புதிய பதிவுகள்
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
57 Posts - 68%
heezulia
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
2 Posts - 2%
viyasan
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
234 Posts - 42%
heezulia
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
21 Posts - 4%
prajai
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
7 Posts - 1%
mruthun
காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_m10காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu 21 Apr 2011 - 14:55

சங்கீத வித்வத் சபை:

அது சாதாரணமாக சங்கீத வித்துவான்கள் தமது திறமையை எடுத்துக்காட்டும் சபாமட்டுமல்ல! அது பாடகனின் குரல்வளம், இனிமை, கனிவு, ஞானம், கற்பனை, ராகவிஸ்தாரம், லயவிவகாரம் போன்ற சகல அம்சங்களையும் மிக நயமாகவும் வெகுநுட்பமாகவும் மதிப்பிடும் பெரும் மேதைகள், விற்பன்னர்கள், இசைச் சிம்மங்கள் நிறைந்துள்ள மாபெரும் இசை மண்டலம்.

அத்தகைய சங்கீத வித்வ சபையிலே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட சங்கீத ரத்னாகரம் அரியக்குட்டி ராமானுஜ ஐயங்கார் பாட வேண்டிய நேரம் அது; தென்னாட்டின் உன்னதமான கர்நாடக இசைச் சிம்மமாக விளங்கிய ஐயங்கார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத ஒரு நிலை; எனவே நிகழ்ச்சியில் தொய்வு ஏற்பாடாமல் இருப்பதற்காக அவ்வித்வத் சபையின் முன்னாள் செயலாளர் ஈ.கிருஷ்ணய்யரின் சிபார்சின் பேரில், மதுரை வீணை சண்முகவடிவு என்பவரின் மகளான, இளம் பாடகி குமாரி எம்.எஸ். சுப்புலட்சுமியை அன்றைய கச்சேரிக்கு ஒழுங்கு செய்திருந்தனர். ரசிகர்களும், இசை விமர்சகர்களும் வித்வான்களும் இசை மேதைகளும் நிறைந்த சபையில், அனுபவமில்லாத இளம் பாடகி, முகம் தெரிந்த ஒரு சில இசைஞானம் மிக்க மேதைகள் மத்தியில் தாய் சண்முகவடிவு தம்பூரா மீட்ட பாட ஆரம்பித்தார். தன்னை மறந்து இசை உலக சஞ்சாரத்துள் சபையையே இழுத்துச் சென்றுவிட்ட பாடகியின் இசை அற்புதத்தை என்னவென்பது!

போதிய அனுபவமோ, பயிற்சியோ இல்லாத 16 வயதேயான இளம் பாடகி அதுவும் இந்நாள்வரை ஆண்களாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்த இந்தச் சங்கீத மேடையில் "இளம் யுவதி' என்ன பாடப் போகிறாளென அயர்ச்சியுற்றிருந்த சபை, மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் இனிய கானம் காதில் இசைக்கவும், மூக்கின் மேல் விரல் வைத்து, ஆர்வத்துடன் இவரின் இசையமுதைப் பருக, இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து, உசாராகியது. தன் இனிய தெய்வீக கானத்தால் சபையை மூன்று மணி நேரத்திற்கு அப்படியே பிரமித்துப்போய் இசைத் தேனில் மூழ்க வைத்துவிட்டார் அந்த இளம் பாடகி.

சபையிலே இருந்த காயன கந்தர்வ சங்கீத சாம்ராட் மகா வித்வான் செம்மை வைத்தியநாத பாகவதர், கச்சேரியைப் புகழ்ந்து "பேஷ் பேஷ் சபாஷ்!! ' எனப் பாராட்டியபடி முன்னே வந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தமையும், டைகர் வரதாச்சாரியார், ஹரிகேச நல்லூர் முத்தையாபாகவதர், வீணை வித்வான் சாம்பசிவ ஐயர் போன்ற சங்கீத மேதைகளில் மெய் சிலிர்த்த ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும் அவரை மென் மேலும் இத்துறையில் உழைக்க ஊக்கம் கொடுத்தன. இசை மாமேதைகள் பிரமிப்படையும் வண்ணம் இவ் இளம் வயதில் தன் இனிய தேவகானத்தால் கட்டிப் போட்டு விட்ட குமாரி எம். எஸ். சுப்புலட்சுமி, வீணை வித்வான்கள் பலரால் பாராட்டப்பட்ட இசைப்பாரம்பரியம் மிக்க வீணை வித்துவாட்டி சண்முகவடிவின் மகளாக 1916 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி மதுரை மேல அநுமந்தராயன் வீதியிலிருந்த வீட்டில் பிறந்தார்.

இவரது தந்தையார் வழக்கறிஞரும் இசையிலே லயிப்புற்ற கலா ரசிகருமான திரு சுப்பிரமணிய ஐயராவார். வீணை சண்டமுகவடிவின் தாயார் அக்கம்மாள் பிடில் வாசிப்பதில் திறமையுள்ளவராகவும் தந்தையார் சுவாமிநாதன் மிகச் சிறந்த இசை ரசிகராகவும் பரம்பரை பரம்பரையாகவே இசையை ஆராதித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இளமையிலே எம்.எஸ். அவர்களை குஞ்சம்மா என்றே அழைத்தனர். குஞ்சம்மாவுக்கு சக்திவேல் என்றொரு அண்ணனும் வடிவாம்பாள் என்றொரு தங்கையும் உடன் பிறந்தவர்கள். தாய் சண்முகவடிவிடமே வீணை கற்ற குஞ்சம்மாள் தாயாரின் குருவான வீணை தனம்மாளின் அறிவுரைப்படி மதுரை ஸ்ரீநிவாச ஐயங்காரிடம் முறையாக வாய்ப்பாட்டு இசையைக் கற்கத் தொடங்கி மிகத் திறமையாகக் கற்று வந்தாள்.

கும்பகோணத்திலே மகாமகத் திருவிழா வெகு கோலாகலமாக இடம்பெற்றபோது, இதற்கு முன் நடைபெற்ற எந்த நிகழ்ச்சிகளுக்குமே இல்லாத வரவேற்புக் கிடைத்தது. இரு தடவைகள் (Once more) திரும்பவும் பாடும்படி மக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து ரசித்த சிறப்பும் இடம்பெற்றது. தனது மதுரகானத்தால் மக்களை ஆகர்ஷித்து மனதில் இசை எழுச்சியை ஏற்படுத்திய பெருமை இந்தியாவின் இசைப் பொக்கிஷமாகத் திகழ்ந்த செல்வி குஞ்சம்மா என்ற எம்.எம். சுப்புலட்சுமியையே சாரும். மக்கள் பெரு வெள்ளமாகத் திரண்டிருந்த இம் மகாமகத் திருவிழாவிலே காந்தீயவாதியான டி. சதாசிவமென்பவர் கதர்த் துணி விற்பனையில் அமோகமாக ஈடுட்டிருந்தார். இவரும் சினிமா இயக்குநரான கே. சுப்பிரமணியம் என்பவரும் அப் பெண்மணியின் இசையில் பெரிதும் மயங்கி இத்தகைய இனிய கீதத்தை சகல மக்களும் ரசிக்கும் வகையில் சினிமா மூலம் வெளிக்கொணர வேண்டுமெனப் பெரிதும் முயன்றனர். எம்.எஸ்.சின் இசையால் சினிமா உலகமே பெரும் உந்து சக்தி பெற்று கம்பீரநடை போடுகின்ற இவர்களின் கணக்கெடுப்பு சிறிது பிசிறும் இன்றி வெற்றிவாகை சூடியது.

பிரேம்சந்த் என்ற புனை பெயரைத் தாங்கிய தன்பத்ராய் என்பவர் முதலில் உருதுவில் எழுதிப் பின் இந்தியில் மொழி பெயர்த்த சேவாசதன்' என்ற நாவலை எஸ். அம்புஜம்மாள் என்ற சமூக சேவகி தமிழில் மொழிபெயர்த்து ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியிட்டார். இரண்டாம் தாரமாக மணம் முடித்து வாழ்வில் சிக்கலுற்றுத் தேச சேவைக்கே தன்னை அர்ப்பணிக்கும் பெண்ணை மையமாகக் கொண்ட இந் நாவலை இயக்குநர் சுப்பிரமணியம் சினிமாத்திரையில் ஏற்றியபோது, அதன் கதாநாயகியாக எம்.எஸ். அவர்களே தோன்றிப், பாடியும், நடித்தும் பெரும் புகழ் ஈட்டிக் கலைவானில், ஒளிவிடும் நட்சத்திரமாக பிரகாசிக்கத் தொடங்கினார்.

இவரின் வரவால் சினிமாத்துறை "ஓகோ' எனக்களைகட்டவே பலருடைய வற்புறுத்தலின் பேரிலும் சதாசிவத்தின் தயாரிப்பின் பேரிலும் பிரபல கர்நாடக சங்கீத வித்துவான் ஜி.என்.பி. துஷ்யந்தனாக நடிக்க இவர் சகுந்தலையின் பாத்திரமேற்று நடித்து தன்னுடைய கலைத்திறனுக்கெல்லாம் முத்திரை பதித்துக் கொண்டார். தொடர்ந்து சத்தியவான் சாவித்திரி படத்தில் நாரதராகவும் மீரா படத்தில் பக்த மீராவாகவும் பாத்திரமேற்று மக்கள் மனதைத் தன் நடிப்பாலும் இசையாலும் கிறங்கடித்து மயங்க வைத்தார். இத்தனை திறமைகளும், மிகச் சாதாரண கீழ்மட்ட மக்கள் மத்தியில் தேவதாசிக் குலத்திலிருந்து வந்த பெண்ணிடம், பொதிந்து கிடந்ததே என எண்ணியெண்ணி மக்கள் வியந்தனர். வானளாவிய புகழும் பெருமையும் கீர்த்தியும் அவரைச் சூழ்ந்து படையெடுத்தாலும் எம்.எஸ். அவர்கள் மிக எளிமையாகவும், பொறுமையாகவும், அமைதியாகவும், வெகு அடக்கமாகவும், இசையோடு இணங்கும் போதெல்லாம் வெகு உருக்கமாகவும் அன்பாகவுமே தோற்றமளித்தார். கானத்தின் இனிமையால் இவர் தெய்வீகப் பொலிவு நிறைந்து விளங்கினார்.

இசையுலகில் பெரும் கவனிப்பை ஈர்த்துவிட்ட எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு பம்பாயில் ஒரு இசை நிழ்ச்சி காத்திருந்த வேளையில் இவருக்கு வயலின் வாசிக்க உடன்பட்டிருந்த கலைஞர், ஒரு பெண்ணுக்கு தான் வயலின் வாசிப்பதா என மறுத்து விட்டார். பக்கவாத்தியம் இல்லாமல் எப்படி நிகழ்ச்சியை நடத்துவதென யோசித்துத் துயருற்றிருந்த வேளையில் பத்திரிகையாளரும் தேச பக்தருமான சதாசிவம் அவர்களே இவருக்கு துணையாக பம்பாய் சென்றதோடு, பெண் பாடகிக்கு வயலின் வாசிப்பதை மரியாதைக் குறைவானது எனக் கச்சேரியையே ஒதுக்கி வைத்த, கோவிந்தராஜபிள்ளை என்பவருக்கு பதிலாக, பின்னாளில் ஜெமினி ஸ்டூடியோவின் இசையமைப்பாளராகவும் முன்னாளில் பம்பாய் சினிமா ஸ்டூடியோவின் வயலின் கலைஞராகவுமிருந்த பரூர் எஸ். அனந்தராமய்யரே, பின்னணி இசைக்க வைத்தார். கச்சேரி திறம்பட நடைபெற்றது. தனது உழைப்பாலும், இறைவன் அருளிய இசைக் கொடையாலும், உலகப் புகழ்பெற்ற இசைமேதையாகப் பலராலும் பாராட்டப்பட்டாலும் கூட இவர்களுடைய வாழ்வு மலர்ப்படுக்கையாக இருக்கவில்லை. கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதையாயிருந்ததென்பதையும் நாம் மனங்கொள்ளவேண்டும். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜ ஐயர் மங்களம்மா தம்பதியின் மூன்றாவது மகனான சதாசிவத்தை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்ட இசை அரசி தன் வாழ்வு முழுவதையுமே அவரிடம் அர்ப்பணித்துத் தன் இசை வளர்ச்சிக்குத் துணை தேடிக் கொண்டார். திரு. சதாசிவத்திற்கு முதல் மனைவி மூலம் ராதா, விஜயா என இரு பெண்கள் உளர். இவர்களும் இசை வல்லுனர்களாக இருந்தபோதும் ராதாவே அம்மாவுடன் பிற்காலத்தில் இணைந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். இசையரசி நடித்த சேவாசதனம் சகுந்தலை என்ற திரைபடங்களால் கிடைத்த பணத்தைக் கொண்டே கல்கி சஞ்சிகை கம்பனி தொடங்கப் பெற்று மலர்ச்சி பெற்றது. அநாதை நிலையங்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், கட்டிடங்களுக்கான நிதிகள், நினைவு மண்டபங்கள், நினைவு சிலைகள், ராம கிருஷ்ணமிஷன், சங்கீத வித்வச் சபை, கஸ்தூரிபா காந்தி நிலையம், அமெரிக்காவின் உள்ள பிற்ஸ்பர்க் ஆலயம் உட்பட பல்வேறுபட்ட ஆலய நிதிகளுக்காக என பல கோடிக்கணக்கான பணத்தைப் பெற்ற நிதிக் கச்சேரிகளை நடத்தி இந்திய சமுதாயத்திற்கே பெரும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தார். அவருடைய திறமையையும் மேதைமையையும் ஒழுங்காகத் திட்டமிட்டு வழி நடத்தி இத்தகைய பெருந்தொகையான பண வருவாயையெல்லாம் சிந்தாமல் சிதறாமல் ஒழுங்கான முறையில் அவற்றிற்கு கணக்கு வைத்துச் சரியாக அவற்றைப் பயன்படுத்த அவரது துணைவர் செய்த சேவையும் அர்ப்பணிப்பும் தியாகமும் கூட இச் சந்தர்ப்பத்தில் நாம் நினைவுகூரத் தக்கது.

தன் குரலிலே வீணை இசையைக் குடியிருத்தியுள்ளாள் என இசை மேதை சாம்பசிவ ஐயரால் பாராட்டுப் பெற்ற இம் மேதை ஐம்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்து யாழ். விவேகானந்தா வித்தியாலய கட்டிட நிதிக்காக இசைக் கச்சேரி செய்த போது "இராம நந்து புரோவா' என்ற தோடி ராக வர்ணத்தை உருக்கமாக இசைத்தார். இவர் பாடிய காற்றினிலே வரும் கீதம், கிரிதர கோபாலா, நித்திரையில் வந்து என்ற பாடல்களையெல்லாம் பட்டிதொட்டியெல்லாம் கேட்க முடிந்தது. பாபநாச சிவம் இயற்றிய ""கதிர் காமக் கந்தன் கழலினைப் பணிமனமே'' என்ற காம்போதிராகப் பாடலும் இவருடைய தெய்வீகக் குரலில் மக்களை மகேசனருகே அழைத்துச் சென்றது. பத்மபூஷன், ""பாரதரத்னா'' எனப் பல உயர் பட்டங்களுக்கும் பெருமை தேடிக் கொடுத்த இந்த இசை மேதை 1962 இல் ஐக்கிய நாடுகள் சங்கத்தில் ராஜாஜி இயற்றிய ஆங்கிலப் பாடல் ஒன்றைப் பாடி பெரும் கரகோஷத்தைப் பெற்றார்.

சங்கீத அக்கடமி, ரவீந்திரநாதரின் பாரதி பல்கலைக்கழகம், திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், டொல்கி பல்கலைக்கழகம் ஆகியன இவருக்கு டாக்டர் பட்டத்தைக் கொடுத்துக் கௌரவித்துள்ளன. ஏராளமான பட்டங்களையும் கௌரவங்களையும் பணமுடிச்சுகளையும் பெற்றுக் கொண்ட இவர், சிறிதும் சலனமின்றி அவற்றையெல்லாம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்குமேயான உடைமைகளென ஆக்கிக் கொண்டார்.1974 இல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான மக்காசாய் விருதை பெரும் பண முடிப்போடு பெற்றுக்கொண்ட இவருக்கு இன்னும் பல நாடுகளிலிருந்து விருதுகளும் கௌரவங்களும் தேடி வந்தன. 1982 இல் லண்டனில் பரதக்கலை விழாவை றோயல் ஆர்ட் மண்டபத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படியே 77 இல் பிட்ன்பர்க்கிற்கும் 87 இல் மாஸ்கோவிற்கும் இசைப் பயணம் சென்று வந்தார். கெய்ரோவில் இவரது இசையைப் கேட்டு மயங்கிய உம்குல்தூம் என்ற புகழ் பெற்ற பிரபல பாடகி இவரை கட்டித் தழுவி, தன் பாராட்டைக் கைப்படவே எழுதி வழங்கினார். இப்படிப்பட்ட மாமேதை இன்று நம்மிடையே இல்லையே என்ற ஏக்கம் என்றும் எம்மை வருத்திக் கொண்டேயிருக்கும் என்பதில் ஐயமேயில்லை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu 21 Apr 2011 - 15:00

நண்பா மறுபடியும் தவறான பகுதியில பதியாரிங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பதிவுகள பதியர்த்தோட நிறுதிக்காம கொஞ்சம் போட்டபதிவுகலயும் அப்பப்போ வந்து பாருங்க அதிர்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 21 Apr 2011 - 15:01

balakarthik wrote:நண்பா மறுபடியும் தவறான பகுதியில பதியாரிங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பதிவுகள பதியர்த்தோட நிறுதிக்காம கொஞ்சம் போட்டபதிவுகலயும் அப்பப்போ வந்து பாருங்க அதிர்ச்சி

இப்போ என்னுடைய வேலையே இவருடைய பதிவுகளை அந்த்ந்த பகுதிக்கு மாற்றுவதுதான்
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Thu 21 Apr 2011 - 15:06

பழைய பதிவு எப்படி பாப்பது
சொல்லேலுமா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu 21 Apr 2011 - 15:12

gbathurshan wrote:பழைய பதிவு எப்படி பாப்பது
சொல்லேலுமா

நண்பா இங்கே வரவேற்பரயில் உள்ள பிரிவுகளில் தங்கள் பதிவுகள் இருக்கும் அதை சென்று பார்க்கலாம் உதாரணதீர்க்கு உங்கள் பழய பதிவு சினிமா சம்பதப்பட்டது என்றாள் அது சினிமா பகுதியில் இருக்கும் அல்லது அரசியல் என்றாள் அரசியல் பகுதியில், நகைச்சுவை என்றாள் நகைச்சுவை பகுதியில் இருக்கும். அதுபோல் உங்கள் பதிவுகளை அந்தந்த பகுதிகளில் சரியாக பதிவிடுங்கள் . அன்பு மலர் அன்பு மலர்

அம்மாடி இப்போவாவது கேட்டீங்களே காலியாத்தா உனக்கு பொங்கலே வச்சு கும்பிடுறன்



ஈகரை தமிழ் களஞ்சியம் காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக