புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
71 Posts - 47%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
52 Posts - 34%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
14 Posts - 9%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
4 Posts - 3%
i6appar
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
3 Posts - 2%
Anthony raj
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
2 Posts - 1%
rajuselvam
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
1 Post - 1%
Jenila
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
148 Posts - 41%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
146 Posts - 40%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
18 Posts - 5%
i6appar
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
16 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
11 Posts - 3%
Anthony raj
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
10 Posts - 3%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
3 Posts - 1%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
மரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 46 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 46 of 50 Previous  1 ... 24 ... 45, 46, 47, 48, 49, 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 20, 2011 6:21 pm

ஐயா, அனைத்து பிழைகளையும் உணர்ந்துகொண்டேன். முழுதான கவனக்குறைவே காரணம். விதி புரிந்தும் விட்டபிழைகளை கண்டு ஆச்சரியப்படுகிறேன். தவறுக்கு வருந்துவதோடு விரைவாக திருத்தம் இடுகிறேன்
அன்புடன் கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun Feb 20, 2011 6:34 pm

யாதுமானவள் wrote:வணக்கம் அய்யா,

இன்னிசை சிந்தியல் வெண்பா வில் எதுகையின் அவசியம் இல்லை.(மூன்று அடிகளும் வேவேறு எதுகை கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தீர்கள்) ஆனால் நேரிசை வெண்பாவில் முதல் இரண்டு அடிகளின் எதுகை அவசியம். அப்படித்தானே அய்யா?

மற்றபடி, இரு வெண்பாக்களுக்கும் ஒரே மாதிரியான கட்டளைகள் தான் அல்லவா? (மா முன் நிறை, காய் முன் நேர், விளம் முன் நேர்)

இதோ முயற்சி செய்கிறேன்.


இன்னிசைச்சிந்தியல் வெண்பாவில் எதுகை தேவையில்லை என்று கூறவில்லை.
மூவகையில் எதுகைகள் அமையும்.
1. ஒரு விகற்ப (விகற்பம் = வேறுபாடு) எதுகை.
இவ்வகையில் மூன்றடிகளிலும் ஒரே எதுகை இருக்கும்.

2. இரு விகற்ப எதுகை.
இவ்வகையில், முதல் இரண்டு அடிகளிலும் ஒரே எதுகையும் மூன்றாமடியில் வேறு எதுகையும் அமையும்.

3. பல விகற்ப எதுகை.
இவ்வகையில் மூன்றடிகளிலும் வெவ்வேறு எதுகைகள் அமையும்.

இம் மூன்று வகைக்கும் எடுத்துக்காட்டுகள் தந்துள்ளதைக் காண்க.

வெண்பாவில் இருவகைத் தளைகள் இடம்பெறும்.
1. இயற்சீர் வெண்தளை.
( மா முன் நிரை, விளம் முன் நேர்)

2. வெண்சீர் வெண்டளை
(காய் முன் நேர்)

புரியவில்லையானால், மீண்டும் கேளுங்கள்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun Feb 20, 2011 6:47 pm

kirikasan wrote:ஐயா, அனைத்து பிழைகளையும் உணர்ந்துகொண்டேன். முழுதான கவனக்குறைவே காரணம். விதி புரிந்தும் விட்டபிழைகளை கண்டு ஆச்சரியப்படுகிறேன். தவறுக்கு வருந்துவதோடு விரைவாக திருத்தம் இடுகிறேன்
அன்புடன் கிரிகாசன்
வெண்பாவில் நம்மை அறியாது பிழை செய்ய வாய்ப்புகள் மிகுதி. அதனால்தான், பிழையின்றி வெண்பா எழுதுகிறவரை 'வெண்பாப் புலி' என்றும் கூறும் வழக்கு இருந்தது. எழுதுங்கள், உங்களால் எழுத முடியும்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 21, 2011 11:14 pm

ஐயா பிழைவிட்ட நான்கு வெண்பாக்களும் திருத்தியுள்ளேன். இதோ!!


அலைகடலும் ஆர்ப்பரித்து அள்ளியதா யென்னிறையே
விலையற் றுயிர்கொன்ற வேந்தன்-- தலைகொண்ட
வேதனையில் வெந்திடவே செய்.

பழிகொண்ட நாடும் பழந்தமிழர் வாழ்வும்
விழிகொண்ட நீர்நின்று நாமும் - வழிகண்டு
மீண்டுமுயர் வாழ்வுபெறல் என்று?

கோவிற் சிலையாய் குறுஞ்சோலை மாதருவாய்
ஓவியமும் போலவேன் நின்றாய் - தேவியே
நாமழியக் காவாத தேன்.

இருகண் இழந்துவிழி இல்லாமை போலும்
அருகில் விடிவிருந்தும் காணா- -மருண்டு
பகைவர்தம் கால்பணிந் தார்


அன்புடன்
கிரிகாசன்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Feb 22, 2011 12:36 am

வணக்கம் அய்யா,
தங்கள் நலன் காக்க!
நேரிசை சிந்தியல் வெண்பாவில் என் முயற்சிகள்.


ஏழையவர் ஆறுதலும் யாருள்ளார் இங்கென்று

ஈழத்தில் கேட்கிறது ஈனசுரம் - காலைநேரம்

தாயிறந்த துர்சேதி கேட்டு.



உயிர்பிரியும் நேரத்தில் உன்மக்கள் யாரும்

அருகினில் இல்லாத வேதனையை - அம்மாநீ

தாங்கியவந் நேரமிகக் கொடிது.



தீக்கொழுந்தைப் பெற்றவளுன் தேகமதை தீநாவும்

சுட்டெரிக்கும் காட்சியெண்ணி சிந்துகிறோம் - கண்ணீர்

இதுவன்றி வேறேதும் ஆகா.


அன்புடன்
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Feb 22, 2011 5:10 pm

கிரி,
பாருங்கள்; ஏதேனும் ஐயமிருப்பின் கேளுங்கள்.


அலைகடலும் ஆர்ப்பரித்து அள்ளியதா யென்னிறையே
விலையற் றுயிர்கொன்ற வேந்தன்-- தலைகொண்ட
வேதனையில் வெந்திடவே செய்.

அலைகடலும் ஆர்ப்பரித்(து) அள்ளிய தென்றே
விலையற் றுயிர்கொன்ற வேந்தன்-- தலைகொண்ட
வேதனையில் வெந்திடவே செய்.


யென்னிறையே விலையற் – காய் முன் நிரைவந்ததால் -
திருத்தம் காண்க. வேறு திறத்திலும் திருத்தலாம்.

‘து’ - அடைப்புக்குறிக்குள் இட்டதன் பொருள் புரிந்ததா?

பழிகொண்ட நாடும் பழந்தமிழர் வாழ்வும்
விழிகொண்ட நீர்நின்று நாமும் - வழிகண்டு
மீண்டுமுயர் வாழ்வுபெறல் என்று?

அருமை. சரியாக உள்ளது.

கோவிற் சிலையாய் குறுஞ்சோலை மாதருவாய்
ஓவியமும் போலவேன் நின்றனை - தேவியே
நாமழியக் காவாத தேன்.

திருத்தம் ஏனெனப் புரிகிறதா?

இருகண் இழந்துவிழி இல்லாமை போலும்
அருகில் விடிவிருந்தும் காணார் - மருண்டு
பகைவர்தம் கால்பணிந் தார்

சரியாக உள்ளது.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Feb 22, 2011 5:55 pm

யாதுமானவர்க்கு,
குறிப்புகளைப் பாருங்கள்; ஐயந்தோன்றின் தயங்காது கேளுங்கள்.


ஏழையவர் ஆறுதலும் யாருள்ளார் இங்கென்று

ஈழத்தில் கேட்கிறது ஈனசுரம் - காலைநேரம்

தாயிறந்த துர்சேதி கேட்டு.


ஏழையவர் ஆற்றுதற்கு யாருள்ளார் இங்கென்று
ஈழத்தில் தாழ்ந்தகுரல் ஏழ்கிறது - பீழைமிகும்
தாயிறந்த சேதியுடன் சார்ந்து.


( ஈழத்தில் கேட்கிறது ஈனசுரம் – மோனை யாப்பமைதியுடன் உள்ளது என்றாலும், ஈனசுரம் என்ற சொல்லைத் தவிர்த்து, ஈழத்தில் தாழ்ந்தகுரல் ஏழ்கிறது - என்று மாற்றினால் பாட்டின் மதிப்பு மிகுவதை நீங்கள் உணரலாம்.
தனிச்சொல் எதுகையுடன் அமைய ‘பீழைமிகும்’ – என்ற மாற்றம்.
(பீழை = துன்பம்)
‘லை’ வருக்க எதுகையாக வரலாம் என்றாலும், அது கடையாகு எதுகையாகும்: ஆனால் பிழையன்று.
மோனை அமைய, தாயிறந்த சேதியுடன் சார்ந்து – என்ற மாற்றம்.
இங்குக் கூறிய செய்தி விளங்கவில்லையானால் கேளுங்கள், புரியும் வகை விளக்க முயல்வேன்.)

உயிர்பிரியும் நேரத்தில் உன்மக்கள் யாரும்

அருகினில் இல்லாத வேதனையை - அம்மாநீ

தாங்கியவந் நேரம் கொடிது.

முதலிரண்டு அடிகளிலும் தனிச்சொல்லிலும் ஒரே எதுகை அமைய எழுதுக.
மூன்றாம் அடியில் திருத்தம் காண்க. காரணம் தெரிகிறதன்றோ?


தீக்கொழுந்தைப் பெற்றவளுன் தேகமதைத் தீநாவும்

சுட்டெரிக்கும் காட்சியெண்ணிச் சிந்துகிறோம் - கண்ணீர்

இதுவன்றி வேறேதும் ஆகா.

முதலிரண்டு வரிகளிலும் தனிச்சொல்லிலும் ஒரே எதுகை அமைய எழுதுக.

தளராது முயல்க. வெண்பா எழுதுந் திறம்பெற்றால், தமிழில் எல்லா வகைப் பாக்களும் எளிதில் எழுத இயலும்.
உங்களால் நன்றாக எழுத முடியும்.
தொடர்ந்து எழுதுக.



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Feb 22, 2011 6:08 pm

தமிழநம்பி wrote:கிரி,
பாருங்கள்; ஏதேனும் ஐயமிருப்பின் கேளுங்கள்.


அலைகடலும் ஆர்ப்பரித்து அள்ளியதா யென்னிறையே
விலையற் றுயிர்கொன்ற வேந்தன்-- தலைகொண்ட
வேதனையில் வெந்திடவே செய்.

அலைகடலும் ஆர்ப்பரித்(து) அள்ளிய தென்றே
விலையற் றுயிர்கொன்ற வேந்தன்-- தலைகொண்ட
வேதனையில் வெந்திடவே செய்.


யென்னிறையே விலையற் – காய் முன் நிரைவந்ததால் -
திருத்தம் காண்க. வேறு திறத்திலும் திருத்தலாம்.

‘து’ - அடைப்புக்குறிக்குள் இட்டதன் பொருள் புரிந்ததா?
தெரிந்து கொண்டேன் ஐயா ‘து+அ =த’ ஆகிவிடும். நான் காய் என்று நினைத்தது விளம் ஆகிறது .
பிழைதிருத்தமும் காய் முன் நிரை புரிந்துகொண்டேன்

கோவிற் சிலையாய் குறுஞ்சோலை மாதருவாய்
ஓவியமும் போலவேன் நின்றனை - தேவியே
நாமழியக் காவாத தேன்.

திருத்தம் ஏனெனப் புரிகிறதா?

மா முன் நேர் போட்டுவிட்டேன்.

இன்னும் பயிற்சி செய்கிறேன் ஐயா

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Feb 22, 2011 6:20 pm

கிரி,
ஆர்ப்பரித்து அள்ளியதா – இதனைச் சேர்த்தெழுதினால்,
ஆர்ப்பரித் தள்ளியதா – என்று வரும். இங்கு விளம் முன் நேர் சரியாகவே உள்ளது.
ஆனால், கு,சு,டு,து,பு,று குற்றியலுகரத்தின் முன் உயிர் வந்தால்,
சொற் புணர்ச்சியில் ஓரெழுத்து மறைந்துவிடும்.
எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று காட்டவே நான் அடைப்புக்குள்
‘து’ - வை அமைத்துக் காட்டினேன்.
தொடர்ந்து எழுதுக.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Feb 22, 2011 6:42 pm

வணக்கம் அய்யா, தங்கள் நலம் காக்க!

பிழைகள் புரிந்து கொண்டேன். தனிச்சொல்லும் எதுகையில் வரவேண்டுமென்பதை கவனிக்காமல் விட்டுவிட்டேன். தற்போது தவறு புரிந்தது. மீண்டும் முயன்றுள்ளேன். சரியாக உள்ளதா என அறியத்தருக. மிக்க நன்றி.

ஏழையவர் ஆற்றுதற்கு யாருள்ளார் இங்கென்று
ஈழத்தில் விம்முகின்றார் எம்தமிழர் - வேழத்தை
ஈன்றவளும் சென்றதனால் இன்று.

உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்ற வேதனையில் - மருகி
உளம்பட்ட வேதனை கொடிது.

தீக்கொழுந்தைப் பெற்றவளுன் தேகமதைத் தீநாவும்
சுட்டெரிக்கும் காட்சியெண்ணிச் சிந்துகின்றோம் - விட்டகலா
வேதனையை உள்ளிருத்தி நாம்.

அன்புடன்
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



Page 46 of 50 Previous  1 ... 24 ... 45, 46, 47, 48, 49, 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக