புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 5:39 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 5:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
5 Posts - 4%
prajai
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
4 Posts - 3%
Jenila
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
1 Post - 1%
M. Priya
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
1 Post - 1%
kargan86
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
1 Post - 1%
jairam
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
9 Posts - 5%
prajai
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
6 Posts - 3%
Jenila
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
2 Posts - 1%
viyasan
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
1 Post - 1%
M. Priya
சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_m10சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82038
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 28, 2024 10:06 pm

சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Main-qimg-8e06d19e65be814d892cc1cdbe2d2be3
-
ஓவியம்: வேதா

-வி.தே.விக்டர்

அமுதுக்குட்டி! பிள்ளையார் கோயிலு முருகன் அண்ணனை அம்மா வர சொன்னாங்கனு சொல்லிட்டு வா என்றாள் மீனாட்சி,

அம்மா! என்று சொல்லிக்கொண்டே வேகமாக ஓடினாள் அமுதா. வீட்டுக்கு எதிரே உள்ள பிள்ளையார் கோயிலில் கடந்த ஒரு வருடமாக முருகன் இருக்கின்றான். அவன் பகல் முழுவதும் குப்பையைப் பொறுக்கி, அதனால் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருபவன்.

அவனை எல்லாரும் பிள்ளையார் கோயில் முருகன் என்று அழைப்பார்கள். அவனுக்கு காலையில் மட்டும் சாப்பிட ஏதாவது மீனாட்சி கொடுப்பாள். அதனால் மீனாட்சி குடும்பத்தோடு அன்பும், பாசமும் வைத்து பண்பு உள்ளவனமாக பழகி வந்தான் முருகன்.

கடிகாரத்தில் அலாரம் அடித்து வெகுநேரமாகியும் ஏன் கணவன் எழுந்திருக்கவில்லை என்று நினைத்துக்கொண்டே படுக்கை அறைக்குள் நுழைந்து என்னங்க! என்னாச்சு! அலாரம் அடிச்சும் எழுந்திருக்கலே! ஆபிஸ் போகலையா! என்றாள் மீனாட்சி.

நேத்து ஒருத்தர் ரிட்டையர்மெண்ட்! அந்த விழாவிலே கலந்துக்கிட்டேன்! அதனாலே கொஞ்சம் அசதியா இருக்கு என்று சொல்லிக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தான் மதிவாணன்.

ஒகோ! பார்ட்டினு சொல்லுங்க, நீங்க திருந்தமாட்டீங்களா! நமக்கு ஒரு பெண் குழந்தை இருக்குங்கறதை நினைப்பு வைச்சிக்குங்க. எப்ப திருந்தப் போறீங்களோ என்றாள் மீனாட்சி.

பார்ட்டினா கொஞ்சம் குடிக்கத்தான் செய்வாங்க! அதுக்கு ஏன் இப்படி சத்தம் போட்டு கத்துறே. இன்னைக்கு நம்ம கல்யாண நாளு, அதனாலேதான் ஆபீஸ்க்கு கொஞ்சம் லேட்டா போகலாம்னு இருந்தேன் என்று புன்முறுவலுடன் சொன்னான் மதிவாணன்.

இன்னைக்கு நம்ம கல்யாண நாளுனு தெரியுதுல்லே. இன்னைக்கு ஒரு நாளாவது குடிக்காம இருங்க என்று கோபமாக சொல்லிய மீனாட்சி சமையலறைக்குள் சென்றாள்.

திருமணத்துக்கு முன்பே மதுப்பழக்கம் உள்ளவன் மதிவாணன். திருமணத்திற்கு பிறகு ஆபீஸ் விடுமுறையில் மட்டும் வாரம் இருமுறை குடித்தவன், பிறகு நாளடைவில் தினமும் குடிக்க ஆரம்பித்துவிட்டான்.

மீனாட்சி மிரட்டியும் பார்த்தாள். கெஞ்சியும் பார்த்தாள். மதிவாணன் குடிப்பதை நிறுத்தவில்லை நாட்கள் செல்ல செல்ல அவன் அதிகமாகவே குடிக்க ஆரம்பித்ததால் கணவனிடம் குடிப்பதை நிறுத்துங்கள் என்று சொல்வதையும் விட்டுவிட்டாள் மீனாட்சி.

பிள்ளையார் கோயில் முருகனை அழைக்கப்போன அமுதுக்குட்டி இன்னும் வரவில்லையே என்று வாசலைப் பார்த்தாள் மீனாட்சி. முருகனும் அமுதுக்குட்டியும் வந்துக்கொண்டிருந்தார்கள்.

அமுதுக்குட்டி தொல்லைப்பண்ணி என்னை அழைச்சிட்டு வந்துடுச்சிம்மா என்று சிரித்துக்கொண்டே வந்தான் முருகன்.

நான்தான் உன்னை அழைச்சிட்டு வரச் சொன்னேன். உட்காரு முருகா டிபன் சாப்பிடலாம் என்ற மீனாட்சியிடம்,

அம்மா! சாப்பிடறதுக்கு முன்னாலே அய்யாவுக்கு, கல்யாண நாளுக்கு பரிசு ஒண்ணு கொடுத்துடுறேம்மா என்றான் முருகன்.

எங்களுக்குக் கல்யாண நாளுன்னு உனக்கு எப்படிப்பா தெரியும் என்று அருகில் இருந்த மதிவாணன் கேட்டான் முருகனிடம்.

உங்களுக்கு இன்னைக்கு கல்யாண நாளுனு அமுதுக்குட்டிதான் சொன்னுச்சி அய்யா என்றான் முருகன்

புன்முறுவலுடன், அய்யாவுக்கு அப்படி என்னாப்பா பரிசு கொடுக்கப் போறே என்ற மீனாட்சியிடம்,

மகாத்மா காந்தியோட சத்தியசோதனை புத்தகம்மா என்ற முருகனிடம் முகத்தில் மகிழ்ச்சி பொங்க சத்திய சோதனை புத்தகம்மா என்று ஆச்சரியமாய் கேட்டாள் மீனாட்சி.

முருகா! உனக்கு மகாத்மா காந்தியை தெரியுமா! என்றான் மதிவாணனும் ஆச்சரியமாய்

அய்யா! நான் எட்டாவது வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். நான் படிச்சுப்ப பேச்சுப்போட்டியிலே முதல் பரிசா வாங்குனதுதான் மகாத்மா காந்தியோட இந்த, சத்திய சோதனை புத்தகம் என்று சொல்லிக்கொண்டே புத்தகத்தை மதிவாணன் கையில் கொடுத்தான் முருகன்.

அப்படியா! எட்டாவது படிச்சிருக்கியா! அதிர்ச்சியா இருக்குப்பா என்று சொல்லிக்கொண்டே சத்திய சோதனை புத்தகத்தை வாங்கினான் மதிவாணன்.

முருகா! நீ எனக்கு பரிசு கொடுத்த மாதிரி நானும் உனக்கு பரிசு ஒண்ணு கொடுக்குறேன் என்ன தெரியுமா, அந்த மாமரத்துக்கிட்ட நிறைய காலி மதுப்பாட்டுலு இருக்கு. சாப்பிட்டுட்டு போறப்ப எடுத்துட்டுப் போப்பா என்றான் மதிவாணன் பெருமையுடன்,


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82038
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 28, 2024 10:06 pm

சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! Main-qimg-c2e298d3ab8e5448a8df9f8076598b51
-
அய்யா, என்னை மன்னிச்சிடுங்க! குப்பை பொறுக்குறவன் எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேனு சொன்னவுடனேயே ஆச்சரியப்பட்டீங்க! வயித்து பிழைப்புக்காக குப்பை பொறுக்குற நான் சாராயப்பாட்டுலை மட்டும் பொறுக்கமாட்டேங்கற, என்னோட கொள்கையை சொன்னா உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும் என்றான் கண்கள் கலங்க முருகன்.

என்னப்பா சொல்றே! சாராயப் பாட்டுலை பொறுக்கமாட்டீயா… ஒண்ணுமே புரியலையே என்று ஆச்சரியப்பட்ட மதிவாணனிடம்,

அய்யா நான் இன்னைக்கு பள்ளிக்கூடம் போகாம, படிப்பை பாதியிலே நிறுத்தி குப்பை பொறுக்க காரணமே, இந்த சாராயப் பாட்டுலுதான். எனக்கு வருமானமே இல்லாம போனாலும் என் இடதுக்கையாலேக்கூட சாராயப் பாட்டுலை தொடமாட்டேன் அய்யா என்றான் முருகன் சோகத்துடன்,

இந்த சின்ன வயசுலேயே சாராயப்பாட்டுலை இடதுக்கையாலேக்கூட தொடமாட்டேனு சொல்றியே! உனக்கு எவ்வளவு நல்ல உள்ளம்! உயர்ந்த சிந்தனை! ரொம்ப சந்தோசமா இருக்கு என்றாள் முருகனிடம் சிரித்துக்கொண்டே மீனாட்சி.

அம்மா! அதுக்கு காரணமே எங்க அப்பாதான். எங்கப்பா ஒரு ஆட்டோ டிரைவர். மதுவுக்கு அடிமையாகி ராத்திரி, பகலா போதையிலேதான் இருப்பாரு. வீட்டு செலவுக்கு போதுமான அளவு பணம் கொடுக்க மாட்டாரு.

அதனாலேதான் எங்கம்மா, வீட்டு வேலைக்குப் போயி குடும்பத்தை கவனிச்சாங்க, சர்க்கரை நோயாளியான எங்கம்மா, ஓய்வு இல்லாம உழைச்சி, உழைச்சி, மாத்திரை மருந்து வாங்கக்கூட வழியில்லாமல் செத்துப்போயிட்டாங்க!

எங்க அம்மா செத்தும் எங்க அப்பா திருந்தலே. கல்யாண வயசுலே இருந்த எங்க அக்காவும். கல்யாணமாகாத ஏக்கத்துலேயே தற்கொலை செஞ்சிடுச்சி. எங்க அக்கா செத்தும் எங்க அப்பா திருந்தலே. ஒரு நாளு எங்க அப்பா குடிச்சிட்டு படுத்தவர் படுத்தவர்தான்,

செத்துப்போயிட்டாரு, என்று கண்களில் நீர் வழிய முருகனிடம், இந்த சின்ன வயசுலே உன் மனசுலே இவ்வளவு சோகக் கதையா! என்றான் மதிவாணன்.

அய்யா! இந்த சோகக் கதையாலேதான் என் வாழ்க்கை வீணாப் போயிடுச்சி! என் படிப்பும் பாதியிலேயே நின்னுப்போயிடுச்சி எங்கப்பா செத்ததுக்கு அப்புறம் சொந்தம் பந்தம் இருந்தும், எனக்கு உதவி செய்ய என்னைப் படிக்க வைக்க யாருமில்லை. எங்கப்பாவைத் திருத்த முயற்சி செஞ்சேன். முடியலே

எங்கப்பாவுக்குக் குடிப்பழக்கம் இல்லன்னா என் நிலைமை இப்படிப் போயிருக்காது. நல்லா படிச்சி வேலைக்குப் போயி எங்கக் குப்பத்தை வளர்ச்சி அடைய வைக்கனும்னு அப்துல் கலாம் அய்யா சொன்ன மாதிரி கனவு கண்டேன்.

என் கனவெல்லாம் வீணாப் போயிடுச்சு. நான் ஏன் சாரயப்பாட்டுலைப் பொறுக்க மாட்டேங்கற காரணம், இப்ப புரியுதாய்யா என்ற முருகன் குலுங்கி குலுங்கி அழுதான்.

உயர்ந்த எண்ணத்துடனும் அறிவார்ந்த சிந்தனையுடனும் பேசிய முருகனை பார்த்து, மீனாட்சி கண்கள் மட்டும் அல்ல, மதிவாணன் கண்களும் கலங்கின.

முருகா! உங்க அப்பா திருந்தலன்னு வருத்தப்படாதே. நீ என்னை திருத்திட்டே! நான் திருந்திட்டேன். ஒரு சின்ன தவறைக்கூட செய்யக்கூடாதுனு உண்மையாய் இருந்து உண்மையை பேசி மாமனிதனா வாழ்ந்த மகாத்மா காந்தியோட இந்த சத்திய சோதனை புத்தகம் மேல சத்தியமா சொல்றேன்… இனிமே நான் குடிக்கமாட்டேன். மதுக்கடைக்குப் போக மாட்டேன். பாட்டில்களுக்கு ‘பை’ சொல்லிட்டேன் என்றான் கண்களில் நீர் வழிய மதிவாணன்.

என்னங்க சொல்றீங்க! இனிமே குடிக்க மாட்டீங்களா என்றாள் ஆனந்தக் கண்ணீருடன் மீனாட்சி.

ஆமாம் மீனாட்சி! இனிமே கனவுலக்கூட மதுப்பாட்டுலைத் தொடமாட்டேன். உன்னோட ரொம்ப நாளு கோரிக்கையை நிறைவேத்தப் போறேன் என்ற மதிவாணனிடம்,

ரொம்ப சந்தோசமா இருக்குங்க! என்னாலே நம்ப முடியலேங்க என்று சொல்லிய மீனாட்சி, மதிவாணன் கைகளை பிடித்துக்கொண்டாள்.

மீனாட்சி இனிமே முருகன், பிள்ளையார் கோயில் முருகன் இல்ல. அவன் நம்மவீட்டு முருகன்! முருகா! இனிமே நீ குப்பை பொறுக்க வேண்டாம். உன் ஆசைப்படியே உன்னைப் படிக்க வைக்கிறோம்! இனிமே நீ எங்க வீட்டுப்பிள்ளை என்று சொல்லிய மதிவாணன் முருகனின் முதுகில் தட்டிக் கொடுத்தான்.

அய்யா! அம்மா என்று சொல்லிக்கொண்டே மதிவாணன் மீனாட்சி இருவரின் கால்களை தொட்டு வணங்கினான் முருகன்.

அருகில் நின்ற அமுதுக்குட்டி எனக்கு அண்ணன் கிடைச்சிட்டான் என்று மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தாள்.

நன்றி- கல்கி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 21, 2024 2:47 pm

சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’! 3838410834 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக