதியான பழக்கத்தை கடைபிடித்து வாழ்ந்தால் மனிதனுடைய வாழ்வு சிறப்பாகவும், இன்பமாகவும், அமைதியாகவும் அமையும்.

இதுவே ஆன்மீக பயணத்திற்கு திறவுகோலாக அமையும். இந்த உயர் நெறியே அன்மீக வாழ்வு என்று கூறலாம். ஆன்மாவின் நிலையறிந்த அதன் இயல்பையும் உணர்ந்து எண்ணம், சொல், செயல் இவற்றால் அறநெறி பிறழாது வாழ்ந்து வருவது ஆன்மீக வாழ்வாகும். இப்படி அறநெறி போற்றி ஒழுகி வாழ்வதால் ஆன்மா தூய்மை பெற்று முழுமை அடைகிறது. இது ஒரு சிறப்பான ஆன்மீகப் பயணம் என்று கூறலாம். தன்னுடைய அறிவின் தெளிவால் இப்படி வாழ்க்கை மேற்கொள்வதால் இவற்றை ஒருவகை ஆன்ம ஞானம் என்று கொள்ளலாம். இன்றைய சமுதாயம் மேம்பாடு அடைய வேண்டுமென்றால் முதலில் சமுதாய நிர்வாகம், அரசியல், பொருளாதாரம் போன்ற துறையில் உள்ள சீர்கேடுகளைக் களையவேண்டும். எங்கும் தூய்மை நிலவ வேண்டும். ஆட்சி சட்டங்களை கருவியாகக் கொண்டு ஆன்ம ஞானத்தை வளர்க்க இயலாது. இன்றைய உலகம் விஞ்ஞான உலகம், கணனி உலகம் என்பதால் ஆன்ம ஞானத்தின் தத்துவ உண்மைகளை விளக்கத்தை எடுத்துச்சொல்லி பரப்பி மக்கள் மனதில் ஒரு நல்லபண்பாடுகளை வளர்த்து பண்படுத்தி அதன் மூலம் அரசியலை தூய்மைப்படுத்துதே சிறந்த முறை. தனிமனித ஒழுக்கம் என்பது ஆன்ம ஞானத்தால் மட்டுமே செயல்படுத்த முடியுமே தவிர மற்ற செயல்பாடுகளால் முடியாது. தனிமனித ஒழுக்கமே ஒப்பற்ற ஒழுக்கமான சமுதாயமாக மாறும் என்பதில் ஐயமில்லை. அறவழி பிறழாது வாழும் மெய்ஞான விளக்கத்தின் மூலமே உலக மக்கள் நலம்பேண முடியும்.



ஆன்ம தத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 1:03 am

தத்துவ விளக்கம்

அண்ட வெளியில் உண்டான ஆற்றலுக்கு ஏற்ப நமது உடலானது 24 தத்துவங்களோடு கூடியது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய ஐந்து பூதங்களின் கூட்டுக்கலவையால் உண்டானதே மனித உடல். மேற்கண்ட பூதம் ஒவ்வொன்றிற்கும் வடிவம், குணம், நிறம், எழுத்து உண்டு என்று ஞானிகள் கூறியுள்ளனர்.


பூதம்
வடிவு
நிறம்
எழுத்து
குணம்
தொழில்
குறி
தெய்வம்
கலை
மண்
நாற் கோணம்
பொன்மை

கடினம்
தாங்கல்
வச்சிகரம்
அயன்
நிவர்த்தி
நீர்
பிறை
வெண்மை

தன்மை

பாதம் செய்தல்தாமரைதிருமால்
பிரதிஷ்டை
தீ முக் கோணம்செம்மைவெம்மைஒன்று
விதித்தல்
சுவாதிகம்வித்தை
காற்று
அறு கோணம்
கருப்பு பரந்துசரித்தல்
அறுபுள்ளி மகேசன்சாந்தி
ஆகாயம்
வட்டம்
புகைமைவெளியாதல்இடம் கொடுத்தல்அமுத பிந்துசதாசிவம்
சாந்திய கீதை


ஐந்து பூதங்கள் ஒவ்வொன்றுக்கும் எட்டு விதமான குணாம்சங்கள் இருக்கின்றன. இதில் சூட்சம குணங்கள் என்கிற தன்மாத்திரை உண்டு. அதுசே சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் எனப்படும். இதையே ஓசை, ஊறு, ஒளி, சவை மணம் எனப்படும். இந்த ஐம்பூதங்கள் எப்படி உடலில் தொழில புரிகின்றன? என்று ஆராயும் போது பரமாணு என்கிற ஆதியில் தோன்றிய சிவசக்தியின் தன்னியக்க சுழற்சியினால் அண்ட பேரண்டங்கள் உருவாயின.



ஆன்ம தத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 1:10 am

அணு

அணு என்றால் ஏதோ இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததல்ல. என்றோ ஞானிகளால் அலசி ஆராயப்பட்டவை. அணுக்கள் பற்றி வைசேசிக சித்தாந்தம் முழுக்க முழுக்க கூறுகிறது. அவைகள் அந்த ஏடுகள் இன்று காலத்தால் அழிந்து விட்டன. அணு என்பது தத்துவ ஞானத்தில் முடிவுக்கு முடிவான ஒரு உண்மையைக் கூறுவது. இந்த பிரபஞ்சம் அல்லது உலகத்தின் தொடக்கத்தின் அறிய முயற்சித்தால் முதலில் முடிவை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முடிவு எங்கேயோ அங்கேதான் தொடக்கமும் ஆரம்பமாகும். எங்கோ வெட்ட வெளியிலிருந்து ஒரு நூல் தொடங்குமானால் அதன் முடிவைப்படித்துக் கொண்டு ஏறினால் அதன் தொடக்கத்தை அறியலாம். அதுபோல பிரபஞ்சத்திற்கு அழிவினையும், ஆரம்பத்தையும் அறிய மூன்று நிலையான அளவு கோலைக் கண்டார்கள். ஒரு வாஸ்துவுக்கு அழிவு என்பது பகுதிகளாகப் பிரித்தல். இதற்கு மேல் அழிக்க முடியாத நிலைவரை அழிந்து கொண்டேபோனால் அணுக்களில் முடியும்.

இவ்வாணுக்கள்தான் உலகின் ஒடுக்கம். இவற்றிலிருந்துதான் உலகம் உற்பத்தியாகிறது. ஆணு கொள்கைகளை வேத காலத்திற்கு முன்பிருந்த அணு பூதிமான்கள், சான்றோர்கள் (கி.மு.500) ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளனர். இவற்றையெல்லாம் நமது ஆகம நூல்களில் காணலாம். தமிழறிஞர்கள் சித்தர்கள் ஆய்வுத்திறனானது பிரபஞ்சத்தின் மூலை முடுக்களையெல்லாம் அலசி ஆய்வுக் களமாக்கி அதனையும் சுருட்டி தனது சுகத்தில் வைத்துள்ள சித்தர்கள் அவர்களைப் பாராட்ட நமக்கு நாவில்லை. புலன்களை வென்று தன்னுடைய கூர்மையான ஆற்றலால் பிரிக்க முடியாத பரமணுவில் இருந்து அண்ட பேரண்டங்கள் தோன்றியதை அதன் அணுத்திறனை ஆய்ந்தவர்கள் அறிந்தவர்கள்.

கதிரவன் ஒளியில் மின்னுகின்றன என்றால் அதற்கு என்ன காரணம்? வானவில் குளிர்ந்து அழகாக காட்சி தருகிறது என்றால் என்ன பொருள்? என்று ஆராய்ந்தனர். அதன் விளைவு சின்னஞ்சிறு துளிகள் இருந்தாக வேண்டும் என்று கண்டனர். ஒரு பொருளை துண்டித்துக் கொண்டே சென்றால் கடைசியில் அதன் நிலை பற்றி சித்தர்கள் ஆய்ந்தனர்.

அணுவில் அணுவினை ஆதிபிரனை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவினை அணுக வல்லார்க்கு
அணுவில் அணுவினை அணுகலுமாமே

- திருமுலர்

அணுவைத் துளைத்து ஏழ்கடலை புகட்டி
-ஒளவையார்

மேற்கண்ட பாடல் மூலம் சித்தர்கள் அணுவைப் பற்றிய ஆய்வை என்றோ கூறியுள்ளதாக அறியலாம்.



ஆன்ம தத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 1:16 am

ஒளியும், வெப்பமும்

கண்ணுக்கு எட்டாத துகல்களான இவை உரு, பண்பு முதலிய இயல்புகள் இல்லாதன. இத்துகள்கள் ஆற்றலை மேற்கொண்டு தன் மாத்திரைகள் என்னும் துகள்களாக மாறுகின்றன. பல தன்மாத்திரைகள் ஒன்றுகூடி ஒரு பரமனுக்காகத் திரள்கின்றன. தன்மாத்திரைகள் விரைவாய்த்துடிப்பதால் ஒளியும், வெப்பமும் தோன்றுகின்றன. பொருள்களில் விளையும் இராசாயன விளைவுகளையும் சித்தர்கள் தன் கொள்கையில் விளக்கியுள்ளனர்.

இருக்கில் இருக்கம் எண்ணிலா கோடி
இருக்கின்ற மூலத்தூர் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரடில் வீச
உருக்கிய ரோமம் ஒளி விடுந்தானே

- திருமந்திரம் -21

மேற்கண்ட பாட்டின் பொருள் கோடிக்கணக்கான அணுக்களில் அதன் மூத்துள்ளே இருக்கின்ற ஒளியும், வெப்பமும், அழல்கள் வீசுகின்றன என்று கூறுவதைக் காணலாம். ஒளியும், வெப்பமும் அணுத்தன்மை கொண்டவை என்று சித்தர்கள் கூறினார். அண்டம் என்றாலே முட்டை வடிவம் என்பது பொருள். எப்படி பூமியானது தன்னிலை சுழற்சியால் வட்ட வடிவம் பெற்றுள்ளதோ, அதேபோல பூமியில் பிறக்கும் அனைத்தும் வட்ட வடிவமுடன் தோற்றம் உண்டாகிறது, விதை முளைக்கும்போது வட்ட வடிவம், பறவை முட்டை வட்ட வடிவம், பூமியில் விழும் மழைத்துளி வட்ட வடிவம், யோனியில் கருவட்ட வடிவம், இப்படியாக தோற்றம் உண்டாவதைக் காணலாம்.

இப்படியாக அண்டத்தில் உள்ள கோடான கோடி கோட்கள் அத்தனையும் உருண்டை வடிவமாகவே விளங்கும். இவற்றின் இயல்புகள் அதனதன் மின்காந்த ஈர்ப்பு அலைகளுக்கேற்பஉண்டான எழுச்சியின் வேறுபாடுகளானது. கணக்கிட முடியாத கோடிக் கணக்கான வேறுபாடுகள் கொண்டது. இவைகள் தம்மோடு தாமும், பிறிதுமாக கலந்து, அணுக்களாகவும், அணுத்திரளாகவும், பொருளாகவும் ஆகின்றன. இப்படிப்பட்ட அணுத்திரள்களின் கலவைகள் கொண்டதுதான் ஜீவராசிகள், அண்டம், பிரபஞ்சம் அனைத்தும் ஆகும். சித்தர்கள் தங்களின் யோக வல்லமையால் உலகம் படைப்புக்கும் காத்தலுக்கும், உலக அழிவிற்கும் உண்டான காரண காரியங்கள் கண்டு தெளிந்து காரண காரியங்கள் எல்லாம் அணுவாக உள்ளது என்று கூறினார்கள். அணுக்கள் எல்லா உயிர்களும், எல்லா உலகங்களும், எல்லா உலகியற்பொருள்களிலும் நிறைந்து இருக்கிறபடியால் எங்கும் அணுக்கள் உள்ளன.



ஆன்ம தத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 1:27 am

சிவசக்தி


இப்படிப்பட்ட அணுத்திரளான இப்பிரபஞ்சத்தில் இருந்து மனித ஜீவன் எப்படி உற்பத்தி ஆகி புலன்கள் தோன்றி, அனுபவிக்கிறது என்பதை பார்ப்போம்.

ஆதியிலே இப்பிரபஞ்சப் படைப்புக்கு மூலமானது இரண்டு சக்திதான். அதைத்தான் சிவசக்தி என்கிறோம். இதுவே பரமாணுவாகும். அதே போல மனித ஜீவன் உருவாவதற்கு இரண்டு மூல அணுக்கள் காரணமாக விளங்குகின்றன. சிவம் என்கின்ற ஆண் சுக்கிலப்புழுவும், சக்தி என்கிற பெண் சுக்கிலபுழுவும் இரண்டின் கலப்பினால் ஜீவன் உற்பத்தியாகிறது. பரமாணுவினால் பஞ்சபூதம் உண்டானது. அதன் கலப்பால் ஜீவராசிகள் உண்டாயிற்று.

ஜீவராசிகளே பஞ்சபூத கலப்பின் ஆற்றலைக்கொண்டதாகும். அந்தப் பஞ்சபூத ஆற்றல் எப்படி மனித சரிரத்தில் செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். இவ்வுலகமே ஐம்பெரும் பூத அணுக்களால் ஆனது. இவ்வையம் பெறும் பூத அணுக்களில் ஒவ்வொன்றும், ஒவ்வொரு அணுவும் 96 தத்துவங்கள் அமைந்துள்ளன. இந்த 96 தத்துவங்களே மனித சரிரத்தில் செயல்படுகின்றன.

தத்துவங்கள் 96

1. முதல் தத்துவம் - 30
2. இரண்டாம் தத்துவம் - 30
3. மூன்றாம் தத்துவம் - 36

முதல் தத்துவ விபரம்

பூதம்-5,
பொறி-5,
புலன்-5,
கன்மேந்திரியம்-5,
கன்மவிசயம்-5,
கரணம்-4,
அறிவு-1,
ஆக 30.



ஆன்ம தத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 1:29 am

அதன் விபரம் வருமாறு

பூதம்-5

* பிருதிவி-மண்,
* அப்பு-நீர்,
* தேயு-அக்னி,
* வாயு-காற்று,
* ஆகாயம்-வெளி.

பொறி-5

* செவி,
* தோல்,
* கண்,
* நாக்கு,
* மூக்கு

புலன்-5

* சத்தம்-கேட்கப்பட்டது (செவிக்கு உயிர்க்கூறு),
* பரிசம்-தொடு உணர்வு அறிவது (உடம்புக்கு உயில்கூறு),
* உருவம்-காண்பது (கண்ணுக்கு உயிர்கூறு),
* இரசம்-அறுசுவை அறிவது (நாக்குக்கு உயிர்க்கூறு),
* கந்தம்-வாசன அறிவு (மூக்குக்கு உயிர்கூறு)

கன்மேந்திரியம்-5

* வாய்,
* கால்,
* கை,
* அபானம்,
* குறி

கன்ம விசயம்-5

* பேசுதல்-வாக்குக்கு உயிர்க்கூறு,
* கடத்தல்-காலுக்கு உயிர்க்கூறு,
* கொடுத்தல், வாங்கல்-கைக்கு உயிர்க்கூறு,
* விடுதல்-எருவாய் உயிர்க்கூறு,
* மகிழ்தல்-குறிக்கு உயிர்க்கூறு

கரணம்-4

* மனம்-ஒன்றை இணைப்பது,
* புத்தி-அதனை விசாரிப்பது,
* அகங்காரம்-அதனைக் கொண்டு மேல் எழும்புவது,
* சித்தம்-அதனைச் செய்து முடிப்பு,

அறிவு-1

* தன்னைக் கண்டு மகிழ்ந்திருத்தல்



ஆன்ம தத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 1:35 am


இரண்டாம் தத்துவம்-30


நாடி-10
வாயு-10
சயங்கள்-5
கோசம்-5


நாடி-10

* பிராணன்,
* அபானன்,
* வியானன்,
* உதானன்,
* சமானன்,
* நாகன்,
* கூர்மன்,
* கிரிகரன்,
* தேவத்தன்,
* தன்செயன்

1. பிராணன்:

புருவ மத்தியில் தோன்றி சித்த நாடியில் புகுந்து மூலாதாரத்தை அடைந்து, தொப்புள், பின் மூக்குத் தானத்தில் முட்டி இடகலை, பின்காலைகளில் ஓடி கபாலத்தைச் சுற்றி, மூக்கு துவாரத்தில் வெளிவரும் சுவாசம் 12 அங்குலம் நீண்டு வெளிவந்து நான்கு அங்குலம் கழிந்த 8 அங்குலம் உள்ளே சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திலிருந்து சுவாசம் துவங்குகிறது. இப்படிச் செயல்படும் சுவாசம் நாழிகை ஒன்றுக்கு 360 சுவாசம் இரவு பகல் 60 நாழிகைக்கு 21,600 சுவாசம் மனித உடலில் செயல்படுகிறது. ]24 நிமிடம் கொண்டது-1 நாழிகை]

இந்த சுவாசம் 21,600-க்கு விபரம்:


1. மூலாதாரத்தில் சுவாசம் - 6000
2. சுவாதிட்டானத்தில் சுவாசம் - 6000
3. மணிபூரகத்தில் சுவாசம் - 6000
4. அனாதகத்தில் சுவாசம் - 6000
5. விசுத்தியில் சுவாசம் - 1000
6. ஆக்கினையில் சுவாசம் - 1000
7. சுகன்ரகாரம் சுவாசம் - 1000

நாள் ஒன்றுக்கு 21,600 சுவாசம் இயங்கி இதில் 7,200 சுவாசம் கழன்று 14,400 சுவாசம் உள்ளே சென்று மனித உடலை செயலாக்கப் படுத்துகிறது.



ஆன்ம தத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 1:39 am

2. அபானன் - குதத்தையும், குய்யத்தையும் பற்றி நின்று மலசாதிகளை கழிப்பது

3. வியானன் - தோலிலே நின்று பரிசங்களை அறிவிப்பது


4. உதானன் - பிசயை உணடாக்கி உண்ட உணவை உணவின் சக்தியை அதாவது சாரத்தை 72,000 நாடி நரம்புகளில் செலுத்தி சரிரத்தை வளர்ப்பது.

5. சமானன் - எல்லா வாயுவயும் ஏறுதல், இறங்குதல் இல்லாமல் சமனாகக் கொண்டு இயங்குவது

6. நாகன் - விக்கலும், கக்கலும் உண்டாக்குவது

7. கூர்மன் - கண்ணிலே நின்று இமைப்பது

8. கிரிதரன் - புருவமத்தியைப் பற்றி நின்று தும்மல், அழுவித்தல் செய்வது

9. தேவதாத்தன் - வழித்திருக்கும்போது ஓடுவித்தலும் உலாவுதலும், யுத்தம் பண்ணுவித்தல் செய்வது

10.தனஞ்செயன் - பிராணன் உடம்பை விட்டுப்போனலும் தான் பிரியாமல் நின்று உடம்பை இயங்கச் செய்து விரிவித்தலும் செய்து மூன்று நாட்களுக்குப் பிறகு கபாலத்தைப் பிளந்து ஓடிப்போவது

சயம் - 5

* அமர்வாசாயம்,
* பகிர்வாசாயம்,
* சாலவாசாயம்,
* மனவாசாயம்,
* சுக்கில வாசாயம்


1. அமர்வாசாயம் - உண்ட உணவு சாரம் அமருமிடம்
2. பகிர்வாசாயம் - அன்ன சாரம் பகிர்ந்து கொடுக்குமிடம்
3. சாலவாசாயம் - நீர் இறங்கும் இடம்
4. மனவாசாயம் - மலக்குழி இறங்கும் இடம்
5. சுக்கில வாசாயம் - சுகிலன் பிரியும் இடம்

கோசம்-5


* அன்னமய கோசம்,
* பிராணமைய கோசம்,
* மனோமைய கோசம்,
* விஞ்ஞானமய கோசம்,
* ஆனந்தமய கோசம்.

1. அன்னமய கோசம் - துலதேகமாகிய உடம்பு
2. பிராணமைய கோசம் - பிராணனும் கன்மேந்திரியமும் கூடி நிற்பது
3. மனோமைய கோசம் - மனமும் ஞானேந்திரியமும் கூடி நிற்பது
4. விஞ்ஞானமய கோசம் - புத்தியும் ஞானேந்திரியமும் கூடி நிற்பது
5. ஆனந்தமய கோசம் - பிராணவாயும் சுமத்தியும் கூடி நிற்பது



ஆன்ம தத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 1:42 am


மூன்றாம் தத்துவம் 36-ன் விபரம்


ஆதாரம்-6,
மண்டலம்-3,
மலம்-3,
தோசம்-3,
ஏடனை-3,
குணம்-3,
இரக்கம்-8,
வினை-2,
அவஸ்தை-5
ஆக 36.


ஆதாரம்-6

* மூலாதாரம்,
* சுவாதிட்டானம்,
* மணிபூரகம்,
* அனாகதம்,
* விசுத்தி,
* ஆக்ஞை

1. மூலாதாரம்-எருவாய், நாற்சதுரக்குள்ளே நாளிதழ் முக்கோண வடிவமாக இருக்கும் எழுத்து ஓங்காரம், நிறம் மாணிக்க நிறம், கணபதி.

2. சுவாதிட்டானம்-எருவாய்க்கும் மேலே இரண்டு வரற்கடை அளவும் தொப்புளுக்குக் கீழேயும் இருக்குமிடம், நாற்கோணம், ஆறு இதழ், எழுத்து நா காரம், படைப்பு பிரம்மா, செம்பொன் நிறம்.

3. மணிபூரகம்-தொப்புழ், பிறைகோணமானது, இதன் நடுவே நிற்கும் எழுத்து மா காரம், பத்து இதழ், மரகத நிறம், தேவதை விஷ்ணு

4. அனாகதம்-இருதயம், முக்கோணமானது, இதன் நடுவே இருக்கும் எழுத்து சி காரம், பன்னிறன்டு இதழ், ஸ்படிக நிறம், உருத்திரன்

5. விசுத்தி-காண்டம் (கழுத்து), அறுகோணம், 16 இதழ், கேம நிறம், எழுத்து வா காரம், தேவதை மகேசுவரன்

6. ஆக்ஞை-புருவ மத்தி, வட்டமாயிருப்பது, 3 இதழ், படிக நிறம், எழுத்து ய காரம்

மேற்கண்ட விபரத்தின் மூலம் ஆதாரம் ஆறிலேயும் ஆறு எழுத்து ஓம் நமச்சிவாய, ஆறு ஆதாரம் ஆறுவிடாகவும், இதழ்கள் கூட்டினால் 51 அட்சரம் என்பதும் கண்டுகொள்ள வேண்டும்.



ஆன்ம தத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக