புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள்!
Page 1 of 1 •
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
தொலைதூரத்தில் நடக்கிற விஷயங்கள் என்றால் அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள நமக்கு எப்போதும் ஆர்வம்தான். இங்கிருந்து யாராவது வெளிநாட்டுக்குப் போய்விட்டு வந்தால் அவர்களை நாம் கேள்விகளால் துளைத்து எடுத்துவிடுவோம். நம் நாட்டில் இருப்பதைப் போலவே வெளிநாட்டிலும் இருக்கிறதா? என்று அறிய நமக்கு அளவுகடந்த ஆர்வம். சென்னை அல்லயன்ஸ் ஃபிரான்சேஸில் இப்படித்தான் நடந்தது.
தமிழ் எழுத்தாளர்களுடன்...
திணறியவர்கள் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் ஆலென் மாபாங்கு, வெரோனிக் தாஜோ. இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவர் பெண் எழுத்தாளர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது அல்லயன்ஸ் ஃபிரான்சேஸýம், இந்தியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகமும். சென்னையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் வெ.ஸ்ரீராம். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர்.
""இந்திய-பிரெஞ்சு மொழி, பண்பாட்டு நட்புறவுக் கழகமான அல்லயன்ஸ் ஃபிரான்சேஸýம், பிரெஞ்சு தூதரகமும் இணைந்து பலவிதமான கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. பிரான்சின் அரசு அனுப்பி வைத்த 10-12 எழுத்தாளர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு இப்போது வந்திருக்கின்றனர்.
அவர்களுடன் இந்தியாவில் உள்ள எழுத்தாளர்களைச் சந்திக்க வைத்துக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படி வந்தவர்களில் சென்னைக்கு வந்தவர்கள்தாம் ஆலென் மாபாங்கும், வெரோனிக் தாஜோவும். ஆப்பிரிக்காவில் பல நாடுகள் பிரான்சின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. அதனால் பிரெஞ்சு மொழி கற்றுக் கொள்வது என்பது அங்கு சாதாரணம். ஆலென் மாபாங்கு ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். 12 நூல்களை வெளியிட்டிருக்கிறார். ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்தவர் வெரோனிக் தாஜோ. ஆனால் பிறந்தது என்னமோ பிரான்சு நாட்டின் பாரிசில்தான்.
இவரும் சளைத்தவரில்லை. 13 நூல்களை வெளியிட்டிருக்கிறார்.இவர்கள் இருவரையும் சென்னையில் உள்ள தமிழ் எழுத்தாளர்களைச் சந்திக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் இருவரும் பிரெஞ்சில் எழுதும் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள். இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் புத்தகங்களை அவர்கள் ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருக்கிறார்கள்.
ஆனால் தமிழில் எழுதும் எழுத்தாளர்களைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அதுபோல இவர்கள் இருவரையும் பற்றி தமிழ் எழுத்தாளர்களுக்கும் தெரியாது. எனவே இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தேன்.
கவிஞர் ஞானக்கூத்தன், எழுத்தாளர்கள் இமயம், சங்கரராமசுப்பிரமணியன், பாரவி, யுவன் சந்திரசேகர், கவிஞர் குட்டி ரேவதி, புகழ் போன்றோர் கலந்து கொண்டனர். விடுமுறைநாளாக இருந்திருந்தால் இன்னும் நிறையப் பேர் கலந்து கொண்டிருப்பார்கள்'' என்றார்.
வெ.ஸ்ரீராம்
நமது எழுத்தாளர்களுக்கு ஆப்பிரிக்க-பிரெஞ்சு எழுத்தாளர்களிடம் கேட்க நிறையக் கேள்விகள் இருந்தன. குட்டி ரேவதி ஆப்பிரிக்க-பெண் எழுத்தாளர்களைப் பற்றிக் கேட்டார். அதற்கு வெரோனிக் தாஜோ, ""நாங்கள் பெண் எழுத்தாளர், ஆண் எழுத்தாளர் என்று பாகுபாடு பார்ப்பது கிடையாது. நான் ஒரு எழுத்தாளர். நான் ஒரு பெண். என் ஜன்னல் வழியே உலகத்தைப் பார்க்கிறேன். எனது கண்ணோட்டத்தில் அவற்றைப் பற்றி எழுதுகிறேன். பெண் எழுத்தாளர் என்ற அளவில் என்னை நான் சுருக்கிக் கொள்வதில்லை'' என்றார். ""பெண்கள் எல்லாப் பிரச்னைகளையும் எழுதுகிறார்களா?'' என்று அடுத்த கேள்வி.
""பெண் சில விஷயங்களைப் பேச முடியாது என்ற நிலை முதலில் அங்கேயும் இருந்தது. ஒரு பெண் எழுத ஆரம்பித்தால் எழுத்தாளர் என்ற நிலையிலும், பெண் என்ற நிலையிலும் கவனம் பெறுகிறாள். எல்லாராலும் கூர்மையாகக் கவனிக்கப்படுகிறாள். காதல், பாலியல் பற்றி பெண் பேசுவதற்கு முதலில் அங்கே கட்டுப்பாடு இருந்தது. குடும்பத்தைப் பற்றி மட்டும் பேசினோம். இபபோது அரசியல், சமூகம் என எல்லா விஷயங்களையும் பற்றித் தைரியமாகப் பேசுகிறோம்.
வெரோனிக் தாஜோ
என்ன எழுதுகிறோம் என்பது எப்போதும் முக்கியம். எப்படி எழுதுகிறோம் என்பதைத் தீர்மானிப்பது யாருக்கு எழுதுகிறோம் என்பதுதான். அதிகம் படிக்காதவர்களுக்கும் புரியும்படி எழுத வேண்டும். எங்களைப் பொறுத்த அளவில் ஆப்பிரிக்க வாய்மொழி இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாட்டுப்புற கதைகளை மேலும் மேலும் ஆழமாக, மேலும் மேலும் நுண்மையாக ஆராய்ந்து கொண்டே போனீர்கள் என்றால் அது உலகம் தழுவிய தன்மையுடன் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். அதாவது அது சொல்லக் கூடிய செய்தி உலக அளவுக்குப் பொருந்தக் கூடியதாக இருக்கும்'' என்றார்.
""சும்மா எழுதிவிட்டு மட்டும் போவீர்களா? இல்லை சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படச் செயல்படுவீர்களா?'' என்ற கேள்வியைக் கிளப்பினார்கள்.
அதற்கு ஆலென் மாபாங்கு பதில் சொன்னார்.
""ஒரு மனிதன் என்கிற வகையில் எல்லாரும் ஆக்டிவிஸ்ட்தான். காங்கோவிலிருந்து பிரான்ஸ் வெளியேறிய பின்பு, அங்கே சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. அதை எதிர்த்து எழுதினோம். எத்தியோப்பியாவில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்தன. அதைப் பற்றியெல்லாம் எழுதினோம். எழுத்தாளன் என்பவன் அடிப்படையில் சமூக மாறுதலுக்காகக் குரல் கொடுப்பவன். அதே சமயம் அவன் அழகியலுணர்வும் உடையவன்'' என்றார்.
ஆலென் மாபாங்கு
""தமிழிலிருந்து ஆங்கிலத்தில் ஏதாவது நாவலை, கதையை மொழிபெயர்த்தால் பேச்சு வழக்கை தமிழில் உள்ளது போல ஆங்கிலத்தில் கொண்டு வர முடியவில்லையே. ஆப்பிரிக்க மொழியிலிருந்து பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கும்போதும் அப்படித்தானா?'' என்ற கேட்டார் யுவன் சந்திரசேகர்.
""எனக்கு ஆப்பிரிக்க மொழிகளில் ஏழு மொழிகள் தெரியும். பல ஆப்பிரிக்க மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லை. வெறும் பேச்சுதான். அதை பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு வரும் போது பிரெஞ்சு மொழியின் கட்டுக்கோப்பு அதற்கு இடம் தருவதில்லை. ஆனால் பிரெஞ்சு மொழியின் இந்தக் கட்டுக் கோப்பைக் கொஞ்சம் தளர்த்தி எழுதுகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அதுமட்டுமல்ல இத்தகைய எழுத்துகள் பிரெஞ்சு மொழிக்குப் புதுவரவாக உள்ளன. இதனால் பிரெஞ்சில் எழுதக் கூடிய ஆப்பிரிக்க எழுத்தாளர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.'' என்றார்.
"பிரெஞ்சு இலக்கியம் என்றாலே ஏதாவது தத்துவநோக்குடன்தானே இருக்கும். ஆப்பிரிக்க இலக்கியத்தில் அப்படி பார்க்க முடிவதில்லை. ஆப்பிரிக்க-பிரெஞ்சு இலக்கியத்தின் தன்மை என்ன?'' என்று கேட்டார் எழுத்தாளர் இமயம். ""இரு சமூகங்களும் தனக்கேயுரிய தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. பிரெஞ்சு இலக்கியம் பிரெஞ்சு இலக்கியமாகவே இருக்கிறது.
ஆப்பிரிக்க இலக்கியம் ஆப்பிரிக்க இலக்கியமாகவே இருக்கிறது. நாங்கள் ஆப்பிரிக்க-பிரெஞ்சு இலக்கியத்தில் ஆப்பிரிக்காவின் வேர்களை அறிமுகப்படுத்துகிறோம். ஆப்பிரிக்காவின் பல மொழிகளுக்கு எழுத்துவடிவமே இல்லை என்பதால், அங்கே காலங்காலமாகப் பேசப்படும் வாய்மொழி இலக்கியங்களே
அதிகம்.
பிரெஞ்சு மொழி கற்றுவிட்டு அதில் எழுத முன்வரும் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் இந்த வாய்மொழி இலக்கியத்தைத் தவிர்த்துவிட முடியாது. ஆப்பிரிக்கா இலக்கியங்களின் வளமான படிமங்களை, அழகான கருத்துகளை பிரெஞ்சு மொழியில் சொல்ல விரும்புகிறோம். முயற்சிக்கிறோம்''என்றார் ஆலென் மாபாங்கு.
இந்தக் கலந்துரையாடலில் பங்குபெற்று கேள்வி கேட்ட எழுத்தாளர்களுக்கும், கேள்விக்குப் பதில் சொன்ன எழுத்தாளர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நாடு, மொழி, இனம், சிந்திக்கும்முறை, செயல்படும்விதம் எல்லாவற்றிலும் வேறுபாடுகள். இருந்தும் இருதரப்பும் ஆர்வமுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது முக்கியமானது.
தமிழ் எழுத்தாளர்களுடன்...
திணறியவர்கள் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் ஆலென் மாபாங்கு, வெரோனிக் தாஜோ. இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவர் பெண் எழுத்தாளர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது அல்லயன்ஸ் ஃபிரான்சேஸýம், இந்தியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகமும். சென்னையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் வெ.ஸ்ரீராம். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர்.
""இந்திய-பிரெஞ்சு மொழி, பண்பாட்டு நட்புறவுக் கழகமான அல்லயன்ஸ் ஃபிரான்சேஸýம், பிரெஞ்சு தூதரகமும் இணைந்து பலவிதமான கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. பிரான்சின் அரசு அனுப்பி வைத்த 10-12 எழுத்தாளர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு இப்போது வந்திருக்கின்றனர்.
அவர்களுடன் இந்தியாவில் உள்ள எழுத்தாளர்களைச் சந்திக்க வைத்துக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படி வந்தவர்களில் சென்னைக்கு வந்தவர்கள்தாம் ஆலென் மாபாங்கும், வெரோனிக் தாஜோவும். ஆப்பிரிக்காவில் பல நாடுகள் பிரான்சின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. அதனால் பிரெஞ்சு மொழி கற்றுக் கொள்வது என்பது அங்கு சாதாரணம். ஆலென் மாபாங்கு ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். 12 நூல்களை வெளியிட்டிருக்கிறார். ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்தவர் வெரோனிக் தாஜோ. ஆனால் பிறந்தது என்னமோ பிரான்சு நாட்டின் பாரிசில்தான்.
இவரும் சளைத்தவரில்லை. 13 நூல்களை வெளியிட்டிருக்கிறார்.இவர்கள் இருவரையும் சென்னையில் உள்ள தமிழ் எழுத்தாளர்களைச் சந்திக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் இருவரும் பிரெஞ்சில் எழுதும் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள். இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் புத்தகங்களை அவர்கள் ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருக்கிறார்கள்.
ஆனால் தமிழில் எழுதும் எழுத்தாளர்களைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அதுபோல இவர்கள் இருவரையும் பற்றி தமிழ் எழுத்தாளர்களுக்கும் தெரியாது. எனவே இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தேன்.
கவிஞர் ஞானக்கூத்தன், எழுத்தாளர்கள் இமயம், சங்கரராமசுப்பிரமணியன், பாரவி, யுவன் சந்திரசேகர், கவிஞர் குட்டி ரேவதி, புகழ் போன்றோர் கலந்து கொண்டனர். விடுமுறைநாளாக இருந்திருந்தால் இன்னும் நிறையப் பேர் கலந்து கொண்டிருப்பார்கள்'' என்றார்.
வெ.ஸ்ரீராம்
நமது எழுத்தாளர்களுக்கு ஆப்பிரிக்க-பிரெஞ்சு எழுத்தாளர்களிடம் கேட்க நிறையக் கேள்விகள் இருந்தன. குட்டி ரேவதி ஆப்பிரிக்க-பெண் எழுத்தாளர்களைப் பற்றிக் கேட்டார். அதற்கு வெரோனிக் தாஜோ, ""நாங்கள் பெண் எழுத்தாளர், ஆண் எழுத்தாளர் என்று பாகுபாடு பார்ப்பது கிடையாது. நான் ஒரு எழுத்தாளர். நான் ஒரு பெண். என் ஜன்னல் வழியே உலகத்தைப் பார்க்கிறேன். எனது கண்ணோட்டத்தில் அவற்றைப் பற்றி எழுதுகிறேன். பெண் எழுத்தாளர் என்ற அளவில் என்னை நான் சுருக்கிக் கொள்வதில்லை'' என்றார். ""பெண்கள் எல்லாப் பிரச்னைகளையும் எழுதுகிறார்களா?'' என்று அடுத்த கேள்வி.
""பெண் சில விஷயங்களைப் பேச முடியாது என்ற நிலை முதலில் அங்கேயும் இருந்தது. ஒரு பெண் எழுத ஆரம்பித்தால் எழுத்தாளர் என்ற நிலையிலும், பெண் என்ற நிலையிலும் கவனம் பெறுகிறாள். எல்லாராலும் கூர்மையாகக் கவனிக்கப்படுகிறாள். காதல், பாலியல் பற்றி பெண் பேசுவதற்கு முதலில் அங்கே கட்டுப்பாடு இருந்தது. குடும்பத்தைப் பற்றி மட்டும் பேசினோம். இபபோது அரசியல், சமூகம் என எல்லா விஷயங்களையும் பற்றித் தைரியமாகப் பேசுகிறோம்.
வெரோனிக் தாஜோ
என்ன எழுதுகிறோம் என்பது எப்போதும் முக்கியம். எப்படி எழுதுகிறோம் என்பதைத் தீர்மானிப்பது யாருக்கு எழுதுகிறோம் என்பதுதான். அதிகம் படிக்காதவர்களுக்கும் புரியும்படி எழுத வேண்டும். எங்களைப் பொறுத்த அளவில் ஆப்பிரிக்க வாய்மொழி இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாட்டுப்புற கதைகளை மேலும் மேலும் ஆழமாக, மேலும் மேலும் நுண்மையாக ஆராய்ந்து கொண்டே போனீர்கள் என்றால் அது உலகம் தழுவிய தன்மையுடன் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். அதாவது அது சொல்லக் கூடிய செய்தி உலக அளவுக்குப் பொருந்தக் கூடியதாக இருக்கும்'' என்றார்.
""சும்மா எழுதிவிட்டு மட்டும் போவீர்களா? இல்லை சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படச் செயல்படுவீர்களா?'' என்ற கேள்வியைக் கிளப்பினார்கள்.
அதற்கு ஆலென் மாபாங்கு பதில் சொன்னார்.
""ஒரு மனிதன் என்கிற வகையில் எல்லாரும் ஆக்டிவிஸ்ட்தான். காங்கோவிலிருந்து பிரான்ஸ் வெளியேறிய பின்பு, அங்கே சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. அதை எதிர்த்து எழுதினோம். எத்தியோப்பியாவில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்தன. அதைப் பற்றியெல்லாம் எழுதினோம். எழுத்தாளன் என்பவன் அடிப்படையில் சமூக மாறுதலுக்காகக் குரல் கொடுப்பவன். அதே சமயம் அவன் அழகியலுணர்வும் உடையவன்'' என்றார்.
ஆலென் மாபாங்கு
""தமிழிலிருந்து ஆங்கிலத்தில் ஏதாவது நாவலை, கதையை மொழிபெயர்த்தால் பேச்சு வழக்கை தமிழில் உள்ளது போல ஆங்கிலத்தில் கொண்டு வர முடியவில்லையே. ஆப்பிரிக்க மொழியிலிருந்து பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கும்போதும் அப்படித்தானா?'' என்ற கேட்டார் யுவன் சந்திரசேகர்.
""எனக்கு ஆப்பிரிக்க மொழிகளில் ஏழு மொழிகள் தெரியும். பல ஆப்பிரிக்க மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லை. வெறும் பேச்சுதான். அதை பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு வரும் போது பிரெஞ்சு மொழியின் கட்டுக்கோப்பு அதற்கு இடம் தருவதில்லை. ஆனால் பிரெஞ்சு மொழியின் இந்தக் கட்டுக் கோப்பைக் கொஞ்சம் தளர்த்தி எழுதுகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அதுமட்டுமல்ல இத்தகைய எழுத்துகள் பிரெஞ்சு மொழிக்குப் புதுவரவாக உள்ளன. இதனால் பிரெஞ்சில் எழுதக் கூடிய ஆப்பிரிக்க எழுத்தாளர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.'' என்றார்.
"பிரெஞ்சு இலக்கியம் என்றாலே ஏதாவது தத்துவநோக்குடன்தானே இருக்கும். ஆப்பிரிக்க இலக்கியத்தில் அப்படி பார்க்க முடிவதில்லை. ஆப்பிரிக்க-பிரெஞ்சு இலக்கியத்தின் தன்மை என்ன?'' என்று கேட்டார் எழுத்தாளர் இமயம். ""இரு சமூகங்களும் தனக்கேயுரிய தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. பிரெஞ்சு இலக்கியம் பிரெஞ்சு இலக்கியமாகவே இருக்கிறது.
ஆப்பிரிக்க இலக்கியம் ஆப்பிரிக்க இலக்கியமாகவே இருக்கிறது. நாங்கள் ஆப்பிரிக்க-பிரெஞ்சு இலக்கியத்தில் ஆப்பிரிக்காவின் வேர்களை அறிமுகப்படுத்துகிறோம். ஆப்பிரிக்காவின் பல மொழிகளுக்கு எழுத்துவடிவமே இல்லை என்பதால், அங்கே காலங்காலமாகப் பேசப்படும் வாய்மொழி இலக்கியங்களே
அதிகம்.
பிரெஞ்சு மொழி கற்றுவிட்டு அதில் எழுத முன்வரும் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் இந்த வாய்மொழி இலக்கியத்தைத் தவிர்த்துவிட முடியாது. ஆப்பிரிக்கா இலக்கியங்களின் வளமான படிமங்களை, அழகான கருத்துகளை பிரெஞ்சு மொழியில் சொல்ல விரும்புகிறோம். முயற்சிக்கிறோம்''என்றார் ஆலென் மாபாங்கு.
இந்தக் கலந்துரையாடலில் பங்குபெற்று கேள்வி கேட்ட எழுத்தாளர்களுக்கும், கேள்விக்குப் பதில் சொன்ன எழுத்தாளர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நாடு, மொழி, இனம், சிந்திக்கும்முறை, செயல்படும்விதம் எல்லாவற்றிலும் வேறுபாடுகள். இருந்தும் இருதரப்பும் ஆர்வமுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது முக்கியமானது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|