புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! Poll_c10வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! Poll_m10வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! Poll_c10 
5 Posts - 63%
heezulia
வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! Poll_c10வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! Poll_m10வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! Poll_c10வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! Poll_m10வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!!


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 9:53 am

தண்ணீர் ஏன் அழுக்கடைவதில்லை? ஏனென்றால் அது ஓடிக்கொண்டே இருப்பதால்.
தன்ணீர் ஏன் அழுகிப் போவதில்லை? ஏனென்றால் அது ஓடிக் கொண்டிருப்பதால் நீர்
ஆறாக ஒடி, நதியாகி, கடலாகி பிறகு பெரிய சமுத்திரமாக எப்படி மாறுகிறது? அது
ஓடிக் கொண்டே இருப்பதால். அதனால் மனிதனே நீ தேங்கி நிற்காதே. ஓடிக்கொண்டே
இரு. முன்னேறிக் கொண்டே இரு.

பொதுவாக இன்றைய இளைஞர்களிடம்
காணப்படும் மிக மோசமான குணம் என்ன வென்றால் சீக்கிரம்
மனத்தளர்ச்சியடைந்துவிடுவது தான். தன்னம்பிக்கையுடன் போராடுவதில் சில
சமயம் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது.. வாழ்வு என்பது ஏதோ
வந்ததைப் பெற்றுக் கொள்வதல்ல. வாழ்வு நீரோட்டமல்ல வாழ்வு எதிர்நீச்சல்.
அது ஒரு போராட்டம். வாழ்வு ஒரு துடிப்பு. அடங்கி ஒடுங்கி அமிழ்ந்து
போவதல்ல தாங்கள் செய்யும் வேலையில் தான் வேலைபளு, மன அழுத்தம் அதிகமாக
உள்ளது என்று கூறிக் கொள்ளும் இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டியது நிறைய
உள்ளது. எதில் தான் இல்லை கஷ்டம். துப்புரவு தொழிலாளி முதல் குளிர்சாதனம்
பொருத்தப்பட்ட அறையில் வேலை செய்யும் பெரிய அதிகாரி வரை அவரவர் தொழிலில்
கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. அதை நாம் எடுத்துக் கொள்ளும்
விதத்தில்தான் உளளது.

உண்மையான மகிழ்ச்சி என்பது வெற்றியில் இல்லை.
அதைப் பெறுவதற்காக நாம் மேற்கொள்ளு கின்ற கடின உழைப்பிலேயே உள்ளது
என்கிறார் பெர்னாட்ஷா. சிரத்தை இல்லாமல் எதையும் அடைய முடியாது. ஓர்
இந்தியன் இரண்டு ஜப்பானியனின் மூளைபலம் கொண்டவன். ஆனால் இரண்டு
இந்தியர்களின் வேலையை ஒரு ஜப்பானியன் செய்து வருகிறான் என்று
ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகிறார். காரணம் என்னவென்றால் இந்தியர்களிடம்
சிரத்தையோடு வேலை செய்யும் மனப்பக்குவம் இல்லாமலிருப்பதே என்றும்
கண்டறிந்தார். தன்மீது நம்பிக்கையும் தான் செய்யப் போகிறகாரியத்தின் மீது
உண்மையான ஆர்வமும் இல்லாததுதான் சிரத்தை இல்லாமல் போவதன் காரணம் ஆகும்.
வெளியில் இருந்து உனக்குள் திணிக்கப்படும் எந்த உந்துதலும் உண்மையான
ஆர்வமாக மாறமுடியாது. உன் ஆர்வமும் நம்பிக்கையும் உனக்குள்ளே இருந்து வர
வேண்டும்.

வாழ்க்கையில் நமக்கு துன்பங்கள் வருவது அவற்றைநாம்
அனுபவிப்பதற்காக அல்ல. அரிசிக்குப் பாதுகாப்பாக உமி இருப்பது போல,
பலாப்பழத்துக்குப் பாதுகாப்பாக அதன் தோல் இருப்பது போல, ரோஜா பூவுக்குப்
பாதுகாப்பாக முள் இருப்பது போல நாம் அடையக் கூடிய இன்பங்களுக்கு
பாதுகாப்பாக இறைவன் துன்பங்களை அமைத்து வைத்திருக்கிறான். இன்று,
தற்கொலைகள் அதிகமாகி வருவதற்கு காரணம் தனக்கு வரும் துன்பம்தான் உலகிலேயே
பெரியது என்று தாங்களாகவே முடிவு செய்து கொண்டு அவசர அவசரமாக உயிரை
மாய்த்துக் கொள்கிறார்கள். “தம்மிலும் கீழோரை நோக்குக” என்றவரிகளை ஏனோ
மறந்து விடுகிறார்கள்.

தேர்வில் தோல்வி என்றால் தற்கொலை. காதலில்
தோல்வி-அது வெறும் இனக்கவர்ச்சி யாக கூட இருக்கலாம். இவர்களாகவே அதை
தெய்வீகக் காதலாக நினைத்துக் கொண்டு அந்த மாயையிலிருந்து விடுபடாமல்
இறைவன் கொடுத்த அற்புதமான மானிடப் பிறவியை அற்பக் காரணங்களுக்காக
மாய்த்துக் கொள்கிறார்கள். என்னே! இவர்களின் பரிதாப நிலை! மகிழ்ச்சியைத்
தேடி அலையக்கூடாது. துன்பத்தைக் கண்டு ஓடக் கூடாது. இந்த மனப்பான்மையை
வளர்த்துக் கொண்டாலே நிம்மதியான வாழ்வு நிலைத்து நிற்கும்.

தள்ளி
நின்று பார்க்கும் வரை எல்லாமே பிரச்சனைதான். துணிந்து நெருங்கினால் அது
உன் நண்பனாகக் கூட மாறிவிடும். “நான் எதை மேற்கொண்டேனோ அதில் வெற்றி
பெற்றேன்”, காரணம் அதை நான் மனப்பூர்வமாக விரும்பினேன், என்றான் மாவீரன்
நெப்போலியன். அவனது வளர்ச்சிக்கு அவனது ஈடுபாடே காரணமாக அமைந்திருந்தது.
இது வரைதான் என்னால் முடியும். இதற்கு மேல் என்னால் முடியாது என்று மனதை
மட்டப்படுத்தி வைத்திருப்பதை விட்டுவிடுங்கள். “வானமே எல்லை” என்று
யாராவது சொன்னால், “வானந்தானா எல்லை? என்றகேள்வி கேளுங்கள்.

ஒரே
சிந்தையில் ஒரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அந்த வேலையின்
தரம் சற்றுக் குறைய நேரிடலாம். அதனால் உங்கள் மனதை கொஞ்சம் வேறு
மகிழ்ச்சியான நிலைக்கு மாற்றுங்கள். அதாவது நல்ல இசையைக் கேட்பது, நல்ல
புத்தகங்களைப் படிப்பது, கொஞ்சம் காலாற எங்கேனும் நடந்துவிட்டு வருவது
போன்றவை. “Learn to Combine relaxation with activity” என்று கூறுகிறார்
ஆல்டஸ் என்ற அறிஞர்.

வாழ்க்கை என்பது வாழ்ந்து தீர வேண்டிய ஒரு
வி‘யம். அதை இப்படித்தான் வாழணும் என்று மனதில் ஒரு வரைமுறையை, நியதியை,
சில கொள்கைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு வாழ வேண்டுமே தவிர கற்பனையாக
மனதில் சஞ்சாரம் செய்வதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. அந்த கற்பனை நடைமுறைக்கு
வராதபோது, மனம் ஏமாற்றம் அடைந்து, அதை தோல்வியாக எடுத்துக் கொள்கிறது.

தன்
மீது எறியப்படும் கற்களை தான் கட்டும் வீட்டுக்கு அடிக்கல்லாகப்
பயன்படுத்திக் கொள்கிறவன் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருப்பான்.
வாழ்க்கை சிலருக்கு இனிமையாக இருப்பதற்கு காரணம் அவர்களது அணுகுமுறையும்
சூழ்நிலைகளும் தான். சூழ்நிலைகளை நாம் குறைகூறமுடியாது. அணுகுமுறை தவறாக
இருக்கலாம்.

நாம் வாழ்க்கையை நேசிக்கப் பழக வேண்டும். அதற்கு
முதலில் உங்களையே நீங்கள் நேசிக்கப் பழக வேண்டும். உங்களை நீங்கள்
நேசிக்கப் பழகினால் உலகம் உங்களுக்கு இனிமையானதாக காட்சியளிக்கும்.
அப்பொழுது நீங்கள் எல்லாவற்றையும் ரசிக்க ஆரம்பிப்பீர்கள். உங்களைச்
சுற்றி இருக்கும் எல்லாமே உங்களுக்கு ஒரு கவிதையாக தோன்றும்.

துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்
துணிவால் துன்பங்களை தூளாக்க வேண்டும்
உபத்திரவங்கள் வந்து கொண்டே இருக்கும்
உழைப்பால் அவைகளை உதைத்து தள்ள வேண்டும்
மனக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்
மதி நுட்பத்தால் அவைகளை மடக்கித்தள்ள வேண்டும்
பணக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்
படாதபாடு பட்டு பணக்கஷ்டத்தை துரத்தி அடிக்க வேண்டும்.


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Feb 09, 2010 9:54 am

துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்
துணிவால் துன்பங்களை தூளாக்க வேண்டும்
உபத்திரவங்கள் வந்து கொண்டே இருக்கும்
உழைப்பால் அவைகளை உதைத்து தள்ள வேண்டும்
மனக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்
மதி நுட்பத்தால் அவைகளை மடக்கித்தள்ள வேண்டும்
பணக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்
படாதபாடு பட்டு பணக்கஷ்டத்தை துரத்தி அடிக்க வேண்டும்.




வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! 677196 வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! 677196 வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! 677196 வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 10:05 am

வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! 678642 வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! 678642 வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! 154550

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Feb 09, 2010 10:20 am

துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்
துணிவால் துன்பங்களை தூளாக்க வேண்டும்
உபத்திரவங்கள் வந்து கொண்டே இருக்கும்
உழைப்பால் அவைகளை உதைத்து தள்ள வேண்டும்
மனக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்
மதி நுட்பத்தால் அவைகளை மடக்கித்தள்ள வேண்டும்
பணக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்
படாதபாடு பட்டு பணக்கஷ்டத்தை துரத்தி அடிக்க வேண்டும்.

மகிழ்ச்சி



mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 09, 2010 10:21 am

ஐயோ நீங்க எங்கயோ போய்ட்டிங்கோ

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 10:34 am

நன்றி விஜி, தாஸ் வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!!!!!! 678642

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Feb 09, 2010 10:36 am

mohan-தாஸ் wrote:ஐயோ நீங்க எங்கயோ போய்ட்டிங்கோ

யாரு??



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக