புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
100 Posts - 48%
heezulia
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
7 Posts - 3%
prajai
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
sanji
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
227 Posts - 51%
heezulia
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
29 Posts - 7%
T.N.Balasubramanian
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
18 Posts - 4%
prajai
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருண் கொலேட்காரின் கவிதைகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 4:53 pm

அருண் கொலேட்காரின் கவிதைகள்! 240px-Arun-kolatkar_gowri-ramanathan-hindu

கடந்த முப்பதாண்டுகளில் பல மராத்தி இளங்கவிஞர்களைப் பாதித்த மராத்திப் புதுக்கவிஞர் அருண் கொலேட்காரின் மூன்று கவிதைகளின் மொழிபெயர்ப்பு - இரா.முருகன்




பூசாரி


குளிர்ந்த பிரகாரச் சுவர்மேல்
புட்டம் அமர்த்திப்
பூசாரி காத்திருக்கிறான்.



பஸ் இன்று தாமதமாக வருமோ,
பகல் சாப்பாட்டில் இனிப்பு இருக்காதோ,
அவனுக்குப் புதிய கவலைகள்.



தணுத்த கல்லில் பட்ட
விரைகளை வேகமாய் விலக்கி
வெய்யில் பக்கம் தலை திருப்புகிறான்.



இறந்தவன் கையில் தனரேகை போலச்
சும்மாக் கிடந்த தெரு.



பழக்கமான கிராம நாவிதன் போலக்
கன்னம் தடவித் தலையில்
கைவைக்கும் சூரியன்.



வெற்றிலைத் துண்டொன்று
மேலும் கீழுமாய் நாவில் சுற்றும்
மந்திரம் போல.



தூரத்தில் புள்ளியாய்த் தெரிந்த பஸ்
அவன் பல்லிப் பார்வையில்
மூக்கு மருவாக உருவம் பெருகும்.



பள்ளத்தில் குலுங்கி ஏறி
சத்தம் எழக் கடந்து
அவன் கண்ணில் நீலம் பூசும்.



ஒருவலம் வந்து அவன் முன்னால்
செல்ல உறுமலோடு
மெல்ல நிற்கும் பஸ்,
பூனைச் சிரிப்பும்
இந்தாபிடி என்று
உள்ளே யாத்ரீகர்களுமாக.



அருண் கொலேட்காரின் கவிதைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 4:54 pm

படம்



(மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில், வயிற்றுப் பிழைப்புக்காக உடல் விற்கும் ஒரு பெண், பண்டாரிபுரம் திருவிழா பார்க்கப் போகிறாள். கண்ணனும் ருக்மணியும் அங்கே வழிபடப் படும் தெய்வங்கள். திருவிழாக் கடைகளில் ஒன்று - தலைவர்கள், சினிமா நடிகர்கள் போல யார் கூட வேண்டுமானாலும் சேர்ந்து நின்று புகைப்படம் (trick photography) எடுக்கும் இடம். அங்கே நுழைகிறாள் இவள்...)




ஏனாயா நீதான் படம் பிடிக்கிற ஆளா ?
என் படம் ஒண்ணு எடுத்துக் கொடு.
கண்ணணோடும் ருக்குமணியோடும்
நான் சேர்ந்து நிற்கற மாதிரி.



ருக்குப்பொண்ணு என் பீச்சாங்கைப் பக்கம்,
கண்ணன் வலப்புறம். நடுவிலே நான்.
அப்படித்தான் வேணும் எனக்கு.



அடா ருக்கு.. நகரு..கண்ணன் பக்கத்திலே
நான் நிற்கப் போறேன்.



கண்ணா..நீ ரொம்ப மோசம்ாயா.
இப்படித்தானா விறைப்பா நிக்கறது ?
எல்லாரும் அட்டைக் கடவுள்னு
கிண்டல் செய்யப் போறாங்க.



என் பக்கத்திலே வாடா கண்ணா..
என் தோளில் கை போட்டு அணைச்சுப் பிடி.
அப்படித்தான். இது நல்லா இருக்கு.



ருக்கு..உனக்கு ஆனாலும் பொறாமை நிறைய.
கவலைப் படாதே. மும்பை திரும்பும் முன்னால்
உன் கண்ணனை உன்னிடமே விட்டுடறேன்.



படக்காரரே..படத்தில் நல்லதா
வர்ணம் வரணும்..தெரியுதா ?
என் சேலை நீல நிறத்தில் இருக்கணும்.
கண்ணனின் உடுப்பும் அதே நிறந்தான் வேணும்.



நான் போய் திருவிழாக் கடையெல்லாம்
பார்த்து விட்டு, ராட்சச ராட்டினத்தில்
ஏறிச் சுற்றிவிட்டு வரேன்.
ஒரு கம்பளிப் போர்வை கூட வாங்கணும்.
நேரம் இருந்தால் மரணக் கூண்டையும்
எட்டிப் பார்த்து விட்டு வருவேன்.



ஒரு அரைமணியில் திரும்பி வந்து
படத்தை வாங்கிக்கலாம் இல்லையா ?



அருண் கொலேட்காரின் கவிதைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 4:55 pm

கதவு




சிலுவையிலிருந்து பாதி இறக்கப் பட்ட
தீர்க்கதரிசி போல,
ஆடியபடி தொங்கும் தியாகி போல,



இரும்புப் பட்டை ஒன்று உடைந்துபோய்
மற்றதின் பிடிமானத்தில்
பழைய கதவு நிற்கும்.



ஒருமுனை தெருப் புழுதியைத் தொட
மற்றது உயர்ந்த நிலைப்படியில் தட்டும்.



நாள்பட நாள்படக் கூர்மையாகும்
பழைய நினைவுகள் போல் சிலும்புகள்
மேலெங்கும் துருத்தி இருக்கும்.



உயிரியல் புத்தகத்திற்குள்
திரும்பப் போக வழிதெரியாத
தோல்சிதைந்த தசைமனிதப் படம் போல
எல்லாம் வெளித்தெரிய,



பழைய வாசலில் மெல்லச் சாய்ந்து
நிதானப் படுத்திக் கொள்ளும்
உள்ளூர்க் குடிகாரன் போல,
ஒற்றை உலோகப் பட்டையில் சாய்ந்தபடி..



உலோகப் பட்டை நாசமாகப் போகட்டும்.
மேலே காயப் போட்ட
சின்ன அரைக்கால் சட்டை மட்டும்
இல்லாதிருந்தால்
கதவு எப்போதோ
கிளம்பிப் போயிருக்கும் .



அருண் கொலேட்காரின் கவிதைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 05, 2010 10:03 pm

அருண் கொலேட்காரின் கவிதைகள்! 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 10:48 pm

அருண் கொலேட்காரின் கவிதைகள்! 677196 அருண் கொலேட்காரின் கவிதைகள்! 677196
வார்த்தைகள்
வயல்களில் எடுக்கப்பட்ட
நெல் மணிகள்!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக