புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
102 Posts - 48%
ayyasamy ram
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_m10நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 05, 2010 2:19 am

First topic message reminder :

நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Nityanandha
1) முதலில் உங்களுக்கு வேண்டியது ஒரு புனைப்பெயர். உங்களின் இயற்பெயர் முனுசாமியோ, மண்ணாங்கட்டியோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, சாமியாரின் லட்சணத்துக்கேற்றவாறு ஒரு நீளமான பெயரை சுட்டிக் கொள்வது மிக அவசியம். அதில், யக்ஷதிக்ஷமோக்ஷானந்தா என்பது போன்ற சம்ஸ்கிருத வாசனை அடிக்கிற பெயராக பார்த்து வைத்துக் கொள்வது மிகுந்த பயனளிக்கும். பல்லங்குடிஜில்லாங்கடி சாமியார் என்பது மாதிரி வைத்துக்கொண்டால் கிராமத்து மக்களை கவரலாம். முடிவெட்டிக் கொள்ளாமல் தாடியையும், மீசையையும் மழிக்காமல் வளர்த்துக் கொண்டால் சலூனுக்கு செய்யும் செலவும் மிச்சமாகும்.

நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Linesblue1

2) நீங்களே உங்களை சக்தி வாய்ந்த சாமியார் என்று சொல்லிக் கொண்டால் மக்களை நம்பவைப்பது சற்று - கவனிக்கவும், சற்றுதான் - சிரமம். எனவே ஒரு கம்பெனியில் குமாஸ்தா வேலைக்கு வைத்துக் கொள்வது போல நீங்களும் சம்பளத்திற்கு இரண்டு அல்லது மூன்று ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்வது அவசியம். இது ஆரம்ப நிலையில்தான் தேவைப்படும். உங்கள் புகழ் அகிலமெங்கும் பரவிவிட்ட பிறகு நிறைய பேர் தானாகவே வந்து உங்களுக்கு சீடர்களாக விழுவார்கள். உங்கள் ஆட்களின் முக்கிய வேலை, மக்களிடையே உங்கள் புகழைப் பரப்புவது, பேருந்துகளில் செல்லும் போது, உங்களின் பேரை உரக்க குறிப்பிட்டு, தீராத வியாதி ஒன்று அவருக்கு இருந்து உங்களிடம் வந்தபிறகு முழுக்க குணமாகிவிட்டதாக பல பேர் காதில் விழுமாறு சொல்ல வைக்கலாம்.

தப்பித்தவறி எந்த ஏமாந்த சோணாகிரியாவது உங்களை சந்திக்க வந்துவிட்டால், நீங்கள் உடனே அவரைப் பார்த்து விடக்கூடாது. சுவாமிஜி தியானத்தில் இருக்கிறார் என்று உங்கள் சீடர்களை சொல்ல வைக்க வேண்டும். நீங்களே பத்து, பதினைந்து ஆட்களை வரிசையில் நிற்க வைத்து கூட்டமா வராதீங்க, வரிசையா நில்லுங்க என்று உங்கள் அல்லக்கைகளை வைத்து சத்தம் போட வைக்கலாம். கூட்டம் பெருகிவரும் நிலையில் 100ரூ டிக்கெட் என்று நுழைவுச்சீட்டு கூட அளிக்கலாம். நீங்கள் பக்தர்களை சந்திக்க வரும் போது.. மன்னிக்கவும் காட்சி அளிக்கும் போது.... வழிவிடுங்க... வழிவிடுங்க என்று இரண்டு, மூன்று பேர் உங்கள் அருகில் கத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Linesblue1

3) நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உங்களுக்கென்று ஓர் ஆசிரமம் வேண்டும். பொறம்போக்கு இடமாக இருந்தால் கூட பரவாயில்லை. ஓலைக்குடிசை போட்டு அமர்ந்து கொண்டால், உங்கள் புகழ் பெருகி பக்தர்கள் கூடும் வேளையில் உங்களை காலி செய்ய வைக்க பயப்படுவார்கள். பிறகு உங்களின் பணக்கார பக்தர்களே உங்களை பங்களா வாங்கி அமரவைப்பார்கள். அவர்கள் செய்த பாவங்களின் குற்ற உணர்ச்சியால் அவைகளை டெட்டால் போட்டு கழுவ உங்களை நாடுவார்கள், நீங்கள் ஏதோ தேவதூதர்கள் என்று.

ஜாக்கிரதை. நீங்களே ஒரு பழைய குற்றவாளி என்று தெரிந்தால், உங்களை போட்டு மொத்திவிடக்கூடிய சாத்தியக்கூறுகளும் உண்டு. ஆனால் பழகுகிற வரைக்கும்தான் இதெல்லாம். ஒருவரையருவர் நன்கு அறிந்து கொண்டபிறகு இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்ளலாம்.

நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Linesblue1

4) "டேய் கய்த, நம்ம காதர் கடையில போயி பரோட்டாவும் சால்னாவும் வாங்கிகினு ரெண்டு காஜா பீடியும் வாங்கிகினு சல்தியா வாடா பேமானி" என்ற உங்கள் பழைய பாஷையையெல்லாம் ஏறக்கட்டி பரணையில் போட்டுவிட வேண்டும். இப்போது நீங்கள் சுவாமிஜி என்பதால் அதற்குரிய ஜபர்தஸ்துடன் பேச வேண்டும். 'சொல் மகனே' என்றோ 'நீ யார் என்று உனக்குத் தெரியுமா?' என்றோ 'உலகமே மாயை எனும் போது பிரச்சினைகளும் மாயைதானே' என்று மையமாக பேச வேண்டும். மேலோட்டமாக கேட்கும் போது எதுவும் புரியக்கூடாது. அப்போதுதான் நீங்கள் ஏதோ செய்தி (?!) சொல்கிறீர்கள் என்று பக்தர்கள் புரிந்துகொள்வார்கள்.

எதற்கும் ஜெயகாந்தனின் 'குருபீடம்' என்கிற சிறுகதையை படித்துவைத்துவிடுவது நல்லது. பின்பு பிராக்டிகலாக செய்ய பயனுள்ளதாக இருக்கும்.

நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Linesblue1

5) மருத்துவர்களையும், வழக்கறிஞர்களையும், சாமியார்களையும் தேடிப் போகிறவர்கள் பிரச்சினை என்று ஏதாவது இருந்தால்தான் போவார்கள் என்று அடிப்படை உளவியல் சமாச்சாரம். எனவே வருகிற பக்தர்களிடம் "உன் பிரச்சினையை நான் அறிவேன்" என்று குத்துமதிப்பாக ஆரம்பிக்க வேண்டும். 'அட நமக்கு பிரச்சினை இருப்பது சாமியாருக்கு எப்படி தெரியும்' என்று வருபவன் ஆடிப் போய்விடுவான். ஆனால் உண்மையாக உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதால் 'எனக்குத் தெரியும்தான் என்றாலும் அதை உன் வாயாலேயே சொன்னால்தான் இறைவனிடம் நானும் முறையிடுவேன்' என்று டகுல்பாஜி வேலை ஏதாவது செய்ய வேண்டும்.

நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Linesblue1

6) பி.சி.சர்க்கார், ஜதுகர் ஆனந்த் போன்ற மாஜிக் நிபுணர்களிடம் ஒரு வருடம் உதவியாளராக வேலை செய்திருத்தல் இந்த தொழிலுக்கு நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை, இப்போது நீச்சல் அடிப்பது எப்படி? என்பது வரைக்கும் சொல்லிக்கெ(¡)டுக்க நிறைய புத்தகங்கள் உள்ளன. மாஜிக் கற்றுக் கொடுக்கிற புத்தகங்களை உருப்படியாக பின்பற்றினால் ஒரளவிற்கு கற்றுக் கொள்ளலாம்.

கையில் விபூதி வரவழைப்பது, வாயில் லிங்கம் வரவழைப்பது எல்லாம் நம் முன்னோர்கள் முயற்சித்து வெற்றி பெற்று விட்டதினால் நாமும் அதை பின்பற்ற வேண்டாம். இயக்குனர் ஷங்கர் தம் படங்களில் கிராபிக்ஸில் கலக்குவது போல நீங்களும் காலத்திற்கேற்றவாறு அப்-டேட் செய்து கொண்டால்தான் பிழைக்கலாம். நீங்கள் லிங்கத்தை வாயில் இருந்து வரவழைப்பதற்கு பதிலாக, பின்பக்கமாக..... இருங்கள் அவசரப்படாதீர்கள்..

பின்புறமாக சிஷ்யகே(¡)டிகளில் ஒருவனை சிவப்பு நிற ஒளியை வீசச் செய்து உங்கள் தலையின் பின்புறம் அது பிரதிபலிக்குமாறு செய்து இறைவனிடம் பேசிக் கொண்டிருப்பதாக பாவ்லா செய்யலாம். இதையெல்லாம் நம்புவார்களா? என்று பைத்தியக்காரத்தனமாக கேட்கக்கூடாது. இதைவிட பைத்தியக்காரத்தனங்களையெல்லாம் நம் மக்கள் ஏற்கெனவே நம்பியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Linesblue1

7) சாமியார் என்று ஆகிவிட்ட பிறகு உங்களுக்கென்று ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும். இதற்கு உங்கள் முன்னோர்களின் ஆசிரமங்களுக்கு ஒருமுறை டிரெயினிங் விசிட்செய்து விட்டு வருவது நல்லது. பிராந்திச் சாமியார், கோழி ரத்தத்தை குடித்துவிட்டு குறிசொல்லும் சாமியார், கோழி இறகு மூலம் கடவுளிடம் ISD லிங்க் மூலம் நேரடியாக பேசும் சாமியார், வருகிறவர்களை எல்லாம் ஆலிங்கனம் செய்யும் சாமியார், தேங்காயை உங்கள் மண்டையிலேயே மொட்டென உடைத்து உங்கள் மூளைக்கோளாறை ஏற்படுத்தும்..மன்னிக்கவும் சரிசெய்யும் சாமியார், உங்களை மண்ணில் புதைத்துவிட்டு பதினைந்து நிமிடம் கழித்து உங்களை மண்ணிலிருந்து எழுப்பி உங்கள் பிரச்சினைகளை நிரந்தரமாக (?!) சரிசெய்யும் சாமியார் என்று பலவிதமான சாமியார்களைப் போல நீங்களும் ஒரு முறையை பின்பற்றுவது பயனளிக்கும்.

கணினியின் உதவியைக் கொண்டு கடவுளிடம் மின்னஞ்சல் மூலமாகவோ அவசரமென்றால் சாட்டிங் மூலமாகவோ தொடர்பு கொள்ள முடியும் என்று சொல்லிப்பார்க்கலாம். நம்புவார்கள். கணினி தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் வந்தால் என்ன செய்வதென்று கேட்கிறீர்களா? பயப்படாதீர்கள்.. உயர்நீதிமன்ற நீதிபதிகள் முதற்கொண்டு காவல்துறை அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் போன்ற மெத்தப்படித்த அறிவாளிகளே சாமியார்களின் கால்களில் விழுந்து எழுந்திருப்பதால் இந்த மாதிரியான அற்பத்தனமான சந்தேகமெல்லாம் உங்களுக்கு வரக்கூடாது.

நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Linesblue1

8) நான்கைந்து வெளிநாட்டுக்கார வெள்ளைக்காரர்களை வாடகைக்கு வரவழைத்து உங்கள் ஆசிரமத்தில் தங்கவைப்பது நல்லது. திரைப்பட புரொடக்ஷன் மேனேஜர்களிடம் கேட்டால் இந்த மாதிரியான வெளிநாட்டவர்களை ஏற்பாடு செய்து தருவார்கள். இப்போது திரைப்படங்களில் பாடப்படும் டூயட்களில் பின்னால் ஆடுபவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு பஞ்சமிருக்காது. நீங்கள் பக்தர்களுக்கு காட்சிதரும் போது அவர்கள் முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டு கைகளை உயர்த்தி கோஷம் போட வேண்டும். இதையெல்லாம் அவர்களுக்கு எப்படி சொல்லித்தருவது என்று சஞ்சலப்படாதீர்கள். அவர்கள் டிஸ்கொதே போன்ற கூட்டங்களில் பாப் இசைக்கு ஏற்ப நடனமாடி பழக்கமாகி இருப்பதால், அவற்றையே நம் வசதிக்கு மாற்றிக் கொள்ளலாம்.

நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Linesblue1

9) உங்களிடம் பிரச்சினைக்கு வருபவர்களிடம் எவ்வளவு காணிக்கை வாங்குகின்றீர்களோ அது உங்கள் சாமர்த்தியம். ஆனால் பிரச்சினை தீர பரிகாரம் என்று சொல்லும் போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நகருக்கு வெகு தொலைவில் உள்ள ஒரு கோவிலை குறிப்பிட்டு 60 சனிக்கிழமைகள் தவறாமல் சென்று பெட்ரோல் விட்டு... மன்னிக்கவும் நல்லெண்ணைய் விட்டு விளக்கேற்றி வைத்தால் உங்கள் பிரச்சினைகள் அகன்று சுபிட்சம் ஏற்படும் என்று அளந்துவிடலாம். ஏன் இவ்வளவு நீள காலக்கெடு என்றால்...

பெரும்பாலும் இத்தனை வாரமும் சென்று வர நம் மக்களுக்கு பொறுமை இருக்காது. அவர்களுக்குத்தேவை உடனடி சுலபமான தீர்வு. அதற்காகத்தானே உங்களிடம் வருகிறார்கள். எனவே அவ்வாறு செல்ல இயலாதவர்கள் 'நம்மால் பரிகாரத்தை செய்ய முடியவில்லை. அதனால்தான் சுவாமிகளின் ஆசி பலிக்கவில்லை' என்று தங்களைத் தேற்றிக் கொள்வார்கள். குருட்டாம் போக்கில் அவர்கள் பிரச்சினை பலித்துவிட்டதென்றால் உங்களுக்கு கொண்டாட்டம்தான். உங்களுக்கு மேலும் காணிக்கை வருவதோடு, அவர்களே உங்களுக்கான பி.ஆர்.ஓக்களாக மாறி மற்றவர்களிடம் உங்கள் புகழ்பரப்பி விடுவார்கள்.

இவ்வளவு நீளமான கால பரிகாரம் சொல்வது இன்னொரு வகையிலும் நல்லது. ஏதாவது பிரச்சினையெனில் உங்களுக்கு முன்ஜாமீன் எடுக்கவோ, ஊரை விட்டு ஓடிப் போகவோ இந்த கால இடைவெளி தேவைப்படும்.

நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Linesblue1

10) நாம்தான் சாமியாராற்றே, லெளதீக வாழ்க்கையில் நமக்கென்ன வேலை என்று ஆசிரமத்திலேயே உட்கார்ந்து விடக்கூடாது. சாப்பிட்டது செரிக்க, சற்று வெளியுலகிற்கும் போய்வருவது நல்லது. உங்கள் புகழ் ஓங்கிவிட்டதால், பெரிய அரசியல்வாதிகளும் உங்களுக்கு பக்தர்களாகிவிடுவதால், அப்போதைய அரசியல் சமாச்சாரத்தில் மூக்கை விட்டுப் பார்க்கலாம். உங்கள் நேரம், அது சரியாகிவிட்டால், ஐ.நா. சபைக்கு கூட உங்களை கூப்பிட வாய்ப்புகள் வரலாம். ஆனால் அரசியல்வாதிகளிடம் பழகும் போது ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. சந்தர்ப்பம் சரியில்லையென்றால் உங்களையே போட்த்தள்ளி விடுவார்கள். எப்போதும் ஊரைவிட்டு ஓடத்தயாரான நிலையிலேயே இருப்பது நல்லது.

இதெல்லாம் பிரச்சினையாக இருக்கும் போல போலிருக்கிறதே என்று தயங்குகிறீர்களா? கவலையை விடுங்கள். இதிலேயே பல டிபார்ட்மெண்ட்கள் உள்ளன. அதில் பார்த்துக் கொள்ளலாம்.

கோட் சூட் எல்லாம் போட்டுக் கொண்டு, பெயரியல் நிபுணராகி விடுங்கள். 'உங்கள் இனிஷியலை மாற்றி விட்டு JS என்று போட்டுக் கொண்டால் வாழ்க்கையே சுபிட்சமாகிவிடும்' என்று சொல்லிப்பாருங்கள். அப்பன் பேரையே மாற்றி வைத்தால் அசிங்கமாச்சே என்றெல்லாம் நினைக்காமல் நீங்கள் சொன்னபடி செய்வார்கள்.

நீலக்கல், பச்சைக்கல் என்று கூட வியாபாரம் செய்யலாம். பிளாட்பாரத்தில் விற்பவனே ராசிக்கல் மோதிரம் என்று பின்னும் போது நீங்கள் hi-tech லெவலில் செய்யலாம். போகிற போக்கில் பாறாங்கல்லை கூறு போட்டு கூட அதிகவிலையில் விற்கலாம். வாங்கிக்கொள்ள ஆள் இருக்கிறது.

இன்னுமென்ன தயக்கம். இப்போதே புறப்படுங்கள்.

நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 Linesblue1

தேடுதல் அப்புகுட்டி


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 8:55 pm

ஈகரைச்செல்வி wrote:அவசியம் தேவை சமூகத்துக்கு நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ் - Page 2 103459460
தாயார் இதை மேலே கொண்டுவருவதர்க்கான காரணம்??..........அடியேன் தெரிந்து கொள்ளலாமா? புன்னகை புன்னகை
அப்பு குட்டி இப்போ எங்கே இருக்கிறார்..உங்களுக்கு தெரியுமா? என்ன?




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Jun 18, 2015 8:21 am

குற்றவாளிகள் கூட சாமியாராகலாம் போலீசுக்கு வரம் தோறும் படி குடுத்தால் அவர்களே சாமிக்கு கஸ்டமர் அனுப்பி விடுவார்கள்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 18, 2015 9:19 am

சாமியார் தொழிலே சாலச் சிறந்தது !
=====================================
சிலசில ஆண்டுகள் முன்னம்
பலரும் போற்றும் வண்ணம்
வாழ்ந்து வந்தவன் நான்-இன்று
வாழ்ந்து கெட்டவன் நான்.

என்னுடைய வாழ்வே என்னுடைய செய்தி
எல்லோரும் கேட்பதற்கே என்கதையை உரைக்கின்றேன்.

உணவுக்கடை ஒன்று வைத்தேன்
உளுந்துவடை பொங்கல் மற்றும்
மணங்கமழும் நெய் தோசை
மல்லிகைப்பூ இட்லி என்று
கணக்கின்றி பொது மக்கள்
கடன் சொல்லித் தின்றதனால்
பணக்கஷ்டம் வந்தது ஐயா
படுத்தது ஐயா வியாபாரம்.

மக்கள் நோய் தீர்த்திடவே
மருந்துக் கடை வைத்தேன்
சிக்கல் எதுவும் இன்றி
சில காலம் சென்றதையா
என்கடை மருந்துண்டு ஏழையொருவன் கண்மூட
போலி மருந்தென்று போலீஸ் என்னை விலங்கிட
சிக்கல் வந்ததய்யா கடை சீரழிந்து போனதையா.

பல்லாயிரம் செலவிட்டுப் பலசரக்குக் கடைவைத்தேன்
பொல்லாப் பணியாளர் பொறுப்பிலே விட்டுவைத்தேன்
கல்லாவில் எல்லோரும் கைவைத்த காரணத்தால்
கலகலத்துப் போனதையா பலசரக்கு வியாபாரம்.

இனியொரு தொழில் வேண்டாம்
இருக்கின்ற பணத்தை மட்டும்
பெருக்கிடுவோம் என்று எண்ணி
சிக்கல் இல்லாத சீட்டுக் கம்பெனி ஒன்றில்
பிக்செட் டிபாசிட்டில் போட்டு வைத்திட்டேன்.
பட்ட காலிலே மீண்டும் பட்டதையா
கெட்ட குடியே மீண்டும் கெட்டதையா
குருவிபோல் சேர்த்திட்ட பணத்தை எல்லாம்
பருந்தெடுத்துப் போனதுபோல் பைனான்ஸ் காரன்
இரவோடு இரவாக ஓடிவிட்டான்
இருக்கின்ற நம்பிக்கையும் தகர்ந்ததையா.

செய்வது அறியாமல் சேருமிடம் தெரியாமல்
கால்போன போக்கினிலே போகின்ற வேளையிலே
ஆலமரத்தடியில் அழகான கூண்டு ஒன்றில்
கோல மொழிபேசும் கிளிஒன்றை வைத்தொருவன்
ஜோதிடம் சொல்லக் கண்டு
அவனிடம் நான் சென்று
ஐயா என்பெயர் ஆடியபாதம் என்பார்
செய்யாத தொழிலில்லை, செய்வதற்கு ஏதுமில்லை
தொட்ட தொழிலெல்லாம் துலங்கவில்லை ஐயா
நட்டம் வந்ததையா, நடுத்தெருவில் நிற்கின்றேன்
என்ன தொழில் செய்தால் ஏற்றம் வருமென்று
சொன்னதைச் சொல்லும் கிளியிடம் கேட்டுரைப்பீர்
எனக்கேட்க, ஜோசியனும்
கிளியை நோக்கி
"வாடா ராஜா வந்திடுவாய் வெளியே
ஆடியபாதம் என்ற அழகான பேருக்கு
தேடியொரு சீட்டைத் தேர்ந்தெடுப்பாய்"
எனச் சொல்ல
அழகான கிளியொன்று வெளியே வந்ததையா
அலகால் கவ்வியொரு சீட்டை எடுத்ததையா
சீட்டைப் பிரித்துப் பார்த்திட்ட ஜோசியனும்
சிரித்திட்டான் பலமாக சிரித்திட்டான் எனக்காக

'ஐயா
தக்கதொரு வழிசொல்வேன் தலைவணங்கிக் கேட்டிடுவீர்
மிக்கபுகழ் உண்டாகும் மேதினியில் உந்தனுக்கு
மூலதனம் வேண்டாம், முதலீடு தேவையில்லை
காலம் முழுமைக்கும் காசுபணம் பார்த்திடலாம்
கல்லூரிக் கட்டிடங்கள், கல்யாண மண்டபங்கள்
எல்லாமே கைகூடும்,எண்ணியபடி நடக்கும்
உல்லாசம் எல்லாமே உன்மடியில் காத்திருக்கும்
பெண்டு பிள்ளைகள் பெரியோர்கள் எல்லாமே
கண்டு வணங்கிடுவர், காலில் விழுந்திடுவர்"

"ஜோசியரே அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?'
எனக்கேட்க,
"காவிஉடை அணிந்தே, கமண்டலத்தை ஏந்திடுவீர்
தரையில் விழுமளவு தாடி வளர்த்திடுவீர்
நெற்றியில் திருநீறும், நடுவில் குங்குமமும்
கற்றைமுடி வளர்த்து, கழுத்தில் கொட்டையும்
தாங்கி
சாமியாராகப் போவதே சரியான வழியென்று
நான் சொல்லவில்லை ஐயா,கிளிசொன்ன வழி" என்று
பாவாடைச் சாமியாரின் படம் எடுத்துக் காட்டிட்டான்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jun 18, 2015 12:22 pm

நடிகைகள் நமக்கு பின்னால வருவாங்களா? வசூல் கொஞ்சம் அதிகமா கிடைக்கும், அதுக்கு தான், வேற ஒன்னும் இல்ல


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக