புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 12 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 12 of 50 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 31 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jun 04, 2010 10:16 am

Yaadhumanaval wrote: ஐயா தமிழ நம்பி என் அன்பின் வணக்கம் ஏற்பீர்!
தங்கள் கரத்தால் திருத்தப் பெற்று என் இலக்கியக் குழந்தைகள் வளரத்தொடங்குகிறது குறித்து யாம் பெறும் ஆனந்ததிற்கு எல்லையொன்றில்லை.


எம்முயற்சி தொடர எம்மை ஆசித்து தொடர்ந்து எமக்குப் பயிற்றுவிப்பீர்!

இன்னும் சில முயற்சிகள் இன்றும் செய்துள்ளேன். கண்டு அதனையும் கரை சேர்ப்பீர்!

இன்னொரு வேண்டுகோள்:

பாடம் - எதுகை 2 எனக்கு சரியாகப் புரியவில்லை. , வல்லின வருக்க எதுகை, மெல்லின எதுகை, ...என்ற பகுதியை இன்னும் கொஞ்சம் விரிவாகக் கூறினீரென்றால் நான் சரியாக விளங்கிக் கொள்வேன்.


வெண்தாழிசையில் தொடரும் என் முயற்சிகள்


நாரொடும் முல்லையின் நறுமணம் போன்றே

ஏரொடும் தேரொடும் எம்மினம் வாழ்ந்ததை

யாரொடு சொல்வோம் யாம்?


----------------

தனித்து நின்று தமிழினை உண்டு

இனித்த இன்சுவை பருகிப் பருகியே

கனைத்து மகிழ்ந்தேன் யான்.

-----------------
ஐந்து விரலில் ஆர்வம் மேலிட

பைந்தமிழ் ஓசை பாட்டினில் கொடுக்க

உந்திக் கற்றேன் நான்

------------------


காதில் ஒலித்த கைவளை கழற்றி

கோதில் குறிப்பில் சிந்தையைச் செலுத்தி

தீதிலா தெழுதினேன் நான்

------------------



சொன்னது கேட்டது சொற்களாய் வந்தது

இன்னதாய் எழுதி இனிதாய்க் கற்றிட

அன்னைத் தமிழே துணை!

----------------------
தங்கள் அடுத்த பயிற்சியினை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

நலம் காப்பீர்!

அன்புகலந்த நன்றிகளுடன்,
யாதுமானவள்

பாராட்டுகிறேன்!

தயக்கமின்றி எழுதி, முதல் இரண்டு வகையையும் நன்கு எழுதப் பயின்றுவிட்டீர்கள்.

சிறு திருத்தங்கள்...
1, 5ஆம் பாடல்களில், ஈரசையில் சீர்கள் அமையுமாறு திருத்தியுள்ளதைக் கவனிக்க!
கடைசிப் பாடலில்,
கடைசிச் சீர் - மூன்றாம் அடியில் மூன்றாம் சீர்-
ஓரசைச் சீராக வரவேண்டு மென்பதற்காக, 'அதனை' என்பது 'துணை' என்று வருமாறு மாற்றப்பட்டுள்ளது.

ஓரசைச்சீர் பற்றிய பகுதியை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துக் கொள்க.
ஐயம் எழுந்தால் கேளுங்கள், விளக்குகிறேன்.


நான்காம் பாடலைக் கீழ் உள்ளவாறு திருத்தி உள்ளேன். காரணம் உங்களுக்குப் புரியும். ஐயமாயிருந்தால் கேளுங்கள்.

உணவுறக் கம்தவிர்த் தோயா தெண்ணி

கணினியின் முன்னமர்ந் தெழுதி யெழுதி


இனிதே பயந்தேன் தமிழ்.

---------------

நீங்கள் கேட்டவாறு,

எதுகை - 2 பகுதியை விளக்கிக் கூறுகிறேன்.

தொடர்ந்து பாட்டெழுதும் உங்கள் ஈடுபாட்டுக்கு நன்றி.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jun 04, 2010 10:29 am

11. எதுகை– 2 -சில விளக்கங்களுடன்!

அடிகளின் முதலெழுத்துக்கள் மாத்திரை அளவொத்து இருக்க இரண்டாமெழுத்து ஒத்து வருவது எதுகை என்று அறிந்தோம்.

அடிகளின் முதலெழுத்துக்கள் மாத்திரை அளவொத்து இருத்தல் என்றால் -

முதல் அடியின் முதல் எழுத்து குறிலாக இருந்தால், இரண்டாமடியின் முதலெழுத்தும் குறிலாக இருக்க வேண்டும்;
முதல் அடியின் முதல் எழுத்து நெடிலாக இருந்தால், இரண்டாமடியின் முதலெழுத்தும் நெடிலாக இருக்க வேண்டும்.
முதல்அடியின் முதலெழுத்தும் இரண்டாமடியின் முதலெழுத்தும் ஒன்று குறிலாகவும் மற்றொன்று நெடிலாகவும் இருந்தால் (இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தாலும்) எதுகை அமையாது.

எடுத்துக்காட்டு :

கற்றவர் ------ ----- -------
போற்றுவார் ---- ----- ------

இதில் இரண்டடியிலும் இரண்டாம் எழுத்து 'ற்' ஒன்றி வந்தது என்றாலும், முதலடியின் முதல் எழுத்து 'க' குறிலாகவும், இரண்டாம் அடியின் முதலெழுத்து 'போ' நெடிலாகவும் உள்ளதால் எதுகை அமையாது.

இனி, சில எதுகை வகைகளை எடுத்துக்காட்டுக்களுடன் பார்ப்போம் :

ற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
ற்றாள் தொழாஅர் எனின்.
- இது ஒரே எழுத்து (ற்) அடி எதுகையாக வந்துள்ளது.

( முதலடியின் முதலெழுத்து க - குறிலாக உள்ளது. இரண்டாம் அடியின் முதலெழுத்து ந -வும் குறிலாக உள்ளதைக் காண்க.)


க்கார் தகவில ரென்ப தவரவர்
ச்சத்தாற் காணப் படும்.
- இது வல்லின வருக்க எதுகை. (க், ச், ட், த், ப், ற் -வல்லின எழுத்துக்கள்)


ன்பீனும் ஆர்வம் உடைமை அதுவீனும்
ண்பென்னும் நாடாச் சிறப்பு.
- இது மெல்லின எதுகை. (ங், ஞ், ண், ந், ம், ன் - மெல்லின எழுத்துக்கள்)


ல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யாவிளக்கே விளக்கு.
- இது இடையின எதுகை. ( ய், ர், ல், வ், ழ், ள் - இடையின எழுத்துக்கள்)


நாடாது நட்டலில் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

- இது இன எதுகை ( இங்கு டகர வரிசை எதுகையாக வந்துள்ளது)
(ட, டா, டி, டீ, டு, டூ, டெ, டே, டை, டொ, டோ, டெள - டகரவரிசை எழுத்துக்கள்)

வா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்
கூகூவென்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்

இதில் இரண்டாம் எழுத்து ஒன்றவில்லை. எனினும், அதன்மேல் ஏறிய நெடில் ஒப்புமையால் நெடிலெதுகை ஆயிற்று.

மற்றும் சில எதுகைகள் உளவாயினும், அவை அத்துணைச் சிறப்புடையன அல்ல. அவற்றை அவ்வப்போது பின்னர்த் தெரிந்து கொள்ளலாம்.

ஓரளவு விளக்கம் அளித்துள்ளேன்.
எந்தப் பகுதியாவது புரியவில்லையானால், அதைக் குறிப்பிட்டால், விளக்கமளிக்கக் காத்திருக்கிறேன்.

.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jun 04, 2010 11:05 am

நன்றி ஐயா,

ஐந்து பாடல்களில் ஒன்று மட்டுமே சரியாக உள்ளது கண்டு எனக்கு கொஞ்சம் வருத்தமாக உள்ளது. தொடர்ந்து பழகி எழுதுவேன் தங்கள் ஆசியுடன்.

இந்த வெண்தாழிசை சரியா என கூறுங்கள்

ஐந்தில் நான்கும் அறுகி கைவிட
ஐந்தும் பிழையிலா தெழுதிட துணையாய்
பைந்தமி ழேயிங்கு வா!

என்றும் அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jun 04, 2010 11:19 am

தவறு தவறு..இது சரியென நினைக்கிறேன்


ஐந்தில் நான்கும் அறுகி கைவிட
ஐந்தும் பிழையிலா தழகாய் யெழுதிட
பைந்தமி ழேயிங்கு வா!

என்றும் அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jun 04, 2010 12:09 pm

Yaadhumanaval wrote:நன்றி ஐயா,

ஐந்து பாடல்களில் ஒன்று மட்டுமே சரியாக உள்ளது கண்டு எனக்கு கொஞ்சம் வருத்தமாக உள்ளது. தொடர்ந்து பழகி எழுதுவேன் தங்கள் ஆசியுடன்.

இந்த வெண்தாழிசை சரியா என கூறுங்கள்

ஐந்தில் நான்கும் அறுகி கைவிட
ஐந்தும் பிழையிலா தெழுதிட துணையாய்
பைந்தமி ழேயிங்கு வா!

என்றும் அன்புடன்
யாதுமானவள்

நீங்கள் எழுதியவை சரியே!
அவற்றுக்கு மேலும் செப்பம் தரவே சில திருத்தங்கள் எழுதினேன்.
கவலற்க.

ஐந்தில் நான்கும் அருகி கைவிட
ஐந்தும் பிழையிலா தெழுதிட துணையாய்
பைந்தமி ழேயிங்கு வா!

சரியாக உள்ளது. பாராட்டு.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jun 04, 2010 12:13 pm

Yaadhumanaval wrote:தவறு தவறு..இது சரியென நினைக்கிறேன்


ஐந்தில் நான்கும் அருகிக் கைவிட
ஐந்தும் பிழையிலா தழகா யெழுதிட
பைந்தமி ழேயிங்கு வா!

என்றும் அன்புடன்
யாதுமானவள்

உங்கள் திருத்தம் இன்னும் அழகூட்டி உள்ளது.
நீங்கள் முன்பு எழுதியதும் சரியே!

பாராட்டுகிறேன்.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Jun 05, 2010 8:37 pm

வணக்கம் ஏற்பீர்!



மிகத் தெளிவான விளக்கங்களுடன் தாங்கள் தந்த எதுகை- 2 ஆம் பாடம் நன்றாக விளங்கிக் கொண்டேன்.

இங்கு எதுகைகளமைத்து சில முயற்சிகள் செய்துள்ளேன் அதனைக் காண்க!



வல்லின எதுகையில் சில:



ப்புமை யில்லா வுயிர்மொழி தமிழினை

ச்சக மெங்கும் காண்!



ட்சரம் பிசகாமல் ஐம்புலன் பதறாமல்

க்குவ மாய்த்தமிழ் படி.



த்துணை விழுதுகள் கொண்டதவ் வாலம்(மா)

ற்றுதல் கொண்டத னால்.

(இவ் உலகில் வாழ ஆலம் மா பற்றுதல் கொண்டதினால் எத்துணை விழுதுகள் கொண்டது..... என வரவேண்டுமென நினைத்து எழுதினேன். தவறாயிருப்பின் திருத்தம் செய்வீர்)



மெல்லின எதுகையில் சில:

கொஞ்சும் கிளியாய் வந்து கொஞ்சும்

ங்கும் பரந்த மொழி



ண்ணின் நறுமண மகில முழுதும்

ன்னிய விதமாய் சொல்



வ்விருந் துபடைத் ததெங்கன மோவென

பொங்கி நான்பூரித் தேனே!



இடையின எதுகையில் சில:



ர்ப்பரித்த கடலினுட் புகுந்து நாடிய(து)

தாய்ந்தெடுத் து()வந்தேன் நான்.



ல்லும் பகலும் உழைத்துக் களைத்தும்

வ்வம் கொளாது துயில்.



கிய பண்ணொடு பழகிடும் தமிழினை

ள்ளிப் பருகிட வாரீர்.



ஐயா, மேலுள்ள என் எதுகை அமைவு முயற்சிக்குப் பின் எனக்கு ஒரு குழப்பம். இவ்வெதுகை நாற்சீர் வெண்செந்துறை, வெண்தாழிசையிலும் கொள்ளலாமா அன்றி இது போன்றே 7 சீர் கொண்ட ஈரடிப் பாடலில் மட்டும் தான் வருமா?



அன்புடன் என்றும்,

யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Jun 06, 2010 4:25 am

ஓரின எதுகையில் முயன்றது:


லையி லமர்ந்து கால்நனைத் துக்கடல்
சிலும்பும் அழகைப் பார்.

க முழுதும் கதிர்பரப் பிஅதி
லிமையா கப்பாயு மொளி

அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Jun 06, 2010 4:33 am

மெல்லின எதுகையிலேற்பட்ட பிழையுணர்ந்தேனஇது சரி

இது தவறு:

வ்விருந் துபடைத் ததெங்கன மோவென
பொங்கி நான்பூரித் தேனே!


இது சரி(?):

ன்விருந் துபடைத் ததெங்கன மோவென
பொங்கி நான்பூரித் தேனே!

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Jun 07, 2010 7:55 am

வல்லின எதுகையில் அமைத்த பாடலொன்றின் திருத்தம்

த்துணை விழுதுகள் கொண்டதவ் வாலம்மிகப்

ற்றுதல் கொண்டதி னால்

Sponsored content

PostSponsored content



Page 12 of 50 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 31 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக