புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 27 of 50 •
Page 27 of 50 • 1 ... 15 ... 26, 27, 28 ... 38 ... 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
23. வெளிமண்டிலம் – 2
நாம் அடுத்து பயிலவிருப்பது இன்னொரு வகை வெளிமண்டிலப் பாடல்.
இப் பாடல்...
1. நான்கடி கொண்ட வெளிமண்டில வகையாகும்
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. ஒவ்வொரு அடியும் வெண்டளை கொண்டிருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.
எடுத்துக்காட்டு :
இனம்மொழி நாடென ஏறி முழங்குவான் – காண்பீர்
கனன்றவை மீட்டிடக் கட்சிக் கழைப்பான் – காண்பீர்
நனவிற் பதவி நனிபெற மாறுவான் – காண்பீர்
தினவறத்தன்னலம் தேர்ந்திடு வானிவன் – காண்பீர்!
தயங்காமல் எழுதத் தொடங்குங்கள்.
இந்தவகைப்பாடலை எழுதியபின் பலவகை வெண்பாக்கள் எழுதுவது மிக எளிதாக இருக்கும்.
ஐயமிருப்பின் தயங்காமல் கேளுங்கள்.
நாம் அடுத்து பயிலவிருப்பது இன்னொரு வகை வெளிமண்டிலப் பாடல்.
இப் பாடல்...
1. நான்கடி கொண்ட வெளிமண்டில வகையாகும்
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. ஒவ்வொரு அடியும் வெண்டளை கொண்டிருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.
எடுத்துக்காட்டு :
இனம்மொழி நாடென ஏறி முழங்குவான் – காண்பீர்
கனன்றவை மீட்டிடக் கட்சிக் கழைப்பான் – காண்பீர்
நனவிற் பதவி நனிபெற மாறுவான் – காண்பீர்
தினவறத்தன்னலம் தேர்ந்திடு வானிவன் – காண்பீர்!
தயங்காமல் எழுதத் தொடங்குங்கள்.
இந்தவகைப்பாடலை எழுதியபின் பலவகை வெண்பாக்கள் எழுதுவது மிக எளிதாக இருக்கும்.
ஐயமிருப்பின் தயங்காமல் கேளுங்கள்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
வெளிமண்டிலம் – 2
இன்னொரு எடுத்துக்காட்டு:
மண்ணின் மணமிருக்கும் மாயா ஒளியிருக்கும் – எந்தமிழில்
பண்ணின் இசையிருக்கும் பாசின் இனிப்பிருக்கும் – எந்தமிழில்
விண்ணின் உயர்விருக்கும் வேங்கை மறமிருக்கும் – எந்தமிழில்
கண்ணின் சிறந்திருக்கும் காதல் சுவையிருக்கும் – எந்தமிழில்!
- புலவர் அரங்க.நடராசன், புதுவை.
இன்னொரு எடுத்துக்காட்டு:
மண்ணின் மணமிருக்கும் மாயா ஒளியிருக்கும் – எந்தமிழில்
பண்ணின் இசையிருக்கும் பாசின் இனிப்பிருக்கும் – எந்தமிழில்
விண்ணின் உயர்விருக்கும் வேங்கை மறமிருக்கும் – எந்தமிழில்
கண்ணின் சிறந்திருக்கும் காதல் சுவையிருக்கும் – எந்தமிழில்!
- புலவர் அரங்க.நடராசன், புதுவை.
தமிழநம்பி ஐயா அவர்களுக்கு. எனது பயிற்சி.
தென்னை அசையுமதில் தேன்நிலவு தலைமறையும்- எங்கள் தேசம்
பின்னால் கரும்பேயாய் பெரும்பனைகள் சரசரக்கும் - எங்கள் தேசம்
உன்னிக் குரங்கோட ஒடிந்துமாங் கனிகொட்டும்- எங்கள் தேசம்
தின்னக் கிளிவந்து தெரிந்துண்ணப் பகல்மாயும் - எங்கள் தேசம்
சுட்ட பழங்கனிந்த சுவைநாவல் பொலிந்தவளம் - எங்கள் ஈழம்
முட்ட வளர்ந்தநெல் முகம்நாணித் தரைநோக்கும் - எங்கள் ஈழம்
தொட்டுக் கதைபேசுந் தென்றலுக்குச் சலசலக்கும் - எங்கள் ஈழம்
வட்ட மிடும்பறவை வயல்முழுதும் இசைபாடும்- எங்கள் ஈழம்
அன்புடன் கிரிகாசன்
தென்னை அசையுமதில் தேன்நிலவு தலைமறையும்- எங்கள் தேசம்
பின்னால் கரும்பேயாய் பெரும்பனைகள் சரசரக்கும் - எங்கள் தேசம்
உன்னிக் குரங்கோட ஒடிந்துமாங் கனிகொட்டும்- எங்கள் தேசம்
தின்னக் கிளிவந்து தெரிந்துண்ணப் பகல்மாயும் - எங்கள் தேசம்
சுட்ட பழங்கனிந்த சுவைநாவல் பொலிந்தவளம் - எங்கள் ஈழம்
முட்ட வளர்ந்தநெல் முகம்நாணித் தரைநோக்கும் - எங்கள் ஈழம்
தொட்டுக் கதைபேசுந் தென்றலுக்குச் சலசலக்கும் - எங்கள் ஈழம்
வட்ட மிடும்பறவை வயல்முழுதும் இசைபாடும்- எங்கள் ஈழம்
அன்புடன் கிரிகாசன்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அன்பார்ந்த கிரி,
மிக்க மகிழ்ச்சி. நன்கு முயன்று எழுதியிருக்கிறீர்கள்.
முதன்முதலில் தளை அமைத்து எழுதுகையில் யாருக்கும் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும்.
சில திருத்தங்கள் கூறுகிறேன்.
செப்பமாக திருத்தமுற எழுத உதவும்.
ஒவ்வொரு அடியிலும் வெண்தளைகள் அமைய வேண்டும்.
எனவே, காய் முன் நேர், மா முன் நிரை, விளம் முன் நேர் அமையவேண்டும்.
அவ்வாறு அமையாத இடங்களில் திருத்தம் செய்துள்ளதைக் கவனிக்க.
தனிச்சொல், மூன்றசைகளுக்குள் அமைய எழுதுவதே சிறப்பு.
தென்னை அசையுமதில் தேன்நிலவு போய்மறையும்- எம்தேசம்
பின்னால் கரும்பனைகள் பேயாக மீஒலிக்கும் - எம்தேசம்
சின்னக் குரங்கோடத் தீங்கனிகள் மாஉதிர்க்கும் - எம்தேசம்
தின்னக் கிளிவந்து தேர்ந்துண்ணப் போம்பொழுதே - எம்தேசம்!
சுட்ட பழம்நாவல் தூயசுவை ஆன்றவளம் - எம்மீழம்
முட்ட வளர்ந்தநெல் மோதிமுகம் நோக்கும்மண் - எம்மீழம்
தொட்டுக் கதைபலவுந் சொல்தென்றல் ஓங்கொலிக்கும் - எம்மீழம்
வட்ட மிடும்பறவை வந்துவயல் பாடுமிசை - எம்மீழம்!
ஐயமிருப்பின் தயங்காது கேளுங்கள்.
மிக்க மகிழ்ச்சி. நன்கு முயன்று எழுதியிருக்கிறீர்கள்.
முதன்முதலில் தளை அமைத்து எழுதுகையில் யாருக்கும் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும்.
சில திருத்தங்கள் கூறுகிறேன்.
செப்பமாக திருத்தமுற எழுத உதவும்.
ஒவ்வொரு அடியிலும் வெண்தளைகள் அமைய வேண்டும்.
எனவே, காய் முன் நேர், மா முன் நிரை, விளம் முன் நேர் அமையவேண்டும்.
அவ்வாறு அமையாத இடங்களில் திருத்தம் செய்துள்ளதைக் கவனிக்க.
தனிச்சொல், மூன்றசைகளுக்குள் அமைய எழுதுவதே சிறப்பு.
தென்னை அசையுமதில் தேன்நிலவு போய்மறையும்- எம்தேசம்
பின்னால் கரும்பனைகள் பேயாக மீஒலிக்கும் - எம்தேசம்
சின்னக் குரங்கோடத் தீங்கனிகள் மாஉதிர்க்கும் - எம்தேசம்
தின்னக் கிளிவந்து தேர்ந்துண்ணப் போம்பொழுதே - எம்தேசம்!
சுட்ட பழம்நாவல் தூயசுவை ஆன்றவளம் - எம்மீழம்
முட்ட வளர்ந்தநெல் மோதிமுகம் நோக்கும்மண் - எம்மீழம்
தொட்டுக் கதைபலவுந் சொல்தென்றல் ஓங்கொலிக்கும் - எம்மீழம்
வட்ட மிடும்பறவை வந்துவயல் பாடுமிசை - எம்மீழம்!
ஐயமிருப்பின் தயங்காது கேளுங்கள்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
பயிலரங்க அன்பர்களே!
கொஞ்சமும் தயங்காது இந்த வெளிமண்டிலப் பாடலை எழுதுங்கள். பிழை நேருமெனத் தயங்க வேண்டா!
பிழை செய்யாது எவரும் பாடல் எழுதப் பயின்றிடவில்லை.
எந்தப்பிழை நேர்ந்தாலும் திருத்திக் கொள்ளலாம்.
உதவுவதற்கு அணியமாக உள்ளேன்.
இந்த வெளிமண்டிலப் பாடலை எழுதப் பயின்றுவிட்டால், தமிழ் யாப்பில் எல்லாப்பாடல்களையும் எளிதில் எழுதப் பயின்றுவிடலாம்.
வாருங்கள், எழுதுங்கள் என்று உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.
வருக. தயங்காது எழுதுக. பிழை நேரின் திருத்திக்கொண்டு ஆற்றலுடன் எழுதலாம்.
கொஞ்சமும் தயங்காது இந்த வெளிமண்டிலப் பாடலை எழுதுங்கள். பிழை நேருமெனத் தயங்க வேண்டா!
பிழை செய்யாது எவரும் பாடல் எழுதப் பயின்றிடவில்லை.
எந்தப்பிழை நேர்ந்தாலும் திருத்திக் கொள்ளலாம்.
உதவுவதற்கு அணியமாக உள்ளேன்.
இந்த வெளிமண்டிலப் பாடலை எழுதப் பயின்றுவிட்டால், தமிழ் யாப்பில் எல்லாப்பாடல்களையும் எளிதில் எழுதப் பயின்றுவிடலாம்.
வாருங்கள், எழுதுங்கள் என்று உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.
வருக. தயங்காது எழுதுக. பிழை நேரின் திருத்திக்கொண்டு ஆற்றலுடன் எழுதலாம்.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா, தங்கள் நலன் காப்பீர்!
என் முயற்சியாய் இப்பாடலை கொடுத்துள்ளேன். சரியாக உள்ளதா என அறியத்தருவீர்.
யாப்பறிந்த நற்புலவோர் பாப்புணைந்து போற்றினரே - எந்தமிழே!
யாப்பதுவே நம்மொழியைக் காப்பதுவென் றேயறிந்தேன் - எந்தமிழே!
யாப்பறியும் நோக்குடனே யானிங்கே வந்தேனே - எந்தமிழே!
காப்பதுன் றன்கடமை யெனைக்காத் திடுவாய் - எந்தமிழே!
அன்புடன்
யாதுமானவள்
என் முயற்சியாய் இப்பாடலை கொடுத்துள்ளேன். சரியாக உள்ளதா என அறியத்தருவீர்.
யாப்பறிந்த நற்புலவோர் பாப்புணைந்து போற்றினரே - எந்தமிழே!
யாப்பதுவே நம்மொழியைக் காப்பதுவென் றேயறிந்தேன் - எந்தமிழே!
யாப்பறியும் நோக்குடனே யானிங்கே வந்தேனே - எந்தமிழே!
காப்பதுன் றன்கடமை யெனைக்காத் திடுவாய் - எந்தமிழே!
அன்புடன்
யாதுமானவள்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
யாதுமானவர்க்கு,
வணக்கம்.
முதன்முதலில் தளை அமைந்த பாடல் எழுதியுள்ளதற்கு முதலில் பாராட்டைக் கூறுகிறேன்.
உங்கள் பாடல் நன்றாகவே அமைந்துள்ளது.
யாப்பறிந்த நற்புலவோர் பாப்புணைந்து போற்றினரே - எந்தமிழே!
யாப்பதுவே நம்மொழியைக் காப்பதுவென் றேயறிந்தேன் - எந்தமிழே!
யாப்பறியும் நோக்குடனே யானிங்கே வந்தேனே - எந்தமிழே!
காப்பதுன் றன்கடமை யெனைக்காத் திடுவாய் - எந்தமிழே!
எல்லாம் சரி,
றன்கடமை x யெனைக்காத், திடுவாய் x எந்தமிழே – இங்குத் தளை தவறுகிறது.
இதைத் தவிர, உங்கள பாடல் இலக்கணப்படி சரியாகவே அமைந்துள்ளது. பாராட்டுகிறேன்.
திருத்தத்துடன் கீழே காண்க.
யாப்பறிந்த நற்புலவோர் பாப்புனைந்து போற்றினரே - எந்தமிழே!
யாப்பதுவே நம்மொழியைக் காப்பதுவென் றேயறிந்தேன் - எந்தமிழே!
யாப்பறியும் நோக்குடனே யானிங்கே வந்தேனே - எந்தமிழே!
காப்பதுன்றன் நற்கடனே காத்திடுவாய் என்றனையே - எந்தமிழே!
வேறு வகையிலும் நீங்களே திருத்தலாம்!
இன்னுமொரு பாடல் எழுத முயற்சி செய்க. உங்களால் நன்றாக எழுத முடியும்.
வணக்கம்.
முதன்முதலில் தளை அமைந்த பாடல் எழுதியுள்ளதற்கு முதலில் பாராட்டைக் கூறுகிறேன்.
உங்கள் பாடல் நன்றாகவே அமைந்துள்ளது.
யாப்பறிந்த நற்புலவோர் பாப்புணைந்து போற்றினரே - எந்தமிழே!
யாப்பதுவே நம்மொழியைக் காப்பதுவென் றேயறிந்தேன் - எந்தமிழே!
யாப்பறியும் நோக்குடனே யானிங்கே வந்தேனே - எந்தமிழே!
காப்பதுன் றன்கடமை யெனைக்காத் திடுவாய் - எந்தமிழே!
எல்லாம் சரி,
றன்கடமை x யெனைக்காத், திடுவாய் x எந்தமிழே – இங்குத் தளை தவறுகிறது.
இதைத் தவிர, உங்கள பாடல் இலக்கணப்படி சரியாகவே அமைந்துள்ளது. பாராட்டுகிறேன்.
திருத்தத்துடன் கீழே காண்க.
யாப்பறிந்த நற்புலவோர் பாப்புனைந்து போற்றினரே - எந்தமிழே!
யாப்பதுவே நம்மொழியைக் காப்பதுவென் றேயறிந்தேன் - எந்தமிழே!
யாப்பறியும் நோக்குடனே யானிங்கே வந்தேனே - எந்தமிழே!
காப்பதுன்றன் நற்கடனே காத்திடுவாய் என்றனையே - எந்தமிழே!
வேறு வகையிலும் நீங்களே திருத்தலாம்!
இன்னுமொரு பாடல் எழுத முயற்சி செய்க. உங்களால் நன்றாக எழுத முடியும்.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா, தங்கள் நலம் காக்க!
தங்கள் திருத்தம் கண்டு ஆனந்தம் கொள்கிறேன். நன்றிகள் ஏற்க!.
என் தொடர்ந்த முயற்சியாக தங்கள் பார்வைக்கு இன்னொரு செய்யுளைக் கொடுத்துள்ளேன். தவறுகளை அறியத்தாருங்கள்.
நித்தமும்நீ நீள்வானில் நீந்துவதைக் காண்கின்றேன் - வெண்ணிலவே
முத்தமொன்று நான்கொடுக்க ஆசையுற்றுத் தோற்கின்றேன் - வெண்ணிலவே
பித்தனவன் எப்படித்தான் சூடினானோ நெற்றியிலே - வெண்ணிலவே
பித்தமுற்றே உன்னழகில் பேசுகின்றேன் ஏதேதோ - வெண்ணிலவே
அன்புடன்
யாதுமானவள்
தங்கள் திருத்தம் கண்டு ஆனந்தம் கொள்கிறேன். நன்றிகள் ஏற்க!.
என் தொடர்ந்த முயற்சியாக தங்கள் பார்வைக்கு இன்னொரு செய்யுளைக் கொடுத்துள்ளேன். தவறுகளை அறியத்தாருங்கள்.
நித்தமும்நீ நீள்வானில் நீந்துவதைக் காண்கின்றேன் - வெண்ணிலவே
முத்தமொன்று நான்கொடுக்க ஆசையுற்றுத் தோற்கின்றேன் - வெண்ணிலவே
பித்தனவன் எப்படித்தான் சூடினானோ நெற்றியிலே - வெண்ணிலவே
பித்தமுற்றே உன்னழகில் பேசுகின்றேன் ஏதேதோ - வெண்ணிலவே
அன்புடன்
யாதுமானவள்
- Sponsored content
Page 27 of 50 • 1 ... 15 ... 26, 27, 28 ... 38 ... 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 27 of 50
|
|