புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 08, 2010 9:18 pm

அன்று முகூர்த்தநாள்.

அந்த சப்-ரிஜிஸ்டர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பத்திரம் பதிவு செய்ய வந்தவர்கள், சான்றிதழ் வாங்க வந்தவர்கள்... என்று பலரும் கூட்டம் கூட்டமாக அங்கே நின்று கொண்டிருந்தனர்.

திடீரென்று அந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு 8 பேர் வந்தனர். அவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவர்களின் தோற்றத்தை யும், அணிந்திருக்கும் ஆடையையும் பார்த்தால் கல்லூரியில் படிப்பவர்கள் போல் தெரிந்தது.

அவர்களுடன் வந்த பெண்ணும் மாணவிதான் என்றாலும், கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. அதை துப்பட்டாவால் மறைக்கும் முயற்சியில் அவள் பலதடவை தோற்றுப்போய் இருப்பது, அந்த மஞ்சள் கயிறு கிடந்த கோலத்திலேயே தெரிந்தது. அவளது கையில் இரு மாலைகளும் இருந்தன.

அப்போதுதான், அந்த மாணவர்களில் ஒரு ஜோடி, வீட்டை விட்டு ஓடிவந்து, கோவிலில் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதும், அந்த காதல் திருமணத்தை பதிவு செய்ய இப்போது இங்கே வந்திருப்பதும் தெரிய வந்தது.

அந்த மாணவியைச் சுற்றி 7 மாணவர்கள் இருந்தனர். அவர்கள் எல்லோருடனும் அந்த மாணவி பேசிக் கொண்டிருந்தாள்.

இதனால், யார் அவளது காதலன்... சாரி கணவன் என்பது தெரியவில்லை. சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்திற்குள் சென்ற அவர்கள், சிறிதுநேரத்தில் வெளியே வந்தனர். அப்போது, மாணவியின் கையில் ஒரு மாலையும், இன்னொரு மாணவன் கையில் இன்னொரு மாலையும் இருந்தன.

`ஓ... இவர்கள் இருவரும்தான் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்' என்று, அங்கே வந்தவர்கள் புரிந்து கொண்டனர்.

இந்த காதல் ஜோடியை க்ளோஸ்-அப் ஆக பார்த்தபோது பகீர் என்றது. காதல் திருமணம் செய்து கொண்ட மாணவன் உள்ளிட்ட அத்தனை மாணவர்களுக்கும் மீசை அப்போது தான் அரும்பி இருந்தது. அந்த மாணவியின் முகத்தில் பயமறியா குழந்தைத்தனம் நன்றா கவே தெரிந்தது. எப்படியும் அவர்கள் கல்லூரி யில் முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு தான் படிப்பார்கள் என்பதும் உறுதியாக தெரிந்தது.

சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும், அந்த மாணவர்கள் தங்களது அடுத்த கட்ட திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்ற மும்முர ஆலோசனையில் இறங்கினர். மாணவியோ அப்பாவியாய் அவர்களுக்கு மத்தியில் அடைக்கலம் புகுந்திருந்தாள்.

சிறிதுநேரத்தில் ஏதோ முடிவெடுத்தவர்கள், அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள். திருமணம் செய்து கொண்ட மாணவி, கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றை அவசரம் அவசரமாக சுடிதாருக்குள் மறைத்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தை அவர்கள் காலி செய்திருந்தனர்.

அடுத்ததாக அவர்கள் எங்கே சென்றார்கள்? அவர்களது குடும்பத்தில் பிரச்சினை ஆனதா? மீண்டும் அவர்கள் கல்லூரிக்கு வருகிறார்களா? அல்லது, தாலியை மறைத்துக்கொண்டு, திருமணத்தை அந்த மாணவி மறைக்கிறாளா?

- இதெல்லாம், அந்த காதல் ஜோடிக்கும், அவர்களது திருமணத்தை திட்டம்போட்டு அரங்கேற்றம் செய்து வைத்த மாணவர்களுக்கும் மட்டுமே தெரிந்த வெளிச்சம்.

இப்போதெல்லாம் காதல் என்பது இன்றைய இளசுகள் மத்தியில் எளிதில் கிடைக்கும் ஒன்றாக மாறி வருகிறது.

`காதலிக்க பெண் வேண்டுமா? பீச் பக்கமோ, பார்க் பக்கமோ, பஸ் ஸ்டாண்ட் பக்கமோ போ' என்று நண்பர்கள் அட்வைஸ் கூறும் அளவுக்கு காதல் காட்சிகள் மலிவாகி வருகின்றன.

சென்னை மாநகரை எடுத்துக்கொண்டால், கல்லூரியில் படிப்பவர்களில் பெண்கள் பாய் ப்ரண்டோ, ஆண்கள் கேர்ள் ப்ரண்டோ கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற மனநிலை எல்லோருக்கும் ஏற்பட்டு வருகிறது. சினிமாவில் நடிகர்-நடிகைக்குள் `கெமிஸ்ட்ரி' ஒர்க்அவுட் ஆகிவிட்டது என்கிறார்களே, அதுபோன்றதுதான் இதுவும்!

இப்படி பலருக்குள் `காதல் கெமிஸ்ட்ரி' ஒர்க்அவுட் ஆவதால்தான், ஆரம்பத்தில் கூறிய காதல் ஜோடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மைனரில் இருந்து மேஜருக்கு ப்ரமோஷன் ஆகிவிட்ட தைரியத்தில் இதுபோன்ற முடிவுகளை இன்றைய இளசுகள் அவசரப்பட்டு எடுக்கிறார்கள். கூடவே, திருமணம் செய்துகொள்ளும்வரை வழிகாட்டவும், ஆலோசனை சொல்லவும் நண்பர்கள் இருப்பதால், தாங்கள் எடுக்கும் முடிவு தவறானது என்பதைக்கூட அவர்கள் மறந்து போய் விடுகிறார்கள்.

காதலித்தாயிற்று... ஓடிப்போய் திருமணமும் செய்தாயிற்று... அதன்பிறகு படிப்பு என்ன ஆகும்? குடும்ப சூழ்நிலைகள் எப்படி தடம்புரண்டு போகும்? தங்களது எதிர்காலம் எப்படி ஆகும்? அவசரப்பட்டு கரம்பிடித்த இளம் கணவனால் தனக்கு பாதுகாப்பு கிடைக்குமா? என்பது பற்றி யோசிக்கவும், அந்த ஓடிப்போகும் அவசரகதியில் அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது.

ஒருவேளை அப்படி அவர்கள் யோசித்து இருந்தால், ஓடிப்போகும் திட்டத்தை ஒத்தி வைத்திருக்க நிறையவே வாய்ப்பு கிடைத்திருக்கும்.



ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 08, 2010 9:22 pm

காதல் என்கிற பெயரில் நடைபெறும் இந்த கலாச்சார - குடும்ப சீரழிவை தடுக்க என்ன செய்யலாம்?

முதலில், இருபது வயதுக்குள் காதலிக்கும் (?!), காதலனுடன் செல்ல தயார் நிலையில் இருக்கும் இளம்பெண்களிடம் சில கேள்விகள் :

* நீங்கள், உங்களவராக ஏற்றுக்கொண்டிருக்கும் ஆண், கடைசி வரையில் உங்களை கண் கலங்காமல் காப்பாற்றுவான் என்ற உறுதிமொழியை கொடுக்க முடியுமா?

* பெற்றோர் எதிர்ப்பார்கள் என்பதற்காக, இப்போது நீங்கள் ஓடத் தயாராக இருக்கும் ஆணுக்காக, உங்கள் குடும்பம் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று சாபமிட தயாராக இருக்கிறீர்களா?

* காதலனுடன் தாலி கட்டி குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டால், பெற்றோர் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்வார்கள் என்று நண்பனோ, நண் பியோ சொன்னதை எதை வைத்து ஏற்றுக் கொண்டீர்கள்?

* படிக்கிற வயதில் காதல் தேவை தானா? அது, படிப்பை பாதிக்காதா? என்று எப்போதா வது யோசித்தது உண்டா?

* படிக்கின்ற வயதில் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு, அதன்பின் எழும் சமுதாய விமர்சனங்களையும் மீறி, உங்களால் படித்து, சிறந்த தேர்ச்சி பெற்று சாதிக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

* ஒருவேளை, காதல் திருமணத்திற்கு பின்னரும் நீங்கள் படிப்பை தொடர விரும்பி னால், அதற்கு உதவி செய்பவர் உங்கள் காதல் கணவனா? அல்லது நண்பர்களா?

* வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டால், உங்கள் வீட்டில் உங்களுக்கு அடுத்ததாகவோ அல்லது முன்போ திருமணத்திற்கு காத்திருக்கும் சகோதரிகள் மீதான சமுதாயப் பார்வை எப்படி இருக்கும் என்பதை ஒரு கணமாவது யோசித்தது உண்டா?

- இந்த கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் `ஆம்` என்று பதில் சொன்னால், ஓடிப்போக வேண்டும் என்ற எண்ணத்தையே விட்டு விடுவீர்கள்.

இனி, காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி, தனிக்குடித்தனம் நடத்த தயாராக இருக்கும் காதலர்களிடம் சில கேள்விகள்...

* நீங்கள் விரும்பிய பெண்ணை எதற்காக வாழ்க்கைத் துணையாக்க விரும்பினீர்கள்? அவள் அழகைப் பார்த்தா? அறிவைப் பார்த்தா? அல்லது குடும்ப பொருளாதார நிலையைப் பார்த்தா?

* கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே, கணவன் என்கிற அந்தஸ்தைப் பெறுவது எதிர்கால வாழ்க்கைக்கு பிரச்சினைக்குரியதாக இருக்காதா என்று யோசித்தது உண்டா?

* எந்த தைரியத்தில் 20 வயதைக்கூட நெருங்காத பெண்ணை தொட்டு தாலிகட்ட தூக்கி சாரி... அழைத்துச் செல்கிறீர்கள்?

* இருபது வயதுக்குள் திருமணம் செய்து குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய சூழலில் உங்கள் படிப்பைத் தொடர யார் உதவுவார் என்று ஒருமுறையாவது யோசித்தது உண்டா?

* உங்களுக்கும் ஒரு தங்கை இருந்து, அவளும் ஒருவனோடு ஓடிப்போக தயாராக இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

* முன் பின் தெரியாத ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடப்போய், உங்கள் வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் ஏற்படும் பகை உணர்ச்சிகளை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா?

* காதலியாக இருக்கும் பெண்ணை, உங்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவும் நண்பர்கள், உங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை போக்க முன் வருவார்கள் என்று நம்புகிறீர்களா?

- நீங்களும் இப்படியெல்லாம், ஒருமுறையாவது யோசித்துப் பார்த்தால் நிச்சயம் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள அவளை இழுத்துக்கொண்டு ஓட மாட்டீர்கள்.

கல்லூரியில் படிக்கும்போது வரும் காதல் வெறும் இனக் கவர்ச்சிதான். அங்கே காமமும், அவள் எப்படியாவது நமக்கு வேண்டும் என்ற வெறியும்தான் அதிகமாக இருக்குமே தவிர, உண்மையான அன்பு இருக்கவே இருக்காது.
அதனால், இருபதுக்குள் காதல் கத்திரிக்காய் எல்லாம் வேண்டவே வேண்டாமே!




ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 9:36 pm

நல்ல கட்டுரை !!!!!!!!
எல்லாரும் காதலிக்க கூடாதுன்னு சொல்றாங்க...யாரவது எது உண்மையான காதல்
எப்படி காதலிக்கணும் நு சொல்லுங்க பா

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Mon Feb 08, 2010 9:42 pm

அருமையான கட்டுரை. நன்றி ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 154550 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 154550 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 154550 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Feb 08, 2010 9:47 pm

சிவா அண்ணா பெண்களைப் பற்றி கட்டுரை எழுதிய உடனே இங்க 2 பெண்கள் தான் பதில் போட்டிருக்காங்க ஆண்கள் என்னப்பா பன்றீங்க வந்து பதில் போடுங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 08, 2010 9:48 pm

நிலாசகி wrote:நல்ல கட்டுரை !!!!!!!!
எல்லாரும் காதலிக்க கூடாதுன்னு சொல்றாங்க...யாரவது எது உண்மையான காதல்
எப்படி காதலிக்கணும் நு சொல்லுங்க பா

ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 230655 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 230655 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 230655



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Feb 08, 2010 9:49 pm

ஏன் அண்ணா ஓடுறீங்க தங்கை கேக்குறாங்க நீங்க பதில் சொல்றது இல்லையா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 9:51 pm

வை.பாலாஜி wrote:
நிலாசகி wrote:நல்ல கட்டுரை !!!!!!!!
எல்லாரும் காதலிக்க கூடாதுன்னு சொல்றாங்க...யாரவது எது உண்மையான காதல்
எப்படி காதலிக்கணும் நு சொல்லுங்க பா

ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 230655 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 230655 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 230655
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! Empty ஓசையில்லாமல் 60 வயதுக்குள் "ஓடும்"வை.பாலாஜி ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 325286


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 08, 2010 10:07 pm

தல , தலதான்...

மிக சிறந்த கட்டுரை. இது போன்ற கண்முடிதானமன காதலுக்கு சினிமா காரணமா இல்லை, சமுதாயத்தில் எற்பட்டுள்ள காலச்சார சீரழிவா..


இளைய சமுதாயம் கண்டிப்பாக வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமே தவிர , இதுபோல காதலில் சீரழிவது கண்டிப்பாக வருத்தபடவேண்டிய நிகழ்வுதான்...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 08, 2010 10:09 pm

நிலாசகி wrote:
வை.பாலாஜி wrote:
நிலாசகி wrote:நல்ல கட்டுரை !!!!!!!!
எல்லாரும் காதலிக்க கூடாதுன்னு சொல்றாங்க...யாரவது எது உண்மையான காதல்
எப்படி காதலிக்கணும் நு சொல்லுங்க பா

ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 230655 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 230655 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 230655
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! Empty ஓசையில்லாமல் 60 வயதுக்குள் "ஓடும்"வை.பாலாஜி ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 325286

ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 440806 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! 440806



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக