புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
292 Posts - 42%
heezulia
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் பக்கம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 17 Mar 2010 - 17:46

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]


திருக்குறள் பயன்

மாந்தனை மாந்தன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனை சான்றோன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைத் தெய்வம் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனை இறைவன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைப் பெயராக் கடவுட் பெருநிலையில்
ஒன்றச் செய்வதும் திருக்குறள்.
மதுரை இளங்குமரனார்

திருக்குறள் செம்பொருள் நுகர்வு

"மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்"
"நன்றின்பால் உய்ப்ப தறிவு"

திருக்குறள் முழக்கங்கள்

"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான்"
"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை"
"திருக்குறள் நம் மறை"



திருவள்ளுவர் வரலாறு

திருவள்ளுவர் ஒப்பற்ற ஓர் உலகம்; அவர், வாழும் உலகத்தைத் தம்முள் கொண்டு, அவ்வுலகுக்காகத் தம் வாழ்வை ஒப்படைத்து, ஒப்பற்ற ஒரு நூலை ஆக்கிய பெருமகனார்.

திருவள்ளுவர் தமிழகத்தில் தோன்றியவர்; தமிழகத்தில் வாழ்ந்தவர்; 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்', 'ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்', 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்னும் இத்தகைய பெருநெறி பற்றியவர். இறைமை முதல் எல்லாம் பொதுமைக் கண் கொண்டு நோக்கியவர்: மாந்தரைத் தெய்வ நிலைக்கு ஏற்றும் மாணெறி படைத்த தெய்வர்.

திருவள்ளுவர் பன்மொழிப் புலமையர்: தம் காலத்து வழங்கிய நூற் பரப்புகளையெல்லாம் கண்டவர்; உலகியல், உயிரியல், உணர்வியல், உடலியல், குடியியல், படையியல், பொருளியல், தொழிலியல், அரசியல், மருத்துவ இயல், அருளியல், மெய்யியல் முதலாம் பல்வகை இயல்களில் திறமான புலமையுற்றவர்.

திருவள்ளுவர் இயற்கை இன்ப இல்வாழ்வை ஏற்று, அறவழி நின்று, பொருளீட்டி, இன்பந்துய்த்து, அறிவறிந்த நன்மக்களைப் பெற்று, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு குடும்பக் கடமையும் நாட்டுக் கடமையும் நானிலக் கடமையும் சீருறச் செய்து சிறந்த செவ்வியர்.

சான்றோர்க்கு எந்நாடும் தம் நாடே என்றும், எவ்வூரும் தம் ஊரே என்றும், அறிவறிந்த நன்மக்கட்பேறு தம் பெற்றோரினும் இப்பேருலகுக்குப் பெருநலம் செய்யுமென்றும் உலகளாவிய பெருநெறி காட்டியவர்.

பெருமூதாளராக இலங்கிய நிலையில் தம் உண்மையறிவும் படிப்பறிவும் பட்டறிவும் மெய்யுணர்வுமாகிய எல்லாம் உலகை உய்விக்குமென்னும் அருளுள்ளத்தால் திருக்குறளை உலகுக்குத் தந்து தெய்வமாப் புகழ் எய்திய இறைமையர்.

இவை வள்ளுவ வழிக் கண்டவை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 17 Mar 2010 - 17:53

உலகப் பெருஞ் சான்றோர்கள் உரைப்பன:

திருக்குறளை பற்றிச் சில செம்மொழிகள் உங்கள் வரவேற்பில் மிளிர்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்னரே யான் தமிழ் பயிலத் தொடங்கியதற்குக் காரணம் திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டும் என்று உள்ளத்தில் எழுந்த ஆர்வமேயாம்.

-காந்தியடிகள்

வள்ளுவர் தம் குறளில் எளிய உயரிய வாழ்க்கையை இயல்பாகச் சிந்தித்துள்ளார். மாந்தன் தனக்குத்தானே செய்து கொள்ள வேண்டிய கடமைகள் உலகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் முதலிய பலதரப்பட்ட கேள்விகளுக்கு வள்ளுவர் தரும் விடைகள் பெருந்தன்மையுடையன; அறிவுக்குப் பொருந்துவன. இத்தகைய உயரிய அறிவு நிறை முதுமொழிகளை உலக இலக்கியங்கள் எவற்றினும் காண இயலாது.

-ஆல்பர்ட்டு சுவைசர்.

திருக்குறளை நன்றாய்க் கற்பவர்களுக்கு வேறு கல்வி வேண்டியது இல்லை என்பது என் துணிவு. பேரறிஞர் மெக்காலே பிரவுவின் புத்தகக் களஞ்சியம் முழுவதையும் விட இவ்வியப்புக்குரிய நூல் ஒன்று மட்டும் சாலச் சிறந்தது என்றும், மாந்தர் இனத்திற்கு மிக நன்மை பயக்கக் கூடியது என்றும் எண்ணுகிறேன்.

தமிழர்களாகிய நாம் நம்முடைய பழந்தமிழ் நாகரிகத்தை எல்லாம் இழந்து வருவதாகப் பகர்கிறோம். பொருநை காவிரி முதலிய ஆறுகளையோ திருக்கோயில்களையோ அரண்மனைகளையோ பிற வளங்களையோ இழக்க நேர்ந்தாலும் திருக்குறளை இழக்க மாட்டோம்.

-எம். எசு. மைக்கேல்.

ஒரு பிரிவினர்க்கே உரிய கோட்பாடுகளைக் கொள்ளாது விலக்கி, உலகமக்கள் அனைவருக்கும் ஒருங்கே பொருந்தும் உண்மைகளையே தெரிந்தெடுத்துத் திருவள்ளுவர் மொழிந்துள்ளார். இவ்விரிந்த உணர்வால் மற்றை மனு முதலிய நூல்களில் கூறப்பெறும் கண்மூடித்தனம் எதுவும் இன்றி நூல் மேலோங்கித் திகழ்கின்றது.

-அறிஞர் துறு.

இன்பத்துப்பாலை அனைவரும் குற்றமற்ற முறையில் படித்து இன்புறுமாறு எழுதப்பட்டிருத்தல் பாராட்டத்தக்கது.

-போப் ஐயர்.

திருக்குறள் அமைப்பு வகையாலும் பாவகையாலும் வட மொழி தொடர்பு சிறிதும் இல்லாமல் தனித்தியங்கும் தனிப் பெருமையுடையது.

-இராபர்ட்டு கால்டுவெல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 17 Mar 2010 - 17:53

திருக்குறள் மேலும் விரிந்துரைக்க இயலாத கட்டுத்திட்ட அமைப்புடையது. அது சீரிய பளிங்குக்கல் பரப்பு. அதன் ஒரு சிறு கல்லின் அமைப்பிலோ வடிவிலோ வண்ணத்திலோ சிறியதொரு மாற்றம் செய்தாலும் அப்பரப்பின் முழுதுறு அழகும் பழுதுறும். குறள் தூய செந்தமிழால் இயன்றதொரு நூல். நல்லொழுக்கமே விளை நிலமாய் அமைந்த ஒரு நாட்டிலன்றி இத்தகைய நூல் தோன்றாது.

-முனைவர் இலாசரசு.

திருக்குறள் வழங்கும் செவ்விய இன்பம் இத்தகையது என்று எந்த மொழி பெயர்ப்பாலும் ஒரு சிறிதாயினும் கொடுக்க இயலாது. திருக்குறள் உண்மையாகவே வெள்ளியால் செய்யப்பெற்ற எழிற்பேழையில் இட்டு வைக்கப்பெற்ற பொன் ஆப்பிள் பழம் போன்றது ஆகும்.

-முனைவர் கிரெளல்.

ஒரு நாள் வழக்கப்படி திருக்குறள் படித்தபோது 'தாமின் புறுவதுலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்' எனக் குறள் ஒன்று தென்பட்டதும், இதைப் பார்த்தது தமிழர்கள் திருக்குறளைப் படித்துச் சுவைப்பதுபோல் உருசியக்காரர்களும் படித்துச் சுவைக்குமாறு ஏற்பாடு செய்யலாமா என்று நினைத்துக் கொண்டேன்.

-எம். அந்திரோனவ்.

திருக்குறளை ஓதி உணர்ந்தால் அல்லது எவனும் தமிழறிந்தவன் என்று கூறிக் கொள்ள முடியாது.

-பிரடெரிக்கு பின்கட்டு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 17 Mar 2010 - 17:54

வள்ளுவத்தின் வான்புகழ்

தால்சுதாய் 1906-இல் 'இந்து ஒருவருக்கு எழுதப்படும் கடிதம்' என்பதை எழுதியுள்ளார். அதில் திருக்குறளை 'இந்துக்களின் குறள் (The Hindu Kural) என்கிறார். அதில் தம் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்த திருக்குறட்பாக்கள் சிலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவை இன்னா செய்யாமை என்னும் அதிகாரத்தில் உள்ள குறட்பாக்கள் ஆகும். குறட்பாக்களைக் குறிப்பிடுவதுடன் விளக்கவுரையும் வரைகின்றார். இக்குறட்பாக்கள் தால்சுதாயின் இன்னாசெய்யாமை (அகிம்சை)க் கொள்கையை உருவாக்க உதவியுள்ளன. அறநெறியில் போராடுவதைப் பற்றிய அவருடைய சிந்தனைக்கு உரமாக அமைந்தன. தால்சுதாயின் இக் கடிதத்தினால்தான் காந்தியடிகள் திருக்குறளை அறிந்து கொண்டு, ஏரியல் என்பார் மொழி பெயர்த்த பிரெஞ்சு மொழி பெயர்ப்பு நூலைப் படித்து அதன் சிறப்புணர்ந்தார்.

"உறங்குவது போலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"

என்னும் குறளைக் காட்டி "இதைவிடத் தெளிவாக இறப்பைப் பற்றிக் கூற இயலுமா?" என வினாவுகிறார்.

இங்கர்சால் என்னும் பகுத்றிவாளர் திருக்குறளிடத்துப் பேரீடுபாடு கொண்டு இருந்தார். திருவள்ளுவருடைய கட்டற்ற சிந்தனைப் போக்கும், அறிவை முதன்மையாகப் போற்றும் பண்பும் இங்கர்சாலின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன.

"அறிவு அற்றம் காக்கும் கருவி" (321)

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" (453)

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" (424)

என்னும் குறட்பாக்களை இங்கர்சால் அடிக்கடி மேற்கோளாகக் காட்டி எழுதியும் பேசியும் வந்துள்ளார்.

-சான்றோர் கண்ட திருவள்ளுவர் 328

"இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கு ஒன்றந்நோய் மருந்து"

என்னும் பாடலைச் செருமானிய அறிஞர்கால் கிரெளல் என்பவர் அறிந்தார். அதன் பொருள் ஆழத்திலும் கலை அழகிலும் ஈடுபட்டுத் திருக்குறளை முழுமையாகக் கற்றார். பின்னர் 1754-இல் செருமானிய மொழியிலும் 1856-இலத்தீன் மொழியிலும் திருக்குறளை மொழி பெயர்த்தார்.

உருசிய நாட்டுக் கிரெம்ளின் மாளிகையில் அமைந்துள்ள அணுத்துளையாச் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள அரு நூல்களுள் ஒன்று திருக்குறள் ஆகும்.

விக்டோரியாப் பேரரசியார் தம் மறை நூலைப்போலப் போற்றி வைத்திருந்த நூல் திருக்குறள். காலையில் கண்விழித்ததும் கற்கும் நூலாகத் திருக்குறளைக் கொண்டு இருந்தார் என்பது அவரது பெருநிலைச் சான்றாவதுடன் திருக்குறளின் பெருமைச் சான்றுமாகும்.

இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் விவிலியத்துடன் வைத்துப் போற்றப்படும் திருநூல் திருக்குறள் ஆகும் என்பர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 17 Mar 2010 - 17:55

திருக்குறளால் தோன்றிய நூலகம்

தஞ்சைப் பகுதியை ஆட்சி செய்த சரபோசி மன்னர் ஒரு முறை காசிக்குச் சென்றார். அப்படியே கல்கத்தாவில் இருந்த அரசப் பேராளரைக் கண்டு மகிழ்ந்தார். அரசப் பேராளர் திருக்குறளை ஆங்கில மொழி பெயர்ப்பு வழியாகக் கற்றிருந்தவர். அதனால் தமிழ்ப் பகுதியில் ஆட்சி நடத்தும் சரபோசியின் வழியே திருக்குறளைப் பற்றி அறிய விரும்பினார்.

அதுவரை அதைப் பற்றி அறியாதிருந்த சரபோசி, "நான் ஊர் போய்ச் சேர்ந்ததும் அப்புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்" என்று விடை பெற்றுக் கொண்டார். அதன் பின்னரே தமிழ்ச் சுவடிகளைத் தொகுக்கத் தொடங்கினார். 'சரசுவதி மால்' என்னும் கலைக் கருவூலம் தோன்றுவதற்கு மூலமாக இருந்தது இத் தூண்டலேயாகும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 17 Mar 2010 - 18:48

திருக்குறளைப்பற்றி நாங்கள் அறிந்திடா பல தகவல்களைத் தொகுத்தளித்த சிவாவுக்கு தமிழ்வணக்கம்....! நன்றி சிவா..! [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 26 Mar 2010 - 9:20

இது எப்படி என் கண்களில் இத்தனை நாள் படாமல் இருந்தது என்று தெரியவில்லையே. இது போன்ற படைப்புகள் நம் ஈகரையை இலக்கிய தரமுள்ளதாகவும் ஆக்கும். இது வரை நான் அறியாத பல தகவல்களை அள்ளித்தந்த சிவாவுக்கு என் அன்னைத் தமிழ் சார்பில் நன்றி.

”இணையத் தெருவெங்கும் தமிழ் முழக்கம் முழங்கச் செய்வீர்”
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 26 Mar 2010 - 12:43

Aathira wrote:
”இணையத் தெருவெங்கும் தமிழ் முழக்கம் முழங்கச் செய்வீர்”
[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri 26 Mar 2010 - 13:09

எனக்கும் தேவை படகூடிய ஒன்றுதான் அண்ணா தகவலை தந்ததுக்கு நன்றி



[You must be registered and logged in to see this image.]

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri 26 Mar 2010 - 13:12

அறியா தகவல்களை அறிய செய்தமைக்கு மிக்க நன்றி தோழர்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri 26 Mar 2010 - 14:01

வான் புகழ் வள்ளுவனை பற்றி நான் தெரிய சொன்னிர்கள் .........
நன்றி............

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக