புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 9 of 50 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 29 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 04, 2010 6:14 pm

///இனி, அடுத்த பகுதியில் ஒருவகைப் பாடல் எழுதப் போகிறோம்.///

நன்றி ஐயா! நாங்களும் பாடல் எழுதிப் பழகுகிறோம்!




மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 04, 2010 6:45 pm

நன்றி ஐயா அடுத்த பாடத்தை எதிர்பார்கிறேன் மரபுப் பா பயிலரங்கம் - Page 9 678642



நேசமுடன் ஹாசிம்
மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun May 09, 2010 5:32 pm

( பல்வேறு பணியழுத்தங்களால் காலம்தாழ்ந்தது; பொறுத்துக்கொள்க - த.ந.)

13. வெண்செந்துறை

பாட்டின் உறுப்புகளாக உள்ள எழுத்து, அசை, சீர், அடி, தொடைகளைப் பற்றி அறிந்துகொண்டோம். இனிச் சிலவகைப் பாடல்களை இயற்றப் பயில்வோம்.

நாம் முதலில் எழுத இருக்கும் பாட்டு வெண்செந்துறை ஆகும். இப் பாடல் எழுதல் மிக எளிமையாகும்.

இலக்கணம் இவையே :

1. ஓரடியில் நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுச் சீர் வரலாம்.

2. ஒவ்வொரு சீரும் இரண்டு அசைச் சீராக இருக்க வேண்டும்.

3. இரண்டு அடிகள் எழுத வேண்டும்; இரண்டு அடிகளும் அளவு ஒத்து இருக்க வேண்டும்.

4. இரண்டு அடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

5. நாற்சீர் அடியானால், 1, 3ஆம் சீரில் மோனையும்
ஆறு சீர் அடியானால், 1, 4ஆம் சீரில் மோனையும்
எட்டுச் சீர் அடியானால் 1, 5ஆம் சீரில் மோனையும் அமைய வேண்டும்.

பொதுவாக, சிறந்த பொருளும் ஒழுங்கான ஓசையும் பெற்றிருக்க வேண்டும். (விழுமிய கொருளும் ஒழுகிய
ஓசையும் என்பர்)

முதலில் நாற்சீர் வெண்செந்துறை எழுதுவோம்.


எடுத்துக் காட்டு :

நற்றமிழ் மக்களை நசுக்கிய சிங்களன்
உற்ற வெற்றி உமிழத் தக்கதே.

இதில், முதலடியில் ந-வுக்கு ந மோனையாக வந்துள்ளது. இரண்டாமடியில், உ-வுக்கு உ மோனையாக வந்துள்ளது.
முதல் அடியின் இரண்டாம் எழுத்தும், இரண்டாம் அடியின் இரண்டாம் எழுத்தும் ற்- ஆக எதுகை அமைந்துள்ளது.

ற்றமிழ் மக்களை சுக்கிய சிங்களன்
ற்ற வெற்றி மிழத் தக்கதே.

புரிகிறதா? சரி. இன்னொரு எடுத்துக்காட்டு :

வு விடுதியில் ழைக்கும் சிறுவரை
நினைக்கும் பொழுதே நெஞ்சம் நடுங்கும்.

பழந்தமிழ் நூலில் இருந்து ஓர் எடுத்துக்காட்டு :

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

இப்பொழுது பெரும்பாலும் புரிந்திருக்கும்.

எழுதிக் காட்டுங்கள். என்ன தோன்றுகிறதோ அந்தக்கருத்தை வைத்து எழுதுங்கள்.
பிழையாக இருக்குமே எனக் கொஞ்சமும் தயங்க வேண்டா. திருத்தி அமைத்துக்கொள்ளலாம். வாருங்கள், எழுதுங்கள். உதவ அணியமாயிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் பார்த்துக் கருத்துரை எழுதுகிறேன்.
வருக, வருக! எல்லாரும் கலந்து கொண்டு எழுதுக!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 09, 2010 6:31 pm

மிக்க நன்றி ஐயா மிகவும் அவசியமான பாடமிது
இன்றுதான் கற்றுக்கொண்டேன்
எனது பாடல் சரி பிழை கூறுங்கள் ஐயா

ன்னை என்ற த்தியாயம் கற்றால்
ன்பில் குறைவில்லா கிலம் காண்பாய்

மிக்க நன்றி ஐயா மரபுப் பா பயிலரங்கம் - Page 9 678642



நேசமுடன் ஹாசிம்
மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun May 09, 2010 10:16 pm

ஹாசிம் wrote:
ன்னை என்ற த்தியாயம் கற்றால்
ன்பில் குறைவில்லா கிலம் காண்பாய்



அருமை! பாராட்டுகின்றேன்.

மற்றவர்களும் எழுத முன்வருக!
தயங்காமல் எழுத அழைக்கின்றேன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 09, 2010 10:32 pm

”அன்பின் பிடியில் டங்கும் பெண்ணை
ன்னை என்றால் கிலம் பூக்கும்”

இது சரியா ஐயா? இத்துனை ஆழமாக கற்க உதவிடும் தங்கள் தமிழ்த்தொண்டிற்குத் தலை வணங்குகிறேன் ஐயா. மிக்க நன்றி.. முன் பகுதிகளைப் படிக்க வில்லை.. படித்து விட்டு மறுமொழி இடுகிறேன் ஐயா.. மீண்டும் நன்றி..



மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Tமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Hமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Iமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Rமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon May 10, 2010 1:18 am

அருமையான எடுத்துக் காட்டு விளக்கத்துடன் பாடம் பயில இலகுவாக உள்ளது மிக்க நன்றி ஐயா.
தொடருங்கள்.

எனது பயிற்சி

எண்ணிடும் போதில் இனிக்கும் தமிழே
கண்ணின் மணியாய் கண்டேன் உனையே!




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Avatar15523pf0
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon May 10, 2010 7:40 am

Aathira wrote:”அன்பின் பிடியில் டங்கும் பெண்ணை
ன்னை என்றால் கிலம் பூக்கும்”

இது சரியா ஐயா? இத்துனை ஆழமாக கற்க உதவிடும் தங்கள் தமிழ்த்தொண்டிற்குத் தலை வணங்குகிறேன் ஐயா. மிக்க நன்றி.. முன் பகுதிகளைப் படிக்க வில்லை.. படித்து விட்டு மறுமொழி இடுகிறேன் ஐயா.. மீண்டும் நன்றி..

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

பாராட்டுகிறேன்.

முன் பகுதிகளைப் படித்தால் செப்பமாகவும் சிறப்பாகவும் எழுதமுடியும்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon May 10, 2010 7:46 am

வழிப்போக்கன் wrote:

எண்ணிடும் போதில் இனிக்கும் தமிழே
கண்ணின் மணியாய்க் கண்டேன் உனையே!

மிகச்சிறப்பு.

மனமார்ந்த பாராட்டு.

தொடர்ந்து படித்து எழுதுங்கள். மற்றவர்களையும் எழுத ஊக்கம் கொடுங்கள்.

ஈகரைத் தமிழ் உள்ளங்களே!
எளிதாக மரபுப்பாடல் எழுத வருக!
அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்க என அழைக்கிறேன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 8:46 am

தமிழநம்பி wrote:
Aathira wrote:”அன்பின் பிடியில் டங்கும் பெண்ணை
ன்னை என்றால் கிலம் பூக்கும்”

இது சரியா ஐயா? இத்துனை ஆழமாக கற்க உதவிடும் தங்கள் தமிழ்த்தொண்டிற்குத் தலை வணங்குகிறேன் ஐயா. மிக்க நன்றி.. முன் பகுதிகளைப் படிக்க வில்லை.. படித்து விட்டு மறுமொழி இடுகிறேன் ஐயா.. மீண்டும் நன்றி..

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
நன்றி ஐயா..

பாராட்டுகிறேன்.

முன் பகுதிகளைப் படித்தால் செப்பமாகவும் சிறப்பாகவும் எழுதமுடியும்.




மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Tமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Hமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Iமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Rமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty
Sponsored content

PostSponsored content



Page 9 of 50 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 29 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக