புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
107 Posts - 49%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
7 Posts - 3%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
2 Posts - 1%
Barushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
2 Posts - 1%
cordiac
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
234 Posts - 52%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
18 Posts - 4%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
5 Posts - 1%
Barushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 48 of 50 Previous  1 ... 25 ... 47, 48, 49, 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Feb 24, 2011 5:44 pm

யாதுமானவர்க்கு,

பிஞ்சுக் குழந்தைவாய் பேசும் மழலையிலும்
பஞ்சுத் தலையுதிர் வார்த்தைச் சுவையிலும்
விஞ்சிட ஏது(உ)னை ஓங்காரத் தீந்தமிழே
வஞ்சகரும் ஏற்பார் உனை.

பாடலில் தளை அமைப்பெல்லாம் சரியாக உள்ளது.
மோனை அமைத்து, குறிப்பாக முதல், மூன்றாம் சீர்களில் மோனை
அமைத்து எழுதின் பாடல் சிறக்கும்.
இரண்டாம் அடியை,
பஞ்சுத் தலையுதிர் பைஞ்சொற் சுவையிலும் – என்றோ வேறு வகையிலோ அமைக்கலாம்.
மூன்றாம் அடியை,
விஞ்சிட ஏது(உ)னை வெல்லுஞ்சொல் தீந்தமிழ்நீ – என்றோ வேறு வகையிலோ அமைக்கலாம்.
இறுதி அடியை,
வஞ்சமனம் மாற்றும் மருந்து. – என்றோ வேறு வகையிலோ எழுதின் பொருள் தெளிவாகும்.

குறையாகக் கொள்ள வேண்டா. மேலும் பாடல் சிறப்பும் மதிப்பும் பெற இவற்றைக் குறிப்பிட்டேன்.
எதுகை மோனையுடன் பிழையின்றியும் அணி அமைத்தும் எழுதும் வெண்பா, நமக்கும் பிறர்க்கும் மகிழ்வூட்டுவதோடு பாராட்டைப் பெற்றுத் தரும்.
இக்கருத்துக்கள் பயிலுநர் அனைவர்க்கும் உதவுதற்காகவே கூறப்படுபவை எனக் கொள்க.


பிறந்தவுடன் தாய்ப்பால் புகட்டி செவியும்
திறந்தவுடன் ஊற்றின செந்தமிழ்ப் பால்தான்
பிறமொழிநோய் தாக்காது பாங்குடனே யாற்றும்
சிறந்தமருந் தானதெனைக் காத்து.

பாடலில் தளை அமைப்பெல்லாம் சரியாக உள்ளது.
இரண்டாம் அடியில் மோனை அமைந்துள்ளது.
பிழையின்றித் தளை அமைத்து எழுதுந்திறம் பெற்றபின், பாடல் சிறக்க அமைப்பதில் கருத்தூன்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Feb 24, 2011 6:01 pm

வணக்கம் அய்யா.

மிக்க நன்றி.
தங்கள் அறிவுரைகள் ஏற்றேன். கருத்தாழமிக்க பாடல்கள் எழுதவேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். தொடர்ந்து முயல்கிறேன் தங்கள் ஆசிகளுடன்.

அன்புடன்,
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 24, 2011 8:20 pm

ஐயா
இரண்டு வெண்பா கவனமாக பார்த்து செய்தேன். என்றாலும் ஐயம் உள்ளது. தருகிறேன்

பூவேந்தி யோடிப் புதுநங்கை போற்சிணுங்கி
நாவேந்து தாகம் நலியவைத் தாற்றுவள்
ஓவென ஓடிவீழ்ந் தோங்கிய பாறைமேல்
பூவெனத் தூவும் நதி.

தேனெழு பாவினோசை தென்றலில் பூவிநாற்றம்
வானெழு கோபுரத்தில் வண்ணநில வோடுமேகம்
நீறொடு சந்தனத்தை நெற்றியி லிட்டதாக
வீறொடு நிற்குமெழி லாம்

அன்புடன் கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Feb 25, 2011 5:48 pm

கிரி,

பூவேந்தி யோடிப் புதுநங்கை போற்சிணுங்கி
நாவேந்து தாகம் நலியவைத் தாற்றுவள்
ஓவென ஓடிவீழ்ந் தோங்கிய பாறைமேல்
பூவெனத் தூவும் நதி.

தளை அமைப்புகள் சரியாக உள்ளன.
(ஓங்கிய பாறைமேல் வீழ்வது - கருத்தில் கவனம் செலுத்துக)

தேனெழு பாவினோசை தென்றலில் பூவிநாற்றம்
வானெழு கோபுரத்தில் வண்ணநில வோடுமேகம்
நீறொடு சந்தனத்தை நெற்றியி லிட்டதாக
வீறொடு நிற்குமெழி லாம்.

சரியாக உள்ளது.
தொடர்ந்து எழுதுக.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 28, 2011 10:13 pm

ஆசிரியர் ஐயா அவர்களுக்கு,

மீண்டும் சில பயிற்சிகள் செய்துள்ளேன். அதைத் தருகிறேன்.


பொய்யா முடைபோர்த்து புழுகெனும் தேரேறி
வையம் வலம்வந்து வாழ்வோரை ஏமாற்றி
உய்தாற் குழிபறித் துன்னை யழிக்கமுன்
மெய்யை உலகுணரச் செய்.

நஞ்சூறும் பாம்பை நடுவீட்டில் கண்டவுடன்
நெஞ்சில் உரம்கொண்டு நீள்தடியும் கைக்கொள்ள,
’அஞ்சியதைக் கொல்லா தணைந்துவிளை யா’டென்போர்
நெஞ்சோ பெருநஞ்சாம் நினை!

கொல்கொல் எனக்குமுறும் கோதையின் காற்சிலம்பு
சொல்லல் எவரென்றே சுந்தரமென் கால்வினவ
பொல்லா வளையலெனைப் போகுமிடம் சாற்றுவனொன்
றில்லாப் பதரென்ற தால்.


அன்புடன் கிரிகாசன்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Mar 02, 2011 3:14 pm

வணக்கம் அய்யா,

தங்கள் நலம் காக்க!



என் அடுத்தமுயற்சிகள் கொடுத்துள்ளேன். சரியாக உள்ளதா என அறியத் தருவீர்




முப்பால் எழுதிய முத்தமிழ் மூத்தவன்

செப்பா தொருபொருள் உண்டோ மதத்திற்கு

அப்பால் நிலையாய் கவியாத் துலகினில்

ஒப்பா நிலையடைந் தான்.



பிழைபடா வாழ்க்கைக் குறிப்புகள் யாவும்

இழைபட ஈரடி யாக்கிப் பொருந்த

அறத்தைக் காக்கும் அருமருந் தாமெனும்

குறளெனத் தந்தான் நமக்கு.

.

அன்புடன்
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat Mar 05, 2011 11:33 am

அன்புள்ளங்களே, வணக்கம். என் இடக்கண்ணில் சிறு கோளாறு. விரைவில் சரியாகிவிடும். சில நாட்களில் பயிலரங்கைத் தொடர்கிறேன். பொறுத்துக்கொள்க. அன்பன், தமிழநம்பி.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Mar 06, 2011 11:42 am

வணக்கம் அய்யா.

தங்கள் கண்ணில் ஏற்பட்ட கோளாறு விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

நற்றமிழன்னை தங்கள் நலம் காப்பாள்.

மிக்க அன்புடன்,
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Mar 06, 2011 3:37 pm

ஐயா,

தாங்கள் கண் குணமாகி மீண்டும் பூரண நலமடைய இறையை வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன் கிரிகாசன்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Mar 14, 2011 4:25 pm

வணக்கம் அய்யா!

தங்கள் உடல் நலன் சுகமா? கண்ணின் வேதனை மாறியிருக்குமென நம்புகின்றேன். தாங்கள் விரைவில் குணமடைந்து எங்களுடன் பயிலரங்கில் இணைந்து தங்கள் மாணவர்களான எங்களுக்குக்கு பயிற்றுவிக்க வேண்டுமென அன்றாடம் வேண்டுகிறேன்.


கண்ணாய்த் தமிழினைக் காத்திடும் சான்றோன்தன்
கண்ணினை வாட்டுமந் நோயது போக்கிநல்ல
பொன்னொளி வீசிடும்பு துப்பொலிவி னைத்தருக
தன்னிகர்த்த தீந்தமிழ்த் தாயே!

அன்புடன்,
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



Page 48 of 50 Previous  1 ... 25 ... 47, 48, 49, 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக