புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
285 Posts - 45%
heezulia
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
20 Posts - 3%
prajai
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில்


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 07, 2010 5:05 am

எகிப்து தலைநகரான கெய்ரோவில் நடந்த ஆசிய _ஆப்பிரிக்க படவிழாவில், சிவாஜியின் "கட்டபொம்மன்" படம் கலந்து கொண்டது. அதில், சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.

சிறு வயதிலேயே கட்டபொம்மனாக நடிப்பதில் சிவாஜிக்கு ஆர்வம் அதிகம். 1957_ல் படங்களில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்தாலும், சொந்தமாக "சிவாஜி நாடக மன்ற"த்தைத்தொடங்கி, "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை அரங்கேற்றினார்.

இதில் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவும், ரத்னமாலா அவர் மனைவியாகவும் நடித்தனர். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், வடஇந்தியாவின் பல நகரங்களிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டு, பாராட்டு பெற்றது. 100 முறை இந்த நாடகம் மேடை ஏறியது.

சென்னையில் "கட்டபொம்மன்" நாடகத்துக்கு தலைமை தாங்கிய பேரறிஞர் அண்ணா, சிவாஜியின் நடிப்பைப் பாராட்டியதுடன், "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்தினார். மூதறிஞர் ராஜாஜியும் இந்த நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினார்.

கட்டபொம்மனை திரைப்படமாகத் தயாரிக்க பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்துலு விரும்பினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சிவாஜி சம்மதித்தார். நாடகத்துக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ண சாமி, படத்துக்கும் வசனம் எழுதினார். கட்டபொம்மன் வரலாற்றை புத்தகமாக எழுதிய "சிலம்புச் செல்வர்" ம.பொ.சிவஞானம், திரைக்கதை அமைப்பதற்கு ஆலோசனைகள் கூறினார். இசை: ஜி.ராமநாதன்; டைரக்ஷன்: பி.ஆர். பந்துலு.

கட்டபொம்மனாக சிவாஜிகணேசன், அவர் மனைவியாக எஸ்.வரலட்சுமி, வெள்ளையத்தேவனாக ஜெமினிகணேசன், வெள்ளையம்மாளாக பத்மினி, கட்டபொம்மனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கும் பானர்மேனாக ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்தனர்.

வெள்ளையத்தேவன் வேடத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பதாக இருந்தது. ஆனால், கட்டபொம்மனுக்கு போட்டிப்படமான "சிவகங்கை சீமை"யில் கதாநாயகனாக நடித்து வந்தார். அதனால் கட்டபொம்மன் படத்தில் நடிக்க இயலாது என்று கூறிவிட்டார்.

எனவே, வெள்ளையத்தேவன் வேடத்தில் நடிக்கும்படி ஜெமினிகணேசனை கேட்டுக் கொண்டார்கள். அப்போது சாவித்திரி நிறை கர்ப்பிணியாக இருந்தார். கட்டபொம்மன் படத்தின் பெரும்பகுதி, ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. பல நாட்கள் சாவித்திரியை பிரிந்திருக்க வேண்டுமே என்று ஜெமினி யோசித்தார். ஆனால் சாவித்திரி, "அண்ணன் (சிவாஜி) நடிக்கும் முக்கியமான படம். என்னைப்பற்றி கவலைப்படாமல் ஜெய்பூருக்கு போய் வாருங்கள்" என்றார். அதன் பேரில், ஜெமினியும் கட்டபொம்மன் குழுவினருடன் ஜெய்ப்பூர் சென்றார்.

மத்திய அரசின் அனுமதி பெற்று, இந்திய ராணுவத்தின் குதிரைப் படையையும், ராணுவ வீரர்களையும் பயன்படுத்தி சண்டைக்காட்சிகளை ஆங்கிலப்படங்களுக்கு நிகராகப் படமாக்கினார்கள். இது "டெக்னி கலர்" படம். லண்டனுக்கு சென்று பிரிண்ட் எடுத்தார்கள்.

16_5_1959_ல் வெளிவந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" வெள்ளி விழா படமாக அமைந்தது. கட்டபொம்மனை தன் அற்புத நடிப்பால் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார், சிவாஜி. "பராசக்தி", "மனோகரா" ஆகிய படங்களுக்குப்பிறகு, சிவாஜியின் சிம்ம கர்ஜனையை இப்படத்தில் கேட்க முடிந்தது.

"வானம் பொழிகிறது, பூமி விளைகிறது. உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையக் கண்டாயா? நாத்து நட்டாயா? கழனி வாழ் உழவருக்குக் கஞ்சிக் கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப்பணி புரிந்தாயா?" என்ற வசனம், ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகியது.

எகிப்து தலைநகரான கெய்ரோவில், "ஆசிய _ ஆப்பிரிக்க பட விழா" 1960 மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" கலந்து கொண்டது. சிவாஜிகணேசன், பத்மினி, பி.ஆர்.பந்துலு மற்றும் சிலருடன் கெய்ரோ சென்று, இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்தியாவைப் போல எகிப்தும், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்த நாடு. எனவே, கட்டபொம்மன் படத்தை எகிப்தியர்கள் கைதட்டி ரசித்தனர். வெள்ளைக்கார அதிகாரிகளை எதிர்த்து சிவாஜிகணேசன் கர்ஜனை செய்யும் கட்டங்களில் பெரும் ஆரவாரம்!

ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான படங்களைப் பார்த்தபின், சிறந்த நடிகராக சிவாஜிகணேசனை நடுவர்கள் தேர்வு செய்தனர். சிறந்த நடிகையாக "லைலா மஜ்னு" படத்தில் நடித்த மெந்தா என்ற நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த படத்துக்கான பரிசு "சாமர்கண்ட் இளவரசன்" என்ற ரஷிய படத்துக்கு கிடைத்தது.

சிறந்த ஆடல் _ பாடல் கொண்ட படம் என்று கட்டபொம்மனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பரிசைப் பெறுவதற்கு சிவாஜி கணேசன் மேடைக்கு சென்ற போது, ஆனந்த மிகுதியால் மயக்கம் வந்துவிட்டது! அவரை பத்மினி தாங்கிப் பிடித்துக் கொண்டார். கழுகு உருவம் பொறிக்கப்பட்ட தங்கக் கேடயம் சிவாஜிக்கு வழங்கப்பட்டது.

இந்த பரிசளிப்பு விழா நடைபெறும் சமயத்தில், அதிபர் நாசர் எகிப்தில் இல்லை. அவசர வேலையாக சிரியாவுக்கு சென்றிருந்தார். எனவே, வேறொரு அமைச்சர் பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழா முடிந்ததும், நாசர் வீட்டுக்கு சிவாஜி சென்றார். அவர் மனைவியைச் சந்தித்தார்.

"என் கணவர்தான் இன்று பரிசு வழங்குவதாக இருந்தார். அவசர வேலையாக சென்று விட்டதால் இயலவில்லை" என்று அவர் தெரிவித்தார். "நாசர் அவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, என் விருந்தாளியாக கொஞ்ச நேரமாவது தங்கவேண்டும். என்னுடைய இந்த வேண்டுகோளை அவரிடம் தெரிவியுங்கள்" என்று சிவாஜி கேட்டுக்கொண்டார்.

சிறந்த நடிகருக்கான விருதுடன் சென்னை திரும்பிய சிவாஜி கணேசனுக்கு, விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். உள்பட நடிகர்_நடிகைகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.


ஆனால் இந்தியாவில்?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக