புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
சிவா
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
432 Posts - 48%
heezulia
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
29 Posts - 3%
prajai
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_m10பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகள் உங்களுக்காக...தெரிந்து கொள்ளுங்கள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Mon Mar 01, 2010 8:15 pm

First topic message reminder :


  • அகத்தினழகு முகத்தில் தெரியும்
  • அம்மாவைக் குளிக்குமிடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்கவேண்டியதில்லை
  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  • அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
  • அடியாத மாடு படியாது.
  • அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்
  • அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
  • அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
  • அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
  • அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
  • அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
  • அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
  • ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
  • ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  • ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
  • ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  • ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  • ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
  • இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
  • உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
  • ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
  • எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
  • எறும்பூரக் கல்லும் தேயும்.
  • ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
  • கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
  • கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
  • கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
  • கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
  • கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
  • கழுதை அறியுமா கற்பூர வாசனை?
  • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
  • காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்
  • காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
  • காகம் திட்டி மாடு சாகாது.
  • காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
  • காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
  • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
  • குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
  • குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
  • குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
  • குரைக்கிற நாய் கடிக்காது.
  • கூட்டுற வெலக்குமாத்துக்குக் குஞ்சரம்னு பேராம்
  • கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
  • கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்து கொக்கைப் பிடிப்பதுபோல
  • கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
  • கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
  • கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
  • சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
  • சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
  • சாமியே சைக்கிள்ல போகும்போது பூசாரி கேட்டானாம் புல்லட்
  • சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
  • சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
  • சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
  • சோளியன் குடுமி சும்மா ஆடுமா?
  • தடியெடுத்தவன் தண்டக்காரன்.
  • தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
  • தன் வினை தன்னைச் சுடும்.
  • தனிமரம் தோப்பாகாது.
  • தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
  • தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
  • தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
  • தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
  • தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
  • நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
  • நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
  • நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
  • நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
  • நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
  • நிறைகுடம் தளம்பாது.
  • தாட்சண்யவான் தரித்திரவான்
  • பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
  • படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
  • பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
  • பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
  • பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
  • பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
  • பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
  • பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
  • புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
  • புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
  • பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
  • போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  • மக வாழ்ற வாழ்க்கைக்கு மாசம் பத்துக்கட்டு விலக்குமாரு
  • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
  • முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
  • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
  • முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
  • மைத்துணன் உதவி மலைபோல
  • மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
  • யானை படுத்தாலும் குதிரை மட்டம்
  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
  • வழியோடு போய் வழியோடு வந்தால் அதிகாரி சுண்டைக்காய்க்குச் சமம்
  • விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
  • விரலுக்குத் தக்கதே வீக்கம்.
  • விளையும் பயிரை முளையிலே தெரியும்.
  • வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
  • வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
  • வெளுத்ததெல்லாம் பாலல்ல.
  • வேலிக்கு ஓணான் சாட்சி.
  • வைக்கோற் போர் நாய் போல.




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 11:52 am

சு, சூ


சுக துக்கம் சுழல் சக்கரம்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
சுட்ட சட்டி அறியுமா சுவை.
சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.

சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்

சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 11:53 am

செ, சே, சை


செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.

செயவன திருந்தச் செய்.
செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.

சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
சேற்றிலே செந்தாமரை போல.

சைகை அறியாதவன் சற்றும் அறியான்.




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 11:54 am

சொ, சோ

சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
சொல் அம்போ வில் அம்போ?
சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
சொல்வல்லவனை வெல்லல் அரிது.
சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்





[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 11:57 am


தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.

தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
தருமம் தலைகாக்கும்.
தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
தலை இருக்க வால் ஆடலாமா ?
தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?

தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
தவளை தன் வாயாற் கெடும்.
தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 11:58 am



நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.

நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?

நயத்திலாகிறது பயத்திலாகாது.
நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.

நல்லது செய்து நடுவழியே போனால்,
பொல்லாதது போகிற வழியே போகிறது.
நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது
கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.





[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 11:59 am

நா

நா அசைய நாடு அசையும்.
நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.

நாய் இருக்கிற சண்டை உண்டு.
நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.
நாய் விற்ற காசு குரைக்குமா?
நாலாறு கூடினால் பாலாறு.
நாள் செய்வது நல்லார் செய்யார்.
நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.


நி, நீ

நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
நித்திய கண்டம் பூரண ஆயிசு.
நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
நித்திரை சுகம் அறியாது.
நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
நீர் மேல் எழுத்து போல்.
நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 12:01 pm

நு, நூ, நெ, நே, நை, நொ, நோ



நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
நூல் கற்றவனே மேலவன்.
நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
நூற்றைக் கொடுத்தது குறுணி.

நெய் முந்தியோ திரி முந்தியோ.
நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

நேற்று உள்ளார் இன்று இல்லை.

நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
நொறுங்கத் தின்றால் நூறு வயது.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
நோய் கொண்டார் பேய் கொண்டார்.
நோய்க்கு இடம் கொடேல்





[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 12:03 pm



பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
பக்கச் சொல் பதினாயிரம்.
பசியுள்ளவன் ருசி அறியான்.

பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.

படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
படையிருந்தால் அரணில்லை.
படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.

பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
பணம் உண்டானால் மணம் உண்டு.
பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.

பதறாத காரியம் சிதறாது.
பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.

பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 12:05 pm

பு, பூ


புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
புத்திமான் பலவான்.
புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
பூவிற்றகாசு மணக்குமா?
பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.


பெ, பே


பெண் என்றால் பேயும் இரங்கும்.
பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

பேசப் பேச மாசு அறும்.
பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
பேராசை பெருநட்டம்.
பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்

[

பொ, போ

பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.

பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
பொறுமை கடலினும் பெரிது.
பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.





[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 12:07 pm



மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.
மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
மண்டையுள்ள வரை சளி போகாது.

மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.

மவுனம் கலக நாசம்
மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
மனமுரண்டிற்கு மருந்தில்லை.

மனம் உண்டானால் இடம் உண்டு.
[ மனமுண்டால் மார்க்கம் உண்டு]
மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
மனம் போல வாழ்வு.
மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
மண்னுயிரை தன்னுயிர்போல் நினை

மா
மாடம் இடிந்தால் கூடம்.
மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.

மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
மாரடித்த கூலி மடி மேலே.

மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
மாரி யல்லது காரியம் இல்லை.
மாவுக்குத் தக்க பணியாரம்.
மாற்றானுக்கு இடங் கொடேல்.
மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.





[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக