புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 5 of 50 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 27 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Mar 23, 2010 7:54 am

5. மூவசைச் சீர்

ஈரசைச் சீர்கள் நான்கு என்று முன்னர் அறிந்தோம். அவை,

நேர்நேர்

நிரைநேர்

நேர்நிரை

நிரைநிரை ஆகும்.

இந் நான்கு ஈரசைச் சீர்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னும் ஒரு நேரசை சேர்ந்து வரின், மூவசைச்சீர் நான்கு கிடைக்கும்.

இவ்வாறு ஈரசைச் சீருடன் நேரசை சேர்வதால் கிடைக்கும் மூவசைச் சீர் காய்ச்சீர் அல்லது வெண்சீர் எனப்படும்.

நான்கு ஈரசைச் சீர்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னும் ஒரு நிரையசை சேர்ந்து வரின், மூவசைச்சீர் நான்கு கிடைக்கும்.

இவ்வாறு ஈரசைசைச் சீருடன் நிரையசை செர்வதால் கிடைக்கும் மூவசைச்சீர் கனிச்சீர் அல்லது வஞ்சிச்சீர் எனப்படும்.

மூவசைச்சீர் ---- வாய்பாடு ----எடுத்துக்காட்டு

நேர்நேர்நேர் ------- தேமாங்காய் ---- கொம்பாகி

நிரைநேர்நேர் ------ புளிமாங்காய் ---- கவையாகி
நேர்நிரைநேர் ------ கூவிளங்காய் ---- காட்டகத்தே

நிரைநிரைநேர் ----- கருவிளங்காய் --- சவைநடுவே
இவை நான்கும் காய்ச்சீர் எனப்படும்.


நேர்நேர்நிரை ------- தேமாங்கனி -----பூந்தாமரை
நிரைநேர்நிரை ------ புளிமாங்கனி ----விளையாட்டினை
நேர்நிரைநிரை ------ கூவிளங்கனி ----தேன்புனலிடை
நிரைநிரைநிரை ----- கருவிளங்கனி ---திருக்குறளதை
இவை நான்கும் கனிச்சீர் எனப்படும்

ஆக, மூவசைச்சீர் எட்டு ஆகும்.

அடுத்து, ஓரசைச்சீர் பற்றித் தெரிந்து கொள்வோம்.





avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Tue Mar 23, 2010 8:31 am

அன்பார்ந்த ஐயா,

தமிழ் இலக்கணம் கற்க புத்தகங்கள் தேடி அலைந்து கொண்டிருந்தேன். ஈகரையில் தங்களின் இந்த அருமையான பயிலரங்கத்தை கண்டவுடன் புத்தகங்கள் தேடுவதை நிறுத்தி விட்டேன்.

தங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்..!!

ராஜா

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Mar 23, 2010 8:40 am

அன்புள்ள ஐயா,

மிக்க மகிழ்ச்சி தங்களின் பணியை செவ்வனே செய்வது... எங்களுக்கு புரியும் வகையில் கற்பிப்பது...

தாங்கள் //அடுத்து, ஓரசைச்சீர் பற்றித் தெரிந்து கொள்வோம்.// என கூறியிருப்பது தவறுதலாக என நினைக்கின்றேன்..(பிழையெனில் மன்னிக்கவும்) எனவே எங்களுக்கு நாலசைச்சீர் பற்றியும் கூறுவீர்கள் என நம்புகின்றோம்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Mar 23, 2010 8:49 am

பாராட்டுரைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

தொடர்ந்து பயிற்சியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நாலசைச்சீர் இப்போது வேண்டாம்.

ஓரச்சைச் சீர் பற்றி இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Mar 23, 2010 9:13 am

தமிழநம்பி wrote:பாராட்டுரைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

தொடர்ந்து பயிற்சியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நாலசைச்சீர் இப்போது வேண்டாம்.

ஓரச்சைச் சீர் பற்றி இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.

மிக்க மகிழ்ச்சி...

எது? இப்பொழுது அவசியமாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது தங்களுக்கு மிகவும் அறிந்தது. எனவே தாங்கள் அதனை எங்களுக்கு கற்பிக்க வேண்டுக்கின்றேன்... மரபுப் பா பயிலரங்கம் - Page 5 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 5 154550

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 10:04 pm

அருமை மூவசைச் சீர் நேரில் முடிந்தால் காய்ச்சீர் எனவும் நிரையில் முடிந்தால் கனிச்சீர் என்பதன் விளக்கம் அருமை, அடுத்து வரும் ஓரசைச் சீர் அறிந்திட விருப்பம் தொடருங்கள் ஐயா



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 10:38 pm

தமிழை சிறப்புடன் கற்றுத் தேர்ச்சி பெற தங்களின் ஆக்கங்கள் அனைவருக்கும் பெரிது உதவும் என்பதில் ஐயமில்லை! வாழ்க தங்களின் தொண்டு!



மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 23, 2010 10:47 pm

:suspect: :suspect: :suspect:

சிறந்த விளக்கத்துடன் ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்கள் பின்தொடர காத்திருக்கிறோம்!!!


நல்ல முயற்சி,

வாழ்த்துகள்!


:suspect: :suspect: :suspect:



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat Mar 27, 2010 11:12 pm

6. ஓரசைச் சீர்

வெண்பா வகைப் பாடல்களின் ஈற்றுச் சீராகத் தனியே ஓரசைச் சீர் இடம்பெறும்.

நேரசையும் நிரையசையும் தனித்தனியே சீராகி
நாள்
மலர் என்ற வாய்பாட்டில் வரும்.

இவற்றோடு,
குற்றியலுகரம் சேர்ந்து
காசு
பிறப்பு என்ற வாய்பாட்டிலும் வரும்.

நேரசையோடு குற்றியலுகரம் சேர்ந்து வரின் நேர்பு அசை எனவும்,

நிரையசையோடு குற்றியலுகரம் சேர்ந்து வரின் நிரைபு அசை எனவும் குறிப்பர்.

ஓரசைச் சீர் ---- வாய்பாடு ---- எடுத்துக்காட்டு

நேர் ------ - நாள் ---------- தாய்

நிரை ------- மலர் --------- அருள்

நேர்பு -------- காசு --------- நன்று

நிரைபு ------- பிறப்பு ------- விளக்கு

அடுத்தபடியாக, அடி பற்றி அறிவோம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 27, 2010 11:23 pm

தமிழை சிறப்புடன் கற்றுத் தேர்ச்சி பெற தங்களின் ஆக்கங்கள் அனைவருக்கும் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. தங்களின் தொண்டுக்குத் தலை வணங்குகிறேன் ஐயா! தொடரவும் இறையருள் வேண்டுகிறேன்.மரபுப் பா பயிலரங்கம் - Page 5 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 5 154550



மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 5 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 5 Tமரபுப் பா பயிலரங்கம் - Page 5 Hமரபுப் பா பயிலரங்கம் - Page 5 Iமரபுப் பா பயிலரங்கம் - Page 5 Rமரபுப் பா பயிலரங்கம் - Page 5 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 5 Empty
Sponsored content

PostSponsored content



Page 5 of 50 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 27 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக