புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
21 Posts - 70%
heezulia
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
1 Post - 3%
viyasan
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
213 Posts - 42%
heezulia
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
21 Posts - 4%
prajai
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
7 Posts - 1%
mruthun
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கறை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 23, 2010 12:47 am

அக்கறை Scan0009

மாதவனை இறக்கி விட்டு பஸ் புறப்பட்டுச் சென்றது. புழுதி அடங்கியதும் அவன் கண்ணில் பட்டது அந்த டீக்கடை. கசாப்பு வெட்டுபவன் போல் பெரிய மீசையுடன், தாட்டிகமான ஒரு ஆள் டீ ஆற்றிக்கொண்டிருந்தான். அருகே சென்ற மாதவன் தயங்கிக் கேட்டான்.

மணமங்கலம் பள்ளிக்கூடத்திற்கு எப்படிப் போகணும்?''

இப்படி நேராப் போய் வலது கைப்பக்கம் திரும்பினா கோயில். அதுக்கு நேர் எதிர்லதான் ஸ்கூல்!'' அவனின் தோற்றம் கொடூரமாயிருந்தது, என்றால் குரலோ கர்ண கடூரம்.

நன்றி சொல்லிவிட்டு மாதவன் நடந்தான். பள்ளி வந்தது. புதிய ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டான். மொத்தம் மூன்று ஆசிரியர்களைக் கொண்ட கிராமப்புற தொடக்கப்பள்ளி அது. முதல் நாளே நான்காம் வகுப்பைக் கொடுத்தார் தலைமை ஆசிரியர்.

வகுப்பினுள் நுழைந்ததுமே எல்லா மாணவர்களும் எழுந்து நின்றனர். ஒருவன் மட்டும் சர்வ அலட்சியமாக கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். கடைக் கண்ணால் அவனை கவனித்த மாதவன், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லோரையும் அமரச் சொன்னான்.

தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அட்டென்டன்ஸ் எடுத்தான். ஒவ்வொருவராக தனிப்பட்ட முறையில் விசாரித்தான். கேள்விகள் கேட்டான். எழுதச் சொன்னான்.

எல்லா மாணவர்களும் சொன்னதைச் செய்தனர். அந்த ஒருவனைத் தவிர. அவன் எதற்கும் அலட்டிக் கொள்ள வில்லை. அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் அலட்சியமும் திமிரும் வெளிப்பட்டன. முறைத்துப் பார்ப்பான். அலட்சியமாக தலை கோதிக் கொள்ளுவான். காலை ஆட்டிக் கொண்டு உட்காருவான்.

பார்க்கப் பார்க்க பற்றிக் கொண்டு வந்தது. முதல் நாள் அடிக்க வேண்டாம் என்று சகித்துக் கொண்டான்.

அவனது பொறுமையும் எல்லை மீறும் சம்பவம் மறுநாள் மதியம் நடந்தது. வகுப்பறையிலேயே, மற்ற மாணவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க, சிகரெட்டை இழுத்து புகையை மூக்கு வழியாய் விட்டுக் கொண்டிருந்தான்.

மாதவனுக்கு தாங்க முடியவில்லை. முதுகில் நாலு சாத்து சாத்தினான். அப்போதும் அவன் கலங்கவில்லை. மாதவனை ஒருமுறை முறைத்து விட்டு, ``என்னையா அடிச்ச, மவனே! இரு எங்க அப்பனை அழைச்சு வந்து உன்னை வகுந்துடறேன் வகுந்து! யாருன்னு நினைச்ச?'' என்று வேகமாய் ஓடினான்.

நான்காம் வகுப்பு படிக்கும் பத்து வயது பையன் பேசும் பேச்சா இது?'' என மாதவன் விக்கித்து நிற்கும் போதே தலைமை ஆசிரியர் வந்து விட்டார். நடந்ததைக் கேட்டார். பின் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

என்ன காரியம் பண்ணினீங்க? வந்ததும் வம்பை விலை குடுத்து வாங்கிட்டீங்களே? அவன் அப்பன் யாரு தெரியுமா? சரியான ரவுடி. கொலைகாரன், படிக்காதவன். முரடன். ஆ, ஊன்னா வெட்டு குத்து தான். அதுவும் இந்த தறுதலை, அவனுக்கு ஒரே பிள்ளை. என்ன ரகளை ஆகப் போகுதோ தெரியலையே! நாங்க யாரும் அந்த பையனை ஒன்றும் கண்டுக்கவே மாட்டோம்; கண்டிக்கவும் மாட்டோம், எதற்கு வம்பு? இப்பப்பாருங்க பெரிய அவஸ்தையில் மாட்டிக்கிட்டீங்க! வந்த மறுநாளே, தேவைதானா இது? அட ஈஸ்வரா!'' தலைமை ஆசிரியர் சொல்லச் சொல்ல, மாதவனுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அந்த பையன் தன் தகப்பனைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டான். பையனின் தந்தையைப் பார்த்ததும் மாதவனுக்கு மீதி உயிரும் போய் விடும் போல் இருந்தது. நேற்று டீக்கடையில் பார்த்த அதே முரட்டு மீசைக்காரன்.

யார் எம்புள்ளையை அடிச்சது?'' என்றான் இடியாய். குரலில் இந்த கர்ண கடூரம் அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியை தயார்நிலையில் வைத்திருந்தது

நான்தான். புதுசு. ஏதோ தெரியாமல்...'' என்றான் மாதவன், பூனைக்குட்டியாய் பம்மியபடி.

சபாஷ் சார். நான்தான் படிக்காத முட்டாள். அடி, உதை, வெட்டு, கொலைன்னு போயிட்டேன். நாலு எழுத்து படிச்சிருந்தா, நல்ல புத்தி வந்திருக்கும். அல்லது புத்தி சொல்ல ஆளாவது இருந்திருக்கும். எதுவும் இல்லாம நான் தான் வீணாப் போயிட்டேன்.அதுனாலதான் இவனையாச்சும் படிக்க வைக்கணும்னு பள்ளிக்கு அனுப்பினேன். ஆனா கொலை

காரன் பிள்ளைன்னு, என் மேல் உள்ள பயத்துனால இவனை யாரும் கண்டிக்கறது இல்லை. என்னை மாதிரி இவன் ஆகப்படாது சார். நல்லா சவட்டி எடுங்க; படிக்கணும், முன்னுக்கு வரணும். சொல் பேச்சு கேக்கலைன்னா, தோலை உரிங்க! ஏன்னு கேட்டு நான் வர மாட்டேன். இவனையாச்சும் ஒரு மனுஷனா ஆக்குங்க சார். கேளுடா மன்னிப்பு சார்ட்ட, விழுடா அவுங்க கால்ல!'' என்று பிள்ளையை எட்டித் தள்ளினான்.

தன் காலில் விழுந்த புது மாணவனை தட்டிக் கொடுத்து அணைத்துக் கொண்டான் மாதவன்.

***
நடராஜன்




அக்கறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 23, 2010 12:59 am

அக்கறை 677196 அக்கறை 677196 அக்கறை 677196




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 23, 2010 2:25 am

அனுபவமா அண்னே..





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக