புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_m10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10 
64 Posts - 50%
heezulia
தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_m10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_m10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_m10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_m10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_m10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_m10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_m10தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும்


   
   
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Mar 05, 2010 6:07 pm

தமிழர் பண்பாடு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வகை ஒழுக்கங்களைக் கொண்டது. ஒழுக்கங்களுக்கு முதலாக இருப்பது, இன்பமாகும். மனித வாழ்வு இன்பமுடனிருக்க வேண்டும். உடல் நலமும் உள நலமும் செம்மையாகப் பேணப் பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு உருவானது, தமிழ் மருத்துவம். தமிழ் மருத்துவத்தின் களமாக விளங்குபவை தமிழ் இலக்கியமும், சித்தர் இலக்கியமுமாகும்.
தமிழ் மருத்துவம் தொன்மை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளவை சிந்துவெளி முத்திரைகள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், ஐம்பெருங் காப்பியம், திருக்குறள் போன்றவையாகும். அவற்றில், மருத்துவக் குறிப்புகளும், நோய் பற்றிய செய்திகளும், மருத்துவம் பற்றிய குறிப்புகளும், மூலிகைகளும் கிடைக்கின்றன. குறிஞ்சிப் பாடலில் தொகுத்துக் கூறப்பட்டுள்ள மூலிகைப் பட்டியலே தமிழ் மருத்துவப் புலமைக்குச் சன்றாக அமைகின்றது.
தாவரமாகிய எள்ளுக்கு தோன்றும் 'மகுளி' நோய், யானைக்குத் தோன்றும் 'வயா' நோய், மரணத்தை வெல்லும் மருந்துகள், அறுவை மருத்துவம், குழந்தை மருத்துவம், நோயாளிக்குப் படுக்கை அறை, நோய் அண்டாதிருக்க சுகாதாரப் பாதுகாப்பு, மருந்துப் பொருள் பாதுகாப்பு, மருத்துவ உறுப்புகள் போன்றவை கூறப்பட்டுள்ளன.
மதுரை எரிவதற்குக் காரணமாக இருந்தது யார்? என்றால், பாண்டியனோ பொற்கொல்லனோ இல்லை! மதுரை எரிந்ததற்குக் காரணமாக இருந்தது, தமிழ் மருத்துவம்! என்பேன். வியப்பாக இருக்கிறதல்லவா! ஆமாம்! பத்து விரை, முப்பத்திரண்டு ஓமாலிகைகளைக் கொண்ட மருத்துவ நீரில் நீராடியதால், மாதவி பேரழகு உடையவளாகத் திகழ்ந்தாள்! அவளைக் கண்ட கோவலன் தனது மனத்தை இழந்து மாதவி பின் சென்றான். பொருள் இழந்தான். கோவலன் மதுரைக்குச் சென்றான்.
சங்க காலத்தில் தோன்றிய மருத்துவத் தனி நூல் எதுவும் கிடைக்க வில்லை.என்றாலும், சங்க காலப் புலவரால் இயற்றப் பெற்ற ஆற்றுப்படை என்னும் மருத்துவ நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. சங்க காலத்தில் மருத்துவ நூல்கள் தோன்றின என்பதற்குச் சான்றாகிறது.
சங்க காலத்தில் 'கலைக்கோட்டுத் தண்டார்' என்னும் முனிவர் இருந்திருக்கிறார். அவர், ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூலை இயற்றியிருக்கின்றார். அந்த சுவடி, ஜெர்மனி நாட்டிற்குச் சென்றிடுக்கிறது. அதன்பின்னால், ஜெர்மனி மருத்துவத் துறையில் முன்னிலைப் பெற்றுள்ளது! என்று, ஜெர்மனி நாட்டுத் தமிழரிஞர் கருத்து தெரிவிக்கிறார். ஆனால், அம்முனிவர் எழுதிய நூலின் ஒரு பகுதி கூட நமக்குக் கிடைக்கவில்லை.
கலைக்கோட்டு முனிவர் நூலைப் பார்த்து, பல நூல்கள் இயற்றினேன்! என்கிறார். போகர்.
அதைப்போல, நாடு கடந்து சென்ற சுவடிகள், 87 நாடுகளின் நூலகங்களில் இருக்கின்றன.
சிலப்பதிகாரத்தில் அரைப்பு முறையால் செய்யும் மருந்துகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அவை,
சந்தான கரணி - முரிந்த உறுப்புகளை ஒட்டுவது.
சல்லிய கரணி - வேல் தைத்த புண்ணை ஆற்றுவது.
சமனிய கரணி - புண்ணின் தழும்பை மாற்றுவது.
மிருத சஞ்சீவினி - இறந்த உடலை உயிர்ப்பிக்கச் செய்வது.

ஆனால், இம்மருந்துகளைப் பற்றிய குறிப்புகள், எந்த மருத்துவ நூலிலும் காணவில்லை.
தமிழ் மருத்துவ மரபைத் தோற்றுவித்தவர் திருமூலர். திருமூலர் இயற்றிய 'எண்ணாயிரம்' என்னும் நூல் கிடைத்தில. வடலூர் வள்ளலார், அந்நூல்லின் அருமை பெருமையை வியந்து போற்றுகிறார். எந்த நூலும் எண்ணாயிரத்துக்கு ஈடில்லை! என்கிறார். தருமையாபுர ஆதினத்தின் சுவடி நூலகத்தில் "எண்ணாயிரம்" நூல் இருந்ததைக் கண்டதாகவும், சில காலங்களுக்குப் பின்னர் அந்நூலைத் தேடிச் சென்ற போது, ஆங்கே அந்நூல் இல்லை! என்றும், தமிழ்த் தாத்தா உ.வே.சா குறிப்பெழுதியுள்ளார்.
எண்ணாயிரம் என்னும் நூல் ஒன்றே தமிழ் மருத்துவத்துக்கு மூல நூலாக இருந்திருக்க வேண்டும். அதன் சிறப்பினாலேயே அது காணாமற் போயிருக்க வேண்டும்.
முல்லை நிலத்துச் சித்தராகிய இடைக்காடர், அரியவகை மருந்துகளைக் கூறியுள்ளார். அச்செய்தி, உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள மேற்கோள் களிலிருந்து கிடைக்கிறது. ஆனால், இடைக்காடர் இயற்றிய தனிநூல் ஒன்றையும் காணோம்.
அதேபோல், அகத்தியர் - 81000, அகத்தியர் - 51000, அகத்தியர் - 30000, அகத்தியர் - 21000, அகத்தியர் - 18000, அகத்தியர் - 8000, பரஞ்சோதி - 8000, கோரக்கர் வெண்பா, மச்சமுனி கலிப்பா, சங்கர மாமுனி கிரந்தம், மாபுராணம் போன்ற நூல்கள் தமிழ் மருத்துவத்துக்கு ஆதாரமாக இருந்துள்ளன. அவற்றிலிருந்து ஒரு சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஆனால், பழனியிலுள்ள ஒரு மருத்துவ நூலாசிரியர், அகத்தியர் எண்ணாயிரத்தில் அனைத்து இரகசியங்களும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்றும், 3ஆவது காண்டம், முதல் பிரிவு 272 முதல் 276 வரை என்று குறிப்புரை தந்துவிட்டு, மேலும் அந்நூலை அச்சிட அந்நூலை வைத்திருப்பவர் கொடுக்க மறுத்துவிட்டார் என்கிறார். இந்த நூலே திருமூலர் எண்ணாயிரமாகவும் இருக்கலாம்.
ஆங்கில மருத்துவம் அறிமுகமாகாத காலத்துக்கும் முன், தமிழ் மருத்துவம் கண்டறிந்த முறைகள், இன்னும் அறிய முடியாதவைகளாக இருக்கின்றன.
நரை திரை மூப்பு; ஆஸ்துமா; காசம்; எய்ட்ஸ்; சோரியாஜீஸ்; புற்று; மூட்டுவாதம்; பக்கவாதம்; இதயநோய்; சர்க்கரை நோய்; கிட்னிக் கோளாறு; முதிர்வு நோய்கள் போன்றவற்றுக்கும் மருந்துகள் காணப்படுகின்றன.
தமிழ் மருத்துவத்தின் சிறப்பாக அமைந்திருப்பவை இரண்டு. இன்று நோய் தடுப்பு. மற்றொன்று நோய் எதிர்ப்பு. மேலை மருத்துவ முறைகளில் காணப்படும் மருத்துவ முறைகளைப் போலத் தமிழ் மருத்துவத்திலும் மருத்துவ வகைகள் காணப்படுகின்றன. அவை,
1. அறுவை மருத்துவம்
2. இசை மருத்துவம்
3. ஒட்டு மருத்துவம்
4. குழந்தை மருத்துவம்
5. நெஞ்சக நோய் மருத்துவம்
6. வர்ம மருத்துவம்
7. பன்முக மருத்துவம்
8. கற்ப மருத்துவம்
9. மகளிர் மருத்துவம்
10. உணவு மருத்துவம்
11. நோயில்லா நெறி
12. நம்பக மருத்துவம்
13. மூலிகை மருத்துவம்
14. கண் மருத்துவம்
15. நரம்பு மருத்துவம்
16. எலும்பு மருத்துவம்
17. மூளை மருத்துவம்
18. தோல் மருத்துவம்
19. மதன மருத்துவம்

என்பவை குறிப்பிடத் தக்கவை.
பன்னூறு ஆண்டுகளாகப் போற்றப் பட்டு வந்துள்ள தமிழ் மருத்துவத்தை முழுவதுமாகக் கண்டறிய வேண்டுமானல், கன்னடம், மலையாளம், இந்தி, ஒரியா, மங்கோலியா, திபெத், உருஷ்யா, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் காணப்படுகின்ற மருத்துவ நூல்களை ஆராய வேண்டியிருக்கின்றன.
கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்திற்கு மொழி மாற்றம் செய்யப் பட்டிருக்கின்றன. அவ்வாறே மங்கோலியம், திபெத்தியம், அரபி, தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளுக்கும் சென்றுள்ளன. அவை, தமிழ் நூல்களாகவே வழங்கி வருகின்றன என்பது வருத்தத்துக்கு உரியது.
தமிழ் மருத்துவத்தின் ஒரு பிரிவாகிய வர்ம மருத்துவத்தின் மறு வடிவமாகியிருக்கிறது, சீன மருத்துவம்.
வடக்கிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகம், ஆயுர்வேத பல்கலைக் கழகம், சமஸ்கிருத கல்லூரிகள் ஆகியவற்றிலுள்ள நூல்களில் செம்பாதி தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நூல்களை மொழிமாற்றம் செய்தவர்கள், தமிழ் மொழிப் புலமை யில்லாமல் செய்த பிழைகளை தேரையர் என்னும் சித்தர் கேலி செய்திருக்கிறார். இதிலிருந்து, மொழித்திருட்டு வெளிப்பட்டிருக்கிறது.
இலங்கை இராவனேஸ்வரன் நூலகத்திலிருந்து திருடி வரப்பெற்ற நூலைப் பார்த்து, மருத்துவ நூல் இயற்றப்பெற்றதாக, இரச சாஸ்திரம் என்னும் சமஸ்கிருத நூல் குறிப்பிடுகிறது.
தமிழ் மருத்துவ நூல்கள், செய்யுள் வடிவாக இருந்தாலும் அவை தமிழ் இலக்கிய வடிவங்களாகவே இருப்பது போற்றுதற்குரியது.
உதாரணமாக, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, நொண்டி, சிந்து, கும்மி, பள்ளு, காவியம், காப்பியம், சிந்தாமணி, சூடாமணி, கல்லாடம், திருமந்திரம், சதகம், கரிசல், பிள்ளைத் தமிழ், உலா, பாரதம், நிகண்டு, திருப்புகழ், கோவை, தண்டகம், வாகடம், சூத்திரம், திறவுகோல், சுரிதகம் என்று பலவடிவங்களைக் குறிப்பிடலாம்.
தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றுள்,கீழ்க்கண்ட நிறுவனங்கள் தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டிவைத்துள்ளன.
தமிழ்ப் பல்கலைக் கழகம் - 5000
சரசுவதி மஹால் நூலகம் - 396
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் - 270
சித்த மருத்துவ மேம்பாட்டுக் குழு - 478
உஸ்மான் கமிட்டி - 594
உ.வே சாமிநாதர் நூலகம் - 15
விருத்தாசலம், வீர சைவ மடம் - 15
பாண்டிச் சேரி, பிரஞ்சு- இந்திய கலைக்கூடம் 80
மதுரை, தமிழ்ச் சங்கம் - 24
திருவனந்தபுரம் கீழ்த்திசை சுவடி நூலகம் - 165
சென்னை, கீழ்த்திசை சுவடி நூலகம் - 579

இவையல்லாமல், தமிழகத்திலுள்ள சைவ வைணவ மடாலயங்கள், கோயில்கள், மருத்துவ மனைகள், பரம்பரை மருத்துவர்களிடம் நூற்றுக் கணக்கான சுவடிகள் இருக்கின்றன.
இத்தனைச் சுவடிகள் இருந்த போதிலும், தமிழ் மருத்துவம் நிறைவு பெற்ற மருத்துவ முறைகளைக் கொண்டதாகக் கூற முடியவில்லை. காரணம்,
உ.வே.சா போன்ற தமிழ்ச் சான்றோர்கள் தமிழ் நூல்களைத் திரட்டியது போல, மருத்துவ நூல்களைத் திரட்ட முன் வந்தது போல, மத்திய கலாச்சாரத் துறையும் தமிழ் நாடு அரசும் கேட்டுக் கொண்டதற்கிணங்க பேராசிரியர்களும், மாணவர்களும் ஒன்று திரண்டு, தமிழகத்தின் இல்லங்கள் தோறும் சென்று சுவடிகளைக் கண்டறியும் பணியை மேற்கொண்டனர். அவர்கள், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சுவடிகள் பற்றிய கணக்கெடுப்பு நிகழ்த்திய போதில், ஜோதிடர்கள், புதிரை வண்ணார், குறி சொல்லும் குறவர், வில்லிசை கலைஞர், கணியான், பண்ணையார், கோவில்கள், பழைய பொருள்களை வாங்கி விற்பவர், புலவர்கள் போன்றவர்களிடம் அரிய சுவடிகள் இருப்பதை அறிந்துள்ளார்கள். அவர்கள், சுமார் ஒன்பது இலட்சம் ஓலைச் சுவடிகளைக் கணக்கெடுத்துள்ளார்கள். குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் இரண்டு இலட்சம் ஓலைச் சுவடிகளும், சங்கரம் கோவில், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முப்பதாயிரம் சுவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. அச்சுவடிகளில் தமிழ் மருத்துவத்தைத் தலை நிமிரச் செய்யும் அரிய முறைகளைக் கொண்ட நூல்கள் இருக்கக் கூடும்.
ஆனால், அவற்றைக் கையகப்படுத்த எந்த முயற்சியும் அரசோ பிற நிறுவனங்களோ மேற்கொள்ளாதிருப்பது வருத்தத்திற்கு உரியதாக இருக்கிறது.
இன்றைய நிலையில் தமிழ் மருத்துவ முறைகள் ஓலைகளிலும் நூல்களிலும் மறைந்து கிடக்கின்றன. ஒரு சில முறைகள் மரபு வழி மருத்துவர்களின் பாதுகாப்பில் முடங்கிக் கிடக்கின்றன.
தமிழ் மருத்துவப் பாதுகாப்பிற்காக எடுக்கும் முயற்சி முறையாக இருக்க வேண்டுமானால், தமிழ் மருத்துவச் சுவடிகளும், பழைய நூல்களும் இலக்கப் பதிவாக மாற்றி, மின்காந்த இலத்திரன் முறைக்கு மாற்றியாக வேண்டும்.




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக