புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
11 Posts - 33%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
6 Posts - 18%
i6appar
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
3 Posts - 9%
Jenila
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
88 Posts - 35%
i6appar
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
2 Posts - 1%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 23 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 23 of 50 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 36 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jul 30, 2010 11:32 pm

மரபுப் பா பயிலரங்கம் - Page 23 440806

கொள்ளும் ஒழுக்கக் குலமதில் உதித்தனர் - தமிழர்

உள்ளும் பேறெலாம் உயர்வாய்ப் பெற்றனர் - தமிழர்

எவ்விதத் தொழிலும் எடுத்துச் செய்தனர் - தமிழர்

இவ்விதப் புகழுடன் இனிது வாழ்ந்தனர் – தமிழர்



அன்புடன்

யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jul 30, 2010 11:38 pm

அய்யா,



இப்போது சரியாக உள்ளதென நினைக்கிறேன்.



கொள்ளும் ஒழுக்கக் குலமதில் உதித்தனர் - தமிழர்

உள்ளும் பேறெலாம் உயர்வாய் பெற்றனர் - தமிழர்

எவ்விதத் தொழிலும் ஏற்று செய்தனர்- தமிழர்

இவ்விதப் புகழுடன் இனிது வாழ்ந்தனர் - தமிழர்



அன்புடன்

யாதுமானவள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 31, 2010 2:01 pm

ஐயா மீண்டும் ஒரு கவிதை இயற்றினேன். எப்போதும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கிறது. சங்ககால இலக்கியங்கள் நிறைய இளம்பராயத்தில் படிப்பேன். அதில் காணும் தலைவன் தலைவியை போல
ஒரு கற்பனை..இதோ. சில சந்தர்ப்பங்களில் இறுதிச்சொல் பொருந்தாதுபோல் தெரிகிறதோ! இருப்பினும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்


மாமரச் சோலையில் மாலைவா என்றனள். போனதெங்கே?
வாமறந் தேவிடில் வாழ்விலை என்றனள் - போனதெங்கே?
தாமரைப் பூமுகம் வாடமுன் வந்தேன் - போனதெங்கே?
பூமரம் நிற்குது பூமகள் இல்லையே - போனதெங்கே?

மாமன் ஒருவன் மலையென உள்ளனன் - மோதிவிடு
பூமலர் கொள்ளக் குரங்கெனக் காத்தனன் --மோதிவிடு
தாமதம் செய்தே தடுத்தவன் ஆகிடில் - மோதிவிடு
ஆமவன் இன்றுடன் பூமி மறந்தனன் - மோதிவிடு

போகத் திரும்பிட ஓடி வந்தாள் - நெஞ்சலற!
வேகமெ டுத்தவள் கூறியது கேட்டேன் -நெஞ்சலற!
ஆக அனைத்து அறிந்தனர் தந்தையும்-- நெஞ்சலற!
நோக அறையில் சிறையென் றாக்கினர் - நெஞ்சலற!

என்னை சிறைநின் றிங்கே அடைந்திட - நல்லவராம்!
முன்னே வந்துமே மாமன் உதவினன் - நல்லவராம்!
அன்னைதந் தையவர் முன்பொய் உரைத்துமே -நல்லவராம்!
என்னை அழைத்திங் குகொண்டு தந்தார் - நல்லவராம்!


கன்னத் துமீசை முறுக்கிய மாமனோ - ஆஇவனா
இன்றுமு தலிவள் உந்தன் உரித்தவள் - ஆஇவனா
என்கரம் மீதில வள்கரம் வைத்துமே - ஆஇவனா
கண்கலங் காதுபார் என்றுக லங்கினான் - ஆஇவனா

ஐயா இப்படி கதை சொல்லும் பாணியில் எழுதலாமோ தெரியவில்லை. இங்கு நான் ஒரு புது முயற்சியாக
இதை செய்தேன். மனம் திருப்தியாக இல்லை . இருப்பினும் உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் காத்திருக்கிறேன்

அன்புடன்
கிரிகாசன்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Aug 02, 2010 8:26 am

காலை வணக்கம் அய்யா, தங்கள் நலன் காப்பீர்!

என் இன்னொறு முயற்சி:

வெப்ப மழையது வீழ்கிற தேயிப் பூமியில் - ஆதவனால்
வெப்பம் உண்டபின் விரியுது பூக்கள் - ஆதவனால்
மப்பும் பனியும் மோட்சம் பெறுவது -ஆதவனால்
ஒப்பனை யின்றி ஒளிர்கிற தேபுவி - ஆதவனால்


அன்புடன்
யாதுமானவள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 02, 2010 12:07 pm

ஐயா, இது இன்றைய பயிற்சி. முன்னையது திருப்தி தராததால் இதை எழுதினேன்

தத்தி நடந்தாள் தாமரை போலவே - எங்கபாப்பா
பொத்தென வீழ்ந்தே பொய்யில் அழுதாள்- எங்கபாப்பா
மெத்தென் றணைக்க மெல்லச் சிரித்தாள் - எங்கபாப்பா
நித்தம் அழுதே நெஞ்சில் உதைப்பாள் -- எங்கபாப்பா

மெல்லத் தவழும் முல்லைக் கொடியே - கண்ணுறங்காய்
சொல்லும் மழலை சிந்து மமுதே - கண்ணுறங்காய்
செல்லமே வாழ்வின் இன்னல் களைந்தாய் - கண்ணுறங்காய்
மல்லிகை என்று மலர்ந்த வளேநீ - கண்ணுறங்காய்

அன்புடன் கிரிகாசன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 02, 2010 12:23 pm

ஐயா

இன்னுமொன்று

நீலக் கடலினில் நீந்தும் திரைகளில் - மின்னுமெழில்
ஓலமிட் டேவிழும் ஆற்றில் கதிர்பட - மின்னுமெழில்
காலைப் பனித்துளி தூங்கும் மலர்களில் - மின்னுமெழில்
சேலையணி மாதர் செய்யும் குறுநகை - மின்னுமெழில்

அன்புடன்
கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Aug 02, 2010 3:09 pm

யாதுமானவர்க்கு, நீங்கள் தனிச்சொல்லாகத் 'தமிழர்' என்று அமைத்து எழுதிய திருத்திய பாடல் சரியாக உள்ளது.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Aug 02, 2010 3:22 pm

kirikasan wrote:ஐயா மீண்டும் ஒரு கவிதை இயற்றினேன். எப்போதும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கிறது. சங்ககால இலக்கியங்கள் நிறைய இளம்பராயத்தில் படிப்பேன். அதில் காணும் தலைவன் தலைவியை போல
ஒரு கற்பனை..இதோ. சில சந்தர்ப்பங்களில் இறுதிச்சொல் பொருந்தாதுபோல் தெரிகிறதோ! இருப்பினும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்


மாமரச் சோலையில் மாலைவா என்றனள். போனதெங்கே?
வாமறந் தேவிடில் வாழ்விலை என்றனள் - போனதெங்கே?
தாமரைப் பூமுகம் வாடமுன் வந்தேன் - போனதெங்கே?
பூமரம் நிற்குது பூமகள் இல்லையே - போனதெங்கே?

மாமன் ஒருவன் மலையென உள்ளனன் - மோதிவிடு
பூமலர் கொள்ளக் குரங்கெனக் காத்தனன் --மோதிவிடு
தாமதம் செய்தே தடுத்தவன் ஆகிடில் - மோதிவிடு
ஆமவன் இன்றுடன் பூமி மறந்தனன் - மோதிவிடு

போகத் திரும்பிட ஓடி வந்தாள் - நெஞ்சலற!
வேகமெ டுத்தவள் கூறியது கேட்டேன் -நெஞ்சலற!
ஆக அனைத்து அறிந்தனர் தந்தையும்-- நெஞ்சலற!
நோக அறையில் சிறையென் றாக்கினர் - நெஞ்சலற!

என்னை சிறைநின் றிங்கே அடைந்திட - நல்லவராம்!
முன்னே வந்துமே மாமன் உதவினன் - நல்லவராம்!
அன்னைதந் தையவர் முன்பொய் உரைத்துமே -நல்லவராம்!
என்னை அழைத்திங் குகொண்டு தந்தார் - நல்லவராம்!


கன்னத் துமீசை முறுக்கிய மாமனோ - ஆஇவனா
இன்றுமு தலிவள் உந்தன் உரித்தவள் - ஆஇவனா
என்கரம் மீதில வள்கரம் வைத்துமே - ஆஇவனா
கண்கலங் காதுபார் என்றுக லங்கினான் - ஆஇவனா

ஐயா இப்படி கதை சொல்லும் பாணியில் எழுதலாமோ தெரியவில்லை. இங்கு நான் ஒரு புது முயற்சியாக
இதை செய்தேன். மனம் திருப்தியாக இல்லை . இருப்பினும் உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் காத்திருக்கிறேன்

அன்புடன்
கிரிகாசன்
கிரி,
உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது.

மாமரச் சோலையில் மாலைவா என்றனள். போனதெங்கே?
வாமறந் தேவிடில் வாழ்விலை என்றனள் - போனதெங்கே?
தாமரைப் பூமுகம் வாடமுன் வந்தேன் - போனதெங்கே?
பூமரம் நிற்கும் பூமகள் இல்லையே - போனதெங்கே?

மாமன் ஒருவன் மலையென உள்ளனன் - மோதிவிடு
பூமலர் கொள்ளக் குரங்கெனக் காத்தனன் --மோதிவிடு
தாமதம் செய்தே தடுத்தவன் ஆகிடில் - மோதிவிடு
ஆமவன் இன்றுடன் பூமி மறந்தனன் - மோதிவிடு

போகத் திரும்பிட ஓடி வந்தாள் - நெஞ்சலற!
வேகமெ டுத்தவள் கூறியது கேட்டேன் -நெஞ்சலற!
ஆக அனைத்து மறிந்தனர் தந்தையும்-- நெஞ்சலற!
நோக அறையில் சிறையென் றாக்கினர் - நெஞ்சலற!

என்னை சிறைநின் றிங்கே அடைந்திட - நல்லவராம்!
முன்னே வந்துமே மாமன் உதவினன் - நல்லவராம்!
அன்னைதந் தையவர் முன்பொய் உரைத்தனர் -நல்லவராம்!
என்னை அழைத்துவந் தீண்டு தந்தனர் - நல்லவராம்!


கன்னத் துமீசை முறுக்கிய மாமனோ - ஆஇவனா
இன்று முதலிவள் உன்றன் உரிமையள் - ஆஇவனா
என்கை மீதி லவள்கை வைத்துமே - ஆஇவனா
கண்கலங் காதுபார் என்று கலங்கினான் - ஆஇவனா

இவ்வாறு எழுதலாம்.

உங்கள் ஊக்கத்துக்குப் பாராட்டு.

தொடர்ந்து எழுதுக.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Aug 02, 2010 3:27 pm

Yaadhumanaval wrote:காலை வணக்கம் அய்யா, தங்கள் நலன் காப்பீர்!

என் இன்னொரு முயற்சி:

வெப்ப மழையது வீழ்ந்திடும் நிலத்தினில் - ஆதவனால்
வெப்பம் உண்டபின் விரிந்திடும் பூக்கள் - ஆதவனால்
மப்பும் பனியும் மாண்டுய்ந் திடுவது -ஆதவனால்
ஒப்பனை யின்றி ஒளிர்கிற தேநிலம் - ஆதவனால்


அன்புடன்
யாதுமானவள்
பாடல் நன்றாக - சரியாக - அமைந்துள்ளது.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Aug 02, 2010 3:35 pm

kirikasan wrote:ஐயா, இது இன்றைய பயிற்சி. முன்னையது திருப்தி தராததால் இதை எழுதினேன்

தத்தி நடந்தாள் தாமரை போலவே - எங்கபாப்பா
பொத்தென வீழ்ந்தே பொய்யில் அழுதாள்- எங்கபாப்பா
மெத்தென் றணைக்க மெல்லச் சிரித்தாள் - எங்கபாப்பா
நித்தம் அழுதே நெஞ்சில் உதைப்பாள் -- எங்கபாப்பா

மெல்லத் தவழும் முல்லைக் கொடியே - கண்ணுறங்காய்
சொல்லும் மழலைச் சுவையே அமுதே - கண்ணுறங்காய்
செல்லமே வாழ்வின் இன்னல் களைந்தாய் - கண்ணுறங்காய்
மல்லிகை என்று மலர்ந்த வளேநீ - கண்ணுறங்காய்

அன்புடன் கிரிகாசன்
கிரி, பாடல்கள் இரண்டும் அருமை. எங்கபாப்பா என்பது கொச்சை வடிவம். அதை, எம் உயிரே என்றோ எம்கண்ணே என்றோ வேறு வகையிலோ மாற்றுக. எங்கள்பாப்பா என்று எழுதினால் நாலசைச்சீர் அகிவிடும்.

Sponsored content

PostSponsored content



Page 23 of 50 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 36 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக