புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 31 of 50 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 40 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Nov 03, 2010 8:15 am

kirikasan wrote:ஐயா,
ஒன்றுதான் எழுதினேன்.

சிறுவய தெழில்சேர் சித்திரக் கனவாம் - எண்ணிடவே
உறுசுகம் நினைவெழ உளமதில் மகிழ்வே - எண்ணிடவே
பெறுமுயர் வயதினில் பெருகும் ஏக்கம் - எண்ணிடவே

அன்புடன்
கிரிகாசன்
கிரி, உங்கள் பாடல் சரியாக இருக்கிறது. பாராட்டு. அடுத்து, குறள் வெண்பா எழுத இருக்கின்றோம். அதற்குமுன், பா, பா வகைகள் பற்றிய சுருக்கவிளக்கமான குறிப்புகள். தொடர்ந்து வருக.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 03, 2010 12:03 pm

அன்பின் தமிழநம்பி ஐயா,

கவிபுனை நினைவது கனவது மனதின் - இன்பமதே
புவிசுழ லுறவும் போம்பக லிரவும் =இன்பமதே
தவிமன துடன்தமிழ் தரும்வரை பொறுப்போம் -இன்பமதே

என்றும் மன அமைதியுடன் காத்திருப்போம். கவலை வேண்டாம். அடுத்தவகை கவிதைக்காக மகிழ்வுடன் பார்த்திருக்கிறோம்

அன்புடன் கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Nov 08, 2010 11:53 pm

கவிபுனை நினைவது கனவது மனத்தின் - இன்பமதே
புவிசுழ லுறவும் போம்பக லிரவும் -இன்பமதே
தவிமனத் துடன்தமிழ் தரும்வரை பொறுப்போம் -இன்பமதே அருமை.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Nov 09, 2010 12:03 am

25. வெண்பா

தமிழ் யாப்பில் நான்குவகைப் பாக்கள் உண்டு.
அவை:
1. வெண்பா
2. ஆசிரியப்பா
3. கலிப்பா
4. வஞ்சிப்பா
சீர், தளை, அடி ஆகிய மூன்று உறுப்புகளைக்கொண்டே பா வேறுபாடு அமைகிறது.
ஓசை : பழந்தமிழ்ப் புலவர்கள் ஓசை வேறுபாடு கொண்டே பா வேறுபாடு கண்டனர்.

முதலில் வெண்பா பற்றி அறிவோம். செப்பலோசை என்னும் ஓசையே வெணபாவிற்கு உரியதாகும். இருவர் உரையாடல் போன்ற ஓசையே செப்பலோசையாகும்.
வெண்பாவின் பொது இலக்கணம்:
1. ஈற்றடி (கடைசி அடி) தவிர மற்ற அடிகள் நான்கு சீர்கள் கொண்டிருக்கும்
2. ஈற்றடி மூன்று சீர் கொண்ட அடியாக இருக்கும். ஈற்றடியின் மூன்றாம் (இறுதிச்) சீர், ஓரசைச் சீர் ( நேர், நிரை, நேர்பு, நிரைபு அல்லது நாள், மலர், காசு, பிறப்பு) ஆக அமைந்து வரும்.
3. ஈரசைச்சீர் நான்கும் (தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்) காய்ச்சீர் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) மட்டும் வரும்.
4. வெண்பாவில் கனிச்சீர் நான்கும் வரக்கூடாது.
5. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வரவேண்டும். வேறு தளைகள் வரக்கூடாது.

வெண்பாவின் வகைகள்:
1. குறள் வெண்பா.
2. நேரிசை வெண்பா
3. இன்னிசை வெண்பா
4. நேரிசைச் சிந்தியல் வெண்பா
5. இன்னிசைச் சிந்தியல் வெண்பா
6. பஃறொடை வெண்பா
7. கலி வெண்பா
------------------------------------------------------------
1. முதலில் குறள் வெண்பாவைப் பற்றித் தெரிந்துகொண்டு எழுதப் பயில்வோம்.
குறள் வெண்பா-
1. இரண்டடி கொண்ட பாடல்
2. முதலடி நாற்சீர்
3. ஈற்றடி (இரண்டாம் அடி) முச்சீர். (ஈற்றுச்சீர் ஓரசைச் சீர்.)
4. ஈரச்சைச்சீரும் காய்ச்சீரும் வரவேண்டும்.
5. இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையம் கொண்டிருக்க வேண்டும். ( அதாவது, மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் வருமாறு எழுதவேண்டும்) – இவ்வாறாக எழுதின் செப்பலோசை அமையும்.
6. ஈற்றுச்சீர் ஓரசைச் சீராக, நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றால் முடிந்திருக்க வேண்டும்.
7. எதுகை மோனை அமைய எழுதுதல் சிறப்பு

எடுத்துக்காட்டுப் பாடலைப் படித்தால் திகைப்பு நீங்கும்.

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.


இக் குறள் வெண்பாவில், இரண்டடிகள் உள்ளன. முதலடி நாற்சீரும் இரண்டாமடி மூன்று சீரும் பெற்றுள்ளன.
வெழுத்தெல்லா எனபது மூன்றசைக் காய்ச்சீர்; மற்ற சீர்கள் ஈரசைச் சீர்கள். ஈற்றுச்சீர்
யுலகு – நிரைபு – ஓரசைச்சீர் – பிறப்பு என்ற வாய்பாட்டில் உள்ளது.
அகர, பகவன் – எதுகை அமைந்துள்ளது.

(அகர முதல – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை
முதல வெழுத்தெல்லா – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை
வெழுத்தெல்லா மாதி – காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை
மாதி பகவன் – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை
பகவன் முதற்றே – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை
முதற்றே யுலகு – மா முன் நிரைபு – இயற்சீர் வெண்டளை
இவ்வாறு வெண்டளைகள் மட்டுமே அமைந்துள்ளன.)

தயங்காது எழுதுங்கள் இரண்டடி குறள் வெண்பா. தவறு நேர்ந்தால் திருத்திக்கொண்டு மீண்டும் எழுதுவோம் தவறு நேராமல்!


இதோ, இன்னொரு குறள் வெண்பா:

குன்றா நலவளம் கூடிட வாழ்கவே
பொன்றா உலகிற் பொலிந்து.


உங்களால் எளிதில் எழுத முடியும், எழுதுக!
ஐயமிருப்பின், தயங்காது கேளுங்கள்.



யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Nov 09, 2010 11:09 pm

வணக்கம் அய்யா,

ஈரடி வெண்பா முயன்றுள்ளேன். சரியாக உள்ளதா என அறியத்தருவீர்.

அய்யனவன் வள்ளுவனின் அற்புத இரண்டடியில்
உய்யும் வழியுண்டு காண்.

செந்தமிழைக் காக்கின்ற நற்சிந்தை தனைவைத்து
முந்திப் பயின்றிடுக யாப்பு.

வேண்டுகின்ற நற்செயலை உற்றளவு செய்திட்டே
தீண்டிடுக மக்கள் மனது.

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Nov 10, 2010 10:49 am

Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா,

ஈரடி வெண்பா முயன்றுள்ளேன். சரியாக உள்ளதா என அறியத்தருவீர்.

அய்யனவன் வள்ளுவனின் அற்புத இரண்டடியில்
உய்யும் வழியுண்டு காண்.

செந்தமிழைக் காக்கின்ற நற்சிந்தை ஏற்றிங்கே
முந்திப் பயின்றிடுக யாப்பு.

வேண்டுகின்ற நற்செயலை உற்றளவு செய்திட்டே
தீண்டிடுக மக்கள் மனம்.

அன்புடன்
யாதுமானவள்
அருமை. மூன்று குறள்களும் சரியே. (௨,௩ இல் சிறு திருத்தம் காண்க)


Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Nov 10, 2010 11:21 am

மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 10, 2010 11:58 am

ஐயா , எனது முயற்சி இதோ!

‎கனவும் நினைவதில் கற்பனையும் கொண்டே
தினமும் விடியும் பொழுது

திங்கள் தொடங்கித் தினமோர் பொழுதோடும்
எங்கள் விடிவுநாள் என்று

வான்பொழிய ஆறும் மணல்கொள் அனலன்பு
தான்இழைய ஆறும் சினம்

அன்புடன் கிரிகாசன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 10, 2010 1:21 pm

அன்புடன் ஐயா
மூன்றாவது குறள் வெண்பாவில் பிழையிருக்குமோ எனவஞ்சி
இதை தருகிறேன். பிழை இருப்பின் களைந்திட உதவுங்கள்.
நன்றி!

வானத்து நீர்வைய வெம்மை களைந்தன்ன
ஊனத் துயராற்று மன்பு.

கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Nov 10, 2010 3:27 pm

kirikasan wrote:ஐயா , எனது முயற்சி இதோ!

‎கனவும் நினைவதில் கற்பனையும் கொண்டே
தினமும் விடியும் பொழுது

திங்கள் தொடங்கித் தினமோர் பொழுதோடும்
எங்கள் விடிவுநாள் என்று

வான்பொழிய ஆறும் மணல்கொள் அனலன்பு
தான்இழைய ஆறும் சினம்

அன்புடன் கிரிகாசன்
அருமை. மூன்றும் சரியாக எழுதியிருக்கின்றீர்கள். மூன்றாம் குறள் சிறப்பு.

Sponsored content

PostSponsored content



Page 31 of 50 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 40 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக