புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_m10வேதாத்திரியின் தத்துவங்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதாத்திரியின் தத்துவங்கள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 6:53 am

பூவும் அறிவாளியும்

நறுமணம் வீசும் பூச்செடி சேற்றில் முளைத்தாலும் பாதகமில்லை. ஆனால் அதில் பூத்த மலர் சேற்றிலே விழுந்து விட்டால் அது பயனற்றுப் போகும். அதுபோன்ற அறிவாளிகள் பிறப்பு எக்குலத்திலும் எவ்வளவு இழிவாக இருந்த போதிலும் பாதகமில்லை. அவர் ஒழுக்கத்தில் தவறிவிட்டாலும் ஜாதி, மத, தேச, மொழி வெறியில் சந்தர்ப்பவசமாக சிக்கிக்கொண்டாலும் அவர் பயனற்றவராகி விடுகிறார்.

சேற்றிலோ சாக்கடையிலோ விழுந்த பூ அது வரையில்தான் பயனற்றுப்போகும். ஆனால் அறிவாளி தரம் கெட்டு விடுவாராயின் அதைத் தொடர்ந்து எண்ணிறந்த மக்கள் தரம்கெட்டுப்போக நேரிடும்.





மனித முயற்சி

கிராமங்களில் பஜனைக் கோவில்களில் உறியடி விழா என்று வைப்பார்கள். மரத்தில் ஏறுவான், கீழே இருப்பவர்கள் தண்ணீரைப் பீச்சியடிப்பார்கள். சறுக்கி விழுவான். மறுபடியும் ஏறுவான். மறுபடியும் சறுக்கி விழுவான். அப்படியே இவர்கள் அடிக்க அவர் தன் முயற்சியினால் கடைசியாக மேலே போய் உறியில் வைத்திருப்தை பிடித்துவிடுவான்.

அதுபோலத்தான் நம் வாழ்க்கையிலும் ஆன்மீகப் பயிற்சியில் முன்னேறிப் போகிறான். பழக்கத்தின் காரணமாக பழைய பதிவுகள் காரணமாக ஏதோ ஒரு தவறைச் செய்து விடுகிறான். பிறகு நான் இந்தத் தவறைச் செய்து விட்டேனே என்று குற்ற உணர்விலேயே நிற்கிறான். இந்த குற்ற உணர்வு தேவையே இல்லை.

நாம் போகக்கூடிய இலக்கை எண்ணி, போய்க் கொண்டே இருக்கிறோம், முன்னேறித்தான் செல்கிறோம். அப்போது ஒன்றோ இரண்டோ தவறுகள் குறுக்கிடும். ஏதோ பழக்கத்தால் இது வந்தது என்று எண்ணி, அயரா விழிப்போடு மேலும் முன்னேறிச் செல்லதான் வேண்டும்.




தற்சோதனை (அகத்தாய்வு)

உலகம் எந்தப் பழக்கங்களிலே வாழ்ந்து வருகின்றதோ அந்த வழியே பெற்றோர்களின் பழக்க வழியே நாமும் சென்று அவற்றையே பழக்கப்பதிவுகளாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம். இவற்றிலே உண்மை நிலை அறிவதற்காகவே ஆறாவது அறிவு கொண்ட இந்த மனித உடல் வந்த போதிலும் கூட அந்த இலட்சியத்தை மறந்து சாதாரணமாகப் பொருள் அறிவு மட்டும் கொண்டு புலன்களிலே எல்லைகட்டி உணர்ச்சி வயப்பட்ட அறுகுணங்களாக அடிக்கடி மாறிப் பல செயல்களைச் செய்து வருகின்றோhம். இதுவே பழக்கமாகி அந்த பழக்கத்தின் வழியே பெரும்பாலும் வாழ்ந்து வருகின்றோம். அதனால் பல தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகி குடும்பத்தில் அமைதியிழந்து வாழ்கிறோம்.

தன்னைப் பற்றி தன்தேவையைப் பற்றி தன் செயலின் விளைவைப் பற்றி தன் தகுதியைப் பற்றி, தன் மதிப்பைப் பற்றி ஆராய்வது தற்சோதனை.

இந்த தற்சோதனையில் பெறும் தெளிவைக் கொண்டு எடுக்கும் முடிவையும் தவத்தினால் மனத்திற்குக் கிடைத்திருக்கும் உறுதியைக் கொண்டு வாழ்வில் எதிர்காலச் செம்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளும்போது கிடைப்பதுதான் குணநலப்பேறு இதன் மூலம் நமது குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெறுகிறோம்.

தற்சோதனையை ஐந்து பிரிவுகளாக ஒழுங்குபடுத்தியுள்ளார்கள்.

1.எண்ணம் ஆராய்தல்
2.ஆசை சீரமைத்தல்
3.சினம் தவிர்த்தல்
4.கவலை ஒழித்தல்
5.நான் யார்?


இந்த தற்சோதனைப் பயிற்சியில் போதிக்கப்படும் தத்துவ விளக்கங்கள் தன்னிலை விளக்கம் பெற்று வாழ்வில் சிறந்தோங்கி வாழ்வோமாக.




காயகல்பம்

உடல் மற்றும் மனநலனுக்கு முக்கிய பொருளான விந்து நாதங்களின் பெருமையையும் - கற்பு நெறியின் மேன்மையினையும் மனித குலம் உணர வேண்டும். விந்து நாதத்தை இன்பத்துக்குரியதோர் சாதனமாக மட்டும் இன்றைய மனிதர்கள் கருதுகிறார்கள். நோயற்ற உடலுக்கும் தெளிந்த அறிவு மேன்மைக்கும் விந்து நாதந்தான் ஆதாரம். மேலும் குடும்ப வாழ்வில் ஆண், பெண் உறவில் ஒரு இனிமையையும் ஆழமான நட்பையும் அமைதியையும் மகிழ்வையும் கொடுப்பதுமாகும். எனவே அவற்றைப் புனித பொருட்களாகக் கருதி, அவற்றின் தூய்மையைப் பராமரித்து அவற்றுக்கு மேன்மையளிக்க வேண்டும். அதற்கு உதவுவதுதான் காயகல்பக்கலை. உடல் நலமும் மனவளமும்தான் வாழ்வில் வெற்றியையும் அமைதியையும் நிறைவையும் அளிக்குமென்றால் அதற்கு முக்கியமான ஆதாரம் உயிர் ஆற்றலே அதை நாம் காயகல்பத்தால் பெறலாம்.

மேலும் இளவயதிலேயே ஆண், பெண் இருவரும் காயகல்பப் பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தால் விந்து நாதத்தில் உள்ள குறைகள் அகன்று விந்து நாதம் சுத்தப்படும். அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை உடல் நலம் மனவளம் மிக்கதாகவும் அறிவுக்கூர்மையுடையதாகவும், ஆன்மீக எண்ணம் கொண்டதாகவும் இருக்கும். இதைத்தான் கருவிலே திருவுடைய குழந்தை ஆதல் என்பார்கள்.


ஆயகலை கள்மொத்தம் கணக்கெ டுத்தோர்
அறுபத்தி நாலு என்றார் அனைத்தும் கற்றும்
காயகற்ப மெனும் கலையைக் கற்கா விட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல் விழுந்தால்
மாயமெனும் காந்தம உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
தீயவினைகள் கழிய உலகுக்கென்றும்
தெளிவான அருள் ஒளியாய் நிலைக்கும் ஆன்மா.
– வேதாத்திரி மகரிஷி அவர்கள்

நீங்கள் இந்த அற்புதமான கலையை முறையாகப் பயின்றால் வல்லுடலும், நல்லறிவும், பொருள் வளமும், நற்புகழும் ஓங்கிச் சிறப்பாகவும், அமைதியாகவும் வாழ முடியும்.



மனவளமும், தியானமும்

மனம்தான் மனித வாழ்க்கையின் விளைநிலம். மனத்தின் தன்மை எதுவோ அதுதான் மனிதனுடைய தன்மை.

மனதை அடக்க நினைத்தால் அலையும். மனதை அறிய நினைத்தால் அடங்கும்.

இன்பமும் அமைதியும் மனத்திற்குள்ளிருந்துதான் வரவேண்டும் என அறியாமல் எங்கெல்லாம் அவற்றைத் தேடி அலைந்து துன்புறுவார்கள் அதை அறியாதோர்.

தியானம் - மனம் எங்கிருந்து புறப்படுகின்றதோ அது புறப்படுகின்ற இடத்திலேயே மனத்தைக் கொண்டுவந்து நிலைநிறுத்தப் பழகுவது என்பதுதான் தியானம். உயிரினுடைய படர்க்கை நிலை மனம்.

மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை. தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கக் கூடிய ஒரு இயக்கம்.

மனம் - எண்ணம் இரண்டும் ஒன்றேதான். அகத்தவத்தால் எண்ணத்தை ஆராய்ந்தால் அங்கு உயிராக இருக்கும் அறிவை அறியலாம். அதற்கு தவப்பயிற்சி உதவும்.

இந்தப் பயிற்சியை தொடர்ந்து விடாமுயற்சியுடன் செய்யத் தொடங்கினோமேயானால் மனதை ஒழுங்குபடுத்திக் கொண்டு தன்னைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டு பூரண நிலையைப் பெற்று வாழ்வாங்கு வாழ முடியும்.

அகத்தவத்தால் ஐம்புலனை அடக்கி அறிவறிந்திடலாம்
அகத்தவத்தால் அறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம்
அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் மாற்றிடலாம்
அகத்தவத்தல் அனைத் துயிர்கள் நட்பை பெற்றிடலாம்.

பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கக்கூடிய மனத்தின் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொள்ள நல் விளக்கத்தை பெற்று அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முறையான பயிற்சிதான் மனவளக்கலை. அதில் உள்ள தவத்தால் மனதில் ஓர்மை, கூர்மை, சீர்மை, நேர்மை என கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தில் அனைவரும் அமைதி காத்து மகிழ்ச்சியாக வாழ முடியும்.


vethathiri.org வேதாத்திரியின் தத்துவங்கள் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக