புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_m10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_m10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_m10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_m10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10 
285 Posts - 45%
heezulia
சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_m10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_m10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_m10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_m10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10 
20 Posts - 3%
prajai
சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_m10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_m10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_m10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_m10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10 
7 Posts - 1%
mruthun
சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_m10சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 07, 2010 5:15 am

"நம் பிள்ளைகளுக்குப்
பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா
மீசை முளைக்க வைத்து விட்டது.
இந்த அழுக்குத் திரை
சலவை செய்யப்படுமா?
இல்லையெனில்...
மக்களைச் சுருள வைக்கும்
திரைப்பட சுருளையெல்லாம்
ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்'
- வைரமுத்து


கவியரசின்
வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், "அனைத்து குற்றங்களுக்கும் காரணம்
சினிமா' என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி. தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில்,
சாட்டையை சுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில்
விழவில்லை போலும்; இல்லையென்றால் கிளம்பியிருப்பர், கண்டனக் கூட்டமொன்று
நடத்த. திரைப்படம் என்பது ஒரு உன்னதக்கலை தான்; மறுப்பதற்கில்லை; அது,
நல்ல விஷயங்களை தரும் போது. இன்றைய தமிழ் சினிமா, எந்த உணர்வை மக்களிடம்
அதிகம் பரப்புகிறது? காதலா, கடமையா, வன்முறையா, ஆபாசத்தையா, மூட
நம்பிக்கையா என்று கேள்விகள் பலவற்றை எழுப்பினால், விடையை நான் சொல்லத்
தேவையில்லை; உங்களுக்கே புரியும் சற்று சிந்தித்துப் பார்த்தால். "கல்யாண
நாள் பார்க்கச் சொல்லலாமா' என்ற காலம் போய், "பிள்ளக் குட்டி
பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?' என்ற ரீதியில் அல்லவா சென்று
கொண்டிருக்கிறது நமது கலாசாரம்.


கலாசார
சீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும்
செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப்
பிடிப்தை யாராலும் மறுக்க முடியாது. நாகரிகமற்ற வார்த்தைகள், ஆபாசமான
அசைவுகள், அருவறுப்பான காட்சிகள், இரட்டை அர்த்தமுள்ள ஜோக்குகள்
ஆகியவற்றையே கதையம்சங்களாக கொண்டு பெரும்பாலான படங்கள் வெளிவந்து
கொண்டிருக்கின்றன. இதற்கு அர்த்தம், நல்ல படங்களே வெளிவருவதில்லை
என்பதல்ல; அற்புதமான கதை, தொழில்நுட்ப நேர்த்தி, ஒளிப்பதிவு என, அனைத்து
நல்ல அம்சங்களுடன் கூடிய படங்களும் வந்து கொண்டு தான் இருக்கின் றன.
ஆனால், அப்படிபட்ட படங்கள் எத்தனை வெளி வருகின்றன என்பதே மிகப் பெரிய
கேள்வி. ஒரு குடத்துத் தண்ணீரில், ஒரு சொட்டுப் பாலை கலந்தால் அது
பாலாகிவிடுமா? முன்பெல்லாம் தியேட்டருக்குச் சென்றால் தான் சினிமா. ஆனால்
இன்று? தொலைக்காட்சி மூலம் சினிமா நம் வீட்டுக்குள் நுழைந்து விட்டது.
வீட்டுக்குள் வந்த சினிமா, எல்லா வித உறவுகளோடும் அமர்ந்து பார்க்கும்
படியாகவா உள்ளது? அதிலும், தனியார் தொலைக்காட்சிகள் பலவும், போட்டி போட்டு
சினிமா நிகழ்ச் சிகளை ஒளிபரப்பி, தொலைக் காட்சி யை தொல்லைக்காட்சிகளாக
அல்லவா மாற்றிக் கொண்டிருக்கின்றன.


நம்
தமிழ் சமூகத்தில், சினிமாவின் தாக்கம் பெருமளவு இருப்பதை யாராலும் மறுக்க
முடியாது. நடிகைக்கு கோவில், நடிகன், "கட்-அவுட்'டுக்கு பாலாபிஷேகம்,
குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுக்க ஒரு நடிகை, வருமான வரியை கட்டச்
சொல்லி ஒரு நடிகர், அவ்வளவு ஏன்... புத்தகக் கண்காட்சியிலும் நடிகர்களே!
தீபாவளி, பொங்கல், என, அனைத்து விஷேச நாட்களிலும், நம் அனுமதி
இருந்தாலும், இல்லாவிட்டாலும், "டிவி' மூலம் வீட்டுக்குள் புகும்
சினிமாக்காரர்கள். இதாவது பரவாயில்லை... குடியரசு, சுதந்திர தின
நாட்களிலும் நடிகர்களே! அந்தோ பரிதாபம்... இந்த நிலையைப் பார்க்க தேசத்
தந்தை காந்தியுமில்லை; பாட்டுக்கொரு புலவன் பாரதியுமில்லை;
இருந்திருந்தால், வாங்கிய சுதந்திரத்தை, "வாபஸ்' பெறக் கோரி, தேசத்தந்தை
மீண்டும் ஒரு சத்தியாகிரகத்தை செய்தாலும் வியப்பதற்கில்லை. பள்ளி மாணவன்
என்றால் அவனுக்கு ஆசிரியரை கலாய்க்கத் தெரிய வேண்டும்; கல்லூரி மாணவன்
என்றால், அவனுக்கு கட்டாயமாக, "காதல்' வர வேண்டும். இது, சினிமாவின்
எழுதப்படாத இலக்கணம். இந்த இலக்கணத்தை படிப்பதால் தானே, பள்ளி
மாணவர்களும், "பன்ச்' டயலாக்குகளை பரவலாய் பேசுகின்றனர்.


"கருத்தம்மா'
படமெடுத்தாலும், அதில், "செவத்தம்மாவை' போட்டால் தான் படம் ஓடும்; அதனால்,
ரசிகர்கள் ரசனை அறிந்து அவர்கள் கேட்பதையே நாங்கள் தருகிறோம் என்பதே
இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் பதிலாக இருக்கும். அப்படியானால்,
இவர்கள் கூறுவது என்ன? தமிழனுக்கு ரசனையே கிடையாதா? ஆபாசத்தையும்,
அசிங்கத்தையும், பார்ப்பதையும், சிந்திப்பதையும் தவிர அவனுக்கு வேறு
சிந்தனையே கிடையாதா? தமிழர்கள் உயர்ந்த விஷயங்கள் பலவற்றையும் ரசிப்பதே
இல்லையா? இளைஞர்கள் மனதில் சுய முன்னேற்றம், சமூக பொறுப்புணர்வு பற்றிய
சிந்தனையே இல்லையா? இல்லை ரசிப்பதற்கு தகுதியற்றவர்களா?


மக்கள்
விரும்புகிறார்கள் என்பதற்காக, சமூக அக்கறையில்லாமல், வெட்டு, குத்து,
ஆபாசத்தை அள்ளித் தெளிப்பதா? ஆரம்பத்தில் இது போன்ற படங்களை மக்கள் தாழ்
பார்வையுடன் பார்த்தாலும், பின் அவற்றையும் வேறு வழியின்றி ஜீரணிக்கக்
கற்றுக் கொண்டு விட்டனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. காவிரி
பிரச்னைக்கும், ஈழத்தமிழர் படுகொலைக்கும் உண்ணாவிரதம் இருந்து பேராட்டம்
நடத்தி, தமிழன் மீதும், தமிழகத்தின் மீதும் அக்கறை உள்ளவர்களாய் வேஷம்
போடும் இவர்களுக்கு, தமிழ் சினிமாவால் இந்த சமூகம் பாழாய்
போய்கொண்டிருப்பது தெரியாதா? "அம்மா-அப்பா வாயில சோத்தைப் போடு, அடுத்தவன்
வாயில மண்ணைப் போடு' என, இவர்கள் பணம் சம்பாதிக்க, இளைஞர்கள் மட்டுமின்றி,
குழந்தைகளையும் கெடுத்து, குடும்பங்களை நாசமாக்கி சமுதாயத்தை சீரழிக்கும்,
இதுபோன்ற படங்களை சென்சார் என்ன செய்ய போகிறது? கதைக்கு தேவையென்றால்,
ஆபாசத்தை அனுமதிப்போம் என்று இன்னும் கதை சொல்லிக் கொண்டு தான் இருக்கப்
போகிறதா?


அப்படியானால், ஆபாசத்தை
அள்ளித் தெளித்துக் கொண்டு இருக்கும் படங்கள் அனைத்துமே, உண்மையில்
கதைக்கு தேவையானதாக தான் இருக்கிறதா அல்லது கரன்சிகள் கைமாறியதால் கதையோடு
தொடர்புடையதாக்கப்பட்டதா? பாடல்கள், படங்கள் என அனைத்திலும் ஒழுக்க மீறல்,
ஆபாசம். இந்த ஒழுக்க மீறல்களையும், வக்கிரத்தையும் ஆட்சேபனை
தெரிவிக்காமல், இன்னும் நாம் ஆதரித்து வந்தால், அவை போகப் போக மோசமான
விளைவை சமுதாயத்தில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. தமிழ் சினிமா... சில
ஆண்டுகளுக்கு முன் அப்படி இருந்தது; தற்போது, இப்படி இருக்கிறது என்று
இனியும் கூறிக் கொண்டிருக்காமல், வரும் காலத்தில் எப்படி இருக்க வேண்டும்
என்பதை நிர்ணயிக்கப் போவது யார்? பூனைக்கு மணிகட்டப் போவது யார்? கேளிக்கை
வரியைக் கேலி கூத்தாக்கிய அரசாங்கமா? கறைபடிந்து, கண்களை மூடிக் கொண்டு
இருக்கும் சென்சார் போர்டா? இனியும் இந்த நிலை தொடருமானால்...
பொறுப்பதற்கில்லை... வாருங்கள் தோழர்களே கைகோர்ப்போம்; வைரமுத்து வரிகளை
வாய்மையாக்க.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Feb 07, 2010 9:21 am

kalaimoon70 wrote:"நம் பிள்ளைகளுக்குப்
பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா
மீசை முளைக்க வைத்து விட்டது.
இந்த அழுக்குத் திரை
சலவை செய்யப்படுமா?
இல்லையெனில்...
மக்களைச் சுருள வைக்கும்
திரைப்பட சுருளையெல்லாம்
ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்'
- வைரமுத்து


நல்லதோர் பதிவு, நன்றி கலை



சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை Skirupairajahblackjh18
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 07, 2010 10:42 am

வாருங்கள் தோழர்களே கைகோர்ப்போம்; வைரமுத்து வரிகளை
வாய்மையாக்க. வருங்கால சந்ததியினரை காக்க‌ சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை 677196 சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை 677196 சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை 677196



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 07, 2010 10:46 am

snehiti wrote:வாருங்கள் தோழர்களே கைகோர்ப்போம்; வைரமுத்து வரிகளை
வாய்மையாக்க. வருங்கால சந்ததியினரை காக்க‌ சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை 677196 சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை 677196 சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை 677196
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 07, 2010 11:06 am

கட்டிப்பிடி கட்டிப்பிடிடா

சிரிச்சி சிரிச்சு வந்தா சீனாதானா டோய்

ஓ போடு ஓ போடு

இந்த மாதிரி பாட்டுகளும் வைரமுத்து தான் எழுதியது

இது மட்டும் இன்றைய இளைஞர்களை திருத்தக்கூடிய வரிகளா தன் முதுகை துடைத்துவிட்டு பிறகு அடுத்தவர் குறையை போக்கச்சொல்லுங்கள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 07, 2010 11:16 am

நல்லவைகளை நாம் தேடுவோம் நமக்கும் நல்லது நடக்கும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 07, 2010 11:21 am

நல்லதுதான் தேடிட்டு இருக்கோம் நடுவுல இந்த கெட்டது வருதே என்ன பன்றது நம்மளும் மனுசன் தானே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 07, 2010 12:23 pm

மறக்க முயற்சி பண்ணுவோம் நண்பா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 07, 2010 1:09 pm

இப்படித்தான் சொல்றோம் ஆனா முடியலையே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக