புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
14 Posts - 70%
heezulia
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செட்டிநாட்டு வீடுகள்


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 10:41 am

செட்டிநாட்டு வீடுகள் Img_0727


எப்போதும் கோவில்கள், சரணாலயங்கள், அரண்மனைகள் பற்றியே
சொல்லிக்கொண்டிருக்கிறோமே! வித்தியாசமான எதைப் பற்றியாவது சொல்லலாம் என்று
தேடியபோது என் கண்ணில் பட்டது செட்டிநாட்டின் பாரம்பரியமிக்க கலைநயமுடன்
கூடிய வீடுகள். சரி! இன்று சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்
அமைந்திருக்கும் செட்டிநாட்டின் பெருமையைக் கூறும் வீடுகளை பற்றி
பார்க்கலாம்.

நாட்டுக்கோட்டை நகரத்தார்களே செட்டியார்கள் எனப்படுவர். அவர்கள் கட்டிய
வீடுகளே இன்று சிவகங்கை மாவட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த
செட்டிநாட்டு வீடுகள் பெரும்பாலும் பர்மா தேக்குகளாலும், ஆத்தங்குடி
கற்களாலும் கட்டப்பட்டவை. இவர்கள் பர்மாவில் வணிகம் செய்துவந்த
காரணத்தால் பர்மாவில் இருந்து தேக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு
கட்டப்பட்டவை. இந்த வீடுகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே
கட்டபட்டவை. இப்போதெல்லாம் இந்த வீடுகளை போல கட்ட நினைத்தால்
கோடிக்கணக்கில் செலவாகும். அந்தக் கால்த்தில் சில ஆயிரம் ரூபாய் செலவில்
கட்டி முடித்துவிட்டார்கள் நகரத்தார்கள், இன்று இந்த வீடுகளின் மதிப்பு
கோடிகளில்.....

இந்த வீடுகளின் அமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இவை அனைத்தும்
செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. நீங்கள் வீட்டின் முன் கதவில் நின்று
பார்த்தால் வீட்டின் கடைசிவரை தெரியும். சில வீடுகளின் முன் வாசல் ஒரு
தெருவில் இருக்கும் பின் வாசல் இன்னொரு தெருவில் இருக்கும். புரியும்
படியாக சொல்லவேண்டும் என்றால் parallel streets இன் நடுவே இந்த வீடுகள்
அமைந்திருக்கும்.
செட்டிநாட்டு வீடுகள் DSC02452
வீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இந்தக்
காலத்துக்கேற்ப சொல்லவேண்டும் என்றால் திண்ணை = வரவேற்பரை. இருபுறத்திலும்
உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில்
கணக்குப்பிள்ளையின் அறை, வீட்டிற்கு முன்னால் கேணிகள் ,திண்ணையின் அருகே
கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த
கட்டிடமாக விளங்குகின்றன இந்த வீடுக்ள்.
இந்த கதவுகளிலின் மேற்புறத்தில் பெரும்பாலும் லஷ்மியின் உருவம் அல்லது
கும்பம் போன்றவை பதிக்கப்பட்டிருக்கும். இந்த கதவை தாண்டிச் சென்றால்
வெட்டவெளியான இடம் இருக்கும். இந்த இடத்தைச் சுற்றிலும் பல அறைகள்
இருக்கும். இந்த அறைகளை தனது பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தவுடன் பரிசாக
கொடுத்துவிடுவார்கள். இப்போது வீட்டையே பரிசாக கொடுக்கின்றனர். இதையும்
தாண்டிச் சென்றால் இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது - உணவு உண்ணும்
அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டு மற்றும் நாலாம் கட்டும் அதற்கு
பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள்
ஒய்வெடுப்பதற்காக பயன்படுத்தபடுகிறது. நாலாம் கட்டு - சமையலறை.
தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும். அதாம்பா க்ரைண்டர். பல
வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக்கும். மாடி முழுவதும் அறைகள் இருக்கும்.
சாமான்களை சேமிப்பதற்காக! வீடு முழுவதும் சன்னல்களும் தூண்களும்
நிறைந்திருக்கும்.


jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Thu Feb 25, 2010 11:05 am

அருமையானதகவல்

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Feb 25, 2010 11:11 am

செட்டிநாட்டு வீடுகள் 677196 செட்டிநாட்டு வீடுகள் 677196 செட்டிநாட்டு வீடுகள் 677196 செட்டிநாட்டு வீடுகள் 677196 செட்டிநாட்டு வீடுகள் 677196
செட்டிநாட்டு வீடுகள் 154550செட்டிநாட்டு வீடுகள் 154550செட்டிநாட்டு வீடுகள் 154550செட்டிநாட்டு வீடுகள் 154550செட்டிநாட்டு வீடுகள் 154550செட்டிநாட்டு வீடுகள் 154550செட்டிநாட்டு வீடுகள் 154550செட்டிநாட்டு வீடுகள் 154550செட்டிநாட்டு வீடுகள் 154550செட்டிநாட்டு வீடுகள் 154550செட்டிநாட்டு வீடுகள் 154550செட்டிநாட்டு வீடுகள் 154550செட்டிநாட்டு வீடுகள் 154550
அருமையானதகவல்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 11:51 am

செட்டிநாட்டு
வீடுகள்





செட்டிநாட்டு வீடுகள் Chettinad+4*****************************************************************
Star
Posting செட்டிநாட்டு வீடுகள்

செட்டிநாட்டு வீடுகள் - உங்கள்
பார்வைக்காக!

செட்டிநாட்டிலுள்ள வீடுகள் எல்லாம் 1875ஆம் ஆண்டு
முதல்
1950ஆம் ஆண்டு வரை கட்டப்பெற்றதாகும்
இது ஒரு உத்தேசமான கால அளவுதான்

அந்தக்
காலத்தில் செட்டி நாட்டு மக்கள், தங்கள் பகுதி,
வறண்ட, வானம் பார்த்த
பகுதி என்பதால், துணிந்து கடல்
தாண்டிச் சென்று வணிகம் செய்தார்கள்.

பர்மா,
மலேயா, தாய்லாந்து, சிங்கப்பூர், வீயட்நாம்,
ஸ்ரீலங்கா என்று போகாத
நாடுகளே இல்லை.
போகும்போது முருகனையும் வழித்துணைக்காகக்
கூட்டிக்
கொண்டு போனார்கள்.

சென்ற இடங்களில் எல்லாம் பொருள் ஈட்டியதோடு
தங்களோடு
கூட்டிக் கொண்டுபோன முருகனுக்கு
பல நாடுகளில் பல இடங்களில் கோயில்
கட்டினார்கள்

அங்கே ஈட்டிக் பொருளை (பணத்தை) இங்கே கொண்டு
வந்து
தங்களுடைய கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்காகப்
பெரிய பெரிய வீடுகளைக்
கட்டினார்கள்.

அதெல்லாம் ஒரு காலம்!

இப்போது அங்கே யாரும்
பெரிய வீடுகளைக்
கட்டுவதில்லை.

கூட்டுக்குடும்பங்கள் எல்லாம்
இப்போது ஏது?
எல்லாம் தனித்தனிக் குடும்பங்கள் (Micro families)
ஆகிவிட்டன!

அதோடு
அங்கே இப்போது 90% மக்கள் இல்லை.
அவ்வப்போது போய் வருகிறதோடு சரி!

வியாபாரம்,
வேலை வாய்ப்பு காரணமாக சென்னை, கோவை,
பெங்களூர், திருச்சி, மதுரை போன்ற
இன்னபிற நகரங்களில்
அனைவரும் குடியேறி விட்டார்கள்

அந்தப்
பகுதியில் உள்ள நகரங்கள் 3 (மூன்று); கிராமங்கள் 72

எல்லா வீடுகளுமே
80அடி முதல் 120 அடிவரை அகலமும்,
160 அடி முதல் 240 அடிவரை நீளமும்
கொண்டவையாக இருக்கும்

வீடுகள் எல்லாம் பர்மாவிலிருந்து கொண்டு
வரப்பட்ட தேக்கு
மரங்களால் இழைத்துக் கட்டப்பெற்றவையாகும். அதுவும்
Transport
facility, Crane, fork lift, Poclain போன்ற இயந்திர வசதிகள்
இல்லாத
காலத்தில் (அதைக் கவனத்தில் கொள்க)

கோவில்களுக்கு ஸ்தபதி
என்னும் சிற்பிகள் இருப்பது போல, அந்தக்
காலத்தில் இது போன்ற
பிரம்மாண்டமான வீடுகளைக் கட்டித்தரும்
கலைஞர்களும் இருந்திருக்கிறார்கள்

Engineer
அல்லது Architect படிப்பெல்லாம் இல்லாத காலத்தில் வாழ்ந்த
பாமரர்கள்
அவர்கள். ஆனால் திறமைசாலிகள். அனுபவசாலிகள்.

1920ஆம் ஆண்டில்,
கொத்தனார் ஒருவரின் தினசரிச் சம்பளம் நான்கு
அணா அதாவது 25 காசுகள்.
சித்தாளுக்கு அதில் பாதிதான் சம்பளம்.

அன்றைய தேதியில் 100 கிலோ
அரிசி மூட்டையின் விலை வெறும்
எட்டு ருபாய்தான்

ஒரு பவுன்
தங்கத்தின் விலை (அதாவது 8 கிராம் தங்கத்தின் விலை)
வெறும் 13
(பதிமூன்று) ரூபாய்தான்.

நம்பமுடிகிறதா
உங்களால்?


கடவுளையே காட்டினால்தான் நமக்கு இறை நம்பிக்கை
வரும். அந்த மாதிரியான
டகால்டியான காலத்தில் இருப்பவர்கள் நாம்

வாத்தியார்
சொல்வதை - சான்றுகளுடன் சொல்ல வேண்டாமா?

கீழே சான்று
கொடுத்திருக்கிறேன்

See this sight for
the price of gold between the year 1900 - 2000


செட்டிநாட்டு வீடுகள் Gold
=====================================================

ஒரு
வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை காலம் பிடித்திருக்கிறது

இந்திய
சுதந்திரத்திற்கு முன்பு சுமார் 8,000 வீடுகள் இருந்தனவாம்.
இப்போது
சுமார் 6,000 வீடுகள் உள்ளன. அதில் மிகவும் கலையம்சமான
வீடுகள் 500
அல்லது 600 வீடுகள் இருக்கலாம்

பராமரிக்கப் படாமல் சிதிலமான வீடுகள்
அனேகம். அவற்றில் இருந்த
மரத் தூண்களும், மரச் சாமான்களும்,
ரவிவர்மாவின் ஓவியங்களும்,
லண்டன் லாந்தர், மற்றும் சாண்ட்லியர்
விளக்குகளும், மற்றும் பல
அரிய கலைப் பொருட்களும் இன்று
இந்தியாவெங்கும் உள்ள ஸ்டார்
ஹோட்டல்களில் வியாபித்திருக்கின்றன அல்லது
வெளி மாநிலங்களில்
உள்ள பெரும் பணக்காரர்கள் வாங்கிக் கொண்டு
போயிருக்கிறார்கள்.

காரைக்குடி சென்று பார்த்தீர்கள் என்றால்
உங்களுக்கும் கிடைக்கும்

தேவகோட்டையில் உள்ள எங்கள் வீடு 1895ஆம்
ஆண்டு கட்டப்பெற்றது
அதாவது வீட்டின் வயது 113 முடிந்து 114
நடக்கின்றது.

இன்றுவரை நாங்கள் - அதாவது நானும் எனது சகோதரர்களும்
சேர்ந்து
அதைப் பராமரித்து வருகின்றோம். (கூடப் பிறந்தவர்கள்,
சித்தப்பா, பெரியப்பா
மகன்கள் என்று மொத்தம் பதினைந்து பேர்கள் சாமி)
சமீபத்தில் சும்மா
பெயிண்ட்டு மற்றும் வார்னீஷ் அடித்தற்கே லட்ச ருபாய்
செலவாகி விட்டது.

எஙகள் வீட்டின் அகலம் 80 அடி நீளம் 200 அடி.
கட்டடம் (Built Up area)
தரைத்தளம், முதல் தளம் இரண்டையும் சேர்த்து
மொத்தம் 20,000 சதுர அடிகள்

அந்தக்காலத்தில் மர வேலைப்பாடுகளைச்
செய்யக் கலைஞர்கள் இருந்தார்கள்.
வேலையில் ஒன்றிப் போகும் தன்மை
இருந்தது. இப்போது இரண்டுமே இல்லை!.

அதுதான் வருந்த வேண்டிய செய்தி!

தொழில்
நுட்பம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின்
செயல் திறன்
சோம்பித் தளர்ச்சி கண்டுள்ளது.

வாய்ப்புக் கிடைக்கும் போது ஒருமுறை
சென்று இரண்டொரு வீடுகளையாவது
பார்த்து வாருங்கள். பிரிவோம் சந்திப்போம்
படத்தில் வருகின்ற வீடு ஏராளமான
படங்களில் வந்திருக்கிறது. அந்த
வீட்டின் உரிமையாளர் எனது நண்பர்தான்
அந்த வீடு காரைக்குடியில் இருந்து
22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொத்த
மங்கலத்தில் உள்ளது.

அதுபோல
சில வீடுகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது.

உங்கள்
பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்க்க இங்கே
சொடுக்குங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------
படங்களில்
உள்ள வீடுகள் ஒரே வீடுகள் அல்ல!
மாதிரிக்காக எனது கணினிக்
கோப்பிலிருந்த படங்களில் சிலவற்றை
எடுத்துப் பதிவிட்டிருக்கிறேன்
=====================================


செட்டிநாட்டு வீடுகள் Chettinad+1முகப்புப் பகுதி


செட்டிநாட்டு வீடுகள் Chettinad+2வெளித் தோற்றம்


செட்டிநாட்டு வீடுகள் Chettinad+3Side Entrance and way to out house


செட்டிநாட்டு வீடுகள் Chettinad+4முற்றம்


செட்டிநாட்டு வீடுகள் Posting+16வெளித் தோற்றம்


செட்டிநாட்டு வீடுகள் Posting+17ஆரம்ப கால வீடுகளில் ஒன்று



செட்டிநாட்டு வீடுகள் Posting+19முற்றத்தில் இருந்து மேல் மாடியின்
தோற்றம்



செட்டிநாட்டு வீடுகள் Posting+20வான் வெளித் தோற்றம்


செட்டிநாட்டு வீடுகள் Posting+11முற்றம்


செட்டிநாட்டு வீடுகள் Posting+12முன் பகுதியின் தோற்றம்


செட்டிநாட்டு வீடுகள் Posting+13முதல் தளம்


செட்டிநாட்டு வீடுகள் Posting+14முன் பகுதித் தோற்றம்


செட்டிநாட்டு வீடுகள் Posting+15படுக்கை அறை


செட்டிநாட்டு வீடுகள் Posting+5வீட்டின் முன்புறம் சின்ன அலுவலகம்


செட்டிநாட்டு வீடுகள் Posting+6சுற்றுப் பத்தி


செட்டிநாட்டு வீடுகள் Posting+7வீட்டின் முன் பகுதிச் சுவரில் உள்ள கலை
வேலைப் பாடுகள்



செட்டிநாட்டு வீடுகள் Posting+8முற்றம்


செட்டிநாட்டு வீடுகள் Posting+10உட்புறம் அரங்கு




செட்டிநாட்டு வீடுகள் Posting+1பெட்டக சாலை & வளவுப் பகுதி


செட்டிநாட்டு வீடுகள் Posting+2முற்றம்


செட்டிநாட்டு வீடுகள் Posting+3சுற்றுப் பத்தியில் உள்ள அறைகளின்
தோற்றம்



செட்டிநாட்டு வீடுகள் Posting+4

நன்றி
http://devakottai.blogspot.com/


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 25, 2010 11:53 am

என் மாமியார் காலத்துல பொன்னமராவதில 1000 ஜன்னல் வீடு இருந்துச்சாம்.அந்தளவுக்கு பிரமாண்ட வீடுகள் இன்னிக்கும் செட்டிநாட்டுல உண்டு.
செட்டிநாடு வீடுகள் நேர்த்தியானது மட்டும் இல்லை நிர்மல்.அவங்க வீடுகள்ல‌
மழை சேமிப்புக்குன்னு ஒரு இடம் இருக்கும்.இன்னிக்கும் கூட இருக்கு.பெரும்பாலும் செட்டிநாடு வீடுகளில் மழை நீரை சேமிச்சு வச்சு சமைக்க பயன்படுத்துவாங்களாம்.ஏன்னா ஆத்து தண்ணி,குளத்து தண்ணி எல்லாம் பல பேர் பயன் படுத்தி இருப்பாங்க இல்ல.வீடு மட்டும் இல்லை அவங்க கல்யாணம் பண்றத பார்த்தா நாம மிரண்டு போய்டுவோம்.அந்த அளவுக்கு பிரமாண்டமா இருக்கும்.



செட்டிநாட்டு வீடுகள் Uசெட்டிநாட்டு வீடுகள் Dசெட்டிநாட்டு வீடுகள் Aசெட்டிநாட்டு வீடுகள் Yசெட்டிநாட்டு வீடுகள் Aசெட்டிநாட்டு வீடுகள் Sசெட்டிநாட்டு வீடுகள் Uசெட்டிநாட்டு வீடுகள் Dசெட்டிநாட்டு வீடுகள் Hசெட்டிநாட்டு வீடுகள் A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Feb 25, 2010 11:54 am

செட்டிநாட்டு வீடுகள் 677196 செட்டிநாட்டு வீடுகள் 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 11:56 am

உதயசுதா wrote:என் மாமியார் காலத்துல பொன்னமராவதில 1000 ஜன்னல் வீடு இருந்துச்சாம்.அந்தளவுக்கு பிரமாண்ட வீடுகள் இன்னிக்கும் செட்டிநாட்டுல உண்டு.
செட்டிநாடு வீடுகள் நேர்த்தியானது மட்டும் இல்லை நிர்மல்.அவங்க வீடுகள்ல‌
மழை சேமிப்புக்குன்னு ஒரு இடம் இருக்கும்.இன்னிக்கும் கூட இருக்கு.பெரும்பாலும் செட்டிநாடு வீடுகளில் மழை நீரை சேமிச்சு வச்சு சமைக்க பயன்படுத்துவாங்களாம்.ஏன்னா ஆத்து தண்ணி,குளத்து தண்ணி எல்லாம் பல பேர் பயன் படுத்தி இருப்பாங்க இல்ல.வீடு மட்டும் இல்லை அவங்க கல்யாணம் பண்றத பார்த்தா நாம மிரண்டு போய்டுவோம்.அந்த அளவுக்கு பிரமாண்டமா இருக்கும்.

கேள்விபட்டிருக்கேன் சுதா.
இன்னும் செவ்வாய் தான் ஈகரைக்கு வருவேன். ஊருக்கு போறேன் செட்டிநாட்டு வீடுகள் 68516 செட்டிநாட்டு வீடுகள் 68516

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Apr 10, 2011 5:28 pm

:நல்வரவு:

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக