புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_m10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_m10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_m10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Jan 27, 2010 6:23 pm



மனிதன் மனிதனாக வாழ்வதற்காக அவனை நெறிப்படுத்துவதற்காக மனிதனால் அமைக்கப்பெற்ற ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Avun
ஒழுக்க சீலங்களே “மதங்களும,; மத வழிபாட்டுத் தலங்களும்” இதை எந்த ஒரு
புத்தி ஐPவிகளும் மறுப்பதற்கில்லை. இப்படிப்பட்ட மதங்களிலே மிகவும் தொன்மை
வாய்ந்ததாகவும், கீழைத்தேசத்தில் வாழ்கின்ற அநேகமான மக்களால் வழிபடப்பட்டு
வருகின்றதுமாகிய இந்துமதத்தின், மதவழிபாட்டுத்தலங்களாக இருக்கின்ற
ஆலயங்கள் எவ்வளவு தூரம் மக்களை ஆலயவழிபாட்டுக்காக...



இழுத்துக்கொள்கின்றது என்பதை உளவியல் ரீதியான கண்ணோட்டத்தில் இக்கட்டுரையை ஆராய்ந்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.


“மனம் ஒரு குரங்கு” எனும் அடைமொழி சுட்டுவது, குரங்கு எவ்விதம் ஒரு இடத்தில்
தரித்து இருக்காது, ஒரு பொருளை மட்டும் விரும்பி உண்ணாது மரத்துக்கு மரம்,
இடத்துக்கு இடம் தாவித்திரியுமோ அதேபோல் மனித மனங்களும் ஒரு நிலைப்பட்டு
இருக்காமல், அது வாழ்க்கை என்ற வட்டத்தில் இன்ப துன்பங்களுக்கு வசப்பட்டு கோபம், விரக்தி, சந்தோசம்,
எரிச்சல், பொறாமை, அன்பு, பாசம், கவலை போன்ற எல்லாவற்றையும் தனக்குள்ளே
வைத்துக் கொண்டு குரங்கைப் போல தாவித்திரிகின்றன. எனவே, இவற்றை ஒரு
நிலைப்படுத்தி மனதுக்கு அமைதியைக் கொடுப்பதில் இந்த ஆலய வழிபாடு ஒரு முக்கிய மனவமைதிப் பொருளாக இருக்கின்றது என்பதே உளவியலாளர்களின் கருத்து.

சாம்பிராணிப் புகையில் ஒரு வகையான மாங்கல்ய குணம் உள்ளது. அதாவது
மனங்களை பரவசப்படுத்துகின்ற உணர்வு. ஆலயங்களிலே கட்டப்பட்டிருக்கின்ற
மங்கலான மின்குமிழ்
வெளிச்சமும் இந்த சாம்பிராணிப் புகையும், மற்றும் தூப தீபங்களின்
தன்மையும் எமது ஐம்புலன்க~டாக சென்று எமது மனதைப் பரவசப்படுத்தும் அல்லது
இறைவன்பால் சிந்திக்க வைக்கும் இயல்புடையது. இந்த நேரத்தில்த் தான்
எல்லோர் உள்ளங்களிலும்
புத்துணர்வு ஏற்பட்டு, இறைவனைப் பற்றி சிந்திக்கச் செய்கிறது. ஆண்டவன்
அருளால் எமது மனதுக்குச் சந்தோசம், நிம்மதி கிடைத்துவிட்டது என்று
கூறுகின்றோம். இங்கு நீங்களே ஒன்றை உணர்வீர்கள் பூசை இல்லாத நேரங்களில் எமக்கு இவ்வாறான ஒரு மனநிலை ஏற்படுவது இல்லை.

குளிர்மை, வெண்மை என்றாலே மக்களின் மனங்கள் நிறைந்துவிடும். அத்தோடு, மரக்கறிச் சாப்பாடு மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதுவும், ஆலயங்களில் பூஜை முடிந்ததும் அங்கு பிரசாதங்களாக ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Avu2
கொடுக்கப்படுகின்ற
சந்தனம், குங்குமம், மஞ்சள் என்பனவற்றை நாங்கள் நெற்றியிலே பூசுகிறோம்.
இங்கு ஒர் உண்மை இருக்கின்றது. என்னவெனில், மனிதனின் நரம்பு
மண்டலங்கள் எல்லாம் நெற்றியிலே குவிவதனால் நெற்றியில் சந்தனத்தைப்
பூசுகின்ற போது அவ்விடம் குளிர்வடைய ஏனைய உடம்பின் எல்லாப் பகுதிகளும்
குளிர்வடைகின்றது. அப்போது, எம் உள்ளத்தில் மனிதம் மறைக்கப்பட்டு, தெய்வீகம் குடிகொள்கின்றது.

ஆண்டவன் மீது கொண்டுள்ள அளவு கடந்த நம்பிக்கை, பிறவிப் பேறான சரீரத்தின் மீது வைத்துள்ள அளவுகடந்த பற்று
எம்மக்களை என்னவெல்லாம் செய்ய வைக்கின்றது. தமது எண்ணங்கள், நோக்கங்கள்,
வேண்டுதல்கள், குறிக்கோள்கள், போன்றவற்றை அடைவதற்காக இறைவனிடம்
கோரிக்கைகளை வைத்து, தமது உடலை வருத்தி நேர்த்திக்கடன் செய்கின்றார்கள்.
குறிப்பாக விரதம் இருத்தல், தீ மிதித்தல், கற்பூரச் சட்டி
ஏந்துதல், அலகு குத்தி காவடியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல் போன்ற
நேர்த்திகளைச் செய்து, உடலை வருத்தி ஆண்டவனிடம் மன்றாடினால் தமது
வேதனைகளைக் கண்ணுற்றாவது இறைவன் நிச்சயம் அருள் புரிவான், நிச்சயம் அருள் கிடைக்கும் என்கின்ற மன எண்ணம் அடியவர்களின் நனவிலி மனங்களிலே படிந்திருக்கின்றது.

இறைவனின் உறைவிடமான ஆலயம் சென்று, இறைவனின் திருவடிகளைத் தினமும் மனதார துதிப்பதன் ஊடாக எமக்கு தனு, கரன, புவன, போகங்களும் வந்து சேரும் என்கின்றனர் சமயப்
பெரியார்கள். இந்துக்களும் இதனையே நம்புகின்றனர். இதனையே
ஒளவைப்பிராட்டியார் கூறும் போது “ஓங்கார மூர்த்தியாகவும், பேரறிவே
உருவாகவும் விளங்குகின்ற யானைமுகக் கடவுளாம் விநாயகப் பெருமானின் தாமரை போன்ற திருவடிகளை திரி கரணத்துடன் தினமும் வனங்கித் துதிப்போர்க்கு,

“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம்”

என்று உறுதி செய்கின்றார். நாம் தொடர்ந்து ஆலயம் செல்கின்ற போது
ஆலயச் சூழல், ஆலய அமைப்பு, விக்கிரகங்களின் தோற்றம், ஆலயத்தில் இருந்து
வரும் வாசைன (பூக்கள், பூமாலைகள்,
திருநீறு, சந்தனம், குங்குமம், சாம்பிராணி, பந்நீர்) போன்றவற்றின்
ஊடாகவும், ஆலயத்தில் தினமும் நடாத்தப்படும் ஆன்மீகச் சொற்பொழிவுகள்,
பிரசங்கங்கள் ஊடாகவும் எமது மனம் தமக்கு ஓர் “ஆன்மீக பலன்” கிடைத்து
விட்டதாக உணர்கின்றது. இவ்வாறான ஆன்ம பலத்திலிருந்து அபரீதமான சக்தி உருவாகின்றது என்கின்றனர் உளவியலாளர்கள்.

மக்களாகிய எமக்கு ஏற்படுகின்ற உடலியற் காயங்களையும், உளவியற் காயங்களையும் இறைவனின் சந்நிதானம் சென்று, இறைவனின் பாதங்களில் இறக்கி வைத்தால்த் தான் மனம் நிம்மதியடையும், ஏதோ ஒரு வகையான திருப்தி கிடைக்கும். இறைவன் நிச்சயம் எமது மண்றாட்டங்களைத் தீர்த்து வைப்பான் என்கின்ற மன நிலையே எம்மை ஆலயத்துக்கு அழைத்துச் செல்கின்றது என்றால் மிகையாகாது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தியானம் என்கின்ற யோகநெறி பற்றி நோக்குவது பொருத்தப்பாடுடையது. தியானம்
இருப்பதன் மூலம் மன இறுக்கம், மனக் கஸ்ரம், மனப் பாரம் , மனச் சஞ்சலம்,
என்பன தூக்கி வீசப்பட்டு மக்கள் மனங்களின் அச்ச நிலையைப் போக்கி,
தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு நினைவாற்றலையும் வளர்த்துச் செல்கின்றது. நாம்
வாழ்க்கையில் எதிலும் திருப்தி
கொள்ளாது இருப்பவர்கள். ஆனால், தொடர் தியானத்தின் மூலம் புதுப்பொலிவும்,
புத்தூக்கமும் ஏற்படுவதோடு ஆன்ம திருப்தியும் மனதளவிலாவது கிட்டும் என்பதை
மனதில் நிலைநாட்டி வாழ்கின்ற மக்கள் தமது தியானத்துக்கு உகந்த அமைதியான இடமாக ஆலயங்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.

இவர்களில் சிலர் இறைவனின் அருளால்த் தான் தமக்கு மனநிம்மதி ஏற்படுகின்றது என்று
எணணுகின்ற போதும், சிலர் அமைதியான சூழல், அதனால்த் தான் தாம் ஆலயம்
நாடிவருகின்றோம் என்றும் கருதுகின்றனர். இங்கு ஒரு விடயத்தை நாங்கள் நோக்க
வேண்டும். தியானம் செய்வதற்கு குழப்பங்கள் இல்லாத அமைதியான இடம் வேண்டும். அது வீடுகளில் கிடைக்காது. வீட்டில் தியானம் இருக்கின்ற போது புறச் சூழல், இன்ப துன்பங்களின்
தொல்லைகள் என்பன மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் இருப்பதற்கு சிலவேளைகளில்
இடம் தராது. இந்த சூழ் நிலையில் மனம் அமைதியாகவும், நறுமணங்களின்
வாசனையுடனும் தியானம் இருப்பதற்கு ஆலயச் சூழல் மனதுக்கு நிறைவைத் தருகின்றது என்பதுதான் வெளிப்படை உண்மையாக இருக்கின்றது.

உருவச் சிலைகள் அமைத்து வழிபடுகின்ற தன்மை மனதை ஒருநிலைப்படுத்தவும், மக்கள் ஆலயவழிபாட்டில்
விருப்புடன் ஈடுபடவும் பெரிதும் உதவின. இங்கு உருவச் சிலைகள் அமைக்காது
மனக்கண் மூலம் வழிபடுகின்ற வழிபாட்டு முறை இருந்திருந்தால் யாருமே ஆலயம்
செல்ல மாட்டார்கள். சிறந்த முறையில் மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை வழிபடுவதற்கு விக்கிரக அமைப்பு முறை பெரிதும் உதவுகின்றன. இதன் காரணமாகவேதான் ஆலயங்கள் அமைத்து விக்கிரகங்களை பிரதிஸ்ட்டை செய்தார்கள் இங்கு மிகப்பெரிய உளவியல்ப் பின்புலம் காட்டப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே.

மேலும் வறுமை, போர் என்பன எம்மைத் துரத்தி வரும் போது நாம் இறைவனைத் தேடி ஓடுகிறோம். இறைவன் எங்களைப் பாதுகாக்கின்றான் என்று எங்கள் மனங்களை
நாங்களே திருப்த்திப்படுத்திக் கொள்கின்றோம் “படைத்தவன் படி அளப்பான்.”
என்று கூறி இடையிடையே வியாக்கியானங்களையும் முன்வைக்கின்றோம.; ஆக
மொத்தத்தில், எங்களுடைய உள்ளங்களின் நம்பிக்கையே ஆலய வழிபாடுகளுக்கு முக்கிய காரணம் என்பதையும், மக்கள் ஆலயம் நோக்கி படையெடுக்க முக்கிய கருவி என்பதையும் யாருமே மறுப்பதற்கில்லை.

கட்டுரையை எழுதியவர் : Supakaran.S






ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக