புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
3 Posts - 2%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
1 Post - 1%
Kavithas
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
1 Post - 1%
bala_t
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
284 Posts - 42%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
5 Posts - 1%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
4 Posts - 1%
manikavi
மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 27 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 26 of 50 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 38 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Sep 14, 2010 4:37 pm

அன்பர்கள் ஐயமிருப்பின் கேட்கலாம். தவறாக எழுதிவிடுவோம் எனத் தயங்க வேண்டா. தவற்றைத் திருத்திக் கற்றுக் கொள்ளலாம். துணிந்து எழுதுக. கறக கசடற கற்பவை ....என்று தொடங்கும் இந்தக் குறளில் அமைந்துள்ள தளைகளைக் குறிப்பிடுக.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 16, 2010 4:49 pm

ஐயா முன்னைய பயிற்சியில் சரியாக செய்துவிட்டேன். இதில் என்னவோ தெரியவில்லை. தங்கள் பார்வைக்குமுன் வைக்கிறேன்.

பயிற்சி

கற்க- கசடற மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
கசடறக் - கற்பவை விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
கற்பவை - கற்றபின் விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
கற்றபின் - நிற்க விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
நிற்க அதற்குத் மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
அதற்குத் - தக மா முன் நிரை இயற்சீர்வெண்டளை



நண்பர்களுக்கு:

கண்போகாக் காட்டுமரக் கூட்டத்துள்ளே
காதவெளி சஞ்சரித்த பிரபஞ்சத்தில்
வெண்ணிலவில் இறங்கிவிட்ட வேளைதன்னில்
விளையாடி ஒழித்துநிற்கு விதமாய்மௌனம்’’

என்னவென அறியேன் என் தோழர்கைகள்
எழுத்தாணி எடுக்கமறந் தெங்கே சென்றார்
சின்னநில வொளியெடுக்கச் சிறப்பேகொள்ள
செங்கதிரின் முன்னிலையில் சேர்வோம்வாரீர்


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Sep 25, 2010 11:40 am

வணக்கம் அய்யா தமிழநம்பி அவர்களே,

தங்கள் நலன் காக்க!

இலக்கண பயிற்சி இடைவிடாது செய்யவேண்டுமென்ற பேரவா உள்ளபோதும் பலவகை இடையூறுகள் நிமித்தம் நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. தாமதத்திற்கு வருந்துகிறேன்.

மிக அற்புதமாக உள்ளது தளை. பள்ளியில் நானும் படித்திருக்கிறேன். ஆனால் ஒன்றேனும் நினைவிலிருத்தாமல் வெறும் மதிப்பெண் பெறவேண்டியே படித்த பிழை இப்போது புரிகிறது. அது என்பிழையென்றும் ஏற்றுக்கொள்ள முடியாது காரணம், அவ்வயதில் இலக்கணத்தின் அவசியம் புரிந்திருக்க நியாயமில்லை. சரிதானே? இன்று தங்கள் தயவால், பக்குவப்பட்ட இவ்வயதில மீண்டும் படித்து அப்பிழையிலிருந்து மீண்டெழ ஓர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என் நன்றிகள் ஏற்பீர்!

ஒரு ஐம்பது திருக்குறளாவது நேற்றிரவு தளை ஆய்ந்தேன்....இரண்டடி பொக்கிஷத்தில் இருதளைகளே புதைந்திருப்பது கண்டு அதிசயித்தேன். (நான் சரியா என்பது தாங்கள்தான் கூறவேண்டும்).

தமிழில் தட்டெச்சு செய்வது சற்று சிரமமாக உள்ளதால் சில குறள்கள் மட்டும் இங்கே கொடுத்துள்ளேன். சரியாக உள்ளதா என அறியத்தருவீர்.
*** ***

கடலோடா - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கால்வல் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
நெடுந்தேர் - புளிமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
கடலோடும் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நாவாயும் - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஓடா - தேமா (மா முன் நிரை) - இயர்சீர் வெண்டளை
நிலத்து – பிறப்பு.
*** ***

அமிழ்தினும் - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
ஆற்ற - தேமா (மா முன் நிரை)- இயற்சீர் வெண்டளை
இனிதேதம் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
மக்கள் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
சிறுகை - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
அளாவிய - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
கூழ் – நாள்
*** ***
சொலல்வல்லன் -புளிமாங்காய் (காய்முன் நேர்) -வெண்சீர் வெண்டளை
சோர்விலன் - கூவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
அஞ்சான் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
அவனை - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
இகல்வெல்லல் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
யார்க்கும் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
அரிது - நிரைபு.
*** ***

சிறுமை - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
பலசெய்து - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
சீரழிக்கும் - கூவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
சூதின் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
வறுமை- புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
தருவதொன்று - கூவிளங்காய் ( காய் முன் நேர்) -வெண்சீர் வெண்டளை
இல்-நாள்
*** ***
செய்க - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
பொருளைச் - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
செறுநர் -புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
செருக்கறுக்கும் - கருவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
எக்கதனிற் - கூவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கூரியது - கூவிளங்காய்( காய் முன் நேர்) -வெண்சீர் வெண்டளை
இல்-நாள்
*** ***
செல்லான் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
கிழவன் - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
இருப்பின் -புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
நிலம்புலந்து - கருவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
இல்லாளின் - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஊடி - தேமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
விடும்-மலர்
*** ***
நெருப்பினுள் - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
துஞ்சலும் - கூவிளம்(விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
ஆகும் -தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
நெருனலும் - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
கொன்றது - கூவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
போலும் - தேமா(மா முன் நினை) - இயற்சீர் வெண்டளை
நிரப்பு-பிறப்பு
*** ***
ஆற்றுவார் - கூவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
ஆற்றல்- தேமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
பணிதல் -புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
அதுசான்றோர் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
மாற்றாரை - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
மாற்றும் - தேமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
படை-மலர்.
*** ***
உறுவது - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
சீர்தூக்கும் தேமாங்காய்(காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நட்பும் -தேமா (மா முன் நிரை) - இயர்சீர் வெண்டளை)
பெறுவது - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
கொள்வாரும் - கூவிளம்(விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
கள்வரும் -கூவிளம்(விளம் முன் நினை) - இயற்சீர் வெண்டளை
நேர்-நாள்
*** ***
அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Sep 30, 2010 9:01 am

kirikasan wrote:ஐயா முன்னைய பயிற்சியில் சரியாக செய்துவிட்டேன். இதில் என்னவோ தெரியவில்லை. தங்கள் பார்வைக்குமுன் வைக்கிறேன்.

பயிற்சி

கற்க- கசடற மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
கசடறக் - கற்பவை விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
கற்பவை - கற்றபின் விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
கற்றபின் - நிற்க விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
நிற்க அதற்குத் மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
அதற்குத் - தக மா முன் நிரை இயற்சீர்வெண்டளை



நண்பர்களுக்கு:

கண்போகாக் காட்டுமரக் கூட்டத்துள்ளே
காதவெளி சஞ்சரித்த பிரபஞ்சத்தில்
வெண்ணிலவில் இறங்கிவிட்ட வேளைதன்னில்
விளையாடி ஒழித்துநிற்கு விதமாய்மௌனம்’’

என்னவென அறியேன் என் தோழர்கைகள்
எழுத்தாணி எடுக்கமறந் தெங்கே சென்றார்
சின்னநில வொளியெடுக்கச் சிறப்பேகொள்ள
செங்கதிரின் முன்னிலையில் சேர்வோம்வாரீர்

கிரி, தளைகளச் சரியாகவே தந்திருக்கிறீர்கள். நீங்கள் முறையாக யாப்பறியின், நல்ல பாவலராக வரவியலும். வாழ்த்துகிறேன்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Sep 30, 2010 9:37 am

யாதுமானவருக்கு,
வணக்கம். வருக.
பயிலுவார் ஈடுபாடில்லாவிட்டால், பயிற்றுவார்க்கு வேலையில்லை.
உங்களைப் போலும் ஆர்வத்தோடு பயிலுவார் தொடர்ந்து பயிலரங்கில் ஈடுபட்டால்தான் என்னால் தொய்வின்றிப் பயிலரங்கைத் தொடர இயலும்.
அன்பர்கள் புரிந்துகொண்டு ஈடுபாட்டுன் தொடருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இனி, தளை பற்றிய விளக்கம்.
தளையைக் குறிக்கும் போது எந்த இரண்டு சீர்களுக்கு இடையிலானது என்று தெரியுமாறு குறிக்க வேண்டும்.

கடலோடா - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கால்வல் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
நெடுந்தேர் - புளிமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
கடலோடும் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நாவாயும் - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஓடா - தேமா (மா முன் நிரை) - இயர்சீர் வெண்டளை
நிலத்து – பிறப்பு.

இவற்றை முறையாகக் கீழ்க்காணும் வகையில் குறித்தலே மரபு. விளங்கிக்கொள்ளவும் எளிதாக இருக்கும்.

கடலோடா x கால்வல் - (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கால்வல் x நெடுந்தேர் - (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
நெடுந்தேர் x கடலோடும் - (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
கடலோடும் x நாவாயும் - (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நாவாயும் x ஓடா - (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஓடா x நிலத்து - (மா முன் நிரைபு) - இயர்சீர் வெண்டளை

நீங்கள் தளையைப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள், குறிக்கும் முறை இப்போது விளங்கியிருக்கும். கீழ்க்காணும் திருத்தத்தைக் கவனிக்க.
கொள்வாரும் x கள்வரும் – காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை

உங்கள் ஈடுபாடு ஊக்கம் தருகிறது.
பயிலரங்கில் தொடர்ந்து வருக.

இனி, அடுத்ததாக ஒருவகைப்பாடல் எழுதப் பயில்வோம்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Sep 30, 2010 10:05 am

23. வெளிமண்டிலம் – 2

நாம் அடுத்து பயிலவிருப்பது இன்னொரு வகை வெளிமண்டிலப் பாடல்.

இப் பாடல்...


1. நான்கடி கொண்ட வெளிமண்டில வகையாகும்
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. ஒவ்வொரு அடியும் வெண்டளை கொண்டிருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.


எடுத்துக்காட்டு :

இனம்மொழி நாடென ஏறி முழங்குவான் – காண்பீர்
கனன்றவை மீட்டிடக் கட்சிக் கழைப்பான் – காண்பீர்
நனவிற் பதவி நனிபெற மாறுவான் – காண்பீர்
தினவறத்தன்னலம் தேர்ந்திடு வானிவன் – காண்பீர்!


தயங்காமல் எழுதத் தொடங்குங்கள்.
இந்தவகைப்பாடலை எழுதியபின் பலவகை வெண்பாக்கள் எழுதுவது மிக எளிதாக இருக்கும்.
ஐயமிருப்பின் தயங்காமல் கேளுங்கள்.



avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Oct 01, 2010 11:44 pm

வெளிமண்டிலம் – 2

இன்னொரு எடுத்துக்காட்டு:

மண்ணின் மணமிருக்கும் மாயா ஒளியிருக்கும் – எந்தமிழில்
பண்ணின் இசையிருக்கும் பாசின் இனிப்பிருக்கும் – எந்தமிழில்
விண்ணின் உயர்விருக்கும் வேங்கை மறமிருக்கும் – எந்தமிழில்
கண்ணின் சிறந்திருக்கும் காதல் சுவையிருக்கும் – எந்தமிழில்!

- புலவர் அரங்க.நடராசன், புதுவை.



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 02, 2010 12:49 am

ஐயா,
காலையில் ஒன்று எழுத தொடங்கினேன். சந்தேகம் வரவே இடை நிறுத்தியிருந்தேன். இப்போது இரண்டாவது எடுத்துக்காட்டு உதவி புரிந்தது. இன்னும் சொற்ப நேரத்தில் பயிற்சியுடன் வருவேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 02, 2010 12:12 pm

தமிழநம்பி ஐயா அவர்களுக்கு. எனது பயிற்சி.

தென்னை அசையுமதில் தேன்நிலவு தலைமறையும்- எங்கள் தேசம்
பின்னால் கரும்பேயாய் பெரும்பனைகள் சரசரக்கும் - எங்கள் தேசம்
உன்னிக் குரங்கோட ஒடிந்துமாங் கனிகொட்டும்- எங்கள் தேசம்
தின்னக் கிளிவந்து தெரிந்துண்ணப் பகல்மாயும் - எங்கள் தேசம்

சுட்ட பழங்கனிந்த சுவைநாவல் பொலிந்தவளம் - எங்கள் ஈழம்
முட்ட வளர்ந்தநெல் முகம்நாணித் தரைநோக்கும் - எங்கள் ஈழம்
தொட்டுக் கதைபேசுந் தென்றலுக்குச் சலசலக்கும் - எங்கள் ஈழம்
வட்ட மிடும்பறவை வயல்முழுதும் இசைபாடும்- எங்கள் ஈழம்

அன்புடன் கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat Oct 02, 2010 2:52 pm

அன்பார்ந்த கிரி,
மிக்க மகிழ்ச்சி. நன்கு முயன்று எழுதியிருக்கிறீர்கள்.
முதன்முதலில் தளை அமைத்து எழுதுகையில் யாருக்கும் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும்.
சில திருத்தங்கள் கூறுகிறேன்.
செப்பமாக திருத்தமுற எழுத உதவும்.
ஒவ்வொரு அடியிலும் வெண்தளைகள் அமைய வேண்டும்.
எனவே, காய் முன் நேர், மா முன் நிரை, விளம் முன் நேர் அமையவேண்டும்.

அவ்வாறு அமையாத இடங்களில் திருத்தம் செய்துள்ளதைக் கவனிக்க.
தனிச்சொல், மூன்றசைகளுக்குள் அமைய எழுதுவதே சிறப்பு.

தென்னை அசையுமதில் தேன்நிலவு போய்மறையும்- எம்தேசம்
பின்னால் கரும்பனைகள் பேயாக மீஒலிக்கும் - எம்தேசம்
சின்னக் குரங்கோடத் தீங்கனிகள் மாஉதிர்க்கும் - எம்தேசம்
தின்னக் கிளிவந்து தேர்ந்துண்ணப் போம்பொழுதே - எம்தேசம்!

சுட்ட பழம்நாவல் தூயசுவை ஆன்றவளம் - எம்மீழம்
முட்ட வளர்ந்தநெல் மோதிமுகம் நோக்கும்மண் - எம்மீழம்
தொட்டுக் கதைபலவுந் சொல்தென்றல் ஓங்கொலிக்கும் - எம்மீழம்
வட்ட மிடும்பறவை வந்துவயல் பாடுமிசை - எம்மீழம்!


ஐயமிருப்பின் தயங்காது கேளுங்கள்.



Sponsored content

PostSponsored content



Page 26 of 50 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 38 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக