புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
49 Posts - 60%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
17 Posts - 21%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
3 Posts - 4%
kavithasankar
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
44 Posts - 60%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
15 Posts - 21%
dhilipdsp
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
2 Posts - 3%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 19 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 19 of 50 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 34 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun Jul 18, 2010 10:02 pm

வழிப்போக்கனாரும் மற்றவர்களும் வருக. நீங்கள் எழுதிய பாடல்களைத் தருக. நாம் அடுத்தவகைப் பாடல் எழுதப் போகலாம்.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Jul 19, 2010 9:19 am

காலை வணக்கம் அய்யா,
முயன்றுள்ளேன் மறுபடி. மறுபடி தவறாக இருந்தால் எனைப் பொறுத்து பொருத்தமான வார்த்தைகளைப் பொருத்திவிடுங்கள். மிக்க நன்றி.

வண்டூதும் ஒலியாலம் மலரதுவும் மலர்ந்ததுவோ
வெண்கதிரோன் தொடும்வெப்பம் உணர்ந்ததனால் விரிந்ததுவோ
என்னென்று அறிந்தவரிங் கெவர்?

********************

யாப்பறிந்த புலவரவர் எழுதியபா கிடைத்தவுடன்
பூப்பறித்தார்ப் பரித்துப்புன் னகைக்குமிளங் குமரியாகி
யாப்பொதிபா படிக்கின்றேன் முயன்று.

அன்புடன்
யாதுமனவள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 19, 2010 5:07 pm

ஐயா தமிழநம்பி அவர்களுக்கு என் பணிவான வணக்கம்

மரபுக்கவிதையென்றுகூறி ஏதோவெல்லாம் எழுதுவேன். தலைவிதி என்று எல்லோரும் வாசிக்க தந்துவிடுவேன். ஆனால் மரபிலக்கணம் எங்கு கற்பது என தெரியாமல் இருந்தேன். இந்த இழை சில நாட்களுக்கு முன்னர்தான் கண்டேன் மிக மகிழ்ச்சி. இதில் நானும் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இது என் முயற்சி. சரியோ தெரியவில்லை. பிழைஇருக்கும்போல் தெரிகிறது. உங்கள் உதவி தேவை. கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.


தேன்தமிழைக் கோவையிடுந் திறமையினைப் பயிலவென
நான்குதிசை தேடியுமே நான்சோர்ந்து போயிருக்க
பூந்தமிழோ பூத்திருந்த திங்கு


நல்லகவி கூறுமொரு நயனறிய உள்ளதொரு
சொல்லரிய இடம்மேவி துணிவுடனே வந்தவனை
நல்லறிவு ஊட்டுவீர் நயந்து

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Jul 19, 2010 6:26 pm

Yaadhumanaval wrote:காலை வணக்கம் அய்யா,
முயன்றுள்ளேன் மறுபடி. மறுபடி தவறாக இருந்தால் எனைப் பொறுத்து பொருத்தமான வார்த்தைகளைப் பொருத்திவிடுங்கள். மிக்க நன்றி.

வண்டூதும் ஒலியாலம் மலரதுவும் மலர்ந்ததுவோ
வெண்கதிரோன் தொடும்வெப்பம் உணர்ந்ததனால் விரிந்ததுவோ
என்னென்று அறிந்தவரிங் கெவர்?

********************

யாப்பறிந்த புலவரவர் எழுதியபா கிடைத்தவுடன்
பூப்பறித்தார்ப் பரித்துப்புன் னகைக்குமிளங் குமரியாகி
யாப்பொதிபா படிக்கின்றேன் முயன்று.

அன்புடன்
யாதுமனவள்
அருமையாக உள்ளன. நெஞ்சார்ந்த பாராட்டு. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Jul 19, 2010 7:02 pm

kirikasan wrote:ஐயா தமிழநம்பி அவர்களுக்கு என் பணிவான வணக்கம்

மரபுக்கவிதையென்றுகூறி ஏதோவெல்லாம் எழுதுவேன். தலைவிதி என்று எல்லோரும் வாசிக்க தந்துவிடுவேன். ஆனால் மரபிலக்கணம் எங்கு கற்பது என தெரியாமல் இருந்தேன். இந்த இழை சில நாட்களுக்கு முன்னர்தான் கண்டேன் மிக மகிழ்ச்சி. இதில் நானும் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இது என் முயற்சி. சரியோ தெரியவில்லை. பிழைஇருக்கும்போல் தெரிகிறது. உங்கள் உதவி தேவை. கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.


தேன்தமிழைக் கோவையிடுந் திறமையினைப் பயிலவென
நான்குதிசை தேடியுமே நான்சோர்ந்து போயிருக்க
பூந்தமிழோ பூத்திருந்த திங்கு


நல்லகவி கூறுமொரு நயனறிய உள்ளதொரு
சொல்லரிய இடம்மேவி துணிவுடனே வந்தவனை
நல்லறிவு ஊட்டுவீர் நயந்து


வருக, வருக கிரி!

உங்கள் ஆர்வமும் ஊக்கமும் உங்களை நல்ல பாவலராக்கும் என்று நம்புகிறேன்.
இதற்கு முன் எழுதிய பயிலரங்கப் பகுதிகளைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
வெண்தாழிசை – 4 என்ற தலைப்பில் இப்போது பாடல் எழுதுகிறோம். எப்படி எழுத வேண்டும் என்பதைப் படித்துவிட்டிருப்பீர்கள்.

சில திருத்தங்களோடு உங்கள் பாடல்களைக் கீழே தருகின்றேன்.
அந்தத் திருத்தங்கள் ஏன் செய்யப்பட்டன என்பது புரியாவிட்டால் தயங்காது கேளுங்கள். விளக்கிக் கூறுகின்றேன்.

தேன்தமிழைக் குழைத்தெழுதும் திறமையினைப் பயிலவென
நான்குதிசை அலைந்துதிரிந் தயர்ந்தநிலை அழகுறவே
பூந்தமிழோ மலர்ந்ததிங்கேப் பொலிந்து.



நல்லகவி இயற்றுமொரு நயனறிய உளமேங்கச்
சொல்லரிய இடம்மேவி துணிவுடனே வருகின்றேன்
நல்லறிவு தருவீரே நயந்து.


மீண்டும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். தொடர்ந்து படித்துக் கவனத்தோடு எழுதுங்கள்.

எளிதில் நம் தமிழில் எவ்வகைப் பாக்களையும் நம்மால் எழுத முடியும். நன்றி.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 19, 2010 7:11 pm

ஆகா அற்புதம்!! கண்ணீர் வருகிறது!

இவ்வளவு அழகாக மாற்றிவிட்டீர்கள் ஐயா! தமிழின் சுவை தேனாக கொட்டுகிறது தங்கள் மாற்றத்தில். இதைபோலத்தான் நான் எழுதவேண்டும். முடியுமா? முயற்சிப்பேன். நிறையப் படிக்கவேண்டும் போலிருக்கிறது.
பார்ப்போம். உங்களை ஆசானாக கிடைத்தது நாம் செய்த பாக்கியமே. தொடர்வேன்.

என்ன வித்தியாசமென இனித்தான் பார்க்கப்போகிறேன். ஆனால் என் தமிழ் வரி தடக்கிறது. தங்கள் வரி மென்மையாக இருக்கிறது. இலக்கண பாடத்தை மீண்டுமொருமுறை பார்த்துவிட்டு பின்னர் வருகிறேன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 19, 2010 7:25 pm

மரபுப்பா பயிலரங்கில் கவிஞர்தம் உள்ளமது
உரமேற பாமடல்கள் மணம்பரப்பி மலர்கின்ற
தருணமதில் ஈகரையின் எழில்கூடும்- வான்முகிலாய்
வந்துதித்த தமிழ்நம்பியே வாழி!

......கா.ந.கல்யாணசுந்தரம்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 19, 2010 7:54 pm

கொஞ்சம் புரிகிறது ஐயா,

3 வது விதியில் கூறிய அடுத்துவரும் காய்சீர்கள் நிரையில் தொடங்கவேண்டுமென்ற விதி தவறியிருக்கிறது.
சில சீர்கள் காய்ச்சீரல்ல (தேடியுமே) இவைதான் புரிந்தது.
கவனமாக மீண்டும் பார்க்கிறேன்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Jul 20, 2010 8:56 am

காலை வணக்கம் அய்யா. தங்கள் நலன் காப்பீர்!

தங்களிடம் தமிழ்த்தேன் பருக வந்துள்ள சகோதரர்கள் கண்டு மிக ஆனந்தம் கொள்கிறேன்.

விழியாகிய மொழிபோற்றும் எமதாசான் தமிழநம்பி
தமிழென்ற அமுதூட்டி நமையிங்கு வளர்த்திடவே
வழிதிறந்து உளரேயிக்(ஈ) ரையில்.

சகோதரர் கிரி அவர்களே!

எம்மைப்போல் தமிழார்வம் உளமுழுதும் பரவியவோர்
செம்மார்ந்த தமையனுனை மனமார்ந்து வழுத்துகிறேன்
உம்மெழுத்து பொலிவுற்று சிறக்க!

அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Jul 20, 2010 8:58 am

விழியாகிய மொழிபோற்றும் எமதாசான் தமிழநம்பி
தமிழென்ற அமுதூட்டி நமையிங்கு வளர்த்திடவே
வழிதிறந்து உளரே(ஈ)க ரையில்

Sponsored content

PostSponsored content



Page 19 of 50 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 34 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக